பாட்டி உதவினாலும் தாத்தா உதவ விட வேண்டுமே, ஏதேனும் பிரச்சினை வருமோ என்று மனதிற்குள் மறுபடியும் ஒரு பயம் வந்தாலும், இல்லை எல்லாம் சரியாகும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும், நல்லதே நடக்கும் என்று மீண்டும் மீண்டும் தனக்குள் உருப் போட்டுக் கொண்டவள்.,
‘இந்தியா செல்வது கூட ஏதோ ஒரு வகையில் நல்லது என்று நினைத்துக் கொள்’ என்று தோழி சொல்லி அனுப்பியது ஞாபகம் வந்தது.
கிளம்புவதற்கு முன் தோழிதான் ‘இந்தியா போறதுகூட ஏதோ ஒரு வகையில உன்னோட லைஃப்ல நல்லதுக்காக கூட இருக்கலாம்., அதனால உன்னை நீ போட்டு குழப்பிக்காத’ என்று சொன்னதை இப்போது யோசித்துக் கொண்டவள்.
பாட்டியிடம் “ரொம்ப நாள் ஆயிருச்சு இல்ல பாட்டி., அதுதான் மத்தபடி ஒன்னும் இல்ல, நான் நார்மலா தான் இருக்கேன்., நீங்க எதுக்கு என்னை அப்படி பாக்குறீங்க” என்று கேட்டாள்.
பாட்டியோ “இல்லமா உன்ன மூணு வயசுல இங்க இருந்து உங்க அம்மா கூட்டிட்டு போகும் போது பார்த்தது., அதுக்கப்புறம் இப்பதானே நேர்ல பார்க்கிறேன்., இடை இடையில உங்க அப்பா ட்ட போட்டோ அனுப்பு ன்னு கேட்டா கூட போட்டோ அனுப்ப மாட்டான்., இந்த போன்ல பேசும் போது காட்டுவது தானே., மற்றபடி இங்க வந்து இருக்கும் போது அவன் செல்லுல இருக்க போட்டோவை காமிச்சான்., மத்தபடி எப்ப பார்த்திருக்கேன் இப்ப தானே பார்க்கிறேன்” என்று சொல்லியபடி அவள் கையோடு கையை சேர்த்து பிடித்துக் கொண்டு இருந்த பாட்டியின் மனநிலையும் புரிந்தது.
அதற்குள் வந்திருந்தவர்களை அனுப்பிவிட்டு துளசியின் அப்பாவும் தாத்தாவும் உள்ளே வர அப்போதும் அனைவரும் அங்கு பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் துளசியின் அப்பா அம்மாவை யோசனையாக பார்த்துக் கொண்டே துளசியின் அம்மாவின் முகத்தை பார்க்க அவளோ ஒன்றுமில்லை என்னும் விதமாக தலையாட்டினாள். அதன்பிறகு உணவுகள் எடுத்து வைக்கப்பட அனைவரும் தங்களை ரெப்பிரஷ் செய்து கொண்டு சாப்பிட வந்தனர்.
துளசிக்கு இங்குள்ள உணவு வகைகள் ஏற்கனவே பரீட்சையம் தான்., துளசி அம்மா இந்திய உணவு வகைகள் தான் அதிகம் செய்து கொடுப்பார் என்பதால், அவளுக்கு இந்த உணவுகள் எல்லாம் பார்க்க சாதாரணமாகத்தான் இருந்தது.
ஆனால் அங்குள்ள உணவின் ருசியை விட இங்கு சற்று உணவின் ருசி அதிகமாக இருப்பது போல தோன்றியது. என்னவோ துளசி எப்போதும் சாப்பிடும் அளவைவிட சற்று அதிகமாக சாப்பிட்டு விட்டதாக அவள் பாட்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“அங்கேயும் நல்லா சாப்பிடுவேன் பாட்டி., ஆனா இங்க வந்தவுடனே, அந்த டேஸ்ட்டோட இது கொஞ்சம் தூக்கலா இருக்கு, அதனால நல்லா சாப்பிட்டேன்” என்று சொல்லிவிட்டு “சரி நான் போய் தூங்குறேன், ஈவ்னிங் பார்க்கலாம்” என்று சொல்லியவள், தாத்தாவிடம் “தாத்தா உங்களிடம் ஈவ்னிங் பேசுறேன்” என்று சொல்லியபடி தன்னறைக்கு சென்றவளுக்கு தூக்கமும் கண்ணை சொருகியது.
அவள் அம்மா வந்து “ஏசி ஆன் பண்ணிக்கோ., பேஃன் வேணும்னா போட்டுக்கோ” என்று சொல்லிவிட்டு அவளுக்கான பொருட்களை அவள் அறையில் வைத்துவிட்டு கதவை அடைத்துக் கொண்டு சென்றார்.
யோசனையாக அவர்களைப் பற்றி நினைத்தப்படி உடை கூட மாற்றாமல் இருந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.
அதே நேரம் வெளியே அமர்ந்திருந்த தாத்தாவும் பாட்டியும் இவர்களை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தனர்.
நேரம் வித்தியாசப்படுது அது மட்டுமல்லாமல் 12 மணி நேரத்திற்கு மேலா பிரயாணம் செய்து வந்தது சோர்வை அளித்திருக்கும் அதுதான் தூங்க போய்விட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அதே நேரம் “பேத்தி பொண்ணு உன்கிட்ட ஏதாவது சொன்னாளா., உன்னால அவ கிட்ட ஏதாவது பேச முடிஞ்சிச்சா” என்று தாத்தா பாட்டியிடம் கேட்டார்.
பாட்டியோ “இல்ல துளசி பக்கத்திலேயே மருமக இருந்தாலே., என்னத்த பேச எதுவும் பேச முடியல, பார்ப்போம் ஏதாவது பேச முடியுதான்னு பார்ப்போம்., ஆனால் என்ன சொல்ல முடியும் ன்னு நினைக்கிறீங்க, என்று பாட்டி கேட்டார்.
“அவங்க வீட்டுக்கு என்ன பதில் சொல்ல” என்று தாத்தா கேட்டார்.
“அது அப்புறம் பார்ப்போம் முதலில் இவள் கிட்ட பேசணும்” என்று பாட்டி சொல்லிக் கொண்டிருந்தார்.
“அதுவும் சரிதான், உனக்கு ஏதாவது வித்தியாசம் தெரியுதா”., என்று கேட்டார்.
“இல்ல எனக்கு எதுவும் தெரியலையே., ஏன் கேட்டீங்க” என்று பாட்டி கேட்டார்.
தாத்தாவும் “இல்ல நம்ம பையனும் சரி, மருமகளும் சரி துளசிக்கு எப்பவும் பாதுகாப்பா யாராவது பக்கத்தில் இருக்கிற மாதிரி இருக்கு., எனக்கு என்னவோ நம்ம எதுவும் அவ கூட பேசக்கூடாது நினைக்கிறாங்களா., இல்ல அவ நம்மகிட்ட எதுவும் சொல்லிறக்கூடாது ன்னு நினைக்கிறாங்களா ன்னு தெரியல., இப்ப கூட பாரு அவங்க ரெண்டு பேரும் இல்லங்க போய் தான் நம்ம ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கோம்., இல்லாட்டி நம்ம ரெண்டு பேரும் இப்படி பேச முடியுமா”., என்று தாத்தா கேட்டார்.
பாட்டியோ “அது சரிதான் நம்மதான் சொன்னதுக்கு விஷேசம் வச்சிருக்கோம் நாம தானே அவள பார்த்துக்கனும் ன்னு சொல்லுவான்., வேற நீங்க எதிர்பார்க்கிறிங்க” என்று சொன்னார்.
“இல்ல பேத்தி பொண்ணு வந்ததிலிருந்து சுத்தி சுத்தி ஒவ்வொருத்தரா நோட் பண்ணிக்கிட்டே இருக்காளே ஒழிய., யாரிடமும் நல்ல பேசல., இப்ப நம்ம ரெண்டு பேர்ட்டையும் ஏற்கனவே போன்ல பார்த்து பேசினதால அவ பேசுறா., இல்லாட்டி நம்ம கிட்ட கூட பேசி இருக்க மாட்டா., எதுக்காக நோட் பண்றா ன்னு தெரியல., அவ ஒவ்வொருத்தரா ரொம்ப கவனிக்கிறத பார்த்துட்டு தான் நம்ம பையன் அவளை உள்ள கூட்டிட்டு வந்தான்., எல்லாரையும் உட்காருங்க வரேன்னு சொல்லிட்டு வந்தான்” என்று தாத்தா சொன்னார்.
“அப்படி ஒன்னு இருக்கா” என்று பாட்டி யோசனையோடு கேட்டார்.
தாத்தாவும் “நீ இனிமேல் பேத்திய கொஞ்சம் கவனி அவ ஏதாவது சொல்றாளா ன்னு பார்க்கணும்., இல்லனா நம்ம ஏதாவது சொல்ல முடியுதான்னு பாக்கணும்”., என்று சொன்னார்.
பாட்டியோ “அவளுக்கு தான் எந்த விஷயமும் தெரியாதே, அப்புறம் எப்படி அவளிடம் நம்ம போய் பேச முடியும்”., என்று கேட்டார்.
“அது உண்மைதான்., இவன் தான் உறவுகள் யாரு எவரு ன்னு யாரைப் பத்தியும் சொல்லிக் கொடுக்கலையே, அப்புறம் எப்படி அவளுக்கு எல்லாரையும் தெரியும்., யாரையும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லையே”., என்று சொன்னார்.
“எனக்கு நம்பிக்கை இருக்கு., அவ கண்டிப்பா நம்ம சொல்றத புரிஞ்சுக்குவா” என்று பாட்டி சொன்னார்.
தாத்தாவும் “அவ புரிஞ்சிக்கிறது இருக்கட்டும்., அவளிடம் எப்படி நீ சொல்லுவ, அதை முதல்ல சொல்லு” என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தாலும் நல்ல வேலை அதை யாரும் கேட்கவில்லை., கேட்க வேண்டியவளோ நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தாள்.,
உறங்கி எழுந்தவளோ முதலில் எங்கு இருக்கிறோம் என்று தெரியாமல் சுற்றி பார்த்தவளுக்கு இரவு விளக்கின் சிறு வெளிச்சம் மட்டுமே அறையில் இருக்க., நேரம் தெரியவில்லையே என்று யோசனை யோடு எங்கிருக்கிறோம், என்று யோசித்தவளுக்கு இந்தியா வந்து சேர்ந்தது புரிந்தது.
நீண்ட நாளுக்கு பிறகு நிம்மதியான ஒரு தூக்கம் தூங்கியதாக உணர்ந்தவள் கட்டிலில் புரண்டு படுத்தபடியே அருகில் இருந்த தலையணையும் சேர்த்து பிடித்த படி ‘எவ்வளவு நாளாச்சு இல்ல இப்படி தூங்கி’ என்று யோசனையோடு விடிவிளக்கின் ஒளியில் தெரிந்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டே இருந்தவள் பெருமூச்சு ஒன்றை எடுத்துவிட்டு,
நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்றாக உணவு உண்டு உறங்கிய ஒரு உணர்வும் அவளுக்கு இருந்ததை உணர்ந்தால்,
ஆனால் தற்சமயம் ஏதோ பசிப்பது போல தோன்ற ‘அய்யோ நேரம் என்ன என்று தெரியவில்லையே எல்லோரும் உறங்கி இருப்பார்களோ., அப்படி என்றால் யாரிடம் போய் சாப்பாடு கேட்பது, சரி பார்ப்போம்’ என்று எழுந்து வெளியே வர அனைவரும் ஹாலில் தான் அமர்ந்திருந்தனர்.
தாத்தாவும் பாட்டியும் அவளை சிரித்தபடி பார்க்க., அவளோ “ரொம்ப நேரம் ஆயிடுச்சா., இங்க டைம் என்ன இப்போ” என்று கேட்டபடி நேரத்தை பார்த்தவள் ., பார்த்துவிட்டு “இவ்வளவு நேரம் தூங்கிருக்கேனா”., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவர்களுக்கு இங்கு இரவு மணி 8 ஆகி இருக்க., லண்டனிலோ இப்போது தான் பிற்பகல் 3.30 மணியை தொட்டிருக்கும்., கிட்டத்தட்ட 4 1/2 மணி நேரம் வித்தியாசத்தில் லண்டன் நகரத்தின் நேரம் இருக்க இவள் அங்குள்ள நேரத்தையும் அங்குள்ள நேரத்தையும் கணக்கிட்டுக் கொண்டாள்.
பிறகு உணவை வீட்டினரோடு சேர்ந்து உண்டு விட்டு மற்றவர்கள் தூங்க சென்றனர்.
இவளோ அன்று தான் வந்து சேர்ந்ததால் அங்குள்ள நேரத்திற்கும் இங்கு உள்ள நேரத்திற்கும் ஒத்துவராதது மட்டும் இன்றி பகலில் தூங்கியதால் தூக்கமின்றி அறையில் அமர்ந்து கொண்டிருந்தாள்.
பாட்டி தாத்தாவும் காலையில் வந்ததிலிருந்து இவளை ஆராய்ச்சியாக நோக்குவதையும்., அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொள்வதையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.
‘எதுவாக இருந்தாலும் அவர்களாக சொன்னால் இன்றி இவளுக்கு எதுவும் புரியாது’ என்பதும் அவள் நினைத்துக் கொண்டாள்.
அப்பா எதுவும் அவர்களிடம் சொல்லி இருப்பார்களோ என்றும் யோசித்துக் கொண்டாள்.
பாட்டி தாத்தாவிடம் அப்பா சரியாக பேசாதது மட்டும் இன்றி., அவர்களையும் தன்னோடு பேச விடாதது ஏனென்று யோசித்துக் கொண்டே அமர்ந்தவளுக்கு, ‘ஏதோ வீட்டு பிரச்சனையா., இல்லை வேறு எதுவுமா என்று தெரியாத சூழலில் தான் எதுவும் சொல்ல முடியாது, அது மட்டும் இல்லாமல், திருமணத்தை நிறுத்த அவர்களிடம் வழி கேட்கவும் அவளுக்கு பயமாக இருந்தது., அப்பா ஏற்கனவே சொல்லி இருந்தால், அவர்கள் அப்பாவிற்கு சாதகமாக செய்பவர்களாக இருந்தால்’. என பல விதங்களில் யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
எப்போது தூங்கினால் என்று தெரியாமலே காலையில் சற்று தாமதமாக கண்விழித்தவள் எழுந்து வரும்போது அனைவரும் காலை உணவு முடித்திருந்தனர்.
அவள் அம்மா தான் “சீக்கிரம் குளிச்சிட்டு வா, வந்து சாப்பிடு” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
இவளோ “தூங்குறேன், சாப்பிடுறேன், இது தவிர வேற என்னமா இங்க வேலை இருக்கு” என்று கேட்டாள்.
பாட்டி தான் “வீட்டை சுற்றி நிறைய தோட்டம் இருக்கிறது, வீட்டிற்கு பின்புறமாக சென்றால் நிறைய மரங்கள் இருக்கிறது. அப்படியே நடந்து போய் பார்த்துவிட்டு வா”., என்று சொன்னார்.
சரி என்று சொன்னபடி குளிக்க சென்றாள். குளித்துவிட்டு உணவு அருந்திவிட்டு வீட்டை சுற்றி பார்த்தவளுக்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது.
‘இவ்வளவு அழகான இடத்தையும் ஊரையும் விட்டுவிட்டு அப்பா எப்படி அங்கு சென்று இருக்கிறார்’ என்ற எண்ணம் தான் முதலில் வந்தது.
இப்படியே மூன்று நாட்கள் செல்ல மனதிற்குள் அவளுக்கும் அந்த ஊருக்கும் ஒரு பிடித்தம் இருந்தது.
காவிரி கரையோரம் திருச்சியின் அருகில் உள்ள ஒரு வளர்ந்து வரும் ஊரில் தான் அவர்கள் வீடு இருந்தது.
ஏனோ இங்கு வந்த பிறகு அவள் மனதில் ஒரு நிம்மதி பரவி இருப்பதையும்., இந்த திருமணத்திலிருந்து தப்பித்து விடலாம் என்ற எண்ணமும் அவளுக்கு வலுத்திருந்தது.