அப்போது அறைக்குள் வந்தான் கதிர். அறை இருந்த நிலையைக்
கண்டு அதிர்ந்து போய் பார்த்தான். அனைத்து பொருள்களும் ஆங்காங்கே சிதறி இருந்தது. அவனுடையை முகத்தை தான் அவளும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளிடம் ஏதாவது கேட்பான், அப்போது சண்டையிடலாம் என்று அவள் காத்திருக்க, அவனோ ஒரு தோள் குலுக்களோடு தன்னுடைய கப்போர்டை திறந்து ஒரு லுங்கியை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் சென்று விட்டான்.
அதில் தேன்மொழி முகம் விழுந்து விட்டது. “என்ன ஒண்ணுமே சொல்லாம போய்ட்டான்? சரி வரட்டும் பாத்துக்கலாம்”, என்று எண்ணி அவன் வரவுக்காக காத்திருந்தாள்.
அப்போது அந்த அறைக்குள் நுளைந்தான் கதிர். “வாடா மாப்பிள்ளை”, என்று மனதுக்குள் கருவினாள் தேன்மொழி.
அவனையே பார்த்த படி இருந்தவளைப் பார்த்தவன் “முதலிரவு அறைக்குள்ள உக்காந்துருக்குற மாதிரியா உக்காந்துருக்கா? சண்டைக்கு போற மாதிரி உக்காந்திருக்கா. சரியான சண்டி குதிரை டி நீ, உன்னை அடக்கலைன்னா நான் கதிர் இல்லை. காலைல நக்கல் சிரிப்பு சிரிச்சு என்னையே ஒரு நிமிஷம் கதிகலங்க வச்சிட்டல்ல? இனி உன்னை என்ன செய்றன்னு பாரு”, என்று நினைத்துக் கொண்டு அவளைப் பார்த்தான்.
கதிர் இன்றாவது அவளிடம் மனதில் இருப்பதை பேசி இருக்க வேண்டும். அவள் மீதான காதல் ஏக்கம் அனைத்தையும் சொல்லி இருக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு மீண்டும் அவளிடம் வம்பிழுக்கவே எண்ணினான். ஒரே ஒரு முறை “உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் தேனு”, என்று அவன் சொல்லி இருந்தால் அவர்கள் வாழ்க்கை வேறு மாதிரி அமைந்திருக்கலாம்.
[the_ad id=”6605″]
அவன் அப்படி சொல்லி இருந்தாலும் அதை அவள் காது கொடுத்து கேப்பாளா என்றும் சந்தேகமே. ஆனால் அவள் சிறிதாவது யோசிப்பாள்.
அவன் எதையோ யோசித்த படி இருக்க அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
அவள் எதிரே வந்து நின்றவன் “ என்ன முறைப்பு எல்லாம் பலமா இருக்கு?”, என்று கேட்டான்.
“உனக்கு முறைப்பொண்ணுன்னு தான என்னைக் கட்டிக்கிட்ட? பின்ன முறைக்காம?”, என்று கேட்டவள் அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தாள்.
“முறைப் பொண்ணுன்னா முறைக்க மட்டும் தான் செய்யணுமா?”
“அப்படி தான் டா முறைப்பேன். என்ன செய்வ?”
“இவ பெரிய இவ. நீ முறைச்சா நான் பயந்துருவேனோ? ஆமா, நீ என்ன எனக்கு முன்னாடி வந்து உக்காந்துருக்க? உனக்கு அறிவே இல்லை டி”
“உனக்கு தான் மண்டையில் பொங்கி வழியுதே. கொஞ்சம் கடன் கொடுக்குறது”
“அதில்லை டி, பால் சொம்பு எல்லாம் எடுத்துட்டு வந்து என் காலுல விழுந்து நான் தூக்குறதுக்காக எல்லாம் வெயிட் பண்ணுவன்னுல நினைச்சேன்”, என்றான் கதிர்.
“என்னது என்னது??… ஹா ஹா… நான் உன் காலுல விழணுமா? அது செத்தாலும் நடக்காது டா. இனி இப்படி எல்லாம் கனவு காணாத. எனக்கு சிரிப்பா வருது”
“ஏய் திமிரா டி?”
“அப்படி தான்னு வச்சிக்கோடா”
“இந்த திமிரா பேசுறதெல்லாம் இனி உன்கிட்ட இருக்க கூடாது தேனு. நான் உன் புருஷன். இனி நான் ஆட்டி வைக்கிற மாதிரி தான் நீ இருந்தாகனும்”
“ஓஹோ, நீ என்னை ஆட்டி வைப்பியா? கொஞ்சம் எப்படினு சொன்னா நல்லா இருக்கும்”
“சொன்னா திருந்திருவியா?”
“சே சே, தூக்கம் வரலை. நீ சொன்னா போர் அடிக்காம இருக்கும்ல? நீ சொல்லு”
“என்ன டி திமிரா? இந்த திமிரை அடக்க தான் டி கல்யாணமே பண்ணுனேன்., அதை அடக்கவும் செய்வேன்”
“அது தான் எப்படின்னு நானும் கேக்குறேன்”
“எப்படி ஆட்டி வைப்பேனா? காலைல எந்திச்சு வாசல் தொளிச்சு, சாணி அள்ளி, மாட்டு கொட்டகையை சுத்தம் பண்ணி, பாத்திரம் விளக்கி, சமையல் செஞ்சு இன்னும் நிறைய இருக்கு”
[the_ad id=”6605″]
இந்த வேலையெல்லாம் தேன்மொழி ஏற்கனவே அவளுடைய வீட்டில் செய்பவை தான். இங்கு வந்தும் அவள் தான் செய்ய வேண்டும் என்று சகுந்தலாவும் அறிவுரை வழங்கி இருந்தாள். தேனும் செய்ய தயாராக இருந்தாள்.
கதிர் சும்மா இருந்திருந்தால் தேன்மொழியே அனைத்தையும் செய்திருப்பாள். அவன் அவளை அடிமை படுத்துவது போல பேசவும் “ஹா ஹா, சரி தான். உனக்கு இந்த அளவுக்கு எல்லாம் ஆசை இருக்கா? கல்யாணம் பண்ணிட்டா நான் உன் அடிமையா?”, என்று எதிர் கேள்வி கேட்டாள்.
“நீயா டி அடிமை? நீ என்னோட எஜமானி டி”, என்று நினைத்தவனின் கண்கள் அவள் அழகை வட்டமிட்டது.
ஒரு சிறு குறையும் கூற முடியாத அவ்வளவு அழகைக் கொண்டிருந்தாள் தேன்மொழி. மாநிறம் தான், அகன்ற புருவம், அனைவரையும் தன் பால் இழுக்கும் மான் விழிகள்.
மொத்தத்தில் அனைத்து ஆண்களும் எதிர்பார்க்கும் அத்தனை அழகையும் கொண்டிருந்தாள்.
“உன்னை என் வீட்ல வேலைக்காரியா ஆக்கணும்னு தான உன்னை நான் கட்டிக்கிட்டேன். சின்ன வயசுல இருந்து எவ்வளவு ஆட்டம் காட்டிருக்க? இப்ப எனக்கே பொண்டாட்டியா ஆகிட்ட பாத்தியா? ஆமா, எங்க உன்னோட ராஜகுமாரன்?”
அவன் சொன்னதைக் கேட்டு வெகுண்டவள், “என்ன செய்ய, நான் கனவு கண்டது ராஜ குமாரனைத்தான். ஆனா எனக்கு அமைஞ்சது விடாது கருப்பு”, என்று சொல்லி அவனிடம் பதில் வாதம் செய்யாமல் படுத்து விட்டாள்.
வந்த புன்னகையை அடக்கியவன் “ஏய், ரூமை குப்பை மாதிரி போட்டு வச்சிட்டு படுத்துட்ட? இதெல்லாம் யாரு சுத்தம் செய்வா?”, என்று கேட்டான்.
“ஏன், உனக்கு கை இல்லையா? நீயே எடுத்து வை”
“விளையாடாத தேனு, காலைலயாவது எல்லாம் சுத்தம் செஞ்சிரு. அம்மா பாத்தா என்ன நினைப்பாங்க?”
“அவங்க என்ன நினைச்சா எனக்கென்ன? வேணும்னா நீ எடுத்து வை”
“எல்லாம் என் நேரம் டி”, என்று எண்ணிக் கொண்டு அவள் போட்ட குப்பையை எல்லாம் ஒரு ஓரத்தில் எடுத்து வைத்தான்.
“என்னையா அடிமையாக்குறேன்னு சொன்ன? இப்ப பாத்தியா? வந்த முதல் நாளே உன்னை வேலை செய்ய வச்சிட்டேன்”, என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டாள் தேன்மொழி.
சிறிது நேரம் கழித்து அவள் அருகில் படுத்தவன் அவளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான். அவனுக்கு அவள் அருகில் இருப்பதே போதுமானதாக இருந்தது. அவள் தன்னுடனே இருக்க வேண்டும் என்பது தானே சிறு வயதில் இருந்து அவனுக்கு ஆசை. அது நிறைவேறவும் நிம்மதியாக தூங்க ஆரம்பித்தான்.
அவன் பக்கம் திரும்பி படுத்த தேன்மொழி “அதுக்குள்ள தூங்கிட்டானா?”,என்று எண்ணிக் கொண்டே அவனைப் பார்த்தாள். அவன் நன்கு உறங்குவது புரிந்தது.
“எவனாவது கல்யாண முடிஞ்ச அன்னைக்கு இப்படி தூங்குவானா? நிஜமாவே உனக்கு என்னை பிடிக்காதா அத்தான்? என்னை பழி வாங்க தான் என்னை கல்யாணம் செஞ்சியா?”, என்று தனக்குள்ளே கேள்வி கேட்டுக் கொண்டாள்.
அந்த அறையில் இருந்த மற்றொரு புகைப்படம் கண்ணில் பட்டது. அது தேன்மொழிக்கு நான்கு வயது இருக்கும் போது எடுத்தது. அதில் செல்லத்துரை கையில் கதிரும் மதிவாணன் கையில் தேன்மொழியும் அமர்ந்திருந்தார்கள்.
இரண்டு தாத்தாக்களையும் பார்த்தாள். இருவரும் அவளைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது. அவர்கள் ஆசை நிறைவேறி விட்டது என்று எண்ணிக் கொண்டார்.
மெதுவாக அந்த போட்டோ அருகில் சென்றவள் “அவன் என்ன செஞ்சாலும் உன்கிட்ட சொல்ல சொன்னள்ல தாத்தா? பாத்தியா இன்னைக்கு அவன் என்னை கல்யாணமே பண்ணிக்கிட்டான். நீ தான அவன் கூட சண்டை போட்டா வேற யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொன்ன? அம்மாவும் அதையே தான் சொல்றா. ஆனா கதிரை பாருங்க, எப்படி தூங்குறான்னு. அவன் மனசுல நான் இல்லவே இல்லை”, என்று வாய் விட்டே பேசினாள்.
[the_ad id=”6605″]
அவன் அவளை தொல்லை செய்யாமல் தூங்கி விட்டான். அதுக்கு அவள் சந்தோஷப் படாமல் சஞ்சல பட்டது அவளுக்கு குழப்பத்தை தான் கொடுத்தது. அவன் என்ன செய்ய வேண்டும் என்று அவள் எதிர் பார்க்கிறாள் என்று அவளுக்கே புரிய வில்லை.
பின் விளக்கை அணைத்து விட்டு எதையோ யோசித்த படி படுத்து விட்டாள். சிறிது நேரத்தில் நன்கு உறங்கியும் விட்டாள்.
அதிகாலையில் சீக்கிரமே விழித்து விட்டாள் தேன்மொழி. அவன் எழுந்து விடாத படி அமைதியாக எழுந்தவள் குளிக்க சென்று விட்டாள்.
சிறிது நேரம் கழித்து கண் விழித்த கதிர் முதலில் தேன்மொழியைத் தான் தேடினான். அவள் குளிப்பது புரிந்து எழுந்து அமர்ந்தவன் படுக்கையை ஒழுங்கு படுத்தி சிதறிக் கிடந்த பூக்களை எல்லாம் குப்பையில் போட்டான்.
அவள் வெளியே வரவும் அவளைப் பார்த்து சிரித்தவன் துண்டை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றான்.
“இவன் என்ன இப்படி சிரிக்கிறான்? என் மேல கோபமா இருக்குற மாதிரியே பேசுறான்? ஆனா சிரிக்கிறான்? இவன் என்ன லூசா? கோபமா இருக்குற என்னைப் பாத்து சிரிச்சிட்டு போறான்?”, என்று எண்ணிக் கொண்டு அறையைப் பார்த்தாள்.
அறை சுத்தமாக இருந்தது. “இவன் சொல்லி நான் செய்ய மாட்டேன்னு நினைச்சு அவனே சுத்தமாக்கிட்டான் போல? அந்த பயம் இருக்கட்டும். தேன்மொழியை என்னன்னு நினைச்சான்?”, என்று எண்ணிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.
குளித்து முடித்து வந்த கதிரின் கண்ணில் பட்டது கட்டிலில் அமர்ந்திருந்த தேன்மொழி தான். “ஏய், என்ன கீழ போய் வேலை செய்யாம இங்க வெட்டியா உக்காந்துருக்க?”, என்று கேட்டுக் கொண்டே தலையை துவட்டினான்.
அவளுக்கு கீழே போக தயக்கமாக இருந்ததால் தான் அங்கேயே அமர்ந்திருந்தாள். அது புரியாமல் அவன் பேசவும் அவனைப் பார்த்து முறைத்தவள் “ஆமா, உனக்கும் உன் வீட்டுக்கும் சேவகம் பண்ண தான என்னை கட்டிக் கொடுத்துருக்காங்க?”, என்று கேட்டாள்.
“இதுல என்ன சந்தேகம்? அதுக்கு தான உன்னை கல்யாணம் பண்ணுனேன்?”
“நினைப்பு தான் பொழைப்பைக் கெடுக்குமாம்”, என்று வெடுக்கென்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே வந்தாள். மாடி மேலே இருந்து எட்டிப் பார்த்தாள். கீழே யாரும் இருப்பது போல தெரியவில்லை.
“இது என் வீடு தான? நான் எதுக்கு தயங்கணும்?”, என்று எண்ணிக் கொண்டு கீழே வந்தாள். அவள் பின்னே கதிரும் வந்தான்.
சமையல் அறையில் இருந்து வெளியே வந்த வேணி இருவரைப் பார்த்து சிரித்தாள். “அம்மா, நான் தோட்டம் வரைக்கும் போயிட்டு வரேன்”, என்றான் கதிர்.
“எங்கயும் போக வேண்டாம். இப்ப காப்பி தரேன் குடி.உனக்கும் காப்பி தரட்டா தேனு?”, என்று கேட்டாள் வேணி.
“எனக்கு ஒண்ணும் வேண்டாம். அதை உங்க மகன் கிட்டாயே கொடுங்க”, என்று சொல்லி விட்டு பின் வாசலுக்கு சென்று விட்டாள்.
முகத்தில் அறை வாங்கியது போல உணர்ந்தாள் வேணி. பின் ஒரு சிரிப்புடன் நகர்ந்து விட்டாள். கதிர் தான் வேணியைப் பாவமாக பார்த்தான்.
அவன் காப்பி குடித்துக் கொண்டிருக்கும் போது செல்வாவும் தினேஷும் அங்கு வந்தார்கள்.
கதிர் அருகில் வந்த செல்வா, கதிர் முகத்தையே திருப்பி திருப்பி பார்த்தான்.
“எதுக்கு டா அண்ணா முகத்தை இப்படி பாக்குற?”, என்று கேட்டான் தினேஷ்.
“இல்லை நைட் முழுக்க தூங்காம இருந்தா கண்ணு சிவந்திருக்கணும்ல? அதான் அப்படி இருக்கான்னு பாத்தேன்”, என்று செல்வா சொன்னதும் அவன் மண்டையில் கொட்டிய கதிர் சிரித்தான்.
[the_ad id=”6605″]
அங்கு வந்த அன்னமும் அவர்களைப் பார்த்து சிரித்தாள். அப்போது எழுந்து வந்த மதியழகனும் பேப்பரை எடுத்துக் கொண்டு படிக்க அமர்ந்தார்.
வெளியே அமர்ந்திருந்த தேன்மொழி எவ்வளவு நேரம் தான் மாடுகளையே பார்த்திருக்க என்று எண்ணி உள்ளே வந்தாள். அவள் உள்ளே வந்ததுக்கு மற்றொரு காரணம் கூட கொஞ்ச நேரம் அவள் அங்கே இருந்திருந்தால் அவளே சுத்தம் செய்ய ஆரம்பித்திருப்பாள்.
அவள் உள்ளே வரும் போது “அம்மாடி தேனு, காலைலைக்கு சமைச்சிட்டேன். மதியத்துக்கு அப்புறம் பாத்துக்கலாம். நாலு பாத்திரம் கிடக்குது. அதை மட்டும் விளக்கிரு கண்ணு”, என்றாள் வேணி.
அப்போது கதிரை திரும்பி பார்த்தாள் தேன்மொழி. அவன் செல்வா எதையோ சொன்னதற்கு சிரித்துக் கொண்டிருந்தான். அது அவளைப் பார்த்து தான் சிரிக்கிறான் என்று நினைத்த தேன்மொழி “இந்த வேலை சொல்றதை எல்லாம் என்கிட்ட வச்சிக்காதீங்க, சொல்லிட்டேன்”, என்று சொல்லி விட்டு மாடி ஏறினாள்.
“முகத்துல அடிக்கிற மாதிரி அத்தைக் கிட்ட பேசிட்டோமே? என்னைப் பத்தி எல்லாரும் என்ன நினைப்பாங்க? எல்லாம் இந்த அத்தனால தான்”, என்று எண்ணிக் கொண்டே அவள் செல்லும் போது “ஏய் தேனு, நில்லு. நில்லுன்னு சொல்றேன்ல? எதுக்கு இப்ப அம்மா கிட்ட மரியாதை இல்லாம நடந்துக்குற?”, என்று கேட்டான் கதிர்.
அவன் கூறியது காதில் விழாதது போல அங்கிருந்து சென்றாள் தேன்மொழி. அனைவரும் அவள் செய்கையில் அதிர்ந்து போய் நின்றார்கள்.
காதல் தீயை நீர் அணைக்குமா?….