கமலினி புகார் அளித்த இரண்டு மணி நேரத்தில் காவல் அதிகாரியிடம் இருந்து அழைப்பு வர அதற்காக தான் காத்து இருந்தாலும் அனைவருக்கும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.
கமலினி அனன்யாவை பேச சொல்ல அவள் பயப்படவும்,
“உனக்கு நடந்ததை நீ தான் சொல்லணும் அனு.. இதுக்கே பயந்தால் எப்படி.. இன்னும் நிறைய ஃபேஸ் பண்ண வேண்டி இருக்கே..!!”
என்று சொல்ல,
“நாங்க எல்லாரும் இருக்கோம்ல டா.. தைரியமா பேசு..” என சிவசுப்ரமணியமும் அவள் தோளை தட்டிக் கொடுக்க தன் குடும்பம் தனக்காக நிற்கும் என்ற நம்பிக்கையோடு காவல் அதிகாரியிடம் தனக்கு நடந்த அநீதியை விளக்கி கூறினாள். தான் பேசும் அனைத்தும் பதிவு செய்யப்படும் என அறிந்தவளாய் ஒரு வார்த்தை மறைக்காமல் அனைத்தையும் புட்டு புட்டு வைத்து,
“நான் வரலைன்னா மார்ஃபிங் செஞ்ச என்னோட ஃபோட்டோஸை சோஷியல் மீடியாவில் போட்டுடுவேன்னு மிரட்டுறான் சர்.. இதுபோல நிறைய பெண்களுக்கும் ஏற்கெனவே செஞ்சும் இருக்கான்.. ப்ளீஸ் சர்.. அப்படி எதுவும் நடக்கும் முன்னாடி அவனை பிடிச்சிடுங்க..”
என்றாள்.
“பயப்படாத மா..!! பொண்ணுங்க இந்த மாதிரி தான் துணிந்து வந்து கம்ப்ளைன்ட் கொடுக்கணும்னு நினைக்கிறோம்.. உன்னோட துணிச்சலுக்கு பாராட்டுகள்.. நீங்க கொடுத்து இருக்கும் எவிடென்ஸ் எல்லாம் ஸ்ட்ராங்கானது.. அதனாலே தாமதமாக வாய்ப்பு இல்ல.. நீங்க தைரியமா இருங்க.. நாங்க எப்போ கூப்பிட்டாலும் உண்மையை சொல்ல பின் வாங்க கூடாது.. சரியா..”
சிறு பெண் என்பதால் அந்த அதிகாரி நிதானமாகவே எடுத்து சொல்ல,
“சரிங்க சர்..” என்று அவளும் வைத்து விட்டு கரிகாலன் கைது செய்யப்பட்டான் என்ற செய்தியை கேட்க அந்த நொடியில் இருந்து காத்திருக்க தொடங்கினாள்.
ஆதவனுடன் கிளம்பியதும் தினகரன் நேராக சென்றது வழக்கறிஞர் அனந்தராமனை சந்திக்க தான்..!!
வழியிலே அவருக்கு திறன்பேசி மூலம் தன் வருகையை சொல்லி இருந்தாலும் ,
“சர் இந்த நேரத்தில் வந்து தொந்தரவு பண்றோம்ன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. விஷயம் கொஞ்சம் சீரியஸ்.. லேட் ஆக்க வேண்டாம்னு தான்..”
என்று சங்கடமாய் சொல்ல,
“இட்ஸ் ஓகே தீனா.. நீ அப்படி எல்லாம் காரணம் இல்லாமல் வர மாட்டேன்னு தெரியும்..” என்றவர்,
” உள்ள வாங்க..” இருவரையும் வரவேற்று பிரச்சனையை விசாரிக்க தினகரனும் எல்லாம் கூறினான்.
“நாளைக்கு எந்த அசம்பாவிதமும் நடந்திடக் கூடாதுன்னு நினைக்கிறேன் சர்.. போலீஸ் எந்த அளவு சீக்கிரம் நடவடிக்கை எடுப்பாங்க தெரியல.. அதான் உங்க கிட்ட கேட்கலாம்னு நினைச்சேன்…”
“நீங்க சைபர் போர்டலில் கம்பளைண்ட் கொடுத்தது நல்ல மூவ் தான் தீனா..!! கண்டிப்பா அவங்க இதை அட்ரெஸ் பண்ணி தான் ஆகணும்.. அத்தோட சைபர் டிபார்ட்மெண்ட்டில் பதிவாகும் கேஸ்காக யாரை வேண்டுமானாலும் அரெஸ்ட் வாரென்ட் இல்லாமலே போலீஸ் ஆக்ஷன் எடுக்க முடியும்..!!”
என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த சமயம் தான் கமலினி அழைத்து போலீஸ் விசாரித்தது குறித்து கூற அவனும் அதை அப்படியே அனந்தராமனிடம் சொன்னான்.
“இன்டர்நெட்டில் ஒன்ஸ் பதிவு செய்யப்பட்ட எந்த விஷயமும் கண்காணிப்பில் தான் இருக்கும் தீனா.. அழிக்க நினைச்சாலும் அழிக்க முடியாது. என்ன தான் என்ட் டூ என்ட் என்ரூப்டட்ன்னு சொன்னாலும் நம் தனிப்பட்ட வாட்ஸ்அப் மெசேஜ் கூட அந்தந்த நெட்வொர்க்கில் டேட்டா சேகரிக்க படும்.. ஸோ சைபர் கிரைம் கேசஸ் வரும் போது போலீஸ் முதலில் அகியூஸ்ட், விக்டிம் இரண்டு பேரும் பயன்படுத்திய நம்பர் வைச்சு என்ன பேசி இருக்காங்க என்ன நடந்ததுன்னு தான் விசாரணை தொடங்குவாங்க..
பெரும்பாலும் நெட்வொர்க்கில் இருந்து டேட்டாஸ் கிடைக்க லேட் ஆகும்போது கேஸ் மூவ் ஆகிறதும் லேட் ஆகும்.. ஆனால் நீங்க வேலீட்டான ஃப்ரூப்ஸ் கொடுத்து இருக்கிறதால அவனை அரெஸ்ட் பண்ணிட்டு தான் மேற்கொண்டு விசாரணை ஆரம்பிப்பாங்க நினைக்கிறேன்.. டோன் வொர்ரி..”
அப்போது தான் ஆதவன் தினகரன் இருவருக்குமே நிம்மதியானது.
“இந்த கேஸை செக்ஸ்டார்ஷன்னு சொல்லுவாங்க… இப்ப ரொம்ப அதிகமா நடக்கும் சைபர் க்ரைம் இது தான்.. வயசு பொண்ணுங்க மட்டும் இல்லாம மிடில் ஏஜ்டு பொண்ணுங்களும் சிக்கிடுறாங்க..
எங்கோ ஏதோ ஒரு தறுதலை இப்படி செய்யுதுன்னு இல்லாம ஒரு கேங் மாதிரி ஃபார்ம் பண்ணி முழுக்க திட்டம் போட்டு செய்யிற ஆளுங்களும் இருக்காங்க.. மாட்டினால் பிரச்சனை வராத மாதிரியான பெரிய கைகளும் இவங்களுக்கு பின்னாடி இருக்கும்..
இப்படி நிறைய விஷயம் இருக்கு தீனா.. இந்த கரிகாலன் எந்த வகைன்னு தெரியல.. இவன் தனி ஆளா இல்ல நிறைய பேரோட தொடர்பு இருக்கா யோசிக்கணும்..
உங்க பிரதரோட கலீக்கும் கரிகாலனும் நண்பர்களா இருக்கலாம்ன்னு சொல்றீங்க… அந்த பையனுக்கும் இதில் லிங்க் இருக்கலாம்.. இல்ல இதை பத்தி எந்த ஒரு ஐடியாவும் இல்லாம கூட இருக்கலாம்..
எதுவா இருந்தாலும் கரிகாலனை போலீஸ் பிடிக்கும் முன்னால நாம தெரிஞ்சுக்கணும்.. அவன் மாட்டிய உடனே விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சுடும்.. அவனை சேர்ந்தவங்க அலர்ட் ஆகிடுவாங்க.. ஒருவேளை பெரிய ஆளுங்க சப்போர்ட் இருந்தாலும் போலீஸ்ஸே கூட தடயம் இல்லாம அழிச்சுடுவாங்க தீனா.. யாரையும் நம்ப முடியாது..
ஸோ போலீஸ் தலையிடும் முன்னாடி உங்க பிரதரை அவரோட கலீக்கிட்ட எதார்த்தமா விசாரிக்கிறா மாதிரி பண்ணுங்க.. கிடைக்கும் இன்ஃபர்மேஷன் அப்புறம் கேஸ் நடந்தால் நமக்கு உதவும்…”
“சரிங்க சர்.. நான் என் தம்பி கிட்ட பேசிட்டு சொல்றேன்.. ரொம்ப நன்றி சர்..”
என்று மனமார அவன் கூற,
“எனக்கு எதுக்கு நன்றி.. இது தான் என்னோட வேலையே தீனா..” என்றார் இலகுவாக..
முடிவில்லா இரவாய் அடுத்தடுத்து என நீண்டுக் கொண்டே போனது.
தன் வீட்டிற்கு வந்தபின் ஜெயந்தனை அழைத்து,
“உனக்கு ஒரு ஃபோட்டோ அனுப்பி இருக்கேன் பார்.. அவனை தெரியுமா பார்த்து சொல்லு..”
என்று சொல்ல அதனை பார்த்துவிட்டு அவனும்,
“தெரியும் ண்ணா… விக்கி இருக்கான்ல அவனோட ரூம்மேட் தான்.. நிறைய ரீல்ஸ் கூட பண்ணுவான்னா கொஞ்சம் பாபுலர் தான்.. நான் கூட ஃபாலோ பண்றேன்.. பட் அவனை பர்சனலா தெரியாது.. ஏன் கேட்கிற..???”
என்று கேட்டான். ‘ரூம்மேட் என்றால் விக்னேஷுக்கு அவனை பற்றி தெரியாமல் இருக்காது..’ வேகமாய் யோசித்து,
“சொல்றேன் டா.. உனக்கு விக்னேஷ் தங்கி இருக்க இடம் தெரியுமா..?”
என்க,
“தெரியும் ண்ணா..”
என்றதும்,
“அப்போ நாளைக்கு முதல் வேலையா நீ அங்க போற.. இந்த கரிகாலன் பத்தி முழு விபரம் தெரியனும்..” என்று கூறினான்.
“சரி ண்ணா.. ஆனா என்ன விஷயம்ன்னு தெரியாம நான் என்னானு கேட்பேன்.. என்கிட்ட கூட சொல்ல முடியாதளவு என்ன இருக்கு..”
என ஜெயந்த் பிடிவாதமாய் கேட்கவே,
“ம்ச்.. இவன் சரியான பொறுக்கி டா.. தன்கிட்ட பேசுற பொண்ணுங்க ஃபோட்டோஸ்ஸ மிஸ்யூஸ் பண்ணி அவங்களை பணம் கேட்டு மிரட்டுறதும் செக்ஸ் டா்ச்சர் கொடுக்கிறதும் வாடிக்கையா வைச்சு இருக்கான்..”
என்று தினகரன் சொல்ல,
“என்ன அண்ணா சொல்ற..!! ஆள் ரொம்ப டீசன்ட்டா இருப்பான் ண்ணா..”
என்றான் அதிர்ச்சியாக.. அவனால் நம்பவே முடியவில்லை. ஏனெனில் கரிகாலன் தோற்றதில் அத்தனை மதிப்பும் ஒரு மேல்தட்டு மக்களின் மிதப்பும் இருக்கும்..!!
“ஆமா டா… தப்பு பண்றவன் நான் இப்படி தான்னு எழுதிட்டா திரிவானுங்க.. மாட்டிக்கிற வரை எல்லாரும் உத்தமன் தான்.. எனக்கு உன் பிரென்ட் விக்னேஷ் மேலேயே சந்தேகம் இருக்கு..”
“ச்சே… ச்சே.. சான்ஸே இல்ல.. விக்கி குடும்ப சூழ்நிலையால இங்க கிடந்து கஷ்டப்பட்டுட்டு இருக்கான்.. மத்தபடி அவனுக்கு ஊரோட போய் அங்கேயே ஒரு வேலையை பார்த்துக்கிட்டு அவன் குடும்பத்தோட இருக்க தான் ஆசை..!! அப்படி செய்யிற ஆள் இல்ல ண்ணா..”
“அப்போ அவனுக்கும் கரிகாலனுக்கும் எப்படி பழக்கம் இருக்கும்…?? நீ போனால் தான் தெரியும் ஜெயந்த்.. மேக்சிமம் கரிகாலன் இருக்க மாட்டான்.. ஒருவேளை அவனும் அங்க இருந்தால் வேற மாதிரி தான் பேசணும்..” என்றவன்,
“எதுவா இருந்தாலும் நாளைக்கு போயிட்டு பேசு ஜெய்ந்த்.. நம்ம ஆதவனோட தங்கச்சியை தற்கொலை முயற்சிக்கிற அளவு தூண்டி இருக்கான்.. அந்த நாயை தப்பிக்கவே விடக் கூடாது..”
என அலுங்காமல் ஒரு குண்டை போட்டுவிட்டு அழைப்பை வைத்துவிட ஜெய்ந்த் பதறி போனான்.
சுந்தரமூர்த்தி குடும்பத்தோடு பெரிதாக பழக்கம் இருந்தது இல்லை என்பதால் அனன்யா பெயர் சொன்னால் ஜெயந்திற்கு யாரென தெரியாது என்ற எண்ணத்தில் ஆதவன் தங்கை என குறிப்பிட்டு இருந்தான் தினகரன். ஆனால் ஆதவனின் உடன் பிறந்த ஒரே தங்கை அபூர்வா தானே..!
“அபூர்வா வா..??? அவளா தற்கொலை முயன்றால்…”
இதயம் படபடவென அடித்துக் கொள்ள தினகரன் கூறியதை ஏற்கவே முடியவில்லை. அபூர்வா அவனுடன் பேசுவதை நிறுத்தி ஒரு மாதம் போல் ஆகியிருந்தது.
கமலினி தனக்கு கூறியதை மறைக்காமல் அவனோடு பகிர்ந்துக் கொண்டவள்,
“வேண்டாம் மாமா.. கமலி சொன்னது சரி தான்.. இப்படியே போயிட்டு இருந்தால் படிச்சு நான் நினைச்ச உயரத்தை அடைவேனான்னு எனக்கே சந்தேகமா இருக்கு.. இப்ப நேசிக்கிற நானே பின்னாடி இதுக்காக உங்களை வெறுக்க ஆரம்பிச்சுட்டால் வாழ்க்கை நரகமாகிடாதா..? அந்த சூழ்நிலையில்
நிற்கிற நிலைக்கு இப்பவே விலகி இருக்கிறது தான் நல்லது..!! ஒருவேளை நாம பேசாம விலகியே இருந்தால் இது வெறும் இன்ஃபக்ஷுவேனா நமக்கு மறந்தே கூட போயிடும்…!!!”
கடைசியாய் சொல்லும்போது தொண்டை அடைக்க மேலும் பேசாமல் பட்டென்று வைத்து விட்டாள். அது தான் அவளிடம் கடைசியாய் பேசியது..!! முதலில் அத்தனை ஆத்திரமும் கோபமும் வந்தது உண்மை தான். ஆனால் யோசிக்க யோசிக்க படிக்கும் பிள்ளையின் கவனத்தை சிதற வைப்பது தப்பு தானே என நியாயமான மனமும் உணர்த்துக் கொண்டது.
சில சமயம் காதலில் பிரிவும் தவிர்க்க முடியாத ஒன்று தானே..! இந்த பிரிவின் அவசியத்தை புரிந்து
அவளுக்கான நேரத்தைக் கொடுக்கவே ஒதுங்கி இருந்தான். ஆனால் அவளை விட்டுவிடும் எண்ணம் எல்லாம் இல்லை.
ஆனால் இப்போது..!!
தன்னவளை அப்படி ஒரு நிலையில் நிறுத்தி பார்க்கவே பிடிக்கவில்லை. இரவு முழுவதும் பொட்டு உறக்கம் இல்லாமல் தவித்திருந்தான்.
மறுநாள் விடிந்ததும் விக்னேஷ் வீட்டில் அவன் வந்து நின்ற கோலத்தில்,
“ஹே என்ன ஜெயந்த் நானே ஆபிஸ் தான் கிளம்பிட்டு இருக்கேன்.. திடீர்னு வந்து இருக்க.. உன் முகமும் சரியில்லையே.. எனி ப்ராப்ளம்..”
என்று விசாரித்தான். ஜெயந்த் உடனே பதில் கூறவில்லை. அவன் பார்வை கரிகாலன் தென்படுகிறானா என துலவியது.
“ஜெய்ந்தன்…”
என விக்கி மீண்டும் அழைக்க தினகரன் கூறிய பொறுமை எல்லாம் ஜெயந்தனிடம் இல்லை.
“எங்க டா உன் பிரென்ட் கரிகாலன்..??”
என எடுத்த எடுப்பில் கோபமாய் கேட்க,
“அவன் வெளியூர் போயிருக்கான் ஜெய்ந்த்.. அவனை தெரியுமா உனக்கு..?”
என்றான் புரியாமல்.
“அவனை உங்களுக்கு எல்லாம் முழுசா தெரியுமா.. தெரியாதான்னு தான் சந்தேகமா இருக்கு.. உனக்கு எப்படி அவனோட பழக்கம்..?”
“ஏன் இப்படி கேட்கிற..”
“நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுடா..”
“நாங்க எல்லாம் ஒரே ஊர் ஜெயந்த்.. படிச்சதும் ஒரே ஸ்கூல் தான்.. ஸோ சென்னையில் வேலை தேடி வந்தபோது நாங்க ரெண்ட்காக சேர்ந்து இந்த ரூம் எடுத்தோம்… அப்புறம் மாற தோணல..!!”
” சின்ன வயசுல இருந்து பழக்கம்ன்னா நீங்க எல்லாம் ரொம்ப க்ளோஸ் தான் இல்ல.. அப்போ அவன் செய்யிற கேவலம் எல்லாம் தெரிஞ்சும் நீங்க எல்லாம் தெரியாத மாதிரி இருக்கீங்க.. இல்ல நீங்களும் கூட்டா.. ச்சே உன் மேல நான் நிறைய மரியாதை வைச்சு இருந்தேன் விக்கி.. அசிங்கமா இருக்கு..”
நேற்றில் இருந்து அவனின் மன அழுத்தம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது.
காரணம் சொல்லாமல் ஜெய்ந்த் காட்டும் ஆவேசம் விக்னேஷையும் சீண்டிவிட,
“ஹேய் என்ன டா ரொம்ப பேசுற.. என்ன செஞ்சுட்டாங்க இப்ப..”
என அவனும் அதட்டினான்.
“என்ன செய்யல.. வக்கிரம் பிடிச்ச இந்த பொறுக்கி எத்தனை பொண்ணுங்க லைஃபை கெடுத்து இருக்கான் தெரியுமா..”
என ஆரம்பித்து ஜெயந்த் கரிகாலனை குறித்து அனைத்தும் சொல்ல திடுக்கிட்டு போனான். அவனுக்கு சில நிமிடங்களுக்கு பேச்சே வரவில்லை.