4.25- இந்தியா போகனும்
இரவு 10 மணி..
ரம்மியமான அமெரிக்காவின் கோடைக்கால இரவில்..
சீறிப் பறந்துகொண்டிருந்த கால்டனின் காரில்
கயல்விழிகள் தன் கண்ணாளன் மீதே நிலைபெற்றிருந்தன.
கனவு போல் அரங்கேறிவிட்ட சம்பவங்களினால் அவள் உணர்ச்சிவசப்பட்டிருந்தாள்.
அவளின் அம்மா மறைந்த பிறகு அன்று போல் சந்தோஷமாக உணர்ந்ததாய் நினைப்பில்லை அவளுக்கு.
கால்டன் வெறும் வாய்ச்சொல் வீரர் இல்லை என்பதை நிரூபித்துவிட்டார். அவள் வார்த்தைகளுக்கு எழுத்துக்கு எழுத்து மதிப்பு கொடுத்து வெறும் இரண்டே நாட்களில் தன் பக்கத்தில் அனைத்தையும் சரிகட்டி சமன்படுத்தி தயார் செய்துவிட்டார்.
கயலால் இன்னும் கூட கால்டனின் வருங்கால மனைவி என்கிற ஸ்தானம் தனக்கே சொந்தம் என்பதை நம்ப முடியவில்லை. ஒரு பெண், ஒரு காதலி, இந்த கெளரவத்தை விட வேறு எதைப் பெரிதாய் நினைத்துவிடப்போகிறாள்?!!
கால்டன் படு ஸீரியஸாகத்தான் இருக்கிறார் என்று புரிந்து கொண்ட அவளுக்கு இனி எந்த குழப்பங்களும் சந்தேகங்களும் இல்லை. கால்டன் மேல் மிகவும் ஆழமான காதல் கொண்டாள்.
Isn’t it lovely, all alone..
Heart made of glass, my mind of stone
Tear me to pieces, skin to bone
hello, welcome home..
பில்லி ஐலிஷ்-ன் பாடல் வரிகள் அந்த சூழ்நிலைக்கான சரியான உணர்வுகளை வெளிப்படுத்தி இசைக்க, காதலும் ஆவலும் பெருக்கெடுத்த நிலையில் உயிரைக் கசக்கும் அந்த பார்வைக்கிடையே “வீட்டுக்கு போகலாமா..” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த கயலிடம், கேட்டுப்பார்த்தார் கால்டன்.
அத்தனை மயக்கத்திலும், கயல் தெளிவாகவே இருந்தாள். முடியாது என்று விஷம புன்னகையோடு மண்டையை ஆட்டினாள். ஏக்கப்பெருமூச்சு அனலென வெளிவர, காரைக் கயலின் மருத்துவர் குடியிருப்புக்கு முன் வந்து நிறுத்தினார்.
சாலை இத்தனை குறைந்த நீளத்தோடு ஏன் இருக்கிறது என்ற மனதுக்குள் திட்டிக்கொண்டே கயலும் இறங்கினாள். கால்டனும் தான்..
மங்கலான ஆரஞ்சு நிற தெருவிளக்கொளியில் காதலால் கயல் எக்கச்சக்க அழகாய் கால்டனுக்கும், கால்டன் கிரங்கச் செய்யும் வசீகரனாய்க் கயலுக்கும் காட்சி தர, எப்படியேனும் இந்த தருணத்திலிருந்து தப்பித்து உள்ளே ஓடிவிடவேண்டும் என்று கயலும், சிறிய அளவு கூடலாவது காணாது இவளை விட்டுவிடுவதில்லை என்று கால்டனும் மனதுக்குள் நினைத்தனர்.
“குட் நைட்” என்று சொல்லி நைஸாக உள்ளே போக அடியெடுத்தாள் கயல்.
“உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?” என்று கால்டன் குழந்தைக் கோபத்தோடு கேட்டதும் திரும்பினாள்.
“2 நாளா எனக்கு கொஞ்சம் கூட பழக்கமில்லாத, கொஞ்சம் கூட ஒத்து வராத வேலையை செஞ்சிருக்கேன் உனக்காக”
“என்னது?”
“என்னதா? அப்பா அம்மா கிட்ட பேசுறது. நீ நம்பினா நம்பு! நான் அவங்க 2 பேர் கிட்டையும் இவளோ பேசினதே இல்ல தெரியுமா? நீ சொன்னியேன்னு பேசி சம்மதிக்க வச்சு அதை அவங்களை விட்டே தெரியப்படுத்தியிருக்கேன். குட் நைட் நு ஸிம்பிளா சொல்லிட்டு போற!”
“வேற என்ன சொல்லனும்?”
“நீ இன்னும் ஒன்னுமே சொல்லல்ல.. நியாபகம் இருக்குதுல்ல.. இன்னும் காதலையே சொல்லல்ல நீ!”
“இப்ப என்ன சொல்லனும்? அதைச் சொல்லுங்க”
“ஏதாவது.. நாளைக்கு மறுபடியும் பாக்குற வரைக்கும் நினைச்சு சந்தோஷப்பட்டுக்கற மாதிரி….. ஏதாவது”
“நன்றி சொல்லட்டா..”
“நன்றியா…”
“ம்…”
“சரி. அதையாச்சு சொல்லித்தொல”
புன்னகைத்துக்கொண்டே கிட்டே வந்து கழுத்தைக் கட்டி கன்னத்தில் முத்தமொன்றினை அளித்தாள்.
“போதுமா..”
“ஓகே.. குட்.. ஆனா சரியா கேக்கல்ல.. திரும்ப.. திரும்ப சொல்றியா!”
“முடியாது”
“தேன்க் யூ..”
“அப்பறம்.. எனக்கு இந்தியா போகணும்”
“என்ன திடீர்னு சொல்ற..”
“நீங்க திடீர்னு கல்யாண வேலையைப் பாதி முடிச்சிட்டிங்க. இனி நான் மீதியை முடிக்கனுமில்ல!”
“ஓ.. சரி சரி.. எப்ப போகனும்?”
“எத்தனை சீக்கிரம் ஏற்பாடு பண்ண முடியுமோ பண்ணுங்க”
“எத்தனை நாள்?”
“ஒரு 20/25 நாள்”
“25 நாளா…. எதுக்கு அவ்வளவு நாள்?”
“உங்க வேலை மாதிரி என் வேலை ஈசி இல்ல கால்டன். முதல்ல அப்பாவைப் பாக்கனும். அவர் உடல்நிலை மனநிலை பாத்து தான் இந்த விஷயத்தை ஆரம்பிக்க முடியும். அப்பாவோட முடிஞ்சிறாது. பெரிய லிஸ்டே இருக்கு. 1 மாசமின்னா கூட ஓகே தான்.”
“சரி. பாக்குறேன்.”
“நான் இதை ஆரம்பிச்சா பத்தி எரியும்”
“ஏன்?. உன் அப்பா அவ்வளவு பழமைவாதியா!”
“காதலும் பழசு தானே! காதலுக்கு அவர் என்ன சொல்லுவார்-னு என்னால ஊகிக்க முடியல்ல. ஆனா வாடகைத்தாயா இருந்ததுக்கு நிச்சியம் கோவப்படுவாரு.”
“அப்ப சொல்லாத.”
“இல்ல. அவர் என்ன திட்டினாலும் வாங்கிப்பேன். ஆனா மறைக்க முடியாது கால்டன்”
“எனக்கு இதைப் பத்தி எதுவும் தெரியாது. நீயே பாத்து பண்ணு! ஆனா எது பண்ணினாலும் சீக்கிரமா பண்ணு”
“ம்..”
“1 மாசம்-லாம் வெயிட் பண்ணுறது ரொம்ப கஷ்டம். இன்னைக்கே உன்னை இங்க ட்ராப் பண்ணிட்டு போகறதுக்கு முடியல்ல..”
“ம்…!!!??? அப்படியா?”
“என்ன அப்படியா? பேசாம கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்பறம் இதெல்லாம் பாத்துக்கலாம். நீ தான் கேக்க மாட்டேங்கற”
“இப்பவே வேகமாத்தான் போயிட்டிருக்கு. கொஞ்சம் பொறுங்க. அப்பறம். அப்பா உங்களைப் பாக்கனும் பேசனுமின்னு சொல்லுவாரு. வீடியோ கால் பண்ணுவேன்.”
“பாத்துக்கலாம். முதல்ல டிக்கெட் போட்றேன்.”
“என்ன தேதிகள் அவைலபிளா இருக்குன்னு சொல்லுங்க. சில சர்ஜரி இருக்கு. அதைப் பொறுத்து சொல்றேன்.”
“ம்.. சரி..”
“ஓகே.. குட் நைட்” என்று சொல்லி மனமில்லாமல் நடந்தாள் கயல்.
“கிளம்புங்க.. நா போயிக்கறேன்”
“இல்ல.. நீ போ.. நான் அப்பறம் போறேன்.”
“ஏன்?”
“நீ நடக்கும் போது பின்னாடி உன் கூந்தல் நுனி ஊஞ்சல் ஆடும். அதைப் பாத்துட்டு போவேன். உனக்கு என்ன.. நீ போ..”
வெட்கப்புன்னகை முகத்தை நிரப்ப, கயல் உள்நோக்கி நடந்தாள்.
மன்தூக்கி திறந்ததும் உள்நுழந்தவளின் பின்னாலேயே கால்டனும் ஓடி வந்து சேர்ந்து கொள்ள, முத்தச்சத்தம் மூடிய லிஃப்டை நிறைத்தது.
4.26 ஏனென்றால்… உன் பிறந்தநாள்..
-வித்யாகுரு