“டேய் இந்த கை லைட்டா ஒதருதா பாரு?”
தமிழ் வீட்டு மடியில் நிலா வெளிச்சத்தில் தமிழ், ஆதி, கெளதம் மூவரும் தரையில் படுத்து வானத்தை பார்த்து கொண்டு இருந்தனர். ஆதி நடுக்கத்தில், தமிழ் யோசனையில், கெளதம் கனவில். மூவரும் அவரவர் உலகில் பயணித்து கொண்டு இருந்தனர். இரவில் வீசும் அந்த குளிர் காற்று அவர்களின் எண்ணத்தை மேலும் காற்றை போல நிலை இல்லாமல் பறக்க வைத்தது.
அமைதி பதிலாய் கிடைக்க கௌதமை திரும்பி பார்த்தவன், அவன் வானத்தை பார்த்து சிரித்து கொண்டு இருப்பதை உணர்ந்து தன் தலைக்கு மேல் இருக்கும் சொம்பில் இருந்த தண்ணீரை மேலே ஊற்றினான். ஆனாலும் முகத்தை துடைத்து மீண்டும் சிரிக்க ஆரமிக்க, காலை ஓங்கி ஒரு மிதி வைக்க வலியில் துடித்த கெளதம், “டேய் போன் பேச கூடாதுனு வாங்கி வச்சிட்ட, சேரி நீயாவது பேசுவனு பாத்தா கனவு காண போய்ட்ட… இப்ப எதுக்குடா என்ன அடிக்கிற சனியனே”
“அவனை மாதிரியே நாமளும் சாமியாருனு நெனக்கிறாண்டா இவன்” என்றான் தமிழ்.
“யாரு சொன்னா நான் ஒரு ஆள உசார் பண்ணிட்டேன்” அசடு வழிந்தான் ஆதி.
“தம்பி இந்த டகால்டி வேலை எல்லாம் இங்க வேணாம் உனக்கு வர்ற ஒரு வார ஈர்ப்பு எல்லாம் கணக்கு இல்ல. அவன் கல்யாணம் பணிக்க போறான். நா லவ் பண்றேன். நீங்க ‘பிலே காட்’. ஒரு மோகம் இருந்தா கூட உன்ன ஒரு வகைல பொறுக்கின்னு சேக்கலாம் நீ பொழுது போக்குக்கு வாரத்துக்கு ஒரு பொண்ணு கூட கடலை மட்டுமே போட்டுட்டு இருக்க. வாய் பேசவே தகுதி இல்லாதவன் நீ” ஆதி போர்த்தி இருந்த போர்வையை எடுத்து தலையை துடைத்தவன் மீண்டும் தன் போர்வைக்குள் புகுந்தான் கெளதம்.
கெளதம் கூறியதை கேட்ட தமிழ் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரமித்தான், “மச்சா பாத்தியா உன்ன இந்த ஆக்டோபஸ் வாயன்லாம் பேசுற நிலமைல இருக்க”
“ஏய் ச்சீய் அங்குட்டு போய் தொலை” என்று தன் மேல சிரித்தபடியே இருந்த தமிழை தள்ளி விட்டவன், கௌதமை மீண்டும் எழுப்பி, “டேய் மச்சான் என்ன வேணா பேசிக்கோங்கடா ஆனா இந்த கை ஒதறலுக்கு ஏதாச்சு வழி சொல்லுங்கடா”
“மொடா குடிகாரன் மாதிரியே நடிக்கிறியேடா” என்றான் தமிழ்.
“இந்த நேரத்துல சரக்குக்கு எங்கடா போறது நேரம் கெட்ட நேரத்துல இதெல்லாம் கேப்ப. கீழ உன் தங்கச்சி வேற இருக்கு மூடிட்டு படுத்து தூங்கு” என்று மீண்டும் படுக்க சென்றவனை நிறுத்தினான் ஆதி.
“டேய் எல்லாம் பக்காவா என் வண்டில இருக்கு. என் தங்கச்சி இங்க இருக்க தைரியத்துல தான் நான் குடிக்கலாம்னு சொல்றேன். ப்ளீஸ்டா போன வாரமே குடிக்க வேண்டியது”
நண்பர்கள் திருமணம், பார்ட்டி என்று எல்லை கோடு வகுத்தவன், நாட்கள் செல்ல செல்ல மாதம் இருமுறை கண்டிப்பாக குடிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு மாறி இருந்தான். கெளதம், தமிழ் பல முறை எடுத்து கூறியும் கேட்காதவன் சிகரெட், குடி பழக்கத்தில் மட்டும் யார் பேச்சையும் கேட்கும் நிலையில் இல்லை.
வீட்டில் அனைவரும் உறங்கிவிட்டனர் என்று தெரிந்த பிறகு பூனை போல் வந்து மறைத்து வைத்து இருந்த இரண்டு பைகளை எடுத்து மாடிக்கு விரைந்து ஓடினான். அங்கே கெளதம், தமிழ் ஏதோ தீவிரமாக பேசி கொண்டிருக்க தன் வேளையில் மட்டுமே குறியாக இருந்தான் ஆதி. ஒரு பாட்டில் எடுத்து கடகடவென குடிக்க ஆரமித்தவன் பாதி தீரும் வரை மூச்சு கூட விடவில்லை.
திருப்தியாக குடித்தவன் தன் பாக்கெட்டில் இருந்து சிகரெட் ஒன்றை எடுத்து பத்த வைத்தான் முகத்தில் ஒரு சிரிப்புடன், “நான் வேணா வேணாம்னு தான போறேன் ஆனா ஏண்டா எனக்கு இப்புடி எல்லாம் நடக்குது?” வாழ்க்கையே வெறுத்தவன் போல் கூறி அந்த கேடான புகையை ஆழ்ந்து உள் இழுத்தான்.
“அரை போதை நாயே குடிச்சு முழுசா ஒரு நிமிஷம் கூட ஆகல அதுக்குள்ள அரமிச்சிருச்சு” என்று அங்கே இருந்த ஒரு சிக்கன் கரி துண்டை எடுத்து உண்ண ஆரமித்தான் தமிழ்.
ஆனால் கெளதம் அவன் கூறியதில் சற்று புருவம் உயர்த்தி பார்த்தவன், “என்னடா ஆச்சு” என்றான்.
“நாம எத பாத்து கத்துக்குறோமோ அது மாதிரி தான நாம ஆகமுடியும்?” மீண்டும் ஒரு மடக்கு குடித்தவன் கௌதமை நோக்கி கேள்வி எழுப்பினான், ஒன்றும் புரியாதவன் ஆமாம் என்று தலையை மட்டுமே அசைக்க முடிந்தது. அதை மீறி மனதில் இருக்கும் வலியை மறைக்கும் ஆதியின் கண்களில் அவனால் எதுவும் காண இயலவில்லை.
தன்னால் இயன்ற வரை அவன் வலியை எவரிடமும் காட்டி கொள்ளாதவன் வழக்கமாக போதையில் இருக்கும் பொழுது செய்யும் ரகலையை எங்கோ தொலைத்து இருக்கிறான் என்று கௌதமால் யூகிக்க முடிந்தது, “ஆரமிச்சிட்டாண்டா இவன். ஒரு பாட்டில் புல்லா காலி பண்ணிட்ட போதும். படுத்து தூங்கு” என்று தமிழ் உறங்க சென்று விட கௌதமால் அவனை இந்த நிலைமையில் விட்டு தூங்க முடியவில்லை. கையில் பாட்டிலோடு எழுந்த ஆதி சுவற்றின் மீது ஏறி அமர்ந்தான் வானைத்தை வெறித்து.
“ஒரு மாதிரி இருக்கு மச்சா” தன் கையை காண்பித்தவன், “இங்க பாரு என் கை இன்னும் நடுங்குது. போதைக்கு இல்ல மனசுல என்னமோ பெருசா நடக்க போகுதுனு சொல்லுது, கண்டிப்பா எனக்கு புடிக்காத ஒரு விசியம் நடக்க போகுது” மீண்டும் ஒரு சிகரெட் எடுத்து வாயில் வைத்தவன் அதை பத்த வைக்கும் பொழுது நடுங்கிய கைகளை கோபத்துடன் பார்த்து அந்த சிகரெட்டை தூக்கி எறிந்தான்.
“இன்னைக்கு ஒருத்தர பாத்தேண்டா ஆபீஸ்க்கு வெளிய. நல்ல டிப் டாப்பா இருந்தாரு ஒரு அம்பது வயசு இருக்கும், கோட் சூட் போட்டு சும்மா தள தளன்னு இருந்தாரு. இருவது வயசுல கண்டிப்பா செம்மையை இருந்துருப்பாரு” கண்களை சுருக்கி ஆதியை பார்த்தவன், ‘கெழவன கூட விட்டு வைக்க மாட்டிக்கிறான்’
“ஆனா அவரு பார்வைல ஏதோ ஒரு திமிரு, கர்வம் இருந்துச்சு. என்ன மேல கீழ ஏற இறங்க பாத்தாருடா… சரி தெரியாம பாக்குறாருனு அவரை கிராஸ் பண்ணி போனேன் ஆனா அவரு என் பேர கரெக்டா சொல்லி கூப்டாரு. எப்டி என் பேரு தெரிஞ்சதுனு சுத்தமா தெரியல. அவரை முன்ன பின்ன நான் பாத்தது கூட இல்ல. என்னனு கேட்டப்ப அவரே வந்து என்கிட்ட தனியா பேசணும்னு சொல்லி பக்கத்துல இருக்க ஒரு காபி ஷாப்க்கு கூட்டிட்டு போனாரு, எனக்கே தெரியாம நான் போனே அவர் கூட. அப்ப தான் சொன்னாரு அவருக்கு என் அப்பாவை தெரியுமாம்” ஏதோ ஒன்று பெரிதாக நிகழ்ந்து உள்ளது என்று யூகித்தான் கெளதம் துணைக்கு தமிழை தேட அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்.
“என்ன நீங்க முன்ன பின்ன பாத்துருக்க மாட்டீங்க தம்பி உங்க அப்பாவை எனக்கு நல்லா தெரியும் அடிக்கடி தொழில் விசயமா சந்திச்சுக்குவோம் பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடியே உங்க அப்பா தொழில் அவளோ சுத்தமா இருக்கும்னு நினறயபேர் சொல்லி கேள்வி பட்ருக்கேன்”
அவர் மீண்டும் பேசும் முன்பே, “உங்க பேர் என்ன?” தந்தையை பற்றி கேட்ட நொடி அவன் கண்களில் வந்து ஓடிய வெறியையும், கோபத்தையும் கண்டவர் இவனை தவிர வேறு யாவராலும் அவருக்கு உதவி செய்ய இயலாது என்று ஆணித்தனமாக நம்பினார்.
கண்களில் பெருமை மின்ன, “விருத்தாச்சலம்” என்றார்.
தன்னை படித்தவன் அமைதி காக்க மேலே தொடர்ந்தார், “அதுக்கு அப்றம் ஒரு தடவ நான் உன் அப்பாவை பாத்தேன். என்ன மனுஷன்யா சொக்க தங்கம்… பேசுற ஒவ்வொரு வார்த்தையையும் சும்மா செதுக்கி வச்ச மாதிரி தெளிவா இருந்துச்சு. ரொம்ப புடிச்சிருந்துச்சு அவரோட பேச்சு, குணம் எல்லாமே. சரி அப்புடியே அவர் கூட சேந்து வேலை பாக்கலாம்னு அவர்கிட்ட பேசுனேன். நிமிஷம் வேஸ்ட் பண்ணாம முடியாதுனு சொல்லிட்டாரு”
“ஏன்?” கேட்டான் ஆதி.
“லாபமோ நஷ்டமோ தனியாவே பாத்துக்குறேனு சொல்லி வெலகிடாரு. நானும் ஒன்னும் நினைக்கல அப்றம் கொஞ்ச நாள் கழிச்சு அப்பா தவறுன செய்தி வந்துச்சு, அம்மாவை பாத்து தொழிலுக்கு உதவி பண்ணலாம்னு வந்தேன் உங்க வீட்டுக்கு. அப்ப தான் உங்க அம்மா என்கிட்ட அந்த பொறுப்பை குடுத்தாங்க ஒரு கண்டிஷனோட அந்த தொழிலை வர வருமானதுல வெறும் 5 பெர்ஸன்ட் ப்ராபிட் மட்டும் தான் தர சொன்னாங்க அதுவும் உங்க பேர்ல டெபாசிட் பண்ண சொன்னாங்க, என் கைல அந்த பொறுப்பை எடுத்த கொஞ்ச நாளையே உங்க அம்மாவும் தவறிட்டாங்க”
“சார் ஒரு நிமிஷம் தப்பா நினைக்காதீங்க இப்ப அந்த பணத்தை குடுக்க தான் நீங்க வந்துருந்தா ப்ளீஸ் எனக்கு அது வேணாம் நீங்களே வச்சுக்கோங்க, எங்க அம்மா பிள்ளை கஷ்ட பட கூடாதுனு நெனச்சு சொல்லிருப்பாங்க. என் கைய நம்பியே நான் பொழச்சிக்குவேன். இப்ப அது உங்க கைக்கு போச்சோ அப்பயே அது உங்க பணம்”
ஆதியை தெளிவாக கவனித்தனர் “இது தான் தம்பி வளர்ப்பு. உங்க அப்பா அம்மா குணம் உங்களுக்கு அப்டியே இருக்கு. ஆனா நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கல”
ஆதி தலையை அசைக்க அவர் மீண்டும் தொடர்ந்தார், “நான் உங்க அப்பா தொழிலை எடுத்து 8 வருசமா நடத்துனேன் நல்லா போய்ட்டு இருந்துச்சு. உங்க அம்மா சொன்ன மாதிரி நான் அத நடத்துறது உங்க யாருக்குமே தெரியாது ஏன் உன்னோட பிரண்டோட அப்பாவுக்கு கூட தெரியாம பாத்துக்குட்டேன். ஆனா ஒரு 6 வருசத்துக்கு முன்னாடி எனக்கு ஏகப்பட்ட மிரட்டல் வந்துச்சு அந்த வேலைய பாக்க கூடாதுனு.
நான் எடுத்து வக்கிர ஒவ்வொரு அடிக்கும் எனக்கு தோல்வியும், என் வீடு ஆளுங்க ஒருத்தரோட உயிரும் ஆபத்துல வந்து நின்னுச்சு. ஆனாலும் அத தொடர்ந்து பண்னேன், உன்ன கூட அடிக்கடி அந்த ஆபீஸ்க்கு வெளிய பாப்பேன். ஆனா உள்ள கூப்ட முடியாத சூழ்நிலை. அடுத்து நாள் நகர நகர என்னால தாங்க முடியாத சூழ்நிலை. ஒரு நாள் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து அவசரமா வர சொல்லி சொன்னாங்க போய் பாதப்ப உங்க அப்பா கட்டுன பல கட்டடங்கள் தரமே இல்லாம இருக்குனு ரிப்போர்ட் வந்துச்சு அதுல 4 கட்டிடங்கள் இடிஞ்சும் விழுந்துருச்சு”
ஆதி கண்களை மூடி தன்னை அமைதி படுத்தி கொண்டிருந்தான். எப்படி மறக்க முடியும் அந்த நாட்களை கல்லூரி படித்து முடித்து தந்தையின் தொழிலை பார்க்க நினைத்தவனுக்கு பரிசாக கிடைத்தது தொலைக்காட்சிகள் அவர் புகைப்படத்தை உலகிற்கே காட்டி கொண்டிருந்தது ஏளன பேச்சுகளுடன்.
அவரை சபிக்காத ஆட்கள் இல்லை, அதுவரை எட்டி பார்க்காத உறவுகள் வீடு தேடி வந்து கூறிய சொற்கள் காதில் விழுந்தது தானே. கட்டிட கலையை பற்றி அவன் தந்தை பேசும் பொழுது அவர் கண்கள் மின்னுவதை கண்கூடாக பார்த்தவனுக்கு அவன் தந்தை இவ்வாறு செய்வார் என்று நம்ப இயலாத காரியமாக இருந்தது ஆனால் தன்னையும் மீறி அவர்மேல் கோவம் தான் வந்தது அவனுக்கு. எப்படி இவ்வாறு மனிதாபிமானம் இல்லாமல் அவரால் செய்ய முடிந்தது என்று தந்தையை வெறுக்கவும் செய்தான்.
“உங்க அப்பாவோட நேம்ல இருந்த லைசன்ஸ்ல தான் நானும் வேலை பாத்ததால என்னால வேலைய தொடர்ந்து பண்ண முடியாம இந்த ஊற விட்டே போய்ட்டேன் சிங்கப்பூக்கு. கம்பெனியையும் கவர்மென்ட் சீல் வச்சிடுச்சு. ஆனா தொடர்ந்து எனக்கு உறுத்திட்டே இருந்துச்சு அதனால இந்த ப்ராப்லம் பின்னாடி இருக்கத விசாரிக்க சொன்னேன் போன மாசம். அப்ப தான் தெரிஞ்சது உங்க அப்ப மேல எந்த தப்பும் இல்லனு அவர் செஞ்ச ஒவ்வொரு வேலையும் தரமான வேலை. ஒருத்தர் உங்க அப்பா பேர கெடுக்குறதுக்குனே நடந்த சதி வேலை அதுனு தெரிஞ்ச ஒடனே சொல்லணும்னு தான் தம்பி உங்கள பாக்க வேகமா வந்தேன்”
“யாருனு தெரிஞ்சதா சார்?” என்று கேட்டவனது கண்கள் கோவத்தில் சிவந்து இருந்தது.
தந்தையின் பெயரை ஊருக்கே தவறாக காட்டியவன் தன்னையும் தந்தைக்கு எதிராக மாற்றி வெற்றியும் பெற்றிருந்தான். யாரை போல் வர கூடாது என்று எவரேனும் கேட்டால் தந்தை என்று யோசிக்காமல் கூறுவான் அவ்வளவு கோவம் இருந்தது ஆதிக்கு ஆனால் இன்று அதற்கு துளி கூட அர்த்தம் இல்லை என்று தெரியும் பொழுது தன்னையே வெருக்கதான் செய்தான்.
அவர் தெரிந்தது என்று தலை அசைத்தார் உள்ளுக்குள் தன் திட்டம் வெற்றி பெற போகின்ற ஆனந்தத்தில்.
“யார் அது?” கெளதம் கேட்க…
கையில் இருந்த பாட்டிலை கோவத்தில் எரிய அது தண்ணி தொட்டியில் பட்டு கண்ணாடி சில்கள் சிதறும் சத்தம் பலமாக கேட்டது. தூக்கத்தில் இருந்த தமிழ் அலறி அடித்து எழும்ப…
“உதய் மாதவன்” என்று வெறுப்பு நிறைந்த ஆதியின் வார்த்தைகளே அவன் காதில் விழுந்தது.
How is the chapter?
SO the clash begins…
கமெண்ட் போட்டுட்டு போங்கோ ப்ளீஸ்..