வெயில்மண்டையைபிளக்கும்தமிழகத்தின்மேமாத நினைவுகளில்இருந்துமாறுபட்டுமழையில்எப்பொழுதும்குளித்துக்கிடந்ததுகேரளம், “இங்க மே மாசம் கூட எவ்ளோ மழை பெய்யுது இல்லப்பா!”என்றபனிரெண்டாம்வகுப்புதேர்வைமுடித்துநின்றமகனைபார்த்துசிரித்தவர் “கடவுளின்சொந்ததேசம்அல்லவாஅதான்எப்போதும்குளுமையாவெச்ருக்கார்போல”என்றார்.
வள்ளத்தில்(வள்ளம் – சிறு தோனி)இருந்துஇறங்கஅவர்களுக்குஉதவினார்சங்கரன்நாயர்,வீட்டின்தோட்டத்தைகடந்துபத்துஅடிநடந்ததும்காயலின்கரை,தோட்டத்தின்எல்லையைதொட்டுக்கொண்டுசென்றதுகாயல்நீர்.
மாமரம், பாக்கு மரம், தேக்கு,பலாமரம்வீட்டின்முன்னேநின்றதுகீழேவரைகாய்கள்காய்த்துதொங்கிக்கொண்டு, வீட்டை சுற்றி எங்கும் மரங்கள் தென்னை, முந்திரி மரம் கூட அவன் பார்த்த வரை மூன்று இருந்தது.
இவர்களின் தரவாடு வீட்டோடு அந்த எல்லை முடிகிறது , இவர்களின் வீட்டின் பக்கவாட்டிலும் காயலின் கரை அங்கே கொஞ்சம் காடு போல கிடக்க அவனுக்கு பெயர் கூட தெரியாத பல வகை பூச்செடிகளின் மனம் எங்கும் நிறைந்து நின்றது.
மரத்தில் தக்காளி காய்த்திருப்பதை போல தோன்றியது அந்த பழங்களை பார்க்கையில், மஞ்சள்நிறபழம்தொங்கிகொண்டிருக்க, அதன்பெரியகிளையில்கட்டியஊஞ்சலில்ஆடி கொண்டிருந்தாள்ஒருகேரளதேவதை, மென் சாரலாக மழை பெய்து கொண்டிருந்தது.
குங்கும நிறத்தில் பாவாடை சட்டை அணிந்து, நனைந்த முடியை இரண்டு பக்கமும் சிறிதாக எடுத்து பின்னி, இடை வரை கிடந்த கூந்தல் காற்றில் ஆட, துளசிக்கதிர் சூடியிருந்தாள் ,அஞ்சனம் தீட்டிய பெரிய விழிகள் மேலே மரத்தில் நிலைத்திருந்தது, நெற்றியில்சந்தனக்கீற்றுமட்டும்.
அவர்உள்ளேசெல்வதைஅந்தபெரியவிழிகளைமட்டும்உயர்த்திஅவள்பார்க்க,பிரகாஷ்கைஅசைத்துஅவளைஅருகில்அழைத்தார்,அவள்விழிகள்பயத்தோடுஉள்ளேநோக்கியது “இனியும்போய்ட்டில்லே(இன்னும் போகலையா)என்றசத்தத்தில்உடல்ஒருமுறைநடுங்க, அந்த பெரிய விழிகளை நிறைத்த நீரில் அவன் மனம் வாடியது.
குனிந்த தலை நிமிராமல் அருகில் இருந்த அந்த பெரிய வீட்டிற்கு நடந்துவிட்டாள், “எப்போபாத்தாலும்விளையாட்டு,இவமனுஷனுக்குபொறந்தாளாமழைக்குபொறந்தாளான்னுதெரியல”என்றசங்கரன் நாயரின்வெறுப்பின்வார்த்தைகள்தந்தைமகன்இருவருக்கும்ரசிக்கவில்லை.
பேச்சைமாற்ற “அதுஎன்னமரம்”என்றுகேட்டான்அவன்தந்தையிடம்,ஏனோசங்கரனிடம்பேசஅவன்விரும்பவில்லை “அதுகுடம்புளிமரம்,நிறையமருத்துவகுணம்நிறைந்தது,அதுஇல்லாமல்மலையாளிகள்மீன்குழம்புவைப்பதில்லை”என்றார்சங்கரன் “அதுபழுத்தவுடன்அறிந்துவெயிலில்காயவைத்துவைத்துவிடுவோம்,வருடக்கணக்காகஅப்படியேஇருக்கும்” என்றார்.
தந்தை மகன் இருவருக்கும் வீடு மிகவும் பிடித்துவிட்டது, நாலுகெட்டு வீடு கீழே வரவேற்பு அறையோடு மூன்று படுக்கை அறை, இரண்டு விதமான சமையல் அறை, மேலே செல்ல மர படிக்கட்டுகள் அங்கேயும் மூன்று அறைகள், கேரள ஓடு வேயப்பட்டிருந்தது, காற்று அள்ளிக்கொண்டு போனது.
காயல் நீரில் விழுந்து சிதறும் மழை துளியை போல, தளும்பி நின்ற அந்த விழிகள் அவன் மனதை அசைத்தது, தன் தம்பியின் வயது தான் இருக்கும் என்று எண்ணியவன் எட்டிப்பார்க்க அவளை காணவில்லை.
டீ குடிக்க புதிய வீட்டிற்குஅவர்களை அழைத்து சென்றபோதும் அவளை தேடி சுழன்றது விழிகள், அவன் தேடியவள் மட்டும் அங்கில்லை, திரும்பி செல்ல படகில் ஏறியபோது கோழி குஞ்சுகளின் பின்னே ஓடிக் கொண்டிருந்தவளை கண்டான்.
அந்த முகத்தில் மீண்டும் புன்னகையை கண்ட போது அவன் இதழ்கள் கூட அழகாக விரிந்தது “காதலா” என்றால் நிச்சயம் இல்லை, அப்படி ஒரு கோணத்தில் அவன் யோசிக்கவே இல்லை.
அவள் சித்தப்பாவின் வார்த்தைகள் மீண்டும் அவன் செவிகளில் முழங்கியது, “மனிதனுக்கு பிறந்தாளா மழைக்கு பிறந்தாளா? ” உண்மையில் அவள் மழையின் மகள் தானே, அவள் கருவானதும் மழையாலே, பிறப்பதிற்கு நாட்கள் இன்னும் மீதம் இருக்க தாயின் பனிக்குடத்தை உடைத்துக்கொண்டு இந்த உலகில் கால்தடம் பதித்ததும் மழையாலே.
அறைக் கதவை யாரோ தட்டும் ஓசையில் நினைவுகளில் இருந்து கலைந்தவன் தன் அணைப்பில் இருப்பவளை பார்த்தான், அவளை கட்டிலில் நன்றாக கிடத்திவிட்டு சென்று கதவை திறக்க, அவன் மாமா மருத்துவருடன் நின்றிருந்தார் “இங்கேயே உக்காருங்க, வர வேண்டியவங்க இன்னும் வரல” என்றான் மீசையை முறுக்கிக்கொண்டே.
இதிலிருந்து தப்பும் வழி தெரியாமல் மிரண்டு அமர்ந்திருந்தார் மருத்துவர் , சிறிது நேரத்திலே அம்முவின் பெரியப்பா அப்பா மற்றும் சித்தப்பா அவர்களுடன் இன்ஸ்பெக்டர், இரண்டு கான்ஸ்டபிள், இரு பெண்காவலர்கள் வந்தனர்.
அனைவரையும் உள்ளே அழைத்தவன் அமர சொல்ல, “நாங்க உன்கூட விருந்து சாப்பிட வரல, எங்க பொண்ண அனுப்பு” என்றார் கிருஷ்ணன் நாயர்.
“மிஸ்டர். ஜெகன்நாதன்?” என்று அவர் கேள்வியாய் நிறுத்த.
அவரின் நேரே கையை நீட்டினான், அதை பற்றிக் குலுக்கியவர் மனதில் மிலிட்ரிக்காரனோ என்ற யோசனை ஓடியது, அந்த ஹேர் கட், நிற்கும் தோரணை கட்டுமஸ்தான உடல் என்று அவர் யோசனையாய் பார்க்க.
“எஸ், மைசெல்ப்…. வருண் ஜெகன்நாதன், கமாண்டர் இந்தியன் நேவி” என்றான் திமிராக பெருமையாக.
(குடம்புளி – புளிப்புச் சுவையுடைய இது புளிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றது, பழத்தோலினின்று தயாரிக்கப்படும் ஒருவித சாறு வாதம் மற்றும் வயிறு உபாதைகளுக்கு மருந்தாகும், கால்நடைகளின் வாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் குடம்புளி மருந்தாகும். உலர்ந்த பழத்தின் சதைப்பகுதியானது தங்கம் மற்றும் வெள்ளியைத் துலக்குவதற்கு பயன்படுகிறது.)