“வைஷ்ணவி வாடா” கார்த்தியின் உறவுக்கார பெண்கள், கார்த்தியின் அன்னை என கூட்டமாக அவளை வந்து அழைக்க, தலையை முடிந்தமட்டும் தூக்காமல் கார்த்தி அருகே வந்து அமர்த்தவளால் அவனை பட்டு வேஷ்டி சட்டையில் இப்பொழுதே பார்க்கும் ஆர்வம் துளைக்க திரும்பி அவனை பார்த்துவிட்டாள்.
மொத்த மண்டபமும் இவர்கள் இருவரையும் பார்க்க அவளோ அவனை கண் சிமிட்டாமல் சுற்றம் மறந்து பார்க்க, தன்னவளின் பார்வை தன் மேல் விடாமல் விழ கூட்டத்திலிருந்து கண்களை விலக்கி சிரிப்போடு, “இப்டி பாக்காத வைஷ்ணவிமா” என்றவன் உடல் மொழியில் சிறு நெளிவு தெரிந்தது அவளுக்கு.
வெள்ளை வேஷ்டி சட்டையில், கழுத்தில் மாலை, நெற்றியில் பூசிய திருநீறும், சந்தனமும், ஏர் கூலர் மூலம் முன் காற்றை முடி பறக்க சிரிப்போடு நிற்கும் அந்த மாநிறக்காரனிடமிருந்து எப்படி தான் வைஷ்ணவியால் பார்வையை மாற்ற முடியும்?
‘பார்த்துக்கொண்டே இரு’ என மனமும் வேண்ட, அசராமல் பார்த்தாள் தன்னவனை.
“அழகா இருக்கீங்க கடலைமிட்டாய்” என்றவளின் வாக்கியத்தில் கார்த்திக்கு வெட்கமே வந்தது.
“அடியேய் டொக்குமுட்டாய்… ஊரே உன்ன தான் பாக்குது தயவு செஞ்சு கழுத்த திருப்பு விட்டா இங்கையே எல்லாத்தையும் முடிச்சிடுவா போலயே” ஷெர்லின் கூறிய பின்னர் தான் பார்வையை மாற்றினாலும் அடிக்கடி மீண்டும் அடிக்கடி அவனிடமே சென்றது பெண்ணின் கண்கள்.
அவன் கூற வேண்டிய வார்த்தைகளை அவள் கூற, அவள் வெட்கப்பட வேண்டியதை அவன் செய்தான். பெரியவர்களுக்கு இருவரின் செயல்கள் சிரிப்பை தர, கண்டும் காணாமல் புன்னகையோடு நகர்ந்தனர்.
மண்டபத்தில் சொந்தபந்தங்கள் கூடி இருக்க, அனைவரின் ஆசீயை பெற்று கார்த்தியின் கைகளுக்கு வந்த பொன் தாலியை நிறைவான மனதோடு பெற்றவன், தங்களது வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு அவள் கழுத்தில் அணிவிக்க அதை நிறைந்த மனதுடனும் முழு சந்தோஷத்துடனும் கை கூப்பி வாங்கிகொண்டாள்.
அடுத்து நடக்க வேண்டிய சம்பிரதாயங்கள் இனிமையாக நடக்க, அனைத்தும் முடிந்து உறவினர்கள் அனைவரையும் அனுப்பி வைக்கவே இரவு ஒன்பதை தாண்டியது.
இன்று வைஷ்ணவியின் வீட்டில் தான் இருவரும் தங்க வேண்டியதால் இரவு புது மாப்பிள்ளைக்கு கிடைக்க வேண்டிய உபசாரங்கள் எல்லாம் பலமாக கிடைத்தது.
இரவு உணவை முடித்து கார்த்தியை பேச்சுவாக்கில் வீட்டை சுற்றி காட்டுவதாக மாடிக்கு அழைத்து சென்ற சித்தார்த் சிறிது நேர பேச்சிற்கு பிறகு, “நீங்க வைஷ்ணவி ரூம்ல இருங்க மாப்பிள்ளை, நான் வைஷ்ணவியை மேல அனுப்பி வைக்கிறேன்” என மடிகியாக கீழே நழுவிவிட்டான்.
இங்கிருந்து தன்னுடைய அறையை பார்வையிட்டவன், பின் வைஷ்ணவி அறைக்குள் சென்று அவள் அறையை அங்குலம் அங்குலமாக பார்வையிட்டவன்.
எதுவும் அதற்கான இடத்தில் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. எங்கும் குப்பையாய் தான் கிடந்தது. துணி எல்லாம் அலமாரியில் திணித்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. கட்டிலில் அவனுடைய பை இருக்க, தன்னுடைய இரவு உடையை எடுத்து குளித்து வந்தான்.
கார்த்தி வெளியில் வந்த சமயம் வைஷ்ணவி புடவையோடு அங்கிருந்த பொருட்களை சுத்தம் செய்துகொண்டிருந்தாள்.
கார்த்தியின் அரவம் கேட்டு அவனை பார்த்தவள் அசட்டு சிரிப்போடு, “கொஞ்சம் குப்பையா இருக்கும் சாரி” அவளுக்கு தானும் உதவு செய்தவன் உதவி செய்யும் இடைவேளையில் அவளை ஆராய்ந்தான்.
கண்ணை உறுத்தாத இளம் மஞ்சள் நிற டிசைனர் புடவை கண்ணாடியை தெரிய, இரண்டு சாரம் மல்லிகை பூ அவள் சிகையை அலங்கரித்திருக்க, கட்டிலில் இருந்த பூக்களை விட, தன் பெண் பூவின் மேல் வந்த வாசனை தான் அவனை முடக்கியது.
சோதனைக்கென்றே தளர உடுத்தியிருந்த புடவை அவள் மெல்லிடையை பளிச்சிட்டு காட்ட, நித்தம் அவளை அழகாய் காட்டுவதில் கண்ணாடியை மிஞ்சியது அவன் மனது. பேரழகி தான், அவன் வாழ்க்கையை மிளிரச்செய்யும் பேரழகி தான்.
இருவருக்கும் கொடுத்த பாலை அவனிடம் கொண்டு வந்தவள் யோசிக்காமல் தான் முதலில் அருந்த அவனிடம் கொடுக்க சென்ற நிமிடம், பாலில் சுவை நாவை நீங்க மறுக்க அவனிடம் நீட்டிய கை மீண்டும் தன்னுளே அடங்கிப்போனது, “என்ன இது இன்னைக்கு பால் நல்லா இருக்கே” கொஞ்சம் கொஞ்சம் என சொல்லிக்கொண்டவள் மொத்தமாய் தானே குடித்துமுடித்தாள்.
“சமயலு இந்த பாலு ரொம்ப டேஸ்ட்டா இருக்கே” குழந்தைத்தனத்தை குணமாகவே கொண்டுள்ளவளை ரசித்தவன், “எங்க தா” என டம்ளரை வாங்கி பார்த்தாள் உள்ளே ஒன்றுமே இல்லை.
அவள் சேட்டைகளை திணறாமல் தாங்கிக்கொள்ளும் வித்தையை கற்று அவன் மனதில் புதைத்துவிட்டு தானே அவளை மனைவியாக்கியது.
செல்லமாய் அவன் முறுக்கிக்கொள்ள, “நான் வேணா இன்னொன்னு வாங்கிட்டு வரவா?” என கதவை திறக்க போனவளை கை பிடித்து நிறுத்தியவன், “வேணாம் எல்லாரும் படுத்துருப்பாங்க” என்றான்.
“அதுவும் சரி தான்” என இழுத்தவளை நெருங்கி உடல் உரசும் அளவிற்கு நிற்க வைத்தான்.
“நீங்க படுங்க நான் டிரஸ் சேஞ் பண்ணிட்டு வர்றேன்” என்ன தான் சாதாரணமாக இருப்பது போல் அவள் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் உதறல் எடுத்தது என்னவோ உண்மை தான்.
எளிதாக திருமணம் செய்தாயிற்று ஆனால் இந்த இரவை கார்த்தியோடு தான் ஆனாலும் சில நாட்களாக வசீகரிக்கும் அவன் பேச்சுகளும், திசை மாறும் அவன் பார்வையும் வயிற்றில் பய பந்தை உருட்டியது. மேலே செல்ல மாட்டேன் என்றவளை வலுக்கட்டாயமாக மிரட்டு அனுப்பி வைத்தார் மஹேஸ்வரி.
உள்ளே வந்த பொழுது அவன் குளியலறையில் இருப்பது தெரிய நிம்மதியாக அமர்த்திருந்தவள், கதவு திறக்கும் சத்தம் கேட்டு நேரத்தை ஓட்ட வேலை செய்வது போல் பாசாங்கு செய்தாள்.
ஆனால் எவ்வளவு நேரம் தான் கடத்துவது? இதோ மீண்டும் அவன் பிடியில். மிக நெருக்கமாக, இருவரும் தனியே. அதுவும் ஒரே அறையில். ஆசையாக கனவு கண்டா இரவு, அச்சத்தையும் பாரபட்சம் பார்க்காமல் சேர்த்து தந்தது.
“ஏன் இந்த சாறி நல்லா தானே இருக்கு” என்றவன் மூச்சு காற்று அவள் கழுத்தில் பட, மூச்சு சீராக இல்லாதது போல் மாயை வைஷ்ணவிக்கு.
“எனக்கு மாத்தணும்” என்றவள் வார்த்தை காற்றில் கரைந்து அவன் காதுகளை அடையும் முன்னரே, அவன் இதழ்கள் அவள் முதுகில் அழுத்தமாய் பட, உடல் தன் கட்டுப்பாட்டை இழந்து வலுவிழந்து நின்ற தருணம், அவள் கைகளை எடுத்து அவள் வயிற்றோடு கட்டிக்கொண்டான் நெஞ்சோடு அணைத்து.
மொத்தமாக அவன் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்ட மனைவியின் முதுகில் தன்னுடைய மூச்சுக்காற்றை பதிவிட்டவன் இன்னும் கீழே அவனுக்கு ஆட்டம் காண்பிக்கும் அவள் சேலையிடமிருந்து தப்பித்திருந்த வெற்று முதுகின் தடத்தை தொடர்ந்து வர,
அவள் ரவிக்கையின் இறுதியில் தெரிந்த அவள் உடலில் தன்னுடைய மீசையால் குறுகுறுப்பு காட்ட, வைஷ்ணவிக்கு உணர்ச்சிகளை சொல்ல வார்த்தை இல்லாமல் போனது.
நெளிந்தவளின் உடலை இன்னும் கையில் இறுக்கியவன் மீண்டும் அவள் கழுத்து வளைவிற்கு வந்தான்.
“ப்ளீஸ்…” என்றாள் அவனுடைய இடைவிடாத குரும்பை ரசித்து.
“கார்த்திக் சொல்லு வைஷ்ணவி” மெல்லிசான குரலில் ஆணையிட்டவன் கைகள் அவள் உடலில் எல்லை மீறி சென்றதிலே அவனுடைய நோக்கம் புரிந்தது, ஆனாலும் முரண்பட்டு நின்றது மனைவியின் மனது.
அவளுடைய அழுத்தம் புரிந்தவன் அவள் காதுகளுக்கு பின்னிருந்த பூனை மயிரை ஊதிய உடனே ஒரு முத்தத்தை வைக்க, அவனுடைய மீசையின் இன்ப தொல்லை தாங்க முடியாது போனது.
அவன் கன்னத்தில் கை வைத்து தடுத்தவள், “ப்ளீஸ்” என்றாள் கெஞ்சலுடன். அவனோ அவள் கையை பிடித்து உள்ளங்கையிலும் ஆசையாய் இதழ் பதிக்க கடினப்பட்டு கண்களை திறந்து அவன் முகம் பார்த்து கெஞ்சினாள்.
கார்த்தி அவளை விடும் எண்ணத்தில் இல்லாமல் போக, “கார்த்திக் சொல்லுடா” என்றான் ஒவ்வொரு விரலாக முத்தமிட்டபடி அவளை பெரும் அவஸ்தைக்குள்ளாக்கினான்.
நா வறண்டு கிடந்த வைஷ்ணவிக்கு அவன் தந்த சுகமான இம்சைகள் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் வர, “சொல்… சொல்ல மாட்டேன்”
அந்த நேரத்திலும் வீம்பாக பேசும் மனைவியின் செயலில் பித்தானவன், இடை பிடித்து அவளை தன் பக்கம் திருப்பி மனைவியின் கன்னங்களில் தன்னுடைய அச்சாரத்தை பதிக்க அவனுடைய இதழ்கள் தன்னுடைய இதழில் சேராமல் செய்யும் சேட்டையை எல்லாம் வெறுத்தவள் அவன் சட்டையை பிடித்து அவன் கண்களை பார்க்க, அதில் இருந்த குறும்பு அவளை குறுகுறுக்க செய்தது.
“கா… கார்த்… என்னங்க…” திக்கினாள்.
“ம்ம்ம்” என்றானே தவிர இதழ்களை சுற்றி முத்தமிடுவதை நிறுத்தவில்லை, அதையும் தாண்டி மிருதுவாக அவளது வெற்றிடையை வருடும் அவன் கைகள் அவளை ஏதோ ஒரு உலகிற்கு அழைத்து சென்றுவிட்டது.
ஒரு கை கொண்டு தன் கன்னத்தை பற்றியிருந்த அவன் கையை பிடித்த வைஷ்ணவி, “கார்… கார்த்திக்” என்றிட, தன்னுடைய விளையாட்டை நிறுத்தியவன் கண்கள் திறந்து சின்ன சிரிப்போடு அவளை பார்க்க, வைஷ்ணவிக்கு அந்த சிரிப்பு மேலும் அவஸ்தையை கொடுத்தது.
என்ன தான் வைத்திருக்கிறான் இந்த சிரிப்பில்? இத்தனை வசீகரத்தை கொண்டுள்ளதே என வியந்து நின்ற சமயம், அவளது கையை எடுத்து தன்னுடைய கழுத்தோடு கோர்த்துக்கொண்டவன், “எத்தனை மாசம் வெயிட் பண்ண வச்சு சாதிச்சிடல?” இதமான சிரிப்போடு அவன் குற்றம் சாட்டியது கூட அழகாய் தான் இருந்தது வைஷ்ணவிக்கு.
“நீங்களும் தான் சாதிச்சிட்டிங்க”
“நான் தான் இன்னும் ஆரமிக்கவே இல்லையே… நான் சாதிக்க வேண்டியது நெறையா இருக்கு” நெற்றி முட்டி அவள் மூக்கை மெதுவாக கடித்தவன், “என் சண்டிராணி” கார்த்தியின் கண்கள் சிரிப்போடு அவள் இதழ்களை பார்வையிட,
அதன் அர்த்தம் புரிந்தவள் அவனோடு இன்னும் ஒட்டி நிற்க, அவள் அனுமதி பெற்றதில் நிம்மதியாக தன்னுடைய முதல் இதழ் தேடலை அவளிடம் துவங்கினான்.
எங்கு ஆரம்பித்தது எப்பொழுது ஆடைகள் களைந்து கட்டிலுக்கு சென்றோம் என்பதே தெரியாமல் கார்த்தியின் ஜாலத்தில் மொத்தமாய் வைஷ்ணவி கரைந்திருக்க, இத்தனை ஆண்டுகள் காத்து வந்த கண்ணியம் எல்லாம் செழித்த அவள் அழகில் எங்கோ பரந்திருந்தது.
இத்தனை வருட தேடலையும் மொத்தமாய் மனைவியிடம் தேடி கண்டவன் தன்னவளை நெஞ்சோடு அணைத்து அவள் நெற்றி முட்டி அவளை தன் கண்கள் பார்க்க வைத்தான்.
கார்த்தியின் முகம் பார்த்தவள் அவன் பார்வையில் வெட்கப்பட்டு அவன் நெஞ்சிலே முகத்தை புதைக்க, “டேய் வைஷ்ணவி…” கஷ்டப்படுத்திவிட்டோமோ என்ற வருத்தத்தில் அழைத்தான்.
“ம்ம்ம்…” என்றாள் மனைவி.
“ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா?”
வார்த்தைகள் மூலம் கூறாமல் பாடல் வரிகள் கொண்டு முதல் அனுபவத்தை சொல்லிவிட முடிவெடுத்து கைபேசியை எடுத்து பாடலை தேடி போட்டாள், அவன் செய்யும் அனைத்தையும் ரசிப்பதாய்…
?
சொல்லாமலே யாா் பாா்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா…!?
தீ குளிா்கின்றதே அடி இது காதலா…!?
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா?
?
அவள் நாணமே அவன் கர்வமாக, வைஷ்ணவி நெற்றியில் முத்தம் கொடுத்து மீண்டும் ஆவலுடன் அவளுடனான தேடலை துவங்கினான்.
இதமானவனின் அதிரடியை மனைவி நிச்சயம் எதிர்பார்க்கவில்லை என்றாலும், கணவனின் ஆசைகளுக்கு தடை விதிக்காமல் தாராளமாய் அவனுக்கு வேண்டியதை வாரி வழங்கினாள்…
இன்னும் மூணு சாப்டர்ல கதையை முடிக்கலாம்னு இருக்கேன்… அடுத்த கதை ஆரமிக்கணும்ல?