பூவில் நாவிருந்தால் காற்றும் வாய் திறந்தால் ..
காதல் காதல் என்று பேசும் ..
நிலா தமிழறிந்தால்.. அலை மொழி தெரிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்…
வாழ்வோடு வளர்பிறைதானே வண்ண நிலவே நிலவே
வானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே..
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
உடளோடுஉயிரை போலே உறைந்து போனதுதான் உறவே
மறக்காது உன் ராகம், மறுக்காது என் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன்.. வா என் வாழ்வே வா..
அன்பின் நடவடிக்கையில் இடிந்து போய் அமர்ந்து இருந்தாள் இனியா… அதற்குள் டாக்டர் வந்து விட.. மீராவை பரிசோதித்து பார்த்து கொண்டு இருந்தனர்
வீட்டினர் பாதி பேர் அன்புடனும்.. மீதி இனியாவுடமும் இருந்தனர்…
பரிசோதித்த டாக்டரை முற்றத்திற்கு அழைத்து வந்தான் அன்பு..
அவுங்க நார்மலா தான் இருகாங்க.. கொஞ்சம் சோர்வு.. அதனால தான் மயங்கி விழுந்து இருக்காங்க… ஆமாம் இது எத்தனாவது மாசம்? என்றார் இறுதியில் குண்டை இறக்கிய படி
என்ன எத்தனாவது மாசம்.. புரியல டாக்டர்? அன்பு கேட்க
அவுங்க எத்தனை மாசம் கர்ப்பம்னு கேக்குறேன்
என்று கேட்டவரை அதிர்ந்து பார்த்த அன்பின் பார்வையிலேயே அவனின் பதிலை புரிந்து கொண்ட டாக்டர்…
சரி அவுங்கள பார்த்துக்கோங்க… எழுந்ததும் இந்த மாதிரியை குடுங்க” என்ற அவர் சென்று விட
முற்றிலும் குழம்பி போய் தான் இருந்தான் அன்பு… அதற்குள் மீராவிற்கு முழிப்பு வந்து விட… கர்ப்பத்தின் உண்மை அறிய.. குடும்பத்தினரும் அங்கு விரைய.. இனியா மட்டும் முற்றத்திலே அமர்ந்து இருந்தாள்
மீராவை நெருங்கி.. அவளுடன் கட்டிலில் அமர்ந்தவன்…
“இப்போ எப்படி இருக்க மீரா… இன்னும் சோர்வா இருக்கா” அவளின் தலையை வருடிய படி கேட்க
“இப்போ பரவா இல்லை அன்பு.. நீ தான் என்கூடவே இருக்கியே… எனக்கு இனி எதுவும் ஆகாது” என்று அவனின் தோல் சாய்ந்த படி அமர்ந்து இருந்தாள் மீரா
“மீரா இப்போ தான் டாக்டர் வந்தாக… அவுங்க சொன்னது எனக்கு புரியல..அவுங்க நீ கர்பமா இருக்கறதா சொன்னாங்க” என்று அவன் தயங்கிய படியே இழுக்க
[the_ad id=”6605″]
ஆமாம் அன்பு… நானே உன் கிட்ட சொல்லணும்னு இருந்தேன்..கீழே அந்த பொண்ணை பார்த்த அப்றம் மறந்துட்டே..”ஐயம் ப்ரெக்னன்ட் வித் யுர் சைல்ட்”(உன் குழந்தையுடன் நான் கர்பமாக இருக்கிறேன்)
அதை கேட்டு அன்பு அதிர்ந்து விட.. “என்ன நம்ப குழந்தையா… எப்போ, இது எப்படி நடந்தது”
எனக்கும் இது அதிர்ச்சியா தான் அன்பு இருந்துது… அதுக்கு அப்றம் யோசிக்கும் போது தான் கொஞ்சம் கொஞ்சமா நியாபகம் வந்துது…
அன்னைக்கு நாம அருணோட பிறந்தநாள் விழாவுக்கு போனோம்ல…அப்போ நீ முதல் முறையா தண்ணி அடிச்சியே.. நியாபகம் இருக்கா… அன்னைக்கு தான் நமக்குள்ள… என்று வெட்க பட்டுக்கொண்டே அவள் இழுக்க
அங்கு இருக்கும் வீட்டினரின் முகம் சுழிக்க..அனைவரும் கீழே சென்று விட
அப்போது அன்பின் கைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று வர… அதை படித்தவன்..கைபேசியை அமர்த்தி வைத்து விட்டு…
சரி மீரா… நீ தூங்கு.. ரொம்ப நேரம் ஆகிடுச்சு.. அதுக்கு முன்ன இந்த மாத்திரையை சாப்பிடு என்றவன் அவள் சாப்பிட்டு உறங்கும் வரை அவள் பக்கத்திலேயே இருந்து… பின் கீழே சென்றவன்
முதலில் தேடியது இனியாவை தான்…முற்றத்தில் எங்கோ ஆணி அடித்தார் போல் அமர்ந்து இருந்தவளை நெருங்குயவன்
இனியா.. இங்க பாரு.. இனியா.. அவன் அழைக்க பின் அவனிடம் பார்த்தவள் அடக்கி வைத்து இருந்த அத்தனை கண்ணீரும் வெளியே பொத்து கொண்டு வந்தது
நான் அவுங்களை கொள்ள முயற்சி பண்ணல அன்பு…அது சந்தர்ப்பத்தால நடந்துடுச்சி.. நான் அதை எதிர் பார்க்கல… அவுங்கள காப்பாத்த கூடாதுனு நான் ஓடல… மோகன் ஆளுங்க கிட்ட இருந்து தப்பிக்க தான் ஓடிட்டேன்… அதுக்காக நான் என்னை நீயாபடுத்திக்க விரும்பலை.. என்னை மன்னிச்சிடுங்க அன்பு…அவனின் மடியில் தலை வைத்து அழுது கொண்டு இருப்பவளை தேற்றும் வழி தான் தெரிய வில்லை அன்பிற்கு
இனியா.. எனக்கு புரியுது இனியா.. அழுகாத.. நீ இதுக்கு காரணம் சொல்லணும்ன்ற அவசியம் இல்லை…எனக்கு எல்லாம் புரியுது என்றான் அவனும் கண்ணில் நீரை தேக்கி கொண்டு
அப்போ எதுக்கு கொஞ்சம் முன்னாடி அப்டி கோவ பட்டீக..என்றாள் அவனை பார்த்த படி
[the_ad id=”6605″]
அது அவ மயங்கி விழுந்துட்டதால, கொஞ்சம் பயந்துட்டேன்..ஆனா எனக்கு இப்போ எல்லாமே குழப்பமா இருக்கு.. மீரா என்னமோ அவளோட குழந்தைக்கு நான் தான் அப்பான்னு சொல்லுரா.. பிறந்தநாள் விழால நான் எதோ தவறு செஞ்சிட்டதா சொல்லுறா… எனக்கு எதுவுமே புரியல அவன் புலம்பி கொண்டே இனியாவை பார்க்க.. அதில் சிறு சலனம் தெரிய
அப்படி பார்க்காதே இனியா.. மனசரிஞ்சி நான் எதுவும் பண்ணல… இது என்னனு புரிஞ்சிக்க எனக்கு கொஞ்சம் டைம் குடு… எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன்.. என்னை நம்பு என்றவனை அப்போதும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தாள் அன்பு
செல்லம்மாவிடம் சென்றவன்.. அம்மா நீங்களாவது நம்புங்கமா.. என்று அழ…
எதை வெச்சிடா நம்ப சொல்லுற… வயித்துல புள்ளையோட ஒரு பொண்ணு… கழுத்துல தாலியோட ஒரு பொண்ணு.. ரெண்டு பேரையும் வெச்சி கிட்டு உன்னை எப்படி நம்ப முடியும்
“எனக்கு ஒரு நாள் மட்டும் அவகாசம் குடுங்கமா.. நான் எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன்” என்றவனின் தலையை ஆதரவாய் தடவி கொடுத்தார் செல்லம்மாள்
அன்பின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு அனைவரும் உறங்க சென்று விட.. இனியா, செழியன்,யாழினிக்கு முற்றிலும் தூக்கம் வர வில்லை
எதையோ யோசித்து கொண்டு இருந்த செழியன்… கைபேசியுடன் வெளியே சென்று யாருக்கோ பேசினார்
இரவு முழுவதும் பல போராட்டங்கள் அனைவரின் மனதிலும் இருக்க.. தூக்கம் மறந்து… இது என்ன புது சோதனை.. இதில் இருந்து எப்படி மீள போகிறோம் என்பது புரியாமல்.. அனைவர்க்கும் அது ஒரு துக்கம் இல்லாத இரவாகவே ஆனது
விடியற்காலை நான்கு மணி போல்.. செழியன் யாரிடமும் எதுவும் சொல்லாமல்.. ஒரு சின்ன பை ஒன்றை மட்டும் எடுத்து கொண்டு.. யாழினிக்கு மட்டும் விஷயத்தை கூறி விட்டு எங்கோ சென்றார்
நடப்பது என்ன வென்று தனக்குளேயே போட்டு அலசி ஆராய்ந்து கொண்டு இருந்த அன்பின் கைபேசிக்கு…ஒரு அழைப்பு வர..
அதில் ரகசியமாய் எதோ பேசியவன்…கீழே செல்லம்மாவை பார்க்க சென்றான்
துக்கம் வர வில்லை.. மனசு வேறு பாரமாக இருப்பதால்.. செல்லம்மாள் அறையிலேயே படுத்து கொண்டாள் இனியா..
செல்லம்மாவை காண வந்தா அன்பு… இருவரையும் பார்த்து
“ரெண்டு பேரும் இங்க தான் இருக்கீங்களா?நல்லதா போச்சு… நான் கொஞ்சம் வேலையா வெளிய போறேன்…வரதுக்கு இன்னைக்கு ராத்திரி ஆகிடும்.. அதுவரைக்கும் மீராவை பார்த்துக்கோங்க… அவ இங்க இருந்து எங்கயும் போக கூடாது..நான் இங்க இல்லைனு மீராவிற்கு தெரிய வேணாம்.. அப்படியும் மீறி கேட்டாள்.. சொத்து விஷயமா போய் இருக்கேனு சொல்லுங்க.. அமைதி ஆகிடுவா” என பல தடவை கூறி விட்டு அவனும் சென்று விட்டான்
இருவருக்கும் என்ன சொல்கிறான்.. எங்கே போகிறான் என்பது புரியாமல் இருந்தாலும்… அவனின் கண்ணில் இருந்த உறுதியை பார்த்து அமைதியாயினர்…
காலை விடிந்தவுடன் அனைவர்க்கும் விஷயத்தை கூறி இருந்தார்.. அதனால் வீட்டில் இருந்த அனைவரும்… அன்பு கூறியது போலவே நடந்து கொண்டனர்.. அவ்வீட்டில் விஷயம் தெறியாமல் இருந்தது சகுந்தலா தான்… சுந்தருக்கு மீனுவிற்கும் கூட விஷயம் தெரியும்…
மீனு இப்போது முழுவதுமாக மனம் திருந்தி இருந்தாள்… அதுவும் மீரா வந்த பின் அவளுள் மாற்றங்கள் அனைத்தும் வெளியே தெரிய ஆரம்பித்தது…
மீரா வந்த பின்.. இனியா படும் துயரத்தை பார்த்தவள் தானே.. அவளின் மனமும் இளக தான் செய்தது.. இது இலக்கியனுக்கும் இனிமையையே தந்தது…
மீனு தன் தாயை போல எங்கு இருந்து விடுவாளோ என்ற எண்ணம் அவனிடம் தினமும் வாட்ட தான் செய்து கொண்டு இருந்தது… ஆனால் அவனுக்கு இப்போது மன நிறைவு தான்
காலை ஏழு மணி போல் எதர்ச்சியாக இனியவை பார்த்த மீனு…தரையில் கால்களை மடக்கி.. கையை தலைக்கு வாகாக முட்டு குடுத்து… கண்ணில் இருக்கும் மை கண்ணீரோடு கரைந்து, அதன் செயல் முகத்தில் தெரிய.. கண்கள் இலக்கம் வீங்கி.. அழுததின் தடம் தெரிய… சிறு பிள்ளை போல் தூங்கும் அவளை பார்க்க மீனுவிற்கே பாவமாக போனது
அவளை எழுப்பி விடலாம் என்று அவள் அருகே செல்ல எத்தனித்தவள்… எதோ யோசித்து.. சமையல் அறைக்கு விரைந்தவள்.. டம்பளரில் பால் கலக்கி.. அதை கொண்டு வந்து இனியாவை எழுப்பினாள்..
கையில் டம்பளருடன் எழுப்பியவளை இனியா வினோதமாய் பார்க்க..
“இந்தா இனியா.. பால் குடி.. அதுக்கு அப்றம் போய் குளிச்சிட்டு வந்துடு.. விடிஞ்சி ரொம்ப நேரம் ஆகிடுச்சு” இதமாய் கூறியவளை இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள் இனியா
அவள் கையில் கொடுத்த டம்பளரை கையில் வாங்கி.. இதை குடிப்பதா..வேண்டாமா என்று யோசித்து கொண்டு பாலையும், மீனுவையும் மாறி மாறி பார்த்தவளின் தயக்கம் புரிந்த மீனு
“இதுல எதுவும் கலக்கல..சக்கரை தான் போட்டு இருக்கேன்.. தைரியமான குடி” என்று கூற
” நீ பண்ண வேலை எல்லாம் கண் முன்னாடி வந்து போக தானே செய்யும்.. அப்றம் எப்படி தைரியமான குடிக்கறது” மீனுவை வம்பிழுத்த படியே இலக்கியன் அங்கு வர
“பாரு இனியா. குடு நான் வேணும்னா குடிச்சி காட்டுறேன்” சிணுங்கிய படி பாலை வாங்க போனவளை தடுத்த இனியா
“அவன் சும்மா விளையாட்டுக்கு சொல்லுறான்.. நானே குடிக்கியரேன்” என்ற படி இனியா குடிக்க
“எதோ யோசனை வந்தவளாய் ஆமாம் மீரா எழுந்துட்டாளா.. அவ அன்பை தேடலையே” தன்னையும் மறந்து அவள் கேட்க
[the_ad id=”6605″]
“சக்களத்தி மேல பாசத்தை பார்த்தல.. இவங்க புருஷன அவுங்க தேடுங்கலானு தெரியணுமாம்” மீனு முகத்தை சுளித்து கொண்டே கூற…
அதிலும் அவள் இனியாவிற்கே பரிந்து பேசுவது புரிய… இலக்கியன் மகிழ்ச்சியில் பறந்தான் என்பது தான் உண்மை
“மேடம் நல்லா குறட்டை விட்டு தூக்கிகிட்டு இருக்காங்க…நானும் வைஷுவும் கூட போய் சத்தம் போட்டு எழுப்பி விடலாம்னு தான் பார்த்தோம்…திங்குற பிசாச எழுப்பி விட்டு.. அது கிட்ட மடிக்குறத விட… அது தூங்குறதே மேல்னு விட்டுட்டோம்” என்றான் இலக்கியன் தலையில் அடித்து கொண்டு
இரவு எல்லாம் அழுது வீங்கிய கண்ணுடன், சோர்ந்து போய் இருப்பவளை பார்த்த இலக்கியன்.. கீழே முட்டி போட்டு அவளுக்கு இணையான உயரத்தில் அமர்ந்து…
“இன்னும் உனக்கு நைட் இருந்த பயமும்,தவிப்பும் இருக்கா இனியா.. இன்னும் உனக்கு அன்பு மேல சந்தேகம் இருக்கா? ” என்று அவன் கேட்க
“இல்லை இலக்கியா.. அவர் மேல சந்தேகம் இல்லை.. ஆனா அவர் இதை எப்படி சமாளிக்க போறாருனு தான் தெரியல.. வெறும் கொலை பழி.. கோமால போனதுனு அந்த பொண்ணு வந்து நின்னு இருந்தா எப்படியும் சமாளிச்சிட்டு இருந்து இருக்கலாம்… ஆனா அவ வயித்துல பிள்ளையோட.. அதுவும் அது இந்த வீட்டோட வாரிசுன்னு சொல்லிக்கிட்டு இல்ல வந்து இருக்கா.. அதை தான் எப்படி, என்ன பண்றதுனு தெரில” என்று அவள் கவலையுடன் கூற
“அந்த குழந்தைக்கு அன்பு தான் காரணமா இருப்பான்னு நீ நெனைக்குறையா இனியா” என்று இலக்கியன் கேட்க
“அதெல்லாம் மாமா அதுக்கு எல்லாம் சரி பட்டு வரமாட்டாங்கனு இனியாவுக்கு தெரியும்” பேச்சு வாக்கில் மீனு கூறி விட
அதே ப்லொவ்வில் மீனுவும், இனியாவும் ஹாய்-பை அடித்து கொண்டு சிரிக்க…இரவில் இருந்து இறுகிய இருந்த இனியா சிரிக்கவும்… இலக்கியனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்
காலை பதினோரு மணிக்கு எழுந்து கொண்டாள் மீரா.. எழுந்தவள் கட்டிலில் அமர்ந்த படியே குரல் கொடுத்து கொண்டு இருக்க..
என்ன என்று பார்க்க ஜானகி தான் சென்றார்.. அவரிடம் “நான் பெட் காபி குடிச்சி தான் பழக்கம்.. சோ அதை கொண்டு வந்துடுங்க.. அப்புறம் காலைல சாப்பிட என்ன இருக்கு… எதுவா இருந்தாலும்..சான்விச் அன்ட் ரெண்டு வாழை பழம் கொண்டு வந்துடுங்க… பிரெஷ்ஷா இருக்கனும்” என்று எதோ மகாராணி போல் உத்தரவு போட்டவள்
எழுந்து பாத்ரூம் சென்று பிரெஷ் ஆகி கீழே வந்தாள்..
வந்தவள் முன் அவள் கேட்டது அனைத்தும் கொண்டு வந்து வைத்தார் ஜானகி..அதை அனைத்தையும் உள்ளே தள்ளி கொண்டு “ஆமாம் அன்பு எங்க” என்றாள் ஆற அமர
அதில் கோவம் கொண்ட மீனு… “ஹா..மகாராணி எழுந்த்திருப்பீங்கனு இவ்ளோ நேரம் வெயிட் பண்ணாக.. இப்போதான் வெளிய போய் இருக்காங்க” என்றாள் கடுப்பாக
“ஓஹோ மை கோட்…என்னை இங்க தனியா விட்டுட்டு எங்க போனான் அவன்.. அவனுக்கு அறிவே இல்லையா” என்று அமர்ந்து இருப்பது அவனின் வீட்டில் என்பதையும் மறந்து குதித்தவளுக்கு பதில் கூற வாய் திறந்த மீனுவை அடக்கிய ஜானகி
“அவன் எதோ சொத்து விஷயமாம்… அதுக்காக போய் இருக்கான்.. உனக்கு எதோ சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தான்” என்று கூற
அடுத்த நொடி முகத்தில் எதையோ சாதித்த சந்தோசம் அவளுக்கு தெரிய.. சரி சரி என்று சாப்பிட்டு முடித்தவள்.. கை கழுவ வீட்டின் பின் புறம் செல்ல… அடித்து கொண்டு இருந்த வெளியிலில் முகம் சுழித்தவள்..
“ஓஹோ ஷீட்.. காலைலயே என்ன இது இவ்வளவு வெயில் அடிக்குது..ஹை கேர்ள்… ஒரு குடை ஒன்னு கொண்டுவா…என்னால இந்த வெயில்ல போக முடுயாது.. ஸ்கின் டான் ஆகிடும்” என்றாள் சலித்து கொண்டு மீனுவை பார்த்து
“எழுந்தது மதியானதுல.. இதுல வெயில் அதிகமா இருக்குனு குறை வேற..இவளை” என்று பல்லை கடித்த மீனுவை
“அமைதியா இரு மீனு.. அன்பு வர வரைக்கும் நாம எதுவும் பேச முடுயாது… நாம எதாவது சொல்லி.. அதுக்கு அப்றம் அவ வீட்டை விட்டு போய்ட்டா.. அன்புக்கு என்ன பதில் சொல்ல முடியும்… அதனால நீ அவ சொல்லுற மாதிரி செய்” என்று செல்லம்மாள் சொல்ல.. சரி சென்று குடையுடன் சென்றாள் மீனு
இது மட்டும் இல்லை… அன்று மணி பத்து ஆகும் வரை.. இதை செய்யுங்கள்… அப்டி செய்யுங்கள்.. எனக்கு இது பிடிக்காது.. அது பிடிக்காது..மீனுவை குடையுடனே வேறு அலைய வைத்தால்… அவள் அலுத்து ஒண்டு எதாவது பேச முற்பட்டால்..
“என்ன என்னை பார்த்து கோபிக்குற..இது என்னோட வீடு.. இந்த வீட்டுக்கு நான் டங்கன் இனி எல்லாமே… என்னை கேட்டு ஒழுங்கா நடந்துக்க கத்துக்கோ” என்று அதிகாரம் வேறு…
இதை பொறுக்க முடுயாமல் போனாலும்.. அன்பிற்காக காத்திருந்து அனைவரும் அமைதியாயினர்…
இரவு வரை இனியா மீராவின் கண்ணில் படவே இல்லை.. அவள் இருக்கும் இடத்தை தெரிந்தே தவிர்த்தால்… அன்பு வருவதற்கு முன் பிரெச்சனை வேண்டாம் என்று ஒதுங்கியே இருந்தாள்
இரவு பத்து மணி ஆகியும்.. அன்பு வராமல் போக.. கவலையில்.. முற்றத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தாள்
அப்போது தான் சாப்பிட்டு விட்டு கைகளை கழுவி கொண்டு வந்து கொண்டு இருந்த மீராவின் கால் கீழே இருக்கும் தண்ணீரை பார்க்காமல் பட.. அதில் வழுக்கி விழ பார்த்தவளை.. விழாமல் பிடித்தாள் இனியா
கலையில் இருந்து இனியாவை பார்க்காமல் இருந்ததால்.. அவளின் கோவம் தணிந்து இருக்க.. இனியாவை கண்டவளுக்கு மறுபடியும் கோவம் வந்து விட
என்னையும், என் குழந்தையையும் கொன்னுட்டா.. நீ அன்பை ஈசியா கல்யாணம் பனிக்காலம்னு என்னை கொள்ள பார்க்குறியா… இனி நீ இக வீட்டில் இருக்க கூடாது. இப்போதே வெளியே போ என்று அவள் கத்த
அவளிடம் சமாதனம் பேச இனியா முற்பட்ட.. அதில் அதிகம் கோவம் கொண்ட மீரா.. இனியாவை அவளின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட
அவள் வாசலில் தடுமாறி அவளின் நெற்றி வாசலில் படும் பொழுது… அவளை விழாமல் பிடித்து…. தன்னுடன் சேர்த்து பிடுத்து கொண்ட அன்பின் முகத்தில் ருத்திர கோவமும் தாண்டவம் ஆடியது..
அதே கோபத்துடன் மீரா என்று கத்தியவன் இனியாவுடன் வீட்டுற்குள் செல்ல…அவனின் சத்தம் கேட்டு அனைவரும் முற்றத்தில் கூடினர்
மாயம் தொடரும்….