பொழியும் மேகம்!… அத்தியாயம் 13
பொழியும் மேகம்!…
அத்தியாயம் 13
நர்மதா வரும் போது சுசீலா தான் கத்தி கொண்டு இருந்தார்.
“அரசாங்க வேலையே வேணாம். வீட்டுல ரெஸ்ட் எடுன்னு சொன்னான் என் மகன். வீம்புக்கு உங்க மக தான் வேலைக்கு போறா… நீங்க வைர நகை எல்லாம் போட்டா கல்யாணம் பண்ணி குடுத்தீங்க. இன்னைக்கு எவ்வளவு வைர நகை வச்சு இருக்கா தெரியுமா! எனக்கு சந்தோசம் தான். என் பிள்ளை பேர் சொல்ல தான் பிழைக்கணும். போன வாரம் தான் ஒரு கோடிக்கு கார் வாங்கி இருக்கான். யாருக்கு? காலத்துக்கும் அவளுக்கு தான். இந்த வீட்டுல அவ சொல்லுறது தான் சட்டம். உங்க பொண்ணு என்னைக்கு கல்யாணம் பண்ணி வந்தாளோ அன்னைக்கே எல்லா பொறுப்பும் அவ கிட்ட நான் கொடுத்துட்டேன்…”
Advertisement
“நல்ல குடும்பன்னு தெரிஞ்சு தான் பொண்ணு கொடுத்தேன் சம்மந்தி…” தயவாக தான் சொன்னார் பாலமரத்தான்.
சண்டையின் முழு விவரமும் தெரியாமல் வார்த்தை விட கூடாதே…
“எம் மகனையும் நான் சரின்னு சொல்லல. நிரஞ்சன் கோபக்காரன் தான். ஆனா கெட்டவன் கிடையாது. பொண்டாட்டி, பிள்ளை மேல கொள்ளை பாசம் இருக்கும். ஒரு அம்பிளை கோபத்துல இருக்கும் போது ஒரு பொம்பளை வாய மூட வேணாம். அது என்ன கூட கூட, எதுத்து பேசுறது. அது சரியா?…”
Advertisement
“அவன் பொறுமையா தான் சம்மந்தி பேச ஆரம்பிச்சான். நர்மதா, உங்க அக்காட்டா வீட்டு விசயம் எதுவும் சொல்லாதம்மா. நம்ம வீட்டு நிலவரம் அவங்களுக்கு என்ன தெரியும். அவங்க ஏதாவது யோசனை சொல்லி, நம்ம குடும்பதுக்குள்ள சண்டை வந்துரும்ன்னு பொறுமையா எடுத்து சொன்னா, ஒரு பொண்ணு அனுசரிக்க வேணாம்…” என்றவர்,
Advertisement
“ஆனா, உங்க மக என்ன பண்ண தெரியுமா? பெரியவன் குடும்பம் வந்ததுல இருந்து குடைச்சல் குடுக்க ஆரம்பிச்சா… எங்க அக்கா, என் சொந்த ரத்தாம்ன்னு என்னா பேச்சு. உன் வீடு எது? உன் குடும்பம் எது? உன் புருசன், பிள்ளைக யாரு? அதை தான மொத பார்க்கணும். அதை விட்டு அப்படி தான் எங்க அக்கா வருவா, நான் அவ பேச்சை தான் கேட்பேன்னு எம்புட்டு வாயி, திமிரு… என்ன இருந்தாலும் அவங்க ஊர் திமிரை காட்டுறா உங்க பொண்ணு… கூட பொறந்தாலும் வாயும் வயிறும் வேற தான…” என்று விடாமல் பேசினார் சுசீலா.
மகன் அடித்தது தவறு என்று தெரியும். அதை சாதாரண நிகழ்வாக, நர்மதா தூண்டுதலில் தான் பிரச்சனை வந்ததாக காட்ட நினைத்தார். அப்போது தான் மனைவியை மகன் அடித்தான் என்று தெரிந்தாலும், பெரிய அளவில் பிரச்சனை ஆகாது. அவர்கள் பொண்ணும் தவறு தானே… அதை கொண்டு மகன் மனைவிக்கு செய்த நல்லதை பட்டியல் போட்டு, மகனின் தவறை சூழ்நிலை என்று காட்டி கொண்டார்.
வேற வழியும் இல்லை. நேற்று ஏதோ ஒரு கோபத்தில் சம்மந்திக்கு போன் செய்து சத்தம் போட்டார். அதற்காக விடிந்ததும் வீட்டு வாசலில் வந்து நிற்பார் என்று எதிர்பார்க்க வில்லை. நிரஞ்சன் மட்டும் அடிக்காமல் இருந்திருந்தால் சுசீலா ஆட்டம் வேற மாதிரி இருந்து இருக்கும்.
Advertisement
“நீங்க சொல்றது எல்லாம் புரியுது சம்மந்தி. அதனால் தான் சண்டை வந்துச்சா?… வாய் பேசுனது பிருந்தான்னு சொல்லி இருந்தா நான் நம்பி இருப்பேன். எம் பெரிய மகளை பத்தி எனக்கு தெரியும். அதே போல என் சின்ன மக குணமும் எனக்கு தெரியும். அநாவசிய பேச்சு, வீம்பு , பிடிவாதம் எதுவும் எம் பிள்ளைக்கு கிடையாது. அதுவே வாய் பேசி இருக்குன்னா… தப்பு எம் பிள்ளை மேல இருக்காது சம்மந்தி. இத்தனை வருசம் கூட்டு குடும்பமா தான் இருக்கீங்க. என்னைக்காவது வாய் பேசி, திமிரா நடக்குற பொண்ணா அது?… அப்படி இருந்தா இத்தனை வருஷம் ஒன்னா ஒரே குடும்பமா வாழ முடியுமா?…” நியாமான பேச்சை முன் வைத்தார் பாலமரத்தான்.
சம்மந்தி அம்மா பேச்சில் அவருக்கு உடன்பாடு இல்லை. வாக்குவாதம் வந்து விட கூடாது பெண் கொடுத்த இடத்தில் என்று சாதாரண பேச்சாக ஆரம்பித்தாலும், தன் பிள்ளை மீது இருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார்.
“அப்ப நான் தான் தப்புன்னு சொல்றீங்களா மாமா?…” வந்து விட்டான் நிரஞ்சன்.
அறுவத்தி ஐந்து வயது முதியவர், மருமகன் என்றதும் எழுந்து நிற்க. அந்த மரியாதை யார் கண்ணிலும் பட வில்லை. வேண்டாம் என்றும் சொல்ல வில்லை.
“நான் உங்களை தப்பு சொல்லலை தம்பி. எம் பிள்ளை தப்பு பண்ணி இருக்காதுன்னு சொல்றேன். அதாவது, உங்களையும் தப்புன்னு சொல்லலை. உங்க புரிதல் தப்பாக இருக்கும் மாப்பிள்ளை…”
“நான் சரியா தான் புரிஞ்சு வச்சு இருக்கேன். உங்க மகளை நீங்க விட்டு குடுப்பீங்களா?…”
“அப்படி இல்லை மாப்பிள்ளை. விசாரிப்போம் எம் மக மேல தப்புன்னு தெரிந்தா உங்க கண்ணு முன்னாடியே கண்டிச்சு வைக்கிறேன்…”
“நீங்க யாரும் தலையிடாம இருந்தாலே எம் பொண்டாட்டி எம் பேச்சை கேட்பா… சொந்தம்ன்னா ஒரு அளவு இடைவெளி வேணும். உங்க பெரிய பொண்ணு எங்க வீட்டு விசயத்துல வாராங்க. எனக்கு அது பிடிக்கல. அத்தோடு நீங்க தனியா எதுக்கு நர்மதாவ பார்த்து பேசுனிங்க…” நிரஞ்சன் வாதத்தை மாமனாரிடம் திருப்பினான்.
“மாப்பிள்ளை, பொதுவாவே நர்மதா எல்லா விசயங்களையும் எல்லார் கிட்டையும் வெளிப்படையா சொல்லுற ஆள் கிடையாது. தாங்க முடியாத கஷ்டம் இருந்தா மட்டும் தான் வார்த்தை வெளி வரும். கஷ்டம், கவலையை சொல்ல தான் கூட பொறந்த உறவு. அப்புறம் நான் பெத்த பிள்ளை. வேலை செய்யிற இடத்துல போய் நான் பாக்குறது என்ன தப்பு மாப்பிள்ளை. உங்களுக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்தா, எம் பிள்ளைக்கு நான் அந்நியம் ஆகிடுவேனா மாப்பிள்ளை..”
“அந்நியம் தான் மாமா. புருசன், பொண்டாட்டிக்கு இடையில பெத்த தகப்பன், கூட பொறந்த சொந்தம் அந்நியம் தான். அதை புரிஞ்சு தள்ளி நிலுங்க…” வெறுப்பாக சொன்னான்.
“அது முடியாது மாப்பிள்ளை. ஒரு பொண்ணுக்கு புருசன் தான் முதல்ல.. அதை நான் மறுக்க மாட்டேன். அதுக்காக ஒரு நேரம் கஷ்டம், கவலைன்னு ஆறுதல் தேட பொறந்த வீட்டு உறவு வேணாமா? நீங்க வேலைக்கு போறீங்க. உங்க வாழ்க்கை பிஸி. நான் என் வேலை, கடமை எல்லாம் முடிச்சுட்டேன். கடைசி காலத்துல இருக்கேன். எனக்கு நிம்மதி எம் பிள்ளைக தான். அவங்க வாழ்க்கையை பாக்குறது தான் எங்க வாழ்க்கையே… நான் உயிரோடு இருக்கும் போது எம் பிள்ளை ஆள் இல்லாம ஏன் இருக்கணும். எங்களுக்கு, பெத்த பிள்ளைகளை விட்ட யார் இருக்கா?…”
“உங்களுக்கு நர்மதா மட்டும் தான் மகளா? மத்த பிள்ளைகளை பாருங்க. உங்க தலையீடு எங்களுக்கு தலைவலி…” வெறுப்பாக உரைத்தான்.
வேதனையாக இருந்தது. ஆனாலும் பேச தவறவில்லை.
“இதே வார்த்தையை எம் மக உங்களை பெத்தவங்களை பார்த்து சொன்னா?…”
“மாமா.. வார்த்தையை பார்த்து விடுங்க…” கர்ஜித்தான் நிரஞ்சன்.
“அதான் மாப்பிள்ளை சொல்றேன். உங்க சம்மந்தப்பட்ட விசயங்களை நீங்க உங்க அம்மா, அப்பா கிட்ட சொல்றீங்க தான? அதே மாதிரி எம் பிள்ளை என்கிட்ட சொல்லுது… உங்க அம்மா அப்பா உங்களுக்கு நல்லது சொல்லுவாங்க. நான் எம் பிள்ளைக்கு கெட்டது சொல்வேனா?…” ஆதங்கமாக வந்தது வார்த்தைகள்.
“எங்க அம்மா, அப்பாவ நீங்க பேசாதீங்க. அவங்க உங்களை மாதிரி ஏத்தி விட மாட்டாங்க…” என்றவன்,
“நீங்க, உங்க பெரிய பொண்ணு யாரும் பார்த்தா, பேசுனாவே எங்களுக்குள்ள சண்டை தான் வருது. ஏதாவது விசேஷன்னா மட்டும் நான் அனுப்பி வைக்கிறேன். மத்தபடி தள்ளியே நிப்போம்…” என்று நிரஞ்சன் சொல்லி முடித்தான்.
அவன் விட்ட வார்த்தை எந்த அளவுக்கு எதிரில் இருந்தவரை காயப்படுத்தும் என்று யோசிக்கவே இல்லை. அவனை பொறுத்த வரை மனைவி பழைய மாதிரி தன் கைக்குள் நிற்க வேண்டும். அதனால் அவள் சார்ந்த உறவுகளை வெட்ட நினைத்தான்.
“அப்ப இது தான் பிரச்சனைன்னா என் ஆதரவு எம் மகளுக்கு தான். நியாயமில்லாம என் பிள்ளை கோபப்படல…” திடமாக சொன்னார் பாலமரத்தான்.
“அப்ப உங்க மகளை, உங்க வீட்டோடவே கூட்டி போங்க…” மறைமுக மிரட்டல் தான்.
“நிரஞ்சா… என்னடா பேசுற. பைத்தியம் மாதிரி உளராத…” கடிந்தார் தாமோதரன்.
“என்ன பேசுறீங்க. இப்படி பாதியிலேயே வெட்டி போறதுக்கு எம் மகளை ஏன் உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும். நல்ல குடும்பம்ன்னு நினைச்சு தான் பொண்ணு கொடுத்தேன்…” தாங்கவில்லை பாலமரத்தானுக்கு…
“பொண்ண கட்டி கொடுத்தா அப்புறம் என்ன உறவு. அவ எம் பொண்டாட்டி. நான் தானே அவளை பார்க்கணும். கடைசி வர கூட இருக்க போறது நான் தான். நீங்க எவ்வளவு நாளைக்கு இருப்பீங்க…” குரலை உயர்த்தி கத்த தொடங்கினான்.
“நிரஞ்சா நீ பேசுறது நியாயம் இல்லடா வாய மூடு…” தாமோதரன் அடக்க பார்க்க,
“என்ன சம்மந்தி உங்க பையன் இப்படி பேசுறாரு… பெத்த தகப்பனுக்கு பிள்ளை சொந்தம் இல்லையா… நான் தூக்கி வளர்த்த எம் பிள்ளையை பார்க்க கூட உங்க மகன் கிட்ட அனுமதி வாங்கணுமா? இதுல கொஞ்சமாவது நியாயம் இருக்கா…” என்று இவரும் சத்தம் போட,
அப்போது தான் குரல் உயரும் தன் தந்தை சத்தத்தை கேட்டு பதறி அடித்து ஓடி வந்தாள் நர்மதா. தன் அப்பாவை அங்கு எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் இவ்வளவு காலையில்…
“அப்பா…” என்று கிட்டே வர,
திரும்பி மகளை பார்த்தவர், அவள் கோலம் கண்டு அதிர்ந்து போய் நெஞ்சில் கை வைத்தார். நேற்று போட்ட நைட்டி, சாப்பிடாமல் இருப்பது, இரவு முழுவதும் உறங்காமல் சிவந்த கண்கள், நேற்று விழுந்த அடிக்கு கன்னம் மட்டும் தான் இரவு வீங்கி இருந்தது. இன்று காலை பார்க்கும் போது ஒரு பக்க முகமே சிவந்து வீங்கி போய் இருந்தது. ஒரு பக்க உதடு தொங்கி போய் பார்க்கவே எப்படியோ இருந்தாள் நர்மதா.
மனதின் வலி, கவலை முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. என்னவோ தந்தைக்கு கண்கள் கலங்கியது.
“பாப்பா என்ன ஆச்சு உனக்கு… முகம் ஏன் வீங்கி இருக்கு. அடிச்சாங்களா உன்னை?…” என்றவருக்கு மகளை பார்க்கவே முடியவில்லை.
நேற்று முழுக்க தைரியமாக இருந்தவள் தான். கலகம் பிறக்கட்டும் என்று கூட நினைத்தாள். எதையும் ஒரு கை பார்ப்போம் என்ற துணிச்சல் கூட தந்தையை பார்த்ததும், அவர் கலங்கிய கண்களை கண்டதும் வலிக்க தொடங்கியது.
தைரியம் எல்லாம் காணாமல் போய், தானே இரு பிள்ளைகளின் தாய் என்பதை மறந்து தன் தகப்பனை பார்த்ததும் அழுகை வந்தது.
“அப்பா…” அழுகையை கட்டுபடுத்தி ஒரு விக்களோடு அழுக, உடைய தொடங்கினார் தந்தை.
“பாப்பா, உன்னை இப்படி பார்க்கவா சீரும் சிறப்புமாக கல்யாணம் பண்ணி குடுத்தேன். நீ இப்படி அடி வாங்கவா உன்னை பெத்து வளர்த்தேன். உன் கண்ணீரை பார்க்கவா நான் உசுர வச்சு இருக்கேன்…” என்று பாலமரத்தானும் கண் கலங்க…
நாடகம் பார்ப்பது போல பார்த்தான் நிரஞ்சன். “வொர்ஸ்ட் ஆக்டிங்” என்று முனங்கி கொண்டான்.
“அவனுக்கு என்னவோ கோபம். கை நீட்டிட்டான் சம்மந்தி. இத்தனை வருசத்துல ஒரு நாளும் நிரஞ்சன் இப்படி இல்ல…” என்று தாமோதரன் எடுத்து சொல்ல,
“என்னங்க கோபம். ஒரு மனுசனுக்கு வரமுறை தெரியாத கோபம் வருமா? என்னைக்காவது கோபத்துல உங்க மேல கை வச்சு இருக்கானா…” மகள் நிலை கண்டதும் மருமகன் என்ற மரியாதை காணாமல் போய் இருந்தது.
“உங்க மகளுக்கு எம்புட்டு செஞ்சு இருக்கான். ஏதோ ஒரு கோபம். அதுக்கு உங்க மக வாயும் தான் காரணம்…” சுசீலா தன் பங்குக்கு வந்து விட்டார்.
“என்னவும் பேசட்டும். ஆயிரம் வாக்குவாதம் வரட்டும். அது புருசன், பொண்டாட்டிக்கு உள்ள… அதுக்கு முகம் வீங்குற அளவுக்கு அடிப்பாங்களா?…” நார்மதாவின் கையை பிடித்து இழுத்து சுசீலா அருகில் நிறுத்தியவர்,
“பாருங்க நல்லா முகத்தை பாருங்க. எப்படி வீங்கி, சிவந்து போய் இருக்குன்னு… நேத்து அடிச்சதுக்கே இப்படி வீங்கி இருக்கே. எம் பிள்ளைக்கு எப்படி வலிச்சு இருக்கும். எம்புட்டு வலிய தாங்கி இருக்கும். இதுக்காக நான் பிள்ளையை கட்டி கொடுத்தேன். என் நெஞ்சே கொதிக்குது…” என்று பாலமரத்தான் கத்த,
அதுவரை வெளியே வராமல் இருந்த வித்யா கூட வெளியே வந்து விட்டாள். அவளுக்கு பயம். எங்கே தன்னால் தான் என்று சொல்லி விடுவார்களோ!… தன்னை விட நர்மதா உசதி இல்லை என்று காட்ட தான் நினைத்தாலே தவிர, இப்படி சண்டை போடணும் என்று நினைக்க வில்லை.
“அதான் சொன்னேனே. உங்க மகளும் தான் தூண்டி விடுற மாதிரி பேசுனா… அடிச்சது தப்பு தான். அதுக்காக அவன் செஞ்ச நல்லது இல்லன்னு ஆகிடுமா?…” சுசீலா மீண்டும் மகனுக்கு ஆதரவாக பேச,
“ தலைவாழை இலை போட்டு விருந்து வச்ச பின்னாடி, ஒரு ஓரத்துல சானி வச்சா எப்படி இருக்கும். ஒரு ஓரமா தானே இருக்குன்னு விருந்து ருசிக்குமா… அது தான் உங்க மகன் குணம்…” என்ற மாமனாரின் வார்த்தை நிரஞ்சனை தூண்டி விட,
“பிருந்தா அப்பாவுக்கு பேச சொல்லியா கொடுக்கணும். பாருங்க, நர்மதா எம் பொண்டாட்டி, நான் அடிப்பேன். எங்களுக்குள்ள ஆயிரம், அதுல நீங்க எதுக்கு உள்ள வாரீங்க…” நிரஞ்சன் தன் பேச்சை ஆரம்பித்தான்.
“நான் பெத்த தகப்பன். கையை தடவி, கால உருவி தொட்டு தொட்டு வளர்த்தவன் நான்… நெஞ்சுலையும், தோல்லையும் போட்டு வளர்த்த எம் பிள்ளையை அடையாளம் மாறி போற அளவுக்கு நீ அடிப்ப, நான் பார்த்து இருக்கணுமா…” என்று தந்தையும் எகிற,
“அப்பா வேணாம் ப்பா…” என்று கையை பிடித்து தடுத்தாள் நர்மதா.
“நடிக்காதடி. அப்படியே குடும்பமே டிராமா, சீரியல் மாதிரி… நீ தான் சொல்லி வர சொன்ன…”
“எம் மகளை எம் முன்னாடியே மிரட்டாத…” என்று தந்தை வர,
நிரஞ்சன் முகம் மாறி விட்டான்.
“அவ எம் பொண்டாட்டி. அப்படி தான் நான் அடிப்பேன், பேசுவேன். நீங்க யாரு? என்னைக்கு எனக்கு கட்டி கொடுத்தீங்களோ அன்னைக்கே அவ மேல எனக்கு தான் உரிமை இருக்கு. இனி நீங்க பேச கூடாது. இது எங்க குடும்ப விசயம்…” எகிறினான் நிரஞ்சன்.
“எங்க அப்பா கிட்ட குரலை உயர்த்தி பேசாதீங்க. இனி ஒரு வார்த்தை வந்துச்சு உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை…” நர்மதாவும் சண்டைக்கு வந்தாள். தந்தையை பேசிய கோபம்…
“வாம்மா நல்லவளே… இப்ப வரைக்கும் உன் புருசனை உங்க அப்பா பேசினாரே, அப்ப எங்க போச்சு உன் ரோசம். உங்க அப்பா, மகள் பாச படம் ஓட்ட நான் தான் கிடச்சனா? உலகத்துல நீங்க தான் உன்னதமான குடும்பம். அப்படியே அப்பா, அக்கா, தங்கச்சி பாசத்தை பார்த்து சிலிர்த்து போச்சு. இப்படி அங்க இருந்தும் மகளவே பாக்குறதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். கூடவே வச்சுக்க வேண்டிய தான…”
“தப்பு தான் தம்பி. என் தப்பு தான். நீங்க நல்ல குடும்பம்ன்னு நினைச்சு பொண்ண கட்டி கொடுத்தேன். ஆனா பசு தோல் போர்த்துன புலின்னு நினைக்கலையே…”
“அப்பா பேச வேண்டாம்…” கையை பிடித்து இழுத்தாள்.
“என்ன பேச்சு இது. மருமகன் கொஞ்சமாவது மரியாதை வேணாம்…” சுசீலாவும் சண்டைக்கு தயாரானார்.
“எம் மகளை நல்ல படியா வச்சு இருந்தா தான் எனக்கு மருமகன்… எம் மகளை கட்டி தான் எனக்கு மருமகன்…”
“என்ன குறை உங்க மகளுக்கு… நீங்களே பாருங்க. அவ கிட்ட என்ன இல்லை. உங்க வீட்டுல இவ்வளவு வசதியாவா வாழ்ந்தா…”
“ பணமும், வசதியும் நிறைவான வாழ்க்கையை கொடுக்காது சம்மந்தி அம்மா. இம்புட்டு வசதி எங்க வீட்டுல இல்லை தான். ஆனா ஒரு நாளும் எம் பிள்ளையை நான் கை நீட்டுனது இல்லை. இந்த வசதியை பார்த்து நான் பொண்ணு கொடுக்கல. எம் பிள்ளையை நல்லா வச்சுகுவீங்கன்னு தான் பொண்ணு கொடுத்தேன்…” என்றவர்,
