‘மீன்வளத்துறை அமைச்சர் திரு. குமரன் நெடுஞ்செழியன் சென்னையில் உள்ள அவரின் காட்டன் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயு கசிவின் காரணமாக அகால மரணமடைந்தார். இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் நேரில் சென்று அவருடைய இறுதி சடங்கில்…’
“என்னங்க இவரை நம்ம வீட்டுல கூட ஒரு தடவ சந்திச்சிருக்கேன்ல?” நளினி, ஹரியின் தாயார் தொலைக்காட்சியில் வெளியாகிக் கொண்டிருந்த செய்தியைப் பார்த்தவர் தன் கணவனிடம் சந்தேகத்துடன் கேட்டார்…
“ஆமா மா இவரு கூட கொஞ்சம் மனஸ்தாபம் இருக்கு, அரசியல்வாதின்னு நல்லா காமிப்பாரு செட்டில்மென்ட் ஒழுங்கா வராது, ஆளுங்க அனுப்பி மெரட்டுவாரு அதான் உதய் ஒரு தடவத் தட்டி வச்சான் அதுல இருந்து நம்மப் பக்கமே வர்றது இல்ல” முகத்தில் புன்னகைப் பூத்தது மகனைப் பற்றிய நினைவில்…
“நீங்க போக போறிங்களா?”
“அண்ணாவும் நானும் போய்ட்டு வரோம் பெரிய இடம்ல”
“சரி சாப்ட வாங்க, மாமாவையும் கூட்டிட்டு வாங்க” அந்த குரலில் சிறு ஏமாற்றம் கலந்த கோவம் இருந்தது, ‘இவ கூப்புடுற தொனியே சரி இல்லையே…’
“ம்ம்ம் கூட்டிட்டு வர்றேன்மா” என்றவர் தன் சகோதரரை அழைக்கச் சென்றார்…
அதே நேரம் தன்னுடைய அறையில் இருந்து விஷ்ணுக் குறுக்கும் நெடுக்கும் ஹரியின் அறைக்கு மாறி மாறி நடந்துக்கொண்டே இருந்தான், கதவுத் திறந்திருந்தாலும் உள்ளேச் செல்லாமல் ஒவ்வொரு முறையும் ஹரி என்னச் செய்கின்றான் என்று எட்டிப் பார்ப்பானேத் தவிர உள்ளேச் செல்ல முயற்சிக்க வில்லை… குட்டிப் போட்ட பூனைப் போல் தினமும் அறையின் வாசலில் வந்து நிற்பவன் மேல் சிறிதும் இரக்கம் தோன்றவில்லை மாறாக கோவம் அதிகரிக்கவேச் செய்தது ஹரிக்கு, இருவரும் நேருக்கு நேர் பேசி இரண்டு வாரங்கள்க்கு மேல் ஆகியது…
தனது இருப்பைக் காட்டிக்கொள்ள காலை அழுத்தி அழுத்தி நடந்தவனை பார்த்தும் பார்க்காததுமாய் இல்லாத சட்டைச் சுருக்கத்தை அழுத்தி அழுத்தித் தேய்த்து நின்றான் ஹரி… பொறுத்துப் பார்த்தவன் இனி முடியாதென உணர்ந்து வெக்கத்தை விட்டு ஹரியின் அறைக்கு சென்றான்… விஷ்ணுவைப் பார்த்தும் சிறிதும் அசையாதுத் தனது சட்டையை டக்-இன் செய்தவன் அவனிடம் சிறிதும் கவனம் செலுத்தாதுத் தன்னுடைய வேளையிலேக் குறியாய் இருந்தான்…
“டேய் சாவடிக்காத ஏற்கனவே மண்டை சூடா இருக்குது இதுல நீ வேற சூடேத்தாத” – விஷ்ணு
“ஏண்டா நீ எப்பயும் அடுப்புல ஒக்காந்து மாதிரி சூடா இருப்ப அதுக்கு நான் என்ன பண்றது?” – ஹரி
“ஆமா எனக்கு வேற வேலை இல்ல அடுப்புல போய் ஒக்காந்துக்குறதுக்கு… நீ எதுக்குடா இப்புடி திருடன் மாதிரி என்கிட்ட இருந்து பயந்து பயந்து ஓடுற” – விஷ்ணு
“ஓ உன்ன பாத்து பயப்புடுறேன்னு வேற உனக்கு எண்ணம் இருக்குதா? சாரி நான் ஒதுங்கி போறேன்… ஓடல” – ஹரி
“ஐயோ நீ பயப்புடாத சூர புலி தான், என்னத்துக்கு ஒதுங்கி போறன்னு சொல்லு ஒடனே மாமாவை நடுல இழுக்காத பிரச்னை உனக்கும் எனக்கும் தான்” – விஷ்ணு
“உன் மாமாவை சொல்ற அளவுக்கு நான் ஒன்னும் வளரலையே… இந்தா நீ கருப்பு சட்டை போட்ருக்க, நா வெள்ளை சொக்கா போட்ருக்கேன் அதான் உன்ன பாத்து ஒரு பத்து அடி தள்ளியே நிக்கிறேன் போதுமா விளக்கம் நவுரு” என்ற ஹரியின் பாதையில் குறுக்கிட்டு நின்றான் விஷ்ணு.
“என்னடா லந்தா ஏதாவது சொல்லணும்னு சொல்லாத ஒழுங்கா பதில் சொல்லு” விடாப்பிடியாக நின்றான் விஷ்ணு… எத்தனை நாட்கள் அவனது ஒதுக்கத்தை தாங்குவது? வாழ்க்கையே வெறுமை அடைந்த உணர்வு…
“இது என்னடா வம்பா போச்சு நீ காரணம் கேட்ட நான் சொல்றேன்… இல்ல உண்மைய தெரிஞ்சு என்ன பண்ண போற? என் பேச்சை எல்லாம் கேக்குற அளவுக்கு நான் என்ன உனக்கு வேண்டப்பட்டவனா என்ன?”
“அன்னைக்கு பேசுனத இன்னுமா நீ நியாபகம் வச்சிருக்க அது ஏதோ கோவத்துல பேசிட்டேண்டா இந்த உலகத்துல உன்ன விட வேற யாருக்கு என் மேல அதிக உரிமை இருக்க போகுது?”
“நான் ஒன்னும் ஏசுவோ புத்தரோ இல்ல இது தான உனக்கு வேணும்? உன் இஷ்டத்துக்கு இருக்கது? போ உன்ன கேக்க நாதி இல்ல அம்மா என்ன சொன்னாலும் உனக்கு நான் சப்போர்ட் பண்றேன்” ஹரி வேகமாய் அவன் அறையை விட்டு கீழே இறங்கி சமயல் அறைக்கு சென்றான்…
நளினி தோசையைக் கடைமைக்காக ஊற்றி எடுக்க ஒரு தோசை பலப் பாகங்களாக வந்தது அதை எவற்றையும் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அதைப் போலவே ஊற்றியவரைப் பார்த்து, “என்னமா தோசை சுட மறந்துப் போச்சா?”
“மறக்கல ஆனா இப்புடி தான் ஊத்துவேன் இஷ்டம் இருந்த சாப்பிடுங்க இல்லனா எல்லாரும் போங்க”
‘நல்ல மூட்ல இருப்பாங்க போலயே’ என்று அருகில் வைக்கப்பட்டிருந்தப் பாத்திரங்களை பார்க்க எதிலும் எந்த ஒரு குழம்போ, சட்னியோ இல்லை
“என்னமா சட்னி டேபிள்ல போய் வச்சாச்சா?”
“இன்னைக்கு வெறும் இட்லி பொடி தான்”
“சரி விஷ்ணுக்கு நான் சட்னி போடுறேன்”
“போட்ட கைய ஒடச்சிடுவேன்” என்றார் நளினிக் கோபத்துடன்…
“இங்க பாருங்க இந்த வீட்டுல யாருக்கு வேணும்னாலும் நீங்க எது வேணாலும் சொல்லிக்கோங்க… நான் சொல்ற வரைக்கும் ஒரு வார்த்தை சொன்னிங்க அப்றம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” இது வரை ஹரியின் முகத்தில் அவ்வளவு கோவத்தை அவர் பார்த்ததே இல்லை…
“ஹரி என்னடா ஆச்சு? ஏதாச்சும் சண்டையா ரெண்டு பேரக்குள்ள இருவது நாளா சரியாய் பேசுறதே இல்ல நீங்க ரெண்டு பேரும். சரி வேலை டென்ஷன்னு நெனச்சேன் பெரிய பிரச்னையா டா? உதய்க்கிட்ட எதுவும் இவன் தான் சொன்னானா? அவனை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ பா பிள்ளை மூஞ்சியே கொஞ்ச நாளா சரி இல்ல” கண்களில் நீர் ஓரமாய் சுரக்க ஆரமித்தது அவருக்கு…
“அதெல்லாம் சொல்ல விரும்பல மா, நான் சொல்றதச் செய்ங்க அவனை ஒரு வார்த்தைக் கூட நீங்கத் திட்டாதீங்க நான் பாத்துக்குறேன்… அவனுக்கு ரெண்டு சட்னி போடுங்க… அவனுக்கு மட்டும். தண்டனையை எங்களுக்கு குடுங்க”
சரி என்றவர் அவனுக்கும் மட்டும் வேக வேகமாக இரண்டு சட்னி போட்டு நன்றாக மூன்று தோசையை அவனுக்காக தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்தார்…
“ஆமா எதுக்கு இந்த தண்டனை?”
“அதெல்லாம் உனக்கு சொல்லணும்ன்னு அவசியம் இல்ல” முகத்தை ஒரு வெட்டு வெட்டி சென்ற தாயை ஆச்சிரியமாகப் பார்த்து நின்றான்
அனைவரும் உணவு மேஜையில் அமர மட்டும் சுருங்கிய முகத்துடன் வந்தமர்ந்த விஷ்ணுவை பார்த்த நளினிக்கு மனம் சுணங்கியது…
முதலில் விஷ்ணுவிற்குத் தோசையும், இரண்டுச் சட்னியும் வைத்தவர் பின் மற்றவர்களுக்கு குதறி இருந்த தோசையை இறுக்கமான முகத்துடன் வைக்க அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து இட்லிப் பொடியை வைத்தவர் அதில் நாலெண்ணையை ஊற்றி ஒரு இருக்கையில் அமர்ந்தார்… அவரையே மொத்த குடும்பமும் பார்த்து நிற்க…
ஜெய நந்தன் மனைவியிடம், “என்னமா சட்னி ஊத்த மறந்துட்டியா?”
“இல்லையே இன்னைக்கு வெறும் இட்லி பொடி தான்” வெறுமையாக கூறினார்…
“ஏன்மா?” – ரகுநந்தன்
“தினம் தினம் ருசியா சாப்பிட்டு நமக்கு என்ன மாமா கிடைச்சிடுச்சு?”
‘ஆஹா ஏதோ பிளானோட தான் இருக்கா’ மனதில் ஜெய நந்தன்…
மறு புறம் விஷ்ணு பேய் அறைந்தது போல் அமர்ந்திருந்தான்… ‘ஒரு வேலை பசில நமக்கு மட்டும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னியா தெரியுதோ’
“இவ்ளோ சம்பாதிக்கிறது இந்த மூணு வேளை சாப்பாட்டுக்காக தானேம்மா அதுல என்னமா?” – ரகுவரன்
“என்ன ருசியா சாப்பிட்டாலும் சந்தோசம் இல்லையே மாமா”
“இப்ப உனக்கு என்ன இங்க கொறச்சல்?” ஜெய நந்தன் பொறுமையை இழந்து கேட்டார் மனைவியிடம்…
“ஆமா என்ன சந்தோசம் இல்ல அதுவும் இல்லாம இவனுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் ரெண்டுச் சட்னி?” பல்லவி விஷ்ணுவைப் பார்த்துப் பொறாமையாய் கேட்டாள்…
“பல்லவி உனக்கு வச்சதை மட்டும் சாப்புடு மத்தவங்க தட்ட பாக்காத” ஹரி விஷ்ணுவிடம் திரும்பி, “நீ சாப்புடு டா இங்க உன்ன யாரும் எதுவும் சொல்ல நா விட மாட்டேன்” குலைய குலைய பேசினாலும் அவன் கூறியதன் பொருள் விஷ்ணுவிற்கு மட்டுமே புரிந்தது… ஆனால் ‘மத்தவங்க’ என்று ஹரி கூறிய வார்த்தை நெஞ்சில் முள்ளாய் குத்தியது விஷ்ணுவிற்கு…
“நீ சாப்புடு ப்பா அவங்க சொல்றத எல்லாம் கேக்காத நீ என்ன பண்ணாலும் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்ற நளினி, “எனக்கு என்ன கொறச்சல் இங்க? வீட்டுல நல்ல சாப்பாடு, கேட்டது ஒடனே ஒடனே கெடச்சிடும், புடிச்சத விட அதிகமா துணி, நகை எல்லாமே இருக்கு… அத விட எனக்குன்னு ஒன்னுனா நிமிசத்துல பத்து பேர் சுத்தி வந்து நிப்பிங்க”
“இதுக்கு மேல என்ன வேணும் உனக்கு?” – ஜெய நந்தன்
“எனக்கு என் புள்ள வேணும்ங்க” தட்டை மட்டுமேப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவரின் கண்களில் நீர் தாரைத் தாரையாய் ஓடியது…
“என்னடா அம்மா நமக்கு தெரியாம இன்னொரு புள்ளைய பெத்துக்குடங்களோ” திவ்யா ஹரியின் காதில் கேட்க அதே சந்தேகத்தோடு தங்கையை பார்த்து பல்லை காட்டியவன், “நானும் அத தான் நெனச்சேன்… தளபதி படம் மாதிரி வீடு முன்னாடி வந்து கத்த போறான் பாரு”
“உன் பசங்க எல்லாம் கூடயே தான மா இருக்காங்க” ரகுநந்தன் அவரை அமைதிப்படுத்த முயற்சித்தார்…
“ஏன் மாமா அக்கா போனதுக்கு அப்றம் நீங்க மாறிட்டீங்க அதுக்காக உங்க பையனையுமா மறக்கணும்?”
“அதுக்கு தான் நீ இருக்கியேமா இவனை உன்ன விட வேற யாரால நல்லா பாத்துக்க முடியும்” விஷ்ணுவை பார்த்து பேசினார் ரகுநந்தன்.
“உங்க பசங்கன்னுச் சொன்னப்ப உதய் உங்க நியாபகத்துலயே வரலையா, விஷ்ணு மட்டும் தான் வந்தானா?” நளினி கேட்ட கேள்வியில் வாயடைத்து அமர்ந்திருந்தார் ரகுநந்தன்…
“அப்ப உங்களுக்கு அவன் நியாபகம் வரல…” என்றவர் தன் கண்ணீரைத் துடைத்து, “இருவது நாள் ஆச்சு அவன் வீட்டுக்கு வந்து. ஆனா இப்ப வரைக்கும் ஒருத்தர் கூட அவனை பத்தி கேக்கல… ஆனா அவன் வீட்டுல இருக்க ஒவ்வொருத்தர பத்தியும் ஆணி வேர் வரைக்கும் தெரிஞ்சு வச்சிருப்பான் காலைல எழுந்திருக்கிறதுல இருந்து நைட் தூங்குற வரைக்கும்… அவன் இப்புடியே போய்டுவானோனு பயமா இருக்கு மாமா… அக்கா இருந்திருந்தா அவன் இப்புடி இருந்துருப்பானா?”
நளினி தனது இருக்கையில் இருந்து விஷ்ணு அருகில் வந்து, “என்னப்பா இன்னும் சாப்புடாம இருக்குற… நான் இவங்க எல்லாரையும் தான் பா திட்டுனேன் உன்ன எதுவும் சொல்ல மாட்டேன் நீ தாராளமா நிம்மதியா சாப்புடு”
‘எம்மோவ் நல்லா நடிக்கிறிங்க நான் கூட அவன்ட ஒளறிடுவீங்களோன்னு நெனச்சேன்’ தாயை மானசீகமாக பாராட்டியவன் வேண்டா வெறுப்பாக உணவை உண்டு தாயின் வார்த்தைகளை அசைபோட்டபடியே தனது அறையை நோக்கி நடந்தான்…
விஷ்ணுவிற்கு அவர் உதய்யை பற்றி கூறியதை விட தன்னை மற்றவர்களில் இருந்து இவர் பிரித்து பேசியது வலியை கொடுத்தது அதுவும் இன்றி ஹரி இப்பொழுதெல்லாம் பல்லவியையும் திவ்யாவையும் அவன் அருகில் விடுவதே இல்லை…
ரகுவரன் உணவை எடுக்காமல் அவர் அறைக்கு செல்ல ஜெய நந்தனும் தமையனை பின் தொடர்ந்தார் அதை பார்த்த பல்லவி, “மா என்ன இது சாப்புடுறப்பயா இப்டி எல்லாம் பேசுவீங்க? பாருங்க அப்பாவும் பெரியப்பாவும் சப்புடாமையே போய்ட்டாங்க சாப்டதுக்கு அப்றம் பொறுமையா சொல்ல வேண்டியது தான?”
“ஏன் இப்ப சொன்னா என்ன ஒரு நாள் சாப்புடாம அவங்க போனதுக்கே இந்த பேச்சு பேசுற அங்க அவன் தெனமும் காலைல சாப்பாடு எடுத்துக்குறது இல்ல ஆனா மாடா உழைக்கிறான். இந்த வீட்டுல இருக்கவங்களுக்காக அவனுக்காக ஒரு நாள் நாம சாப்புடாம இருக்கது தப்பு இல்ல”
மகளை கடிந்தவர் அவர்கள் உண்டுகொண்டிருந்த தட்டை எடுத்து சமையல் அறை நோக்கி சென்று விட்டார்… இப்பொழுதும் விஷ்ணுவை மட்டும் டீல்லில் விட்டுவிட்டு…
ஹரியின் ஒதுக்கம், அவன் சித்தியின் வேற்றுமை, சகோதரிகளின் அமைதி என விஷ்ணுவின் மனம் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தது… தன்னை தனித்து ஒருநாளும் விடாத குடும்பம் இன்று தலைகீழாய் இருந்தது ஆனால் ஒரு நொடி, ‘ஒரு நாள் இப்புடி விட்ட எனக்கே இவ்ளோ கஷ்டமா இருக்குதே அவனுக்கும் அப்டி தான இருக்கும்’ என்று எண்ணாமல் இல்லை…
அலுவலகமும் செல்ல மனம் இல்லாமல் வீட்டிலும் இருக்கும் தனிமையை உணர புடிக்காமல் கால்கள் சென்ற திசையில் எல்லாம் நடக்க ஆரமித்தான்…
**********************
மருத்துவமனையில் கண்களை விழித்தவுடன் தன்னை சுற்றி பார்த்த ஆதி கேட்ட முதல் வார்த்தை, “உதய் வந்தானா டா?”
“அவன் எதுக்கு வர போறான், சரி இந்த பிரியாணி சாப்புடு”
“டேய் ட்ரிப்ஸ் ஏறுதுடா இந்த நேரம் இதெல்லாம் சப்புடலாமான்னு கேளு” – ஆதி
“அட சாப்புடுடா” தமிழ் அந்த பொட்டலத்தை எடுத்து ஆதியின் வைத்தான்…
“எதுக்கு இந்த பொழப்பு அவன் வந்துட்டு போனதை மறைக்கவா?”
“நா தான் சொன்னேன்ல அவன் கண்டுபுடிச்சிடுவான்னு” கெளதம் தமிழ் காதில் கூவ
“டேய் ஒரு சின்ன வெட்டு தான டா இதுக்கு எதுக்குடா நைட் இருக்க சொல்றிங்க? வா கிளம்பலாம், நர்ஸ்ஸ கூப்புடு இந்த ட்ரிப்ஸ்ஸ எடுக்க சொல்லு”
வயிற்றை பிடித்து சிரித்த கெளதம், “மச்சி எனக்கு தெரியும் நீ அந்த நர்ஸ்ஸ பாக்க தான இப்புடி சீன் போடுற பரவாயில்லடா இன்னும் ரெண்டு நாள் கூட இருந்துட்டு போகலாம் எல்லாம் கலர் கலர்ரா இருக்குது டாக்டர்ல இருந்து கக்கூஸ் கழுவுற பொண்ணு வரைக்கும்”
“பொண்ணுன்னு சொல்லாத டா நீ என்ன பொன்னையா பாப்ப ஆண்ட்டி-னு சொல்லு டா ஆண்ட்டி வெறியா” – தமிழ்
“முட்டா பயலுகளா உங்கள எல்லாம் வச்சு நா என்ன பண்ண போறேனோ, சரி ஆதவனுமா கூட வந்தான்?” – ஆதி
“உதய்யே வந்துட்டான் அவன் வராம இருப்பானா”
“சரி அவன்ட்ட எதாவது நம்ம பிளான்ன உளறி வச்சீங்களா?” புருவத்தை உயர்ச்சி முழித்து நின்ற நண்பர்களை பார்த்தான் ஆதி.
“என்ன பிளான்?” கையில் ஒரு பெரிய பையுடன் வந்து நின்றான் ஆதவன் மூவரையும் கேள்வியாய் பார்த்து.
“பிளான்-ஆ அப்புடியா அவன் சொன்னான் இல்லையே?” – தமிழ், “ஆமா பிளான் எங்க ப்ராஜெக்ட் பத்தி” – கெளதம்
தமிழ் கெளதம் இருவரும் ஒரே நேரத்தில்
“இல்ல பிளான் தான் ஆனா அந்த பிளான் இல்ல இது வேற பிளான் ரெண்டு நாள் முன்னாடி போட்ட பிளான்” – தமிழைப் பார்த்து முறைத்த ஆதி தலையில் அடித்தான்.
“என்ன ரெண்டு நாள் முன்னாடி பிளான் பண்ணீங்க?” – ஆதவன்
“ப்ராஜெக்ட்ட கெடுக்க” – கெளதம், “கோவா டூர்” – தமிழ் கெளதம் மீண்டும் இருவரும் ஒரே நேரத்தில்
“இல்லடா ப்ராஜெக்ட்ல இருந்து கட் அடிச்சிட்டு கோவா டூர் பிளான் போடுறோம்” கெளதம் தமிழ் இருவரையும் பார்த்து பல்லை கடித்த ஆதி, “என்னடா சொல்லுங்க ஆமா தான”
“ஆமா” இருவரும் ஒரு சேர தலையை ஆட்டினர்.
எதையோ மறைக்கிறார்கள் என்றுணர்ந்த ஆதவன், “சரி டா நானும் வரேன் நாலு பேரும் போகலாம்”
“இல்ல நாங்க இப்ப போகல” – தமிழ், “டிக்கெட் எல்லாம் புக் பண்ணியாச்சு” – கெளதம்… கோரஸ் பாடினர் இருவரும்.
“வாத்தி கொஞ்ச நேரம் மூடிட்டு இரு” என்ற கெளதம் ஆதவனிடம் திரும்பி, “அது இல்லடா எங்க மூணு பேருக்கு மட்டும் தான் டிக்கெட் போட்ருக்கோம்”
“அந்த டிக்கெட்ட கேன்செல் பண்ணுங்க எல்லாரும் கார்ல போகலாம்”
“கார்ல போனா எனக்கு வாந்தி வரும் அப்றம் உன் மேல தான் எடுப்பேன்” தமிழ் வயிற்றை பிடித்து கூறினான் (எல்லாம் பொய் தாங்க).
“ஆமா அவனுக்கு ட்ராவல் அலர்ஜி ஷேக் ஆனா வாமிட் வந்துடும்” – கெளதம்
“சரி அப்ப நா ரோல்ஸ் ராய்ஸ் எடுத்துட்டு வர்றேன் ஒன்னும் ஆகாது” – ஆதவன்
“ஐயோ அமைதியா இருந்தா தலை சுத்தி மயக்கம் போட்டு விழுந்துருவான்”
கெளதம் கூற அவனை ஆச்சிரியமாக பார்த்த தமிழ் ‘எனக்கா?’ கெளதம் பாவமாக முகத்தை வைத்து ‘ஆமா’ என்று தலையசைத்தான் தமிழை பார்த்து…
“இது என்னடா கொடுமையா இருக்கு… அப்ப பாட்டு போட்டுக்கலாம் டா”
“பாட்டு கேட்டா அவன் நெஞ்சுல இருக்க ஓட்ட பெருசாகிடுமாம்” மீண்டும் கெளதம் தமிழை வாரினான்…
‘பத்து பைசா கைல காசு இல்லாம கோவா டூர் வரைக்கும் சும்மாவே உருட்டுறீங்களேடா… அதை தெளிவா ஆச்சும் சொல்றானுங்களா பாரு’ அமைதியாக பிரியாணியை உள்ளே தள்ளிக்கொண்டே படம் பார்த்தான் ஆதி…
“நல்ல ஒளறுறீங்கடா ஒரு பொய் சொல்லி அத சமாளிக்க கூட தெரியல” – ஆதவன்
“உன் டிடெக்ட்டிவ் வேலைய இங்கையும் ஆரமிக்காத அந்த போன்ல இருக்க வீடியோ கால்ல கட் பண்ணிட்டு… எதாவது கொளம்பு இருந்தா தா பிரியாணி வர வரன்னு இருக்குது” ஆதவன் கொண்டு வந்த பையினுள் தலையை விட்டான் ஆதி.
‘இவன் நமக்கும் மேல இருக்கானே’ என்று நினைத்த ஆதவன் உதய்க்காக போட்டிருந்த வீடியோ கால்-ஐ பார்த்து உதய்யிடம் பார்வையாலே மன்னிப்பு கேட்டான்… அவனை பார்த்து தலை அசைத்து சிரித்த உதய் ‘பை’ என்று கை காட்டி அணைப்பை துண்டித்தான்…
“உனக்கு எப்டி தெரியும்?”
“எப்பயும் பின் பாக்கெட்ல இருக்க போன்-கு நெஞ்சுல என்ன வேலை? சரி கொளம்பு தரியா இல்லையா”
“இவன் ஒருத்தன் புடிடா எல்லாத்தையும் நீயே வச்சுக்கோ” ஆதவன் கையில் இருந்தப் பையை மொத்தமாக அவனிடம் திணித்தான்…
“தமிழு சஹானா எங்க இருக்கா?” – ஆதி
“இந்த கேள்வியை கண் முழிச்ச ஒடனே நீ கேக்கணும்… சஹானா எங்க வீட்டுல தான் இருக்கா” – கெளதம்
“அவகிட்ட என்ன சொன்ன?” – ஆதி
“அஹ்ஹ் உங்க அண்ணே மாடிப் படில இருந்து குப்புற விழுந்துட்டான்னு சொல்லிருக்கேன்” – தமிழ்
“டேய் தமிழ் சீரியஸாக் கேக்குறேண்டா மொபைல் வேற என்கிட்டே இல்ல எப்டி நாளும் அவளுக்கு தெரிஞ்சு தான் ஆகும்” – ஆதி
“டேய் எத்தனை நாள் தான் அந்த பொண்ணே உன்ன பாத்துக்குட்டு இருக்கும்? அதுக்கு கல்யாணம் ஆகிடுச்சுனா என்ன பண்ணுவ? ஏற்கனவே அம்மா சஹானாக்கு மாப்பிள்ளைப் பாத்துட்டு இருக்காங்க நீ சொன்னா எதாவது சொல்லுவன்னு தான் உன்கிட்ட சொல்லல”
தமிழ் கூறியதை கேட்டு ஒரு நிமிடம் நிதானித்து யோசித்தவன், “சரி பாக்கட்டும் நானும் சஹானா படிப்பு முடியட்டும்ன்னு தான் அமைதியா இருந்தேன்”
“எப்பா டேய் இப்பயாச்சும் அறிவு வந்ததே உனக்கு…” கெளதம்
“சரி டா நான் கிளம்புறேன் காலைல இருந்து வேலை பாக்கவே இல்ல டயர்டா இருக்கு… வர்ரேண்டா மச்சான்” ஆதியிடம் கூறி வெளியேறினான்…
“என்னடா இவன் சாப்புடாமயே கெளம்பிட்டான்?” – கெளதம்
“அவனுக்கு வேலை இருக்கும் டா நம்மள மாதிரியா? ஆமா ஏண்டா நீங்க ரெண்டு பேரும் இப்புடி சொதப்புறிங்க ஒரு பொய்ய மறைக்க இத்தனை பொய் அதையும் ஒழுங்காச் சொல்றது இல்ல உங்கள வச்சு நா எதையும் பிளான் பண்ணக் கூடாதுப் போல” நொந்து போய் கேட்டான் ஆதி.
“இனி சொதப்ப மாட்டோம்… இன்னோன்னு தெரியுமா உன்னக் கொள்ள ட்ரைப் பண்ண மினிஸ்டர் செத்துட்டான் டா… கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவுன்னு சொல்லுவாங்க ஆனா என்ன இவனுக்கு லைட்டா மிஸ் ஆகி விஷத்தால செத்துருக்கான்… ஆனா I am happy” சந்தோசமாக கெளதம் கூறி தனது உணவை ருசி பார்க்க ஆரமித்தான்…
ஆதிக்கு தான் மனம் நெருடலாகவே இருந்தது சஹானாவை நினைத்து, உதய்யை நினைத்து, தன்னது திட்டத்தையும் நினைத்து….
how is the chapter?