உதய் வந்து சென்ற பிறகு பெரியவர்கள் அனைவரும் இளையவர்கள் அருகே வந்து, “தமிழ் இது உதய் தான?” என்றார் நந்தன்.
“ஆமா ப்பா” – தமிழ்
“ஆளே மாற்றிட்டான்லங்க?” உதய்யின் வாகனம் சென்ற திசையில் பார்த்து கேள்வி எழுப்பினார் ஷீலா.
“ஆள் மட்டும் இல்ல தமிழ் அம்மா, அவனும் மாறிட்டான். மனசு இறுகி போ நிக்கிறான், காயத்திரி போனதுல இருந்து. எந்த விசேஷத்துக்கு வர்றதில்ல. வீடு விட்டா ஆபீஸ், ஆபீஸ் விட்டா வீடு தான் அவனோட வாழ்க்கை” மகனின் மூலம் கேட்ட வார்த்தைகளை வைத்து கூறினார் ஆதவனின் அன்னை.
“ஆனா இவன் ரொம்ப ஓவரா பன்றான் ம்மா. ஆபீஸ் அவனோடதுனு சொல்றான்” குற்ற பத்திரிக்கை வாசித்தான் ஆதவன் அன்னையிடம் ஆதங்கம் தாங்காமல்.
“பத்தரத்துல தெளிவா இருக்குதுல ஆதவா? அப்பா கடன் வாங்கிருக்காங்க. இத இதோட விட்டுடுங்க ப்ளீஸ்” ஆதி தலை குனிந்தே அமைதியாக வினவினான்.
“அப்ப துறை எங்க ஆபீஸ் வப்பிங்க?” – ஆதவன் “ஏற்பாடு பண்ணலாம்” என்று முடித்துவிட்டான் ஆதி.
மேலும் ஆதவன் பேச வர, கெளதம் அவன் தோளில் கை போட்டு வேண்டாம் என்று தலையை ஆட்டினான்.
“நல்லது பண்ண போறோம் எத பத்தியும் யோசிக்க வேணாம் ஆதவா, ஆரமிச்சத்த அப்டியே கொண்டு போகலாம். ஆபீஸ் இல்லனா என்ன? ஒரு குடிசையை போட்டு வச்சிடலாம்” நிகழ்ந்தவையை கூட பெரியவர்கள் சகுனம் சரியில்லை என்று பேசிவிட கூடாதென்று எண்ணம் ஆதிக்கு.
“ஆதி சொல்றது சரி தான் ஆதவா. பிளான் போடுறது எல்லாம் வீட்டுலையே பண்ணிடுவோம். கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்” என்றான் தமிழும் ஆதியுடன் இணைந்து.
“என்னமோ பண்ணுங்க டா. ஆனா இவன் அவனுக்கு ரொம்ப தான் சப்போர்ட் பன்றான்” என்றான் ஆதவன் எரிச்சலாய்.
ஆதவன் தோளில் கை போட்டு கழுத்தோடு நெருக்கிய ஆதி, “அடேய் என்னடா ஆங்கிரி பேர்ட் மாதிரி இப்டி கோவ படுற. வா உனக்கு ஒரு குண்டு சோடா வாங்கி தர்றேன்”
நண்பனை நம்பாமல் பார்த்தவன், “குண்டு சோடா என்ன உங்கப்பனா விக்கிறாரு?” என்றான் இன்னும் விறைப்பாக.
எல்லாம் நடிப்பு தான் என்று உணர்த்த ஆதி, “யார் சொன்னா? நம்ம டீ கடைல இருக்கும்”
“அந்த ரோஸ் மில்க் கிடைக்கும்னு இவன் சொன்னானே அந்த கடைலயா?”
தமிழை காட்டி ஆதவன் கேட்க, “ஆமா அதே கடை தான்” என்றான் ஆதி.
“சரி பேச்சு மாற கூடாது. உன் காசு போட்டு நீ தான் வாங்கி தரணும்” – ஆதவன்
“வாங்கி தர்றேன்டா லூசு பயலே” நண்பனை ஒருவாறு சமாதானம் செய்து வைத்தான் ஆதி. உதய் செய்தது மனதிற்கு ஒரு நெருடலாகவே இருந்தாலும் அனைவரும் ஓரளவிற்கு இயல்பிற்கு திரும்பி பேசி மகிழ்வாகவே இருந்தனர். சஹானா, பவித்ராவோடு மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்த மணிமேகலை மெதுவாக கூட்டத்தில் இருந்து விலகி வந்து ஆதி இருக்கும் திசைக்கு வர,
அவளை பார்த்தவன் தமிழிடம், “சஹானாவை நானே வந்து கூட்டிட்டு போறேன் தமிழு” என்று மணிமேகலையை நோக்கி செல்ல நண்பர்களின் கேலி குரல்கள் தனக்கு பின்னால் தெளிவாக கேட்டாலும் அதை கண்டுகொள்ளாமல் சென்றான் அவளை உச்சி முதல் பாத்திரம் வரை அளந்து கொண்டிருந்தது அவன் கண்கள். வரும் பொழுது பூ வைக்காமல் வந்தவள் தலையில் இப்பொழுது ஷீலா சூடிவிட்ட மல்லி சரம் அழகாய் இருந்தது.
அவன் கண்களை பார்ப்பதை தவிர்த்தவள், “இல்ல” என்றாள் சிவந்த கன்னங்களுடன்.
அதை அழகாய் படம் பிடித்த ஆதியின் கண்கள் சுற்றிலும் தங்களை எவரேனும் பார்க்கிறார்களா என்று பார்க்க, நண்பர்கள் மூவரும் தன்னையே பார்ப்பது தெரிந்து, “டேய் அங்க பாருங்க ஏரோப்ளேன்”
மூவரும் வாழ்க்கையில் அதை பாத்திராத 90ஸ் கிட்ஸ் போல் வேகமாக வானத்தை வெறிக்க அந்த நேரத்தை உபயோகித்து வேகமாக அவளது கன்னத்தில் மென்மையாய் அவசர முத்தம் ஒன்றை வைத்தான். அவன் இதழ்களோடு இணைந்து ஒரு நொடி தீண்டி சென்ற ஆதியின் மீசையின் குறுகுறுப்பும் அடி வயிற்றில் அழகாய் ஒரு உணர்வை தந்தது. அதோடு இணைத்து முதல் முத்தம் இருவருக்குள்ளும்…
ஆனாலும் சுற்றம் பார்த்து ஆதியை முறைத்தவள், “டேய் லூசு ஆதி” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில்.
அவள் வார்த்தைகளில் வாய் விட்டு சிரித்தவன், “ஏய் என்னடி பொசுக்குன்னு மரியாதை இல்லாம பேசுற?” என்றான்.
கால்களை உதைத்து, “நான் கோவமா போறேன்” என்று வெளியில் வெளியில் நடக்க துவங்க ஆதி வேகமாக சென்று தன்னுடைய வண்டியை எடுத்து அவளை தொடர்ந்தான்.
வானத்தை மூவரும் ஆராய்ந்து ஆதியை திரும்பி பார்க்க மணிமேகலையின் முகத்தில் இருந்த வெட்கம் எதையோ கூற, “ச்சை இப்டியாடா பிலைட்ட பாக்காதவனுக மாதிரி பாப்பிங்க? அவன் சரி வாரம் ஒருக்க அதுல போய்ட்டு வர்ற நீயும் ஏன் டா… சந்தடி சாக்குல அவன் இந்நேரம் ஒரு ட்ரைனயே தயாரிச்சிருப்பான்” தன் போக்கில் தமிழையும் ஆதவனையும் திட்டு தீர்த்தான் கெளதம்.
“நீ பாத்துருக்கலாம்ல…” – ஆதவன்
“ஆஹ் இத மட்டும் வக்கணையா பேசு..” வழக்கம் போல் வீண் சண்டைக்கும் வெட்டி பேச்சுக்கும் பஞ்சமே இல்லாமல் சென்றது அவர்கள் வாக்குவாதம்.
புடவையை பிடித்து நடக்க முடியாமல் சிரமப்பட்டவளை பார்த்து சிரித்துக்கொண்டே அவள் அருகில் வண்டியை நிறுத்தி அவள் கையை பற்றினான் ஆதி. கூட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் இருந்தது ஆதிக்கு மகிழ்ச்சியாக போனது.
“ஏன் இப்டி பண்ணீங்க?” என்றாள் முறைப்புடன்.
“நான் வாங்கி குடுத்த புடவைல, அழகா குண்டுமல்லி வச்சு, கொஞ்சமா லிப்ஸ்டிக் போட்டு, ஜிமிக்கி ஆட, முகம் சிவந்து வெக்கத்தோட என்ன மொத்தமா தன்னோட அழகுல மயக்கி நிக்கிற என்னோட மேகாவ பாத்து ஒரு செகண்ட் என்னோட கண்ட்ரோல்ல லூஸ் பண்ணிட்டேன்”
அவன் ஒவ்வொரு வர்ணனையை கேட்க முடியாமல் தலையை குனிந்து நின்றவள் காதுக்கு அருகில் சென்று, “தப்பா மேகா?” உஷ்ண காற்று காதில் படர வேகமாக தலையை தூக்கி அவன் முகத்தில் தெரிந்த உரிமையான காதலை பார்த்தவளுக்கு மேலும் வெட்கம் பிடிங்கி தின்றது.
கூச்சத்துடன் ஒரு அடி பின் வைத்தவள், அவன் வடியின் ஹாண்ட்பாரில் கை வைத்து, “வீட்டுக்கு போகவா?” என்றாள் மீண்டும்.
அவளுடைய இந்த கள்ளம் இல்லாத அழகிற்கு தானே அடிமை அவன். “வீட்டுக்கு போகவா-னு கேக்குறியே தவற, வீட்டுக்கு வருவான்னு கேக்க மாட்டிக்கிற?” – ஆதி
“நீங்களும் கூப்பிடவே இல்ல”
அவனை குற்றம் சாட்டியவள் பிறகு வேகமாக சிரித்த முகத்துடன், “சஹானா கிட்ட பேசுனேன். எனக்கு ரொம்ப புடிச்சிடுச்சு. அவங்க க்யூட் தெரியுமா? நான் என்ன பேசுனாலும் சிரிக்கிறாங்க… அது தான் அவங்களுக்கு ஒரு சாக்லேட் வாங்கி குடுக்கணும்-னு இருக்கேன். அவங்க கட்டிருக்குற ஸாரீயும் நீங்க எடுத்து குடுத்துன்னு சொன்னாங்க. அழகா இருந்துச்சு. ஆமா ஆதவன் அண்ணா ஏன் அவங்கள அப்டி பாக்குறாங்க?”
வழக்கம் போல் அவள் பேசுவதை ரசித்தவன், “இது கூட தெரியல? நீ எல்லாம் என்ன லவ் பன்றியோ?” என்றான்.
விழி விரித்து ஆச்சிரியதுடன், “லவ் பண்றங்களா?” ஆதி ஆமாம் என்றான், “ஆனா பேச்ச மாத்துறது எப்படினு உன்கிட்ட தான் கத்துக்கணும்”
அசடு வழிந்தவள் பிறகு ஏதோ நினைவில், “ஆமா ஆபீஸ் இல்லாதது உங்களுக்கு கஷ்டமா இல்லையா? அப்பா ஆபீஸ்ல தான் உங்க ஆபீஸ் இருக்கணும்னு ஆசையா சொன்னிங்கள்ல?”
தோளை குலுக்கியவன், “பாத்துக்கலாம் ரோலக்ஸ். எல்லாத்துக்கும் ஒரு வழி கிடைக்காமலா போய்டும்?” துளியும் வருத்தம் அவன் குரலில் இல்லை.
“ஆமா அது என்ன உன் மாமனை பாத்ததும் ஸ்ப்ரிங் பொம்மை மாதிரி அந்த குதி குதிச்ச? என்ன பாத்து என்னைக்காவது இவ்ளோ சந்தோச பட்ருபியா?”
மாமனை பற்றி பேசியதும் மீண்டும் அந்த சிறிய முகத்தில் ஆனந்தம் தொற்றிக்கொண்டது, “என் மாமா வந்தத பாத்தாங்க தான? ஒரு கை பாக்கெட்ல விட்டு, வைட் ஷர்ட்ல, ஸ்லீவ்ஸ் மடிச்சுவிட்டு, காதுல ஆடுன அந்த முடிய ஒரு தடவ ஸ்டைலா அப்டி சிலுப்பி விட்டாங்க பாருங்க… அவ்ளோ தான் டோட்டல் பிளாட். செம்ம ஹாண்ஸம் பிளஸ் ஸ்வீட். நீங்க அவ்ளோ ஹாண்ஸம் எல்லாம் இல்ல. சோ உங்கள நான் மாமா மாதிரி எல்லாம் சைட் அடிக்க மாட்டேன்” கறாராய் கூறியவளை பார்த்து சிரித்தான். தான் நண்பனை பார்த்து ரசித்ததை அவள் கூறியதும் ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை அவனுக்கு.
“எல்லாத்துக்கும் சேத்து கல்யாணம் ஆனதும் எப்படி வசூல் பண்ணிக்கனுமோ அப்டி பண்ணிறேன்” விஷமமாய் கூற பெண்ணுக்கு மேலும் வெட்கமே.
வெட்கத்தை நிறுத்தி அவனை மணிமேகலை பார்க்க, அவனோ அதே தெருவில் ஒரு பெண் நடந்து செல்வதை கழுத்தை திருப்பி பார்த்துக்கொண்டிருந்தான். பருவ வயதில் வந்த பழக்கம் சட்டென நிறுத்த முடியவில்லை… தனக்கான ஒரு பெண் வந்தது கூட ஒரு நொடி மறந்து தான் போனான் ஆண்.
அட்டகாசமாய் முடிந்தமட்டும் அந்த பெண்ணை பார்த்த சந்தோஷத்தில் சிரித்த முகத்தோடு ஆதி திரும்ப, தன்னுடைய கள்ள பார்வை தன்னவளுக்கு புரிந்து அவள் முறைக்க அவளை சமாளிக்க, “பொண்ணு பாக்க அழகா, மூக்குத்தி எல்லாம் போட்டு அப்டியே கிராமத்து பொண்ணு மாதிரி இருந்துச்சா… அது தான் லைட்டா பாத்தேன். தப்பில்லையே… எனக்காக நீயும் அதே மாதிரி வெள்ளை கலர் கல் வச்ச மூக்குத்தி குத்தேன்…”
பொறாமை எழ தான் செய்தது ஆனால் அடுத்து அவன் கேட்ட ஆசையில் அந்த பால் மனம் அவன் பார்வையை கூட மறந்தது.
“அப்பாகிட்ட கேட்டு குத்துறேன்…” அப்பொழுதும் தந்தையின் வசமே சென்றது மேகலையின் எண்ணங்கள்.
அதை கடுப்புடன் சமாளிக்க, “வா மேகா, டைம் ஆச்சு, சஹானாவை வெயிட் பண்ணுவா” வண்டியில் ஏற கூறினான்.
“ம்ம்ஹ்ம்ம் நான் கேப் புக் பண்ணி போய்க்கிறேன் நீங்க சஹானாவை பாத்துக்கோங்க” – யாழினி
“ரொம்ப தான் நல்ல எண்ணம். அதெல்லாம் நான் பாத்துக்குறேன் நீ இப்ப வா” – ஆதி
“ஆதி…” உயிர் கொடுத்த அவன் வண்டியின் சாவியை மீண்டும் அணைத்தாள்.
அவளை திரும்பி பார்த்தவன், “என் கூட வர்றதுக்கு எதுக்கு உனக்கு இவ்ளோ பயம்” – ஆதி
“பயம் எல்லாம் இல்ல” – யாழினி
“வேற என்ன?” – ஆதி
“உங்க கூட பைக்ல வர கூச்சமா இருக்கு” அவள் பதிலில் சிரிப்பு வர, “என் கூட வர எதுக்கு கூச்சம்? இதுக்கு முன்னாடி என் கூட இதே பைக்ல நீ வந்தது இல்லையா?” – ஆதி
“அப்ப வந்தது வேற, இப்ப வர்றது வேற ஆதி” காலை உதைத்து அடம் பிடித்தாள்.
அவள் நாணத்தை புரிந்தவன், “ஏய் இவ்ளோ அழகா இருக்காத ரோலக்ஸ், தூக்கி கைக்குள்ளையே வச்சுக்கணும் போல ஆசை வருது. ஒழுங்கா வந்துடு அமைதியா வீட்டுல விட்டுட்டு வந்துடுவேன் எதுவும் பண்ண மாட்டேன். சரியா? ப்ளீஸ் மேகா”
அவன் கெஞ்சல் மொழிகளில் இறங்கி அவன் வாகனத்தில் சென்றவளை சிறிதும் சங்கடப்படுத்தாமல் வீட்டின் பக்கத்து தெருவில் நிறுத்தப்போக, வேகமாக இறங்கி ஆதி சுதாரிக்கும் முன் அவன் கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தத்தை வைத்துவிட்டு ஓடிவிட்டாள்.
நடக்கவே சிரமப்பட்ட அவன் மான்குட்டி கடினப்பட்டு ஓடுவதை பார்த்தவன், “துரத்த மாட்டேன் மான்குட்டி, மெதுவா போ டீ” வேகத்தை குறைத்து அவனை பார்த்து அதே சிரிப்போடு விடைபெற்றாள் மணிமேகலை.
அலுவலகத்தை கைப்பற்றினாலும் தன்னுடைய முன்னேற்றத்தின் ஆரம்பத்தில் நண்பன் வந்தது, வாழ்க்கை முழுதும் துணையாய் வர போகும் சரி பாதியின் ஆசை துணை, ஆதவனின் பெற்றோரின் பார்வை சகோதரி மீது படிந்தது என ஒரு நாளில் ஏதோ வானத்தில் பறக்கும் எண்ணம் ஆதிக்கு அந்த நாளை அழகாய் முடித்து வைத்தது.