Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிறம் பாராத காதல்.

நிறம் பாராத காதல் 21 1

✨நிறம் பாராத காதல்✨

✨அத்தியாயம்..21

மாறனின் மகள் மயிழினி வேதநாயகியின் அறையில் உறங்கிக்கொண்டு இருக்க, குழந்தையின் அருகே வைதேகி கலக்கத்துடன் அமர்ந்து இருந்தவளுக்கு ரணதீரனே அவன் கையால் உணவை ஊட்டி விட்டவன் மருந்தையும் எடுத்து வந்து கொடுத்து இருந்தான்.

“நீ நல்லா ரெஸ்ட் எடு. எதைப்பற்றியும் கவலைப்படாத. உன்னைச் சீக்கிரமா கனடா அனுப்பி வைக்க வேண்டியது என் பொறுப்பு” என்ற ரணதீரனை நன்றியோடு பார்த்தாள் வைதேகி.



Advertisement

“இப்போ பெயின் எப்படி இருக்கு” என்று கேட்ட ரணதீரன் அந்த அறையில் இருந்த இருக்கையை எடுத்து வைதேகியின் அருகே போட்டு அமர்ந்துக்கொண்டான்.

“பெயின் உடம்புல இல்ல. மனசுல தான் அதிகமா இருக்கு, யார் யாரையோ சொந்தம்ன்னு நம்பி பணத்துக்காக இன்னைக்கு அந்தச் சொந்தம் தான் என் அம்மா அப்பா சாவுக்குக் காரணம்னு தெரிந்த பிறகு என்னால அதைத் தாங்கிக்கவே முடியல” என்ற வைதேகியின் கண்களில் கண்ணீர் வடிந்த வண்ணமாக இருந்தது.

“அவன் பண்ண துரோகத்துக்குக் கண்டிப்பா அவனுக்கு தண்டனைக் கிடைக்கும். நீ கவலைப்படாத. சரி நீலுக்கிட்ட சொல்லி உன்னோட போனை எடுத்து வந்து தரச் சொல்லுறேன். உனக்கு எதாவது தேவைன்னா எனக்குக் கால் பண்ணு. நான் போய்க் குளிச்சிட்டு கொஞ்ச நேரத்துல மறுபடியும் இங்க வரேன்” என்ற ரணதீரன் தன் இருக்கையிலிருந்து எழுந்தவனின் கையைச் சட்டென்று பற்றிக்கொண்டாள் வைதேகி.

Advertisement

“என்னாச்சு… எதாவது வேணுமா?” என்ற ரணதீரனின் கரங்களை எதற்க்காகப் பிடித்தோம் என்று வைதேகிக்கும் தெரியவில்லை.
ஆனால் அவளுடன் அவன் இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் வைதேகிக்கு இருந்தது.

Advertisement

“என்னாச்சு…எதாவது சொல்லணுமா?” என்று மீண்டும் ரணதீரன் கேக்க,
“அது….ஆமா! என் பேர்ல இவ்ளோ சொத்து இருக்கே? இதெல்லாம் அந்த ரங்காராவ்க்கு கிடைக்கக் கூடாது. அதைப் பற்றித் தான் பேசணும்னு எண்ணி உங்க கையைப் பிடிச்சேன்” என்று வைதேகி சூழ்நிலையைச் சமாளிக்கும் விதமாகப் பேசினாள்.

“ம்…நீ ரெஸ்ட் எடு. நான் போய்க் குளிச்சிட்டு வந்தபிறகு நம்ம மாமாக்கூட சேர்ந்து இதைப்பற்றிப் பேசலாம்”
என்று ரணதீரன் சொல்ல,
“சரி போய்க் குளிச்சிட்டு வாங்க” என்ற வைதேகியை பார்த்துக் கண்களால் ஜாடை காட்டியவன், “மேடம்… என் கையை விட்டா தானே நான் இங்க இருந்து போக முடியும்” என்றதும் சட்டென்று தன் பிடியிலிருந்து அவன் கையை விடுவித்தவள் வெட்கம் கலந்த சிரிப்புடன் அமர்ந்தப்படியே கண்களை மூடித் தூங்குவதை போலப் பாவனை செய்தவளை பார்த்து சிரித்துக்கொண்டே ரணதீரன் அந்த அறையில் இருந்து வெளியேறி
இருந்தான்.

இதே தருணம் மாறனின் அறையில்,
“என்ன மாமா சொல்றிங்க? நீங்கச் சொல்லுறது உண்மையா?” என்று ஆச்சிரியமாக மாயா கேட்டதும், “அட சத்தியமா சொல்லுறேன் மாயா… உன் தம்பி வைதேகிக்கிட்ட கிள்ளி, அடிச்சு, சிரிச்சு இப்படி எல்லாமே பண்ணுறான்” என்று மாறன் சொன்னதும் மாயாவின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி மலர்ந்தது.

Advertisement

“ஆமா மாமா…இப்போ அந்த ரங்காராவ் நம்ம வைதேகியை அவன் கூடக் கூப்பிட்டதுக்கு கூட ராணா எப்படி பேசுனான்னு பார்த்திங்களா” என்று மாயா கேட்டதும், “உன் தம்பி பேசுனதை மட்டும் தான் நீ பார்த்தியா! ஏன் அவன் வைதேகியை தூக்கிட்டு போனதை பார்க்கலையா?” என்ற மாறனின் கன்னத்தைக் காதலோடு கிள்ளினாள் மாயா.

“இதெல்லாம் உங்கனால தான் மாமா… ராணாவுக்கும் வைதேகிக்கும் கல்யாணம் ஆகும்னு நீங்க அப்போ சொன்னதை நான் நம்பவே இல்லை. ஆனா இப்போ எனக்கும் கூட அந்த நம்பிக்கை இருக்கு” என்ற மாயாவின் எண்ணம் நிறைவேற வேற வேண்டும் என்று மாறனும் ஆசைப்பட்டான்.

இதே தருணம் வேதநாயகியின் அறையில் வைதேகி ஓய்வெடுத்துக் கொண்டு இருக்க, சிறுமி மயிழினி சத்தம் இல்லாமல் எழுந்தவள் தன் அம்மாவைத் தேடி மாயாவின் அறைக்குச் சென்றாள்.

சிறுமி எழுந்து சென்றதுக்கூட தெரியாமல் மருந்தின் வீரியத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் வைதேகி.

சில நிமிடங்கள் கடந்து கோவிலுக்குச் சென்ற வேதநாயகியும் கீதாவும் வீடு திரும்பியவர்கள் வைதேகியை பார்ப்பதற்காக அவள் இருக்கும் அறைக்குள் வந்தவர்கள், “என்ன சம்மந்தி… வைதேகி நல்லா தூங்கிகிட்டு இருக்காளே! நான் அப்புறமா வந்து பாக்குறேன்” என்ற கீதா அந்த அறையிலிருந்து வெளியேறி இருந்தார்.

கீதா சென்றதும் வேதநாயகி தன் கையில் இருந்த கோவில் பிரசாதத்தை மேசைமேல் வைத்தவர் உறங்கிக்கொண்டு இருந்த வைதேகியின் அருகே வந்து அன்பாக அவள் தலையை வருடிக்கொடுத்ததும் அலறி அடித்து எழுந்த வைதேகியை பார்த்து, “நான் தான் பயப்புடாத”என்ற வேதநாயகி மேசைமேல் இருந்த விபூதியை எடுத்து வைதேகியின் நெற்றியில் பூசினார்.

தன்னை பற்றிய உண்மை தெரிந்தும் வைதேகி மீது பாசமாக இருக்கும் வேதநாயகியின் அன்பை கண்டு வைதேகி உள்ளம் நெகிழ்ந்தவள்,”அத்த… என்னை மன்னிச்சிட்டீங்களா?” என்று கேட்டாள்.

“மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தை வைதேகி, என் உயிரைக் காப்பாற்ற தானே மாறன் மாப்பிளைக்கூட சேர்ந்து எல்லோரும் பொய் சொல்லிருக்கீங்க, பரவாயில்ல விடுங்க. ஆனா என்ன ஒன்னு உன்னை இந்த வீட்டு மருமகளா நினைத்து என் மனசுக்குள்ள நிறைய ஆசையை வளர்த்துகிட்டேன்” என்ற வேதநாயகியின் கண்கள் அவரை மீறிக் கலங்கி இருந்தது.

வேதநாயகியின் வேதனைக்கு நான் தான் காரணம் என்று எண்ணிய வைதேகிக்கு அவரிடம் மன்னிப்பு கேட்பதை தவிர வேறொரு வழியும் இல்லாமல் போனது.

அந்த அறையைச் சில நொடிகள் அமைதி சூழ்நது இருக்க, “உள்ளே வரலாமா?”என்று கேட்டுக்கொண்டே ரணதீரன் தன் அன்னையின் அறைக்குள் நுழைந்தவனை தொடர்ந்து மாறனும் உள்ளே நுழைந்தான்.

“என்ன வைதேகி… ஏதோ சொத்து விஷயமா பேசணும்னு சொன்னியாமே என்னமா?”
என்று மாறன் கேட்டதும், “அண்ணா… நான் என் பேருல இருக்குற சொத்தையெல்லாம் விற்று மனநலம் சரியில்லாத பிள்ளைங்களுக்கு மறுவாழ்வு தர ஒரு பெரிய மருத்துவமனை கட்டணும்னு ஆசைப்படுறேன்” என்ற வைதேகியின் எண்ணத்தைப் பார்த்து ரணதீரனும் வேதநாயகியும் வியந்து தான் போனார்கள்.

“ரொம்ப நல்ல விஷயம் வைதேகி… கண்டிப்பா பண்ணிடலாம். ஆனா உன் மாமன் உன்கிட்ட பேசுனதா நீ என்கிட்ட சொன்னதை வைத்துப் பார்த்தால் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளையும் கையெழுத்து போட்டால் தான் உன் பேர்ல இருக்குற சொத்தையெல்லாம் விற்க முடியும்” என்று மாறன் சொன்னதும் வைதேகியின் விழிகள் அவளின் சம்மதம் இல்லாமல் ரணதீரனை உள்வாங்கி இருந்தது.

“மாமா… முதல்ல வைதேகி கனடா போகட்டும், அப்புறம் அங்க போய் அவ படிப்புக்கும் அழகுக்கும் ஏற்ற மாதிரி அவளோட மனசுக்கு பிடித்த பையனைப் பார்த்துக் கல்யாணம் பண்ண பிறகு அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து கையெழுத்து போட்டு இந்தியால இருக்குற சொத்தையெல்லாம் வித்து வைதேகி ஆசைப்பட்டது போலவே ஹாஸ்பிடல் கட்டட்டும்” என்று ரணதீரன் சொன்னதும் யாருக்கு வருத்தமாக இருந்ததோ என்னவோ ரணதீரனின் பேச்சைக் கேட்டு வைதேகியின் முகம் மட்டும் வாடிப் போனது.

“மச்சான்… முதல்ல வைதேகிக்கு கால் சரியாகட்டும் அப்புறம் கனடாவைப் பற்றிப் பேசிக்கலாம்” என்று மாறன் சொல்ல,
“சரி சரி நீங்கச் சீக்கிரமா வைதேகி பாஸ்போர்ட் விஷயம் என்னாச்சுன்னு விசாரிங்க. எதுக்கும் நம்ம வக்கீல்க்கிட்ட வைதேகியைப் பற்றிய விவரத்தைச் சொல்லி அந்த ரங்காராவால பின்னாடி எதாவது பிரச்சனை வருமான்னு பார்க்கச் சொல்லுங்க” என்ற ரணதீரனின் வார்த்தைக்குச் சரி என்ற ரீதியில் தலையாசைத்தான் மாறன்.

“அம்மா… வைதேகிக்கு கால் சரியாகுற வரைக்கும் இவங்க உங்க ரூம்லயே தங்கட்டும். மாமா…யார்கிட்டயாவது சொல்லி வைதேகி திங்ஸ் எல்லாம் இந்த ரூமுக்கு எடுத்துட்டு வந்து வைக்கச் சொல்லுங்க. சரி… எனக்குக் கம்பெனில நிறைய வேலை இருக்கு நான் கிளம்புறேன். மாமா நீங்க இன்னைக்கு வீட்டுலயே இருங்க. வேலு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான் அவனையும் இங்கேயே இருக்க சொல்லிடுங்க. நான் போய்ட்டு சீக்கிரமா வந்துடுறேன்” என்ற ரணதீரன் வைதேகியை ஒரு கணம் பார்த்து
“ரெஸ்ட் எடு” என்றவன் வேகமாகத் தன் வீட்டிலிருந்து அவன் கம்பெனிக்குச் சென்றான்.

“பாப்பா நீ ரெஸ்ட் எடு” என்ற மாறனும் அறையிலிருந்து வெளியே சென்றதும்,
“நீ படுத்துக்கோ வைதேகி” என்ற வேதநாயகியும் மாறனை தொடர்ந்து வெளியேறினார்.

இவர்கள் இருவரும் வெளியே சென்றதும் வைதேகியின் கண்கள் சுவற்றில் மாட்டி இருக்கும் புகைப்படத்தில் உள்ள ரணதீரனின் கோவமான முகத்தின் மீது படிந்தது, “சரியான ஆங்கிரி பேர்ட்” என்று அவனை செல்லமாகத் திட்டியப்படி மீண்டும் கண்களை மூடி உறங்கினாள்.

நீண்ட நேரம் தன்னை மறந்து உறங்கிய வைதேகியின் அறைக்குள் அவளின் பொருட்களை எல்லாம் மாயா எடுத்து வந்து வைக்கும் சத்தம் கேட்ட வைதேகி கண்கள் விழித்தவளை பார்த்து, “இப்போ வலி குறைஞ்சு இருக்கா?” என்று கேட்டாள் மாயா.

“வலி ரொம்ப தெரியல அண்ணி…” என்ற வைதேகியின் கையில் அவளின் செல் போனை மாயா கொடுத்து, “உன் ரூம்ல இருந்த பொருளை எடுக்கும்போது உனக்கு  ஒரு போன் வந்துச்சு வைதேகி, நான் தான் எடுத்து யார் பேசுறிங்கனு கேட்டேன், சட்டுன்னு போனை கட் பண்ணிட்டாங்க” என்று மாயா சொன்னதும், “எனக்கு யாரு போன் பண்ண போறாங்க?” என்ற வைதேகி கைபேசி திரையைப் பார்க்க அதில் வீ.கே. என்று எழுதி இருந்தது.

வீ.கே என்ற பெயரைப் பார்த்ததும் வைதேகியின் முகம் மாறிப் போக, “என்ன எதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள் மாயா.

“அண்ணி… உங்க சித்தி பையன் விக்ரம் தான் எனக்குக் கால் பண்ணி இருந்துருக்காரு” என்று வைதேகி சொல்ல, “அவன் ஏன் உனக்குப் போன் பண்ணுறான். அவன் தான் பைத்தியம் மாதிரி உன்னை ரங்காராவ் கூட அனுப்பி வைக்கச் சொன்னானே! இப்போ என்னவாம் அவனுக்கு?” என்று மாயா கோவமாக
கேட்க, வைதேகி மனதிலும் அதே கேள்வி தான் எழுந்தது.

“சரி… அடுத்த முறை அவன் போன் பண்ணால் என்னனு பேசு. இப்போ வா நான் உன்னைக் குளிக்க வச்சி நைட்டி மாத்தி விடுறேன்” என்று மாயா சொல்ல, “என்கிட்ட நைட்டி இல்லையே” என்றாள் வைதேகி.

“இங்க பாரு…உனக்குத் தேவையான எல்லாப் பொருளும் இந்த பெட்டியில இருக்கு” என்ற மாயா, கிட்டத்தட்ட இருபதுக்கும் மேலான நைட்டி,சுடிதார், புடவை என்று அனைத்தையும் வைதேகிக்கு எடுத்துக் காட்டியதும், “ஐயோ என்ன அண்ணி இது! என் ஒருத்திக்கு ஏன் இத்தனை டிரஸ் வாங்குனீங்க?” என்று கேட்டவளுக்கு  தர்மசங்கடமாக இருந்தது.

“இதெல்லாம் நான் வாங்கல வைதேகி… இதெல்லாம் உனக்காக என் தம்பியே வாங்கி நம்ம கம்பெனில வேலை பாக்குற ஆளுங்கக்கிட்ட கொடுத்து அனுப்பி இருக்கான்” என்று மாயா சொன்னதும் வைதேகியின் கண்கள் ஆச்சரியத்தில் அழகாய் மிளிர்ந்தது.

“என்ன அண்ணி சொல்றிங்க!? தீரா எனக்காக இதெல்லாம் வாங்கி அனுப்பினாரா?” என்ற வைதேகி ஆர்வமாகத் தன் கட்டிலிலிருந்து எழ முயன்றவள் சட்டென்று முடியாமல் தள்ளாடி விழப் போனவளை கைத்தாங்களாகத் தாங்கிப் பிடித்தாள் மாயா.

“என்ன வைதேகி நீ ஏன் இப்படி உணர்ச்சி வசப்படுற?” என்ற மாயா வைதேகியை கட்டிலில் அமர வைத்து அவளை கேள்வியாகப் பார்த்தாள்.

“என்ன அண்ணி ரொம்ப அல்ப்பமா நடந்துக்குறேனா?” என்று வைதேகி கேட்டதும், “இல்ல… ஆனாலும்! ஆமா கொஞ்சம் அப்படி தான் தோணுது” என்ற மாயாவை பார்த்து அழகாகச் சிரித்தாள் வைதேகி.

“அண்ணி… உண்மையைச் சொல்லனும்னா நான் என் அம்மா அப்பாவுக்குப் பிறகு இந்தக் குடும்பத்தோடு இருக்கும்போது ரொம்ப சந்தோசமாவும் பாதுக்காப்பாவும் இருக்கேன். எனக்கு நீங்களெல்லாம் பார்த்துப் பார்த்து அக்கறையா இதெல்லாம் பண்ணும்போது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு” என்ற வைதேகியின் கண்களில் இந்த முறை ஆனந்த கண்ணீர் பெருகியது.

“ஏய் என்ன நீ சின்னக் குழந்தை மாதிரி இதுக்கெல்லாம் கண்கள் கலங்குற. இங்க பார் வைதேகி! இது உன்னோட வீடு. உனக்கு எவ்வளவு நாள் பிடிக்குதோ அவ்வளவு நாள் நீ இங்கே இருக்கலாம். இன்னும் கேட்டா நீ நிரந்தரமா நம்ம வீட்டிலேயே இருக்கணும்னு தான் எனக்கும் ஆசை. ஏன் அம்மாவோட ஆசையும் அதுதான்” என்று மாயா இலை மறை காயாக ரணதீரனை வைதேகி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வைதேகியிடம் தன் ஆசையைத் தெரியப்படுத்தினாள்.

“ஆமா ஆமா… நீங்கெல்லாம் ஆசைப்பட்டால் போதுமா?வார்த்தைக்கு வார்த்தை உங்க தம்பி தான் என்னைக் கனடாவுக்கு அனுப்பி வைத்தே தீருவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு பேசுறாரே ” என்ற வைதேகியின் வார்த்தையில் உள்ள உண்மையான வலியை உணராத மாயா அவள் விளையாட்டாகப் பேசுகிறாள் என்றுதான் நினைத்தாள்.

“ஏன் வைதேகி! என் தம்பி உன்னைக் கனடாவுக்கு போக வேணாம்னு சொன்னா அப்போ நீ நம்ம வீட்டிலேயே இருந்துடுவியா?” என்று மாயா கேட்க,
“உங்க தம்பி மட்டும் ஒரு வார்த்தை சொல்லட்டும்! அப்புறம் நான் நம்ம வீட்டிலேயே இருந்து விடுவேன்” என்று சிரித்துக் கொண்டே தன் ஆசையைச் சொன்னாள் வைதேகி.

“அப்போ கூடிய விரைவில் என் தம்பியே உன்கிட்ட வந்து நீ கனடா போகாதன்னு சொல்லத் தான் போறான் பாரு. சரி வா நான் உன்னைக் குளிப்பாட்டி விடுறேன். உன் காலுல தண்ணி படக்கூடாதுன்னு டாக்டர் சொன்னதா தம்பி போன்ல சொன்னான்” என்ற மாயா வைதேகிக்கு காலில் கவரை கட்டி அவள் குளிக்க உதவி செய்தவள் வைதேகிக்கு தேவையான விஷயங்களை அன்புடனும் நட்புடனும் செய்து கொடுத்தாள்.

வைதேகி குளித்து முடித்தபின் ரணதீரன் அவளுக்காக வாங்கி கொடுத்த ஒரு நைட்டியை அணிந்து கொண்டவளுக்கு இதுவரை அவள் அணிந்து இருந்த ரணதீரனின் கருப்பு நிற சட்டையை மாயாவிற்கே தெரியாமல் தனக்கான பையில் மறைத்து வைத்துக்
கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!