அடுத்த நாள் காலை அழகாய் விடிந்தது. சிறு சிறு ஒப்பனை செய்து அழகாய் வந்து நின்றாள் மதுரா! அதற்கு ஈடாகப் பட்டுச் சட்டை வேஷ்டியில் ஆணழகனாக வந்து நின்றான் யூரன்.
இருவரும் மரகத்தின் புகைப்படத்திற்கு விளக்கேற்றி சாமி கும்பிட்டுவிட்டு அங்கிருந்து கார் புக் செய்து நால்வருமாக ரெஜிஸ்டர் ஆபீஸ் புறப்பட்டனர்.
அங்கு கூட்டம் நிறையவே இருந்தது, ஓரமாக அமர்ந்திருந்தனர். கதிர் தெரிந்தவர்களை வைத்துப் பேசிட, இவர்கள் பெயர் சொல்லி அழைத்தனர்.
பதிவாளர் முன் நின்று இருவரும் கையெழுத்துப் போட, அவர்களுக்குச் சாட்சி கையெழுத்துக் கதிரும், ரம்யாவும் போட்டனர். பின் மாலை மாற்றி மதுராவின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டான் மதியூரன். அடுத்த ஜோடி கல்யாணம் செய்யக் காத்திருக்க, இவர்கள் வெளியே வந்து ஓரமாக நின்றனர்.
Advertisement
“அண்ணா! அண்ணி! இப்படி வாங்க” என்று இருவரையும் சேர்ந்து நிற்கச் சொல்லி, இருவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, இருவரது கண்களும் கலங்கிப் போயின.
“எப்பவும் ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்காம இதே காதலோடு நிறைந்த வாழ்க்கையை வாழணும்!” என்று இருவரும் மனதார வாழ்த்தினார்கள்.
பின் அருகே இருக்கும் கோவிலுக்குச் சென்று அங்கே கடவுளின் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு, ஹோட்டலில் சென்று மதிய உணவை உண்டுவிட்டு இல்லம் வந்தவர்கள், ஒருவரை ஒருவர் அணைத்தபடி உறங்கப் போனார்கள். மாலையில் அவனை வம்பாக மாமியார் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனாள்.
Advertisement
இருவரும் வாசலில் நின்று அழைப்பு மணியை அழுத்திவிட்டு நின்றனர். இருவருமே தாயின் கத்தி போன்ற பேச்சை எண்ணிக் கலங்கிப் போயிருந்தாலும், கைகளைக் கோர்த்து இருவரும் தைரியமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டனர்.
Advertisement
மதிவதனிதான் கதவைத் திறந்தாள். மதியூரனைக் கண்டு ஒரு கணம் மகிழ்ச்சி கொண்டவள், அடுத்த கணமே தாலிக் கயிறை வெளியே தொங்கவிட்டபடி நின்றிருந்த மதுராவைப் பார்த்து “அம்மா” என்று அலறினாள்.
“ஏண்டி இப்படி கத்துற?” எனக் கேட்டபடி வெளியே வந்தவருக்கு நெஞ்சில் வலி வராத குறைதான்.
“நா… நாங்க ரெ… ரெண்டு பே… பேரும் இ… இன்னைக்குத் தா… தான் ரெ… ரெஜிஸ்டர் மே… மேரேஜ் ப… பண்ணிக்கிட்டோம்… இ… இனி து… துரா தா… தான் எ… என் ம… மனைவி! இ… இந்த வீ… வீட்டுக்கு ம… மருமகள்!” என்று சொன்னதுமே ஏற்றுக் கொள்ளாத மதிவதனி அங்கிருக்காமல் உள்ளே சென்றுவிட்டாள்.
Advertisement
அவளது தாயோ, “ஏத்துக்க மாட்டேன், ஒருகாலும் இவளை நான் மருமகளா ஏத்துக்க மாட்டேன். தங்கச்சி வாழ்க்கை எப்படியோ போகட்டும், நீ மட்டும் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறியே நீயெல்லாம் அண்ணனா? அவ வாழ்க்கையை நினைச்சுப் பார்த்தியா?”
“அ… அவளுக்கு அ… அவ பி… பிடிச்ச வா… வாழ்க்கை கி… கிடைக்க, நா… நான் ஏ… ஏன் எ… என் வா… வாழ்க்கையை அ… அடகு வை… வைக்கணும்? அ… அது த… தப்பு இ… இல்லை. ஆ… ஆனா எ… எனக்குப் பி… பிடிச்ச பொ… பொண்ணைப் பா… பார்த்து க… கல்யாணம் ப… பண்ணிக்கிட்டது அ… அநியாயமா தெ… தெரியுதா? எ… என்னம்மா நி… நியாயம் இ… இது?”
“அதுக்காக ஒரு அன்னக்காவடிய இந்த வீட்டுக்கு மருமகளா ஏத்துக்க முடியாது. ஒழுங்கா இவளை விட்டுட்டு வா? நான் சொல்ற பொண்ணைத் தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்.”
“இ… இன்னும் உ… உங்க பே… பேச்சை கே… கேட்பேன்னு நி… நினைக்கிறீங்களா?” எனச் சிரித்துக் கொண்டே சொல்ல,
“நல்லாவே இருக்க மாட்டடா நீ! நல்லாவே இருக்க மாட்ட! என் பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்து நீ எப்படி நல்லா வாழ்ந்துடுவியான்னு நானும் பார்க்கிறேன்…” என மகனென்று பாராமல் சாபமிட,
“நீங்க தாய் தானா? இவரை நீங்க தான் பெத்தீங்களா? மகன்னு கூட நினைக்காம அவரை வச்சு வியாபாரம் பண்றீங்க? அவருக்குன்னு ஒரு மனசு இருக்குன்னு எப்போ தான் நீங்க புரிஞ்சுக்கப் போறீங்க?” என இவள் வாய் திறக்க,
“ஏய் ச்சீ, வாய மூடு! உனக்கெல்லாம் எனக்கு எதிரா நின்னு பேசுற அருகதை இல்லை! மூஞ்சிய பாரு! உன்கிட்ட என்ன அழகு இருக்குன்னு இவன் விழுந்தான்னு தெரியல! என்ன போட்டு மயக்கிட்டான்னு தெரியல! ஆனா நீ வேணாம், என் புள்ளை என்கிட்ட வருவான், அவனுக்கு நான் நினைச்சது போல கல்யாணம் பண்ணி வைப்பேன்…”
“நல்லா சீரியல் பார்த்து கெட்டுப் போயிருக்கீங்க போங்க! ஆனா பாருங்க, சீரியல்ல நடக்கிறது இங்க நடக்காது. வேணும்னா பேத்தியோ பேரனோ பெத்துத் தர்றேன், மனசை மாத்திட்டு வந்து பாருங்க! வாங்க போலாம் யூரன்” என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.
“இந்தக் கருவாச்சிக்கு கொழுப்பப் பார்த்தியா?! என்கிட்டயே சவால் விட்டுட்டுப் போறா?! இவ கொழுப்பை அடக்கணும். எப்படி நீங்க சந்தோஷமா இருக்கீங்கன்னு நானும் பார்க்குறேன்” என்று வரிந்துகட்டிக் கொண்டு உள்ளே செல்ல, அங்கு மதிவதனியோ மின்விசிறியில் சேலையைக் கட்டித் தூக்குப்போடுவது போலச் செய்து கொண்டிருக்க, அதைக் கண்ட கற்பகம், “ஐயோ மதி, என்னடி காரியம் பண்ணப் போற நீ? உன்னை விட்டா எனக்கு யாருடி இருக்கா? என்னை விட்டுப் போக முடிவு பண்ணிட்டியே, அம்மா சொல்றதைக் கேளுடி” என்று தலையில் அடித்துக் கொள்ள,
“ம்ம்… நான் சாகப் போறேனா? இல்ல உன் கழுத்துல மாட்டி தொங்க விடப் போறேன்… உன்னைக் கொல்லப் போறேன். உன்னைக் கொன்னுட்டுப் பழியை உன் அருமைப் புள்ளை மேலே போட்டு அவனை ஜெயிலுக்கு அனுப்பப் போறேன். உங்க யாரையும் வாழ விட மாட்டேன், எவனையும் எவளையும் வாழ விட மாட்டேன்…” என்று சபதமிட, கற்பகம் தலையில் அடித்துக் கொண்டார்.
“நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன், அதுபடி செஞ்சா நிச்சயம் உன் கல்யாணம் நடக்கும்” என்று கற்பகம் சொல்ல,
“என்ன ஐடியா?”
“இறங்கி வா சொல்றேன்” என்றார்.
அவள் இறங்கி வர, பக்கத்தில் அமரவைத்துக் கொண்டு அவரது அரதப் பழசான திட்டத்தைச் சொல்ல,
“இது நடக்குமா?”
“கண்டிப்பா நடக்கும், நான் சொல்றது போலச் செய்” என்றிட, அவளோ நம்பிக்கை இல்லாமல் இருபக்கமும் தனது அதிருப்தியைக் காட்ட, அவரோ சிறந்த திட்டம் என்று இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார்.
கண்டிப்பாக! உங்கள் விருப்பப்படி நாயகன் யூரன் பேசும் அனைத்து
மெத்தையில் சிம்பிளான சிறு அலங்காரம் செய்யப்பட்டிருக்க, ஆவலோடும் காதலோடும் இருவரும் அமர்ந்திருந்தனர்.
அவன் அவளையே விழுங்குவது போலப் பார்க்க, அவளது பார்வையின் வீரியத்தால் அவளுக்கோ உடலெல்லாம் செவ்வானம் போலச் சிவக்க ஆரம்பித்தது.
‘ஏன் யூரன்? இப்படி பார்த்து வைக்கிறீங்க!’ என அவள் மனதோடு பேச,
“இல்லை… நான் கேட்கணும்” என்று அவள் சிணுங்க, அவளைப் பக்கவாட்டில் கிடத்தி, கையை ஊன்றித் தாங்கியபடி என்னவென்று கேட்டான்.
“இல்ல! என்னை ஏன் உங்களுக்குப் பிடிச்சது யூரன்? உங்களுக்கு உதவி செய்ததாலையா? சொல்லப்போனா நீங்களும் நானும் பிளாக் அண்ட் ஒயிட் கப்பிள். உங்க நிறத்துக்கு நான் நிச்சயம் பொருத்தமே இல்லை. என்னை நீங்க தோழியாக்கூட நினைச்சிருக்கலாம். ஏன் என் மேல காதல் வந்தது உங்களுக்கு?”
பேச்சுவார்த்தைகள் ஏதுமின்றி, முத்தங்களும், சிணுங்களும், மூச்சிரைக்கும் சத்தங்கள் மட்டுமே அங்கு ஒலித்தன.
இங்கோ, கற்பகத்தின் திட்டப்படி, தனக்கு நெஞ்சு வலி என்று சொல்லி அண்ணனுக்கு விஷயத்தைச் சொன்னால் அவன் அடித்துப் பிடித்து ஓடி வருவான், ஒரு வாரம் அவனை இங்கேயே வைத்து, உடல் நிலையைக் காட்டி அவளை விட்டு வரச் சொல்லலாம் என்று எண்ணியிருக்க… அவனோ அவளோடு ஒன்றெனக் கலந்துவிட்டான்.
மதிவதனி அவனுக்கு அழைக்க, அதுவோ சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.
“உன் மகன் உன்னை விடத் தெளிவுதான்… எனக்கு நம்பிக்கை இல்லை, எனக்கும் வருணுக்கும் கல்யாணம் நடக்கும்னு… இன்னும் நான் சேலையைக் அவிழ்க்கல. அதனால நீ வா… உன்னைச் சாகடிச்சுட்டு, பழி அவன் மேல போட்டு, அவனை வாழவிடாம பண்றேன்!” என்று வன்மமாகப் பேச, கற்பகமே பயந்துபோனார்.
“இப்போ என்ன உனக்கு? அருணுக்கும் உனக்கும் கல்யாணம் நடக்கணும்… அதானே! ரெண்டு பேருமே மேஜர்! அவரை வீட்டை விட்டு வரச் சொல்லி, நான் உனக்கும் அவருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்… கல்யாணம் பண்ணிட்டு போய் நின்னா ஏத்துக்கிட்டுதானே ஆகணும்… அவருக்குச் சம்மதமானு கேட்டுச் சொல்லு, பண்ணி வைக்கிறேன்” என்றார்.
“அம்மா… நிஜமாவா?”
“ஆமாடி, இனி யாரையும் நம்புறதா இல்லை! மாப்பிள்ளைக்குச் சம்மதமானு கேளு, நான் பண்ணி வைக்கிறேன்” என்றார்.
இதோ அலைபேசியை எடுத்துக்கொண்டு அருணிடம் பேசச் சென்றாள். முதலில் மறுத்தவன், பின் ஒப்புக்கொண்டான். அதைத் தாயிடம் சொல்ல, அவரோ தன் மகளின் வாழ்க்கையை எண்ணிக் கற்பனைக் கோட்டை கட்டினார். ஆனால், அதன் பின்விளைவுகள் தெரியாமல், எப்படியாவது மகளை அந்த வீட்டில் சேர்த்துவிட நினைத்துத் திருமணம் செய்து வைக்கத் துடிக்கிறார். அது அவர் தலையிலேயே மண்ணள்ளிப் போட்டுக் கொள்வது போல ஆகப்போகிறது என்பது அவருக்குத் தெரியவில்லை.
மறுநாள் காலையில் தலைக்குக் குளித்துவிட்டு, மரகதத்தின் புகைப்படத்தின் முன்னே நின்று, ‘ நீங்க ஆசைப்பட்டபடி உங்கள் மகள் வாழ்வதைப் பாருங்க’ நின்று கண்கள் நீர்க்க மனதோடு பேசி, வணங்கிவிட்டுச் சமையலறைக்குள் புகுந்தாள் மது.
வாசல் கோலத்தைக் கண்டு மது எழுந்ததை உறுதி செய்த ரம்யா, அவளுக்கு அழைத்தாள்.
“என்ன மது… நேத்து என்ன ஆச்சு? ம்ம் வா?” என்று அவளை வெட்கப்பட வைத்தாள்.
“ம்ம்…” என அவள் வெட்கப்படுவதிலிருந்தே ரம்யா புரிந்து கொண்டாள்.
“ஆ…” என மது அலற, “என்ன ஆச்சு மது?” என ரம்யா பதற்றமாகக் கேட்க, “பால் சட்டி சுட்டுடுச்சு அண்ணி!” என்றவள், தன் இடையைக் கிள்ளி வைத்துவிட்டுப் பக்கவாட்டில் அமைதியாக நிற்கும் கணவனை முறைத்தாள்.
“சரி, நீ வேலை பாரு… அப்புறம் பேசுறேன்” என்று ரம்யா போனை வைக்க… உடனே மதுவும் அவனது புஜத்தைக் கிள்ளிவிட்டு, “போன் பேசிட்டு இருக்கேன்ல… அவங்க என்ன நினைப்பாங்க?” என்றாள்.
அவனை முறைத்து அவள் திரும்ப, அவனோ அடுப்பை அணைத்துவிட்டு அவளைத் தூக்கினான். அறைக்குள் செல்லக்கூடப் பொறுமையின்றி, கூடத்தில் இருந்த நீள் இருக்கையில் அவளைக் கிடத்தி மேலே படர்ந்தான்.
“யூரன்… குளி…” என்று அவள் சொல்ல முயல, உதடுகளுக்குள் வார்த்தைகள் புதையுமாறு அவளை விழுங்கிக் கொண்டான். நீள் இருக்கையிலிருந்து கீழே விழுந்து புரண்டு, நேரம் காலம் பார்க்காமல் கூடலை நிகழ்த்திக் கொண்டிருந்தான் யூரன்! அவளோ அவனது காதலில் திக்குமுக்காடிப் போனாள்.