அத்தியாயம் -7
அறையை விட்டு வெளியே வந்ததும் அங்கு கூச்சல் சத்தம் இன்னும் அதிகமாக கேட்டது கூட்டத்துக்கு நடுவே ஒரு பெண்ணின் குரல் அதுவும் இளம் பெண்ணின் குரல்..
“ஐயோ என்னை விடுங்க…ஆமா நான் தான் பண்ணேன் அப்படி, இப்போ என்ன அதுக்கு!. எல்லாம் என் லவ்வரை இங்க வரவழைக்க தான் அப்படி பண்ணேன்”என்று குரல் கொடுத்தப்படி இருக்க , அந்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு கோபியும் அவனது நண்பனும் நோட்டமிட்டனர்.
அங்கு இருப்பது வேறு யாரும் இல்லை ரித்விகா. ஆம் உயிரோடுதான் இருக்கிறாள்.
“மச்சி அது ரித்விகா தானே”
“ஆமா மச்சி அவளே தான்”
“எப்படி டா உயிரோட இருக்கா இவ ஒரு வேளை பேயா ” என்றான் நண்பன்.
“டேய் உண்மையாவே அவ தான் நல்லா பாரு யம கிராதகி,என்ன ப்ளான் வச்சிருக்கா தெரியலையே. அப்போ நியூஸ்ல வந்தது எல்லாம்?”என்று சொல்லி யோசித்தான்.
“வா டா வா உன்னை வரவழைக்க தான் ஃபேக் நியூஸ் கொடுத்து வரவழைச்சேன். நீ லோக்கல் சேனல் நியூஸ் நல்லா பார்ப்பன்னு தெரியும் அதான் அந்த சேனலுக்கு காசு கொடுத்து ஃபேக் நியூஸ் தந்தேன் போதுமா. நீயும் ஒரு அரை லூசு எதையும் யோசிக்காமல் பதட்டமா உன் ப்ரண்டை கூட்டிட்டு வந்துட்ட “என்றாள் கோபமாக. அவள் முகத்தில் கோபம் வெடிப்பதை உணர்ந்தவன் அங்கிருந்த கூட்டத்தை விலக்கி அனுப்பி விட்டு அவளை வம்படியாக நிற்க வைத்து ஏன் இப்படி பண்ண திமிர் பிடிச்ச திமிங்கலமே என்று பளார் என்று கண்ணத்தில் அரைந்தான்.
“ஆ….ஆ…லூசு எதுக்கு என்ன அடிச்ச ” என்று வீம்புடன் கேட்டாள் ரித்விகா.
“ம்ம் உன்னையெல்லாம் அடிச்சதோட சும்மா விட்டேன்னு சந்தோஷப்படு”என்றான் ஆவேசமாக
“போதும் நிறுத்து. பண்றதெல்லாம் பண்ணிட்டு ரொம்ப யோக்யன் மாதிரி பேசுற. நீ பண்ண வேலைல எனக்கு இப்போ டேட் ஒன் வீக் தள்ளி போயிருக்கு. மவனே கன்பார்ம் ஆகட்டும் உனக்கு இருக்கு. ஒழுங்கு மரியாதையா கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துற வேலையை பாரு. “என்றதும் அதிர்ந்து போனான்.
“வாட்?”
“என்னடா வாட் பூட்னு. இங்க பாரு உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு அதெல்லாம் எனக்கு நல்லா தெரியும். அதனால அதை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை எனக்கு என் வாழ்க்கை முக்கியம் அவ்வளவுதான்” என்றாள் திட்டவட்டமாக.
இவள் பேசும்போதே நண்பனை திரும்பி பார்த்தான்.
“மச்சி என்னடா இதெல்லாம் ” என்று மெல்லிய குரலில் நண்பனை கேட்டான்.
ஒரு ஏளனச்சிரிப்புடன் நண்பன் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றான்.
“இங்க பாரு கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது நீ ஒழுங்கா ஊர் போய் சேரு” என்று அதட்டினான் கோபி.
“ஓஹோ நீ மிரட்டுனா நாங்க பயந்துருவோமா” என்று வம்பு இழுக்கும் துணியில் கூறினாள் ரித்விகா.
“ரித்விகா நம்ப ரெண்டு பேருக்கு நடுவுல நடந்ததோ ஒரு ஆக்சிடென்ட் மாதிரி அதை மறந்துட்டு நீ போய் உன் வேலையை பாரு அத விட்டுட்டு கல்யாணம் அது இதுன்னு பேசிட்டு இருக்க” என்றான் கோபி.
“எப்படி எப்படி நமக்கு நடந்தது ஆக்சிடென்ட்ன்னு நினைச்சு மறந்திடலாம் அப்படித்தானே. நீ ஜாலியா உன் பொண்டாட்டியோட என்ஜாய் பண்ணுவ அப்படித்தானே” என்று கை நீட்டி கூறினாள் ரித்விகா.
‘நல்லா வேணும் உனக்கு நான் எவ்வளவோ எடுத்து சொன்னேன் கேக்கல அனுபவிக்கட்டும் என்று மனதுக்குள் சபித்துக் கொண்டிருந்தான் நண்பன்’
“இங்க பாரு ரித்விகா எனக்கு அதெல்லாம் தெரியாது நீ எல்லாத்தையும் மறந்துட்டு உன் வேலைய பாப்பியோ இல்லையோ ஆனால் நான் உன்னை கல்யாணம் பண்ண முடியாது” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று தன் அறையை நோக்கி நடந்தான். இவன் கிளம்பியதும் நண்பன் ரித்விகாவை பார்த்து..
“உங்களுக்கு ஓகேன்னா நான் வேணும்னா கல்யாணம் பண்ணிக்கிட்டா” என்றான் தமாஷாக.
“ஹலோ என்ன பாத்தா உங்களுக்கெல்லாம் எப்படி தெரியுது” என்றாள் ரித்விகா.
“ஐயோ சாரி” என்று ஓடிவிட்டான் கோபியின் நண்பன்.
மறுநாள் காலைப் பொழுது இனிதே விடிந்தது ஆனால் சென்னையில் லதாவுக்கோ அது ஒரு பரபரப்பான காலை நேரமாக இருந்தது. எழுந்ததும் வீட்டு வேலைகளை மடமடவென்று செய்து முடித்துவிட்டு தயாராகி யுவராணி சொன்ன இடத்திற்கு சென்றாள். வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் பார்க் என்பதால் நடந்தே சென்றாள் லதா.
‘என்னவா இருக்கும் எதுக்கு யுவராணி என்னை கூப்பிட்டா ஒன்னும் புரியலையே அதுவும் பார்க்குக்கு’என்று யோசித்துக் கொண்டே வீதியை வேடிக்கை பார்த்தபடி நடந்தாள் லதா.
சாலையில் வழக்கமாக பூவிக்கும் பூக்காரி லதாவை வழிமறித்து அம்மாடி இந்த ஒரு முழம் பூ வாங்கிக்கோ என்று நீட்டினாள்.
அதை வாங்கி தலையில் சூடிக்கொண்டதும் லதாவின் அழகுக்கு அது மெருகேற்றியது. பார்க்கை நோக்கி விறுவிறுவென்று நடந்து வந்தாள். பார்க்க வாசலில் யுவராணி காத்துக் கொண்டிருந்தாள்.
“ஹே லதா வந்துட்டீங்களா வாங்க வாங்க” என்று அழைத்தாள் யுவராணி.
“என்ன யுவி இப்ப எதுக்கு என்னை இங்கே பார்க்குக்கு வர சொன்னிங்க”என்றாள் லதா.
“என்ன லதா நான் கூப்பிட்டா வர மாட்டீங்களா என்ன எதுக்குன்னு காரணம் தெரிஞ்சாதான் வருவீங்களோ” இன்று புன்னகையித்தாள் யுவராணி.
“ஐயோ அப்படி இல்லை யூபி இருந்தாலும் மண்டையை போட்டு குடைச்சுட்டே இருந்தது என்ன பிரச்சனை அப்படின்னு” என்று கையை பிசைந்தாள் லதா.
“சரி சரி உள்ள போய் அந்த இரண்டாவது பென்ஞ்ல உக்காருங்க ஒரு முக்கியமான பர்சன் உங்களுக்காக வெயிட்டிங் போங்க போங்க, நான் அப்றம் உள்ள வரேன்” என்று அனுப்பி வைத்தாள் யுவி.
அவள் சொன்னபடி அந்த இரண்டாவது பெஞ்சில் ஒரு ஆடவன் தலையை கோதியபடி அமர்ந்திருந்தான்,லதாவை கண்டதும் கூலிங் க்ளாஸை கழட்டிவிட்டு அதை தன் சட்டையில் சொருகினான்.
“ஏய் கௌதம் நீயா” இன்று ஆச்சரியத்தில் மிதந்தாள் லதா.
“யெஸ் தானே தான். வெளியே உன்னை அனுப்பி வெச்சாலே யுவராணி அவ வேற யாரும் இல்ல என்னுடைய மிஸஸ் தான். வா உட்காரு”என்று சைகையில் உட்காரும்படி கூறினான்.
சற்று இடைவேளை விட்டு கௌதம் உட்கார்ந்து இருக்கும் அதே பெஞ்சில் அவளும் உட்கார்ந்தாள்.
“கௌதம் இது என்ன சர்ப்ரைஸ் “
“ஹாஹா… உன் ப்ரண்டு யுவி தான் இந்த ஏற்பாடு பண்ணா. லுக் லதா,ஆக்சுவலி இப்போ உன்னை மீட் பண்ணது பழைய நினைவுகளை அசைப்போட இல்லை, உன்னை விட்டு போனதுக்கு ஒரே ஒரு சாரி சொல்லி எனக்குள்ள இருக்கிற கில்டி ஃபீல்ல இருந்து வெளியே வரதான். எங்க தப்பு பண்ணிட்டேனோன்னு மனசு கடந்து தவிச்சிட்டே இருந்தது. ஸோ ஐயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி ஓகே…” என்று நிறுத்தினான்.
அவள் கண்களிலிருந்து நீர் ததும்பியது.
“நீ என்னை பார்த்து சாரி சொல்வன்னு கூட நான் நினைச்சு பார்க்கலை கௌதம். எல்லா ஆம்பளைங்க மாதிரி நீயும் கழட்டி விட்டு வேற கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கியோன்னு பார்த்தேன் பட் இவ்ளோ நாள் ஏதோ ஒரு கில்டி ஃபீல்ல இருந்திருக்க…இட்ஸ் ஓகே விடு பரவாயில்லை,இனி யுவி கூட சந்தோஷமா வாழ்ற வழியை பாரு ” என்று கௌதமை எதிர்நோக்கியபடி கூறினாள்.
இவ்வளவு நாள் கௌதம் கண்களில் இருந்த வலிகள் எல்லாம் கண்ணீராய் வெளியே வந்துக்கொண்டு இருந்தது.
“ப்ளீஸ் ஸ்டாப் ட்ரெயின் நமக்குள்ள இருந்தது ஒரு ஹெல்தியான ரிலேஷன்ஷிப் தான் கௌதம் ஸோ நீங்க பீல் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. விடுங்க ” என்றாள் லதா.
“புரியுது ஆனாலும்….ஓகே ஐயம் ஆல்ரைட், ஓகே லதா என் மனைவி எனக்காக வெளியே வெயிட் பண்ணிட்டு இருக்கா, நான் கிளம்புறேன் பை…ஐயம் சாரி ஃபார் எவ்ரித்திங் ஒன்ஸ் அகெயின். பட் நம்ம இரண்டு பேரும் இனி ஒரு குட் ப்ரண்ட்ஸ் அவ்ளோ தான். என்ன லதா நம்ம ப்ரண்ட்ஸ் தானே?” என்று கையை நீட்டி கேட்க அவளும் பதிலுக்கு கையை குலுக்கினாள்.
ஒரு சிறு புன்னகையுடன் அவன் பார்க்கை விட்டு வெளியே வந்து “யுவி நம்ம கிளம்பலாம். வா” என்று பைக்கை ஸ்டார்ட் செய்ய…
“கௌதம் இனி நீங்க என்கூட….” என்று அவள் சொல்ல வரும்போது அவள் கையை பிடித்தவன்.
“இனி நான் முழு மனசோட மனசளவுல உடலளவுல உன் கூட சேர்ந்து வாழ்வேன் புரியுதா யூ டோண்ட் வொரி” என்று சொன்னதும் தற்போது யுவி கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.
‘என் மனசுல பாரத்தை வச்சிட்டு அவரோட பாரத்தை இறக்கிட்டு போய்ட்டாரே கௌதம்.’ என்று மனதுக்குள் வெதும்பினாள் லதா.
அங்கும் கோவாவில் கோபி வெதும்பிக் கொண்டிருந்தான். ‘இந்த ரித்திகா வேற கல்யாணம் அது இதுன்னு சொல்றாளே எப்படி இதெல்லாம் சமாளிக்க போறோம் லதாவுக்கு என்ன பதில் சொல்லப் போறோம்’ என்று யோசித்தான் கோபி.
“டேய் மச்சி நீ ரித்விகாக்கு பண்ண அநியாயத்துக்கு பரிகாரம் அவளை கல்யாணம் பண்றது தான். அதுக்காக லதாவை விட்டுவிடு என்று நான் சொல்ல வரல ரெண்டு பொண்டாட்டியை நீ கடைசி வரைக்கும் சமாளிச்சு தான் ஆகணும்” என்றான் நண்பன்.
“டேய் நீ புரிஞ்சுதான் பேசுறியா”என்றான் கோபி.
“ஆமாடா வேற என்ன பண்ண முடியும் ரித்விகா ரொம்ப மோசமானவங்களா இருக்கா அவ எந்த எக்ஸ்ட்ரீம் வேணாலும் போவா. பேசாம கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளுக்கு ஒரு தனி வீடு பார்த்து வச்சிரு”என்றான் நண்பன்.
“ஓஹோ இந்த நிலைமை உனக்கு வந்தால் நீ இப்படி முடிவு எடுத்து இருப்பியா என்றான் கோபி”
“ஹலோ கோபி சார் ரொம்ப பேசாதீங்க முதல்ல நான் இந்த மாதிரி பண்ணவே மாட்டேன்”
“சரி சரி விடு நடந்துருச்சு இப்ப என்ன பண்றது” என்றான் கோபி தவிப்போடு.
“ரித்விகாவை கல்யாணம் பண்ணி நான் சொன்ன மாதிரி அவளுக்கு ஒரு தனி வீடு பார்த்து வச்சிட்டு கடைசி வரைக்கும் அங்கேயும் இங்கேயுமா நீ அலையுறத தவிர வேற வழியே இல்ல” என்றான் நண்பன்.
‘ஐயோ போச்சு போச்சு என் லைப்பே போச்சு சிங்கப்பூர் போற பிளானும் போச்சு இப்ப நான் என்ன பண்ண போறேன் முருகா’ என்று தலையில் கை வைத்தப்படி புலம்பினான் கோபி.
கோபி ரித்விகாவை கல்யாணம் பண்ணுவானா ? ரித்விகா விஷயம் லதாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும். லதா கௌதம் நட்பு வளருமா? அடுத்து வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
தொடரும்.