கனவு பட்டறை கதை தொழிற்சாலை போட்டியில் எழுத வாய்ப்பளித்த திருமதி.மல்லிகா மணிவண்ணன் மேம்மிற்கு நன்றிகள் பல
எனது "யுகத்தின் தலைவன்"கதையை உங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு, படித்து பயணித்த ஒவ்வொரு வாசகத் தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஒரு கதையை எழுதுவது எளிது. ஆனால் அந்தக் கதையின் உணர்வுகளை மனதில் ஏற்று, கதாபாத்திரங்களோடு ஒன்றிணைந்து பயணிப்பது வாசகர்களால் மட்டுமே சாத்தியம்.
சிவராமனை உங்களில் ஒருவனாக உணர்ந்ததற்கு நன்றி.
இந்த பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் கருத்துகள், விமர்சனங்கள், ஊக்கங்கள் மற்றும் அன்பை வழங்கிய அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.
இந்தக் கதை ஒரு முடிவை அடைந்திருக்கலாம். ஆனால் இதன் நினைவுகளும், இதில் வாழ்ந்த மனிதர்களும் என் மனதிலும் உங்கள் மனதிலும் என்றும் வாழ்வார்கள் என நம்புகிறேன்.
அன்புடனும் நன்றியுடனும்,