Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜதி தரும் அமுதம்

Jathi Tharum Amutham 12 1

ஜதி  தரும் அமுதம்

அத்தியாயம் -12



Advertisement

Advertisement

வைஷுவுக்கு  தன் காதுகளில்  கேட்ட செய்தியை  கேட்டு  அதிர்ந்து நிற்க..

Advertisement

வீ. பி  திரும்பி வைஷுவை  பார்த்து,, கேட்டுட்டாளா  ஐயோ என்றவன்.. சஞ்சனாவை பார்த்து  “நீ  வெளியே போகலாம்  என்றவன்.. ஷைஷுவின்  அருகில் வர..

Advertisement

அவளோ  ஏதோ  திக் பிரம்மை  பிடித்தவள் போல,, அப்படியே படிகட்டில்  நின்று இருந்தாள்..

அவளின்  உதடுகள்  “யாழினி” என்று உச்சரிக்க..

வீ. பி  அவளின் அருகில் வந்தவன் .. “வைஷு  வா”.. என்று அழைக்க..

“என்ன? சொன்னீங்க  சார்!?.

“நீ  வாம்மா நான் சொல்லுறேன்” என்று   அவளை அவன் அறைக்க அழைத்து இல்லை இழுத்துக்கொண்டு  சென்றான்..

   “என் பொண்ணா?  யாழினி  என் பொண்ணா?” என்று மந்திரம் போல.. யாழ், யாழ்  என்று  சொல்லிக்கொண்டு இருக்க.. அவன் அறைக்கு  வந்தவன்,, அவளின் முகத்தை பார்க்க.. அவள் யாழினி, யாழினி என்று புலம்பிக்கொண்டு  இருந்தவளை..

“வைஷு,, வைஷு பொம்மா”  என்று அவளை உலுக்கி கனவுலகில் இருந்து சுயநினைவுக்கு  கொண்டு வந்தான்…

“ஏன் சார் என்கிட்ட சொல்லல்ல,, முன்னாடியே சொல்லி இருக்கலாமே”  என்றாள்..

“எப்படி  சொல்ல முடியும்  வைஷு, சொன்னா நீ  புரிஞ்சிப்பீயா?.. இப்போ நடந்துச்சே அது மாதிரி தான்,   ரியாக்ட்  பண்ணுவ, இந்த சஞ்சனா  பண்ணுன  மாதிரி,  நீயும்  எனக்கு  யாழினி வேணுமுன்னு,   கேட்டு சண்டை போடுவா,” என்றான்..

“பேச்சை மாத்தாதீங்க, யாழினியை  பத்தி ஏன் என்கிட்ட  சொல்லல்ல?”.

“உன்கிட்ட மெதுவா  சொல்லலமுன்னு  நெனச்சேன்  பொம்மா”..

“ஏன் நேத்து நம்ம  ரெண்டு பேரும் நிறைய பேசுனோமே அப்போ என்கிட்ட   சொல்ல  வேண்டியது  தானே”…

“பொம்மா கோபப்படதா,, நம்ம நிதானமா பேசலாம்”..

“என்ன கோபப் படாத எனக்கு தெரியாமா என்னுடைய எக்கு எடுத்து, உங்களோடத சேர்த்து,, பத்து வயசுல  ஒரு பிள்ளை உருவாகி இருக்கு”  என்று சொல்லி அழ..

“இதுல  அழுக ஒன்னும் இல்லை, நீயும், நானும் ஒன்னா  சேரனுமுன்னுறது  விதி.. நம்ம இரண்டு பேரும்  நிஜத்துல ஒன்னா  சேரும் முன்னவே,, ஒரு குழந்தை பெத்துக்கன்னுமென்றது விதிடா, நீ வருத்தப்படாத “.. என்றான்..

 “நான் டாக்டர் கிட்ட சொன்னேன்னே  என் சிஸ்டரை தவிற  யாருக்கும் என்  எக்கை யூஸ் பண்ண கூடாதுன்னு, எப்படி உங்களுக்கு எல்பு  பண்ணாங்க”..

“உங்க அக்கா கிட்ட ரிக்வெஸ்ட்  பண்ணோம், ஹெல்ப் பண்ணாங்க”…

அக்காவின்  மேல்  கோபம் வந்தவளுக்கு , ஞாபகம் பின்னோக்கி போக..

வைஷுவின் அக்காவுக்கு திருமணமாகி 3 வருடம் குழந்தையில்லாமல்  இருக்க.. செக் பண்ணி பார்த்ததில், சௌமிக்கு,  கொஞ்சம்  பிரச்சனை இருப்பது போல முடிவு வர.. என்ன செய்யலாம் என்று யோசித்து.. சௌமிய தங்கையிடம் உதவி கேட்டாள்.. மறுக்க முடியாமல்  ஒத்துக்கொண்டாள் வைஷு…

வீட்டில் உள்ளவர்களுக்கு  தெரியாமல்  டெல்லியில் உள்ள  ஒரு மருத்துவ மனைக்கு டெஸ்டு யூ பேபி மூலம்  குழந்தை  பெத்து கொள்ளலாம்  என்று  முடிவு பண்ணி சௌமியா   கணவரிடம் சொல்ல, ராகேஷ் இதற்கு  ஒத்துக்கொள்ள வில்லை,, சௌமி அழுது புலம்பி அவனை ஒத்தக்கொள்ள வைத்திருந்தாள்…

எல்லாம் நல்லா படியாக முடிந்தது,, வைஷுவிடமிருந்து,, உயிர்அணுவை  எடுத்தனர்.. சில நாட்களில்,  சௌமியை டெஸ்ட் பண்ணி பார்த்ததில்  சௌமி இயற்கையாக கருவுற்று இருப்பது தெரிய,, இரண்டு சகோதரிகளும் சந்தோஷம்,,.

ஒரு முயற்சி பண்ணி கொண்டு இருக்கும்போதே சௌமியா இயற்கையாவே கருவுற்று இருக்க.. வைஷு தனது உயிர் அணுவை  யாருக்கும் உதவ கூடாது  என்று மருத்துவரிடம் சொல்லி விட்டே வந்தாள்..

வைஷுவின்  முகத்தை பார்த்திருந்த  வீ. பி. அவளை முதல் முதலில் பார்த்ததை சொல்ல ஆரம்பித்தான்..

 “உன்னை  நான் பார்க்கும் போது  உனக்கு 17 வயசு வைஷு” என்றான்.

அவளோ  இவர் என்ன சொல்லுகிறார் என்று பார்க்க..

“ஆமாம் வைஷு உன்ன நான் பார்க்கும் போது உனக்கு 17  வயசு.. எனக்கு அது தெரியாது. என் கண்ணுக்கு நீ பெரிய பொண் போல தான் தெரிஞ்ச.. உன்னை முதல் முதலில் பார்த்ததும் ரொம்ப  பிடிச்சது. உன் பேரு என்னன்னு எனக்கு தெரியாது..

விசாரிச்சேன்,, நீயும், ஹோமாவும் எப்பையும்  சேர்ந்தேன் தான் ஆடுவீங்களாம், உங்களை  ஜோடி டான்சர் பேரு ஹோமா வைஷு சொன்னாங்க,, நீ ஹோமாவா, இல்லை  வைஷுவா, உன் பேரு கூட தெரியாது,,

உன் ஸ்கூல் பேரவச்சு.  உன் ஸ்கூலுக்கு   உன்னை விசாரிக்க வந்தேன்,, அப்போ தான் சொன்னாங்க  உனக்கு 17  வயசு பீ. யு. சி,, பஸ்ட் படிக்குறேன்னு சொன்னாங்க..

ஐயோ மேஜர் ஆகாத சின்ன பொண்ண லவ் பண்ணிட்டோமே நெனச்சு திரும்பி வந்துட்டேன்.. ஒரு இரண்டு, மூனு வருஷம் கழிச்சு  உன்னை  பாக்க வரலாமுன்னு நெனச்சி  வந்துட்டேன்.. ஆனா வர முடியல.. நீயே என்கிட்ட வந்த..

சௌசன்யா லவ் மேரேஜ் பண்ணிகிட்ட..  அவங்க இரண்டு பேரும் வீட்டுலையும்  இவங்க  கல்யாணத்தை  ஏத்துகல.. நான் தான் முன்ன இருந்து அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன்..

இரண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்தாங்க.. சௌசன்யாவுக்கு குழந்தை வேணுமுன்னு ஆசைபட்டு நிறைய மாதம் காத்திறந்தாள்,, ஆனா குழந்தை அவளுக்கு கிடைக்கல..

இரண்டு பேரும் டெஸ்ட் பண்ணி பார்த்தப்போ, ராமுக்குதான் பிளட் கவ்டிங் கம்மியா இருந்துச்சு..அதனால  டெஸ்ட் யூ பேபி மூலமா குழந்தை பெத்துக்காலமுன்னு  நெனச்சா. நிறைய டோனரை பார்த்த, அவளுக்கு நிறைய குழப்பம்  இருந்துச்சு.. டோனர் நிறைய பேர் வந்தாங்க.. அவங்களை மாதிரி குண நலம் வந்துட்டா,  வேற செனடிக்  நோயோ, வேற ஏதாவது குழந்தைக்கு பாதிப்பு  வந்துட்டா, என்று நிறைய யோசிக்க ஆரம்பிச்சா.. அவளுக்கு தெரிஞ்சவங்க கிட்ட கேட்க முடியல. கடைசியில என் கிட்ட வந்தா..

என்னால இது முடியாதுண்ணு சொல்லிட்டேன்.. வேற விதமா யோசிக்கும் போது.. வேற ஒரு பொண்ணு அணுவையும், என்னுடைய அணுவையும்  சேர்த்து,, குழந்தையை வளக்க   முடிவு பண்ணி சௌசன்யா என்கிட்ட கேட்ட..

எனக்கு அதுவும் பிடிக்கல.. குழந்தை இல்லாமல் அவ கஷ்ட படுறதை பார்த்து,, ஒத்துகிட்டேன்..

ஒரு பொண்ணு டோனரை நாங்க தேடினோம்.. பெண் டோன்னருன்னு முக்கியமா கல்யாணமாகி ஏற்கனவே  குழந்தை   பெற்ற வங்களுக்கு தான்  முன்னுரிமை.. நாங்க அப்படி டோனரை தேடல..

டோனருக்கு கல்யாணமாகி இருக்க கூடாது, படிச்சிருக்கனும்,, அழகா இருக்கனும்,, உடம்பில் எந்த பிரச்சனையும் இருக்க கூடாது, முக்கியமா நல்லா டான்ஸ் ஆட தெரியனுமுன்னு.. கண்டிசன் போட்டோம்.. ஏன்னா எங்க அம்மா பெரிய, டான்சர்ல..

டாக்டர் நாங்க சொன்னவுடனே சிரிச்சாரு எல்லாம் ஓகே தான், அது என்ன சார் டான்ஸ்?.. ரொம்ப கஷ்டமா தேடி பாக்கலாமுன்னு,

நாங்களும் தேடினோம்.. திடிர்னு ஹாஸ்பெட்டல்ல   இருந்து போன் வந்துச்சு  நீங்க கேட்ட மாதிரியே  ஒரு  டோனர் கிடைச்சிருக்காங்க வாங்கன்னு..

நானும் சௌசன்யாவும் போனோம்…

டாக்டர் வீ. பி யிடம்   டோனர் பொண்ணுக்கு 19  வயசு.  அவங்க சிஸ்டருக்ககா எக்கு டொனேட் பண்ணுறாங்க.. பேஷன்டுக்கு   அவங்க எக்குகை வேறவங்களுக்கு டோனேட்  பண்ண  விருப்பம் இல்ல,, பேஷன்ட் அவங்க சிஸ்டர தவிற வேற யாருக்கு தன்னோடு எக்கை யூஸ் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாங்க..

வீ. பியும்,, சௌசன்யாவும் டாக்டரை பார்க்க.. நீங்க பெஷன்ட்டோட சிஸ்டர் கிட்ட கேளுங்க, அவங்க ஓகே சொன்னா நம்மா மேற்கொண்டு நடக்குறதை பார்க்கலாமுன்னு சொன்னாரு..

நானும்  சௌசன்யாவும் உன் அக்காகிட்ட கேட்டோம், அவங்க சௌசன்யா கண்ணீரோடு எனக்கு ஹெல்ப் பண்ணுங்கன்னு கேட்டப்போ,, உன் சிஸ்டர் ஓகே சொல்லிட்டாங்க..

சௌசன்யாவை ஹாஸ்பெட்டலில் சேர்த்துட்டோம்..எல்லாம் நல்ல படியா நடந்துட்டு இருந்துச்சு..

திடிர்னு டாக்டர் போன் பண்ணி.. டோனரோட  அக்காவை டெஸ்ட் பண்ணி பார்த்ததுல, அவங்க இயற்கையாகவே  மாசமா இருக்காங்க இப்போ என்ன பண்ண,, நாளைக்கு தான் டோனர்கிட்ட இருந்த எக்கு எடுக்க போறோம்.. என்று சொன்னாங்க..

சௌசன்யாவிடம்   இதை எப்படி சொல்ல என்று யோசித்தவன்.. சார் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க,, டோனர் சிஸ்டர் பத்தி இப்போ வெளியில சொல்ல வேண்டாம்.. இன்னோரு முறை இந்த மாதிரிடோனர் எங்களுக்கு  கிடைக்க மாட்டாங்க,, கருமுட்டையை  அவங்க கிட்ட இருந்து எடுத்துட்டு அப்புறம் பேஷன்ட கிட்ட சொல்லிக்கலாம்,  பேஷன்டுக்கு  எவ்வளவு காசு வேணுமுன்னாலும் கொடுத்திறலாம்.. உங்க ஹாஸ்பெட்டலும்  பெரிய பண உதவி பண்ணுறேன்னு,  சார் என்று வீ. பி சொல்லி  டாக்டரை சம்மதிக்க வைத்தான்..

நல்லா படியாக வைஷுவின் கருமுட்டையை  வெளியே  எடுக்க பட்டு வீ. பி உயிர் அணுவையும்  சேர்த்தார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!