அத்தியாயம் 22
வீட்டிற்கு வந்த பிறகுதான் அபராமிக்கும் இதில் பங்குள்ளது என சிற்பிகாவிற்கு தெரியவந்தது… பதினேழு வயது சிற்பிக்கு வீட்டிலிருக்கும் நிலைமை ஓரளவு புரிந்தது.. தந்தை இல்லாத நேரத்தில் அவ்விருவரின் கரங்கள் தான் ஓங்கியிருக்கும்… அப்படியிருக்கும் போது இந்த விஷயத்தை நான் கூறினால்.. இவ்வீட்டில் என் நிலை மேலும் மோசமாகலாம்..
எனக்கு தெரியாது என்று நினைத்திருக்கும் வரை தான்.. அவர்களின் செயல் கொஞ்சம் அடங்கியிருக்கும்… அதுவே அனைத்தும் எனக்கு தெரியுமென்றால் அவர்களிடம் ஓர் அலட்சியம் தோன்றி எந்த எல்லைக்கும் செல்வார்கள் என முடிவெடுத்தவள்.. நடந்த விஷயத்தை தனக்குள்ளே புதைத்துக்கொண்டாள்..
மறுநாள் ரூபாலியிடம் மட்டும் நடந்ததைக் கூறினாள்.. ஏய் என்னடி சொல்ற உனக்கொன்னும் ஆகலையே என அவள் கரத்தைப் பற்றி பதறியவள் ” வா இத உடனே எங்க அப்பாட்ட சொல்லலாம்.. அவர் ஏதாவது செய்வார்.. அவங்களயெல்லாம் சும்மா விடக்கூடாது… என கோபத்தில் பொறிந்தாள்..
இல்ல ரூபி.. நான் இத யாருக்கிட்டயும் சொல்ல போறதில்ல.. என்னால முடிஞ்ச வரைக்கும் அவங்ககிட்ட இருந்து ஒதுங்கியிருக்க போறேன்…
ஏண்டி.. என கோபமாய் கேட்டாள்.. இல்லடி நான் இன்னும் அந்த வீட்டுல தான் இருக்கேன்… எனக்கு தெரிஞ்சு அவங்க ரெண்டு பேரும் இதை அவ்வளவு சீக்கிரம் விடமாட்டாங்க.. என்னைய நைட்டோட நைட்டா வித்துட்டு.. எங்கப்பாக்கிட்ட நான் யார்க்கூடவோ ஓடிப்போயிட்டேன்னு சொன்னாலும்.. எங்கப்பா நம்பக்கூடியவர்.. அதான் சொல்றேன்.. எனவும் ரூபாலியும் அதனை ஆமோதித்தாள்…
அன்றிலிருந்து சொந்த வீட்டில் இருந்தாலும்.. அந்நியர் வீட்டில் இருக்கும் உணர்வு தான் சிற்பிகாவிற்கு.. முடிந்தளவு வீட்டில் உணவு உண்ண மாட்டாள்.. முக்கியமாக இரவு உணவு.. தனக்கு தேவையானதை அவளே தயாரித்துக் கொள்வாள்..
தனக்கு பாதகமில்லாத முடிவுகளை ஏற்று அவர்களின் சொல்பேச்சு நடக்க.. அபிராமியும் ராஜாங்கமும் அவள் தங்களின் கரத்தில் தான் இருக்கிறாள் என்ற இருமாப்பில் இருந்தனர்…
இரவில் கதவின் அறையை சாவிக்கொண்டு பூட்டினாலும்.. ஆழ்ந்த உறக்கம் வராது.. சிறு சத்தத்திற்கும் விழித்துக் கொள்வாள்.. ஏன் பல இரவுகள் உறக்கமென்பதே மறந்து விட்டதை வெறித்துக் கொண்டிருப்பாள்..
ஆனால் அந்நிலையிலும் அவளின் ஒரே ஆறுதல் அபய் தான்… விழி சொருகிய அரை மயக்கத்திலும்.. அவனின் உருவம் மனதில் பதிந்து போக… அதனை தன் விரலில் கொண்டு வந்து.. அபயின் ஓவியத்தை வரைந்தாள்.. தன்னுடைய துன்பம் மகிழ்ச்சி வருத்தம் என அனைத்தையும் அவனிடம் பகிர ஆரம்பித்தாள்..
சிங்கமாய் சிலிர்த்துக் கொண்டு நின்றிருந்தவனுக்கு சிம்மு மாமு என செல்லப்பெயரிட்டு.. அவனை நினைத்துக்கொண்டிருந்தவள்.. மானசீகமாய் அவனுடன் வாழ ஆரம்பித்தாள்…
முதலில் அபயின் மேல் உள்ள தன் உணர்வுகளை புரியாமல் இருந்தவள்.. அதற்க்கு பெயர் காதல் என்றரிந்தவுடன் அவள் காதல் உணர்வுகள் பொங்கிவழிந்தது.. முழுதாக ஒன்பது வருடம் தவம் போல் மானசீகமாய் அவனை மட்டும் நினைத்து வாழ்ந்து வந்தாள்.. ஒவ்வொரு நாளும் அவளுக்கு அவன் மேல் கொண்டிருந்த நேசத்தின் அளவு கூடியதே தவிர குறையவில்லை…
இவ்வளவு காதலை அபய் மேல் வைத்திருக்கும் சிற்பிகா அவனை சந்திக்கவும் முயற்சிசெய்யவில்லை.. தன்னுடைய காதலை அவனிடம் பகிரவும் மெனக்கடவில்லை.. இதுவே போதும் என நினைத்தாள்.. ஆனால் விதியின் விளையாட்டில் மறுபடியும் அவள் மானம் பறிப்போகும் நிலையில் சரியாய் அவ்விடம் வந்த அபய் அவளைக் காபற்றியதுமில்லாமல்.. தன்னையரியாமலே அவளின் காதலுக்கும் நியாயம் செய்துவிட்டான்…
********************************************
சிற்பி அவன் மடியில் படுத்துக்கொண்டே.. அனைத்தையும் கூற அபயசிம்ஹா என்ன உணர்வில் இருக்கிறான் என அவனுக்கேப் புரியவில்லை…
ஒன்பது வருடங்கள் இவள் என்னையே நினைத்துக்கொண்டிருந்தாளா என்ற எண்ணம் தோன்றிய நொடி ஆணாய் அவன் மனம் கர்வம் கொண்டது… அவள் கூறிய சம்பவம் இவனுடைய நினைவிற்கு வந்தது.. அந்த அமைச்சரிடம் ஓர் சிறுபெண் அகப்பட்டிருக்கிறாள் என பார்த்தவுடனே அவன் புரிந்துக்கொண்டான்…. அதனால் தன் அடியாட்களிடம் அவளோடு வந்தவனை இருதட்டு தட்டி மிரட்டி வைக்குமாறு கட்டளையிட்டு சென்றான்..
ஆனால் அப்பெண் தன் மனைவியென அறிந்து… அந்த அமைச்சரை தன் கையால் கொல்லவில்லை என லூசுத்தனமாக எண்ணினான்… அப்பொழுது தான் உனக்கு அவள் யாரென்றே தெரியாதே என்ற மனதின் கேள்வியை ஒதுக்கிதள்ளியவன்.. அவள் சிறுவயதில் பட்ட கஷ்டத்தையும் பயத்தையும் எண்ணி அவன் முகம் கோபத்தில் சிவந்தது.. இதற்கு காரணமான அபிராமிக்கும் ராஜாங்கத்திற்கும் கொடுக்க வேண்டிய தண்டனையை முடிவெடுத்த பிறகே அவன் மனம் சற்று அமைதியானது…
***********************************
அபய் சிற்பிகாவை மெல்ல தன் மார்பளவில் தூக்கிக்கொண்டு இனி தன்னைத் தாண்டிதான் எதுவும் அவளை நெருங்கும் என இருக்கமாய் அணைத்தான்..
பெண்ணவளுக்கோ அவளவனின் அணைப்பில் அத்தனை வருடமும் அவள் பட்ட துன்பமெல்லாம் காற்றில் இட்ட கற்பூரமாய் கரைவதையெண்ணி.. ஆச்சரியமுற்றவள்.. தன்னிரு விழிகளால் தன்னவனை விழுங்க முயன்றாள்..
அபய் அவளின் அமைதியை உணர்ந்து.. வருத்தப்படுகிறாளோ.. என அவளைப்பார்த்தவன்.. சிற்பியின் ஆளை விழுங்கும் பார்வையில் சற்று திகைத்துதான் போனான்… அதுவும் அவளின் விழிகளில் எல்லையில்லா காதல் இருக்க.. அதனில் விரும்பியே தன்னை தொலைத்தான் அபய்…
நீங்க எவ்வளவு அழகு தெரியுமா சிம்மு மாமு… என காதல் இழையோடிய குரலில் கூறியவள்.. அவன் இதழில் மென்முத்தம் வைக்க.. அபய் சிற்பிகாவின் இந்த மாற்றத்தைக் கண்டு திகைத்துப் போனான்…
அதுவும் நீங்க சிரிக்கும் போது.. என்னால உங்கள விட்டு கண்ண எடுக்கவே முடியாது.. அப்படியிருக்கும்.. அதுனால நீங்க இனிமே சும்மாக்கூட வெளில இருக்கும்போது சிரிக்காதீங்க மாமு.. என்கூட இருக்கும்போது மட்டும் சிரிங்க சரியா.. என தாடயை பிடித்து கொஞ்ச.. அவன் சிரித்தான்..
அச்சோ சிரிக்காதீங்க.. மாமு என சிணுங்கிக்கொண்டே மேலும் செல்லம் கொஞ்சினாள்…
அவளுக்கு வலி தெரியாமல் இருக்க போட்ட மயக்கமருந்து இன்னும் தெளியாத நிலையில்.. அது கொடுத்த தைரியத்தில்.. தன் மனதில் உள்ளதையெல்லாம் அவள் உளறிகொண்டிருக்க.. சிறிது நேரத்திலே அவளின் நிலை புரிந்தவன்.. மயக்கும் புன்னகையுடன் அவள் பேசுவதை வீடியோ எடுத்தான்..
சிற்பிகா பேசிகொண்டிருக்கும் போதே தூங்கிவிட.. அவளை சரியாக மெத்தையில் படுக்க வைத்தவன்.. அவளின் வரண்டிருந்த மென் இதழில் ஆழ்ந்தமுத்தம் வைத்து வெளியேறினான்…
***********************************
அந்த இரவுவேளை யாருமில்லா சாலையில் அபயின் கார் சீரிப்பாய்ந்துக் கொண்டிருக்க.. அஜய் அடிக்கடி தன்னருகே அமர்ந்திருந்த அபயை பார்த்துக்கொண்டிருந்தான்..
சிற்பிகாவின் அறையிலிருந்து புயலாய் வெளிவந்தவன்.. எனக்கொரு முடிக்க வேண்டிய வேலை இருக்கு.. நான் போயிட்டு வரேன் அதி.. சிற்பிய பார்த்துக்கோங்க என அதி ரூபி இருவரையும் பார்த்துக் கூறியவன்.. நீ என்கூட வா.. என அஜயிடம் கூறிவிட்டு வெளியே செல்ல.. அவனோ முழித்தான்..
ரூபி ” டேய் அண்ணா கூப்பிடுறாருல போ.. ”
அஜய் பாவமாக ரூபியை பார்க்க.. அவளோ அவனை வாசல் பக்கம் திருப்பிவிட்டு அதியிடம் பேச ஆரம்பிக்க.. அஜய் தன்னை நொந்தவாரு அபயை பின்தொடர்ந்தான்..
காரில் ஏறியதிலிருந்து அவனும் அபயிடம் எங்கு செல்கிறோம் என கேட்பதற்கு பயந்து.. அவன் முகத்தையே அடிக்கடி பார்க்க.. அபய் அவனைக் கண்டுகொள்ளாவில்லை…
உனக்கு இது தேவையாடா அஜய்.. மூடிக்கிட்டு உன் ரூம்ல இருந்துருக்கலாம்.. எல்லாம் அந்த ரூபாலி எருமையால வந்தது.. என மனதிற்குள் மட்டுமே அவனால் புலம்பமுடிந்தது…
கார் பெங்களூரின் மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ள அபயின் குடோனிற்கு செல்ல.. பதில் கிடைக்காது என தெரிந்தும் அஜய் மீண்டும் அபயை பார்த்தான்…
கார் நின்ற நொடி இருவர் வந்து அவன் பக்கம் கதவை திறக்க.. வேகமாய் கிழறங்கிய அபய்.. அங்கிருந்த கம்பியால் காலையில் சிற்பிகாவிற்கு பாதுகாவலாய் சென்றவர்களை அடிக்க ஆரம்பித்தான்…
சார் சாரி சார் நாங்க இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல சார்.. இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கிறோம் சார்.. என கெஞ்சினர்…
வாட்ட்.. இனி என்ன நடக்கணும் யூ பிளடி ****.. என அவர்களை திட்டித்தீர்த்து ஒருமாதம் எழுந்திருக்க முடியாதளவுக்கு அடித்து தொவைத்தவன்.. அங்கிருந்தவனை பார்க்க..
உள்ள இருக்கான் சார்.. என அவன் சொன்ன மறுநொடி அபய் அந்த அறைக்குள் நுழைந்தான்…
அங்கு காலையில் சிற்பிகாவின் கழுத்திலிருந்து தாலியை அறுக்க முற்பட்டவன்.. கையில் கட்டோடு.. கண்கள் இரண்டும் அச்சத்தில் விரிந்து.. முகத்தில் வியர்வை வழிய.. உயிர் பயத்தில் அமர்ந்திருந்தான்….
அவனை நெருங்கிய அபய்.. அவன் கைக்காயத்தில் கை வைத்து அழுத்த அவன்.. வலியில் துடித்தான்.. அய்யா விட்டுருங்கயா.. இனிமே ஜென்மத்துக்கும் இந்த தொழில் பண்ணமாட்டேன்கய்யா என கன்னடத்தில் அவன் அலறவும்.. சிறிது நேரம் கழித்தே விட்டான்…
” இங்க பாரு இப்போ நீ உயிரோட இருக்குறதுக்கு காரணம்.. என் மனைவி கார்ல விழுகாம இழுத்ததுக்கு.. அப்புறம் இது அவ கழுத்துல ரத்தம் வரவச்சதுக்கு.. என கோபத்தில் உருமியவன்.. நீ மட்டும் அவ கழுத்துல ரத்தம் வராம இழுத்துருந்தா உன் வீட்டை பணத்தால இறைச்சிருப்பேன்.. உன்னை இனி பெங்களூர் பக்கம் பார்க்கவே கூடாது.. மீறி இருந்த அதான் உனக்கு கடைசி நாள் என எச்சரித்து விட்டு சென்றான்..
அங்கு நடந்ததையெல்லாம் முகம் வெளிறி பார்த்துக்கொண்டிருந்த அஜய்.. மிரட்சியுடன் அபயை பார்த்தான்.. காரில் ஓர் வித அமைதி நிலவியது..
நீ மட்டும் ரூபாலி காதலனா இல்லன்னா.. உனக்கும் இதே கதிதான் அஜய்.. என்றதும் அவன் அபயை பார்த்து வியர்த்து வழிந்தான்..
நான் சிற்பிகா நல்லதுக்குன்னு தான் வந்தேன்.. என எச்சில் முழுங்க.. கூறினான்..
ஹ்ம்ம்ம் வந்தது தப்பில்ல.. ஆனா இந்த அபயசிம்ஹா பத்தி தெரியாம வந்தது தப்பு.. அதும் என் மனைவிகிட்ட என் கண் முன்னாடியே பிளாக் மெயில் பண்றது மாதிரி பேசுனது தப்பு.. என்ற அபயின் குரலில் இருந்த கோபத்தை உணர்ந்த அஜய்..
ஆனா நீங்கதான் நம்பலையே.. சிற்பிகா கூட சொன்னாங்க.. என்றவன் கோவிலில் அவள் கூறியதை சொல்ல.. அபயின் முகம் சிறிது இளக்கம் கொண்டது…
அதனைக் கண்டு சந்தோஷமடைந்த அஜய்.. சிற்பிகா அபய் குறித்து சொன்னது அனைத்தையும் கூறி.. அவன் கவனத்தை சிற்பியின் பக்கம் திருப்ப.. அபயும் மற்றதை மறந்து தன்னவளின் நினைவில் மூழ்கினான்..
அப்பாடா.. தப்பிச்சேன்.. நாளைக்கு முத வேலை சென்னை போறது தான்.. இனி இந்த மனுஷன் கண்ணுல பட்டோம்.. இவருக்கும் தோனும் போதெல்லாம் நம்மள வச்சு செய்ஞ்சுடுவார்.. என மனதிற்குள் புலம்பிகொண்டிருந்தான்… அஜய்.