மனமென்னும் வீணை..
எத்துணை ராகங்கள்
எத்துணை மோகங்கள்
மீட்டும் கைகளோ
மாற்றும் ராகங்களை..
உச்சஸ்தாயியில் ஒரு தினம்
கீழ் சுருதியில் மறு கணம்
எல்லோர் விரலுக்கும்
ஏற்றார் போல்
இசைக்க முடியாமல்
இயங்க மறுக்கும்
இஷ்டம் போல இசைத்து
இனிய புது ஸ்வரம் தேடும்..
சுபஸ்ரீ எம்.எஸ். " கோதை"