Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலா..என்..வெண்ணிலா-12

Advertisement

lakshu

Well-known member
Member
2198
இரவு, கண்ணாடியின் முன்நின்று ஈஷ்வர் தன் தலையை ஜெல் போட்டு வாரிக்கொண்டே, விசில் அடித்தான். தன் உருவத்தையும் , உடையையும் ஓரு முறை சரி பார்த்தான். ப்ளு ஜீன்ஸ் மேலே கீரிம் கலர் டி ஷர்ட் போட்டிருந்தான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா, இவர் நைட் எங்கே இப்படி மேக்கப் போட்டு கிளம்பறாரு.

மெல்ல ஈஷ்வரை அழைத்தாள், “மகி எங்க கிளம்பற” , ஈஷ்வர் திரும்பி நிலாவை பார்க்க.. ஓரு நிமிடம் அப்படியே நின்று விட்டால் நிலா.

என்ன அப்படி பார்க்கிற நிலா...

இல்ல இவ்வளவு பந்தாவா எங்க போறேன் கேட்டேன்.

ம்ம் கோவிலுக்கு,

இந்த நேரத்துக்கா.. ஆமாம் நிலா பக்கத்து ஊரில் திருவிழா நடக்குதுதானே அங்க பரதநாட்டியம் ஆடுறாங்களாம்.

நானும் கூட வரவா மகி...

நோ நோ... இது ஓன்லி பாய்ஸ், செல் போன் சினுங்க , அதை அட்டன் செய்தான் ஈஷ்வர், ஹாங் நான் ரெடி கீழே இருக்கிறீயா. ஓகே சகல என்றதும் புரிந்து விட்டது நிலாவுக்கு , ரகு தான் அழைத்திருப்பான்.

கீழே இறங்கி வழி அனுப்ப வந்தாள் நிலா. மகி அந்த நாட்டியம் ஆடுறவங்க பெயர் என்ன?
ம் பெரு மறந்து போச்சு நிலா, ரகு பைக்கில் அமர்ந்திருக்க பின் சீட்டில் ஏறினான் ஈஷ்வர்.
பார்த்து கூட்டிட்டு போடா, நிலா ரகுவை எச்சிரிக்க... ம் எல்லா எங்களுக்கு தெரியும் என்று பதில் அளித்தான் ரகு.

சகல போலாமா.

ஏதோ யோசித்தவனாக ஈஷ்வர், நிலாவை அழைத்தான், பெயரு ஜிகினா ஸ்ரீ நிலா பை என்றான்.

என்னது ஜிகினா ஸ்ரீயா வாயை போலந்து நிலா நிற்க, ரகு அவசரமா வண்டியை கிளப்பி சென்றான்.

யோவ் சகல, பெயரு ஏன் சொன்ன மாட்டினோம் போ.

ரகு அதெல்லாம் ஓரு பிரச்சனையும் வராது , நிலா எதுவும் சொல்லாது...

நிலா , எதுவும் சொல்லாது அவ எவ்வளவு பொசஸிவ் தெரியுமா, ஆமாம் உங்க இரண்டு பேருக்கும் ஓண்ணு நடக்கல போல இருக்கு...

எப்படி கண்டுபிடிச்ச சான்ஸே இல்ல ரகு.

ஈஷ்வரு, பின்ன பொண்டாட்டிய விட்டுட்டு என்கூட வறீயே அதவச்சிதான் கண்டுபிடிச்சேன்.

அது இந்த கல்யாணத்துல இரண்டுபேருக்கும் அவ்வளவா இஷ்டமில்ல ரகு அவசரத்தில நடந்திடுச்சு. இப்ப நான்தான் பிரபோஸ் பண்ணனும்.

சகல , நிலா ரொம்ப நல்ல பொண்ணு ,முதல் கல்யாணம் கசப்பான ஓரு வடுவா மாறிடுச்சு உனக்கு தெரியும் தானே.

இல்ல நான் கேட்டுக்கல, ஈஷ்வர் சொல்ல வண்டியை சடனா நிறுத்தினான் ரகு., நீ அவகிட்ட கேட்கலையா ,

சொல்ல வந்தா ,நான்தான் பழையது வேணாம் சொல்லிட்டேன், ஓருத்தர் மேல ஓருத்தர் அனுதாபத்தில வரக்கூடாது தாம்பத்யம், புரிதல மட்டும் வரனும் நினைச்சேன். ஈஷ்வரை கட்டி அனைத்துக் கொண்டான் ரகு.

என் நிலா குடுத்து வைத்தவள், உன்னைய புருஷனா அடைச்சதுக்கு.

டைம் ஆயிடுச்சு ரகு வண்டியை ஓட்டு.

பெரிய ரைஸ் மில்லுக்குள் வண்டி நின்றது. அங்கே இளையவர்கள் ஓரு நாற்பது மேல் இருக்க. தண்ணீ, தம் போன்ற அயிட்டங்களும் இருந்தது. சுற்றி அடியாட்கள் காவலில் நின்றிருந்தன.

ஆட்டம் களைகட்டியது , தெலுங்கு சினிமாவில் வருவது போல் ஜிகினாஸ்ரீ கலர் உடையில் கவர்ச்சியாக மேலிருந்து இறங்கினாள்.ஓரு அயிட்டம் சாங் போல இருக்கே.. செமையா இருக்கு என்று மனதில் நினைத்தான் ஈஷ்வர்.

சினிமா பாட்டு ஓடவிட்டன, அனைவரும் ஆடுனார்கள் பாதியில் ரகுவுக்கு போன் வர போனை எடுத்தான், கவிதா தான் காரசாரமாக திட்டிக் கொண்டிருந்தாள் ரகுவை, யாரு உனக்கு சொன்னாங்க என்று கேட்டான் ரகு, அவள் பதில் சொல்ல போதையில் அவன் செய்த காரியம் மறந்து போனது ரகுவிற்கு .

மணி 11.00 வீட்டிற்கு கிளம்பினார்கள், டேய் எல்லோரும் கொய்யா இலையை பறிச்சிக்கோங்க.

ஏன் ரகு, ஈஷ்வர் கேட்க, சகல இதை மென்றால் நாம்ம தண்ணி அடிச்ச வாசனையே வராது அதுக்குதான். அப்பறம் எடுடா நம்ம ஆக்ஸ் செண்ட் , எடுத்து எல்லோருக்கும் அடிச்சி விட்டான்.

டேய் பயங்கற உஷாருடா ரகு, ஈஷ்வர் மெச்சிக் கொண்டான்.

ஈஷ்வர் அவன் ரூமிற்குள் வர, நிலா தூங்காமல் இருந்தாள்.. ஹாய் பேபி இன்னும்மா தூங்கல சொல்லி ரெஸ்ட் ரூமிற்குள் சென்று வந்தான்.

வெளியே வருவதற்குள் செல் அடிக்க அதில் ரகு என்று வர, இப்பதான போனா அதற்குள் என்ன ,செல்லை ஆன் செய்தான்.

சகல சாரிடா தப்பு பண்ணிட்டேன், என்று ரகு உளற.

சகல கவிதாவுக்கு நாம்ம எங்கே போறோம் சொல்லிட்டா நிலா, அவ போன்போட்டு என்னைய திட்ட நான் ஆத்திரத்தில, அதாம்ப்பா கோவத்தில...

கோவத்தில கவிதாகிட்ட பிரேக் கப் ஆயிட்டியா ரகு, இடியட் கொஞ்சம் யோசித்திருக்கலாம் இல்ல..-ஈஷ்வர்

ஐய்யோ ,சகல என்மேல இம்பூட்டு பாசமா என் மச்சான்,நான் கோபத்தில் நீ ஜிகினா கூட சேர்ந்து ஆடுனீயே அதை விடியோ எடுத்து நிலாவுக்கு அனுப்பிச்சேன்.

என்னடா சொன்ன பரதேசி, டேய் இன்னிக்கு தான் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன், எரும என்று ஸ்டார்ட் செய்து பச்சை பச்சையாக திட்ட ஆரம்பித்தான். கையில கிடைச்ச நீ செத்த... ,போதும் சகல நான் வைக்கிறேன்.

ஈஷ்வர் திரும்ப , அங்கே பத்திரக்காளியா நின்றாள் நிலா. ரகு என்ன சொன்னான் தெரியுமா மகி, கேளு, ஏய் நிலா பிரபாஸே சும்மரா தான் ஆடுனா இந்த பாட்டுக்கு ஆனா உன் ஹீரோ, அதான்ம்மா ஈஷ்வரு சும்மா அந்த பொண்னின் இடுப்ப வளைச்சு வளைச்சு ஆடுறான் ,வீடியோவை பாரு, முழுசா மாறின ஈஷ்வரை பாரு ..

“உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்

பொறுக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல்... மூரல்
நெருக்கி இறுக்கி செருக்கை எரிக்கும் ஆரல்.... ஆரல்

மனோகரி.... மனோகரி...”


செல்லில் அவன் ஆடிய ஆட்டத்தை ஓட விட்டு ஈஷ்வரின் முன்னே நீட்டினாள்... அதை பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றான்.. எல்லோத்துக்கும் காரணம் அந்த காட்டுபையன் ரகு தான் , அவனை உள்ளுக்குள் அடித்து புரட்டிக்கொண்டிருந்தான் ஈஷ்வர்.

திரும்பவும் செல்போன் சினுங்க, ஈஷ்வர் எடுப்பதற்குள் நிலா போனை ஆன் செய்தால், “ஹாங் சகல ஓண்ணு சொல்ல மறந்துட்டேன் , கொய்யா இலையை தின்னியா, இல்ல நாம்ம குடிச்சது தெரிஞ்சிடும்”, ஈஷ்வர் முழிக்க, இவனை பல்லை கடித்தான், “அப்பறம் முக்கியமா”, ரகு சொன்னவுடன் போனை பிடுங்க பார்த்தான், அதற்குள் நிலா அந்த பக்கம் திரும்ப... “அதுதான் நம்ம ஜிகினா உன் காதுல ஏதோ சொன்னாளே அத சொல்லிடாதே”.

“டேய் கூமுட்டை போனை வைடா “,என்று ஈஷ்வர் கத்த. போனை அனைத்த ரகு “ஹாப்பா எப்படியோ நம்ம சகலையை காபாத்திட்டோம்”

இங்கே ஈஷ்வர்தான் என்ன பண்ணறதுன்னு தெரியாம மாட்டிக்கொண்டு நின்றான். ”இன்னா இப்படி முறைக்கிற , அவ்வளவுதான் சொல்லிட்டேன்”.

என்னடா பண்ணுவ, கண்டவ கூட ஆட்டம் போட்டுட்டு கத்தற ,இதுதான் நீ பார்க்க போன பரதநாட்டியம்மா, பெரிய ஹீரோவா நீ ,அப்படியே அவள்மேல விழுந்து விழுந்து டான்ஸ் ஆடுற , இதுல தண்ணி வேற. இங்க பொண்டாட்டி ஓருத்தி இருக்கா உனக்கு ஞாபகம் இருக்கா.

அவள் கண்ணை நேரே பார்த்து, உனக்கு என்ன பிரச்சனை அவக்கூட ஆடுனதா, இல்ல உன் கூட ஆடுல என்றதா.

வாட்.

என்ன வாட் ,ஓய் டீச்சரே உன் ஆசை என்ன தெரிஞ்சு போச்சுடி, தன் செல்லில் பாட்டை ஓட விட்டு, அவளை பெட்டின்மேல் ஏற்றிவிட்டு , அவனும் ஏறி ஆட ஆரம்பித்தான், மகி விடு என்று கத்த, நிலாவின் இடுப்பை பிடித்து தன் காலால் அவளை வளைத்து போஸ் கொடுத்தான்.

டேய் இப்படிதான் அவள் ஹீப்பை பிடித்தீயாடா,

இல்ல லைட்டாதான் , உன் ஹீப்பைதான் டைட்டா பிடித்தேன் என்று கண்ணடிக்க...
உன்ன உன்ன தன் பற்களை கடிக்க, ச்சூ சும்மாயிருடி டான்ஸ் போயிட்டிருக்குல. போதும் விடு மகி, பெட்டிலிருந்து விழுந்துட போறோம் மகி இறக்கி விடு. மெல்ல இருவரும் உட்கார்ந்தார்கள்.

அமைதியாக உட்கார்ந்திருந்தாள் நிலா,என்ன அமைதியா ஆயிட்டா,இப்படியே கீப் பப் பண்ணுடா ஈஷ்வர்.

நிலா எனக்கு தூக்கம் வருது, லைட்டை ஆப் செய்யட்டா, அந்த பக்கம் பேச்சே காணோம், முறைப்பு மட்டும் தான் கண்களால்,என்னடி பயங்கற லுக்கு விடுற...

“அது அவ என்ன சொன்னா உன் காதுல”...மெல்ல ஈஷ்வரிடம் கேட்க.

“என்ன சொன்னா, ஆங் ஞாபகம் வந்திடுச்சு... “,நிலா ஆர்வமாக அவனிடம் நெருங்கி அமர்ந்தாள்.

“அந்த கேர்ள் சொன்னா”, அவ உனக்கு கேர்ளா மகி....

சரி அந்த லேடி சொல்லிச்சு உன் பொண்டாட்டி கொடுத்து வச்சவ ன்னு.

“ஏன்..ஏ அப்படி சொன்னா உன்கிட்ட”, தன் உதட்டை பிதுக்கி தெரியிலையே என்றான் ஈஷ்வர்.

“உடனே அவன் சட்டையை பிடித்து, டேய் நீ அந்த ஜிகினாஸ்ரீ யை ஏதோ பண்ணிருக்க அதான் உன் பொண்டாட்டி கொடுத்து வச்சவ ன்னு சொல்லுறா”, நிலா அழ ஆரம்பித்தாள்.
“ஏய் அழாதடி, நான் ப்ராமீஸ்ஸா எதுவும் செய்யலடி”.

“நீ தண்ணி வேற அடிச்சிருக்க”, நிலா அவன் முன்னாடி கை நீட்டி கேட்டாள்.
“சும்மா ஓரு பெக் தான்டி போட்டேன், எனக்கு அந்த பிராண்ட் பிடிக்காது”.

“நான் நம்ப மாட்டேன், நீ எதுவும் செய்யாம அவ எப்படி அப்படி சொல்லுவா”.
“சரி அப்படி நான் என்ன செஞ்சிருப்பேன் நீ யோசிக்கிற”.

“எல்லாம்தான்... ஏன் நீ கிஸ் கூட அடிச்சிருப்ப...”

“ஆங் ஞாபகம் வந்திடுச்சிடி, இந்த பாட்டு முடிச்சவுடனே, அவ கிஸ் அடிக்க வந்தாளா”. நிலாவின் இதயம் பட படன்னு அடித்தது. நெஞ்சில் கையை வைத்து பிடித்தாள்.

ஏய், நீ ஓவரா ரியாக்ஷன் கொடுக்காத, நான் அலோ பண்ணல, ஏன்னு கேட்டா, என் நிலாவுக்கு மட்டும்தான் இந்த உரிமையிருக்குன்னே, அதுக்குதான் அப்படி சொன்னாப்பா.
நிஜமாவா,தன் கண்களை விரித்து காதலாக கணவனை பார்த்தாள்.

வா நிலாக்குட்டி, மாமனை கட்டிக்கோ, எப்படி பஞ்ச் பேசியிருக்கேன் பாரு, வா உன் உரிமையை நீ நிலைநாட்டு என்று தன் கைகளை விரித்து நிலாவை அழைத்தான்.

ம்ம் லைட்டை ஆப் பண்ணு, தூக்கம் வருதுன்னு சொன்னேல்ல,

ஏய் கேடி டீச்சரே நைஸா விஷியத்தை வாங்கிட்டு,

என்ன ஐய்யா கிஸ்ஸே அடிச்சதில்ல, அப்ப அந்த மாடல் ஷாலு கூட டேட் போனீங்களே , அந்த போடோஸ் எல்லாம் தெரியாது நினைச்சியா, பயங்கறமா போச்சே நெட்ல ,மாடலிங்கை வளைத்து போட்ட யங் தொழிலதிபர்.

அது உனக்கு தெரியுமா நிலா, ம்ச் அப்பவும் ஷாலு செட்டாகல....

-நிலாவை பிடித்தேன்
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
???vera level epi sis superaa irukku raghu therinchi seirangala illa theriyama seirangalanu theriyala but nila kitta nalla maattivitutanga eshwar ra???nilakku over possessive aagiduchu... nalla enjoy panninen thank you sis for this fabulous epi...
 
Top