அத்தியாயம் 16:
மறு நாள் காலையில் நித்யாவுக்கு சக்திவேல் போன் செய்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
நித்யா, “சித்து வெறும் வாழ்த்து மட்டும் தானா? வேற எதுவும் இல்லையா?” என்றவளிடம்… “என்ன வேண்டும் சொல்லுடா உனக்கு இல்லாததா? என்னோட செல்ல பொண்ணு கேட்டா நான் செய்யாம இருப்பானா?” என்று சக்திவேல் அவளுக்கான பாசத்தையும் உரிமையையும் வெளிபடுத்தானார்.
அதில் ஆனந்தமடைந்தவள், “வாக்கு மாறமாட்டிங்க தான சித்து?”. “கண்டிப்பாக மாறமாட்டேன் என்ன வேண்டும் என்று சொல்லுடா? நேரம் வரும்போது கேட்கிறேன் அப்போது கண்டிப்பா தரவேண்டும் சரியா?” என்றவளிடம்… “அப்படியே ஆகட்டும் மகாராணி” என்று நாடகபாணியில் கூறினார்.
அதே நேரத்தில் எதிர் வீட்டில் செய்தித்தாள் படித்துக்கொண்டு இருந்த நாதன் கண்களில் அந்தச் செய்தி பட்டது, அதைப் பார்த்தவுடன் பக்கத்திலிருந்த மங்கையிடம் அதைக் காண்பித்தார்.
அதைப் பார்த்த உடன் மங்கை” இதென்ன அநியாயமாயிருக்கிறது? கேட்க ஆள் இல்லையென்றால் இப்படிதான் அடங்காமல் இந்தமாதிரி மேடையில் அழகக் காட்டி பணம், பரிசெல்லாம் வாங்கராளா இதெல்லாம் என்ன பிழைப்போ?” என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசியவரை யாரும் மறுத்து பேசவுமில்லை.
இதைக் கேட்ட சஞ்சனா, “போதும் மங்கைக்கா… நீங்க தான் நித்யா வேண்டாமென்று வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டிங்க, அவளுக்குத் தேவையான எதையும் இந்தவீட்டிலிருந்து வெளியே போகாமையும் பார்த்துகிட்டீங்க, எப்ப பார்த்தாலும் அவளைக் கரிச்சிக்கொட்டிக்கிட்டே இருந்தீர்கள் அது போதாதென்று இப்போது இப்படி ஒரு பட்டம் கட்டபாக்குறீங்களா? அஅதுக்குமேலஅவளைபதத்தி நான் சும்மா இருக்கமாட்டேன் பாரத்துக்கோங்க… காலம் ரொம்ப மாறிபோச்சி க்கா இனியாவது உங்கள் வயசுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்குங்க, இப்படி அசிங்கமா நடந்துக்காதிங்க?”.
“உங்களை மாதிரி அம்மாவை நான் பார்த்ததே இல்லை லட்சுமி அக்கா!”.
“நித்யா நீங்க பெத்தபொண்ணுனு உங்களுக்கு ஞாபகம் இருக்கா? இல்ல அதுவும் மறந்து போச்சா? இவ்வளவு நல்ல பொண்ண அந்த ஆண்டவன் இந்த வீட்டில் அதுவும் உங்களுக்குப் போய்ப் பிள்ளையா பிறக்கவச்சாம் பாருங்கள் அவனைச் சொல்லவேண்டும்”.
“நீங்க என்ன பண்ணுவீர்கள்? நீங்க தான் யார் என்ன சொன்னாலும் அப்படியே செய்யரவங்களாச்சே”.
“சந்திரன் மாமா நீங்க என்றைக்குத் தான் நல்ல அப்பாவா… இல்லையில்லை… ஒரு சராசரி மனிதனா மனதில் இருக்கிறதை எப்போதுதான் பேசுவீர்கள்? உங்களை நினைத்து பாவமாகவும் இருக்கிறது கோவமாகவும் வருதுமாமா”.
“நாதன் மாமா… நீங்க நித்யாவிற்கு மிகப்பெரிய பாவம் பண்ணி இருக்கிறீர்கள். எப்போது வேணாடுமானாலும் அந்தப் பாவம் உங்களைத் தாக்கலாம். அப்போது நீங்க ரொம்ப வறுத்தப்படுவீங்க; அப்போது உங்கள் பக்கம் இருக்கத் தவறு உங்களை ரொம்பரொம்பப் பாதிக்கும் அதை உங்களால் சத்தியமா தாங்கிக்க முடியாது… அப்போயெல்லாம் காலம் ரொம்பக் கடந்துபோயிருக்கும் அதையெல்லாம் எவராலையும் மாற்ற முடியாது பாரத்துக்கோங்க”.
நான் இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து உங்கள் யாரையும் எதிர்த்துப் பேசியது இல்லை, பல விசயங்களைச் சகிச்சிக்கிட்டு இருந்து இருக்கிறேன், ஏனா? நீங்கள் எல்லாம் ஒருநாள் இல்லை ஒருநாள் மாறிவிடுவீங்கனு நம்பிக்கை இருந்தது. இப்போதெல்லாம் அந்த நம்பிக்கை சுத்தமா இல்லை… காரணம், நீங்க இப்ப பேசியது, இந்த வீட்டு மூத்தவரின் அமைதி. நீங்கள் பேசியதை அவர் கேட்டா? கண்டிப்பாக உங்கள் எல்லாரையும் ரொம்ப வெறுத்துடுவார். இனியாவது பார்த்து வார்த்தையை உபயோகம் செய்யுங்கள்” என்று யாரையும் பேசவிடாமல் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியவரிடம்..
மங்கை, “எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி மரியாதை இல்லாமல் வீட்டு ஆம்பளைகளைப் பேசுவ சஞ்சா? இதெல்லாம் சரியில்லை பாத்துக்கே”.
“உண்மையைச் சொல்லக் கண்டிப்பா தைரியம் வேண்டும் தான் அக்கா; அந்தத் தைரியம் எனக்கு அதிகமாவேயிருக்கு. ஏனா? நான் கல்யாணம் பண்ணிக்கொண்டவர் அந்தமாதிரி” எனத் தன் கணவனைப் பெருமையாகக் கூறினார் சஞ்சனா.
அத்தோடில்லாமல், “நான் நிறையத் தைரியமாக இருந்தால் மட்டும் தான், இந்த வீட்டில் இருக்கமுடியும் இல்லையினா நானும் நித்யா மாதிரியோ இந்த வீட்டைவிட்டு வெளியே போயிருந்திருப்பேன்… இல்லையில்லை வெளியே அனுப்பியிருப்பீர்கள்” என்று சரமாரியாக வார்த்தையால் தாக்கினார் சஞ்சனா.
அதற்கு லட்சுமி தான் கணவரிடம், “பாருங்கள் எப்படிப் பேசரானு?” என்றவரிடம்…
“சஞ்சனா பேசுவதற்கு நாம்தான் காரணம் லட்சுமி, சில சமயங்களில் உண்மை ரொம்பக் கசக்கும் ஆனாலும் அதை நாம ஏத்துகிட்டுதான் ஆகவேண்டும்” என்று கூறி வெளியே சென்று விட்டார்.
“இளமையில் அடுத்தவரின் பேச்சைக் கேட்டுத் தான் பெற்ற மகளுக்குச் செய்த பாவங்கள் அவரைத் தீயாகத் தவிக்கச் சஞ்சனாவின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் எதிலிருந்தோ தப்பித்து ஓடுவதைப்போல் வெளியே சென்றுவிட்டார்”.
இப்பொழுது யோசிக்கும் போதுகூட அந்தத் தவறுகள் பூதாகரமாக அவரை அச்சுறுத்தியது. செய்த பாவம் அவரைப் பயமுறுத்தியது.
நாதன் எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்றுவிட்டார். அவர் மனத்தில் என்ன உள்ளதென்று யாராலும் கனிக்கமுடியவில்லை.
இத்தலைநாள் மனதிலிருந்து கோவத்தையெல்லாம் காட்டிய சஞ்சனா தன் அறைக்கு வரும்போது சக்திவேலிடமிருந்து போன் வந்ததால் தான் அறைக்குள் சென்றுவிட்டார்.
இவர் சண்டையில் மஞ்சு, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். இதையெல்லாம் பார்த்தால் தேவையில்லாமல் அவர்கள் மனது பாதிக்கப்படும் அத்தோடில்லாமல் பள்ளிக்கும் நேரமாகக் குழந்தைகளைப் பள்ளிக்கு விட்டுவிட்டு சஞ்சீவிற்குப் போன் செய்து இங்கு நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டாள்.
அதற்குச் சஞ்சீவ், “மஞ்சு கலகம் பிறந்தால் தான் நன்மை பிறக்குமென்று” சொல்லுவார்கள் அதே மாதிரி இந்தப் பிரச்சனையும் நன்மைக்கும் நினைத்துக்கொள்… “நீ கவலைப்படாதே எல்லாமே ஒருநாள் முடிவுக்கு வந்துதான்னாகனும் அந்த நாள் வெகு விரைவில் இல்லை அதனால் நீ கண்டுக்கக்காத விட்டுவிடு அதுதான் நல்லது” என்று அவளுக்கு ஆறுதல் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
பின் வேலையை முடித்து விட்டு வீட்டுக்குச் சென்று அவன் அம்மா மற்றும் தந்தையிடம் அனைத்தையும் கூறிவிட்டான். அதற்குச் சங்கரி, “அண்ணியா இப்படிப் பேசினார்கள்? என்னால் நம்ப முடியவில்லை” என்றவரிடம்…
சுந்தரம், “சங்கரி எப்பாவும் அமைதியா இருக்கிற சஞ்சனா இப்படிப் பேசியிருக்கிறானா மங்கை எந்த அளவு நித்யாவை கேவலமா பேசியிருக்கறாங்கனு யோசித்துப் பார்”… இதுதான் உனக்குச் சரியா நேரம் “நல்ல வழியில் செல்ல” என்று கூறி சென்று விட்டார். அவரைத் தொடர்ந்து சஞ்சீவ்வும் சென்று விட்டான்.
இதைக் கேட்ட சங்கரியை மீண்டும் குழப்பங்களானது சென்னை சிக்னலில் கனரக வாகனங்களுக்கிடையே சிக்கிக்கொண்ட சைக்கிளைப்போல் குழப்ப மேகங்களானது சூழ்ந்துகொண்டது அவரை.
அங்கு மங்கையோ சஞ்சனா மீது தேவையில்லாமல் வன்மத்தை வளர்த்துக்கொண்டார்.
“லட்சுமி இந்தச் சஞ்சனாவை எப்படியாவது காயப்படுத்த வேண்டும் அதற்கு என்ன பண்ணலாம்?” எனக்கேட்க அவரோ, இவரின் பேச்சில் கவனம் இல்லாமல் தன் கணவன் பேசிச்சொன்றதிலேயே உழன்றுகொண்டிருந்தார்.
அதை உணர்ந்த மங்கை , ‘இவளை யோசனை செய்யவிட்டால் நமக்குத் தான் ஆபத்து, இவளை நமது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது தான் நமக்கு நல்லது’ என மனதில் நினைத்துக்கொண்டவர்… “லட்சுமி அவளுக்கு என்ன தெரியும்? இந்த நித்யா பிறந்த நேரத்தால் எவ்வளவு பெரிய ஆபத்து வந்ததுனு?” என்ற லட்சுமியிடம் வருத்தத்தில் பேசுவதைப்போல் பேசி தற்காலிகமாக யோசனை செய்யவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டார்.
சஞ்சனாவோ இங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சக்தியிடம் கூறிவிட்டார். அதற்கு அவர் அனைத்தையும் தான் பார்த்துக்கொள்வதாகக் கூறி சமாதானம் செய்து அழைப்பைத் துண்டித்து விட்டுவிட்டு பெங்களூரிலிருந்து அடுத்தப் பிளைட்டில் வீடு நோக்கி பயணம் செய்தார்.
நித்யாவோ தன் தாத்தா- பாட்டியின் புகைப்படத்தின் முன் நின்று மானசீகமாகத் தன் வெற்றியை அவர்களிடம் சமர்ப்பித்துக்கொண்டு இருந்தால்
அவள் முகம் அத்தனை பிரகாசமாக இருந்தது அவளின் மனமே ஆழ்கடல் போல் அத்தனை அமைதியாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் சாதனை செய்ய வேண்டும் என்ற வெறி இன்னும் அதிகமானது. எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாலோ அவளுக்கே தெரியாது… நாய் குறைக்கும் சத்தத்தில் தன்னிலையடைந்தவள் நேரமாவது உணர்ந்து அனைத்து வேலையையும் முடித்துவிட்டு தேவகியின் வீட்டுக்குச் சென்றாள்.
அங்கு அவளை எதிர்பார்த்துக் காத்திருந்த அம்பிகா, “நித்யா நான் எவ்வளவு சந்தோசமா இருக்கிறேன் தெரியுமா?” பாட்டி, தாத்தா இருந்திருந்தால் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள் தெரியுமா? உன்னுடைய தாத்தா ஊருக்கே இந்நேரம் விருந்து வச்சியிருப்பார்… இந்நேரம் எல்லாக் கோவிலிலும் அபிஷேகம் ஆராதனை செய்திருப்பார்கள் உன்னுடைய பாட்டி. இதை எல்லாம் பார்க்கவும் அனுபவிக்கவும் அவர்களுக்குக் கொடுத்துவைக்கவில்லை” என்று கவலையா கூறியவரிடம்…
நித்யா, “அம்மா அதுதான் நீங்கெல்லாம் இருக்கீங்கயில்ல அப்பறமென்ன கவலை? விடுங்கள்” என்கூறி அம்பிகாவை சமாதானம் செய்தாள்.
அம்பை, “நித்யா சித்துகிட்ட சொல்லிவிட்டாயா? அவர் ரொம்பச் சந்தோசப்படுவார்”.
“அவரே கால் பண்ணி விஷ் பண்ணினாங்க, சாய்ந்திரம் சித்து வீட்டுக்கு வந்திடுவார் தேவகி வந்ததும் அவர்கிட்ட வசூல்பாக்கியிருக்கு அதை வசூல்பண்ணாம விடமாட்டேன்”.
தேவகி, “ அப்படிச் சொல்லுடீ நித்யா”.
“அப்பா நீங்க என்ன வச்சி இருக்கிறீர்கள்? தாங்க? டைமாகுது பாருங்கள்?” என்றவளிடம்… அருள், “இந்தாடா… இந்த அப்பா உடைய சின்னப் பரிசு என்று கைகடிகாரத்தைப் பரிசாகத் தன் இரண்டு மகளுக்கும்”.
நளன், “ இந்தக் குட்டிமா என்னுடைய பரிசு என்று மயில் வண்ண புடவையைப் பரிசாக அளித்தான், தேவகிக்குப் பச்சை வண்ண புடவையைப் பரிசாக அளித்தான்”.
அம்பிகாவோ, “அவளுக்கும் தேவகிக்கும் பிடித்த உணவைக் கொடுத்து அவள் வயிற்றை நிரப்பினார்”.
தேவகியோ, “அவளுக்குப் பிடித்த ராதாகிருஷ்ணன் படத்தைப் பரிசளித்தாள்”.
“நித்யா தேவகிக்குப் பிடித்த சீதாராமன் படத்தைப் பரிசாகக் கொடுத்தாள்”.
அருள், “எனக்கு இன்றைக்கு முழுக்கப் பொள்ளாச்சியில் வேலையிருக்கும் அதனால் உங்களை விட்டுவிட்டு மாலை வரும் போது நானே கூட்டிக்கிட்டு வந்துவிடறேன்” எனக்கூறி மகள்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். அவர்களும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் மகிழ்ச்சியாகத் தந்தையுடன் சென்றனர்.
அங்கே நிறுவனத்தில் அம்பை, ருத்ரனும் தங்கள் வாழ்த்தைத் தெரிவித்துவிட்டு தங்களின் பரிசை கொடுத்தனர். இவர்களும் அவர்களுக்குப் பரிசை கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
அடுத்து வந்த நேரமெல்லாம் அவரவர் வேலையில் மூழ்கிப்போயிருந்தனர்.
அப்பொழுது அங்கு வந்த விஷ்வா, “குட் மார்னிங் நண்பர்களே நேற்று நடந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அப்புறம் முக்கியமான விஷயம் என்னவென்றால் நம்முடைய அனைத்து டிசைனுக்கும் நிறைய ஆர்டர்ஸ் வந்திருக்கும். அதனால் உங்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்”.
“இன்னுமோர் சந்தோசமான விஷயம் என்னவென்றால் வர சனிக்கிழமை ஆப்டே தான் வேலையிருக்கும்… மாலை ***உணவகத்தில் பார்டி இருக்கிறது எல்லாரும் நல்லா என்ஜாய்ப் பண்ணுங்கள் நண்பர்களே” எனக்கூறியவன் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு ராமுடன் வெளியே சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் தங்களுடைய மகிழ்ச்சியை அனைவரும் ஆர்ப்பாட்டமாக வெளிப்படுத்தினர். அவனுக்குத் தெரியும் தான் அங்கிருக்கும் வரை யாரும் தங்களுடைய சந்தோசத்தின்உச்சக்கட்டத்தை வெளிபடுத்தமாட்டார்களென்று… அதனாலேயே விஷ்வா தான் கூறிவந்த விஷயத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறிவிட்டுச் சென்றுவிடுவான். தன்னால் அவர்களின் மகிழ்ச்சி வெளிப்படுத்தாமலிருப்பதை அனுமதிக்கமுடியாமல் தான் விஷ்வா வெளிவருவது.
எந்த அளவுக்கு அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் இடங்கொடுக்கிறானோ அதே அளவுக்குச் செய்யும் செயலுக்கான பலனையும் கொடுத்துவிடுவான் விஷ்வா; அவை நன்மையாக இயிருந்தாலும் சரி துரோகமாகயிருந்தாலுத் சரி.
ஆனால் துரோகத்தின் பலனானது திரும்பவும் அவர்களை யாருக்கும் துரோம் செய்ய நினைக்கக்கூட முடியாதபடியாகயிருக்கும்… அப்படி நினைத்தாள்கூட அவனின் தண்டனைகளே முன்னின்று அச்சுறுத்தும்.
பந்தம் தொடரும்…