Thank you Sumi ma for a wonderful story. So entertaining with Nantha and his friends. Every character had a part to play. Is this your first story ma? I don’t believe it is. Best wishes for your success in the competition, Sumi ma.
Thank you sisThank you Sumi ma for a wonderful story. So entertaining with Nantha and his friends. Every character had a part to play. Is this your first story ma? I don’t believe it is. Best wishes for your success in the competition, Sumi ma.
Thank you so much sisView attachment 7061
காதலே சாரலாய்.... சாரல் மழை சாரலாகவும் இருக்கலாம் பனி சாரலாகவும் இருக்கலாம் அது படிப்பவரின் கற்பனைக்கு
நாயகன் நாயகியின் நண்பர்களின் ஆரவாரத்துடன் ஆரம்பித்த கதை இறுதி வரை கலகலப்பிற்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாமல் சென்றது
நந்தா மிக சேட்டைக்கார நாயகன் அவன் பார்க்கும் டாக்டர் தொழிலுக்கும் (சேவைக்கும்) அவனின் கலாட்டாவான குணத்திற்கும் சம்பந்தமே இல்லை கதை முழுவதும் அவ்வளவு குறும்பு செய்யறான் அதுவும் அவன் நண்பன் அரவிந்தை வெச்சு செய்யறான் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் அரவிந்த் போன்ற நண்பர்கள் கிடைப்தெல்லாம் வரம் தான்
நாயகி அவந்திகா பேராசிரியை ஆக.....அவள் பார்க்கும் பணிக்கு ஏற்ப நேர்மையாகவும் தோழி தர்ஷிக்கு நல்ல நண்பியாகவும் சக ஆசிரியர்கள் அவள் மீது கொண்ட பொறாமையால் அவளுக்கு தீங்கிழைக்கும் போது தைரியமாக அதை சரியான விதத்தில் தட்டி கேட்கும் போது வீரமங்கையாக அவளின் நற்பண்புகள் நம் மனதை கவரும் விதமாய்
பானுமதி நம் நாயகியின் அன்னையாக டீவி சீரியல்களை ஆர்வமாக பார்க்கும் கதாபாத்திரத்தில் மிக கலகலப்பாக நம்மை சிரிக்க வைக்கிறார்
சேகரன் மனைவியின் சொல்படி நடக்கும் கணவனாகவும் மகளுக்கு (அவந்திகா) செல்ல அப்பாவாகவும் திகழ்கிறார்
வீரபாண்டியன் நம் நாயகனின் தந்தை.... ஆரம்பத்தில் strict அபபாவாக வந்தாலும் தங்கை கலையரசி (கொலையரசி) யின் கெட்ட எண்ணம் மற்றும் தீமையான குணம் புரிந்த பின்னரான அவரின் மாற்றம் நம்மை வியக்க செய்வதாய்
கோமதி நாயகனின் அன்னை... குடும்ப தலைவியாகவும் மருமகள் போற்றும் மாமியராகவும் பிள்ளைகளுக்கு நல்ல அம்மாவாகவும் நம் மனதை நிறைக்கிறார்
நாயகன் நந்தா அவந்தியின் மீதான தன் பல வருட காதலை தன் மாமா வேலனின் துணைக் கொண்டு பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமாக எப்படி விறுவிறுப்பாக நடத்தி கொள்கிறான் என்பதையும் தன் அத்தை கலையரசி யின் தகாத செயல்களை எப்படி முறியடிக்கிறான் என்பதையும் எழுத்தாளர் அவரின் பாணியில் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் மிக அருமையாக தந்திருக்கிறார் அவரின் முதல் முயற்சிக்கு நம் பாராட்டுக்கள்
கலகலப்பான கதை
நிறைவான முடிவு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றி சிஸ்அருமையான ரிவ்யூ .
செமையா எழுதியிருக்கீங்க.
Thank you sisnice story best wishes
Thank you sisஅருமையான கதை,நந்தா டாக்டர் செம நிறைய இடங்களில் சிரிச்சுகிட்டே படிச்சேன்