அலைபேசியில் பதிவு செய்த காணொளியை ஒரு முறை மீண்டும் சரிபார்த்துக் கொண்டவள்….’ வீடியோல பேசும்போது கொஞ்சம் எமோஷன் குறைஞ்ச மாதிரி இருக்கே!, இன்னும் ஃபீலிங்கா பேசி இருக்கணுமோ!, வேற வீடியோ ரெக்கார்ட் பண்ணுவோமா?, வேணாம் வேணாம் அதுக்கெல்லாம் நேரம் இல்ல. யாராவது தேடி வரதுக்குள்ள உடனே விஷத்தை குடிச்சிடுவோம். ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனா கூட உயிர் பிழைக்க கூடாது. ’ என்று தனக்குள்ளேயே எண்ணிக்கொண்டவள் கையில் இருந்த அலைபேசியை ஓரமாய் வைத்துவிட்டு… உடை அலமாரியில் எவருக்கும் தெரியாமல் பத்திரமாய் பதுக்கி வைத்த விஷக் குப்பியை கையில் எடுத்தாள் மீனாட்சி.
விஷம் குடித்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் முன்.. தன்னை உயிருக்குயிராய் காதலிப்பதாய் கூறி வீம்பாய் நின்றவளை காதல் வலையில் வீழ்த்தியவனை கடைசியாய் ஒரு முறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தாள் மீனாட்சி.
‘தாங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார். தயவுசெய்து லயனில் காத்திருக்கவும் அல்லது சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யவும்’ என்று சில காலமாய் அடிக்கடி கேட்டு பழக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட குரல் வழமை போல் அதன் வசனங்களை ஒப்பித்தது.
’ ச்சே… வழக்கம் போல நம்பர் நாட் ரீச்சபில்ன்னு வருது,’ என்று சலித்துக் கொண்டவள்… ‘ பிளடி ராஸ்கல்.. போன்னு சொன்னதும் இது தான் சாக்குன்னு அப்படியே என்னை கழட்டி விட்டு ஓடிட்டான். ஒரு போன் கால் இல்ல, அனுப்புற லெட்டருக்கு ரெஸ்பான்ஸ் இல்ல, இருடா செத்துப் போய் ஆவியா வந்து உன்னை டார்ச்சர் பண்றேன்’ என்று தன் காதலனை எண்ணி வசை பாடியவள்… ‘ ஆமா செத்தா ஆவியவோமா?, படத்துல, டிவி சீரியல்ல எல்லாம் அப்படித்தான் காட்றாங்க, ஆனா அது உண்மையா பொய்யான்னு தெரியலையே!. சரி முதல்ல செத்துப்போவோம், ஆவியான அவனை போய் மீட் பண்ணி.. ஏண்டா என்ன கழட்டி விட்டன்னு கேட்போம், அப்படி இல்லையா நேரா சொர்க்கத்துக்கு போய்.. அங்கயாவது நிம்மதியா இருப்போம். சொர்க்கத்திலையாவது நமக்கான சம உரிமை கிடைக்கும்னு நம்புவோம். ஆமா விஷம் என்ன டேஸ்ட்ல இருக்கும்?, கசக்குமோ?, கண்டிப்பா இனிக்க வாய்ப்பு இல்லை. ரொம்ப கசப்பா இருந்தா.. எனக்கு வாமிட் வந்திடுமே!, பேசாம மருந்து எல்லாம் தேன் கலந்து குடிக்கிற மாதிரி விஷத்துலயும் தேன் கலந்து குடிச்சிடுவோமா?, அடடா தேன் எடுத்துட்டு வரலையே!, தேன் எடுக்க கீழ போனா…வந்திருக்கிற ரிலேட்டிவ்ஸ் கிட்ட மாட்டிக்குவோம்…, பேசாம கண்ண மூடிட்டு குடிச்சிடுவோம், செத்த பிறகு டேஸ்டா தெரியப்போகுது..’ என்ற எண்ணத்துடனே கையில் இருந்த விஷ குப்பியை திறக்கும் வேளையில் அவளின் அறையின் கதவு ஓங்கி தட்டப்பட்டது.
‘யாருடா அது இந்த நேரத்துல?, நிம்மதியா சாகக் கூட விடாம வந்து தொந்தரவு பண்ணிட்டு?’ என்று அலுத்துக் கொண்டபடி கதவை திறவாமலேயே..” யாரது? யாரா இருந்தாலும்.. இப்போ போயிட்டு நான் போனதுக்கு அப்புறம் வாங்க!” என்றாள் மீனாட்சி.
“என்னது போனதுக்கப்புறமா?, நீ எங்க போக போற?, முதல்ல கதவை திற?” என்று குழப்பமும் கோபமுமாய் வினவயபடி விடாமல் கதவை தட்டினாள் மீனாட்சியின் தங்கை விசாலாட்சி.
“அட விசா நீதானா?, எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்றியா?” என்று கதவின் அருகில் வந்து நின்று கொண்டு தங்கைக்கு மட்டும் கேட்கும் விதமாய் ரகசிய குரலில் வினவினாள் மீனாட்சி.
“அது நான் போனதுக்கப்புறம் நீயே வந்து பார்த்து தெரிஞ்சுக்கோ!, எனக்கு இப்போ கொஞ்சம் தேன் வேணும் கிச்சன்ல இருக்கும் எடுத்துட்டு வரியா?” என்றாள் மீனாட்சி.
“என்னது தேனா?, அது எதுக்கு இந்த நேரத்துல?, ஆமா நீ உள்ள என்ன பண்ணிட்டு இருக்க?, முதல்ல கதவை திற” என்று பொறுமை இழந்து கத்தினாள் விசாலாட்சி.
“ தயவு செஞ்சு கத்தாத… விசா… யாராவது கேட்டுட்டா நான் போட்டு வச்ச திட்டம் எல்லாம் வேஸ்ட்டா போயிடும்..” என்று கெஞ்சும் குரலில் கூறினாள் மீனாட்சி.
“என்ன திட்டம்?, எங்கேயோ போகப் போறேன்னு சொல்ற!, இப்போ திட்டம்னு சொல்ற!, உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க?, இப்ப நீ கதவை திறக்கல.. நீ வீட்டை விட்டு ஓடிப்போக திட்டம் போட்டிருக்கேன்னு எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன். அப்புறம் என்ன நடக்கும்னு உனக்கே தெரியும். ஒழுங்கு மரியாதையா கதவை திறந்திடு..” என்று அதுவரை கொண்டிருந்த பொறுமையை கைவிட்டு தன் தமக்கையை மிரட்டத் துவங்கினாள் விசாலாட்சி.
‘ இவ வேற இந்த கத்து கத்திட்டு இருக்காளே!, இவ போடுற சத்தத்தை கேட்டு எல்லாரும் இங்க வந்துருவாங்க!… எல்லாரும் ரூம் முன்னாடி கூடுறதுக்கு முன்னாடி இப்பவே விஷத்தை குடிச்சிடுவோமா!, ‘ என்று யோசித்தவள், ‘ இல்ல இப்ப வேணாம்.. இவ கத்துற சத்தத்தை கேட்டு எல்லாரும் கதவை உடைச்சிட்டு உள்ள வந்து என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயி காப்பாத்திடுவாங்க, அப்படி மட்டும் உயிர் பிழைச்சிட்டேன், ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணியே டார்ச்சர் பண்ணிடுவாங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேசுவாங்க, இவங்க பேச்சை எல்லாம் கேட்டதுக்கு அப்புறம் ஏண்டா இன்னும் உயிரோட இருக்கோம்னு தோண ஆரம்பிச்சிடும். வாழுறதுக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச ஆசையும் விட்டுப் போயிடும். பேசாம இவளை உள்ள கூப்பிட்டு ஏதாவது பொய் சொல்லி பேசி சரிகட்டி வெளியே அனுப்பிடுவோம். அதுக்கப்புறம் பொறுமையா விஷத்தை குடிச்சுக்கலாம்.‘ என்று எண்ணியவள் தன் உயிரைக் குடிக்க காத்திருக்கும் விஷத்தை தலையணையின் கீழ் மறைத்து வைத்துவிட்டு வந்து அறையின் கதவை திறந்தாள் மீனாட்சி.
கதவு திறப்பதற்காகவே காத்திருந்தவள் போல அவசரமாய் அறையினுள் நுழைந்த விசாலாட்சி..” கதவை அடைச்சிட்டு என்ன பண்ணிட்டு இருக்க?, எங்கேயோ போறேன்னு சொன்னயே எங்கப் போகப் போற?, முதல்ல உன் போனை குடு, கடைசியா யார் கூட பேசிட்டு இருந்த? யார் கூட ஓடிப் போக பிளான் போட்டு இருக்க? “ என்ற படி கட்டிலின் ஓரத்தில் இருந்த மீனாட்சியின் அலைபேசியை அவள் அனுமதியே இல்லாமல் கைப்பற்றினாள்.
தனது அலைபேசியை மீட்க எண்ணிய மீனாட்சி.. வேகமாய் அவள் முன் வந்து நின்று… ”இங்க பாரு தேவையில்லாம என் விஷயத்துல தலையிடாத…என் போனை குடு..” என்று தங்கையின் கைக்குள் சிறைப் பட்டு கிடக்கும் அலைபேசியை பறிக்க முயன்றாள்.
“முடியாது.. முதல்ல நீ எங்க போக திட்டம் போட்டு வச்சிருக்கன்னு சொல்லு..” என்று விசாலாட்சி அதட்டிட…”நான் எங்க போக போறேன்.. கல்யாணமானதும் புருஷன் வீட்டுக்கு போகப் போறேன்ல அதைத்தான் சொன்னேன்.” என்று மழுப்பலாய் பதில் தந்தாள் மீனாட்சி.
“பொய் சொல்லாத நீ அவ்வளவு சீக்கிரம் உன்னோட தோல்வியை ஒத்துக்குற ஆள் இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும். உண்மைய சொல்லு இன்னும் அந்தக் கரன் கூட டச்சுல தான இருக்க?. அவன் கூட தானே ஓடிப்போக ப்ளான் போட்டு வைச்சிருக்க..” என்றாள் விசாலாட்சி.
“சத்தியமா இல்லடி… கரன் கூட எனக்கு எந்த பேச்சு வார்த்தையும் இல்ல. அன்னைக்கு கடைசியா நம்ம வீட்ல வச்சு பார்த்தது தான். அதுக்கப்புறம் நான் அவன பாக்கவும் இல்ல, பேசவும் இல்ல..தயவு செஞ்சு என்னை நம்பு” என்று மீனாட்சி கூறிட.. “ அப்படியெல்லாம் உன்னை நம்ப முடியாது” என்று தமக்கையின் வார்த்தையை ஒப்புக்கொள்ள மனமற்று கையில் இருந்த அலைபேசியை ஆராயத் துவங்கினாள் விசாலாட்சி.
‘ஐயோ இவ மட்டும் இப்ப போன்ல இருக்கற வீடியோவ பார்த்தா எல்லாமே வீணாப் போயிடுமே..!’ என்று தனக்குள் பயம் கொள்ளத் துவங்கியவள் அவசரமாய் விசாலாட்சி கையில் இருந்து தனது அலைபேசியை பறிக்க முயன்றாள்.
இருவருக்கும் இடையில் நடந்த தள்ளுச்முள்ளு சண்டையில் விசாலாட்சி கட்டிலில் சரிந்து விழுந்திட… அதனால் உண்டான அதிர்வினால் தலையணையின் கீழ் மறைத்து வைக்கப்பட்ட விஷக் குப்பி தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து விழுந்தது. அதனை கவனித்த விசாலாட்சி சற்றும் தாமதிக்காமல் விஷக் குப்பியைக் கைப்பற்றிக் கொண்டு..’ என்ன இது?, ஒரேடியா உலகத்தை விட போகணும்னு முடிவு பண்ணிட்டியா?, நீ இப்படி பண்ணுவன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல மீனா.. நீ எவ்ளோ தைரியமான பொண்ணு. எந்தப் பிரச்சினை வந்தாலும் அசால்டா ஃபேஸ் பண்ணுவ?, நீ எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்த?” என்று அதிர்ச்சியுடன் வினவினாள் விசாலாட்சி.
” என்னை வேற என்ன பண்ண சொல்ற?, பிடிக்காத கல்யாணத்துல இருந்து தப்பிக்க எனக்கு வேற வழி தெரியல.. ” என்றாள் மீனாட்சி.
” கல்யாணம் பிடிக்கலைன்னு இப்படியா முட்டாள் தனமா முடிவெடுப்ப!, நீ எப்படியாவது இங்க இருந்து தப்பிச்சு போக நினைப்பன்னு உன்னை கண்காணிக்கிறதுக்காக தான் என்னை இங்க அனுப்பி வச்சாங்க, அப்பா பயந்த மாதிரி நீ எங்கேயாவது ஓடிப் போனா கூட பரவால்ல. இப்படி ஒரேடியா உலகத்தை விட்டு போகணும்னு முடிவெடுப்பன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.”என்று விசாலாட்சி வருத்தத்துடன் பேசிட… ” இந்த காதல் இருக்கே அது வந்துட்டா எல்லாரும் முட்டாள்கள் தான். தைரியமான ஆளையும் அசைச்சு பார்த்துரும் இந்த காதல்.” என்று தன் செய்கைக்கு காரணம் கற்பித்தாள் மீனாட்சி.
” அசைச்சு பார்க்க நீ என்ன ஆல மரமா?, இப்படி எல்லாம் பேசுறது உன் கேரக்டருக்கு கொஞ்சம் கூட சூட் ஆகல. பி ப்ராக்டிகல் மீனா. கொஞ்ச நாளைக்கு கஷ்டமா இருக்கும் அப்புறம் அந்த லைஃப் உனக்கு பழகிப் போயிடும். சோ ப்ளீஸ் உன்னோட மனச மாத்திக்கோ… ” என்று வேண்டுதலாய் கூறினாள் விசாலாட்சி.
“என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல விசா, தற்கொலை வாக்குமூலம் கூட ரெடி பண்ணி வச்சுட்டேன். சோ இன்னைக்கு எப்படியாவது எந்த வழிலயாவது நான் கண்டிப்பா சூசைட் பண்ணிக்குவேன்.” என்று பிடிவாதமாக கூறினாள் மீனாட்சி.
” என்ன வாக்கு மூலமா?, இந்த போன்லையா இருக்கு?” என்றவள் மீனாட்சியின் அலைபேசியை ஆராய்ந்து பார்த்திட.. அதில் பதிவாகி இருந்த காணொளியை முழுதாய் கண்டு முடித்து…. ” இத பாக்கும்போது தற்கொலை வாக்குமூலம் மாதிரி இல்ல, யாருக்கோ வார்னிங் குடுக்குற மாதிரி இருக்கு. சாகப் போறேன்னு சொல்றத கூட இப்படி விரப்பா தான் சொல்லுவியா? ” என்று கிண்டலாய் வினவினாள்.
” ஆமால நான் கூட யோசிச்சேன் இன்னும் கொஞ்சம் ஃபீலிங்கா பேசிருக்கணும்னு .பட் என்ன செய்ய எனக்கு தான் அழுகிறதே பிடிக்காது. அழுகவும் வராது. ஆனா சொல்ல வேண்டிய விஷயத்தை எல்லாம் கரெக்டா சொல்லிட்டேன்ல” என்றாள் மீனாட்சி.
” ஆமாமா எல்லாத்தையும் கரெக்டா சொல்லிட்ட. அப்பா அம்மாவை இந்த ஊர் உலகமே தப்பா பேசுறதுக்கு தேவையான எல்லா டீடெயிலையும் கரெக்டா சொல்லிருக்க. நீ என்ன நினைச்சுட்டு இப்படி எல்லாம் பேசி வச்சிருக்க?. நம்ம அப்பாவ பேஸ் பண்ண தைரியம் இல்லாம உன்னை விட்டுட்டு ஓடிப்போனவனுக்காக உயிரை விடுறேன்னு சொல்ற…பைத்தியமா நீ..?” என்று தமக்கையின் பிடிவாதத்தை எண்ணி உண்டான எரிச்சலுடன் வினவினாள் விசாலாட்சி.
” அவன் ஒன்னும் அப்பாவ பேஸ் பண்ண தைரியம் இல்லாம போகல… நான் சொன்ன வார்த்தை தான் அவனை இங்கிருந்து விரட்டி அடிச்சது.” என்று காதலனை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் பேசினாள் மீனாட்சி.
” நீ தான் போனு சொன்ன அதுக்காக அவன் எல்லாத்தையும் விட்டுட்டு போனது சரியா? அவன் மேல இருக்கிற உன்னோட காதல நிருபிக்க நீ தற்கொலை வரைக்கும் போயிருக்க!, அவனோட காதல நிருபிக்க அவன் என்ன செஞ்சான்?. உன் கிட்ட கூட சொல்லாம எங்கேயோ ஓடி ஒளிஞ்சிருக்கான் உன்னைப் பத்தி யோசிக்காதவனுக்காக நீ உயிரை விட போறியா?” என்று நியாயமான கேள்விகளை விசாலாட்சி அடுக்கிக் கொண்டே செல்ல… ” இங்க பாரு விசா இது உனக்கு சொன்னாலும் புரியாது.. மனசுல ஒருத்தன வச்சுட்டு இன்னொருத்தன் கூட வாழ என்னால முடியாது. கரண் மனசு மாறி இருந்தாலும் என் மனசு மாறப்போறது இல்ல. ” என்று தன் முடிவில் இருந்து பின் வாங்காமல் நின்றாள் மீனாட்சி.
எத்தனையோ முறை எத்தனையோ விதத்தில் பேசிப் பார்த்தோம் தமக்கையின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை புரிந்து கொண்ட விசாலாட்சி… ” சரியான பிடிவாதக்காரி உன்கிட்ட போய் பேசிட்டு இருக்கேன் பாரு என்னைச் சொல்லணும், சரி இங்க பாரு உனக்கு இந்த கல்யாணம் வேணாம் அவ்வளவு தான! அதுக்கு நீ சாகணும்னு அவசியம் இல்ல. கல்யாணத்துக்கு இன்னும் நேரம் இருக்கு, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இன்னும் வரல, மாப்பிள்ளை அழைப்பு முடிஞ்சதும், எல்லா ரிலேட்டிவ்ஸும் கல்யாணம் நடக்கிற இடத்துக்கு போயிருவாங்க, அந்த நேரம் நான் உனக்கு சிக்னல் கொடுக்கிறேன், நீ எப்படியாவது இங்கு இருந்து தப்பிச்சு போயிடு”என்று தமக்கைக்கு உதவிட முன் வந்தாள் விசாலாட்சி.
” திடீர்னு இங்க இருந்து போக சொன்னா நான் எங்க போறது?” என்று குழப்பமாய் மீனாட்சி வினவிட..” உனக்கு என் கூட காலேஜ்ல படிச்ச மஞ்சுவை தெரியும்ல, அவளும் இந்த கல்யாணத்துக்கு வந்திருக்கா… அவர் சென்னையில் ஹாஸ்டல்ல தங்கி வேல பாக்குறா நீ கொஞ்ச நாளைக்கு அவ கூட போய் ஸ்டே பண்ணு இங்க எல்லா பிரச்சனையும் முடிஞ்சு அம்மா அப்பா சமாதானம் ஆகவும் சொல்றேன் நீ இங்க கிளம்பி வந்துடு. ” என்று யோசனை கூறினாள் விசாலாட்சி.
” இது சரியா வருங்குற?” என்று சந்தேகத்துடன் மீனாட்சி வினவ… ” சரியா வரும்.. நான் போய் மஞ்சு கிட்ட விஷயத்தை சொல்லி அவளை ரெடியாக சொல்றேன்.. ” என்றாள் விசாலாட்சி.
” அப்போ நான் என்னோட திங்ஸ்ஸோட சர்டிபிகேட்டையும் எடுத்து வச்சுக்கிறேன், அங்கேயே எனக்கு ஒரு வேலை தேடிக்கிட்டு அப்படியே கரணையும் தேட வசதியா இருக்கும். செத்து ஆவியா போய் காரண மீட் பண்ணனும் நினைச்சேன், இப்போ நேரிலேயே மீட் பண்ண வாய்ப்பு கிடைக்கப் போகுது, எல்லாம் உன்னால தான். தேங்க்ஸ் என் செல்லத் தங்கச்சி…” என்று தனக்காக யோசித்த தங்கையை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள் மீனாட்சி.
” என்னது ஆவியா போய் மீட் பண்ணனும் நினைச்சியா?… நீ நல்லா தானே இருக்க பைத்தியம் எதுவும் பிடிச்சுடலையே!, லூசு மாதிரி என்னென்னமோ உளறிட்டு இருக்க!, எனக்கு உன்னை பாக்கவே பயமா இருக்கு. ” என்று தமக்கையின் மனநிலையை எண்ணி கவலை கொண்டபடி பேசினாள் விசாலாட்சி.
” அட நீ வேற நான் தெளிவா தான் இருக்கேன். நீ உன் ஃபிரண்டு கிட்ட பேசி இங்கே இருந்து கிளம்புறதுக்கான ஏற்பாட்டை கவனி, நான் என்னோட திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணுறேன். ” என்று தற்போதைக்கு தற்கொலைக்கு அவசியமில்லை என்ற மகிழ்வுடன் துள்ளி குதித்தபடி தன் உடமைகளை எடுத்து வைத்து ஊரை விட்டு கிளம்ப தயாரானாள் மீனாட்சி.