“ம்ஹூம்… இப்ப இருக்குற புள்ளைங்களுக்கு நம்ம சொல்லுறது எங்க காதுல வாங்குதுங்க?” என்று முணுமுணுத்தபடி இவரும் பார்வையை மேடைக்குத் திருப்பினார்.
“அக்கா… எங்க உங்க பையனைக் காணல?” என்று அமலா கேட்க,
“இருடி… நானும் அவனைத்தான் தேடுறேன். ஏதோ கட்டபொம்மன் நாடகத்துல இருக்கான்னு சொன்னான்டி.” என்று மேடையைப் பார்த்துக்கொண்டே பதில் சொன்னாள் வைதேகி.
“அடுத்து நிகழ்ச்சியாக, ஆங்கிலேயரை எதிர்த்து போராடின கட்டபொம்மன் கதை உங்களுக்காக மேடையில். ஆறாம் வகுப்பு மாணவர்கள் நடத்திக் காட்டப் போறாங்க.” என்று ஆங்கில ஆசிரியர் சொன்னதும்,
“அமலா… என் பையன் வரப்போறான்டி!” என்று வைதேகி சந்தோஷத்துடன் சொல்ல,
மேடையின் நடுவில், அரச அரியணை போல் அலங்கரிக்கப்பட்ட நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் கட்டபொம்மன்.
முறுக்கு மீசை, தலையில் கிரீடம், கையில் வாள் என அசத்தலாக இருந்த அவனைப் பார்த்ததும் கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது.
அப்போது ஆங்கிலேய அதிகாரியாக வேடமிட்ட மாணவன் முன்னே வந்து,
“அவ வர மாட்டா… அந்தக் கொடுப்பினை எனக்கு இல்லை. அவளை காலத்துக்கும் தள்ளி நின்னே வலியைச் சுமக்கணும்னு என் தலையில எழுதி இருக்கு போல…” என்று சொல்லிக்கொண்டே கண்களைத் துடைத்தாள்.
வேல்விழியின் நடனம் மட்டுமல்ல… அவள் யாரையோ தேடித் தேடி அலைந்த கண்களையும் கவனித்தபடி, உள்ளுக்குள் சிறு புன்னகையை அடக்கிக்கொண்டு இவர்களை நோக்கி வந்தான் வெற்றி.
“என்னக்கா… வேலு டான்ஸ் பார்த்து சந்தோஷப்பட வரவச்சா, நீ அழுகுற?” என்றான் வெற்றி.
“நா அழலடா… இது சந்தோஷத்துல வந்த கண்ணீர்டா தம்பி…” என்று அவன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள் தேவகி.
“அவளை… என் கூட பேச சொல்லுடா…” என்று ஏக்கமாகக் கேட்டாள்.
அந்த ஏக்கத்தின் ஆழம் வெற்றிக்குப் புரிந்தலும் ஒரு நொடி அமைதியாக இருந்தவன்,
“பேசுவாக்கா… அவளுக்கும் கொஞ்சம் நேரம் கொடு. இத்தனை வருஷம் மனசுல இருந்ததை ஒரே நாள்ல ஏத்துக்க முடியாது…” என்றான் மெதுவாக.
“போயிட்டு வரோம் வெற்றி…” என்று சொல்லிக்கொண்டு இருவரும் கிளம்பினர்.
கண் பார்வையிலிருந்து அவர்கள் மறையும் வரை அங்கேயே நின்றிருந்தான் வெற்றி.
திரும்பியவன் பார்வையில், வேல்விழி கண்ணீருடன் ஏதோ முனீஸ்வரியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
“ஓ… கதை இப்படி போகுதா? வரேன்டா பங்காளி… என் கைய ஒடைக்கப் பார்த்த இல்லை , உன் நிம்மதியை நா அழிக்குறேன்டா…” என்ற ராஜனின் நக்கல் பார்வை வேல்விழி மீதே இருந்தது.
இங்கு இவளின் புலம்பலைக் கேட்க முடியாமல், “அடியே! நிறுத்துடி… உன் கூட தெரியாத்தனமா ஜோடி சேர்ந்ததுக்கு, போதும் போதும்னு சொல்லுற அளவுக்கு புலம்பிட்ட. இப்ப பரிசு கொடுக்கப் போறாங்கடி!” என்றாள் கடுப்புடன்.
“போடி… மாமா வரவேயில்லை. இங்க எல்லாரும் அவங்கவங்க குடும்பத்துல இருந்து வந்திருக்காங்க. எனக்குன்னு இருக்குறது பாட்டியும், மாமாவும் தான்…” என்று மூக்கைச் சிந்தி, அருகிலிருந்தவள் புடவையில் துடைத்தாள்.
“அடியே! இது எங்கம்மா புடவைடி! இதுல போய் மூக்குசளி துடைக்குற? ஏன், உன் வேஷ்டில துடைக்க வேண்டியதுதானே?” என்றாள்.
“உங்கூட ஒரே இம்சைடி!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் முனீஸ்வரி.
அடுத்து நிகழ்ச்சி முடிவுக்கு வர, விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதற்காக தலைமை ஆசிரியரும், ஊர் தலைவரும் மேடையை நோக்கி வந்தனர்.
கீழே அமர்ந்திருந்த மாணவர்கள் உற்சாகமாக கைதட்ட, தங்கள் பெயர் எப்போது அழைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஒவ்வொருவரின் முகத்திலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது…
ஒவ்வொரு பெயராக சொல்லி பரிசுளை தர, அங்கே கைதட்டல் சத்தம் பலமாக இருந்தது..
கடைசியாக, முனீஸ்வரி, வேல்விழி பெயர் வரவும்..
இருவரும் சேர்ந்து வந்து பரிசுகளை வாங்கிக்கொண்டு மேடையை விட்டு கீழே ! இறங்க சிரித்த முகத்துடன் நின்றிருந்தான் வெற்றி..
அதுவரை சோகமாக சுற்றியவள். மாமனை கண்டதும் மகிழ்ச்சியில் , அவன் கைகளை பிடித்துக்கொண்டாள்..
அவனும் சிரிப்புடன் நிற்க,
“இங்க பாரு மாமா, இவளை இப்படியே கூட்டிட்டு போயிடு.. கூட இருந்த கொஞ்ச நேரத்துல என் உசுரை வாங்கிட்டா,” என்ற முனீஸ்வரி அவளை அங்கேயே விட்டுட்டு கிளம்பினாள்..
இருவருக்கும் வார்த்தை வரவில்லை, சிரிப்புடனே நின்றிருக்க,
“இவர்களின் மகிழ்ச்சியைக் கண்ட சாமிக்கண்ணுவின் முகத்தில் குரூரமான சிரிப்பு தோன்றியது.”