அவரும் சரின்னு சொல்லி , பணத்தை வாங்கிக்கொண்டு வண்டியை திருப்பினார்..
“வெற்றி வண்டியை பிள்ளையார் கோவில் பின்னே நிறுத்தி லாக் பண்ணிட்டேன்.. அங்க பக்கத்துலையும் சொல்லிட்டு வந்தேன்” என்றான் மாறன்..
“சரிடா” என்றவன்.. “நீங்க வாங்க” என்று அவன் முன்னே நடக்க அவனை தொடர்ந்து மற்ற மூவரும் நடந்தனர்..
நடந்து போகவே வழியில்லாத நிலை தான்.. வண்டிகள் அனைத்தும் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்திக் கத்திக் கொண்டிருந்தார்கள்.
“ஏலே! நாங்க வேலை வெட்டிக்கு போகவேணாவ, இப்படி போக வழியில்லாம வண்டியை நிறுத்திருக்கிங்க” என்று பைக்காரன் ஒரு பக்கம் கத்தினான்..
“ம்மா.. ம்மா” எனக் நெல்மூட்டை ஏறி இருந்த காளை ஒருபக்கம் கத்தியது..
இப்படியாக ஒவ்வொருவரும் கத்திக்கொண்டிருந்த , சின்னச்சின்ன இடைவெளியில் மெல்ல மெல்ல அழைத்து வந்தான் வெற்றி..
இவர்கள் அடுத்த பக்கம் நகர இருந்த நேரத்தில் , ஒரு இளம்பெண், ஆடவன் கைபிடித்து காவல் நிலையத்திலிருந்து வெளியே ஓடி வந்தாள்..
இருவரையும் பார்த்ததும் இதுவரை கத்திக்கொண்டிருந்தவர்கள். இவர்களை பார்த்ததும் அடுத்து என்ன என்று அவர்கள் பக்கமே பார்வையிருந்தது..
கண்ணீரோடு அவள் இருக்க, அவள் கைகளை இருக்கமாக பிடித்துக் கொண்டிருந்தான் அந்த இளைஞன்..
காவல் நிலையத்திலிருந்து மற்றவர்களும் ஓடி வந்தனர்..
“வாத்தா, அவன் உனக்கு வேணாம்.. அப்பனாத்தா இல்லாதவன்டி உன்னை என்னவும் பண்ணிடுவான்டி வந்திடுடி,” என்று மகளின் கைகளை பற்றினார் அவள் அன்னை..
வெள்ளை வேஷ்டி, சட்டையுமாக இன்னும் நாலைந்து பேர் வெளியே வந்தனர்..
காவலர்கள் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தனர்..
பெரிய இடம் அவர்களுக்கானதை குறைவில்லாம செய்ததால்,
“என் தாயி இல்லை வாம்மா, உனக்கு அடுத்து ரெண்டு பொட்டை புள்ளைங்க இருக்கும்மா.. நீ தான் அவங்களுக்கு முன்னோடியா இருக்கணும் இப்படி எங்க மானத்தை வாங்கதத்தா” என்று தந்தை ஒரு பக்கம் கண்ணீர் வடித்தார்..
அவளும் பெற்றவர்களின் நிலையை கண்டு அழுகை வந்ததே தவிர பதில் சொல்ல வாய் வரவில்லை,
“வாடி, உன்னை பெத்ததுக்கு எங்களை இப்படி தெருவுல நிக்க வச்சிட்டியே?” என்று ஆத்திரமாக கத்தினார்..
“இங்க பாருங்கம்மா, உன் அப்பம்மா கூட போறதுதான் உனக்கு நல்லது..” என்று வெள்ளை வேட்டிக்கரர்களின் மிரட்டலுடன் நின்றனர்..
“முடியாது.. அவ இப்ப மெஜர் அவளுக்கு என்ன தேவைன்னு முடிவு எடுக்குற உரிமை அவளுக்கு இருக்கு” என்று அவனும் பல்லைக்கடித்தான்..
“ஐய்யோ ஐய்யோ” என்று அவள் முதுகிலே ரெண்டு அடியை போட்டார் ஆத்திரம் தீரும்வரை,
அவளை தன் பக்கமாக இழுத்துக் கொண்டான் அவனும்..
“பாருய்யா பாரு நல்லா பாரு எம்மக படிக்க கலேசுக்கு போறான்னு பெருமை பட்டியே! பாரு எப்படி நம்ம முகத்துல கரியை பூசிட்டு நிக்குறான்னு” என்று ஆவேசமாக கத்திக்கொண்டு திரும்பியவர் பார்வையில் மஞ்சள் கயிறு பட்டது..
எந்த வேகம் கொண்டு இழுத்தாரோ ஒரே இழுவில் அந்த மஞ்சள் கயிறு கையோடு வந்தது..