அந்த தவிப்பை கொடுத்தவன் இதோடு வேலை முடிந்ததாக அவள் கையை விட, “இன்னும் அஞ்சு நாள்ல உங்களுக்கு கல்யாணம் தேவா”
அர்ஜுனன் கூறிய செய்தியை கேட்டவன் எதுவும் பேச இயலா நிலையில் கோவத்தோடு கீழே இறங்கினான். மகனை தடுக்க சென்ற ரத்தினத்தை பிடித்துக்கொண்டார் அர்ஜுனன்.
வேக எட்டுகளோடு மண்டபத்தை விட்டு வெளியேறிய தேவாவின் காதுகளில் தவறாமல் விழுந்தது ஒரு மனிதரின் ஈரமே இல்லாத வார்த்தை, “ஆனாலும் கல்யாணத்துக்கு வராம ஓடி போன பேத்திக்காகவே இந்த பேரான தேடி கண்டு புடிச்சிருக்கார் அர்ஜுனன். அவனும் இளிச்ச வா பயே தான் போல”
அந்த எள்ளான பேச்சை கேட்டவன் ஒரு நொடி ஸ்தம்பித்து நிற்க அடுத்த நொடி தன்னை சுதாரித்து அவ்விடம் விட்டு அகன்றான் தேவானந்த்.
அன்று இரவு மணி பத்தை தாண்டியிருக்க அர்ஜுனன் இல்லத்தில் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த மேல் மாடியில் தேவா ஆழ்ந்த சிந்தனையில் இருந்த பொழுது சலசலப்போடு வந்தனர் நாயகி, ரத்தினம் மற்றும் அவர் மகள் இஷா.
“பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி என்ன அடக்காதிங்க. பேச்சு வந்தப்போவே முடியாதுன்னு வெட்டி விட்ருக்க வேணாம்?”
“எப்பயும் இவர் பேச்ச கேக்க தான சொல்லுவீங்க இன்னைக்கு அத தான் செஞ்சேன் இதோட விடுங்க” – தேவா
“என்ன பேசுறான் பாருங்க. நீ உன்னோட அப்பாவோட வறட்டு வீம்பு புடிக்க இது ஒன்னும் விளையாட்டு கெடையாது தேவா. இது உன்னோட வாழ்க்கை பிரச்சனை” – நாயகி
“பைரவிய கல்யாணம் பண்ணினா என் பையன் வாழ்க்கை நல்லா தான் இருக்கும்” தான் செய்ததில் சிறு தவறும் இல்லை என்பதில் உறுதியாக நின்றார் ரத்தினம்.
“இப்டியே பேசி பேசி என் பையனோட வாழ்க்கையை நீங்க அழிக்கிறீங்க ங்க, அப்டி என்ன உங்க அய்யா பேச்சுக்கு மயங்கி கிடக்கணும் நீங்க? என் நேரம், இதெல்லாம் கைய கட்டிட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்கேன் நான்” – நாயகி
“ஆமா ப்பா, அண்ணாக்கு அந்த பொண்ணு வேணாம். எனக்கு அவளை பெருசா புடிக்கவே இல்ல. அதுக்கு நிவேதாவை அண்ணா கல்யாணம் முடிக்கட்டுமே” தன் பங்கிற்கு இஷா.
“நீ பேசாத உன்னால தான் எல்லாமே” – ரத்தினம்
“சந்தோஷ புடிச்சிருக்குன்னு சொன்னா, கல்யாணம் பண்ணிக்கிறேன் பண்ணலன்னு சொல்லணும். அது என்ன என் தங்கச்சிய நீ மருமகளா ஏதுக்கோ அப்ப தான் உன் தங்கச்சிய நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா எந்த ஊர் நியாயம் இது?” தாய் சொன்ன அந்த தகவல் புதிதாக இருந்தது தேவாவிற்கு.
சகோதரி சந்தோஷ் மேல் விருப்பம் கொண்டது முதல் அவனிடம் பேசியது வரை எதையும் தன்னிடம் கூற கூட பெற்றோருக்கு தோன்றவில்லை என்ற வருத்தமும் உடனே வந்தது.
“இப்போ கூட சந்தோஷ் வேணாம்னு சொல்லு, இந்த கல்யாணத்த நிறுத்திடலாம்”
“போதும் ம்மா, நான் மோதிரம் போட்டு விட்டுட்டேன், இனி இந்த கல்யாணம் நடக்கும்” எழுச்சலடைந்த தேவா வீட்டின் முற்றத்தினை பார்த்தவாறு நின்றுவிட்டான்.
“நடக்காதுடா, நடக்கவும் விட மாட்டேன். அவளே ஒரு நடத்த கெட்டவ. அவளை என் புள்ளைக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கணுமா?” ஆத்திரத்தில் கத்தினார் நாயகி.
“மா போதும், இதோட நிறுத்திக்கோங்க. பைரவி பத்தி நீங்க ஒரு வார்த்தை பேச கூடாது” தன்னவள் என உறுதியாகிய பின்னர் வரவில்லை இந்த கோவம், இந்த நிச்சயம் நடக்காவிடினும் இதே போல் தான் பேசியிருப்பான் தேவா.
“என் வாய நீ அடச்சிடுவ, ஊர் வாய யார் அடப்பா?” – நாயகி
“தன்னோட கல்யாணத்துக்கு வரலைனா ஒடனே அந்த பொண்ணோட ஒழுக்கத்தை பத்தி பேச நமக்கு உரிமை இல்ல நாயகி” – ரத்தினம்
“அவ யாரோவா இருந்தா நான் ஏங்க பேச போறேன்? இப்ப தான் என் வீட்டுல வர கொண்டு வந்து நிப்பாட்ட போறிங்களே. அப்போ நான் பேசி தானே ஆகணும்? எவன் மேல ஆசை வந்துச்சோ” – நாயகி
“நாம லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிட்டோம், உன் மக ஒரு பையன இன்னைக்கு புடிச்சிருக்குன்னு வந்து நிக்கிறா, அதெலாம் சரியா பட்டா என் மருமக பண்றதும் சரி தான்” – ரத்தினம்
“காதலோடு நின்றுந்தா பரவால்ல, போனவ எதுக்கு திரும்ப வந்தா? எவன் கூட சேந்து கூத்தடிச்சாலோ, சுத்தமா இருக்களோ என்னவோ”
பற்களை கடித்து கண்களை மூடி கோவத்தை தேவா அடக்க, கண்ணை திறந்து பார்வையை திசை திருப்பிய தேவாவின் கண்களில் விழுந்தது அவள் உருவம்.
முற்றத்தில் ஒரு தூணில் சாய்ந்து அமர்த்திருந்தவள் மொத்த உடலும் குலுங்கியது. அழுகையில். அன்னை பேசியது அனைத்தையும் எத்தனை நிமிட நேரங்கள் கேட்டாளோ, அவள் வருத்தம் தனதாய் தோன்றி நெஞ்சை பிசைந்தது தேவாவிற்கு.
“நீயா எதையும் கற்பனை பண்ணிக்காத நாயகி” – ரத்தினம்
“கற்பனை இல்லை, மூணு நாள் வரலயாம் அவ. மூணு நாள் இல்லாம போனவை எப்படி அவளாவே வருவா? அவ சரியில்ல. ஊர்ல கெட்டு கெடக்குறவங்க எல்லாருக்கும் வாழ்க்கை கொடுக்கவா என் பையன் இருக்கான்?” – நாயகி
“எல்லாத்தையும் நேர்ல பாத்த மாதிரி பேசாத நாயகி, என் தங்கச்சி வளர்ப்பு தப்பாது” – ரத்தினம்
“சரி அப்போ ஒரு வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுத்து பாத்துடலாம். அவ ஒழுக்கமானவளா இல்லனா கல்யா…”
இதுவரை மெல்லிதாக குலுங்கிய பைரவியின் உடல் அதிகம் குலுங்குவதை பார்த்த தேவா ஆத்திரத்தோடு அன்னையிடம் திரும்பினான், “இதோட நிறுத்திடுங்க ம்மா” கையை நீட்டி தடுத்தான்,
“இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும், இனி நீங்களோ ஏன் அய்யப்பா சொன்னாலும் நடந்தே தீரும்” அழுத்தமாக மிக மிக அழுத்தமாக கூறி படிகளில் இறங்கியவனை அன்னை என்ன தடுத்தும் நிற்கவில்லை.
நேராக பைரவி அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தவன், “எந்திரி” என்க, தனக்கு மிக நெருக்கத்தில் வந்த ஆணின் அதட்டலில் திடுக்கிட்டவள் கலங்கிய விழிகள், சிவந்த முகத்துடன் அவனை பயத்தில் ஏறிட்டு பார்த்து,
“நான் எங்கையாவது போயிடுறேன், என்னால உங்களுக்குள்ள சண்டை வேணாம். ப்ளீஸ்” இதழ்கள் துடிக்க அழுத்தவளை அப்படியே விட மனம் வரவில்லை தேவாவிற்கு.
“எந்திரிச்சு உன் வீட்டுக்கு வா” என்றான்.
பைரவி நகராமல் அப்படியே நிற்க, “வர்றியா இல்லை இழுத்துட்டு போகவா?” அவன் கோவத்தில் சட்டென எழுந்தவள் தன்னுடைய இல்லம் நோக்கி செல்ல அவள் பின்னே நடந்தான் தேவாவும்.
அவள் வீட்டில் வரவேற்பறையில் சந்தோஷ் சகோதரியை வருத்தத்தோடு பார்த்து நிற்க, “மொட்டை மாடிக்கு போ. இப்போ வர்றேன்”
தேவாவின் வார்த்தை கேட்டு பைரவி சென்றுவிட சந்தோஷிடம், “என்ன நடந்தது எனக்கு தெளிவா நடந்தத சொல்லு” சோபா ஒன்றில் அமர்ந்துகொண்டு பிடிவாதமாக நின்றான்.
“எங்களுக்கு எதுவும் தெரியாது தேவா. போன வருஷம் கல்யாணம் பிக்ஸ் பன்னிருந்தோம். சந்தோசமா தான் இருந்தா. மைசூர்ல வேலை பாத்துட்டு வேலைய ரிசைன் பண்ணிட்டு கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே வர்றேன்னு சொன்னவ, வேலை அதிகம் ரெண்டு நாள் முன்னாடி வர்றேன்னு சொன்னா.
எங்களுக்கும் எந்த சந்தேகமும் வரல. அவ மேல இருக்க நம்பிக்கைல விட்டோம். அதே மாதிரி ரெண்டு நாள் முன்னாடி அவளுக்காக பஸ் ஸ்டாண்ட்ல அரை நாள் காத்திருந்தேன் ஆள் வரல, போன் பண்ணியும் போன் எடுக்கல. வீட்டுல எல்லாருக்கும் பயம். மைசூர் கெளம்புனோம் நானும் விக்கியும்.
அவளோட ப்ரன்ட்ஸ் எல்லாரும் அவ ஊருக்கு கெளம்பிட்டாங்கனு சொன்னாங்க. அடுத்த நாள் மாப்பிள்ளை வீட்டுகாரங்ககிட்ட பதில் சொல்ல முடியல. மொத்த குடும்பத்தையும் அசிங்கப்படுத்திட்டு போய்ட்டாங்க. மூணு நாள் கழிச்சு வந்து நின்னா பைரவி கழுத்துல காதுல நகை இல்லை, முகத்துல சந்தோசம் இல்ல, அவ்வளவு வேதனை இருந்துச்சு.
அன்னைக்கு நாங்க பாத்த பைரவி என்க பைரவியே இல்ல. என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு எவ்வளவோ கேட்டு பாத்துட்டோம் ஒரு வார்த்தை பேசல, யாரையாவது லவ் பண்ணி எங்ககிட்ட மறைச்சிட்டாளா கேட்டோம், பதில் இல்ல.
யாரவது கடத்திட்டங்களானு கேட்டதுக்கு மட்டும் இல்லனு பதில் வந்துச்சு. அப்போ இவளா தான் யார்கொடையோ போய்ட்டாலோ ஊரே பேச ஆரமிச்சது. எங்கையும் வெளிய வர மாட்டா. என்ன நடந்ததுன்னு அவளை தவற யாருக்கும் தெரியாது”
கடினமாக எச்சிலை விழுங்கினான் சந்தோஷ், “ஆறு மாசமா வரன் தேடிட்டு இருக்கோம், எல்லாருக்கும் விசியம் தெரிஞ்சு ஆளாளுக்கு ஒவ்வொரு வகையா பேச ஆரமிச்சிட்டாங்க. ரெண்டாம் தாரமா நாப்பது நாப்த்தியஞ்சு வயசுல ஒரு சிலர் கேக்குறப்போ மனசு ரொம்ப வலிக்கிதுடா.
இன்னைக்கு உங்க அப்பா என்ன உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்க சொன்னப்போ, இத தவற வேற வழி எனக்கு தெரியாம தான் இந்த கண்டிஷன் வச்சேன். மன்னிச்சுடுடா”
கை எடுத்து கண்ணீர் மல்க நின்றான் சந்தோஷ், “உன் மனசுல யாருக்கும் இருக்காங்களான்னு கூட யோசிக்காம என் தங்கச்சிக்காக சுயநலமே பண்ணிட்டேன்”
சந்தோஷின் நிலைமை புரிந்த தேவா முகத்தை கைகள் கொண்டு மூடி சில நிமிடங்களை கடத்தி சந்தோஷமிடம், “விடு மச்சான்” என்றதோடு மாடிப்படியை ஏறி சென்றான்.
மாடியை அடைந்த பொழுது பைரவி அமைதியாக இருளை வெறித்து தரையில் அமர்ந்திருக்க தேவாவின் வருகையை உணர்ந்து அவன் பக்கம் திரும்பினாள்.
“என்ன பேசணும் என்கிட்ட?” – தேவா
“இந்த கல்யாணத்த நிறுத்திடுங்க” கமறிய குரலில் அவன் முகம் பார்த்து வேண்டினாள்.
“என் அம்மா பேசுனத வச்சு நிறுத்த சொல்றியா?” இறங்கியது தேவாவின் குரல்.
“இல்ல உங்களுக்காக சொல்றேன், நான் வேணாம் உங்களுக்கு” – பைரவி
“ஏன் உனக்கென்ன குறைச்சல்?” – தேவா
“எல்லாமே குறைச்சல் தான் போதுமா?” சட்டென பேசியவள் கண்கள் கலங்கியது.
“சரி அப்போ உன் அண்ணன் சொல்றான்ல, நாப்பது வயசுல ஒருத்தன பாத்து கட்டிக்கிறியா?” சரி என யோசிக்காமல் தலை அசைத்தவளை பார்த்து ஆத்திரம் வந்தது தேவாவுக்கு.
“என் கல்யாணம் நடந்தா தான் என் அண்ணனுக்கு கல்யாணம் ஆகணும்னா யாருக்கு வேணாலும் கழுத்த நீட்டுவேன்” தன்னையே நிதானமாக்கி அவள் அருகில் அமர்ந்தான்.
பல நிமிடங்கள் மௌனத்தில் கரைய, “அப்டி என்ன நாப்பது வயசு அரை கிழவனை கல்யாணம் பண்ணிக்கிற அளவு யார் கிட்டையும் சொல்ல முடியாத சோகம்?”
வாயில் கை வைத்து முகத்தை வேறு பக்கம் பைரவி திருப்பிக்கொள்ள மெல்ல வந்த அழுகை சத்தத்தில் எரிச்சலடைந்தான்.
“ப்ச், இப்ப என்ன உன்ன பத்தி எதுவுமே எனக்கு தெரிய கூடாதா?”
பைரவி அழுவதிலே குறியாய் இருக்க அவளோடு நெருங்கி அமர்ந்து அவள் முகத்தை பற்றி தன்னை பார்க்க வைத்தான். கண்கள் சிவப்பேறி குளம்கட்டி நின்றது விழிகள்.
“நான் ஒன்னு கேப்பேன் நேர்மையா பதில் சொல்லுவியா?” சுவரோடு ஒட்டி சாய்ந்த பைரவி மௌனமாய் விழிகளை தாழ்த்த அவள் முகத்தை மேலும் தூக்கி, “சொல்லுடி உண்மைய சொல்லுவியா?” தழைந்து வந்த அவன் குரலுக்கு ஆம் என தலையை ஆட்டினாள்.
“யாரையாவது லவ் பண்றியா?”
அவன் கேள்வியில் விழுக்கென ஒரு சொட்டு கண்ணீர் பைரவியின் கன்னத்தை நனைக்க, “அழுதாக பைரவி” கெஞ்சலாய் அவன் குரல் பெண்ணின் இதயத்தை பெரிதும் ஆட்டியது.
இளகிய குரலில் பேச வந்த அவன் கையை இரு கைகள் கொண்டு இறுக்கமாக பற்றி தேவாவின் கைகளினுள்ளே முகம் புதைத்து நிமிடங்கள் பல அழுக, அவள் மனதின் பாரம் குறையும் வரை அழுக விட்டான்.
ஆறுதல் கூற கூட அவனிடம் வார்த்தைகள் இல்லை, என்ன கூறி சமாதானம் செய்வான் காரணம் தெரியாமல்.
அவள் அழுகை நிற்கப்போவதில்லை என தெரிந்த பின்னர், “கேட்டதுக்கு பதில் சொல்லு. இதுக்கு முன்னாடி யாரை வேணாலும் லவ் பண்ணிருந்தாலும் சரி பண்ணலானாலும் சரி, அத பத்தி எனக்கு கவலை இல்லை. இப்ப, இந்த நிமிஷம் உன் மனசுல யாராவது இருக்காங்களா?”
விழிகளை அவள் கண்களோடு நேர்கோட்டில் நிற்க வைத்து அவன் கேட்டதும் ஸ்திரமாய், “இல்ல” என்ற பதில் வந்தது பெண்ணிடமிருந்து.
அந்த பதிலே போதுமென சிரித்த அவன் ஆதாரங்கள் சொல்ல அவளுள் மேலும் சங்கடத்தை கொடுத்தது, “வேணாம், நான் உங்களுக்கு வேணாம். ப்ளீஸ். என்ன கல்யாணம் பண்ணினா உங்களுக்கு தான் அசிங்கம். என்னால என் வீட்டு ஆளுங்க அசிங்கப்பட்டதே என்னால தாங்கிக்க முடியல, இதுல நீங்களும் எல்லார் முன்னாடியும் சங்கட பட வேணாம். தாத்தாகிட்ட நீங்க பேசுனா புரிஞ்சுக்குவாங்க”
தளர்ந்த அவள் கைகளை பார்வையிட்டு முகத்தை பார்த்த தேவா, “நான் சொல்றத தெளிவா கேட்டுக்கோ, பல்லு போனவன் பேச்சையும், நாக்குல வேஷத்தை தடவிட்டு பேசுறவன் பேச்சையும் கேக்குறவன் நான் இல்ல” அவள் கைகளை பிடித்து மோதிரத்தை காட்டி,
“இது தாலிக்கு சமம், பாதி கல்யாணம் முடிஞ்சிடுச்சு நமக்குள்ள. என் பொண்டாட்டிய இனி எவனுக்கும் விட்டு குடுக்க மாட்டேன்”
அவளை விட்டு எழுந்தவன் வேஷ்டியை கட்டி, “கண்ண துடைச்சு நிம்மதியா தூங்கு, நாளைக்கு காலைல மச்சான் கண்ணனுக்கு ஜம்முன்னு மின்னணும் நீ”
ரகசிய புன்னகையோடு படி இறங்க, “நிவேதாக்கு நான் துரோகம் பன்றேனா?” தவிப்போடு அவனை பார்க்க, சிரித்தான் தேவா.
“சக்கரடி நீ” சிரிப்போடு அவளை கொஞ்சியவன் அதே வற்றாத சிரிப்போடு கீழே இறங்கி சென்றிட தவித்து போனது பைரவியின் முறையாயிற்று.