பவி குட்டி நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, வேலு அவளின் சிறு வயது படங்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான் .ஏதோ இப்போதுதான் கையில் ஏந்தியதை போலிருக்க, பவி பெண்மையின் அடுத்த பரிமாணத்தில். ஒரு ஆண் இருபத்தி ஒரு வயதில் தன்னை உணர, பெண் பதிமூன்று வயதிலேயே தன்னை உணர்ந்து , குடும்ப பொறுப்பு என்ற அமைப்பில் நுழைந்து விடுகிறாள். அதனால் தான், அந்த காலத்தில் வயதுக்கு வந்த ஒன்றிரண்டு வருடத்தில் திருமண பந்தத்தில் நுழைத்து விடுவார்கள் போல.
ஏதேதோ யோசனையில் வேலு அமர்ந்திருக்க , முகுகில் சுள்ளென்று விழுந்தது அடி , திரும்பி பார்க்க பூர்ணா.
“ஏட்டி! என்னா அடி, கோட்டி கழுதை ! ஏலே அடிச்ச” என்றான் வேலு அடி வாங்கிய எரிச்சலில்.
“பின்ன என்னாவே! உம்ம மவளுக்கு கல்யாணமா பண்ணற, என்னமோ சுணங்கி திரியரவன் , கடைல கண்டதையும் வாங்கி குடுத்து பதினொரு வயசிலேயே உட்கார வச்சாசு, இதுல சோக ராகம் பாடுறையோ , வேற சோழி கலுத இல்ல, போம் போய் நல்ல கோழி பார்த்து அடிச்சு பறி , நான் மசால் அரைக்கிறேன், இனிமே தான் எல்லா பாடும் , புள்ளைக்கு நல்ல தா ஆக்கி போட வேண்டாம்”..….. என்று பூர்ணா ஒரு அதட்டல் போட்ட பின்ன இடத்தை விட்டு நகர்ந்தான் வேலு.
பெரியாத்தவிர்கும் சேதி சொல்ல பட்டு விட்டது. இப்போது வந்து கொண்டிருப்பார்.
நேரம் சென்றும் வராத மகளை காண வள்ளியே வந்து விட்டார். என்னவோ விவகாரம் என்று வந்தவர் , உள்ளே எல்லாம் வர வில்லை. இந்த பத்து வருடத்தில் வீடு மாறிய போதும் மனம் மாறவில்லை , தயக்கமாக வெளி வாசலில் நின்றே மகளை அழைத்தார் வள்ளி.
எட்டி பார்த்த பூர்ணா தாயை கண்டு அருகில் வார,
அடுப்படியில் இருந்து வரும் மகளை அதிர்ந்து பார்த்தார் வள்ளி. இந்த பத்து வருடத்தில் வாசல் படி கூட மிதிக்காதவள் , உள்ளிருந்து வரும் காரணமென்ன ?….
காரணம் சொன்ன பின் நெகிழ்ந்து போன்னார் வள்ளி , விசயம் கேட்ட பின் வாசல் படியோடு செல்ல முடியாது . இளங்குறுத்து , இனி என்ன வைராக்கியம் . மன நிறைவுடன் படி தாண்டி உள்ளே வந்தவர், தூங்கும் பவியை நெட்டி முறித்தார் . பிரிந்த சொந்தங்கள் சேர்வதற்கு தான் விசேஷம் வருதோ!…..
தாயையே பார்த்து கொண்டிருந்த பூர்ணாக்கு சிறு மன சுணக்கம். தாய் தனக்கு இந்த மாதிரி எல்லாம் மகிழ வில்லை. தாயின் கவனிப்பு எதிர்பார்த்து ஏமாந்து தான் போனாள், வள்ளி ஒரு பாடு அழுதார் என்றால் , சொந்தங்களும் “ ஐயோ! தகப்பன் இல்ல பெண் யாரு செய்வா; பாவம் உன் அம்மாவே கஷ்டபடுறா , இதுல நீவேற குத்த வச்சுட இங்க ஆள இருக்கு எடுத்து செய்ய ; கொஞ்சம் பொருத்து வந்த தான் என்ன? வருசம் செண்டா உனக்கு கல்யணத்துக்கு பாக்க யாரு இருக்க?”… என்று
பரிதாபம் , கேலி , நக்கல் பேச்சுக்கள் தான் அவளை சுற்றி வந்தது. தாய் , தந்தை , நிறைவான வாழ்க்கை தான் ஆசை படுவதற்கு தகுதி போல என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை பூர்ணாக்கு.
வேலு, கோழியை வாட்டி உரித்து எடுத்து வர , அங்கு இருந்த, வள்ளிய பார்த்து அதிர்ந்தாலும் புன்னகையோடு “வாங்க அத்த” என்க.
அவரும் சிரிப்போடு தலையாட்டி பவி அருகில் துணைக்கு அமர்ந்து கொண்டார்.
மகளை ஒரு பார்வை பார்த்து அடுப்படி வந்த வேலு கோழிய பூர்ணா கிட்ட கொடுக்க , அடுத்து வேலை மளமளவென்று நடந்தது. மிளகு , சீரகம் அரைத்து , நல்லெண்ணை மணக்க மணக்க கோழி குழம்பு வைத்து , கொத்து கறியோடு பரிமாறினாள் பூர்ணா.
வேலு ஒரு பிடி பிடித்தான். பூர்ணா கை மனம் அம்புட்டு ருசி. பவி குட்டிய எழுப்பி நல்லெண்ணை மிதக்க குழம்பில் சுடு சோறு போட்டு ஊட்டி விட்டாள் பூர்ணா.
இன்னும் வள்ளி அத்தையும் , பூர்ணாவும் சாப்பிடாமல் இருப்பது பார்த்த வேலு “ இருங்க அத்த நான் உங்களுக்கும் , சம்முக்கும் வெளி சாப்பாடு வாங்கி வாரேன்” என்று வேலு கிளம்ப ,
“ அய்யா! எஞ்சாமி , நாங்க என்ன வேத்தாளா? பவி என் பேத்தி , நான் தீட்டு நினைப்பேனா? “… என்று பதறிய வள்ளியிடம்,
அவனும் என்ன செய்வான் அவன் பார்த்த வரை, எவ்வளவு நெருங்கிய சொந்தமானலும் இந்த மாதிரி சடங்கு வீட்டில் கை நனைக்க மாட்டார்கள். வேலும் அப்படித்தான்.
வேலுவை அழுத்தமாக பார்த்த பூர்ணா , வாலை இழை கொண்டு வந்து தாயிக்கும், தனக்கும் பரிமாறி உண்ண ஆரம்பித்தாள். கிட்ட தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின் தன் வீட்டில் உண்கிறாள். மனம் நிறைவாக உணர்ந்தான் வேலு.
பவி மீண்டும் உறங்க , தானும் கொஞ்சம் கட்டைய சாய்த்தார் வள்ளி. இனி இங்கு தான் என தெரிந்தது. தாயில்லா பெண், பூர்ணா விட்டுவிட மாட்டாள். அது அவள் நடத்தையில் தெரிந்தது. கூடத்தில் மாலையுடன் கொடியின் படம் இருக்க பெருமூச்சுடன் கண்ணயந்தார் வள்ளி.
உறங்கும் மகளை பார்த்த வேலு “ ஏட்டி சொம்பு! ஆயி , திரும்ப தூங்குறாங்க , எழுப்பி விடத்தான காத்தாட வெளிய கொஞ்சம் இருக்கட்டும்”… என்று பூர்ணாவிடம் கேட்டான்.
“ விடு வேலு தூங்கி சுகமா எந்திரிக்கட்டும், இந்த கவனிப்பு எல்லாம் மாசம் மாசமா இருக்கும் , பொண்ணுங்களுக்கு வயசுக்கு வந்தா ஒரு மாசம், கல்யாணத்துக்கு முன்ன ஒரு மாசம் பின்ன ஒரு மாசம் , மாசமான கொஞ்ச நாள் , பிள்ள பெத்தா கொஞ்ச நாள் இப்படி ஒரு பொண்ணுகான கவனிப்பு கொஞ்சம் தான் , அதுவும் கல்யாணம் ஆகிட்ட அவளோட பெரிய பொறுப்பு மத்தவங்களை கவனிக்கிறது தான்” என்று பெருமூச்சு விட்டவளை பார்த்தவன்.
அவள் சொன்ன மற்றவையை கிடப்பில் போட்டு , “ ஏட்டி! கல்யாண முந்தி ஒரு மாசம் உனக்கு சந்தோசம் குடுத்ததாவே?”… என்றான் . அவள் கணவனின் வயதை மனதில் கொண்டு விருப்பமில்லா கட்டாய கல்யாணமா? அதனால் ஏற்பட்ட கசப்பும் தொடர்ந்த பிரிவுமா?… என்று மனம் கணக்கிட கேள்வியை முன் வைத்தான்.
வேலு யோசனை பூர்ணாக்கு இல்லை, அவனை நிமிர்ந்து பார்த்தவள் தன் மனதினை கொட்டினாள் , “ ரொம்ப சந்தோசம் தான் வேலு , எனக்கும் கல்யாணம், எல்லரா போல ஒரு வாழ்க்கை, என் சோட்டு பொண்ணுகளோட பேச சிரிக்க பாருங்க நானும் உங்களோட ஒருத்தி ஆகிட்டேன் அப்படினு காட்ட, மத்தவங்க பாக்குற பரிதாப பார்வை போய் சொந்தகராங்க எல்லாம் “ பத்திரிக்கை அடிச்சாச ? தாலிக்கொடி எத்தன பவுன் போடுறாங்க? கல்யாண சீலை எங்க எடுக்க மதுரை போங்க நல்ல இருக்கும், உன் புருசன் வீட்டு ஆளுக பார்க்க வந்தாங்கல, எலுமிச்ச இல்லாம தனியா போவாத, வள்ளி மருமவன் நல்ல குணம்” …இப்படி விசாரிப்பு,
என் சோடி பிள்ளைக “ உன் ஆளு பேசினாரா? இராத்திரி எல்லாம் மாமா கூட டூயட்ட கண்ணு சிவந்துருக்கு ? எம்மா! புது பொண்ணு கொஞ்சம் கனவுல இருந்து வெளிய வா? கல்யாண பூரிப்பு வந்துருச்சு வாத்தியார் பொண்டாட்டி ? அண்ணன நினச்சே வத்தி போயிட பூர்ணா ? இந்த அக்காக்கு எப்பவும் அவுக வீட்டுகாரர் யோசனை தான்”… அப்படினு கேலி , கிண்டல் எப்பவும் சிரிப்பும் கும்மாளம் தான்.
வேலு அவள் முகத்தையே தான் பார்த்திருந்தான். அதில் உற்சாக புன்னகை தான் , ஆர்வத்தோடு சொல்லி கொண்டிருந்தாள் திரும்ப பெற முடியாத சந்தோச நாட்களை,
“ தினக்கி ஒரு புது சேலை, கை நிறைய கண்ணாடி வளையல், தலை நிறைய பூ, சலங்கை முத்து வச்ச கொலுசு , கைல மருதாணி , நல்ல சப்பாடு , வீட்ட சுத்தி ஆளுங்க, அப்படியே கனவுல மிதக்கர மாதிரி இருக்கும் வேலு”… என்று ஜாதி பூவை தொடுத்த வண்ணம் மனதில் எழுந்த சிரிப்போடு பேசி கொண்டிருந்தாள் பூர்ணா. இவை அனைத்தும் அவளுக்கு பிடித்தமான நாட்கள்.
வேலு அவள் தொடுக்கும் ஜாதி பூவையே பார்த்து கொண்டிருந்தான். சிறு வயதிலேயே பூர்ணாக்கு பூ என்றால் அவ்வளவு பிடிக்கும். தலையில் பூ இல்லாமல் அவளை பார்க்கவே முடியாது , அவள் வீட்டை சுற்றி பூ பந்தல் தான். ஏதுவம் இல்லாத நாளில் கூட செவந்தி , கோழி கொண்டை என்று ஏதாவது ஒன்றை சொருகி வருவாள். அன்று ஒரு நாள் பூ எதுவும் இல்லை என்று வேலு வீட்டு இட்லி பூவை சொருகி வந்தவளை அன்று முழுக்க கேலி செய்து சிரித்தான் வேலு.
இப்போதெல்லாம் பூவை கையால் கூட தொடுவது இல்லை பூர்ணா. மனம் வெதும்பி நின்ற வேலு , இனி பூர்ணா வாழ்வை சீர் செய்வதே தன் தலையா கடைமை என உறுதி பூண்டான்.