அது எப்படி என்கிட்ட கேக்காம ஒரு முடிவு எடுக்கலாம் நீங்க?”
“என்ன மகி நீ இப்படி சொல்ற? நீயும் அவங்க கிட்ட எல்லாம் நல்லா தானே பேசிட்டு இருக்க?
அதுவும் அண்ணனுக்கு ஆக்சிடென்ட் ஆனது கேள்விப்பட்டு, நீ தானே வயித்துப் பிள்ளையோட ஹாஸ்பிட்டல் ஓடினே.
பணம் எல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம கட்டின? அப்புறம் என்னடி இன்னிக்கி இப்படி பேசுற?”
“என்ன பேசுறீங்க நீங்க.. அன்னிக்கு ஒரு மெடிக்கல் எமர்ஜென்சியின் போது நான் பண்ணினதும் இப்ப நீங்க செய்றதும் ஒண்ணா?
ஒருத்தர் உயிருக்கு போராடிட்டு இருக்கிறப்போ, அவங்க எவ்வளவு தான் நமக்கு கெடுதல் பண்ணி இருந்தாலும் நாம் பார்த்துட்டு க்ராஸ் பண்ணிட்டு போறது மனுஷ தன்மையில் வராது!
அதனால தான் அன்னிக்கு சந்துரு அண்ணனும் அவருக்கு ஹெல்ப் பண்ணினாங்க.
ஆனா..இது தொழில்.. அதுலயும் நீங்களும் நானும் பார்ட்னரா இருந்து செய்யுற தொழில்!
பொண்டாட்டின்னு நினைச்சு ஒரு வார்த்தை கேக்கலைன்னாலும் ஒரு பார்ட்னரா நினச்சாவது கேட்டுருக்கணுமா வேண்டாமா?”
“சரி.. தப்பு தான்.. இப்ப அவங்க கிட்ட சொல்லிட்டேன்ல. இப்ப என்ன பண்றது?”
உங்கள நம்பி பொண்டாட்டி.. ஒரு பிள்ளைக்குப் பதிலா ரெண்டு பிள்ளைங்கன்னு குடும்பம் ஆகிடுச்சு.
இனியும் அது வராது.. இது வராதுன்னு சொல்லிட்டு, உங்களோட சேர்ந்து எங்களையும் தெருவுல நிறுத்திடாதீங்க” என்று சூடாகவே சொல்லி விட்டாள் மகி!
ராஜு திகைத்துப் போய் விட்டான்!
என்ன இப்படி பேசிட்டா? ஆனா அவ சொல்றதும் நியாயம் தானே! ஒரு வேளை இப்பவும் எதாச்சும் தப்பா போய்ட்டா?
திரும்பவும் நாம தெருவுல தான் நிக்கணும்! அன்னிக்காச்சும் நாம சிங்கிள்! இப்ப அப்படியா..
அய்யோ.. நம்ம புள்ளங்களுக்கு பால் வாங்க கூட காசில்லை.. படிக்க வைக்க கூட காசில்லன்ற நிலைமை வந்தா?
அய்யோ கற்பனை செய்யக் கூட பயமா இருக்கு!
நாம என்ன சொல்லி அவளை கல்யாணம் பண்ணினோம்.
எனக்கு ஒண்ணும் தெரியாது. நீ சொல்றத கேட்டு.. அப்படியே அவ முந்தானைய பிடிச்சுக்கிட்டு மீதி வாழ்க்கைய வாழப் போறோம்னு சொல்லித் தானே என்று அவன் மனசாட்சி பழசைக் குத்தி காண்பித்தது!
“சரி.. என்ன இப்போ.. நான் இப்பவே போய் அண்ணன் கிட்ட நீ சொன்ன மாதிரி தைரியமா நோ சொல்லிட்டு வந்திடறேன்.
அப்பா.. அதுக்குள்ள நீ பேயாட்டம் ஆடிட்டடி!” என்று சொல்லி உறையூர் வீடு சென்றவன்,
மகிக்கு ராமுவும் பிரியாவும் அவர்கள் தொழிலில் உதவிக்கு வருவது பிடிக்கவில்லை என்று அனைவரின் முன்பும் தைரியமாகவே, மகியின் கணவனாக சொல்லி விட்டான் ராஜு.
கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்து,
“என்ன மகிக்கு இன்னமும் எங்க மேல உள்ள கோபம் போகல போலிருக்கு!” என்றாள் ப்ரியா.
“ஆமா.. எனக்கு அவ்வளவு தூரம் சப்போர்ட்டா இருந்து ஆறுதல் சொல்லி அணைச்சுக்கிட்ட மகி இப்படி பேசுவான்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணலங்க” என்றாள் வனிதாவும்.
இப்போது தான் கொஞ்சம் அவள் தெளிவாக ஆரோக்கியம் திரும்பி இருந்தாள்!
“நான் வந்து பேசுறேன்” என்று ராமு கிளம்பினான்.
“மகிக்கு எங்க மேல ஏன் நம்பிக்கை வராம போச்சு” என்று சொல்லிபடி.
—
தன் முன் வைக்கப்பட்ட உறையூர் வீட்டுப் பத்திரம், ராமு வாங்கிப் போட்டிருக்கும் பிளாட்களின் பத்திரங்களை கேள்வியோடு பார்த்தாள் மகி.