Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 35.1

மருத்துவமனையை விட்டு வெளியில் வந்த ஆதி கண்ணில் சிக்கினாள் அவன் மான்குட்டி. வராத சிரிப்போடு நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தவள் கண்ணில் அத்தனை பரிதவிப்பு.

அவளை பிடித்து வைத்திருந்த நண்பர்களுக்கு நன்றியை மனதின் உள்ளே உரைத்தவன் வேகமாக அவர்களை நோக்கி கால்களை அகற்றினான்.

ஆதி வருவதை பார்த்தவள் அவசரமாக நண்பர்களிடம் விடைபெற்று நகர்ந்தாள்.

“ஆதவா கார் கீ தா” காலில் வெந்நீரை ஊற்றியது போல் துடித்தவன் கண்கள் மொத்தமும் நடந்து செல்லும் அவனவள் தான்.



Advertisement

காற்றில் பறந்துகொண்டிருந்த அவன் கையில் சாவி விழுந்ததையும் கவனிக்கவில்லை ஆதி.

“சாவி வச்சு ஒரு மணி நேரமாச்சு நீங்க கைய கீழ இறக்கலாம்” தமிழ் குரல் கேட்டு அப்பொழுது தான் அதை கவனித்தான் ஆதி.

‘ஈஈ…’ பற்களை காட்டி சிரித்தவன் துரிதமாக வாகனத்தை நோக்கி நகர அவன் கையை பிடித்து நிறுத்தினான் கெளதம், “எங்க போற?”

Advertisement

“மான்குட்டிக்கு கால் வலிகிதாம்… அது தான் ஜண்டு பாம் வாங்கி தர போறேன்” – ஆதி

Advertisement

மீண்டும் பறக்க தயாராக இருக்க இன்னும் விடவில்லை கெளதம்.

“ஏதேய்??!!…” – கெளதம்

“கால் வலிக்கு ஜண்டு பாம் போடணும்னு நான் இப்போ தான் கேள்வி படுறேன்” – தமிழ்

Advertisement

“அடேய் கலாய்க்கிற நேரமில்லைடா இது மான்குட்டி ஓடுது… கைய விடுடா பேமானி” என்ன பேசியும் கெளதம் நண்பனின் கையை விடவில்லை.

“தழல் சீரியஸ் கண்டிஷன்ல இருக்கானாம். ஈஸ்வரன் அதே நிலைமை தான்” இவன் நம் பேச்சை கேட்கப்போவதில்லை என்று ஒப்புவித்தான் தமிழ்.

ஒரு நிமிடம் நின்று அவன் பேசியதை கேட்டவன், “அவனுகள விட்டுட சொல்லுடா… உள்ள இருக்கறவன் காலு காலுன்னு கத்துறான்”

நண்பர்கள் விசித்திரமாக அவனை பார்க்க, “என்னடா அப்டி பாக்குறீங்க? தழல் மேல கூட எனக்கு பெருசா கோவம் இல்ல, ஈஸ்வரன் மேல தான் வெறியேறுது. நாம அவன அடிச்ச அடிக்கு வெளிய போனாலும் ஒரு மணி நேரம் கூட தாங்க மாட்டான். ஏதாவது காட்டுக்குள்ள விட்டுட்டு வர சொல்லிடு. நம்மளால அவன் சாக கூடாது அவ்வளவு தான். ஆனா அவன் துடி துடிச்சு சாகனும். அத மட்டும் ஜெயன பாத்துக்க சொல்லு”

ஆதவனை பார்த்து, “சஹானாவை வீட்டுல விட்டுடு நான் ஒரு மணி நேரத்துல வந்துடுவேன்” மறைமுகமாய் அவர்கள் காதலுக்கு பச்சை கொடி காட்டியவன் வாகனத்தினுள் நுழைந்தான்.

“தமிழு, கௌதமு… இவன் என்னோட லவ்க்கு ஓகே சொல்லிட்டானா?” நம்ப முடியாமல் நண்பர்களிடம் சந்தேகம் கேட்டான்.

“கல்யாணத்துக்கே ஓகே சொல்லிட்டாண்டா என் வென்று” சந்தோசமாக நண்பனை அடித்தான் கெளதம். அங்கு வாகனத்தை எடுத்துக்கொண்டு  சென்றவன் வேகமாக நடந்து செல்லும் மணிமேகலையை மறித்து அந்த கூட்ட நெரிசலான சாலையில் நிறுத்தினான்.

மறித்து நின்றவன் கண்ணாடியை இறக்கிவிட்டு, “ஹாய் டா மான்குட்டி” உற்சாகமாக வணக்கம் வைத்தான்.

“போங்க நான் பேச மாட்டேன்” மான்குட்டி அழைப்பில் மனதில் இருந்த சோகம் எல்லாம் வீதி என்றும் பாராமல் கண்ணீரை அவனிடம் காட்டினாள்.

“போக மாட்டேன். வா வண்டில வந்து ஏறு” – ஆதி

“உங்க கூட எல்லாம் நான் வர மாட்டேன். போங்க… போங்க” என்றாள் இன்னமும் அழுகையுடன். சில நொடிகள் பொறுமை காத்த வாகன ஓட்டிகள் பொறுமை தாளாமல் ஹாரன்களை இஷ்டத்திற்கு அலறவிட்டனர்.

“இப்போ என்ன வேணும் உங்களுக்கு? டிராபிக் ஆகிட போகுது. கிளம்புங்க” என்றாள் மனமே இல்லாமல். பின்னால் இரைச்சல் சத்தம் கூடிக்கொண்டே சென்றது.

“நீ இல்லாம வண்டி ஒரு இன்ச் கூட நகராது” அவனும் பிடிவாதமாய் இருக்கையில் வசமாய் சாய்ந்து அமர்ந்து ஏதோ பாட்டை முணுமுக்க துவங்கினான்.

“யார்டா நீ… நடு ரோட்டுல வண்டிய சாவகாசமா நிப்பாட்டிட்டு இருக்க, எடுடா…”

“யோவ் வேலை வெட்டி இல்லனா ஓரமா போய் நின்னு ஒய்யாரமா ஓய்வெடு, உயிரை வாங்கனே நிக்கிறானுக பாரு”

பார்ப்போர் எல்லாம் ஆதியை கண்டமேனிக்கு திட்ட அவனோ எதையும் காதில் வாங்காமல் உல்லாசமாக அமர்ந்திருந்தான். திருட்டு முழியோடு நின்ற மணிமேகலையை ஒட்டி உரசி இருசக்கர வாகனங்கள் செல்ல துவங்க இருந்த ட்ராபிக் நெரிசலை பார்த்த ஒரு காவல் அதிகாரியும் வருது தெரிந்த உடன் வேகமாக காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்துகொண்டாள் மணிமேகலை, “பிடிவாதம்” என்ற முணுமுணுப்புடன்.

அவனோ அவளை முன்னே இருந்த கண்ணாடி வழியாக பார்த்து, “இங்க மச்சான் பக்கத்துல வந்து ஒக்காருடா” என்றான் ஆசையாக.

உதட்டை சுளித்தவள் முகத்தை சாலையில் திருப்பிவிட பெருமூச்சு விட்ட ஆதி, “இதுவும் நல்லதுக்கு தான்” வாகனம் மெல்ல அந்த இடத்தை விட்டு அகன்றது.

வேகமாக சென்ற வாகனம் தன் இல்லத்தை நோக்கி செல்லவில்லை என்பது புரிந்தும் அவனிடம் எதுவும் பேசவில்லை மணிமேகலை, மனதிலிருந்த பாரம் வார்த்தைகளை சிறைசெய்திருந்தது. இடை இடையே ஆதியின் கெஞ்சல் அழைப்புகளை கேட்க கேட்க மாரி பொழிய இருந்த கண்ணீர் துளிகள் தடையே இல்லாமல் வெளியேற ஆதியின் கைகளின் வாகனம் இன்னும் வேகமெடுத்து பிரீசி பீச் இருந்த இடத்தில் வந்து நின்றது.

பொதுவாகவே ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்த கடலில் வார நாளான இன்று சுத்தமாகவே ஆட்கள் இல்லாமல் போயினர். வாகனத்தை நிறுத்திய ஆதி, மணிமேகலை அருகில் வந்து அமர்ந்தவன் கதவை அடைத்து அவள் கைகளை பற்றினான். ஆதியின் கைகளில் இருந்த சூட்டினை உள் வாங்கியவளுக்கு அதை பிரிய மனம் வரவில்லை.

“மான்குட்டி அழுகாதடி” அவள் கண்ணீரை பொறுக்க முடியாதவனாய் கெஞ்சினான். ஆனால் அவளுக்கோ இன்னும் இன்னும் தான் அழுகை வந்தது.

“நான் அழுவேன் நீங்க யாரு அத சொல்ல?” – மணிமேகலை

“நான் யாரா? உன்னோட ஆதிடி நான்” – ஆதி

“இல்ல, நீங்க தான் என்ன வேணாம்னு சொல்லிட்டீங்கல்ல? அப்றம் எப்படி என்னோட ஆதியா இருப்பிங்க?” – மணிமேகலை

“ஹே அது நான் என்னோட கண்ட்ரோலயே இல்ல மேகா” பேசியபடியே அவன் மடியில் சாய்ந்து படுத்தான்.

அதில் விக்கித்தவளோ, “என்… என்ன பண்றீங்க?”

“யார் மடிலயாவது சாயனும் போல மனசு கொஞ்சம் பாரமா இருக்குடி ப்ளீஸ்”

“யாராவது பாத்துட்ட போறாங்க… பப்ளிக் ப்ளேஸ் இது” அவன் தலையை தன் மடி மீதிருந்து உயர்த்தினாள்.

அவனோ அவள் கையை தன்னுடைய நெஞ்சில் வைத்துக்கொண்டு, “பாக்கட்டும். உன் மாமன் ஹக்கிங், கிஸ்ஸிங் எல்லாம் தாண்டி போய்ட்டான். நான் இப்போ தான் மடிலேயே சாஞ்சிருக்கேன். விடு மேகா” என்றவன் மேலும், “உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல?” வாடியது அவன் முகம்.

“ஆமா நான் ரொம்ப அழுதேன் தெரியுமா?” சிறு பிள்ளையாய் கேள்வி எழுப்பியவளை இப்படி மனம் நோகும்படி செய்துவிட்டோமே என்ற வருத்தம் தான் மேலும் கூடியது ஆதிக்கு.

“பாதிலயே உன்ன விட்டுட என்னைக்குமே நான் யோசிச்சது கூட இல்ல மேகா… ஆனா திடீர்னு சஹானாக்கு நடக்க முடியாதுன்னு சொன்னதும் எல்லாமே மாறிடுச்சு. ஆதவன் வீட்டுல நடக்க முடியாத என் தங்கச்சிய மருமகளா ஏத்துக்க முடியல போல.

அவனோட அப்பா நடவடிக்கைல மொத்தமா வித்யாசமா இருந்தது, அவனோட அம்மா கடமைக்கே-னு மகனுக்காக சஹானாவை பாத்துகுட்டாங்க. அப்டி இருக்கறப்ப அந்த வீட்டுல என் சஹானாவை குடுக்க எனக்கு மனசு வரல. அப்ப இதே நிலைமை தானே எங்க சஹானாவை கல்யாணம் பண்ணி குடுத்தாலும் வரும்?”

“முதல அவங்க வேற பையனுக்கு ஓகே சொல்லுவாங்கனு நீங்க நினைக்கிறதே தப்பு” ஆதியை இடையிட்டு அவன் எண்ணங்களை திருத்தினாள்.

“அதுவும் ஒரு காரணம் தான். இப்போ சொல்லு… சஹானாவை வீட்டுல வச்சிட்டு நாம நம்ம கல்யாணம் பத்தி எல்லாம் பேச முடியுமா?” தயக்கமாய் அவனை பார்த்த அவள் கைகள் அவன் கூற்றை ஆதரிக்கும் வகையில் ஆதியின் சிகையில் அவள் கைகள் விளையாடியது.

“என் நிலைமை புரியுதா மேகா?” – ஆதி

கண்ணீரில் ஈரமான அவன் கணங்களை காய வைக்க கொடி கம்பியை தன் உள்ளங்கையை கொடையாக தந்தாள். காரில் இருந்த ப்ளூடூத் உதவியுடன் பாடலை போட்டான் ஆதி.

காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்

தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்

“பாட்டுக்கு எந்த குறையும் இல்ல… நீங்க சொல்றது நல்லாவே புரியுது, ஆனா மனசுக்கு புரிய மாட்டிகித்தே… உங்களையே சுத்தி சுத்தி வந்து நின்னா, அப்டி ஒருத்தி இருக்குற மாதிரியே நடந்துக்க மாட்டீங்க நீங்க”

பாடலை நிறுத்திய ஆதி அவர்களுடைய பாடலை போட்டுவிட்டான்.

♪ என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே

நகில நகில நகிலா    விலகிடாதே நகிலா  

நகில நகில நகிலா    விலகிடாதே நகிலா  

பழகும்பொழுது குமரியாகி

என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில் குழந்தையாகி

என்னைக் கொல்வாய் கண்ணே ♪

ஏனோ இந்த பாடல் அவளை அவனிடம் நெருங்கி வைக்கும் எப்பொழுதும். பாடலில் மலர்ந்திருந்த மணிமேகலை கன்னத்தில் ஆதியின் கை மெதுவாக ஊற, அவன் கையில் தன் கை பிடித்து அதன் போக்கை நிறுத்தினாள்.

“மேகா…” தாபமாக வந்த குரலின் வீரியத்தில் மணிமேகலையின் உள்ளம் பனிக்கட்டியாய் இலகிட இறுக்கமும் நீங்கியது. அவள் நிலையை கண்கள் பார்த்தே படித்தவன் மெல்ல அவள் நாசியினை வருடியவன் கைகள் அவள் மூக்குத்தில் வந்து நின்றது. அதிர்ந்தாள் பெண்.

“அன்னைக்கே பாத்துட்டேன் இந்த டாலடிச்ச மூக்குத்திய” கன்னம் கிள்ளி கொஞ்சினான்.

“பொய் சொல்றிங்க” – மணிமேகலை

“முதல் நாள் நான் ஆசைப்பட்டு கேட்ட பச்சை கல்… அப்றம் அடுத்த நாளே இந்த வெள்ளை கலர் மாத்திட்ட… கரெக்ட்டா?”

ஆச்சிரியமாக இதழ்களை விரித்தவளை நொடி வீணாகாது அவள் கழுத்தோடு பிடித்து கீழே இழுத்து திறந்திருந்த இதழ்களை தன்னுடைய இதழ் கொண்டு மூடினான் அவள் காதலன். அமுதமாய் இனித்த இந்த இதழ்களின் சுவையை சுவைத்திட எந்த வித தடையும் இல்லாமல் ஆதியின் இதழ்கள் பயணிக்க அவளுக்கோ வேறொரு உலகத்திற்கு பயணித்தது போன்ற உணர்வு. அடி வயிறில் பூதாகரமாக ஏதோ பனிப்பாறையை வைத்து அழுத்துவது போல் உணர்ந்தாள்…

கண்களை மூடி அனுபவிக்க கூறி மனம் வேண்டிட யோசிக்காமல் அதன் கட்டளையை நிறைவேற்றிட சென்றது. அவன் இதழ் மேல் அவளுக்கு இன்றியமையாத ஓர் பிரியம்…! தூரத்தில் நின்றே அவன் சிரிப்பை ரசித்திருந்தவளுக்கு இதழ் ஒற்றலை நினைத்து சில முறை வெட்கப்பட்டு கண்ணாடி முன் நின்று சிரித்துளாள்.

அந்த உணர்வு எப்படி இருக்கும்? இன்று செயல்முறையில் புரியவைத்தான். தன் மேல் விழுந்த முதல் மழைத்துளியை பூமி உறிஞ்சுவது போல் அவளை உட்கொள்கிறான் திருடன். தூரத்தில் நின்று பார்த்த அலைகள் கூட அவர்கள் அழகிய நொடிகளை கலைக்க விரும்பாமல் வெட்கத்துடன் மௌனமாய் சென்றன.

சுட்டெரிக்கும் வெம்மை தாளாது குளிர் பரவிக்கொண்டிருக்கும் அந்த வாகனத்தினுள்ளே இருந்தாலும் ஆதியின் கைவளையில் இருந்தவளுக்கு அவன் நெருக்கத்தின் காரணமாக வியர்வை துளிகள் முகத்தில் விழிந்திட, அவள் இதழ்வழி அவன் இதழில் வந்து நின்ற நீரால் தான் மணிமேகலையின் மூச்சிற்கு காற்று கிடைக்க வேண்டும் என்று விதியோ என்னவோ.

அந்த ஒற்றை துளியில் நிதானித்தவன் அவள் இதழுக்கு தற்காலிக ஓய்வை கொடுத்து விடுவிக்க, முகம் சிவந்தவள் இதழை கை கொண்டு மூடி வெளியே பார்த்தாள், ஆதியின் முகம் காண வெட்கம் கொண்டு. ஆனால் அவள் இதழ்கள் கூறும் மகிழ்ச்சியை விட அந்த மான் கண்கள் அதிகம் ஒளியை கக்கியதல்லவா… சிரித்தவன் அப்படியே அவள் வயிற்றில் முகம் புதைத்து இடையை கட்டிக்கொண்டான்.

‘போதுமே’ முதல் முத்தத்திலே அவள் மீளாமல் இருக்க, அவன் மீசையின் குறுகுறுப்பு அவள் வயிற்றில் சொல்ல முடியாத ஆசைகளை சுரக்க செய்தது.

அவன் தலையை பிடித்து தள்ளி நிறுத்தி, “ப்ளீஸ் ஆதி…” என்று கெஞ்சினாள். முகத்தை கைகள் கொண்டு துடைத்தவன் அவள் மடியிலிருந்து எழுந்து அவள் கைகளை பிடித்தான்.

“என்னைக்கும் உன்ன இனிமேல் கைவிட மாட்டேன்டா மான்குட்டி. என்ன நம்பி வீட்டுக்கு போ. அப்பாகிட்ட உதய் சரியானதும் வந்து பேசுறேன். சஹானா கல்யாணம் ஆகட்டும் அடுத்து ஒடனே நம்ம கல்யாணத்த வச்சுக்கலாம்… ம்ம்ம்?” தலையை குனிந்து அவள் முகத்தை பார்த்து கேட்டான்.

சிரிப்போடு அவன் கேள்விக்கு தலையை ஆட்டி பதில் கூற, தன்னுடைய மான்குட்டியை தன்னுடன் முன்னே அமர வைத்து அவள் வீட்டின் வாசலில் இறக்கிவிட வாகனத்தை நிறுத்தினான். தன்னுடைய பையில் இருந்து சாவியை ஆதியின் முன் நீட்ட, அவன் முகம் வாடியது.

“இது எப்படி உங்கிட்ட வந்துச்சு?” இறுக்கமாய் கேட்டான்.

“சஹானாக்கு நீங்க பைக்க வேலைக்கு விட்ருக்குற மாதிரி தெரியல்னு டவுட் இருந்துச்சு. அது தான் வீட்டுல நேத்து தேடி நீங்க அடகு வச்ச பேப்பர்ஸ் எடுத்தோம்” – மணிமேகலை

“அதுக்கு உன்னோட அப்பன் காச போட்டு திருப்பி வந்துட்ட?” காட்டமாக வந்தது ஆதி வார்த்தைகள்.

“இதுல என்ன தப்பு இருக்க போகுது? ஏன் என்கிட்டே ஒரு எமெர்ஜென்சி-கு கூட எதுவும் கேக்க கூடாதா?” – மணிமேகலை

“கூடாது… என்னோட பிரச்னையை நானே பாத்துக்குறேன். என்னோட பொண்டாட்டியா என் வீட்டுக்கு நீ வந்து என்ன வேணாலும் பண்ணலாம் சந்தோசமா ஏத்துக்குவேன். ஆனா நீ இப்போ வேற வீட்டு பொண்ணு. எனக்கு நீ இது பண்ணது உன் அப்பாக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாரு? கல்யாணமே ஆகல, அதுக்குள்ள பணத்தை அனுபவிக்கிறான்..

அப்ப அவன் நோக்கம் கூட இதுவா இருக்குமோனு சந்தேகம் வந்துட்டா அடுத்து எப்பையுமே உன் அப்பாக்கு என் மேல நம்பிக்கை வராது”

அவன் கூறுவதை மனம் ஆமோதித்தாலும் முகத்தை சுருக்கமாக வைத்து, “இது என்னோட காசு இல்ல, என் அப்பா காசும் இல்ல. உங்க காசுல நீங்க உங்க தங்கச்சிக்கு வாங்கி குடுத்த நகையை பேங்க்ல வச்சு தான் வண்டிய திருப்பி வந்தேன். சஹானாக்கு அவங்க அண்ணன் புல்லட்ல வந்தா தான் புடிக்குமாம்” நொடித்துக்கொண்டவள் வேகமாக வெளியில் செல்ல பார்க்க, அவள் கையை சிரிப்போடு பற்றி நிறுத்தினான்.

“கோவம் வருது வர வர என் மான்குட்டிக்கு” என்றவன் கண்கள் அவள் இதழில் தண்டனை கொடுக்கவா என்று கேட்டது…

“சாவி வேணாம்னா போங்க” என்றாள் மீண்டும். மணிமேகலை கையிலிருந்த சாவியை வாங்கி பாக்கெட்டில் சொருகியவன் இன்னொரு கை அவளது கைக்குள் தன் கையை பிணைத்துக்கொண்டது.

“மச்சானுக்கு பாய் சொல்லாம போற?” புன்னகை இழைந்தோடியது ஆதியின் இதழில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!