புது மஞ்சள் புது தாலி
அத்தியாயம் 3.2
இராத்திரி துங்காமல் இருந்ததன் விளைவாக கண்களில் எரிச்சலோடு தன் தெக்கு தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டே பார்வையை கண்மாய் கரையில் வைத்தான் வேலு. நேத்து அவள் போட்ட போடில் பார்வை கூட அவள் பக்கம் திருப்ப கூடாது தான் , ஆனால் தன் பிழை அவளை நோக்கி திசை திருப்பியது இல்லாவிட்டால் தென்னந்தோப்பில் இருக்க வேண்டியவன் லோடு ஏற்றிய பின்னும் ஏன் தெக்கு தோட்டத்தில் மண்ணை கொத்த போறான். மணி பார்க்க ஒன்பதை தாண்டியது
இப்போது தான் ஒருவர் ஒருவராக வருகின்றனர் , கூலி வேலைக்கு என்றால் சரியான நேரத்திற்கு போயிருவாங்க , பெரியத்தா சொன்ன அரசாங்க வேலை இதுதான் போலும்.
வேலு , வயலுக்கு பாத்தி கட்ட அவனருகே ஒரு சத்தம் இல்லை இது ஒரு பாட்டு, அவள் தான் சண்டி ராணி அவனை பார்த்துக் கொண்டே கரையில் நின்று பாடினாள் “ போட போட புண்ணாக்கு போடத தப்பு கணக்கு, கிறுக்கு உனக்கு இருக்கு , இப்ப எண்ணாத மனக்கணக்கு” என்று பாடல் மூலம் அவனை வெறுப்பு ஏத்த அவன் முறைத்த முறைப்பில் கொஞ்சம் அடங்கினாலும் அசரவில்லை , கரை தாண்டி அவனருகே வந்தவள் அவன் சட்டை வைத்த இடத்தில் ஒரு தூக்கு சட்டியை வைத்தவள் வேறேதும் பேசாமல் கன்மாய் உள்ளே சென்று விட்டாள்.
நேத்து அவள் பேசிய பேச்சில் அவன் மனம் புண்படும் என்று தெரியும் , எவ்வளவு சொன்னாலும் அவன் கேட்பதாய் இல்லை வேறென்ன செய்வது ஒதிக்கி வைத்து பேசினாலும் இந்த பாழா போன மனசு தாங்காது, அதான் சமாதான படுத்தவே இந்த தூக்கு , சம்மு எப்போதும் முட்டி நிற்கும் குணம் தான் , சிறு வயதிலேயே வேலுக்கும் அவளுக்கும் அடிக்கடி முட்டி கொள்ளும் , பின் ஏதேனும் உணவு பண்டம் செய்து அவனை சரிக்கட்டி சமாதானம் செய்து விடுவாள், ஆனால் முட்டி நிற்கும் குணத்தை மட்டும் மாற்றவே மாட்டாள்.
செல்லும் அவளை திரும்பி பார்த்தவன் , சிறு புன்னகையோடு தூக்கு சட்டி நோக்கி நடந்தான் .ஒரு வேப்ப மர நிழலில் அமர்ந்தவன், தூக்கை திறக்க நெல் குத்தல் சோறும் ( அரிசி அவித்து அறைக்காமல் , பச்சையாக உரலில் இடித்து சமைப்பது), நாட்டு கோழி குழம்பும் , ரசமும் இருக்க மனம் நிறைய ஒரு பிடி பிடித்தான் , கத்தரி மூட்டை துக்கிய பசி . வேலு எப்பவுமே வயிறு புடைக்க உண்பவன் அதை அறிந்தே கொடியரசி மகன் மறுசோறு கேட்கதவாரு வட்டி நிறைய பரிமாறுவார் , அவருக்கு பின் அவ்வாறு செய்வது சம்மு மட்டுமே , அவன் மனைவி தாமரைக்கு இதெல்லாம் பிடிக்காது , அளவு சாப்பாடு தான் ஆரோக்கியம் என்று பேசுவாள். தோட்ட வேலை செய்பவனின் பசி உணராமல் போனில் பார்க்கும் அட்டவணை சாப்பாடு தான் அவன் வீட்டில் , தென்னை தோப்புக்கு அறுபது உர மூட்டை துக்குபவனுக்கு நாலு சப்பாத்தி எந்த மூலைக்கு காணும் , ஆனாலும் ஒரு குறை சொல்ல மாட்டான் மனைவி என்றால் அவ்வளவு பிரியம் .
மரநிழலில் சாய்ந்து கொஞ்சம் இளைப்பாற , வேகாத வெயிலில் தலையில் மண் சுமந்து மறுகரை செல்லும் சம்முவை பார்த்தான் , பதினாலு வயதில் வறுமைக்கு கூலி வேலைக்கு போனாள் , இன்றும் அவள் பாடு தீர வில்லை. தன் வாழ்வின் இன்றியமையாத பெண்களில் சம்முவும் ஒருவள் , அவளை வேறாக ஒரு நாளும் பார்த்ததில்லை , தன் குடும்ப பெண்களில் ஒருவர் இப்படி வெயிலில் வெந்து சாக விடுவோமா, தாமரை கர்ப்பமாக இருக்கும் போது ஏ.சி மாட்டுனதும் , பவி பிறந்த பின் அடிக்கடி கரண்ட் போவதால் ஜெனரேட்டர் வசதி செய்ததும் நினைவில் வந்தது, மெதுவா எழுந்து காட்டை சுற்றி நடப்பது போல் அவர்கள் வேலை செய்யும் மரத்தடி வர , அங்கு தன் நண்பன் மணியுடன் பேசுவதற்கு அமர்ந்தான் , இல்லை அவளை நோட்டம் இட்டான்.
சம்மு அவனை கண்டு கொள்ள வில்லை , தன்னை நோக்கி வரும் சமாதான பேச்சை கேட்பதாயிம் இல்லை, தன் போக்கில் வேலை முடித்து உண்ண மரநிழலில் அமர்ந்தாள். அவள் பார்வை திரும்பாது கண்டு பெருமூச்சுடன் எழுந்து அவளை தாண்டி செல்லும் போது கவனித்தான் தூக்கு சட்டியில் வெறும் ரசமும் தொகையில் வைத்து சாப்பிடுவதை , அவனுக்கு புரிந்தது ஒரு பங்கு தன் வீட்டிற்கும் சென்று உள்ளது என்று பின்ன அவள் தாய்க்கு மூன்று வேளைக்கும் வேண்டும். சம்மு எப்போதும் செய்வதுதான் அன்னமிடும் போது ஒருவருக்கு நிறைவாக கொடுக்க வேண்டும் என்று,
தொண்டை அடைக்க நடந்தான் வேலு! என் மேல் ஏன் இவ்வளவு அன்பு பெண்ணே! தான் ஒரு சுயநலவாதி என்று எண்ணியவன் மகளை விட்டு தான் மட்டும் விசேசமாக உண்ண மாட்டேன் என்று அறிந்து தன் வீட்டிற்கும் கோழி குழம்பு போய்ருக்கும் இது எப்போதும் நடப்பது தான். அப்படி பட்ட அவளுக்கு அவன் தாய் செய்தவை நினைவு வந்து துடிக்க செய்தது .
பதினாலு வயது தொடக்கத்தில் இருந்த இருவரும் தொட்டு விளையாடும் போது அவள் சோர்வு கண்டு என்னவென வினவிய வேலுவிடம் ,
அம்மாக்கு காச்சல்லே வேலு, நேத்து இருந்து கஞ்சி குடிக்கல வீட்டுல ஒண்ணுமே இல்லவே , அம்மாவும் எதுவும் குடிக்கல ,காசும் இல்ல முக்கு கடைல கடனா ரெண்டு இட்லி கேட்டேன் தரமாட்டேன் சொல்லிடகலே , வவுறு பசிக்கி பசிமறக்க தான் உன்கூட விளையாட வந்தேன்.
வேலு அவளிடம், எங்க வீட்டுக்கு வாலே அம்மா இன்னிக்கு விசேசமாக செஞ்சாங்க கோழி குழம்பு , மீன் வறுவல் நான் பார்த்து தான் வந்தேன் , ஆனால் சம்முக்கு தயக்கம் கொடியரசிக்கு தான் தன்னை பிடிக்காதே டி.வி பார்க்க போனாலும் உட்கார சொல்லாமல் நிக்க வைத்தே பத்து நிமிடத்தில் டி. விய அனைத்து வெளி அனுப்பி விடுவார், அப்படி இருக்க அவரிடம் போய் சோறு இல்லை என்று நிற்பதா அவள் மறுத்தாள் , ஆனால் வேலு விடவில்லை அவள் பசியும் விடவில்லை , அவன் தந்தையிடம் சொல்லி அழைத்து கொண்டு வந்துவிட்டான்.
நெல்லையப்பர் ரொம்ப நல்ல மனிதர் , சம்மு தந்தையோடு நல்ல பழக்கம் அதனால் அன்பகாவே வரவேற்றார். வீட்டின் முன் வந்து நின்று விட்டாலும் உள்ளே செல்லவே கால் கூசியது வேலு கை பிடித்து அழைத்து செல்ல ,கொடியாரசிக்கு வெறுப்பு தான் , பணம் ,பகட்டில் வாழ்பவர்க்கு அந்தஸ்து பேதம் அதிகம், கணவரும் சொல்லி செல்ல மகனிடம் ,
“அப்பு போய் குளின்க உடம்பு முழுக்க மண்ணு இவள நான் பார்த்துகிடுதேன்” என்று சொல்லி அவனை அனுப்பினார்.
ஒரு புன்னகையோடு உள்ளே சென்ற வேலுவை பார்த்தவர், திரும்பி வீட்டையே பிரமிப்பு போகாமல் பார்த்தவளிடம் , ஏண்டி என்ன வேணும் உனக்கு ?
திகைப்பாக பார்த்தாள் சம்மு வேலு தந்தை உணவு தர சொல்லியும் இப்படி கேட்பவரிடம் எப்படி சொல்ல சோறு வேண்டும் என்று தயக்கமாக பார்க்க
கொடி , போட்டார் ஒரு அரட்டல் , கண்ணில் நீர் பெறுக “ சோறு வாங்க வந்தேன் அத்த” கண்ணீரோடு உரைக்க
அவள் கண்ணிரில் திருப்தி பெற்றவராக “ வெறும் கைய வீசி வந்த உன் பாவடையில சோற புடிச்சு போவ போ போயி பத்திரம் எதுன எடுத்து வா போ போ .., என்று விரட்ட ,
அழுது கொண்டே வீடு வந்தவள் சாப்பாடு இல்லாமல் காய்ச்சலில் சுருண்டு படுத்திருக்கும் தாயை பார்த்து மனம் பொறுக்காமல் பத்திரம் எடுத்து வேலு வீடு வந்தாள்,கையில் சட்டியோடு வேலு வீட்டின் முன் நிற்க அவமானமாக இருந்தது.
அவளை பார்த்து உள்ளே அழைத்த கொடி அடுப்படி செல்ல பின்னாடியே சென்ற சம்முவை முறைத்தவர் , ஏண்டி! உன் பவுசுக்கு என் வீட்டு அடுப்படி வர வருவியோ போடி வெளிய அங்கேயே நில் நான் எடுத்தாரென் என்று உள்ளே செல்ல, அசிங்கமாக இருந்த போதும் பசி மறக்கச் செய்தது தன்மானத்தை.
வெளியே வந்த கொடி , அவள் பாத்திரத்தை உயர்த்தி பிடிக்கவும் நிச்சயமாக பிச்சை எடுக்கும் உணர்வு தான் தோன்றியது சம்முக்கு, கலையில் வடித்த சோறும் , ரசமும் ஊற்றி போ என்று கை காண்பிக்க , பெருத்த ஏமாற்றமாக உணர்ந்தாள் , உள்ளே மேசையில் கறியும், மீனும் இருக்க வெறும் ரசம் சாதத்தொடு வெளியே அனுப்பும் கொடியை ஏக்கமாக பார்க்க,
கொடியோ அவளிடம் , வாங்குவது ஓசி சோறு இதுல ஒன்பது வகை கேட்குதோ! என கிண்டலாக சொல்ல உக்கிபோனாள் சம்மு , சிறு பெண் அல்லவா உணவு வகை பார்த்து ஆசை வந்தது. கொடி எப்போதும் அப்படித்தான் சம அந்தஸ்து உள்ளவர்களிடம் மட்டுமே கலப்பார்.
தன் தாயிடம் வந்து சாப்பாட்டை கொடுக்க , வள்ளிக்கு உணவு தானம் பெற்று வந்த தம் செல்ல மகளை கண்டு நெஞ்சம் தீ பிடித்தது , சோறும் பழையது , அடி ரசம் போல மீந்த சக்கையோடு புளிச்ச வாசனை அடித்தது. மகளை அனைத்து வள்ளி ஒரு பாடு ஒப்பாரி வைக்க ,
மறுநாள் தன் பள்ளி படிப்புக்கு முழுக்கு போட்டு கூலி வேலைக்கு சென்று விட்டாள் , உணவுக்காக இனி யாரிடமும் கையேந்த கூடாது என்று, ஒரு ஆள் சம்பளம் இல்லாமல் பதி கூலியாவது கிடைக்குமே , அது போதும் இருவர் வயிற்று பாட்டிற்கு , இனி யாரிடமும் போய் நிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏழை என்றாலும் வகை வகையாக இல்லாமல் வயிறார உண்டவள் தான் நண்பனாக இருந்தாலும் அத்த, மாமா என்றே அழைத்தாலும் அவர்கள் வீட்டு அடுப்படி வரை விடாததும் , பத்திரம் கொடுக்க தயங்குவதும் தன் நிலை சொல்ல போதும் படிப்பு என்ற முடிவோடு கூலி வேலைக்கு சென்றவள் தான் இன்னும் ஓயவில்லை அவள் பாடு.