அவன் கேள்வியில் அமைதியாகிவிட்டாள் சஹானா உதய்யை நினைத்து, “என்ன நீ திட்டாத… நான் கால் வலில ரோட்டுல நடந்துட்டு இருந்தப்ப திடீர்னு ‘கால்ல என்ன அடி’னு ஒரு குரல் ண்ணா… அப்டியே நீ பேசுன மாதிரி இருந்தது. அந்த செகண்ட் எனக்கு யாரோ ஒரு ஆள்ன்னு தோணுச்சு ஆனா இப்ப யோசிச்சு பாத்தா தான் அந்த வாய்ஸோட பீல் புரியுது என்னமோ இருக்கு ண்ணா அந்த வாய்ஸ்ல” தீவிரமாக யோசித்துக்கொண்டே பேசினாள் சஹானா.
குடித்துக்கொண்டிருந்த காபியை ஒரு நொடி நிறுத்தியவன் மீண்டும் அதை அருந்திக்கொண்டு சகோதரியின் முகத்திலிருந்த சந்தேகத்தை உள்நோக்கி பார்த்தான்.
“என்ன கம்பெல் பண்ணி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் பிளட் டொனேட் பண்ற வரைக்கும் வெயிட் பண்ணி, ஆர்த்தோ டாக்டர்ட்ட சஜெஸ்ட் பண்ணி மாத்திரை எல்லாமே வாங்கி குடுத்தாரு. அவ்ளோ நேரம் நல்லா பேசுனவரு. அக்கௌன்ட் நம்பர் தாங்க அமௌன்ட் அனுபிர்ரேன்னு சொன்னேன் ண்ணா. உன் அண்ணன் கிட்ட இப்டி தருவியான்னு கேட்டாரு.
என் அண்ணனுக்கு தர தேவையில்லை ஆனா உங்களுக்கு தரணும்ல-னு சொன்னேன். அவ்ளோ தான் ண்ணா… அவ்ளோ நேரம் அவர் முகத்துல இருந்த அந்த பிரைட்நெஸ் மொத்தமா போச்சு…”
“எதுல கூட்டிட்டு போனான்?” பழக்கமில்லாத ஒரு ஆணுடன் ஏன் சென்றாய் என்ற கண்டிப்பான கேள்வியை ஆதியிடமிருந்து சஹானா எதிர்பார்க்க அவனோ மொத்தமாக அவள் எண்ணத்தை மாற்றியிருந்தான்.
ஆதியைப் புரியாத பார்வை பார்த்த சஹானா, “வைட் ரோல்ஸ் ராய்ஸ் கார்” என்றாள்.
‘அவனே தான்’ அடித்துக் கூறியது ஆதியின் உள்ளம்.
“ஓஓ…” அதோடு நிறுத்திக்கொண்டான் ஆதி.
“அண்ணா நான் இப்டி யார்கூடையோ போனது கோவமா? சாரி இனி நான் அப்டி போக மாட்டேன்… நீ கோவ படாத ப்ளீஸ்” கோபத்தினால் தான் அமைதியாக இருக்கிறானோ என்ற பயத்தில் சஹானா அவனை அணுகினாள்.
“இல்லடா நீ சொல்றத பாத்தா நல்லவன் தான் போல… ஆனா இனி வேற யார் கூடையும் இப்டி எல்லாம் போகாத டா”
வெளியில் அவளைப் பார்த்துச் சிரித்தாலும் உள்ளுக்குள் என்ன உணர்ந்தான் என்று அவனுக்கே புரியவில்லை இது என்ன வகையான நட்பு என்று?
தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை தங்களை விட்டு வெளியில் எடுத்து தன் குடும்பத்தையும், அவன் குடும்பத்தையும் நோகடிக்க விரும்பவில்லை, அமைதியாக இருந்துவிட்டான். உதய்யை போல் எந்த காரணத்திற்கொண்டும் உறவுகளை அவமதிக்கும் நோக்கம் மட்டும் தனக்கு வர கூடாதென்று. ஆதிக்குத் தெரியும் உதய், சஹானா மீது சிறு வயதிலே அதிகம் அக்கறை வைத்திருப்பவன் என்று, அதில் அவனுக்குக் கர்வம் என்று கூட கூறலாம்.
சஹானாவும் சரி என்று தலையை ஆட்ட, “நான் கொஞ்சம் வெளிய போயிடு வர்றேன். நைட் சாப்பிட வெளிய வாங்கிட்டு வர்றேன். நீ ரிஸ்க் எடுக்காம ஒரு இடத்துல ஒக்காரு டா” என்றவன் நேராக கெளதம் இல்லத்திற்குச் சென்று அவனிடம் கேட்காமலே, ஏன் அவனைக் கூட பார்க்காமல் திறந்திருந்த வீட்டினுள் நுழைந்து சாவியை எடுத்துக்கொண்டு அவன் காரில் பறந்துவிட்டான்.
அதன் பிறகு நேராக வந்து நின்றது மணிமேகலையின் இல்லத்திற்குச் சற்று தள்ளி. அவளை எப்படி அழைப்பது என்று சில நிமிடங்கள் யோசித்தவன் ஒரு சிரிப்புடன் காரின் கதவைத் திறந்து வைத்து எவ்வளவு சத்தமாக ஒலிபெருக்கியை வைத்தான்.
ஆதி அந்த காரில் சாய்ந்து நிற்க, ஆள் அரவமே இல்லாத அந்த தெருவில் சென்ற ஒரு நபர் அவனையும் அந்த காரையும் ஒரு சந்தேக பார்வையுடன் கடந்து செல்ல அவரை பார்த்து உதட்டைச் சுளித்து மணிமேகலையின் இல்லத்தையே ஆசையாகப் பார்த்து நின்றான்.
பாடல் தொடங்கிய சில நொடிகளிலேயே கதவை வேகமாகத் திறந்துகொண்டு சரியாக அவன் அன்று வந்து நின்ற அதே இடத்தில் வந்து மணிமேகலை பார்க்க எப்பொழுதும் அவன் முகத்தில் இருக்கும் சிரிப்பு இல்லை.
மேல்மாடம் வந்து நின்ற மணிமேகலை சுற்றிலும் பார்வையைப் படரவிட்டு எவரும் இல்லை என்றதும் தன்னையே பார்த்து நின்ற ஆதியிடம் சைகையாலே பாட்டை நிறுத்த கூறினாள்.
அவனும் தோளை மெதுவாகக் குலுக்கி சிறு சிரிப்புடன் அப்படியே நின்றான். மணிமேகலை கண்களைச் சுருக்கி சுருக்கி ‘ப்ளீஸ்’ என்றாள்.
மனமிறங்கி ஒலிபெருக்கியை அனைத்தவன் அங்கேயே நின்று அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவன் மான் குட்டி மீண்டும் சைகையாலேயே ‘போங்க’ என்றாள்.
அவன் பிடிவாதமாக இடத்தைவிட்டு அகல மறுக்க மணிமேகலைக்கு அவள் தந்தை எப்பொழுது வேண்டும் என்றாலும் வந்துவிடும் பயம். அவர் பார்த்தால் அவ்வளவு தான்…
வேகமாக வீட்டிற்குள் ஓடிச் சென்று அன்று போல் ஒரு காகிதத்தை எடுத்து ஏதோ எழுதி ஆதியிடம் தூக்கி எறிந்தால். சரியாக அவன் காருக்கு அருகில் வந்து விழுந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான். பத்து எண்கள். அவள் கைப்பேசி எண்.
உள்ளுக்குள் சிரித்தவன் அதை மனப்பாடம் செய்து அந்த காகிதத்தை அப்படியே மீண்டும் சுருட்டி அருகில் தூரப் போட்டான் தனக்கு அது தேவையில்லை என்று. மீண்டும் அவள் மேல் பார்வையைச் செலுத்தியவன் அவளைக் கீழே வருமாறு சைகை செய்தான். காலை தரையில் இரண்டு முறை உதைத்து சிறு பிள்ளை போல் அடம் பிடித்தவள் அவனுடைய பிடிவாதத்தை கையை கட்டி நின்று அவனை சில நொடிகள் முறைத்து அவனுக்குப் பதில் கூறாமல் உள்ளே சென்றுவிட்டாள்.
“கொஞ்சம் ஓவரா தான் போறோமோ?” தீவிரமாக யோசித்த ஆதி அவள் நிச்சயம் வர மாட்டாள் என்று வீட்டை மீண்டும் ஒரு முறை பார்த்து காரினுள் சென்று அமர, வீட்டின் நுழைவாயில் திறந்து மணிமேகலை அவளுடைய இரு சக்கர வாகனத்தில் வந்து நின்று ஆதியை ஒரு முறை பார்த்து அவன் தன்னை பார்த்துவிட்டான் என்று உறுதி செய்தவள் வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டாள்.
“பாரேன் சேட்டையை”
அவளை பின் தொடர்ந்து சென்றவன், “ஓய் ரோலக்ஸ்” சத்தமாக அழைத்தான்.
அவளோ அவனைக் கண்டு கொள்ளாமல் செல்ல நிச்சயம் அவளைச் சீண்ட வேண்டும் என்று மீண்டும் ஒரு பாடலை ஒலிபெருக்கியில் தனக்கு முன்னால் செல்பவளுக்குக் கேட்கும் வகையில் சத்தமாகப் போட்டான்.
உடனே தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தனக்கு அருகில் வந்து காரை திருத்திய ஆதியை பார்த்து, “ப்ளீஸ் பாட்டு போடாதீங்க… மெயின் ரோட்ல இருக்க சாலட் அண்ட் சீஸ் ஸ்டோர்க்கு வந்து பேசுறேன். ப்ளீஸ்”
“அங்க வேணாம்” என்றான் ஆதி.
“அப்ப அதுக்கு பக்கத்துல இருக்க பரோட்டா கடைக்கு போகலாமா. என்ககு அங்க சாப்புடனும்னு ஆசை” என்றாள் வந்த வேலையை மறந்து.
“அங்கையும் வேணாம். இப்படியே நாலு தெரு தள்ளி ஒரு சில்ட்ரன்ஸ் பார்க் இருக்குல்ல அங்க வா”
Why Doesn’t She Talk to Me வாவாசின்னக்கா லவ்வகொஞ்சம்சொல்லக்கா Why Doesn’t She Walk with Me இவன்தான்உனக்குபக்கம்கொஞ்சம்வாக்கா
தன்னுடைய வேலையை செவ்வனே அந்த ஒலிபெருக்கி பார்த்துக்கொண்டிருக்க, “ப்ளீஸ் சவுண்ட் கம்மி பண்ணுங்க…” போகட்டும் என்று ஆதி குறைக்க, “பார்க் எல்லாம் வேணாம். நாம பார்க்கு வெளிய இருக்க பாணி பூரி கடைல நின்னு பேசலாமா?”
சோறு சோறு-னு இருக்குற இத எப்படி மடக்குறது? யோசித்தவன், “பார்க் தான். அதிகம் பேசுனா பின்னாடி வர்ற உன் அப்பன்கிட்ட சொல்லிடுவேன்”
பதறிய மணிமேகலை, “அப்பா…” என்று பின்னால் திரும்பி பார்க்க எவரும் இல்லை. நிம்மதியாக முன்னே திரும்பிப் பார்க்க ஆதியின் வாகனம் அந்த சாலையில் இல்லை. தந்தையிடம் சிக்கிவிடக் கூடாதென்று அவர் வீட்டை அடையும் முன் செல்வதே மேல் என்று வேகமாக ஆதி கூறிய பூங்காவிற்கு வந்து சேர்ந்தாள்.
நேரம் மாலை ஆறு முப்பதை நெருங்க வானம் இருட்டத் துவங்கியிருந்தது. அந்த இருளை மறைக்க மொத்த பூங்காவையும் சுற்றி மின்விளக்குகள் மிளிரியது. ஒரு வித பயத்துடனே உள்ளே நுழைந்தவளை சில அடி தூரத்திலே ஆதி பார்த்துவிட்டான் கையில் ஒரு முட்டைவிடும் கருவியுடன் (Bubble Liquid) “வா அப்டியே நடந்துட்டே பேசலாம்”
அவன் கையிலிருந்ததைப் பார்த்தவள் அவனை மீண்டும் பார்த்து, “வேகமா சொல்லுங்க அப்பா வந்துடுவார்”
“அப்பா தவற உன் வாயில இருந்து எதுவுமே வராதா?” முட்டையிட்டு முட்டையிட்டு விளையாடிக்கொண்டே இருந்தான்.
“அதெல்லாம் வரும்… இந்த பப்புல் ஊதுறத ஸ்டாப் பண்ணுங்க. என்ன விசியம்ன்னு சொல்லுங்க ப்ளீஸ்”
“அப்ப நான் இப்ப என்ன பேச வந்துருக்கேன்னு உனக்கு தெரியல?” பாண்ட் பின் பாக்கெட்டில் அந்த பப்புல் லிக்குய்டை வைத்து அவளைப் பார்த்தான்.
எதுவும் தெரியாமல் விழித்தவள், “இல்லையே எனக்கு சைக்காலாஜி தெரியாதே”
“ஓ ஹோ… கிண்டல் எல்லாம் உனக்கு பண்ண தெரியும் ஆனா நான் உன் மாமனை பத்தி பேசுறேன்னு உனக்கு தெரியாது” நடந்துகொண்டிருந்தவன் நின்று அவளைப் பார்த்து கேள்வி கேட்டான்.
அவன் கூறியது அப்பொழுது தான் புரிய, “உதய் மாமாவை பத்தி சொல்றிங்களா?” என்றாள் சிரிப்புடன் முகமெல்லாம் பல்லாக.
“அவனை பத்தி பேசுனா மட்டும் உனக்கு ஏன் முகத்துல இப்டி பல்பு எரியுது” பொறாமையை மறைக்க பாடுபட்டு தான் போனான் ஆதி கேசவன்.
முகத்தைத் தொட்டுப் பார்த்தவள், “இல்லையே அப்டிலாம்… ஆனா உதய் மாமா தான் என்னோட ஃபேவரேட் மாமா. ரொம்ப நல்லவரு, உங்களுக்கு கூட தெரியுமே நீங்க தான் அவங்க ப்ரன்ட் ஆச்சே”
“ஆமா ரொம்ப நல்லவன்… அதுக்காக நீ என்ன அவனை தொட்டு தொட்டு பேசுற?” என்ன முயன்றும் கோவத்தை சற்று வெளியில் காட்டிவிட்டான்.
“நான் தொட்டு தொட்டா பேசுனேன்? அப்டியே தொட்டாலும் என்ன அவரு என்னோட மாமா தான?” கோவம் வந்ததோ அந்த மென்மையான பெண்ணிற்கும்.
“அப்டிலாம் பேச கூடாது… முக்கியமா நூறு மாமா போடாத” இது ஆதியின் உத்தரவு.
அவனை மிரண்ட பார்வை பார்த்தவள், “நான் அப்டி தான் என் மாமா கிட்ட பேசுவேன்… அவரை அப்டி சொல்லாம வேற யாரை சொல்லுவேன்?” என்றாள்.
“நான் தான் இருக்கேன்ல என்ன சொல்லு” மணிமேகலை அப்படியே விக்கித்து நின்றுவிட்டாள் அவன் பதிலில், உடனே அதிலிருந்து மீண்டு, “உங்கள எல்லாம் அப்டி கூப்பிட முடியாது” ஆதியைப் போலவே தானும் பிடிவாதமாய் நின்றாள் மணிமேகலை. அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தவன், “ஏன் கூப்பிட மாட்ட?”
“அவரு என் மாமா… என்ன கல்யாணம் பண்ணிக்க கூட அவருக்கு உரிமை இருக்கு” என்றாள் மாமனை விட்டு கொடுக்காமல்.
“ஆஹ் பண்ணுவான் பண்ணுவான்… நான் விட்டா தான உன் மாமா கூட நீ டூயட் ஆடுவ?”
ஒருவாறு சாய்ந்து நின்று ஆதி அவளுக்குச் சவால் விட்டான். அவன் மான்குட்டியும் அவனைப் போலவே நின்று, “அவர் கூட ஆடாம உங்க கூடையா ஆட முடியும்?”
அவள் கேள்வியில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவன் அவளை நோக்கி மேலும் சில இன்சஸ் இடைவெளியைக் குறைத்து, “ஏன் ஆடு யார் வேணாம்னு சொன்னாங்க”
விழி தானாய் விரிந்தது பெண்ணிற்கு. அவன் கண்களிலிருந்து காதலைக் கூட அறியாமல் இருக்கவில்லை ஆனால் இந்த திடீர் தாக்குதலை நிச்சயம் அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. உடலைச் சிலையாகி தலையை மட்டும் பயத்தில் பின்னுக்குக் கொண்டு சென்றவள் கண்களைச் சிமிட்டி சிமிட்டி இது நிஜம் தானா என்ற வாக்குவாதத்திலிருந்தாள்.
கண்கள் அவன் கண்களையும் தன்னை நெருங்கி வந்து நின்ற அவனையும் மாறி மாறி பார்த்து “என்… என்ன இப்… இப்டி பேசுறீங்க?” வார்த்தைகள் தந்தியடித்தது.
அவள் பயத்தைப் பார்த்தவன் இவ்வளவு நெருக்கத்திலிருக்கும் தன்தானவளை உரிமையோடு கூட பார்க்கத் தோன்றவில்லை, அவள் அனுமதியில்லாமல்.
“நல்லா தெளிவா தான் பேசுறேன். ஏன் உனக்கு தெரியாதா நான் ஏன் இப்டி பேசுறேன்னு?” சிரிப்புடன் மெதுவாக தன் காதலை அவளிடம் கூறினான்.
அவளோ மருண்ட விழிகளோடு காதில் அணிந்திருந்த குண்டு கம்மல் ஜிமிக்கி ஆட தலையை இட வலமாக ஆட்டி, “ம்ம்ஹ்ம்ம் தெரியாது”
“இங்க பாரு ரோலக்ஸ் எனக்கு தெரியும் உனக்கு எல்லாமே தெரியும்னு… இத்தன நாள்ல ஒரு நாள் கூட உன் பின்னாடி ஏன் சுத்துனேனு உனக்கு தெரியாது? நடு ராத்திரி அன்னைக்கு உன்ன தேடி வந்தப்ப நான் எதுக்காக வந்தேன்னு உனக்கு தெரியாது?
சரி இதெல்லாம் விடு, நேத்து பார்ட்டி நடந்தப்ப உன் கண்ணு நான் உங்கிட்ட பேச மாட்டேனா-னு எதுக்காக உன்ன கிராஸ் பண்ணி போனப்ப எல்லாம் என்னையே பாத்துட்டே இருந்துச்சு? இன்னைக்கு இந்த பாட்டு நான் போடப்ப எதுக்கு பதறியடிச்சு அன்னைக்கு நான் வந்து நின்ன அதே இடத்துல நீ பாத்த… ஏன் அந்த பாட்டுக்கு நீ ரியாக்ட் பண்ற?” ஆதி அடுக்கிக்கொண்டே போக மணிமேகலை முழி பிதுங்கி நின்றாள்.
“நீ… நீங்க இப்டி பேசிக்கிட்டே போனா நான் எப்படி பதில் சொல்ல முடியும்? ஒவ்வொரு கொஸ்டினா கேளுங்க” அவள் பேச்சு ஆதிக்கு உள்ளத்தையே மெல்லிசாக்கியது.
அவன் மனதை மேலும் இலகுவாக்க அவள் முகத்தில் ஒரு பக்கம் மஞ்சள் விளக்கின் ஒளி பட்டு அவள் சருமத்தின் மென்மையைக் கூறி அவன் பொறுமையைச் சோதனை செய்தது.
“சரி உனக்கு என்ன புடிக்குமா புடிக்காதா?” நேரடியாகக் கேட்டுவிட்டான் ஆதி.
“புடிக்காது” உடனே வந்தது பதில் பெண்ணிடமிருந்து. சிரிப்புடன், “அப்ப எதுக்காக எனக்காக இந்த ஜிமிக்கி போட்டுட்டு வர்ற மேகா?”
தன் பெயரை இதுவரை எவருமே அலைத்திராத விதம் அவன் நாவிலிருந்து வர உடல் சில்லிட்டது ஆனால் அதையும் வெளிக் காட்டாமல், “உங்களுக்காக எல்லாம் நான் போடல” என்றாள்.
பொய் தான்.
“ஓஓ… பால்கனில வந்து நின்னப்ப போட்ருந்த அதே டிரஸ், அதே ஹேர் ஸ்டைல் கலைஞ்சிருந்தாலும் அதை நீ மாத்தல ஆனா நீ மாடில நினைப்ப டாலடிச்ச அந்த வைர தோட மாத்திட்டு இந்த சாதாரண ஜிமிக்கி எதுக்கு போடணும்? உன் ஜிமிக்கிய ரசிக்கிற எனக்காகன்னு நான் நெனச்சுக்கவா?” எங்கிருந்து தான் இந்த சிரிப்பைக் கற்றுக்கொண்டானோ, அவன் மான் குட்டியை நொடியில் மயக்கிவிடும் அது இப்பொழுதும் தோற்கவில்லை.
“போங்க அதெலாம் பதில் சொல்ல முடியாது… நான் வீட்டுக்கு போறேன்”
கார்ட்டூனை போல் ஏதோ புலம்பிக்கொண்டே நடந்தவள் ஆதியின் குரல் கேட்டு அவனைத் திரும்பிப் பார்த்து, “ஹ்ம்ம்…” என்றாள்.
“பதில் சொல்லாமயே போற?” என்றான்.
விறுவிறுவென ஆதியை நோக்கி வந்தவள் ஒரு கை நீட்டி, “தாங்க” என்றாள் அவன் முகம் பார்க்காமல்.
அவன் குழம்பி, “என்ன தர?” என்றான் கேள்வியாக.
“நீங்க வச்சிருந்திங்கள்ல? பப்புல் லிக்யூட் தான்” தன் முன் நிற்கும் சிறு பிள்ளையைப் பார்த்து சத்தமாகச் சிரித்து விட்டான் ஆதி.
அவள் கையில் கொடுத்து, “போதுமா இல்ல இன்னொன்னு வாங்கி தரவா?”
வராத கோவத்தை இழுத்துப் பிடித்து வைத்தவள், “வேணாம் போதும். உங்ககிட்ட தூக்கி போட்ட அந்த பேப்பர்ல இருந்த என் போன் நம்பர் மனப்பாடம் பன்னலல?” முகத்தைச் சிரித்த தடையமே இல்லாமல் வைத்து ஆதி இல்லை இன்று தலையை ஆட்டினான்.
“ம்ம்ம் குட். அப்டியே நியாபகம் இருந்தாலும் மறந்துடுங்க. ஓகேவா?”
மேலும் கீழும் தலையை ஆட்டினான், “ம்ம்ம் மறந்துடுங்க… ஏனா நான் கோவமா போறேன்…” முகத்தை ஒரு வெட்டு வெட்டி நடந்தவளைப் பார்த்து மீண்டும் மீண்டும் அவனுக்குச் சிரிப்பு தான் அதிகம் வந்தது.
“ஏய் ரோலக்ஸ்…” அவள் திரும்பவில்லை.
“மான்குட்டி இங்க பாரேன்…” அவள் பின்னே நடந்து கெஞ்சினான் ஆதி.
திரும்பி நின்று அவனை பார்த்து சிணுங்கி காலை தரையில் மாறி மாறி உதைத்தவள், “நான் கோவமா இருக்கேன். அகைன் அண்ட் அகைன் பேசாதீங்க. முக்கியமா எனக்கு கால் பண்ணாதீங்க” அவள் செய்தியைப் புரிந்துகொண்டவன் அதே வற்றாத சிரிப்புடன் நின்றுவிட அவனைத் திரும்பிப் திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள் ஆதியின் மான்குட்டி.