பிடித்தம் 33
வெற்றிவேல் புகழ்வேந்தன் அலுவலகத்தில் இருந்து வண்டியை கிளப்பிய போது சந்தோஷ் அவனை அழைத்தான். வெற்றிவேல் வண்டியில் இருந்தபடியே அழைப்பை எடுத்துப் பேசினான்.
சந்தோஷ், “மனோஜ் அதிகமா போறது அவரோட சாப்ட்வேர் கம்பெனி அண்ட் லாஸ்ட் சிக்ஸ் மன்த்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் ஆபீஸ்ஸும் அதிகமா போறார்.. மனோஜ் காணாமல் போன அன்னைக்கு ஈவ்னிங் மெயின் ஆபீஸ்ஸில் தான் இருந்து இருக்கார்.. அன்னைக்கு சாயுங்காலம் 6.45க்கு மெயின் ஆபீஸ்ஸில் இருந்து அவரோட காரில் கிளம்பி இருக்கார்.. கேட் செக்குரிட்டி சொன்ன தகவல் இது.. மிஸ்டர் கிருபாகரன், மனோஜ் அண்ட் பிரசாத் வந்து போறதுக்கு ரெகார்ட் மெயின்டேன் பண்றது இல்லை.. ஸோ எப்படி சரியா டைம் சொல்றீங்க னு கேட்டதுக்கு அன்னைக்கு டியூட்டி முடிச்சு கிளம்புற நேரத்தில் தான் மனோஜ் கிளம்பினதா சொல்றார்.. ரெண்டு கேட் செக்குரிட்டீஸ்.. ஒருத்தர் காலை 9 மணியில் இருந்து நைட் 9 மணி வரை இருப்பார்.. இன்னொருத்தர் நைட் 9 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 9 மணி வரை இருப்பார்.. டே டைம் கேட் செக்குரிட்டி அன்னைக்கு அவர் மனைவிக்கு உடம்பு சரியில்லை னு சீக்கிரம் கிளம்பி இருக்கார்.. 6.30க்கு வரேன் னு சொன்ன நைட் கேட் செக்குரிட்டி 6. 45க்கு தான் வந்திருக்கார்.. அப்போ தான் மனோஜ் காரில் கிளம்பி இருக்கார்”
“அங்கிருந்து எங்கே போனார் னு தெரிந்ததா?”
“இல்லை சார்.. மனோஜை கடைசியா பார்த்தது மெயின் ஆபீஸ் கேட் செக்குரிட்டி தான்.. இங்கிருந்து கிளம்பி அவர் வேற எந்த ஆபீஸ் அண்ட் சைட் போன மாதிரி தெரியலை..”
“நல்லா விசாரிச்சிட்டியா?”
“எல்லா இடமும் நேரில் போய் விசாரிக்கலை.. மனோஜ் பி.ஏ வச்சு போன் பண்ணி கேட்கச் சொன்னேன்.. அப்போ அவர் ஏற்கனவே கேட்டுட்டதா சொன்னார்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பிரசாத் வந்து கேட்டிருக்கார்.. ஸோ மனோஜ் பி.ஏ எல்லா இடத்துக்கும் போன் பண்ணி விசாரிச்சு இருக்கார்”
“ஓகே.. தேவைப்பட்டா நேரில் போய் விசாரிச்சுக்கலாம்.. பிரசாத் பத்தி விசாரிச்சியா? பிரசாத் இப்போ எங்க இருக்கார்?”
“பிரசாத் அதிகமா போற இடமும் சாப்ட்வேர் கம்பெனி தான்.. அதுக்கு அடுத்து ஸ்டீல் இண்டஸ்ட்ரி.. பிரசாத் தான் மனோஜை விட திறமைசாலினும் கொஞ்சம் ஷார்ட் டெம்பர்டுனும் சொல்றாங்க.. மனோஜை விட பிரசாத் தான் திறமைசாலினாலும் சாப்ட்வேர் கம்பெனியை பொறுத்தவரை டிசைடிங் அதாரிட்டி மனோஜ் தான்.. சாப்ட்வேர் கம்பெனியில் மட்டும் மிஸ்டர் கிருபாகரன் தலையீடு இருக்காது போல, சாப்ட்வேர் கம்பெனி மனோஜும் பிரசாத்தும் சேர்ந்து நடத்துறது.. மத்த இடத்தில் டிசைடிங் அதாரிட்டி மிஸ்டர் கிருபாகரன் தான்.. மிஸ்டர் கிருபாகரன் ஐ.டி என்குவரியில் இருந்தப்ப ஓவராலா எல்லாத்தையும் பார்த்துக்கிட்டது பிரசாத் தான்.. பிரசாத் பி.ஏ-வை விசாரிச்சதில் இன்னொரு முக்கியமான விஷயம் தெரிந்தது.. மிஸ்டர் புகழ்வேந்தன் மித்ராணி கல்யாணம் நடந்த அடுத்த ரெண்டு நாள் பிரசாத் எங்க இருந்தாருனே யாருக்கும் தெரியலை.. வந்ததுக்கு அப்பறமும் கொஞ்சம் டிஸ்டர்ப்டா தான் இருந்து இருக்கார்.. ஆனா அடுத்தடுத்து வந்த பிரச்சனையில் சூழ்நிலையை கையில் எடுத்து எல்லாத்தையும் பார்த்து இருக்கார்”
“என்ன பிரச்சனை?”
புகழ்வேந்தன் ஏற்படுத்திய பிரச்சனைகளை பற்றி கூறியவன், “எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் பிரச்சனை வந்திருப்பதை பார்த்தால்………..”
“வேணும் னு செய்திருக்காங்க.. SK இண்டஸ்ட்ரீஸ் அழிவு தான் அவங்க நோக்கமா இருக்கணும்.. அண்ட் இதையெல்லாம் செய்தது மிஸ்டர் புகழ்வேந்தன்”
“எஸ் சார்.. அப்படி தான் பிரசாத் பி.ஏ அண்ட் மனோஜ் பி.ஏ சொன்னாங்க”
“இவங்களுக்கு புகழ்வேந்தன் தவிர வேற யாரும் எதிரிங்க இருக்காங்களா?”
“எஸ் சார்.. விவேக்(சந்தோஷ் கீழ் வேலை பார்க்கும் சப்-இன்ஸ்பெக்டர்) கிட்ட மாரீஷ்வரன் சார் டீல் பண்ண மிஸ்டர் கிருபாகரன் சம்பந்தப்பட்ட கேசஸ் பத்தி டிடேல்ஸ் கேட்டிருந்தேன்.. அதையெல்லாம் வச்சு பார்க்கும் போது மிஸ்டர் கிருபாகரன் நேர்மையானவரா தெரியலை.. பல இடங்களில் குறுக்கு வழியில் போய் தான் உயர்ந்து இருக்கார்.. சில வளர்ந்து வந்த சின்ன கம்பெனீஸ் மிரட்டியோ பணம் கொடுத்தோ வாங்கி இருக்கார்.. ஆறு மாசத்துக்கு முன்னாடி ப்ராபர் அப்ரூவல் வாங்காம கட்டிட்டு இருந்த பில்டிங் இடிந்து விழுந்ததில் எட்டு பேர் இறந்திருக்காங்க.. அதில் ரெண்டு குழந்தைங்க.. இந்த கேசில் நிறைய செலவு பண்ணி மாரீஷ்வரன் சார் உதவியோடு கேசை மூடி மறைத்து ஒன்னுமில்லாம பண்ணியிருக்கார்.. இது போக கொஞ்ச நாள் முன்னாடி விபத்தில் இறந்த அதிகாரி சேகரன் விஷயத்திலும் இவர் மேல் சந்தேகம் இருக்குது னு சொன்னான்”
“விவேக்கை நல்ல ட்ரேன் பண்ற போல! மிஸ்டர் கிருபாகரன் பத்தி பக்காவா டிடேல்ஸ் கலெக்ட் பண்ணி இருக்கான்”
“தன்க் யூ சார் பட் உங்க அளவுக்கு வர முடியாது” என்றவன், “கமிங் பேக்(back) டு தி கேஸ்.. மிஸ்டர் கிருபாகரனை வச்சு பார்த்தா எதிரிங்க னு நிறைய பேரை சந்தேகப்படலாம்.. பட் மனோஜ் கிட்ட நேரிடையா போட்டி போடுறது ‘ட்ரீம் வொர்க்ஸ்’ கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஓனர் மிஸ்டர் தர்மராஜ் அண்ட் ‘பளை(FLY) ஹை(HIGH)” சாப்ட்வேர் கம்பெனி ஓனர் மிஸ்டர் கல்யாண்.. ஸோ முதல்ல இவங்களை விசாரிக்கலாம்”
“நான் மிஸ்டர் கிருபாகரன் வீட்டில் வேலையாட்கள் இன்சார்ஜ் கிட்ட விசாரிச்சப்ப பிரசாத் கல்யாணத்தன்னைக்கு வீட்டில் சண்டை போட்டதா சொன்னார்.. என்ன னு சொல்றதுக்கு முன்னாடி மிஸ்டர் கிருபாகரன் வந்துட்டார்.. நீ பிரசாத் பிரெண்ட்ஸ் கிட்ட அந்த கல்யாணத்தை பத்தி விசாரி”
“ஓகே சார்.. RR Solutions சேர்ந்த மிஸ்டர் ராகுல் பிரசாத் க்ளோஸ் பிரெண்ட்.. அவரைப் போய் பார்க்கிறேன்”
“ஓகே.. நான் மிஸ்டர் புகழ்வேந்தனை விசாரிச்சிட்டேன்.. இப்போ அவர் மனைவியை விசாரிக்க கிளம்பிட்டேன்”
“ஓகே சார்” என்றதும் அழைப்பைத் துண்டித்தவன் வண்டியை கிளப்பினான்.
மித்ராணி அலுவலக அறை:
கதவை தட்டி அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே சென்ற வெற்றிவேல், “குட் அப்ட்டர்நூன் மிசஸ் மித்ராணி”
“குட் அப்ட்டர்நூன் ACP சார்.. உட்காருங்க”
“நான் வந்திருக்கிற காரணம் தெரியும்னு நினைக்கிறேன்”
“எஸ்.. சொல்லுங்க”
“உங்க மேரேஜ் லவ் மேரேஜ் ஆர் அரேஞ்டு மேரேஜ்?”
“வீட்டில் அரேஞ் பண்ண மேரேஜ்ஜில் நான் லவ் பண்றவரை மேரேஜ் பண்ணிக்கிட்டேன்”
“நேரிடையா தெளிவான பதிலை சொல்லுங்க”
“நான் அப்படி தான் பதில் சொன்னேன் னு நினைக்கிறேன்”
“ஸோ உங்க மேரேஜ் அரேஞ் கம் லவ் மேரேஜ் னு சொல்றீங்களா?”
“ஒரு வகையில் அப்படியும் சொல்லலாம்.. வேந்தன் அரேஞ் பண்ணபடி நடந்த லவ் மேரேஜ்”
“மிசஸ் மித்ராணி ஏன் இப்படி குழப்புறீங்க?”
“நான் என்ன குழப்பினேன்?”
“முதல்ல வீட்டில் அரேஞ் பண்ண மேரேஜ் னு சொன்னீங்க இப்போ மிஸ்டர் புகழ்வேந்தன் அரேஞ் பண்ணது னு சொல்றீங்க.. எது உண்மை?”
“எல்லாமே உண்மை தான்.. வீட்டில் எனக்கும் மனோஜுக்கும் மேரேஜ் அரேஞ் பண்ணாங்க.. அந்த அரேஞ்மென்ட்டை என் வீட்டில் இருக்கிறவங்களுக்கு தெரியாம எங்க மேரேஜ்ஜா வேந்தன் அரேஞ் பண்ணார்.. பைனலி எங்க விருப்பம் போல எனக்கும் வேந்தனுக்கும் மேரேஜ் ஆச்சு”
“ஸோ நீங்க மிஸ்டர் புகழ்வேந்தனை லவ் பண்றீங்க?”
“நான் மட்டுமில்லை அவரும் என்னை லவ் பண்றார்”
“முதல்லேயே நேரிடையா நீங்க மிஸ்டர் புகழ்வேந்தனை லவ் பண்றீங்க னு சொல்லி இருக்கலாமே?”
“நீங்க இப்போ தானே இந்த கேள்வி கேட்டீங்க! முதல்ல மேரேஜ் பத்தி தானே கேட்டீங்க”
“ஓகே லீவ் இட்.. ஏன் இப்படி கடைசி நேரத்தில் மாப்பிள்ளையை மாத்தி கல்யாணம் செய்தீங்க? முறையா செய்திருக்கலாமே?”
“இப்பவும் எங்க கல்யாணம் முறையா தான் நடந்தது”
மித்ராணியை தீர்க்கமாக பார்த்த வெற்றிவேல், “மிசஸ் மித்ராணி.. நான் அதை சொல்லலை னு உங்களுக்கு தெரியும்”
“எதை சொல்லலை னு? என்னை சொல்லிட்டு நீங்க நேரிடையா பேச மாட்டிக்கிறீங்க!”
“ஆல்ரைட்.. என்னோட கேள்வி.. ஏன் கடைசி நேரத்தில் மாப்பிள்ளை மாத்தி கல்யாணம் செஞ்சீங்க?”
“இதுக்கான பதிலை வேந்தன் உங்க கிட்ட சொல்லலையா?”
“நான் உங்க பதிலை கேட்டேன்”
அவள் சிறு தோள் குலுக்கலுடன், “என் அம்மா எங்க காதலை ஏத்துக்கலை.. ஸோ இப்படி பிளான் பண்ணோம்”
“நீங்களும் சேர்ந்து தான் பிளான் பண்ணீங்களா?”
“இல்லை.. வேந்தன் பிளான் பண்ணார்”
“அப்பறம் ஏன் பிளான் பண்ணோம் னு சொன்னீங்க?”
“கல்யாணத்தன்னைக்கு வேந்தன் எனக்கு தாலி கட்டுவார் னு மட்டும் எனக்கு தெரியும்.. மத்தபடி என்ன பிளான் னு எனக்குத் தெரியாது”
“நம்புறது போல் இல்லையே?”
“எதை?”
“நீங்க சொல்லும் கதையை”
“இது கதை இல்லை.. எங்க லைப்..” என்றவள் மேல்பார்வை பார்த்தபடி, “வேந்தன் சொன்னப்ப நம்பினீங்க!”
“நான் நம்பினேன் னு எப்போ சொன்னேன்? அவர் சொன்னதை கேட்டுக்கிட்டேன்”
“நடந்ததை சொல்லிட்டேன்.. நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்.. எங்க கல்யாணத்துக்கு வந்த யாரைவேனாலும் கேளுங்க.. ஏன்! உங்க தங்கையை கேளுங்களேன்!”
“தேவைபட்டா என் தங்கையை இல்ல உங்க தோழியை நிச்சயம் கேட்பேன்”
அவள் மென்னகையுடன், “எனி மோர் குவெஸ்டீன்ஸ்?”
“எஸ்.. மனோஜ் காணமல் போன அன்னைக்கு கடைசியா அவரிடம் பேசியது நீங்க தான்.. என்ன பேசுனீங்க னு தெரிந்துக்கலாமா?”
“தெரிந்துக்க கூடாது னு சொன்னா, மேல கேட்காம விட்டுடுவீங்களா?”
வெற்றிவேல் முறைப்புடன், “என்ன பேசுனீங்க னு சொல்லுங்க”
“பேசலை.. திட்டினேன்.. அன்னைக்கு எங்க கார்மென்ட்டில் பயர் அக்சிடென்ட்.. உண்மையில் அது திட்டமிட்டு நடத்தப்பட்டது.. வேந்தன் அசிஸ்டென்ட் பயர் அக்சிடென்ட் நியூஸ் கேட்டு கார்மென்ட் போனப்ப, கார்மென்ட் கிட்ட வச்சு எதிரில் மனோஜ் போனதை பார்த்ததா சொன்னார்.. ஸோ மனோஜுக்கு போன் பண்ணி ஏன் உயிர்களுடன் விளையாடுறான் னு கேட்டு திட்டினேன்”
“அசிஸ்டென்ட்னா மிஸ்டர் சதீஷ் ஆ?”
“ஆமா”
“மனோஜ் மேல் ஏன் கம்ப்ளைன்ட் கொடுக்கலை?”
“ஆதாரம் இல்லை”
“ஸோ மனோஜ் அதை செய்திருப்பார் என்பது உங்கள் யூகம் மட்டுமே!”
“யூகத்தை வைத்து தானே நீங்களும் குற்றவாளிகளை பிடிக்கிறீங்க?”
“ஸோ நீங்க திட்டியதில் மனம் வருந்தி அவரே எங்கேயாவது போயிருக்கலாம் இல்லையா?”
“எனக்கு எப்படி தெரியும்? அதை கண்டு பிடிக்க தானே நீங்க இருக்கீங்க”
“ஒருவேளை உங்க வார்த்தைகள் தந்த வலியில் அவர் தப்பான முடிவை எடுத்து இருந்தால்?”
“ஒரு பிஸ்னெஸ் மேன் ஒரு போன் காள் திட்டுக்கு தப்பான முடிவை எடுப்பார் னு நீங்க சொல்லி தான் எனக்குத் தெரியும்.. சப்போஸ் நீங்க சொல்றபடி உண்மையிலேயே அவன் தப்பான முடிவை எடுத்து இருந்தாலும் அதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்? ஒருத்தன் தப்பு பண்ணா திட்டவே கூடாதா? தண்டனைகள் இருந்தே எவ்வளவோ தப்புகள் நடந்துட்டு தான் இருக்குது.. இதில் திட்டக் கூடாது னு சொன்னால்!!!!!!” என்று கூறி நிறுத்தினாள்.
“அப்போ மிஸ்டர் புகழ்வேந்தனையும் திட்டுனீங்களா?”
அவள் புருவசுளிப்புடன், “எதுக்கு?”
“அவர் செய்த தப்புக்கு?”
“திட்டுற அளவுக்கு அவர் என்ன தப்பு செய்தார்?”
“உங்க மாமா பிஸ்னெஸ் கொலாப்ஸ் ஆனதில் மிஸ்டர் புகழ்வேந்தன் பங்கு இல்லையா?”
“அப்படியா? அதுக்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா?”
“ஆதாரம் இல்லை.. யூகம் தான்”
“ஒருவேளை வேந்தன் உண்மையிலேயே ஏதேனும் தப்பு பண்ணா நிச்சயம் திட்டுவேன்.. உரிமையா தண்டனை கூட கொடுப்பேன்.. ஆனா என் வேந்தன் தப்பு பண்ண மாட்டார்”
“ஓகே.. திரும்ப சந்திக்கலாம்” என்றபடி வெற்றிவேல் எழ,
அவனை தீர்க்கமாக பார்த்த மித்ராணி, “மனோஜ் கடைசியா பேசிய போன் காள் என்னோடதா இருக்கலாம் ஆனா அவன் என்னிடம் தான் கடைசியா பேசினான் னு சொல்ல முடியாது.. என்னுடன் பேசிய பிறகு நேரில் வேற யாருடனும் பேசி இருக்கலாமே?”
அவளது புத்திக் கூர்மையை மனதினுள் மெச்சியபடி, “வாய்ப்பிருக்கிறது.. விசாரணையில் எப்படியும் உண்மை வெளி வந்திடும்” என்றவன், “சரி.. பார்க்கலாம்” என்று கூறி விடை பெற்றான்.
——————————————————————————————————————————————
வெற்றிவேல் மித்ராணியை விசாரித்துக் கொண்டிருந்த நேரத்தில் அர்ஜுன் புகழ்வேந்தன் வீட்டில் கலைவாணி மற்றும் கமலாவை விசாரித்துக் கொண்டிருந்தான்.
புகழ்வேந்தன் வீட்டிற்குச் சென்ற அர்ஜுன் கலைவாணியை பார்க்க வேண்டும் என்றதும் வீட்டு கூடத்தில் அவனை அமரச் சொல்லிய ரத்னா கலைவாணியிடம் விஷயத்தை கூறினார்.
கலைவாணியுடன் கமலாவும் வர அர்ஜுன், “நான் இன்ஸ்பெக்டர் அர்ஜுன்.. மனோஜ் காணாமல் போன வழக்கு சம்பந்தமா சின்ன விசாரணைக்காக வந்திருக்கிறேன்.. உங்களில் யார் மிஸ்டர் புகழ்வேந்தன் அம்மா?”
கலைவாணி, “நான் கலைவாணி.. புகழோட அம்மா.. இவங்க கமலா என்னோட சம்பந்தி”
“அதாவது மிஸ்டர் புகழ்வேந்தன் மனைவியோட அம்மா”
“ஆமா”
கமலாவை பார்த்து, “உங்க அண்ணன் மகன் காணாமல் போயிருக்கப்ப அங்கே இல்லாமல் நீங்க இங்கே என்ன பண்றீங்க?”
ஒரு நொடி தடுமாறிய கமலா, “மனோவை காணும் னு எனக்கும் கஷ்டமா தான் இருக்குது ஆனா இப்போ எங்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லை அதான் அங்கே போகலை” என்று கூற,
கலைவாணி, “காலையில் நடந்த பிரச்சனையில் எனக்கும் படபடப்பா இருந்துது.. அதான் அண்ணியை இங்கே வரச் சொன்னேன்”
அர்ஜுன் கமலாவை பார்த்து, “ஏன் பேச்சு வார்த்தை இல்லை?”
“புகழ் தம்பியை நான் ஏத்துக்கிட்டதால் அண்ணனுக்கு என் மேல் கோபம்.. அதனால் பேசுறது இல்லை”
“ஓ” என்றவன் கலைவாணியை பார்த்து, “உங்களுக்கு எதுக்கு டென்ஷன் ஆச்சு? உங்க மகன் மாட்டிக்க கூடாதுனா?”
தனது படபடப்பை மறைக்க முயற்சித்தபடி கலைவாணி, “தப்பு செய்யாதவங்க மேல பழி போட்டாலும் படபடப்பு வரும்” என்றார்.
“அதை அப்பறம் பார்க்கலாம்.. உங்க மகன் கல்யாணம் எப்படி நடந்தது?”
“எப்படி நடந்தது னா? எனக்கு புரியலை”
“நீங்க ஏற்பாடு பண்ணதா?”
“இல்லை.. மித்ரா புகழ் காதலை அண்ணி முதல்ல ஏத்துக்கலை.. ஒரே வாரத்தில் மித்ரா மனோஜுக்கு கல்யாணம் ஏற்பாடு வேற பண்ணிட்டாங்க.. அதனால் புகழ் அந்த கல்யாணத்தில் கடைசி நேரத்தில் அண்ணியை சமாதானம் செய்து மித்ராவை கல்யாணம் செய்தான்”
“கல்யாணத்தன்னைக்கு சமாதானம் செய்ததை முன்னாடியே செய்து இருக்கலாமே?”
“அது..” என்று கலைவாணி திணற, கமலா, “புகழ் தம்பி எங்க வீட்டுக்கு வந்தார்.. நான் உள்ளயே விடலை.. வேற வழி இல்லாம தான் இப்படி செய்தார்”
“அன்னைக்கு மட்டும் எப்படி அவரிடம் பேசினீங்க? சமாதானம் ஆனீங்க?”
“முதல்ல பேசலை தான்.. அப்பறம் பத்து நிமிஷம் னு கேட்டு என் அண்ணனோட சுயரூபத்தை ஆதாரத்துடன் நிரூபித்தார்.. முதல்ல அவங்க காதலை மறுத்ததுக்கு காரணம் எனக்கு என் அண்ணன் மகனை என் பொண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்க தான் ஆசை இருந்தது.. கூடவே ஆண் துணை இல்லாமல் இருக்கிற நிலையில் என் பொண்ணு தெரியாத வீட்டில் கல்யாணம் ஆகி போறதை விட அண்ணன் வீடுனா எனக்கும் நிம்மதி னு நினைச்சேன்.. மனோவும் நான் பார்த்து வளர்ந்த பிள்ளை.. அதான் அவங்க காதலை மறுத்தேன்.. ஆனா அண்ணா சொத்து விஷயத்தில் பல வருஷமா எங்களை ஏமாத்தியதோடு சொத்துக்காக தான் என் மகளை அவர் பையனுக்கு கல்யாணம் செய்ய சம்மதித்து இருக்கிறார் னு தெரிந்ததும் என் மகள் மட்டும் தான் எனக்கு முக்கியமா தெரிஞ்சா..”
“மிஸ்டர் கிருபாகரன் உங்களை என்ன ஏமாத்தினார்?”
“எங்க கார்மென்ட்டில் அவருக்கு பங்கே இல்லை ஆனா பங்கு இருக்கிறதா சொல்லி லாபத்திலும் பெரும் பங்கை அவரே எடுத்துக்கிட்டார்”
கலைவாணியை பார்த்த அர்ஜுன், “ஆனாலும் இப்படி கடைசி நேரத்தில் மாப்பிள்ளை மாறினா மனோஜ் நிலைமை பற்றி நீங்க யோசிக்கலையா? பெரியவங்களா நீங்க உங்க மகனுக்கு அறிவுரை சொல்லலையா?”
“சொன்னேன்.. ஆனா அவனுக்கும் வேறு வழி இல்லை”
“சரி வேலையாட்களை விசாரிக்கனும்.. ஏதாவது ரூமில் ஒவ்வொருத்தரா விசாரிக்க வசதி செய்து தர முடியுமா?”
கலைவாணி, “ரத்னாமா” என்று அழைக்கவும் ரத்னா அங்கே வந்தார்.
ரத்னாவிடம், “இவர் கேட்கிறதை செய்து கொடுங்க” என்ற கலைவாணி அர்ஜுனை பார்த்து, “நானும் இருக்கனுமா?”
“இல்லை.. நான் தனியா விசாரிச்சுக்கிறேன்”
கலைவாணியும் கமலாவும் அறைக்குச் சென்றதும் விருந்தினர் அறை ஒன்றில் வேலையாட்களை ஒவ்வொருத்தராக விசாரித்துவிட்டு அர்ஜுன் கிளம்பினான்.
——————————————————————————————————————————————–
வெற்றிவேல் கிளம்பியதும் மித்ராணி புகழ்வேந்தனை கைபேசியில் அழைத்தாள்.
வெற்றிவேலுடன் நிகழ்ந்த உரையாடலை அவள் கூறியதும், புகழ்வேந்தன் புன்னகையுடன், “அல்லிராணி தெறிக்க விட்டிருக்க போல”
“பின்ன! ராணினா சும்மாவா!” என்றவள், “அவர் சொன்னது போல மனோஜ் ஏதும் செய்திருப்பானா?”
“அவரிடம் நீயே சரியான பதிலை சொல்லிட்டியே அப்பறம் என்ன?”
“சொல்லிட்டேன் தான்.. ஆனா அவர் சொன்னதை கேட்டதில் இருந்து ஒருவேளை மனோஜுக்கு எதுவும் ஆகி இருக்குமோ னு ஒரு நெருடல்..”
“கவலைப் படாத ஒன்னும் ஆகி இருக்காது” என்று சமாதானம் சொன்ன புகழ்வேந்தன் மனதிலும் ‘மனோஜிற்கு ஏதும் ஆகி இருக்குமோ?’ என்ற கேள்வி எழாமல் இல்லை.
புகழ்வேந்தன், “சரி வீட்டுக்கு வா பேசிக்கலாம்.. நான் இப்பவே கிளம்பிட்டேன்.. வீட்டுக்கு வேற போலீஸ் போயிருக்காங்க.. அம்மாவும் அத்தையும் டென்ஷனா இருப்பாங்க.. நீயும் இப்பவே கிளம்புறியா?”
“வீட்டுக்கு யாரு போயிருக்கா?”
“ரத்னம் அண்ணா போலீஸ் னு மட்டும் தான் சொன்னாங்க.. ஒருத்தர் தான் வந்திருப்பதா சொன்னாங்க”
“சரி.. நானும் இப்பவே கிளம்புறேன்”
“ஓகே” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன் வீட்டிற்கு கிளம்பினான். அவளும் வீட்டிற்கு கிளம்பினாள்.
———————————————————————————————————————————————
ACP வெற்றிவேல் அலுவலக அறை:
வெற்றிவேல் அவன் விசாரித்ததையும் சந்தோஷ் மற்றும் அர்ஜுன் அவனிடம் கூறியதையும் கூறி முடித்ததும், சந்தோஷ், “பிரசாத் பிரெண்ட்ஸ் ராகுல் அண்ட் பாலமுருகனை(பிரசாத்தின் மற்றொரு நண்பன் பாலா.. அன்று மனோஜை மித்ராணியுடன் பார்த்த போது அவனுடன் இருந்தவன்) விசாரித்தேன் சார்.. ராகுல் மூலமா பாலமுருகனை பற்றி தெரிந்து பார்க்க போனேன்.. ரெண்டு பேர் சொன்னதும் கான்ட்ரோவர்சியா இருக்குது சார்.. ராகுல் சொன்னது முதலில் மனோஜுக்கும் ராகுலோட தங்கை ரோஷினிக்கும் கல்யாணம் பேசி இருக்க, அப்பறம் மனோஜும் மித்ராணியும் விரும்புறாங்க னு சொல்லி அந்த ப்ரோபோசல்லை ட்ராப் பண்ணி இருக்காங்க.. அப்பறம் தான் மனோஜ் மித்ராணி மேரேஜ் பிக்ஸ் ஆகி இருக்குது..
ஆனா பாலமுருகனை விசாரிச்சப்ப குழப்பி குழப்பி அவன் உளறினதில் தெரிந்தது மித்ராணி மனோஜை காதலிக்கலை.. மனோஜ் தான் மித்ராணியை காதலிச்சு இருக்கார்.. பிரசாத்தும் மித்ராணியை காதலிச்சு இருக்கார்.. அதான் கல்யாணம் முடிந்ததும் பிரசாத் சோகத்தில் இருந்து இருக்கார்.. ரெண்டு நாட்கள் பாலமுருகனோட கெஸ்ட்ஹௌஸ்ஸில் தான் தனியா இருந்து இருக்கார்”
வெற்றிவேல் அர்ஜுனை பார்க்க, அவன் கலைவாணி மற்றும் கமலாவை விசாரித்ததை பற்றி கூறிவிட்டு, “மிஸ்டர் புகழ்வேந்தனும் மித்ராணியும் காதலித்து கல்யாணம் பண்ணதா வீட்டு ஆட்கள் சொல்றாங்க ஆனா செர்வென்ட்ஸ் சொன்னதில் சில முரண்பாடுகள் இருக்குது சார்.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விஷயத்தை அவங்களை அறியாம சொன்னாங்க.. மண்டபத்தில் இருந்து புகழ்வேந்தனும் அவர் அம்மாவும் மட்டும் தான் வீட்டுக்கு வந்து இருக்காங்க.. மித்ராணி லேட்டா தனியா வந்திருக்காங்க.. அப்போ கையில் நிறைய பர்சேஸ் பண்ண திங்க்ஸ் இருந்து இருக்குது.. முதல் சில நாட்களுக்கு மித்ராணி புகழ்வேந்த்னை மதிக்கவே இல்லை.. ஒருமையில் தான் பேசி இருக்காங்க.. ஆனா அது கொஞ்ச நாளுக்கு தான்.. அப்பறம் அவங்க கிட்ட மாற்றம் தெரிந்து இருக்குது.. இப்போ மனம் ஒன்றிய தம்பதியர்களா தான் இருக்காங்க”
வெற்றிவேல், “மித்ராணி என் தங்கையோட நெருங்கிய தோழி.. ஸோ எனக்கு தெரிந்தவரை மித்ராணியை யாரும் மிரட்டியோ போர்ஸ் பண்ணியோ கல்யாணம் செய்ய முடியாது.. ஆனா அவங்க கல்யாணத்தில் ஏதோ இருக்குது.. சம்திங் பிஸ்சி” என்றவன் தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.
சந்தோஷ், “என்ன யோசிக்கிறீங்க சார்?”
வெற்றிவேல், “எனக்கு என்னவோ இது மிஸ்ஸிங் கேஸ் மாதிரி தெரியலை”
“ஏன் சார் அப்படி சொல்றீங்க?”
“கடத்தல் இல்லை.. ஏன்னா ரெண்டு நாள் ஆகியும் மிரட்டல் காள் வரலை.. ஒன்னு மனோஜே தலை மறைவா இருக்கணும் இல்லை அவர் இப்போ உயிருடன் இல்லை”
“மிஸ்டர் கிருபாகரன் ப்ளே பண்ணலாமே?”
“அதுக்கும் சான்ஸ் கம்மி தான்.. அவர் ப்ளே பண்ணா பால்ஸ் மிரட்டல் காள் வந்தது போல் ஏற்பாடு செய்து இருப்பார்.. எனக்கு என்னவோ………..” என்றபோது வெற்றிவேலின் கைபேசி அலறியது.
அழைப்பை எடுத்து பேசி முடித்தவன், “புகழ்வேந்தன் கட்டும் டவுன்ஷிப்பில் இருக்கும் கிணற்றில் ஒரு டெட் பாடி கிடைத்து இருக்கிறது.. டெட் பாடி டிகம்போஸ் ஆக ஆரம்பித்த நிலையில் இருப்பதால் யாரு னு தெரியலை..அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மனோஜ் கார் நிக்குது..” என்றவன், “கம்.. லெட்ஸ் மூவ்” என்றான்.
மூவரும் வேகமாக புகழ்வேந்தன் டவுன்ஷிப் நோக்கி கிளம்பினர்……….
விசாரணை தொடரும்♥ ♥ ♥ ♥ ♥ ♥