சந்தோஷ் அமைதியாக இருக்க வெற்றிவேல் தொடர்ந்தான்.
“கிருபாகரன் ஆபீஸ் போயிட்டு வந்து நீயும் அர்ஜுனும் சொன்னது..
பிரசாத் மனோஜ் கிருபாகரன் மூணு பேர் ரூமும் அடுத்தடுத்து இருக்குது.. அவங்க ரூம்ஸ் தனியா பஸ்சேஜ்(Passage) போறது மாதிரி இருக்குது.. அந்த இடத்துக்கு போறதுக்கு ஒரு தனி கதவு இருக்குது.. அந்த கதவுக்கு மேல பஸ்சேஜ் உள் பக்கம் தான் சிசிடிவி கமெரா இருக்குது அண்ட் முதல் ரூம் பிரசாத்தோடது தென் மனோஜ் அண்ட் லாஸ்ட் ஒன் கிருபாகரன் ரூம்.. கிருபாகரன் ரூம் அடுத்து இவங்க மூணு பேர் மட்டும் யூஸ் பண்ற லிப்ட் இருக்குது.. மூணு பேரில் யாராவது ஒருத்தரோட அனுமதி இல்லாம அந்த பஸ்சேஜ் உள்ளயே போக முடியாது அண்ட் அந்த டோர் அன்லாக் பண்ண கீ-கார்டு வேணும்.. அவங்க மூணு பேர் கிட்டயும் அவங்க பி.ஏ-ஸ் கிட்ட மட்டும் தான் கீ-கார்டு இருக்குது..”
“எஸ் சார்” என்றான் யோசனையுடன்.
“புட்டேஜ்ஜஸ் மூலமா நான் தெரிந்துக் கொண்டது..
நடுவில் மனோஜ் கிருபாகரன் ரூமுக்கு போற மாதிரியோ கிருபாகரன் மனோஜ் ரூமுக்கு போறது மாதிரியோ புட்டேஜ் இல்லை.. மித்ராணி கிட்ட மனோஜ் 6.12 அண்ட் 6.14க்கு பேசி இருக்கார்.. ஸோ 6.15யில் இருந்து 6.42க்குள்ள தான் மனோஜ் இறந்து இருக்கணும்.. மே பி மனோஜ் அண்ட் கிருபாகரன் ரூமுக்கு இன்டெர்னெல்லா கனெக்டிங் டோர் இருக்கலாம்”
எப்பொழுதும் போல் இப்பொழுதும் வெற்றிவேலின் புலனாய்வுத் திறனையும் புத்திக் கூர்மையையும் ஆச்சரியத்துடன் பார்த்த சந்தோஷ், “உங்க கிட்ட இருந்து நான் இன்னும் நிறைய கத்துக்க வேண்டியது இருக்குது சார்”
வெற்றிவேல் புன்னகைக்க, சந்தோஷ், “மனோஜ் அண்ட் கிருபாகரன் ரூமை கனெக்ட் பண்ற மாதிரி டோர் இருக்குதா னு போய் பார்த்துட்டே கிளம்பி இருக்கலாமே சார்?”
“இப்போ போனா கிருபாகரன் அலர்ட் ஆகிடுவார்.. எப்படியும் கஜாவை விசாரிச்சதுக்கு அப்பறம் கிரைம் ஸீன் பார்க்க கிருபாகரன் அண்ட் மனோஜ் ரூம் போகணும்.. XXX ஏறியா போனதும் நீ இறங்கி ஆட்டோவில் என்னோட ஆபீஸ் போய் இந்த டோர் பத்தி பிரசாத்தை கேளு.. நான் நம்ம இடத்துக்கு போய் கஜாவை விசாரிச்சிட்டு உனக்கு போன் பண்றேன்”
“ஓகே சார்” என்றபோது சந்தோஷ் கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்தது. அதை எடுத்து பார்த்தவன் புன்னகையுடன், “சார்.. விவேக் வேலையை முடிச்சிட்டான்.. ‘ஆன் தி வே’ னு மெசேஜ் கொடுத்து இருக்கிறான்”
வெற்றிவேலும் மென்னகையுடன், “குட்” என்றான்.
வெற்றிவேல் விசாரணை நடத்தும் அவனது ரகசிய இடம்:
சந்தோஷை ஒரு இடத்தில் இறக்கி விட்டுட்டு வெற்றிவேல் அவனது ரகசிய இடத்திற்கு சென்றபோது விவேக் இவனுக்காக காத்திருக்க, ஒரு அறையில் கையும் காலும் கட்டப்பட்ட நிலையில் இருக்கையில் அமர்ந்திருந்த கஜா, “யாரு டா நீ? என்ன வேணும் உனக்கு? எதுக்கு டா என்னை கட்டி வச்சிருக்க?” என்று கத்திக் கொண்டிருந்தான்.
வெற்றிவேலை பார்த்ததும் விறைப்பாக வணக்கம் வைத்த விவேக், “அம் ஹானர்ட் டு ஹெல்ப் யூ சார்” என்று மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் கூறினான்.
சிறு புன்னகையில் அவனது பேச்சை அங்கீகரித்த வெற்றிவேல், “இவனை கூட்டிட்டு வரும் போது எதுவும் பிரச்சனை இல்லையே?” என்று கேட்டபடி கஜா இருந்த அறையினுள் சென்றான்.
“நீ தான் என்னை கடத்திய ______? டேய் ACP என் பவர் தெரியாம என் கூட வச்சிக்காத” என்று கஜா கத்த, அவன் அருகே சென்று வெற்றிவேல் விட்ட அரையில் பொறிகலங்க தலையை பலியாடு போல் உலுக்கியபடி கஜா வெற்றிவேலைப் பார்த்தான்.
வாய் மீது விரலை வைத்து, “மூச்.. உன் கிட்ட கேட்கிறப்ப தான் வாய் திறக்கணும்” என்ற வெற்றிவேல் விவேக்கை பார்த்து, “நீங்க சொல்லுங்க” என்றான்.
“நீ னே சொல்லுங்க சார்” என்ற விவேக் கஜாவை பார்த்தபடி, “பிரச்சனை எதுவும் இல்லை சார்.. இவனை பார்க்குறதுக்கு பெரிய பில்டப்லாம் கொடுத்தான்க ஆனா இவன் ஒரு டம்மி பீஸ் சார்.. இங்க வந்ததும் கட்டையால் லைட்டா தான் மண்டையில் தட்டினேன், மயங்கிட்டான்” என்றான் நக்கலான குரலில்.
வெற்றிவேலும் கஜாவை நக்கலாக பார்த்தபடி, “இவன் ஒரு டம்மி பீஸ் னு எனக்கு முன்னாடியே தெரியும்” என்று கூற,
“கையை காலை கட்டி வச்சிட்டு வசனம் பேசிட்டு இருக்கிறீங்க.. பொட்டைங்களா.. கயித்தை அவுத்துவிடு நான் யாரு னு காட்டுறேன்”
“எப்போ உன் கட்டை அவிழ்க்கணுமோ அப்போ நீ சொல்லாம நானே அவிழ்க்கிறேன்.. அப்போ உன் வீரத்தை காட்டு.. இப்போ மூடிட்டு உட்காரு” என்ற வெற்றிவேல் விவேக்கை பார்த்தான்.
விவேக், “இவன் இடத்துக்கு போனப்ப கேட் வெளியவே யாரு னு கேட்டான்க.. அப்பறம் உள்ள போனதும் ரெண்டு இடத்தில் கேட்டான்க.. எல்லா இடத்திலும் இவனைத் தான் பார்க்கணும், முக்கியமான விஷயம்னும் இவன் கிட்ட மட்டும் தான் சொல்லுவேனும் சொல்லி இவனைப் போய் பார்த்தேன்.. என்னை செக் பண்ணி தான் விட்டான்க.. நான் கன்-னை(Gun) காரில் வச்சிட்டு தான் உள்ளே போனேன்.. இவனைப் போய் பார்த்ததும் தனியா தான் பேசுவேன் னு பிடிவாதம் பிடிச்சு இவனிடம் தனியா பேசினேன்.. கிருபாகரன் முக்கியமான விஷயம் பேசணும் னு ஒரு இடத்துக்கு வர சொன்னதாவும் போலீஸ் தீவிரமா விசாரிக்கிறதால் எந்த விஷயமா இருந்தாலும் போனில் பேச வேண்டாம் நேரில் தான் பேசணும் னு சொன்னதாவும் சொன்னேன்.. முதல்ல வர யோசிச்சான் அப்பறம் வந்துட்டான்.. இவன் கூட ஒரு அல்லக்கை கிளம்ப தனியா தான் வர சொன்னதா சொல்லி இவனை மட்டும் இங்கே கூட்டிட்டு வந்து மண்டையில் லேசா தட்டி, கட்டி போட்டதுக்கு அப்பறம் தண்ணி தெளிச்சு தெளிய வச்சேன் சார்”
“குட்” என்ற வெற்றிவேல் கஜா முன் ஒரு இருக்கையை போட்டு நிதானமாக அமர்ந்தான்.
“எப்படி இவன்க கிட்ட மாட்டினோம் னு யோசிக்கிறியா? கிருபாகரன் இப்போ எங்க கஸ்டடியில் தான் இருக்கிறார்.. அவர் எல்லா உண்மையையும் சொல்லிட்டார்.. புகழ்வேந்தனை பழி வாங்க உன்னை வச்சு மனோஜை கடத்த திட்டம் போட்டு இருக்கார்.. மனோஜ் வண்டியில் பின் சீட்டில் மறைந்திருந்த நீ கார் ஆபீஸ் விட்டு வெளியே போன கொஞ்ச தூரத்தில் ஒரு கட்டையால் மனோஜ் பின் மண்டையில் அடிச்சு இருக்க, உன் போதாத நேரம் மனோஜ் மயங்குறதுக்கு பதில் செத்துட்டான்.. அங்கேயே மனோஜ் செல்லை ஸ்விட்ச் ஆப் பண்ணி தூர போட்டுட்டு புகழ்வேந்தன் டவுன்ஷிப்-பில் டெட் பாடியை போடுட்ட”
வாய்விட்டு சிரித்த கஜா, “என்ன ACP போட்டு வாங்கப் பாக்குறியா? அதெல்லாம் என்னாண்ட நடக்காது”
“நான் ஏன் போட்டு வாங்கப் போறேன்? உண்மையைத் தான் சொல்றேன்” என்றவன் விவேக் பக்கம் திரும்பி, “கிருபாகரன் பேசிய டேப்பை எடுத்துட்டு வந்து இவனுக்கு போட்டுக் காட்டு” என்றதும்,
“எஸ் சார்” என்று கூறி விவேக் வெளியே செல்ல, கஜா முகத்தில் ஒரு நொடி சிறு அதிர்ச்சியும் பயமும் வந்து போனது. அதை கண்டுக் கொண்ட வெற்றிவேல் மனதினுள் சிரித்துக் கொண்டான்.
அதிர்ச்சியையும் பயத்தையும் மறைத்துக் கொண்ட கஜா வரவழைத்த அலட்சியமான குரலில், “அப்பறம் எதுக்கு என்னை அரெஸ்ட் பண்ணாம இங்க தனியா கூட்டிட்டு வந்திருக்க?”
“உன்னை அரெஸ்ட் பண்ணலை னு யாரு சொன்னது?” என்ற வெற்றிவேல் கையில் இருந்த கோப்பியத்தில் இருந்து அரசு முத்திரை உள்ள ஏதோ ஒரு காகிதத்தை கஜா முகத்திற்கு முன் காட்டி, “இதோ உன்னோட அரெஸ்ட் வாரென்ட்” என்றான்.
கஜாவிற்கு படிக்கத் தெரியாது என்ற உண்மை அறிந்தே வெற்றிவேல் அப்படிச் செய்தான்.
அந்த காகிதத்தை பார்த்த கஜா வெற்றிவேல் கூறியதை உண்மை என்று நினைத்தான். இப்பொழுது வெளிப்படையாகவே அவனது முகத்தில் அதிர்ச்சியும் சிறு பயமும் தெரிந்தது. அவனது பயத்தின் காரணம் அரசியல்வாதிகள் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டக் கூடிய வல்லமை உடைய வெற்றிவேல் கையில் அரெஸ்ட் வாரென்ட்டும் தனக்கு எதிரான ஆதாரமாக கிருபாகரன் கூற்று இருப்பதால்.
வெற்றிவேல், “எக்ஸ் எம்.எல்.ஏ xxx-யோட சப்போர்ட் உனக்கு இருப்பது எனக்கு தெரியும்.. அதான் உன்னை ரகசியமா அரெஸ்ட் பண்ணேன்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் ப்ரெஸ் இங்கே வருவாங்க.. அப்பறம் என் வேலை ஸோ சிம்பிள்.. எந்த கொம்பனாலையும் உன்னை வெளியே எடுக்க முடியாது” என்று முடித்தபோது வெற்றிவேலின் குரல் உறுதியுடன் ஒலித்தது.
கஜா பீதியுடன் வெற்றிவேலை பார்க்க, அப்பொழுது விவேக் கையில் ஏதோ ஒரு காணோலி பதிவுடன் வந்தான்.
வெற்றிவேல், “அதை இவனுக்கு போட்டுக் காட்டு” என்று கூற,
கஜா, “சார்.. அந்த எடுபட்ட _____________ சொன்னது பொய் சார்.. மனோஜை கொலை பண்ணதே அந்த கிருபாகரன் தான்” என்று கத்தினான்.
வெற்றிவேல், “நீ தப்பிக்க அவர் மேல் பழியை போடுறியா?” என்று நம்பாதது போல் குரலை சற்று உயர்த்திக் கூற,
கஜா, “அய்யோ சார்.. மெய்யாலுமே கிருபாகரன் தான் சார் மனோஜைக் கொன்னான்………………..”
வெற்றிவேல் விவேக்கை பார்த்து, “ப்ரெஸ் வந்தாச்சா?”
“வந்துட்டு இருக்காங்க சார்.. அஞ்சு நிமிஷத்தில் வந்திருவாங்க”
“சரி..” என்றபடி வெற்றிவேல் எழ,
“சார்.. சார்.. நான் சொல்றது தான் சார் மெய்யாலும் உண்மை.. என்னை நம்புங்க சார்” என்று கெஞ்சிய கஜா, “பொணத்தை அந்த புகல்(புகழ்) இடத்தில் போட்டது மட்டும் தான் நானு” என்றான் அவசரமாக.
வெற்றிவேல் யோசனையாக அவனைப் பார்க்க, கஜா அவசர அவசரமாக உண்மைகளைக் கூற ஆரம்பித்தான்.
“அன்னைக்கு எதுக்கோ அப்பனுக்கும் மகனுக்கும் வாய் சண்டை நடந்து இருக்குது சார்.. அப்போ கிருபாகரன் கோபத்தில் மனோஜை அடிச்சிருக்கான்.. அதுல மனோஜ் பக்கத்துல இருந்த வெண்கல சிலையை இடிச்சு கீழ விழுந்தப்ப அந்த சிலையும் அவன் மேல விழுந்துருச்சு.. சிலை கையில இருந்த ஈட்டி மனோஜ் பின் மண்டையில் குத்தி அவன் உடனே செத்துட்டான்.. கிருபாகரன் உடனே எனக்கு போன் பண்ணான்.. அப்போ நான் அவன் ஆபீஸ் கிட்டக்க தான் இருந்தேன்.. என்னோட ஆளுங்க மூணு பேரோட அங்க போனேன்.. காரை தள்ளி நிறுத்திட்டு ஆபீஸ் பின் பக்கமா சுவர் ஏறிக் குதிச்சு கார் பார்கிங் வழியா லிப்டில் அவன் ரூமுக்கு போனோம்.. அவன் ரூம் பக்கத்துல இருக்குற கேமராவில் மேல மட்டும் தான் தெரியுமாம்.. அதனால அவன் ரூம் கதவை திறந்து வச்சி நிக்க நாங்க வீல் வச்ச பெரிய பையை தள்ளிட்டு தவழ்ந்து உள்ள போயிட்டோம்.. ரூம் உள்ள நேரா போகாம வலது பக்கமா திரும்பி போய்ட்டோம்.. அப்பறம் அவசர அவசரமா ஒருத்தர் பொணத்தை பைக்குள்ள வச்சு அடைக்க இன்னொருத்தர் ரூமில் சிந்தி இருந்த ரத்தத்தை துடைச்சி மிளகாய் தூள் போட்டு துடைச்சு எடுத்தோம்.. நான் கிருபாகரன் ரூம் உள்ள இருந்த கதவு வழியா மனோஜ் ரூமுக்குள்ள போய்ட்டேன்.. அப்பறம் திரும்ப கிருபாகரன் கதவை திறந்து வச்சுட்டு உள்ள வந்து பைலு எடுத்த கப்புல(gap) என்னோட ஆளுங்க பையை தள்ளிட்டு தவழ்ந்து வெளிய போய் லிப்ட் வழியா கார் பார்க்கிங் போய் பொணம் இருந்த பையை மனோஜ் கார் டிக்கியில் வச்சிட்டான்க.. கிருபாகரனும் கிளம்பி வீட்டுக்குப் போய்ட்டான்..
மனோஜ் சண்டை போடும் போது கோட் போடலை போல, நான் மனோஜ் ரூமில் இருந்த அவனோட கோட்டை போட்டுட்டு முகம் தெரியாத மாதிரி அவனோட ரூம் கதவை திறந்துட்டு வெளிய வந்து லிப்ட் வழியா கார் பார்க்கிங் போய்டேன்.. அப்பறம் என்னோட ஆளுங்க சுவர் ஏறிக் குதிச்சு வெளிய போனதும் நான் மனோஜ் காரை எடுத்துட்டு ஆபீஸ் விட்டு வெளிய போய்ட்டேன்.. கிருபாகரன் வீட்டுக்கு போற வழில கொஞ்ச தூரம் போயிட்டு மனோஜ் செல்லை ஸ்விட்ச் ஆப் பண்ணி வீசிட்டு சந்து சந்தா போய் அந்த புகழ் இடத்துக்கு போய் பொணத்தை கிணத்துக்குள்ள போட்டுட்டு மனோஜ் காரை கொஞ்சம் தள்ளி நிறுத்திட்டு என் ஆளுங்களோட என்னோட காரில் கிளம்பிட்டேன்..”
(அன்று மித்ராணி மனோஜை திட்டிவிட்டு அழைப்பை துண்டித்ததும் மனோஜ் கோபத்துடன் கிருபாகரன் அறைக்குச் சென்றான். அவன் சொத்துக்காக காதலிப்பது போல் நடித்ததாக மித்ராணி கூறியதை அவனால் ஜீரணிக்க முடியாமல் கோபத்துடன் கிருபாகரன் அறைக்குச் சென்று முதல் முறையாக அவரை எதிர்த்து சண்டையிட்டான். வாக்குவாதத்தின் நடுவே கிருபாகரன் கோபத்துடன் மனோஜை அடித்தார். அதில் நிலை தடுமாறி அவன் அருகில் இருந்த வெண்கல சிலையில் மோதி கீழே குப்புற விழுந்தான். இவன் இடித்த வேகத்தில் அந்த சிலை இவன் மேல் விழ, சிலையின் கையில் இருந்த ஈட்டி இவனது பின் மண்டையில் குத்தி மூளையைத் தாக்க, மரணம் உடனே நிகழ்ந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத கிருபாகரன் அதிர்ச்சியுடனும் தவிப்புடனும் வருத்ததுடனும் நின்றது சில நொடிகள் மட்டுமே, அடுத்து அதில் இருந்து எப்படி தப்பிக்க என்று தான் யோசித்து விரைந்து செயல்பட்டார். வெண்கலத்தினால் ஆன அந்த போர் வீரன் சிலையை ஒரு வாடிக்கையாளர் கிருபாகரனுக்கு பரிசளித்திருந்தார்.)
“நல்ல கதை சொல்ற”
“சார்!!”
“வீல் வச்ச பை, மிளகாய் தூள் துணியெல்லாம் ரெடியா வச்சிருந்தியா? நம்புற மாதிரி கதை சொல்லு”
“என்னோட வண்டியில எப்போதுமே மிளகாய் தூள் கட்டை அருவா துணியெல்லாம் இருக்கும் சார்.. திடீர் னு சண்டை அது இது னு வந்தா தேவைப்படும் னு வச்சிருப்பேன்.. அன்னைக்கு என்னோட பொஞ்சாதி கேட்டா னு பெரிய வீல் வச்ச பை வாங்கியிருந்தேன்..”
வெற்றிவேல் நம்பாதது போல் பார்க்க, கஜா, “மெய்யாலுமே இதான் சார் உண்மை.. இதான் சார் நடந்துது”
“கிருபாகரன் போன் காள்ஸ் செக் பண்ணதில் நீ சொன்ன நேரத்தில் அவர் உனக்கு போன் பண்ணவே இல்லை”
“சார்.. அவன் கேடிக்கெல்லாம் கேடி சார்.. இந்த மாதிரி வேலைக்கெல்லாம் வேற நம்பர் வச்சிருக்கான்.. அந்த நம்பர் அவன் பசங்களுக்கு கூட தெரியாது”
“ரத்தத்தை துடைச்ச துணி, பொணத்தை எடுத்துட்டு போன பை எல்லாத்தையும் என்ன பண்ணீங்க?”
“அதையெல்லாம் சுடுகாட்டில் பாதி எறிஞ்சுட்டு இருந்த பொணத்தோட போட்டு எரிச்சிட்டோம்”
வெற்றிவேல் விவேக்கிற்கு கண்ஜாடை காட்ட, விவேக் சென்று மறைவிடத்தில் இருந்த நிழற்படக் கருவியில் இருந்து CDயை எடுத்தான்.
வெற்றிவேல் கஜாவை பார்த்து, “என்ன பார்க்கிற? இனி தான் கிருபாகரனை அரெஸ்ட் பண்ணப் போறேன்” என்றபடி எழுந்தான்.
அதிர்ச்சியடைந்த கஜா, “என்னை ஏமாத்தி போட்டு வாங்கிட்டியே” என்று ஆக்ரோஷமாக கத்தியபடி கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பிக்க,
அதை சிறிதும் கண்டுக் கொள்ளாத வெற்றிவேல் விவேக்கிடம், “கவனம் விவேக்.. அர்ஜுன் கொஞ்ச நேரத்தில் வந்திருவான்”
“ஓகே சார்” என்று விவேக் கூறியதும் வெற்றிவேல் கிளம்பினான்.
அடுத்த சில மணி நேரத்தில் கிருபாகரன் கைது செய்யப்பட, அனைத்து தொலைக்காட்சி அலைவரிசையிலும் முக்கிய செய்தியாக இது தான் ஓடிக் கொண்டிருந்தது.
மல்லிகா மாரடைப்பு ஏற்பட்டு பிரபல மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட, பிரசாத் கலங்கிய நிலையில் கதவின் வெளியே நின்றுக் கொண்டிருந்தான்.
மல்லிகாவின் நிலையை அறிந்து கமலா, மித்ராணி, கலைவாணி மற்றும் புகழ்வேந்தன் மருத்துவமனைக்கு சென்ற போது பிரசாத்துடன் பாலாவும் ராகுலும் ரோஷினியும் இருந்தனர்.