மகிக்கு, இருப்புக் கொள்ளவில்லை அங்கு, தனது கேபினில் நடக்கிறான். ஏனென்றே அவனிற்கு புரியவில்லை. அவனின் அலட்சிய பாவமெல்லாம் இப்போது எங்கே என்று கூட தெரியவில்லை. தன்னை நிலைபடுத்திக் கொண்டு, வினோவிற்கு அழைத்தான்.
“எங்க கிளம்பிட்டாளா” என்றான் சற்று பரபரப்பு வந்ததோ குரலில்.
வினோவிற்கே இது புதிய மகி, அன்று மருத்துவ மனையில் உனக்காக படுத்திருந்த போது கூட அலட்சியமாக இருந்த மகி அல்ல இது, என உணர்ந்தான்.
அதை கேட்டும் விட்டான் “என்ன டா, இவ்வளவு பதட்டம்?” என்க.
“ஹேய், நான் ஏதோ சும்மா கேட்டேன்” என்றான் ஒரு ஆசுவாச குரலில் மகி.
“ம்ம் நம்பிட்டோம், நான் இப்போதான் ஷோ ரூம் உள்ளே வரேன், இரு கொடுக்கிறேன்.” என்றான்.
“இல்ல, பரவாயில்லை நான் அப்புறம் பேசறேன்” என்றவன் குரலில் இப்போது இருந்தது என்ன, விலகலா, தானே ஒதுங்கிகொள்ளும் நிலையா. தெரியவில்லை அவனிற்கு.
‘ஏன் என்னை அழைத்து சொல்லவில்லை அவள். நான் சொல்லி தானே செய்கிறாள், அப்போ என்கிட்டே சொல்லனுமில்லையா’ என முன்னுக்கு பின், தனக்கு தானே முரணானான் மகி.
வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் போனை, ஏதோ அது தான் அவனின் ஜென்ம விரோதி என நினைத்து. அந்த ஷனத்தில் சட்டென ஏதோ தோன்ற,
அவனின் வாட்ஸ்அப் போனான், நேற்று இரவு பார்த்தது தான் இப்போது தான் திரும்ப பார்க்கிறான். அவசரமாக, தன் மனையாளின் எண்ணிற்கு போக அது காட்டியது அவனின் திசையை…….”ஆன்லைன்” என.
இப்படியும் ஒரு சொர்க்கம் இருக்குமோ என தான் மகிக்கு தோன்றியது. இப்போதும் அவள் என்னை ஏமாற்றவில்லை என அந்த தாடி காட்டில் முல்லை பூக்கள் தெரிந்தது.
“ப்பா, தேங்க்ஸ் ப்பா…..” என்றான். தனது தாடியை வருடியபடி, பழைய படி எதுவும் அனுப்ப தோன்றவில்லை. அப்படியே டேபிள்லில் வைத்துக் கொண்டான்.
‘நான் கூடவே இருப்பேன்’ என்று சொல்லும் விதமாக. நல்ல கணவன் என்ற பிம்பம் எப்போதும் இப்படி தான், விழுந்து விழுந்து சேவை செய்யாது. மனைவியை, தனது பார்வை வட்டத்தினுள்ளேயே எப்போது வைத்திருக்கும்.
துர்காவும், வினோ போன் செய்த நொடியிலிருந்து தனது வாட்ஸ்அப்பை ஆன்லைன்னில் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறாள், அவளிற்கு தெரியும் அவனாக போன் செய்ய மாட்டான் என. ஆனாலும், ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை என தான் தோன்றியது, இந்த செயல் அவளிற்கே.
இப்போது அவனின் ஆன்லைன் பார்த்ததும் அப்படி ஒரு நிறைவு. தனது அலைவரிசையில் வந்து விட்டானோ, வந்தே விட்டானோ என்ற நிறைவு.
அது அவளிற்கு தானாக ஒரு நிமிர்வை கொடுத்தது. இத்தனை வருடங்கள் இல்லாத ஒரு தெளிவையும் தான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சாலையோரம் நிற்கும் கைகாட்டி மரம் போல், தனது வழியெங்கும் அவன் இருப்பான் என்ற நினைப்பிற்கே துர்கா நிறைந்து போனாள்.
அதன் பின் தான் அவளிற்கு தன்போல் வேலை செய்ய முடிந்தது.
துர்கா பரபரப்பானாள். தேவையான டாக்குமென்ட் எல்லாம் தனது போனில் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டாள்.
ஏனெனில் அவரை அடிகடி சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமோ என்னமோ அதனால் தான். எப்போதும் போல் ஒரு சில்க் காட்டன் சாரி தான் உடுத்தி இருந்தாள்.
அங்கே வினோ வந்து சேர்ந்தான். இவளிடம் தனியே ப்ஃளுடுத் ஹெட் செட் மட்டும் கொடுத்தான். அங்கு வேலை செய்பவர்களின் ஸ்கூட்டி ஒன்று வாங்கி கொடுத்தான்.
அதனை அங்கிருந்து நகர்த்தியவள். ஏதோ கவனியாதவள் போலே “பாவாக்கிட்ட சொல்லிட்டிங்களா“ என்றாள். வினோவை பார்க்கவெல்லாம் இல்லை.
இப்போது அமைதியாக வினோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ தோன்ற, துர்காவும் பார்க்க, வினோ, தனது காரில் அமர்ந்த வாக்கிலேயே “என்ன கண்ணாமூச்சு இது, எப்போது தான் இரண்டு பேரும் நிறுத்துவீங்க” என்றான்.
என்ன சொல்வாள் துர்கா,
வினோவின் கண்களை பார்த்து “அவர் என்னை கண்டுபிடிக்கும் வரை இப்படித் தான்” என்றாள், சுவாரஸ்சியமாக..
இன்னமும் மகிக்கு நிற்க முடியவில்லை. அவள் செய்வது விடுவாள் தான் இருந்தாலும், ஒரு பயம் அதன் பிறகு நடபவற்றிக்கு நானே பொறுப்பு. என்ற எண்ணம் எழுகிறது அவனுள்.
‘பார்த்துக் கொள்ளலாம்’ என தான் தோன்றுகிறது ஆனாலும் ஏதோ ஏதோ என உள்ளம் சற்று பதற தான் செய்கிறது
ஊரின் மிக பிரபலமான கோவில் அது. அங்கே தனது வண்டியை நிறுத்தி விட்டு, இறங்கி உள்ளே செல்கிறாள். தான் புகைப்படத்தில் பார்த்த உருவம் எங்கேனும் கண்ணில் தென்படுகிறதா என தேடிக் கொண்டே சென்றாள் துர்கா.
கூடவே அத்தனை தெய்வங்களையும் வணங்கியபடியே தான் சென்றாள். ஓரிடத்தில், ராகு கால பூஜை நடந்துக் கொண்டிருந்தது. அங்கு தான் அந்த பெண்மணி கூட்டத்துடன் அமர்ந்திருந்தார்.
வயது, 60 வயது தான் இருக்க கூடும். முடிஎல்லாம் நரைத்து, சற்று நிமிர்வான தோற்றத்தில்…. கண்ணில் வேடுதலுடன்.
‘ஜெய ஜெய தேவி, ஜெய ஜெய தேவி துர்கா தேவி…. சரணம்
‘ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி…. சரணம்’
தனது வாய்க்குள்ளேயே பாடிக் கொண்டிருந்தார். துர்கா அவரின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
கொஞ்ச நேரம் கழித்து “நீங்க வீரராகவன் வீட்டு மருமகள் தானே” என்றாள் அவரை பார்த்து.
அவற்கு இத்தனை வருடங்களில் தன்னை ‘இப்படி யாரும் அடையாள படுத்தியதில்லை’ என நினைத்தவர். துர்காவை ஒரு அளவிடும் பார்வை பார்த்துக் கொண்டே.
“சரியா தெரியலம்மா, நீயே சொல்லிட்டேன். என்னை எப்படி உனக்கு தெரியும்” என கேட்டே விட்டார்.
எதையும் மறைக்கவோ, சுற்றி வளைத்து பேசவோ இல்லை அவள். “உங்க மாமனார், வைத்திய செலவுக்காக” என ஆரம்பித்த துர்கா அனைத்தையும் சொல்ல சொல்ல தெரிந்து கொண்டார் அந்த பெண்மணி.
அத்தோடு கூட வைபவ் எங்கே என்ற கேள்விக்கு, “கல்கத்தாவில் படிக்கிறான் ம்மா” என்றார்.
“ஏன் அவ்வளவு தூரம்” என்ற கேள்விக்கு, “என் மாப்பிள்ளை தான் அங்கு படித்தால் உதவி தொகை கிடைக்கும் என சொல்லி சேர்த்து விட்டார்.” என்றார். கொஞ்சம் பாவமாக.
“அடுத்த தரம், அவன் வரும் போது, நான் உனக்கு சொல்றேன் ம்மா… எங்க வரணும்னு சொல்லுங்க நாங்க வந்து கையெழுத்து இடுகிறோம். என் வீட்டுகாறார். சாகும் போது கூட சொல்லிக் கிட்டே இருந்தார்ம்மா…. “ என்றும் கூறினார்.
துர்காவிற்கு தோன்றியது, ஏதோ இவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்து இருந்ததே. அந்த வரையில் நிம்மதி. மேலும் அவர்கள் தங்களை ஏமாற்ற நினைக்கவில்லை, அதுவே அவளிற்கு போதுமானதாக இருந்தது.
மேலும் துர்கா தான் “உங்களை வந்து பார்த்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என சொன்னாள். உங்களின் பெண்ணிடம் கூட சொல்ல வேண்டாம்.” என்றாள்
‘ஏன்’ என அந்த அம்மாவிற்கு பயம் வந்து விட்டது. இப்படி கேட்பவரிடம் என்ன சொல்வது, முழுவதையும் சொன்னாலன்றி அவற்கு புரியாது.
மேலும் அவரின் மகள் பற்றி அவரிடமு சொல்வது சிரமம் தான் எனவே, இது எல்லாமே விவேகனின் செயல் என சொல்வது சிறந்தது என எண்ணி
அடுக்கடுக்காக அனைத்தையும் சொல்லி இதில் உங்களின் தவறு இல்லை, இது எல்லாம் வேறு ஒருவரின் சூழ்ச்சி என நீண்ட விளக்கத்திற்கு பின்னே அவரிற்கு புரிய வைத்தாள்.
உமா மகேஷ்வரியும் தானே சொந்தமாக புடவை வாங்கி, விற்க்கு வியாபாரம் செய்கிறார் வீட்டிலிருந்த படியே. அதனால், முறையான விளக்கங்களை சரியான கோணத்தில் புரிந்து கொண்டார்.
நாம் சொல்லும் ஒரு விஷயத்தை சரியான கோணத்தில் புரிந்து கொண்டாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
துர்காவிற்கு உமா மகேஷ்வரியை மிகவும் பிடித்தது. எந்த வகையிலும் தன் நிலையை கூறாமல். அதே சமயம் துர்கா சொல்லிய எல்லா விஷயத்தையும் பதறாமல் ஏற்ற அவரை மிகவும் பிடித்தது.
போன் நம்பர் வாங்கிக் கொண்டாள். “எப்போது முடியுமோ அப்போது அழைக்கிறேன்…. எந்த உதவி என்றாலும் என்னை அழையுங்கள் “ என்றாள்.
ராகுகால அபிஷேக, ஆராதனைகள் முடிந்து கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. இருவரும் வணங்கி முடித்த பின், துர்கா “நான் முதலில் போகிறேன்” என விடைபெற்று கிளம்பினாள்.
அவள் வண்டி எடுத்து கிளம்பவும், வினோ தனது காரில் அவளை பாலோ செய்தான். நேரே துர்கா வீட்டிற்கு வந்துவிட்டாள். வினோவும் வந்து சேர்ந்தான்.
வினோவின் வரவை உணர்ந்தவள், “வேலாத்தா ரெண்டு காபி” என்றாள் சத்தமாக. அந்த குரலுக்கு சர்வேஷ் எங்கிருந்தோ ஓடி வந்து விட்டான் அவளிடம்.
வினோ ஹாலுக்கு வர “வாங்க வினோ “ என்றவள். உள்ளே செல்ல போக காபியுடன் வேலாத்தாலே வந்து விட்டார்.
ஒன்றை எடுத்து வினோவிடம் கொடுத்தவள், தான் ஒன்று எடுத்துக் கொண்டு அமர்ந்தாள். குடித்து முடித்த பிறகே பேச்சு தொடங்கியது.
வினோ “என்ன சொல்றாங்க” என்றான்.
துர்கா போனை எடுத்து பார்த்தாள், மகியும் வாட்ஸ்அப்பில் ‘ஆன்லைன்’ என காட்ட, இவளின் ‘ஆன்லைன்’ பார்த்து மகி, அடுத்த நொடி வினோவிற்கு போன் செய்தான்.
துர்காவிற்கு தன்போலே ஒரு புன்னகை வந்தது.
அங்கு மகி வினோவிடம் “வந்துவிட்டாளா“ என்றான் எடுத்தவுடன்.
“இரு டா, இப்போது தான் உள்ளே வந்தோம், என்னான்னு பார்த்துட்டு சொல்றேன்” என்றவன் போனை வைத்தான்.
அதன்பின் துர்கா எல்லாவற்றையும் வினோவிடம் சொன்னாள். வினோ “போதும் துர்கா, நீங்க இவ்வளவு பண்ணியிருக்கீங்க, இனி மகி பார்த்துக் கொள்வான்” என்றவன், மகிக்கு போனில் அழைத்துக் கொண்டே கிளம்பியிருந்தான்.
ஆனால், வினோவை பார்த்து விதி சிரித்தது. இனி விவேகன் தான் பார்க்கபோகிறான் என.
மகியும் துர்காவிற்கு அழைக்கவில்லை, துர்காவும் அவனிற்கு அழைக்கவில்லை. அவளிற்கு இதை பற்றி யோசிக்க இப்போது நேரம் இருக்கவில்லை.
அப்படி அவளை சர்வேஷ் இழுத்துக் கொண்டான். பிறகு கமலேஷ்…. அவன் வந்ததும், நேற்றே, தன் அம்மா, தன்னை அழைத்தது சொல்லியது ‘தம்பியின் நாள் விருந்து’ நியாபகம் வர.
கமலேஷை ஹோம் வொர்க் செய்ய வைத்து, தன் மக்கள் இருவரையும் கிளப்பிக் கொண்டு, தன் அத்தையிடம் சொல்லிவிட்டு, தன் அம்மாவீட்டிற்கு வந்தாள் துர்கா.
காலையில் இருந்து இவளை எதிர்பார்த்திருந்த இவளின் குடும்பத்திற்கு. இப்போது தான் நிம்மதி. ஆயரம் உறவுகள் வந்தாலும், தங்களின் கட்டி கொடுத்த பெண் வந்து நிற்கும் போது தான், அது சிறிய ஒரு நிகழ்வு என்றாலும், பெற்றவர்களுக்கு நிறைவு வரும் போல.
இதோ வந்துவிட்டாள் என தான் பார்த்திருந்தனர் அவளின் பெற்றோர். அவளின் தாய் மாமாக்கள் எல்லாம் அவளை பிடித்துக் கொண்டனர். இவளின் நிலை தெரியும் ஆதலால் அதை பற்றி கவனமாக தவிர்த்து மற்றது பேசினார். துர்காவிற்கு சற்று ஆரம்பத்தில் சங்கடமாக இருந்த போதும் பேச பேச இயல்புக்கு வந்துவிட்டாள்.
ஆனால் தனி தனியாக மாமான்மார்கள் எல்லாம் துர்காவிடம் ‘என்னம்மா பிரச்சினை நான் பேசவா மாப்பிள்ளையிடம்’ என ஆதரவாக கேட்டே சென்றனர்.
அன்றைய சிறிய விழா நிறைவடைய, துர்கா இரவு தனியாக தன் அம்மா அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தாள். கமலேஷ் தனது பாட்டியின் அறையில் உறங்க.
நம்ம நாடக ப்ரியன் மட்டும், அதாங்க சர்வேஷ் ஒரு அப்செட் மூடுடன் சுற்றிக் கொண்டிருந்தான். ஏனெனில், இங்கு யாரும் இப்போது நாடகம் பார்ப்பது இல்லை. அதனால் அவன் இஷ்டம் போல் ஓடியாடி யார் போனை ‘காவு வாங்கலாம்’ என பார்த்துக் கொண்டிருக்கிறான்.
துர்காவின் தந்தை வரதராஜன், “என்ன கீர்த்தி கல்யாணத்திற்கு, வந்து விடுவாரா” என்றார் துர்காவை பார்த்து.
ஏனெனில் கீர்த்தி அன்று இரவு தன் அக்காவின் நிலை குறித்து சொல்லி இருந்தான். ‘தன் பெண்ணை இன்னும் என்ன என்ன பாடு படுத்த போகிறானோ அவன்’ என தான் இது நாள் வரை நினைத்திருக்கிறார்.
மகி, துர்காவை ஆபிஸ் அழைத்து சென்றது பற்றியும் தெரியும். ஆனாலும், கடந்த 7வருட நம்பிக்கையை மகி அவரிடம் இழந்து விட்டிருந்தான். எனவே, ‘இன்னும் என்ன செய்வானோ’ என தான் அவர்க்கு தோன்றியது. ‘இதெல்லாம் வெறும் கண்துடைப்பு’ என்றார் தன் மனைவியிடம்.
வந்த பெண்ணை கூட ‘வாம்மா எப்படியிருக்க’ என கேட்க வாய் வரவில்லை அவற்கு. அது தான், அவள் நிலை எல்லோர்க்கும் தெரிகிறதே.
இதில் வரதராஜன் இப்படி கேட்காமல் இருந்தால் தான் அதிசியம். துர்காவும் தனக்கு வந்திருந்த புது தெம்பில் “அப்பா, ஜாம் ஜாம்ன்னு வருவார் பாருங்க” என சிரித்துக் கொண்டே சொன்னாள்
அவளின் இந்த புது நிமிர்வை தான் அனைவரும் பார்த்திருந்தனர். அவளின் அம்மா விஜெயலக்ஷ்மி தான், இப்படியே என் பெண் எப்போதும் இருக்க வேண்டும் என சின்ன வேண்டுதல் வைத்தார்.
துர்காவின் காயத்தை பார்த்தனர் அனைவரும், எல்லாம் சரியாகி தான் இருந்தது. அதன் வடு மட்டும் அப்படியே அவளின் நிறத்திற்கு தெரிந்தது.
விஜயலக்ஷ்மிக்கு தன் மகளை கொஞ்ச நாள் இங்கு வைத்து பார்த்துக் கொள்ள வேண்டுமென தான் எண்ணம், ஆனால் இப்போது துர்காவை பார்த்த போது, அது தோன்றவில்லை.
அவளின் நிலா முகத்தில் இத்தனை நாள் இல்லாத ஒளி தெரியவும், என் பெண் அங்கேயே இருக்கட்டும், என தான் நினைத்தார்.
மணி 10க்கு மேல் ஆகவும், வரதராஜன் “கிளம்பும்மா, மணியாச்சு” என்றார். அவரின் அருகில் வந்தவள், அவரின் முகம் இன்னும் தெளியாமல் இருப்பதை பார்த்து. “ப்பா, எல்லாம், சரியாகிடும் ப்பா” என்றாள், அவரை சமாதனாப்படுத்தும் எண்ணத்துடன்.
வரதராஜன் முகத்தில் லேசான புன்னகை. எந்த அர்த்தம் என தான் துர்காவிற்கு புரியவில்லை.
துணைக்கு யாரும் வேண்டாம் என சொல்லி கிளம்பியிருந்தாள் துர்கா, காரில் தான் வந்திருந்தாள், அதனால் அவளை தனியே இந்த நேரத்திற்கு அனுப்பினர்.
அப்படி இப்படி என படுக்க 11 மணியாகியது, உடனே உறங்கிவிட்டாள், துர்கா. அங்கு, மிக நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த நேசத்தை எதிர்பார்த்து, ஆன்லைன்னில் இருந்தான் மகி.