“உங்களால முடியுமா முடியாதான்னு நான் கேட்கவே இல்லையே. கண்டிப்பா பண்ணியே ஆகணும். இல்லன்னா உங்க ரெண்டு பேரோட உயிரும் உங்களுக்கு சொந்தமானதா இருக்காது. உன் அப்பா மாதிரி உன்ன போலீஸ் கிட்ட கொடுக்காம தனியா எதுக்காக கூட்டிட்டு வந்தோம் னு யோசிச்சியா சந்திரன். உனக்கு நியாயப்படி தண்டனை வாங்கித்தர எங்க யாருக்கும் விருப்பமில்லை. நாங்க சொல்றத கேட்குறத தவிர உனக்கு வேறு வழியும் இல்லை. அப்பனும் மகனும் கொலை பண்ண எவ்வளவு பேசி இருப்பீங்க. இப்பவும் அதே மாதிரி பேசி ஒரு முடிவுக்கு வாங்க. “