Skip to content
Post Views: 8,691
தற்கொலை நமக்குக் கிடைக்கும்
விடுதலை அல்ல..!
நாம் நம்மவர்களுக்கு
அளிக்கும் தண்டனை..!!
நமது காயங்களும் கண்ணீர்களும்
நமக்கே சொந்தமானவை…!!!
ஒருபோதும் அவைகளை
நம்மவர்களுக்கு மாற்றி விடாதீர்கள்
தற்கொலை எனும் பெயரில்…!!!!
ரமேஷ் ஏகாம்பரம்
ஒரு நொடி நேர இயலாமை , வெறுப்பு , கோபம் அனைத்தும் சீதாவை இந்த முடிவை எடுக்க தூண்டியது.
மனதை திட படுத்தி அந்த நொடியை அவர் கடந்திருந்தால் இந்த துன்பங்கள் எதுவும் இல்லை.
Advertisement
சொல்லிவிடுவது எளிது அந்த நொடிகளை கடந்து வருபவர்களுக்கு அது நரக துல்லியம்.
கார்தும்பியின் நினைவுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள வழிகளை தேடி கொண்டிருந்தான் ஜெகன் , எங்கு சென்றாலும் அவளின் அருகாமை வேண்டி மனம் அடம் செய்தது.
“வேண்டாம்” என்று வந்துவிட்டால் மறந்துவிடும் உறவா கார்தும்பி என்பவள் அவனுக்கு , அவளின் குடும்பத்தின் மீது உள்ள கோபத்தை அவளிடம் காண்பித்து விடுவோமோ என்று அவனுக்கு பயம் வந்தது.
Advertisement
தன்னை சுற்றி இருக்கும் அனைவரும் அவளை இதை வைத்து காயப்படுத்துவார்கள் , இப்படி பல கோணங்களில் அவன் எப்பொழுதும் அவளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.
Advertisement
இரண்டரை வருடங்கள் எப்படியோ கடத்திவிட்டான் , நண்பன் ஒருவனின் உறவினன் கிஷோர் அவனை தன்னுடைய அட்வகேட்டாக வைத்துக்கொண்டான்.
பணத்தை வாரி இறைத்து கிருஷ்னன் , சங்கரன் இருவரையும் பாலோவ் செய்ய ஆட்களை வைத்து ஆதரங்களை சேகரித்தான்.
அப்படி இருக்கையில் ராஜீவுக்கு இரண்டாம் முறை திருமணம் முடிவான போது , பெண் வீட்டிற்கு சில ஆதாரங்களை அனுப்பி “இவர்கள் குடும்பம் கொள்ளை அடிக்கிறது எப்பொழுது வேண்டுமானாலும் பிடிப்படலாம்” என்று அவர்களை எச்சரித்தான்.
Advertisement
அப்படி இரண்டாம் முறையும் திருமணம் நின்று விட்டது , இவர்களின் பின்னேயே சுற்றியவனுக்கு வேலை , தந்தை , பழி வாங்கல் என்று நாள் கடந்தது.
ஒருத்தி அங்கே ஒரு முறை இவனின் தரிசனம் கிட்டாதா என்று ஏங்கி ஏங்கி தன்னையே மெழுகாக உருக்கி கொண்டிருப்பதை அறியவில்லை , அறிய முயலவில்லை.
தன் தாயின் மீது இப்படி ஒரு பழி விழ காரணமான அந்த அயோக்கியன் ரவியை தேடி மீண்டும் குட்டநாடு வந்திருந்தான் , அவன் இருக்கும் இடம் அறிந்து செல்ல தப்பிவிட்டான்.
அந்த கோவத்தில் கார்தும்பியின் கிருஷ்ணன் வீற்றிருக்கும் ஆலயத்தின் குளக்கரையில் அமர்ந்திருந்தான்.
உடலும் மனமும் அவளை தேடி செல்ல பாடாய்ப்படுத்த அனைத்தையும் அடக்கி கல்லென அவன் அங்கு அமர்ந்திருக்க.
“ஜெகா” என்று அவன் தோள் தொட்டார் ஷ்யாமா , சட்டென்று எழுந்தவன் அவரை ஒரு நொடி பார்த்து நின்று திரும்பி நடந்துவிட்டான்.
ஆனால் நான்கு அடிகளை கூட வைக்க முடியவில்லை.
திரும்பி அவரின் அருகில் வந்தவன் “கார்தும்பி??” என்க அவர் வெடித்து அழுதார் , இதுவரை அவளுக்கு நடந்தது அவள் இப்பொழுது இருக்கும் நிலை என்று அனைத்தையும் கூறினார்.
அவருடன் அந்த வீட்டிற்கு கிட்ட தட்ட நான்கு வருடங்கள் கழித்து சென்றான் , அவள் அறையில் நிர்மலமான முகத்தோடு உறங்கி கொண்டிருந்தாள் , அருகில் சென்று அவளை அள்ளி அணைக்க அவள் ஆழ்ந்த நித்திரையில்.
“என்ன மருந்து எந்த டாக்டரை காமிக்குறாங்க ஏதும் எங்களுக்கு தெரியல , இப்படித்தான் கிடக்குறா பாதி நாள் , அவ பெரியப்பாவும் சித்தப்பாவும் மட்டும் தான் கூட்டிட்டு போவாங்க அவங்களே தான் மருந்தும் குடுப்பாங்க” என்றார் ஷ்யாமா.
“குழந்தய அவனுங்க என்னமோ பண்றானுங்க என்னனு எங்களுக்கு கண்டுபிடிக்க முடியலையா” என்று கதறினார் லக்ஷியம்மா.
வெகு நேரம் அவளின் அருகிலே இருந்தவனை மனச்சாட்சி குத்தி கிழித்தது “என்ன செய்து வைத்திருக்கிறேன் நான் , என் கார்தும்பியை நானே இப்படி ஆக்கிவிட்டேனா , அம்மாவும் வாஞ்சியும் கூட என்னை மன்னிக்க மாட்டார்கள்” என்று உள்ளுக்குள் உடைந்துகொண்டிருந்தான்.
அவர்களிடம் கேட்டு அவளின் மருத்துவ அறிக்கையை கிருஷ்ணனின் அறையில் இருந்து எடுத்து தன்னுடைய கைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டான்.
அதை மருத்துவரிடம் காண்பித்து அவர்களின் படுபாதகமான செயலை அறிந்து கொண்டான்
அப்படிதான் எந்த பிரச்னையும் இன்றி தன் திருமணம் இந்த முறை நடந்துவிட்டது என்று மூன்றாம் முயற்சியில் தாலி கட்டிய நிம்மதியில் ராஜீவ் இருக்க.
அவர்களுக்கு அங்கேயே ஆப்பு வைத்து கார்தும்பியை தாலி கட்டி அழைத்து சென்றான்.
வெகு நாட்களாக தேடி கொண்டிருந்த அந்த ரவி வசமாக அவர்கள் கையில் சிக்கிய நாளில் தான் ரெம்யா மற்றும் சகோதரர்கள் அம்முவை கடத்தியது , இப்பொழுது அணைத்து உண்மையும் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது .
இவர்களின் தவறை மறைக்க இரண்டு உயிர்களின் மரணத்திற்கு காரணம் ஆகியிருக்கிறார்கள் , தற்கொலைக்கு தூண்டிய வழக்கும் சேர்ந்து கொண்டது.
நினைவுகளில் இருந்து மீண்டவள் ஜன்னலின் வழியே காயலை பார்த்திருந்தாள் , அவளின் விருப்பப்பட்ட இடம் , முதலில் அவளின் தாயின் அறை பிறகு அவளின் நந்தேட்டனின் அறையாக இருந்த தரவாடு வீட்டின் முதல் தளத்தின் அறை.
கார்தும்பியின் சொத்துக்கள் தவிர மற்ற அனைத்தையும் முடக்கி இருக்க இப்பொழுது அனைவரும் இந்த வீட்டில் தான் இருந்தனர்.
ஜெகனை பற்றிய சிந்தனையில் இருந்தாள் , கோபம் என்று இல்லை ஒரு சின்ன வருத்தம் அவன் மேலே , தன்னை வேண்டாம் என்று விட்டு சென்றானே.
அவனை பிரிந்து அவள் அனுபவித்த வேதனைகள் அனைத்தும் இப்பொழுது கண் முன்பே நிழலாடியது.
அம்முவிற்கு இரவு உணவை கொடுத்த ஷ்யாமா அவளை தன்னுடன் படுத்துக்க கொள்ள சொல்ல , தன் அறைக்கு போகவேண்டும் என்று கூறினாள் .
“சரி” என்றவர் அவளை மேலே அவள் அறைக்கு அனுப்பிவிட்டு , கீழே லக்ஷிமியம்மாவின் அறையில் உறங்க சென்றார் , அவருக்கு உடல் நிலை சரி இல்லாமல் ஆனதில் இருந்து லக்ஷியம்மாவின் அறையில் தான் ஷ்யாமா உறங்குகிறார்.
ரெம்யா வேறு அறையில் உறங்க சென்றாள் , அனைவரும் சென்ற பிறகும் ஹாலிலே அமர்ந்திருந்தான் ராஜீவ்.
ஹரி மற்றும் ஜெயனின் அலைபேசிக்கு பல முறை அழைத்தும் அழைப்பு எடுக்க படவில்லை , உள்ளே குடைந்து கொண்டே இருந்தது , ஏதோ தவறாக நடக்க போவதாக அவர்களை பற்றிய தகவல் அறியாமல் உறங்க முடியும் என்று தோன்றவில்லை.
மெல்ல ஹால் சோபாவில் அறியாமல் கண் அயர்ந்த நேரம் , அவன் போன் ஒளி எழுப்பியது , புதிய நம்பரில் இருந்து அழைப்பு உடனே எடுத்துவிட்டான்.
அந்த பக்கம் கூறிய செய்தியின் அதிர்ச்சியில் விழிகள் நிலைக்குத்தியது , ஒரு நொடி என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை.
பாட்டியின் அறையில் சென்று பார்க்க தாயும் பாட்டியும் நல்ல உறக்கத்தில் , யாரிடம் சொல்லி செல்ல என்ற பதட்டத்தில் இருந்தவன் யோசிக்காமல் அம்முவின் அரை கதவை தட்டினான்.
“இந்த நேரம் யார்” என்று பதட்டத்தோடு வந்து கதவை திறந்தவள், கண்டது அதீதமான பரபரப்பில் நின்ற ராஜீவை, அவள் அவனையே பார்த்திருக்க.
“அம்மு ஒரு அவசரமான வேலை உடனே போகணும், எல்லாரும் நல்லா தூங்குறாங்க காலைல நீ அம்மாகிட்ட சொன்ன போதும் நான் அப்பறம் அம்மாக்கு பேசுறேன்” என்றவன் வேகமாக திரும்ப.
“அண்ணா” என்றவள் அழைப்பில் அப்படியே நின்றான் “ஏதாவது பிரச்னையா” என்றவளை திரும்பி பார்த்தவன் , ஒரு நொடி யோசித்து “ஒன்னும் இல்லை , நீ கீழ வந்து கதவை பூட்டிக்கோ” என்றவன் கீழிறங்கினான்.
அவனின் பின்னே சென்றவள் அவன் போகும் வரை பார்த்திருந்து கதைவை அடைத்து மேலேறினாள் , என்னவாக இருக்கும் அதும் இந்த நேரம் என்று யோசனையாக இருந்தது.
அதற்க்கு மேல் உறக்கம் வரும் என்று தோன்றவில்லை அறையில் நடைபழகி உடல் சோர்வடைய மெல்ல படுக்கையில் விழுந்தாள்.
காலை சூரிய வெளிச்சத்தில் அடித்து பிடித்து எழுந்தவள் , படியில் நின்று எட்டி பார்க்க அடுக்களையில் சத்தம் கேட்டது “பெரியம்மா எழுந்து விட்டார்கள்” என்று வேகமாக பல் துலக்கி குளித்து கீழே சென்றாள் .
அவள் வந்த அரவம் கேட்டு திரும்பி பார்த்த ஷ்யாமா “வாடா” என்று அவள் கையில் டீயை வைத்தார்.
மெலிதான புன்னகையோடு வாங்கி கொண்டவள் “பெரியம்மா , அண்ணா எங்கயோ வெளில போனார் ராத்திரி , என்னனு தெரில உங்களுக்கு அப்பறமா போன் பண்றேன் சொன்னார்” என்க அவரை மீண்டும் கவலை சூழ்ந்தது.
“இன்னும் முடியவில்லையா சோதனை” என்று மலைப்பாக இருந்தது.
“பெரியம்மா கோவிலுக்கு போயிட்டு வரவா” என்றாள் அவரிடம், கிருஷ்ணனை பார்த்தே வருடங்கள் ஆகிவிட்டது.
அவருக்கும் போகவேண்டும் என்று தோன்றியது , லக்ஷ்மியம்மா நல்ல உறக்கத்தில் இருக்க கதவை பூட்டிவிட்டு இருவரும் ஆலயம் நோக்கி சென்றனர்.
அவன் அழைத்த போது பேசமாட்டேன் என்று ஆடம் பிடித்தாள் அது அவனை வெறுத்ததாக ஆகி விடுமா.
“நந்தேட்டனை பத்திரமா என்கிட்டே கொண்டு வந்து சேர்த்துடு” என்று மட்டுமே வேண்டிக்கொண்டாள் , அவனை காண வேண்டும் என்று மனம் முழுதும் ஏக்கம் நிறைந்து கிடந்தது.
அவன் அருகில் இருந்த போது “கார்தும்பியாக” அவனுடன் இருக்க முடியாமல் போனதே என்று வருந்தினாள்.
தொழுது பிரசாதம் வாங்கி திரும்பி வீடு வர , வாசலில் நின்றது துறைசெல்வத்தின் கார் , அவர்களை எதிர்பார்க்காத ஷ்யாமா ஒடி சென்று மாதவியின் கையை பற்றிக்கொண்டு மூவரையும் பார்த்து “வாங்க வாங்க , எப்போ வந்தீங்க சொல்லவே இல்லை” என்று வேகமாக கதவை திறந்தார்.
அனைவரும் உள்ளே செல்ல அம்மு ஷ்யாமாவின் பின்னே நின்று கொண்டு அவர்களை பார்த்திருந்தாள்.
“அம்முக்குட்டி எங்களை மறந்துட்டியா” என்று மாதவியின் குரலில் அவரையயும் ரூபாவையும் மாறி மாறி பார்த்தவள் மெல்ல அவர்களின் அருகில் செல்ல , அவளை அப்படியே அணைத்துக்கொண்டார் மாதவி.
அம்முவிற்கு அழுகை வந்தது , ரூபாவையும் கட்டிக்கொண்டாள் துரைசெல்வதை பார்க்க “நல்லா இருக்கியா தாயி” என்றவர் அன்பில் விழிகள் நிறைய வேகமாக தலை ஆட்டினாள்.
“விடியக்காலையிலே கிளம்பிட்டோம் , புள்ள இங்க பத்திரமா வந்து சேர்ந்தாச்சுனு கிஷோர் போன் பண்ணி சொன்னார்” என்க ஷ்யாமாவிற்கு மனம் நிறைந்தது.
“நீக்க போய் ரெப்ரெஷ் பண்ணிக்கோங்க சாப்பிடலாம்” என்ற ஷ்யாமா அவசரமாக அடுக்களை செல்ல , அம்மு காண்பித்த அறைக்கு சென்றனர் .
சிறிது நேரத்திலே மாதவியும் ரூபாவும் கிட்சன் வந்து அவர்களுக்கு உதவ நின்று கொண்டனர் , அனைவரும் கதைகள் பேசிக்கொண்டே வேலைகளை முடித்து காலை உணவு உண்டனர்.
இடையில் லக்ஷ்மியம்மாவை பார்த்து நலன் விசாரித்து அவருடன் சிறிது நேரம் இருந்தனர்.
error: Content is protected !!