ஹலோ மக்களே!!! இனிய ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் முந்துதலாகவே!!
This episode is around 2700 words. such a long episode! எதுக்கு இதை சொல்றேன்னா, திங்கள் தர வேண்டிய எபியும் சேர்த்து ஒரே எபியா போட்டுட்டேன்!! So see you after pooja holidays .... அடுத்த பதிவு... 'புண்ணிய புதனில்'
சென்னையில் இறங்கிய ஷங்கரும் செல்லமும் நேரே சென்று நின்றது சிவகுருவின் வீட்டிற்கு தான். கார்மெண்ட்ஸில் வேலை முடித்து வீட்டிற்கு அப்போதுதான் வந்திருந்த சிவகுரு, லக்கேஜ்களோடு டேக்ஸியில் வந்திறங்கும் ஷங்கரையும் செல்லத்தையும் கண்டு, புருவ மேடுகள் முடிச்சிட, வாசலுக்கு ஓடினார்.
“என்ன ஷங்கர்? அதுக்குள்ள ஊருல இருந்து வந்துட்டீங்க?” என்று கேட்ட சிவகுரு, “லக்கேஜ குடுமா” என்று செல்லத்தின் கையில் இருந்த பைகளை வாங்கிக்கொண்டார். மௌனமாய் இருந்த இருவரையும் வீட்டிற்க்குள் அழைத்து வந்தவர், “லலிதா, யாரு வந்துருக்காங்க பாரு” என்று அடுக்களையை நோக்கி குரல் கொடுத்தார் சிவகுரு.
முந்தானையில் கையை துடைத்துக்கொண்டே வெளியே வந்த லலிதா தன் வருங்கால சம்மந்திகளை அந்நேரத்தில் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது.
தடுமாற்றத்துடன், “வாங்..வாங்க அண்ணா! வா செல்லம்” என்று வரவேற்ற லலிதா, “என்ன சொல்லாம கொள்ளாம...” என்று கேட்க, “ஏன், வரக்கூடாதா?” என்றார் செல்லம் பட்டென.
“வரலாம், வரலாம்!!! நான் அப்படி கேட்கல! இத்தனை வருஷம் கழிச்சு அம்மா வீட்டுக்கு போயிருக்கியே, ஒரு மாசம் குறையாம திரும்ப வர மாட்டன்னு நினைச்சேன்” என்று லலிதா சொல்ல அதையே ஆமோத்தித்தார் சிவகுரு.
“நானும் அதான் நினச்சேன்! கம்பெனி வேலையை நானும் என் புள்ளையுமே பார்த்துக்குறோம்ன்னு சொல்லிருந்தேனே! அப்புறம் ஏன் அவசரமா வரணும்?” பதில் தெரிந்தே ஆக வேண்டும் போல இருந்தது அவருக்கு.
செல்லம், “ஒரு காஃபீ போடு லல்லி, தலையை வலிக்குது” என்று கேட்க, பெண்கள் இருவரும் அடுக்களைக்குள் புகுந்தனர்.
தன் முகம் கண்டே அமர்ந்திருக்கும் சிவகுருவிடம், பெருமூச்சோடு, “போனோம், வந்துட்டோம்” என்றார் ஷங்கர். மேலும் அங்கே நடந்த சச்சரவை எடுத்து சொன்னவர், அன்று காலை கிளம்பபோவதாய் அவர்கள் பாசாங்கு செய்து அசிங்கப்பட்டதை மட்டும் சொல்லவில்லை.
சிவகுரு, “ப்ச்! கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திருக்காங்க!! இதுக்கு நீங்க போகாமையே இருந்துருக்கலாம்” என ஷங்கரை நன்முறையில் ஏத்திவிட, சரியாய் வேலை செய்தது அது.
ஷங்கர் இறுகிய முகமாய், “அந்த பசங்க தான் எங்களை ரொம்ப அவமானபடுத்துறாங்க! அதுலயும் பெரியவன்!!? நான் தூக்கி வளர்த்தவன், என்னை ஒரு மனுஷனாக்கூட பார்க்கல! என்கிட்டயே கோகிலா கல்யாணத்தை நிறுத்துவேன்னு சவால் விட்டுருக்கான் தெரியுமா?” என்று ஆவேசப்பட, “அவன் கடக்குறான் பொடியன், நம்மளை மீறி என்ன செய்துட முடியும்!? இதுக்கெல்லாம் நீ வொரி பண்ணிக்காத ஷங்கர்” என தெம்பாய் தேற்றினார் சிவகுரு.
காபி கோப்பையோடு அங்கே வந்த செல்லம், “அவன் மூஞ்சில கரியை பூசுறதுக்காகவே நம்ம கோகிலா கல்யாணத்தை சிறப்பா நடத்தனுங்க!” என்று சொல்ல, “கவலை விடு செல்லம், அவங்களே வயித்தெரிச்சல் படுற அளவுக்கு நல்லா நடக்கும்” என்றார் லலிதா.
“மனசே சரியில்லை, அதான் வீட்டுக்கு கூட போகாம நேரே உங்களை பார்க்க வந்துட்டேன்” என்ற ஷங்கர் தளர்வாய் சோபாவில் சரிந்து அமர, “ஆமா, மாப்பிளை தம்பி எங்க?” என்றார் செல்லம்.
“அது...அவன்... அவன்....”
‘நீ சொல்’ இல்லை ‘நீயே சொல்’ என சிவகுருவும் லலிதாவும் ஒருவரைஒருவர் பார்த்துக்கொண்டு கண்களாலேயே கெஞ்சிக்கொண்டிருன்தனர். பின்னே கேட்பவரை திறனாய் சமாளிக்க வேண்டுமல்லவா? முதல் நாள் இரவு விருந்துக்கு சென்றவன் இன்று மதியம் போல முழு போதையில் வீட்டிற்க்கு வந்து அறைக்குள் புகுந்துக்கொண்டான். நான்கு மணி நேரங்கள் ஆகியும் அவன் அறையில் சிறு சப்தம் கூட எழவில்லை.
ஷங்கரிடம் என்னவென்று சொல்வார் சிவகுரு?! அவனை சென்று எழுப்பலாம் என்றாலோ அவன் எந்த நிலைமையில் கிடப்பான் என்றே தெரியாது! போதை தெளிந்ததோ இல்லையோ? எழுந்து வா என அழைத்தால் அமைதியாய் வருவானோ? இல்லை கண்டபடி கத்திவிடுவானோ? யாருக்கு தெரியும்? மிகுந்த தயக்கத்துடனே சிவகுரு இருக்க, “வாசல்ல கார் நிக்குதே, தம்பி வீட்ல தான் இருக்காரு போல” என்றார் ஷங்கர். இதற்குமேல் மறைக்க முடியாது என்று, “ஆமா, ரூம்ல தான் இருக்கான்! தலைவலின்னு சொன்னான்” என்றார் அவர்.
“ஹோ! பார்க்கலாம்ன்னு நினைச்சேனே” ஷங்கர் சொன்ன பின், வேறு வழியின்றி, “எழுந்துரிச்சுட்டானான்னு பார்க்குறேன்” என்று எழுந்த சிவகுரு மிகசிரமப்பட்டு நான்கடி தொலைவில் இருந்த அந்த அறையின் கதவை நெருங்கினார்.
ஒற்றை விரலை மடக்கி கதவின் மீது அவர் மெதுவாய் தட்ட, ஒரு தட்டலுக்கே, “ஹான் அப்பா, வந்துட்டேன்!!” என்ற கிஷோரின் தெளிவான குரல் கேட்க, சிவகுருவுக்கு தலை சுற்றுவதை போல இருந்தது. ‘என்னடா இது அதிசயம்?’ என எண்ணிக்கொண்டார். அவன் தெளிவாய் இருந்தாலே கதவு உடையும் வரை தட்டினால் கூட பதில் வராது. இன்றோ சிறு சத்தத்துக்கே பதில் வருகிறது என்றால் அதிசயம் தானே!?
அடுத்த அரை நிமிடத்தில் கதவை திறந்தவன் தன் சட்டையின் முதல் பொத்தானை போட்டுக்கொண்டே “வாங்க அங்கிள், வாங்க ஆன்ட்டி” என்றான் பவ்வியமாய். லலிதா மோவாயில் கைவைத்து தன் மகனையே தாஜ்மகால் போல பிரம்பிப்பாய் பார்க்க, சிவகுருவுக்கும் அதே நிலைதான்.
“வாப்பா! ரொம்ப வருசத்துக்கு முன்னாடி பார்த்தது! நீ பாரின்ல இருந்து வந்த பின்னாடி நம்ம சரியா பேசிக்க கூட இல்லை, வேகவேகமாய் நிச்சயமே முடிஞ்சுடுச்சு!” ஷங்கர் தன் அருகே உள்ள இருக்கையை காட்டி அழைக்க, அவர் அருகே வேகமாய் வந்தவன் அமரும் முன்னே, “ஆன்ட்டி, நிக்குறீங்களே? நீங்க உட்காருங்க!!” என செல்லத்திற்கு மரியாதை தர புல்லரித்து போனார் அவர். ‘தன் மகளுக்கு கூட இந்தளவு மரியாதை தெரியாது’ என சடைத்துகொண்டார் மனதுள்.
எல்லோரும் அமர்ந்தபின்னே, “நீங்க மட்டும் வந்துருக்கீங்க அங்கிள், கோகிலா எங்க?” என்று கிஷோர் கேட்ட பிறகே அவன் பெற்றோருக்கு தன் வருங்கால மருமகளின் நினைவு எட்டிப்பார்த்தது.
மெலிதாய் சிரித்துக்கொண்ட ஷங்கர், “அவ அவங்க தாத்தா பாட்டிக்கூட கொஞ்ச நாள் இருக்கனும்ன்னு பிரியப்பட்டா! அதான் விட்டுட்டு வந்துட்டோம்!” என்றவர், “இங்க கல்யாண வேலை ஆரம்பிக்க வேண்டாமா? நாள் கம்மியா இருக்கே!!” என்று சிரிக்க, கிஷோரும் வெட்கப்படுவதை போல தலையை குனிந்துக்கொண்டான்.
“அப்புறம் கிஷோர்? கார்மெண்ட்ஸ் பொறுப்பை இனி நீயும் கோகிலாவும் பார்த்துக்கிட்டு எங்களுக்கு ரிடையர்மென்ட் குடுக்க போறீங்களா?” என்று ஷங்கர் அவனின் தோளில் கைவைத்து இலகுவாய் கேட்க, “இல்ல அங்கிள், நம்ம பிசினஸ் கோகிலாவே பார்த்துக்கட்டும்! நான் தனியா ஒரு தொழில் ஆரம்பிச்சுருக்கேன்! நானும் என் பிரண்ட்ஸும் சேர்ந்து!!” என்று சொல்ல, சிவகுரு, ‘இது எப்போ?’ என திகைத்தார்.
ஷங்கர், “கிரேட்!! உனக்குன்னு ஒரு தொழில் இருக்கிறது எப்போவும் நல்லது!” என்று பாராட்ட, “தேங்க்ஸ் அங்கிள்! யாருக்கும் இப்போவரைக்கும் சொல்லாம இருந்தேன்! லாபம் பார்த்துட்டு வெளில சொல்லலாம்ன்னு” என்று கிஷோர் சொல்ல, ‘அதுவும் சரிதான்’ என்றார் ஷங்கர்.
அந்த பேச்சு அத்தோடு முடிய, “நம்ம கேட்ட தேதிக்கு இங்க எந்த மண்டபமும் ப்ரீயா இல்ல ஷங்கர்! நானும் தினம் நாலு இடம் அலைஞ்சுட்டு தான் இருக்கேன்! என்ன செய்யுறதுன்னு தெரியல!” தன் கவலையை பகிர்ந்துக்கொண்ட சிவகுருவிடம் ‘திருமணத்தை கிராமத்தில் வைத்துக்கொள்ளலாம்’ என எப்படி சொல்வது என யோசித்துக்கொண்டிருந்தார் ஷங்கர்.
அவருக்கு எடுத்துக்கொடுப்பதை போல, “ரிசெப்ஷன்க்கு ஹால் ரெடியா இருக்கு” என்றவர் ஒரு உயர்த்தர ஐந்து நட்சத்திர விடுதியின் பெயரை சொல்ல, ஷங்கருக்குள் மணி ஒலித்தது.
“இன்னும் ஒரே மாசம் தான் சரியா இருக்கு! மண்டபமே கிடைக்கலன்னு சொன்னா எப்படி சிவகுரு? இப்போ என்ன செய்யுறது?” என வேண்டுமென்றே கவலைக்கொண்டார் ஷங்கர். சிவகுருவும் யோசனையோடே இருக்க, “நான் ஒன்னு சொல்றேன், சரிப்படுமான்னு யோசிக்கலாமா?” என்றார் ஷங்கர் பீடிகையாய்.
உடனே சிவகுரு ஒப்புதல் சொல்ல, “எங்க மாமனார் மாமியாருக்கும் வயசாகுது, அவங்க என்னதான் எங்களை அசிங்கப்படுத்துனாலும் எங்களால அவங்களை விட்டு கொடுக்க முடியல!” என்று நிறுத்தியவர், “நம்ம கல்யாணத்தை எங்க கிராமத்துல வச்சுக்கலாமா? உங்களுக்கு எந்த குறையும் வராம நாங்க பார்த்துக்குறோம்! நம்ம பிரண்ட்ஸ் பிசினஸ் பீபுள் எல்லாரையும் இங்க ரிசப்ஷனுக்கு அழைச்சுக்கலாம்! என்ன சொல்ற?” என்றார் தேர்ந்த வணிகன் என்பதை நிரூபிக்கும்படி.
அவரை போன்ற இன்னொரு வணிகனுக்கு புரியாதா? இது திடீரென்ற யோசனை அல்ல, ஏற்கனவே எடுத்துவிட்ட முடிவு, நம்மிடம் இப்போது பகிரப்படுகிறது என்று!!!
மனைவியை ஒருமுறை பார்த்த சிவகுரு பதில் இன்றி மௌனிக்க, “அங்கிள், நான் பெரியவங்க பேச்சுக்கு நடுவுல வரேன்னு தப்பா எடுத்துக்காதீங்க! இது உடனே எடுக்குற முடிவு இல்ல, யோசிக்கணும்! அதனால நம்ம இன்னும் ரெண்டு நாள் பொருத்து இதை பேசுறது சரிப்படும்ன்னு நினைக்குறேன்! அப்பாவும் யோசிக்கட்டும்!” என்ற கிஷோர், “என்னப்பா?” என சம்மதம் கேட்டான்.
சிவகுருவும் ‘ஆம்’ என தலையசைக்க, “பொறுமையாவே யோசிங்க, அவசரமில்ல” என்றார் ஷங்கர். அதற்குள், “எல்லோரும் பேசுனது போதும்! சாப்பிட வாங்க!” என அழைத்திருந்தார் லலிதா. உறவாக போவதற்கு முன்பிருந்தே நட்ப்போடு பழகியிருப்பதால் எந்த தயக்கமும் இன்றி சாப்பிட அமர்ந்தனர். தன் தட்டையும் தாண்டி மாமனார் மாமியாருக்கு வேண்டியதை கேட்டு கேட்டு, அன்னையிடம் சொல்லி வைக்க சொல்லிக்கொண்டிருந்தான் கிஷோர்.
உணவு முடிந்து சிறுது நேரம் பொதுப்படையாய் பேசிக்கொண்டிருந்தவர்கள் கிளம்பும் நேரம் வர, வாசல் வரை சென்றவர்களை, “அங்கிள்!!! கோகிலாவை கேட்டேன்னு சொல்லுங்க” என்றான் கிஷோர் கூச்சத்தோடு!
ஷங்கர் மட்டுமன்றி செல்லத்தின் புருவமும் உயர்ந்தது.
“உன்கிட்ட அவ நம்பர் இருக்குதானேப்பா? இன்னும் நீங்க பேசிக்கலையா?” என வியப்பாய் கேட்க, “அது எப்படி அங்கிள்? நிச்சயமே ஆனாலும் பெரியவங்க பர்மிஷன் இல்லாம ஒரு பொண்ணுகிட்ட பேசமுடியும்? சோ ஐ வாஸ் ஜஸ்ட் வெய்டிங் பார் யூ டு கெட் பர்மிஷன் அங்கிள்!” மிகமிக பவ்வியமாய் கிஷோர் சொன்ன விதத்தில் தன் மகனை பற்றி நன்கு அறிந்த சிவகுருவே ஒரு கணம் சொக்கி போனார் என்றால், ஷங்கரை கேட்கவே வேண்டாம்!! அசந்து போய் நின்றுவிட்டார்.
கிஷோரின் செய்கைகளை கண்ட ஷங்கரின் மனது இதமாய், திருத்தியாய் மாற, அதுவரை நண்பனுக்காக கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்டோமோ? பல வருட வெளிநாட்டு வாசத்தில் இருந்த பையன் எப்படி இருப்பானோ? என்ற சஞ்சலம் அகன்று, ‘என் மகளுக்கு எப்படி ஒரு மாப்பிளையை பிடித்திருக்கிறேன் பார்’ என இன்பன் முன் நிறுத்த வேண்டும் போல அவருக்கு செருக்கு தோன்றியது.
செருக்கு குறையாமலே, “பர்மிஷனே தேவையில்லை! என் பொண்ணு இனி உன் பொறுப்பு கிஷோர்” என வாக்குக்கொடுத்து ஷங்கர் செல்லத்தோடு சென்றுவிட, அவர்கள் கண் விட்டு மறையும்வரை சிரித்த முகமாய் நின்றிருந்த கிஷோர், அவர்கள் தலை மறைந்ததும், திமுதிமுவென தன் அறைக்கு ஓடினான்.
சிவகுருவும் லலிதாவும் அவனை விசித்திரமாய் கண்டு, அவன் பின்னூடே ஓட, அறைக்குள் சென்றவன் கட்டிலுக்கு கீழே படுத்து எதையோ அறக்கபறக்க தேட, அவன் அவசரத்தை கண்டு என்னவோ ஏதோ என்று எண்ணிய லலிதா, “என்னடா காணோம்? சொன்னா அம்மாவும் தேடுவேன்ல?” என்றிட, “ப்ச்! அந்தாளு வந்துட்டானேன்னு புடிச்சுட்டு இருந்த சிகரட்ட அப்படியே கீழ போட்டுட்டு வந்துட்டேன்! அதான் காணோம்! தேடு வேகமா” என்றான் பெரும் பதற்றத்துடன்!!!!
சிவகுரு, ‘இதெல்லாம் திருந்துற ஜென்மமா? ச்சை” என நகர்ந்துவிட்டார். லலிதா மனம் கேளாமல், “இவ்வளோ நேரம் எத்தனை நல்லவனா இருந்த? இப்போ ஏன்டா இப்படி?” என்றிட, அதை காதுக்குள்ளும் அனுப்பாதவன், “ஹப்பா!! கிடைச்சுருச்சு!!” என்றான் பாதி புகைந்திருந்த அந்த சிகரெட் துண்டை எடுத்து!
என்ன சொன்னாலும் அவன் கேட்கமாட்டான் என்ற நிலை வந்ததும், “இப்படி அரை பீடிக்கு ஏன்டா அலையுற? தூக்கி போட்டுட்டு வேற ஒன்னு தான் எடுக்கலாம்ல?” என்று கேட்க, புகையை ஆத்மாத்தமாய் உள்ளுக்கு இழுத்து மிக மெதுவாய் வெளியிட்டவன், “இது வெறும் சிகரெட் இல்ல! பவ்டர் போட்டு குளிப்பாட்டி அஞ்சாயிரத்துக்கு வாங்குன பர்ஸ்ட் கிளாஸ் கொக்கெயின் சிகரெட்” என்றான் ஆழ்ந்து அனுபவித்து.
லலிதாவிற்கு பேச்சுமூச்சில்லை. கிஷோர், “இந்த கல்யாணம் முடியுற வரைக்கும் இப்படி ஏதாவது நடிச்சுட்டே தான் இருக்கணும்!! ச்சை!!” என அலுத்துக்கொண்டான்.
பின்னே சத்தமாய், “கல்யாணத்தை எந்த பட்டிகாட்டுலையும் வச்சுக்க முடியாது! அந்தாளுகிட்ட சொல்லிட சொல்லு உன் புருஷனை! சரியா?” என்றவன் தன் அறையில் இருக்கும் மினி பிரிட்ஜில் இருந்து எதையோ எடுத்து பருக ஆரம்பித்தான். கண்டிப்பாக அது ‘மது’வாக தான் இருக்கும் என யூகித்த லலிதா, கடவுளிடம் ‘என் புள்ளையை நல்வழிப்படுத்துப்பா’ என வேண்டிக்கொண்டே நகர, மேலிருந்த கடவுளோ, ‘முடியாது! முடியாது!’ என மறுப்பு சொன்னது அவருக்கு எங்கே தெரியும்!?
This episode is around 2700 words. such a long episode! எதுக்கு இதை சொல்றேன்னா, திங்கள் தர வேண்டிய எபியும் சேர்த்து ஒரே எபியா போட்டுட்டேன்!! So see you after pooja holidays .... அடுத்த பதிவு... 'புண்ணிய புதனில்'
*15*
அற்புதமான காதலை மட்டுமல்ல,
அற்புதமான காதலை மட்டுமல்ல,
அதை உன்னிடம் சொல்ல முடியாத,
அதி அற்புதமான மௌனத்தையும்
நீதான் எனக்கு தந்தாய்!!!
சென்னையில் இறங்கிய ஷங்கரும் செல்லமும் நேரே சென்று நின்றது சிவகுருவின் வீட்டிற்கு தான். கார்மெண்ட்ஸில் வேலை முடித்து வீட்டிற்கு அப்போதுதான் வந்திருந்த சிவகுரு, லக்கேஜ்களோடு டேக்ஸியில் வந்திறங்கும் ஷங்கரையும் செல்லத்தையும் கண்டு, புருவ மேடுகள் முடிச்சிட, வாசலுக்கு ஓடினார்.
“என்ன ஷங்கர்? அதுக்குள்ள ஊருல இருந்து வந்துட்டீங்க?” என்று கேட்ட சிவகுரு, “லக்கேஜ குடுமா” என்று செல்லத்தின் கையில் இருந்த பைகளை வாங்கிக்கொண்டார். மௌனமாய் இருந்த இருவரையும் வீட்டிற்க்குள் அழைத்து வந்தவர், “லலிதா, யாரு வந்துருக்காங்க பாரு” என்று அடுக்களையை நோக்கி குரல் கொடுத்தார் சிவகுரு.
முந்தானையில் கையை துடைத்துக்கொண்டே வெளியே வந்த லலிதா தன் வருங்கால சம்மந்திகளை அந்நேரத்தில் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது.
தடுமாற்றத்துடன், “வாங்..வாங்க அண்ணா! வா செல்லம்” என்று வரவேற்ற லலிதா, “என்ன சொல்லாம கொள்ளாம...” என்று கேட்க, “ஏன், வரக்கூடாதா?” என்றார் செல்லம் பட்டென.
“வரலாம், வரலாம்!!! நான் அப்படி கேட்கல! இத்தனை வருஷம் கழிச்சு அம்மா வீட்டுக்கு போயிருக்கியே, ஒரு மாசம் குறையாம திரும்ப வர மாட்டன்னு நினைச்சேன்” என்று லலிதா சொல்ல அதையே ஆமோத்தித்தார் சிவகுரு.
“நானும் அதான் நினச்சேன்! கம்பெனி வேலையை நானும் என் புள்ளையுமே பார்த்துக்குறோம்ன்னு சொல்லிருந்தேனே! அப்புறம் ஏன் அவசரமா வரணும்?” பதில் தெரிந்தே ஆக வேண்டும் போல இருந்தது அவருக்கு.
செல்லம், “ஒரு காஃபீ போடு லல்லி, தலையை வலிக்குது” என்று கேட்க, பெண்கள் இருவரும் அடுக்களைக்குள் புகுந்தனர்.
தன் முகம் கண்டே அமர்ந்திருக்கும் சிவகுருவிடம், பெருமூச்சோடு, “போனோம், வந்துட்டோம்” என்றார் ஷங்கர். மேலும் அங்கே நடந்த சச்சரவை எடுத்து சொன்னவர், அன்று காலை கிளம்பபோவதாய் அவர்கள் பாசாங்கு செய்து அசிங்கப்பட்டதை மட்டும் சொல்லவில்லை.
சிவகுரு, “ப்ச்! கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திருக்காங்க!! இதுக்கு நீங்க போகாமையே இருந்துருக்கலாம்” என ஷங்கரை நன்முறையில் ஏத்திவிட, சரியாய் வேலை செய்தது அது.
ஷங்கர் இறுகிய முகமாய், “அந்த பசங்க தான் எங்களை ரொம்ப அவமானபடுத்துறாங்க! அதுலயும் பெரியவன்!!? நான் தூக்கி வளர்த்தவன், என்னை ஒரு மனுஷனாக்கூட பார்க்கல! என்கிட்டயே கோகிலா கல்யாணத்தை நிறுத்துவேன்னு சவால் விட்டுருக்கான் தெரியுமா?” என்று ஆவேசப்பட, “அவன் கடக்குறான் பொடியன், நம்மளை மீறி என்ன செய்துட முடியும்!? இதுக்கெல்லாம் நீ வொரி பண்ணிக்காத ஷங்கர்” என தெம்பாய் தேற்றினார் சிவகுரு.
காபி கோப்பையோடு அங்கே வந்த செல்லம், “அவன் மூஞ்சில கரியை பூசுறதுக்காகவே நம்ம கோகிலா கல்யாணத்தை சிறப்பா நடத்தனுங்க!” என்று சொல்ல, “கவலை விடு செல்லம், அவங்களே வயித்தெரிச்சல் படுற அளவுக்கு நல்லா நடக்கும்” என்றார் லலிதா.
“மனசே சரியில்லை, அதான் வீட்டுக்கு கூட போகாம நேரே உங்களை பார்க்க வந்துட்டேன்” என்ற ஷங்கர் தளர்வாய் சோபாவில் சரிந்து அமர, “ஆமா, மாப்பிளை தம்பி எங்க?” என்றார் செல்லம்.
“அது...அவன்... அவன்....”
‘நீ சொல்’ இல்லை ‘நீயே சொல்’ என சிவகுருவும் லலிதாவும் ஒருவரைஒருவர் பார்த்துக்கொண்டு கண்களாலேயே கெஞ்சிக்கொண்டிருன்தனர். பின்னே கேட்பவரை திறனாய் சமாளிக்க வேண்டுமல்லவா? முதல் நாள் இரவு விருந்துக்கு சென்றவன் இன்று மதியம் போல முழு போதையில் வீட்டிற்க்கு வந்து அறைக்குள் புகுந்துக்கொண்டான். நான்கு மணி நேரங்கள் ஆகியும் அவன் அறையில் சிறு சப்தம் கூட எழவில்லை.
ஷங்கரிடம் என்னவென்று சொல்வார் சிவகுரு?! அவனை சென்று எழுப்பலாம் என்றாலோ அவன் எந்த நிலைமையில் கிடப்பான் என்றே தெரியாது! போதை தெளிந்ததோ இல்லையோ? எழுந்து வா என அழைத்தால் அமைதியாய் வருவானோ? இல்லை கண்டபடி கத்திவிடுவானோ? யாருக்கு தெரியும்? மிகுந்த தயக்கத்துடனே சிவகுரு இருக்க, “வாசல்ல கார் நிக்குதே, தம்பி வீட்ல தான் இருக்காரு போல” என்றார் ஷங்கர். இதற்குமேல் மறைக்க முடியாது என்று, “ஆமா, ரூம்ல தான் இருக்கான்! தலைவலின்னு சொன்னான்” என்றார் அவர்.
“ஹோ! பார்க்கலாம்ன்னு நினைச்சேனே” ஷங்கர் சொன்ன பின், வேறு வழியின்றி, “எழுந்துரிச்சுட்டானான்னு பார்க்குறேன்” என்று எழுந்த சிவகுரு மிகசிரமப்பட்டு நான்கடி தொலைவில் இருந்த அந்த அறையின் கதவை நெருங்கினார்.
ஒற்றை விரலை மடக்கி கதவின் மீது அவர் மெதுவாய் தட்ட, ஒரு தட்டலுக்கே, “ஹான் அப்பா, வந்துட்டேன்!!” என்ற கிஷோரின் தெளிவான குரல் கேட்க, சிவகுருவுக்கு தலை சுற்றுவதை போல இருந்தது. ‘என்னடா இது அதிசயம்?’ என எண்ணிக்கொண்டார். அவன் தெளிவாய் இருந்தாலே கதவு உடையும் வரை தட்டினால் கூட பதில் வராது. இன்றோ சிறு சத்தத்துக்கே பதில் வருகிறது என்றால் அதிசயம் தானே!?
அடுத்த அரை நிமிடத்தில் கதவை திறந்தவன் தன் சட்டையின் முதல் பொத்தானை போட்டுக்கொண்டே “வாங்க அங்கிள், வாங்க ஆன்ட்டி” என்றான் பவ்வியமாய். லலிதா மோவாயில் கைவைத்து தன் மகனையே தாஜ்மகால் போல பிரம்பிப்பாய் பார்க்க, சிவகுருவுக்கும் அதே நிலைதான்.
“வாப்பா! ரொம்ப வருசத்துக்கு முன்னாடி பார்த்தது! நீ பாரின்ல இருந்து வந்த பின்னாடி நம்ம சரியா பேசிக்க கூட இல்லை, வேகவேகமாய் நிச்சயமே முடிஞ்சுடுச்சு!” ஷங்கர் தன் அருகே உள்ள இருக்கையை காட்டி அழைக்க, அவர் அருகே வேகமாய் வந்தவன் அமரும் முன்னே, “ஆன்ட்டி, நிக்குறீங்களே? நீங்க உட்காருங்க!!” என செல்லத்திற்கு மரியாதை தர புல்லரித்து போனார் அவர். ‘தன் மகளுக்கு கூட இந்தளவு மரியாதை தெரியாது’ என சடைத்துகொண்டார் மனதுள்.
எல்லோரும் அமர்ந்தபின்னே, “நீங்க மட்டும் வந்துருக்கீங்க அங்கிள், கோகிலா எங்க?” என்று கிஷோர் கேட்ட பிறகே அவன் பெற்றோருக்கு தன் வருங்கால மருமகளின் நினைவு எட்டிப்பார்த்தது.
மெலிதாய் சிரித்துக்கொண்ட ஷங்கர், “அவ அவங்க தாத்தா பாட்டிக்கூட கொஞ்ச நாள் இருக்கனும்ன்னு பிரியப்பட்டா! அதான் விட்டுட்டு வந்துட்டோம்!” என்றவர், “இங்க கல்யாண வேலை ஆரம்பிக்க வேண்டாமா? நாள் கம்மியா இருக்கே!!” என்று சிரிக்க, கிஷோரும் வெட்கப்படுவதை போல தலையை குனிந்துக்கொண்டான்.
“அப்புறம் கிஷோர்? கார்மெண்ட்ஸ் பொறுப்பை இனி நீயும் கோகிலாவும் பார்த்துக்கிட்டு எங்களுக்கு ரிடையர்மென்ட் குடுக்க போறீங்களா?” என்று ஷங்கர் அவனின் தோளில் கைவைத்து இலகுவாய் கேட்க, “இல்ல அங்கிள், நம்ம பிசினஸ் கோகிலாவே பார்த்துக்கட்டும்! நான் தனியா ஒரு தொழில் ஆரம்பிச்சுருக்கேன்! நானும் என் பிரண்ட்ஸும் சேர்ந்து!!” என்று சொல்ல, சிவகுரு, ‘இது எப்போ?’ என திகைத்தார்.
ஷங்கர், “கிரேட்!! உனக்குன்னு ஒரு தொழில் இருக்கிறது எப்போவும் நல்லது!” என்று பாராட்ட, “தேங்க்ஸ் அங்கிள்! யாருக்கும் இப்போவரைக்கும் சொல்லாம இருந்தேன்! லாபம் பார்த்துட்டு வெளில சொல்லலாம்ன்னு” என்று கிஷோர் சொல்ல, ‘அதுவும் சரிதான்’ என்றார் ஷங்கர்.
அந்த பேச்சு அத்தோடு முடிய, “நம்ம கேட்ட தேதிக்கு இங்க எந்த மண்டபமும் ப்ரீயா இல்ல ஷங்கர்! நானும் தினம் நாலு இடம் அலைஞ்சுட்டு தான் இருக்கேன்! என்ன செய்யுறதுன்னு தெரியல!” தன் கவலையை பகிர்ந்துக்கொண்ட சிவகுருவிடம் ‘திருமணத்தை கிராமத்தில் வைத்துக்கொள்ளலாம்’ என எப்படி சொல்வது என யோசித்துக்கொண்டிருந்தார் ஷங்கர்.
அவருக்கு எடுத்துக்கொடுப்பதை போல, “ரிசெப்ஷன்க்கு ஹால் ரெடியா இருக்கு” என்றவர் ஒரு உயர்த்தர ஐந்து நட்சத்திர விடுதியின் பெயரை சொல்ல, ஷங்கருக்குள் மணி ஒலித்தது.
“இன்னும் ஒரே மாசம் தான் சரியா இருக்கு! மண்டபமே கிடைக்கலன்னு சொன்னா எப்படி சிவகுரு? இப்போ என்ன செய்யுறது?” என வேண்டுமென்றே கவலைக்கொண்டார் ஷங்கர். சிவகுருவும் யோசனையோடே இருக்க, “நான் ஒன்னு சொல்றேன், சரிப்படுமான்னு யோசிக்கலாமா?” என்றார் ஷங்கர் பீடிகையாய்.
உடனே சிவகுரு ஒப்புதல் சொல்ல, “எங்க மாமனார் மாமியாருக்கும் வயசாகுது, அவங்க என்னதான் எங்களை அசிங்கப்படுத்துனாலும் எங்களால அவங்களை விட்டு கொடுக்க முடியல!” என்று நிறுத்தியவர், “நம்ம கல்யாணத்தை எங்க கிராமத்துல வச்சுக்கலாமா? உங்களுக்கு எந்த குறையும் வராம நாங்க பார்த்துக்குறோம்! நம்ம பிரண்ட்ஸ் பிசினஸ் பீபுள் எல்லாரையும் இங்க ரிசப்ஷனுக்கு அழைச்சுக்கலாம்! என்ன சொல்ற?” என்றார் தேர்ந்த வணிகன் என்பதை நிரூபிக்கும்படி.
அவரை போன்ற இன்னொரு வணிகனுக்கு புரியாதா? இது திடீரென்ற யோசனை அல்ல, ஏற்கனவே எடுத்துவிட்ட முடிவு, நம்மிடம் இப்போது பகிரப்படுகிறது என்று!!!
மனைவியை ஒருமுறை பார்த்த சிவகுரு பதில் இன்றி மௌனிக்க, “அங்கிள், நான் பெரியவங்க பேச்சுக்கு நடுவுல வரேன்னு தப்பா எடுத்துக்காதீங்க! இது உடனே எடுக்குற முடிவு இல்ல, யோசிக்கணும்! அதனால நம்ம இன்னும் ரெண்டு நாள் பொருத்து இதை பேசுறது சரிப்படும்ன்னு நினைக்குறேன்! அப்பாவும் யோசிக்கட்டும்!” என்ற கிஷோர், “என்னப்பா?” என சம்மதம் கேட்டான்.
சிவகுருவும் ‘ஆம்’ என தலையசைக்க, “பொறுமையாவே யோசிங்க, அவசரமில்ல” என்றார் ஷங்கர். அதற்குள், “எல்லோரும் பேசுனது போதும்! சாப்பிட வாங்க!” என அழைத்திருந்தார் லலிதா. உறவாக போவதற்கு முன்பிருந்தே நட்ப்போடு பழகியிருப்பதால் எந்த தயக்கமும் இன்றி சாப்பிட அமர்ந்தனர். தன் தட்டையும் தாண்டி மாமனார் மாமியாருக்கு வேண்டியதை கேட்டு கேட்டு, அன்னையிடம் சொல்லி வைக்க சொல்லிக்கொண்டிருந்தான் கிஷோர்.
உணவு முடிந்து சிறுது நேரம் பொதுப்படையாய் பேசிக்கொண்டிருந்தவர்கள் கிளம்பும் நேரம் வர, வாசல் வரை சென்றவர்களை, “அங்கிள்!!! கோகிலாவை கேட்டேன்னு சொல்லுங்க” என்றான் கிஷோர் கூச்சத்தோடு!
ஷங்கர் மட்டுமன்றி செல்லத்தின் புருவமும் உயர்ந்தது.
“உன்கிட்ட அவ நம்பர் இருக்குதானேப்பா? இன்னும் நீங்க பேசிக்கலையா?” என வியப்பாய் கேட்க, “அது எப்படி அங்கிள்? நிச்சயமே ஆனாலும் பெரியவங்க பர்மிஷன் இல்லாம ஒரு பொண்ணுகிட்ட பேசமுடியும்? சோ ஐ வாஸ் ஜஸ்ட் வெய்டிங் பார் யூ டு கெட் பர்மிஷன் அங்கிள்!” மிகமிக பவ்வியமாய் கிஷோர் சொன்ன விதத்தில் தன் மகனை பற்றி நன்கு அறிந்த சிவகுருவே ஒரு கணம் சொக்கி போனார் என்றால், ஷங்கரை கேட்கவே வேண்டாம்!! அசந்து போய் நின்றுவிட்டார்.
கிஷோரின் செய்கைகளை கண்ட ஷங்கரின் மனது இதமாய், திருத்தியாய் மாற, அதுவரை நண்பனுக்காக கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்டோமோ? பல வருட வெளிநாட்டு வாசத்தில் இருந்த பையன் எப்படி இருப்பானோ? என்ற சஞ்சலம் அகன்று, ‘என் மகளுக்கு எப்படி ஒரு மாப்பிளையை பிடித்திருக்கிறேன் பார்’ என இன்பன் முன் நிறுத்த வேண்டும் போல அவருக்கு செருக்கு தோன்றியது.
செருக்கு குறையாமலே, “பர்மிஷனே தேவையில்லை! என் பொண்ணு இனி உன் பொறுப்பு கிஷோர்” என வாக்குக்கொடுத்து ஷங்கர் செல்லத்தோடு சென்றுவிட, அவர்கள் கண் விட்டு மறையும்வரை சிரித்த முகமாய் நின்றிருந்த கிஷோர், அவர்கள் தலை மறைந்ததும், திமுதிமுவென தன் அறைக்கு ஓடினான்.
சிவகுருவும் லலிதாவும் அவனை விசித்திரமாய் கண்டு, அவன் பின்னூடே ஓட, அறைக்குள் சென்றவன் கட்டிலுக்கு கீழே படுத்து எதையோ அறக்கபறக்க தேட, அவன் அவசரத்தை கண்டு என்னவோ ஏதோ என்று எண்ணிய லலிதா, “என்னடா காணோம்? சொன்னா அம்மாவும் தேடுவேன்ல?” என்றிட, “ப்ச்! அந்தாளு வந்துட்டானேன்னு புடிச்சுட்டு இருந்த சிகரட்ட அப்படியே கீழ போட்டுட்டு வந்துட்டேன்! அதான் காணோம்! தேடு வேகமா” என்றான் பெரும் பதற்றத்துடன்!!!!
சிவகுரு, ‘இதெல்லாம் திருந்துற ஜென்மமா? ச்சை” என நகர்ந்துவிட்டார். லலிதா மனம் கேளாமல், “இவ்வளோ நேரம் எத்தனை நல்லவனா இருந்த? இப்போ ஏன்டா இப்படி?” என்றிட, அதை காதுக்குள்ளும் அனுப்பாதவன், “ஹப்பா!! கிடைச்சுருச்சு!!” என்றான் பாதி புகைந்திருந்த அந்த சிகரெட் துண்டை எடுத்து!
என்ன சொன்னாலும் அவன் கேட்கமாட்டான் என்ற நிலை வந்ததும், “இப்படி அரை பீடிக்கு ஏன்டா அலையுற? தூக்கி போட்டுட்டு வேற ஒன்னு தான் எடுக்கலாம்ல?” என்று கேட்க, புகையை ஆத்மாத்தமாய் உள்ளுக்கு இழுத்து மிக மெதுவாய் வெளியிட்டவன், “இது வெறும் சிகரெட் இல்ல! பவ்டர் போட்டு குளிப்பாட்டி அஞ்சாயிரத்துக்கு வாங்குன பர்ஸ்ட் கிளாஸ் கொக்கெயின் சிகரெட்” என்றான் ஆழ்ந்து அனுபவித்து.
லலிதாவிற்கு பேச்சுமூச்சில்லை. கிஷோர், “இந்த கல்யாணம் முடியுற வரைக்கும் இப்படி ஏதாவது நடிச்சுட்டே தான் இருக்கணும்!! ச்சை!!” என அலுத்துக்கொண்டான்.
பின்னே சத்தமாய், “கல்யாணத்தை எந்த பட்டிகாட்டுலையும் வச்சுக்க முடியாது! அந்தாளுகிட்ட சொல்லிட சொல்லு உன் புருஷனை! சரியா?” என்றவன் தன் அறையில் இருக்கும் மினி பிரிட்ஜில் இருந்து எதையோ எடுத்து பருக ஆரம்பித்தான். கண்டிப்பாக அது ‘மது’வாக தான் இருக்கும் என யூகித்த லலிதா, கடவுளிடம் ‘என் புள்ளையை நல்வழிப்படுத்துப்பா’ என வேண்டிக்கொண்டே நகர, மேலிருந்த கடவுளோ, ‘முடியாது! முடியாது!’ என மறுப்பு சொன்னது அவருக்கு எங்கே தெரியும்!?