Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kottathile oru Thanimai pura

தனிமை புறா 3.2

அவர்கள் செல்வதை பார்த்த சொக்கலிங்கம்,
“நரசிம்மா”!!
சொல்லுங்கப்பா…,
திருவிழா கணக்கு வழக்கு பாக்க கோயில்ல ஆளுங்க எல்லாம் கூடியிருப்பாங்க ஒரு எட்டு போய் நீ என்னனு பாத்துட்டு வந்துரு,
நம்ம பூ தோட்டத்துக்கு   ஆளுங்க வேலைக்கு வந்திருப்பாங்க நா அங்க பாத்துகிறேன், நீ கோயிலுக்கு போயிட்டு வந்துரு…,
சரிங்கய்யா என்றவன் இரு பெண்களிடமும்  சொல்லிக் கொண்டு கிளம்பிட அவன் பின் சொக்கலிங்கம்மும் சென்றுவிட்டார்.
அவர்கள் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட லக்ஷ்மி பிச்சையை அழைத்தார்,
” அத்த..,”
தனது மருமகளின் அழைப்பை எதிர்பார்த்தவர் அவரிடம் சிறு புன்னகையை சிந்தி
‘எல்லா நல்ல படியா நடக்கும் லக்ஷ்மி நீ வீணா மனச போட்டு ஒலப்பிக்காத ‘
தனது மாமியாரின் பேச்சை கேட்டவரின் மனம் சற்று நிம்மதியடைய ஏதும் பேசாது அடுப்படிக்கு சென்றுவிட்டார்.
அங்கு மாடியில்…….,
வேலையாள் காட்டிய அறைக்குள் மூவரும் நுழைந்ததும்,
“காய்ஸ் உங்க ரெண்டு பேருக்கும் இந்த ரூம் கொடுத்திருகாங்க எனக்கு பக்கத்துல இருக்குற ரூம்,
நா அங்க தங்கிக்கிறேன் ஏதும் வேணும்னா என்ன கூப்புடுங்க நா போய் கொஞ்சம் ப்ரஸ்(fresh) ஆகிட்டு வரேன் அதுக்கப்பறம் நம்ம நாளைக்கு எடுக்க போற இண்டர்வ்வீயூ பத்தி டிஸ்கஸ் பண்ணலாம் என்ற விக்கி தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று.விட,
தேவா நா போய் ப்ரஸ் ஆகிட்டு வரவா இல்ல நீ போறீயா ரொம்ப டையர்ட்டா தெரியுற..,என்ற பவியின் கேள்விற்கு
இல்ல பவி நீ போயிட்டு.வா நா அப்பரம் ப்ரஸ் ஆகிக்கிறேன்…,
சரி டி என்றவள் அந்த ரூமின் மூலையில் இருந்த குளியலறைக்குள் செல்ல,
அவள் சென்றுவிட்டதை உறுதிபடுத்திக் கொண்ட  தேவா தனது கைப்பேசியுடன் சற்று தள்ளி இருந்த ஜன்னலருகே சென்று நின்றுக் கொண்டவள் கைப்பேசியில் அழைப்பை விடுத்து மறுமனை எடுப்பதற்காக காத்திருந்தாள்.
அழைப்பு ஏற்கப்பட்டதும்..,
ஹலோ பாட்டி….,
சொல்லு தேவா அங்க போயிட்டியா??
ம்ம் பாட்டி இப்ப தான் வந்தேன்
சரி எங்கன தங்கியிருக்க??
இங்க தான் தங்கியிருக்கோம் உன் பையன் எல்லாத்தையும் பக்காவா பிளான் பண்ணி தா என்ன இங்க அனுப்பி வச்சியிருக்காரு..,
அவன் என்ன தான் திட்டம் போட்டாலும் அத நான் நடக்க விடமாட்டேன் உன் பக்கத்து யாரும் இல்லையா அந்த பவ்யா புள்ள எங்க??
இல்ல பக்கத்துல யாரும் இல்ல அவ பாத்ரூம்ல இ்ருக்கா…,
[the_ad id=”6605″]
சரி அந்த சிறுக்கியா பாத்தியா?
இல்ல பாட்டி நா அவுங்கள இன்னும் பாக்கல மாடில இருக்குற ரூம்ல தான் தங்கியிருக்கோம்…,
அவன் ஏதும் வம்பு பண்ணுணாண தேவா அங்க இருக்கவங்க உன்கிட்ட எப்புடி நடத்துக்கிட்டாங்க??
இதை கேட்ட நொடி சற்று முன்  நரசிம்மன் நடந்துக் கொண்டது அவள் மனக் கண்ணில் வலம் வர, இத பாட்டிக்கிட்ட சொல்லலாமா ! வேண்டாம்மா! என யோசித்தவள் இப்போதைக்கு வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு ‘இல்ல பாட்டி யாரும் என்ன இங்க தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல..,’
ம்ம் நல்லது தேவா உனக்கு நா சொல்ல தேவயில்ல எல்லா விஷயமும் உனக்கே நல்லா தெரியும்!! பார்த்து கவனமா நடத்துக்கோ…,
உன் வேல முடிஞ்ச அடுத்த நாள் எந்த காரணமும் சொல்லாமா அங்கியிருந்து
கிளம்பிடு.., நா வைக்கவா?
சரி பாட்டி அப்பாவ பாத்துக்கோ மாத்திரை எல்லாம் கரக்ட் டைம்முக்கு சாப்பிடுங்க.., நா வச்சிடுறேன் பாட்டி..,
போனை கட் செய்து விட்டு நிமரிந்தவளின் கண்களில் சற்று அருகில் இருந்த அந்த மாடி.வீடு தென்பட்டு வேண்டாத கசப்பான நிகழ்வுகள் ஞாபகம் வர கண்களை இறுக மூடி அதனை விழுங்கியவளின் கண்ணோரம் இரு நீர் துளிகள் துளிர்ந்தன,
வேகமாக அதனை துடைந்து எறிந்தவள் “நீங்க எல்லாரும் என்ன பிளான் பண்ணுறீண்கன்னு நல்ளாவே தெரியுது, அத ஒருநாளும் நான் நடக்க விட மாட்டேன், இந்த வீட்டுலயே தங்கி  இருந்து உங்க எல்லாருக்கும் அத நிருபிச்சு உங்க மூஞ்சில எல்லாம் கரிய பூசல!! நான் கற்பத்தோட பேத்தி தேவான்ஷி இல்ல!!” என்றவளின் விழிகள் அழுகையிலிருந்து மாறி இருந்தது. ஒரு வித தீவிரம் அவள் விழிகளில் குடிபெயர்ந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!