அவளது அழுகை குறைந்ததும், “சின்ன குழந்தை மாதிரி செய்யற மாஹி” என்றான் செல்ல சலிப்பாக.
“கோச்சுக்காம சொல்லுங்களேன், உங்களுக்கு ஏன் என்னைப் பிடிக்கும்?”
“இதெல்லாம் என்ன கேள்வி?” என்று முறைத்தான்.
“பிளீஸ் சொல்லுங்களேன்…” என்று அவனது அணைப்பிலிருந்தபடியே முரண்டு பிடித்தாள் மனையாள்.
“என்ன சொல்ல…. ஹ்ம்ம்… ஒருநாள் எங்க அப்பாவைத் தேடி வந்த, அப்பத் தான் உன்னை முதல்முறை பார்த்தேன். அப்பவே தெரிஞ்சுடுச்சு, நீ தான் எங்க அப்பா சொன்ன பொண்ணுன்னு. ரெண்டு வருஷம் முன்னாடி காட்டின போட்டோ இன்னும் ஞாபகம் இருக்கான்னு எனக்கே ரொம்ப ஆச்சரியம்.
நீ தனியா தான் வந்திருந்த… ஆனாலும் ரொம்ப தைரியமா தெரிஞ்ச. என் அப்பா உயிரோட இல்லைன்னு தெரிஞ்சதும் நீ ரொம்ப வருத்தப்பட்ட. ஆனா, அதை என் முன்னாடி காட்டிட கூடாதுன்னு, அப்படி ஒரு அழுத்தம் உன்கிட்ட… உன்னோட பார்வை, பாவனை, பேச்சு எல்லாத்துலேயும் ஒரு ஆளுமை, நிமிர்வு, குட்டியா அலட்சியம் இருந்தது. அது என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சு… அப்பறம் உன் சிரிப்பு ரொம்ப அழகா இருக்கும்ன்னு தோணுச்சு. எப்ப சிரிப்பன்னு உன் முகத்தை முகத்தை பார்த்தேன்… ஆனா, நீ சிரிக்கவே இல்லை. கோபம் கூட வந்தது சிரிக்க மாட்டாளான்னு. உன்னை பார்த்துட்டே இருக்கணும் போல தோணுச்சு.
இன்னும் நிறைய… எனக்கு உன்னோட ஒவ்வொரு செய்கையும் பிடித்தது. உன்னோட ஒவ்வொரு அசைவும் என்கிட்ட ஏதோ ஒரு பாதிப்பை உண்டு பண்ணிச்சு. எனக்கு அப்ப அது என்னன்னு கூட சரியா புரியலை. அந்த அனுபவம் ரொம்ப புதுசு. அப்பறம் உன்னை விட்டு விலகி இருக்கிறது தான் நல்லதுன்னு நினைச்சேன்.
ஆனா முடியலை. வயலுக்கு நீ வரும்போதெல்லாம், யாருக்கும் தெரியாம என்னை பார்ப்ப… ஆனா அது எனக்கு புரிஞ்சுடும். நீ உன் லீவ் டேஸ்’ல வயலுக்கு வருவ, அப்ப எல்லாம் கண்டிப்பா நானும் அங்க இருக்க ஆரம்பிச்சேன். அந்த ஒரு மாசமும் என்ன சொல்ல, ஒரு திருட்டுத்தனமான காதல்… உனக்கு என்னை தெரியணும்ன்னு தோணுச்சு… நீயும் ஆர்வமா என்னை தெரிஞ்சுக்கிட்ட. அதுல எனக்கு அப்படி ஒரு சந்தோஷம்.
[the_ad id=”6605″]
அன்னைக்கு ஸ்கூல்’ல பேசினியே… அதை ரொம்ப ரசிச்சேன். பக்கத்துல பாண்டி, வீரா எல்லாம் இருக்காங்க அதைக்கூட மறந்து உன்னை மட்டுமே பார்த்துட்டு இருந்தேன். நீ பேசின விஷயம் எல்லாம் ரொம்ப பிடிச்சது. நீ பேசும்போது அப்பாவோட ஞாபகம் தான் வந்தது. அவருக்கு பொண்ணுங்க விஷயத்துல கொஞ்சம் தப்பு செஞ்சாலும், அலட்சியமா இருந்தாலும் பிடிக்காது. அதே குணம் எனக்கும், முத்துவுக்கும் வந்திடுச்சு. அந்தளவு அவரோட கொள்கைகள் எங்களுக்குள்ள நிறைச்சு விட்டுட்டாரு மனுஷன். உன்னைப் பார்க்கும் போதும் அப்படித்தான் தோணுச்சு.
இப்படி நீ என்ன செஞ்சாலும் ரசிச்சேன். காரணமே இல்லாம உன்னை ரொம்ப பிடிச்சது. உன் பேச்சு, சைகை, பாவனை, சிரிப்பு… எல்லாமும் என்னை அந்த ஒரு மாசமும் ஒரு வழியாக்கிடுச்சு. அப்பறம் நீ தான் எனக்கு எல்லாமுமா இருக்கணும்ன்னு மனசு முடிவு பண்ணிடுச்சு. அதான் அதிரடியா அதை செயல்படுத்திடுச்சு போல…” என்றான் அவளுக்கு விளக்கமாக.
கூடவே, “ஏன் என்னை நம்பவே மாட்டீங்கிற?” என்று கேட்க,
“நீங்க அப்படி நடந்துக்கிட்டீங்க” என்றாள் முறைப்பாக.
“சரி இனிமே கவனமா இருப்பேன் சரியா. நீயும் என்னை நம்பணும். கொஞ்சம் வேலை வரும்போதெல்லாம் அப்படி, இப்படித்தான் இருப்பேன். நீ தான் புரிஞ்சுக்கணும். சரியா?” எனக் கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல, வெற்றி தன்னிலை விளக்கம் தந்தான்.
தலையை நன்கு உருட்டிக் கொண்டாள்.
அதைப் பார்த்துச் சிரித்தபடியே, “கோபம் போயிடுச்சா?” என்று கேட்டான்.
“அதெல்லாம் உடனே எப்படிப் போகும்? ரெண்டு மாசம் எத்தனை ஆசையை கண்டுக்காம விட்டிருக்கீங்க தெரியுமா?” என மனையாள் முறைப்புடன் கூற,
“சரி மீதி கோபத்தை நாளைக்குக் காட்டு” எனச் சொல்லி அணைப்பை இறுக்கிக் கொண்டான் கணவன். சுதாரித்து அவள் விலக வாய்ப்பே தரவில்லை.
[the_ad id=”6605″]
“வெற்றி நான் கோபமா இருக்கேன்”
“வெற்றி விளக்கு எரியுது”
“விடுங்க வெற்றி”
என அவளது எந்த குரலும் அவனிடம் எடுபடவில்லை.
பாவம் பார்த்தோ, இல்லை அவளது நாணம் பார்த்தோ விளக்கை மட்டும் பெரிய மனது செய்து அணைத்திருந்தான்.
அந்த இரவு முழுவதும் வெற்றி ஜதியை மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தாள் அந்த புதுமணப்பெண். தயக்கமாக, தவிப்பாக, கெஞ்சுதலாக, செல்ல மிரட்டலாக, சிலிர்ப்பாக, சிணுங்களாக, அன்பாக, ஆனந்தமாக, ஆசையாக… என்று கணவனின் பெயரைப் பல வித பரிமாணங்களில் ஒலிக்க வைத்து அவனை மேலும் மேலும் பித்தாக்கிக் கொண்டிருந்தாள்.
*** சிம்லாவில் அடிமை வாழ்க்கை வாழ்பவர்களுக்கெல்லாம், நிம்மதி என்பதே மருந்துக்கும் இல்லை என்னும் நிலை. வேலை, வேலை என அப்படி பிழிந்தெடுத்தார்கள்.
ஆரம்பத்தில், “இதென்னடா தண்டனை?” எனக் கடுப்பாகத் தான் கேட்டான் தலைமையிடத்திலிருந்த கோபக்காரன்.
“இந்த தண்டனை தான் தர சொல்லியிருக்காங்க… நல்ல யோசிச்சு தான் சொன்னாங்க. எதுவும் காரணம் இருக்கும்…” என அவனைச் சமாதானம் செய்தார்கள் மற்றவர்கள்.
இப்பொழுது அவனே ஒப்புக் கொண்டான், “இது உண்மையிலேயே ரொம்ப நல்ல தண்டனை தான் டா. அவனுங்களை சக்கையா பிழியறது கூட நல்லா தான் இருக்கு. தண்டனைன்னா ஏன் ஒரே ஒருநாள் மட்டும் தரணும். இவனுங்களுக்கு எல்லாம் ஒவ்வொரு நாளும் தண்டனை இருக்கணும். அதுக்கு இந்த வழி தான் சரி. இவனுங்க மாதிரி ஆளுங்க ஊருக்குள்ள இருந்தா, எத்தனை பேரோட வாழ்க்கையை அழிச்சிருப்பங்களோ தெரியாது…” என்று உணர்ந்து சொன்னான் கொடுக்கும் தண்டனை சரிதான் என்னும் விதமாக.
“அப்படியா சொல்லற, அப்ப உனக்கு இன்னும் ஒரு ஹேப்பி நியூஸ் இருக்கு டா” என்றான் இன்னொருவன்.
“ஆஹான்… முதல்ல நியூஸ் என்னன்னு சொல்லுங்கடா. அப்பறம் சொல்லறேன்… அது ஹேப்பியா, இல்லையான்னு” என் வேண்டுமென்றே நீட்டி முழக்கினான் அவன்.
“நீ எதுவும் கெஸ் வெச்சிருக்கியா? சொல்லு பார்ப்போம்…”
“ஏன் ஆம்பளைங்களோட நிறுத்தாம, இந்தமாதிரி தப்பு செய்யிற பொண்ணுங்களையும் அடைச்சு வெக்க போறோமா?”
“அது நமக்கு பாசிபில் இல்லைன்னு முன்னவே நம்மகிட்ட சொல்லி இருக்காங்க தான டா. விடு ஏதோ முடிஞ்சதை செய்யறோம். மேல மேல ஆசைப்படக் கூடாது”
“என்ன கேட்டாலும் இப்படியே முட்டுக்கட்டை போடுங்க டா…”
“நீ எல்லாம் துபாய் குறுக்கு சந்துல வாழ வேண்டியவன் டா… உன் கிரகம் இங்க வந்து பிறந்துட்ட…”
“காமெடி… தனியா ரூம் போட்டு அப்பறமா சிரிச்சுக்கறேன்… இப்ப அந்த குட் நியூஸ் என்னன்னு நீங்களே சொல்லுங்க…”
“இங்க வந்து ரொம்ப நாள் ஆனவங்களை எல்லாம், நம்ம ஆளுங்க போஸ்டிங் கிடைச்சு போயிருக்காங்களே, அவங்க மூலமா… பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளலாம்ன்னு ஒரு யோசனை தந்தாங்க… மேலிடத்திலிருந்து”
“ஒருத்தனுக்கும் இங்க ஏன் வந்தோம்ன்னு கூட புரியலை. தன்னோட தப்பு என்னன்னு யோசிக்கலை. தப்பை நினைச்சு கொஞ்சம் கூட வருந்தலை. அதுக்குள்ள ஏன் அடுத்த லெவல் பனிஷ்மென்ட்டுக்கு போகணும் டா” என தன் அதிருப்தியை வெளிப்படுத்தினான் அந்த கோபக்காரன்.
“இல்லை. இப்ப நிலைமை அப்படி இல்லை… இதுவரை நல்லா வேலை வாங்குனோம், அதுனால நம்ம ஆதாயத்துக்குத் தான் அவனுங்களை கடத்தி இருக்கோம்ன்னு யோசிச்சு இருப்பாங்க. ஆனா இப்ப நம்ம வேலைங்கிற பேருல செய்யற கொடுமை அவங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். எதுனால இப்படி செய்யறாங்கன்னு யோசிக்க ஆரம்பிப்பாங்க. அப்படி யோசிக்கிறவங்க, போகப்போக தன்னோட தப்பை உணரவும், அதை நினைச்சு வருந்தவும் வாய்ப்பிருக்கு. அவனுங்களை ஏதாவது ஒரு பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளி அப்பறம் வெளிய விட்டுட்டு கண்காணிச்சுடலாம். நம்ம கண்காணிப்போம்ன்னு தெரிஞ்சாலே இனி வாலை சுருட்டிப்பாங்க”
“ஆமா, ஆமா இங்க நடந்ததெல்லாம் அவனுங்க கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா? வாலை சுருட்டாம இருந்திடுவாங்களா?” என்றான் ஒருவன் ஏளனமாக.
“கண்டிப்பா வெளிய விடணுமா டா?” கோபக்காரனுக்கு அதில் மனமே இல்லை.
“அப்படித் தான்டா சொன்னாங்க. இவனுங்க உழைப்புக்குக் கூலியா நம்ம வெச்சிருக்க பணத்தை, இவனுங்களால பாதிக்கப்பட்ட பொண்ணுங்களோட வீட்டுக்கு ட்ரஸ்ட் மூலமா தந்துடணும். இவனுங்க தன் தப்பை புரிஞ்சு… தன்னை திருத்திக்க தயாரா இருந்தா, கொஞ்ச கால ஜெயில் தண்டைனையோட இயல்பு வாழ்க்கைக்கு போயிக்கலாம்”
“பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இவனுங்க சம்பாதிக்கிறதை பணம் நஷ்ட ஈடு தரது பழைய பிளான் தான். அது ஒன்னும் பிரச்சனையில்லை. ஆனா, ஏன் வெளிய விடணும்”
“போதும்டா. தப்புக்கு தண்டனை. இதுவே நம்ம சட்டத்தை மீறித் தான் செய்யறோம். இதுக்கும் மேல நம்மாள என்ன செய்ய முடியும்? இன்னும் எத்தனை பேரை இங்க அடைச்சு வெக்க முடியும்?”
“கொஞ்சம் செல்வாக்கானவங்க இருப்பானுங்களே டா. அவனுங்களை ஜெயில்ல விட்டா, சீக்கிரம் வெளிய வந்துடுவாங்களே…”
“அவனுங்களுக்கு வழக்கம் போல இந்த இடம் தான் டா ஜெயில். அவனுங்களை நம்ம ஜெயிலுக்கு அனுப்ப போறதில்லை. அதை முன்னாடியே நாங்க பேசிட்டோம்”
“அவனுங்க வெளிய போயி அவனுங்க செல்வாக்கை வெச்சு, நம்மளை கண்டு பிடிச்சு வந்துட்டா…”
“ஆமா, என்ன பெருசா டிரேஸ் பண்ணிட போறானுங்க… ஊட்டி, கொடைக்கானல், மூணாறுன்னு தெரிஞ்ச மலைப்பிரதேசத்துல தேடுவானுங்க. வேற என்னத்த முடியும் இவனுங்களால. நம்ம திட்டம் ரொம்ப தெளிவானது டா. அதோட நம்மள மறுபடியும் தேடி வரத் தைரியம் ஒருத்தனுக்கும் வராது. இதை மறந்துட்டு ஒரு வாழ்க்கையைத் தொடங்கத் தான் யோசிப்பானுங்க”
“ஹ்ம்ம் அதுவும் சரி தான். இவனுங்களுக்கு நாள், கிழமை கூட புரியாம தான இங்க வெச்சிருக்கோம். முழு மயக்கத்துல ஊருக்கு திரும்பிக் கடத்த போறோம். அதுனால கண்டுபிடிக்கிறது வாய்ப்பே இல்லை. ஆனா இந்த ஜென்மங்க எல்லாம் திருந்தணுமே!”
[the_ad id=”6605″]
“ஏன் அப்படி யோசிக்கிற டா, திருந்துவானுங்க. நம்புவோம். இவனுங்க உணர்ந்து திருந்திட்டா, அடுத்த ஜெனரேஷனுக்கும் நல்லது தான் சொல்லி தருவானுங்க”
“ஆமா, ஆமா, இவனுங்க அப்படியே சொல்லி தந்துட்டாலும்…”
“உணர்ந்து திருந்தறவங்காளல முடியும் டா. நல்லதே நடக்கும் விடு. அதுக்கு நம்மாளான எல்லா வேலைகளையும் செஞ்சாச்சு”
“சரி டா. நீங்க எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு தானே. சரியா இருக்கும். முதல்ல அனுப்ப போற லிஸ்ட் ரெடியா?”
“இவனுங்க தான் டா முதல்ல வந்தவனுங்க. பத்து பேரை மட்டும் பிரிச்சிருக்கோம். அடுத்த மூணு மாசம் இவனுங்களை தான் வெச்சு செய்யணும். ஆனா, கூட்டத்தில இருந்து பிரிச்சு தனியா” என்று தயார் செய்த பட்டியலைக் காட்டினான் ஒருவன்.
“பாரேன். ஸ்பெஷல் கவனிப்பு. இது கூட நல்லாத்தான் இருக்கு. நானும் கவனிக்க வரலாமா?”
“உனக்கு அந்த இலாக்காவை ஒதுக்கிறதே இல்லை. நீ ஓடிப் போயிடு”
“உங்களுக்கெல்லாம் என் திறமையைப் பார்த்து பொறாமைஸ் டா…”
“ஆமா, ஆமா ரொம்ப திறமைக்காரனாச்சே நீ”
“சரி சரி யாரு செஞ்சாலும் ஆல் தி வெரி பெஸ்ட். உங்க கவனிப்புல பக்காவா திருந்திடனும்”
“திருந்துனா தான் இங்கிருந்து வெளியவே. இல்லாட்டி பிம்பிளிக்கா பிலாப்பி தான்”
“உண்மையை சொல்லுங்க டா. முடிக்காத கேஸ் நிறையா இருக்குன்னு தானே இந்த ஐடியா. சீட் பண்ணி, நம்ம சீனியர்ஸ் எல்லாம் புரொமோஷன் வாங்க போறாங்களோ…”
“சீனியர்ஸ் கிட்ட நீயே கேட்டுக்க…” என ஒருவன் சொல்ல,
“மச்சி, இவருக்கு போஸ்டிங் கிடைச்சதும், கபக் கபக்குன்னு எத்தனை கேஸ் பிடிக்க போறாருன்னு பாரேன்” எனக் கேலி செய்தான் இன்னொருவன்.
“சரி சரி வாராதீங்க டா. நம்ம சீனியர்ஸ், நம்ம அடிமைங்க… ரெண்டு போரையும் கோர்த்து விட போறோம் அவ்வளவு தானே…” எனச் சமாதான உடன்படிக்கைக்கு வந்தான் நல்லவனாக.