“சார் ப்ளீஸ் சார்… ஏதாவது உதவி பண்ணுங்க… எங்களுக்கு என்ன பண்றதுனே தெரியல”
நிதானமாக மூச்சு விட்டு, “உதவி எல்லாம் என்னால பண்ண முடியாது மா. இரக்கப்பட்டு ஒவ்வொருத்தருக்கா பாத்தா நான் எத்தனை பேருக்கு உதவி பண்ணிட்டே இருக்க முடியும்?” – போலீஸ்
“சார் ப்ளீஸ் சார்…” யாழினி மீண்டும் மீண்டும் கெஞ்சினாள்.
ஒரு நிமிடம் யோசித்தவர் உள்ளே எட்டி பார்த்தார், இன்ஸ்பெக்டர் அங்கே தான் அமர்ந்திருந்தார்.
“இன்ஸ்பெக்டர் கிட்ட பேசி, உன் அப்பா கிட்ட பேச ஏற்பாடு பண்றேன், என்ன நடந்துச்சுனு தெளிவா கேட்டுட்டு வேற ஏற்பாடு பண்ணுங்க” அதுவே போதுமானதாக இருக்க நன்றியோடு கண்ணீரை துடைத்து சற்று ஒதுங்கி நின்றனர் இருவரும்.
சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதியில் இருந்த அந்த காவல் நிலையில் குற்றங்களுக்கும் கூட்டத்திற்கும் குறைவில்லாமல் திருவிழாவை போல ஜெகஜோதியாக மதிய வேளையிலும் காட்சியளித்தது.
எங்கு திரும்பினாலும் க்ரோதமும் ஆத்திரமும் மட்டுமே இருந்தது. சிலரின் பார்வை தங்கள் மீது மோகமாய் படிவத்தை கூட உணர்ந்த யாழினி சகோதரியை தன்னோடு ஒட்டி நிறுத்தி தன்னுடைய முந்தானையை தோளோடு எடுத்து போர்த்தினாள்.
“அம்மாக்கு போன் பண்ணு குழல்” சகோதரிக்கு ஆணையிட்டு சுவற்றை வெறித்து பார்த்து அமர்ந்தவள் காதுகளில் சுற்றி கேட்ட சலசலப்பும், காவலர்களின் அடியை தாங்காது கதறிய கைதிகளின் சத்தமும் மனதை போட்டு அழுத்தமாய் பிசைந்தது.
சிறிது நேரத்திற்கு முன்னர் உதய்யின் கைகளில் கிடைத்த அமைதியும் பாதுகாப்பும் வேண்டும் என்று மனம் ஏங்கியது.
அவனின் உதவியை நாடலாமா? என்ற எண்ணம் அப்பொழுது தான் வர கைபேசியை எடுத்து அவனுடைய எண்ணிற்கு அழைத்தாள் ஒரு உரிமையுடன். ஆனால் அவள் நேரம் அவன் எண் நாட் ரீச்சபில் என்ற செய்தியை தந்தது.
உடனே ஜெயன் எண்ணிற்கு அழைத்து கேட்க, “முக்கியமான வேலை-னு நீ போன ஒடனே சார் மும்பை கெளம்பிட்டாரு யாழினி. கால் பண்ணப்ப கூட எடுக்கல” என்ற தகவலை கேட்டது யாழினிக்கு இருந்த யானை பலம் ஒரே நொடியில் வடிந்தது.
எதுவும் பேசாமல் இணைப்பை துண்டித்து அமர்த்தவளை அந்த கான்ஸ்டபில் அழைத்தார், “லெப்ட் சைட்ல இருக்க லாக்கர்ல உங்க அப்பா இருக்காரு வேகமா பேசிட்டு வாங்க” என்கவும் நடுங்கிய கால்களோடு மனதில் பயத்தோடும் உள்ளே சென்றவர்களை அங்கிருந்த சிலர் விசித்திரமாக தான் பார்த்தனர்.
“க்கா..” சகோதரியின் நடுங்கிய குரலில் தன்னை திடப்படுத்தி தன்னோடு நெருங்கி நிறுத்திய யாழினி, அந்த காவல் அதிகாரி கூறிய செல்லிற்கு முன்னாள் வந்து பாத்தா பொழுது இரு ஆண்கள் சட்டை, இல்லாமல் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து தங்களுக்குள்ளே பேசி கொண்டிருக்க பெண்கள் இருவரையும் பார்த்த ஒருவன் கண் சிமிட்டி சிரிக்க வேகமாக சகோதரியை தனக்கு பின்னால் நிறுத்தினாள் அவர்களை கண்டுகொள்ளாமல்.
“அப்பா…” பயத்தை வெளிக்காட்டாமல் தெளிவாக வந்த குரலுக்கு எந்த பதிலும் கிடைக்காமல் போக, பெண்களை பார்த்து கண்ணடித்தவன் சுவற்றின் பக்கம் திரும்பி,
“யோவ் உன் குட்டிகளா பாரு?” அவன் பேச்சை கேட்ட யாழினிக்கு தங்களை இந்த இடத்தில் நிறுத்திய தந்தையின் மேல் கட்டுக்கடங்காத கோவம்.
அதையும் தாண்டி, சகோதரியை தனியாக விட்டு சென்ற அன்னை மேல் அளவுக்கு அடங்காத ஆத்திரம் தான் வந்தது. சில நொடிகளில் நடக்க சிரமப்பட்டு அவள் தந்தை நொண்டி நொண்டி வர மகள்களை பார்த்ததும் கலங்கிய விழிகளுடன் நின்றவர் மேல் சிறிய இரக்கம் தோன்றியது, இப்பொழுதாவது பிள்ளைகளை பற்றிய கவலை அவர் கண்ணில் தெரிகின்றது என.
“பாத்தியா யாழினி, உன் அப்பாவை இந்த நிலமைல வந்து நிறுத்திருக்காங்க-னு. கொஞ்சம் கூட மனுஷ தன்மையே இல்லாத மனுசங்க. காசுக்காக தான் பண்ணுறானுக படுபாவி பயலுக… அப்பாவை எவ்ளோ காசு காட்டினாலும் வெளிய எடுத்துட்டு மா… உள்ள இருக்க முடியல”
தன் மேல் குற்றம் சுமத்திய மனிதர்களை வஞ்சித்தவர் அந்த நிலையிலும் தன்னை பற்றியே யோசிக்க, தந்தை மீது வெறுப்பு மட்டுமே வந்தது.
தந்தையின் வலியை பொறுக்க முடியாத குழலினி, “அப்பா…” வேதனையுடன் சகோதரி பின்னிருந்து தந்தையை நோக்கி செல்ல, அவள் கையை பிடித்து மீண்டும் தன் பின்னே நிறுத்தினாள்.
சரியாக அந்த நேரம் அவர்கள் அன்னையும் வந்துவிட, கணவனை காயங்களுடன் பார்த்த வேதனையில், “என்னங்க…” கேவலோடு கணவன் கையை கம்பிகளின் இடையில் பற்றினார்.
சுயநல மனதோடு இருக்கும் மனிதரை பார்த்து முகத்தில் எரிச்சல் கூடி அன்னையை அவர் கையை விட்டு பிரித்தவள், “நீங்க தான் கொலை பண்ணிங்களா?” என்றாள் இயந்திரமாய்.
“என்ன யாழினி கேள்வி கேக்குற? அப்பா மேல உனக்கு நம்பிக்கை இல்லையா… பாரு மனுஷன் எப்படி அடி வாங்கிருக்கார்-னு… ஐயோ வலிக்குதாங்க? அந்த கவுன்சிலர் வேற கைய விரிச்சிட்டான்… இறந்தது ரொம்ப பெரிய ஆள்-னு” தன்னை கூட அன்னை இவ்வளவு பாதுகாத்ததில்லை.
“அப்பா அப்டி பண்ணிருக்க மாட்டாங்க க்கா”
“நீங்க ரெண்டு பேரும் இப்ப அமைதியா இருக்க போறிங்களா இல்லையா?”
பற்களை கடித்து கேட்டவளை பார்த்து இருவரும் அமைதியாகிவிட, “சொல்லுங்க நீங்க கொலை பண்ணிங்களா?”
யாழினியின் கண்களை தவிர்த்தவர், “எப்பயும் வழக்கமா போற பார் ஏதோ பிரச்சனை-னு வேற பார் போனேன் யாழினி ம்மா… அங்க போய் நா அமைதியா தான் இருந்தேன்… அவனுங்க தான் சண்டைக்கு வந்து அது இது-னு பேசி பிரச்சனையா பெருசாக்குணங்க.
அது தான் கோவத்துல கைல இருந்த ஒரு பாட்டில் எடுத்து அடிச்சிட்டேன்” அவர் செயலில் அதிர்ச்சியான அவள் அன்னை ஏதோ பேச வர, யாழினி ஒரே பார்வையில் அவரை அடக்கினாள்.
“ஆனா ஒரே ஒரு அடி தான் அடிச்சேன்… அதுக்கு அப்றம் சுத்தி நெறைய பேர் வந்தனால பயத்துல ஓடி வந்துட்டேன் யாழினி… கண்டிப்பா கொல்லணும்னு நான் எதுவுமே பண்ணல”
கண்ணீரும் நடிப்புமாய் பேசியவரையும் அன்னையையும் பார்த்து, “போதுமா? கேட்டாச்சுல? உன் புருஷன் தான் கொலை பண்ணிருக்காரு. கடை மூடிருந்தா வீட்டுக்கு வர வேண்டியது தான? ஏன் அந்த கருமம் இல்லனா செத்தா போயிடுவீங்க?”
ஏதோ ஒரு உணர்ச்சியில் சத்தமாக பேசியவன் பிறகு நிதானித்து, “பத்து பதினஞ்சு வருஷம் ஜெயில்ல இருந்து களி திங்கட்டும்” சகோதரி, அன்னையின் கெஞ்சல் மொழிகள் எதுவும் காதில் விழ வில்லை.
விறு விறுவென இல்லம் நோக்கி நடந்தவள் வீட்டிற்கு வந்து குளித்து உடை மாற்றி வந்த சமயம் அழுது புலம்பியவாறே அன்னையும் சகோதரியும் இல்லத்தில் நுழைந்தனர். மகளை பார்த்தவுடன் அவள் கையை பிடித்து, “அம்மாக்காக அப்பாவை வெளிய கூட்டிட்டு வா யாழினி” இறைஞ்சினார்.
“யாருக்காகவும் அவரை வெளிய கூட்டிட்டு வர மாட்டேன். அனுபவிக்கட்டும், தண்டனையை அனுபவிக்கட்டும் அப்டியாவது திருந்துறாரா பாக்கலாம்” – யாழினி
“என்னடி பேசுற? அவரு உன்ன பெத்தவரு. அந்த நன்றி உனக்கு கொஞ்சமாவது இருக்கா?”
அன்னையை தொடர்ந்து, தங்கையும், “அப்பா அடிச்சாரு தான் ஆனா அதுனால அவர் இறந்துருக்க மாட்டாங்கன்னு அப்பா கண்டிப்பா சொல்றாங்க க்கா”
“எல்லா பிரச்சனையும் சரியானதும் குடி பழக்கத்தை விடுறேனும் தான் சொன்னாரு. இப்ப தான் எல்லாமே முடிஞ்சதே. காப்பாத்துனாரா அவரோட வார்த்தைய?” – யாழினி
“விட முயற்சி பன்றாரு யாழினி… ஏதோ ஒரு நாள் ஆசையா இருக்கு-னு சொல்லி என்கிட்டே தான் கேட்டுட்டு போனாரு” கணவனை எந்த நிலையிலும் விட்டு கொடுக்க மனம் வரவில்லை.
“நீ தான் மா எல்லாத்துக்குமே மூல காரணம். அவர் என்ன பண்ணாலும் அதுக்கு ஒத்து ஊதி ஊதி இன்னைக்கு கொலை பண்ற அளவுக்கு வந்து நிக்கிறாரு. ரெண்டு பொம்பள புள்ளைய வச்சிருக்கோம் அவங்க வாழ்க்கைக்கு என்ன தேவை? அவங்களுக்கு ஏதாவது பிரச்சனையா? பாதுகாப்பா இருக்காங்களான்னு ஒரு தகப்பனா ஒரு நாள் உன் புருஷன் பாத்துருப்பாரா?
அவருக்கு தேவ குடிக்க பணம். அதுக்கு இந்த முட்டாள் வேலைக்கு போவா, வர்ற சம்பளத்துல ஆயிரம் ரெண்டாயிரம்-னு அதுல அவளுக்கு தேவையானதை வாங்கிக்குவா. நீ அந்த ஆளுக்காக ஊர் எல்லாம் கடன் வாங்கி குடிக்க அனுப்பி விடுவ பத்தாததுக்கு என்கிட்டே இருந்தும் கண்ண கசக்கி இருக்குற எல்லாத்தையும் வாங்கிக்கோ. உங்களுக்கு எல்லாம் உங்களோட சந்தோசம், ஆசை தான் முக்கியம். அதுக்கு நான் பலி ஆடு?” – யாழினி
கண்ணீர் வழிய, “நல்லா தான் பேசுறடி” என்றார் அவள் அன்னை.
“ஆமா மா இது தான் என்னோட முடிவு. உனக்கு வேணும்னா நீ உன் புருஷன் பின்னாடி போ. எனக்கு நீயும் வேணாம் அந்த ஆளும் வேணாம்” ஒரேடியாக அன்னையை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாள் யாழினி.
“சம்பாதிக்க ஆரமிச்சிட்டோம்ன்ற திமிரு வந்துடுச்சு வேற ஒண்ணுமில்ல. அது தான் பெத்தவளும் வேணாம் மத்தவங்களுக்கு வேணாம்-னு ஆங்காரத்துல ஆடுற” – யாழினி அன்னை
“நான் பண்றது மட்டும் தான் உனக்கு தெரியாதா மா? வயசு பிள்ளைங்க நமக்காக கண்ட கண்ட இடத்துக்கு வந்து கஷ்டப்படுத்துகளே-னு உன் புருசனுக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை…” – யாழினி
“என்ன தான் அவர் பொறுப்பு இல்லாம இருந்தாலும் நம்மள ஒருத்தனும் சீண்டாம இருக்குறதுக்கு காரணம் ஆம்பள-னு அந்த மனுஷன் நமக்கு துணையா இருக்குறது தான். அத முதல புரிஞ்சுக்கோ”
“பாதுகாப்பா? அவர் கண் முன்னாடியே இன்னைக்கு ஒருத்தன் எங்களை குட்டி-னு சொல்றான், கண் அடிக்கிறான். எங்களுக்கு பாதுகாப்பு குடுக்குற மனுஷன் தான் எதுவும் பேசாம அமைதியா இருந்தாரா? அந்த ஆள அடிச்சிட்டாங்களாம், அந்த இடத்துல இருக்க முடியலயாம். எந்த அப்பனாவது இப்டி யோசிப்பானா? சுயநல வாதி” யாழினி கன்னத்தில் பளாரென அன்னையின் கை வந்து இறங்க, கோவம் எல்லாம் கண்ணீராய் மாறியது அவளுக்கு.
“மரியாதையா பேசுடி. உன் அப்பா வீட்டுக்கு வரணும் யாழினி. தப்பு அவர் மேல, இருந்தாலும் சரி இல்லனாலும் சரி. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு போய்டுவிங்க நான் காலம் எல்லாம் உங்கள நம்பி இருக்கணுமா?”
“ஏன் மா, நாங்க உன்ன பாத்துக்க மாட்டோம்… ஆனா டெய்லி குடிச்சிட்டு சண்டை போடுற உன் புருஷன் உன்ன கடைசி காலத்துல நல்லா பாத்துக்குவாரு அப்டி தான?” குடும்பத்திற்காக சிறு சிறு ஆசைகளை கூட துறந்து அன்னையின் முகத்தில் சிரிப்பை மட்டுமே பார்க்க துடித்த இதயத்திற்கு கிடைத்த பரிசை எண்ணி உடைந்தது யாழினியின் மனம்.
மகளின் வேதனையை அவள் குரலிலே உணர்ந்தவர் தான் அடித்த யாழினியின் கன்னத்தை வருடி, “அம்மா சொல்றத புரிஞ்சுக்கோ யாழினி. உன் அப்பா மாதிரி பொறுப்பானவர் பாக்க முடியாது. எறும்பு மாதிரி நிக்காம சுறுசுறுப்பா வேலை பாக்குற மனுஷன் தான் அவரும்.
நீங்க ஸ்கூல்-கு போறதுக்கு கூட நீங்க வீடு வந்துட்டீங்க-னு தெரிஞ்சா தான் நிம்மதியா இருப்பாரு. தொழில் அவரை முடக்கி போட்டு இப்டி மாத்திடுச்சு. கல்யாணம் ஆன இத்தனை வருஷம் என்ன கூட கை நீட்டி அடிக்காதவர், கண்டிப்பா கொலை பண்ற அளவுக்கு அடிச்சிருக்க மாட்டாரு டா. அம்மாக்காக தயவு செஞ்சு ஏதாவது முயற்சி பண்ணு யாழினி”
“நான் முன்னாடி ஒர்க் பண்ண பேக்கரி ஓனர் தம்பி லாயர் தான் மா… நான் அவர்கிட்ட பேசி பாக்குறேன்” குழலினி அன்னையிடம் கூற,
“நானே போறேன். ஆனா இதுக்கு அப்றம் அவர் குடிக்கவே கூடாது-னு எனக்கு சத்தியம் பண்ணி தாங்க” கண்ணீரோடு அன்னையிடம் யாழினி கை நீட்ட யோசிக்காமல் சத்தியம் செய்தவர் தானும் மகளுடன் வருவதாக கூற, தானே சென்று வருவதாக கூறி யாழினி வீட்டை விட்டு நடந்தாள்.
எப்படியேனும் அன்னைக்காகவும், தங்கைக்காகவும் ஆவது ஒரு வக்கீலை பிடித்து தந்தையை வெளியில் கொண்டு விட வேண்டும் என்ற உறுதியோடு சாலையில் நடக்க துவங்கியவள், பஸ் ஸ்டாப்பில் நின்று இணையத்தில் வக்கீல் முகவரியை தேடினாள். மணி ஆரை தாண்டி இருந்த சமயம் அது. பள்ளி, கல்லூரி, வேலைக்கு சென்று திரும்பியவர்கள் என அந்த மொத்த பேருந்து நிறுத்தமும் மக்கள் தொகையால் நிரம்பி வழிந்தது.
நிற்கவே இடம் இல்லாத பொழுது அவளுக்கு அருகில் வந்த ஒருவன், “யாழினி…” என்றான்.
தலையை தூக்கி பார்த்தவள் அறிமுகம் இல்லாத அவனிடம் கேள்வியாய் பார்வை கொடுக்க, “சார் உங்கள வர சொன்னாரு” என்றான் கைகளை சற்று தள்ளி நிறுத்தியிருந்த வாகனத்தை காட்டி. கண்கள் அந்த வாகனத்தை ஆராய்ந்தும் அந்த மனிதனை பார்வையால் எரித்தவள் பேச்சை தவிர்த்து அமைதியாக நிற்க மேலும் அவன், “எமெர்ஜென்சி” என்றான்.
“தயவு செஞ்சு போய்டுங்க. அசிங்கமா ஏதாவது சொல்லிட போறேன் அந்த ஆள” இருந்த கோவம் அந்த வாகனத்தை பார்த்ததும் பன்மடங்கு அதிகமானது.
“உங்க அப்பா பண்ண கொலைய பத்தி பேசலாமா?” நக்கலாக அவன் கேட்க, நடுக்கத்துடன் அந்த காரை நோக்கி யாழினியின் கால்கள் தானாய் சென்றது.
வாகனத்தின் அருகில் வந்ததும் ஈஸ்வரனை பார்த்தவள் விழிகள் கலங்கி போக, அதற்காகவே காத்திருந்தவர், “என்னடி என்னமோ அசிங்கமா பேசுவேன்னு சொன்ன? இப்ப பேசேன். எல்லாம் அந்த பரதேசி குடுக்குற இடம், கண்ட கண்ட நாய் எல்லாம் என்ன பேசுது. உன் அப்பன் அஞ்சே நிமிசத்துல உன் வீட்டுல தலை இல்லாத முண்டமா கிடப்பான்”
“உதய் கிட்ட சொல்லுவேன். உங்கள அவரு சும்மா விட மாட்டாரு” என்றாள் கண்ணீர் மேலும் மேலும் பெறுக.
“சொல்லு எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனா அடுத்த நிமிஷம் உன் தங்கச்சி அடையாளமே தெரியாத அளவுக்கு எங்கையாவது இருப்பா” மேலும் மிரட்டினார் ஈஸ்வரன்.
“உங்களால அப்டி எல்… எல்லாம் பண்ண முடியாது…” அந்த மனிதர் கூறியதை நினைத்து பார்த்தவளுக்கு உயிரே பறிப்போனது.
“செய்யாத கொலைய உன் அப்பன் தான் செஞ்சான்னு சொல்லி லாக்கர்ல ஒக்கார வச்சிருக்க எனக்கு, ஒரு பொட்டாசிய தூக்க முடியாதுனு சவால் விட்டு சொல்றியா?” பணம், பதவி தந்த மோகத்தில் வார்த்தைகளை அள்ளி வீசினார், மனதில் சிறு ஈரம் கூட இல்லாமல். இப்பொழுது அந்த மனிதரின் வலையில் தான் மொத்தமாக சிக்கியிருப்பது தெரிந்தது.
வீட்டில் இருவரின் பிடிவாதம், இங்கு இந்த மனிதரின் தந்திர ஆட்டம். வேறு வழியே இல்லாமல், “நான் என்ன பண்ணனும்?” என்றாள் உள்ளே சென்ற குரலில்.
“இனி உதய் பக்கமே நீ வர கூடாது. அவன் உன்ன தேடி வந்தாலும் இனி அவன் உன் பக்கமே வராத மாதிரி நடந்துக்கணும் நீ”
உயிருக்கு ஒரே ஆறுதலாக இருந்த காதலையும் பறி கொடுக்க வேண்டுமா? தனக்கான ஒரு வாழ்க்கையை இனி தான் வாழ போவதே இல்லையா என்ற கேள்விகளும், தன்னையே வாழ்க்கையாய் எண்ணி கைகளில் அள்ளிய உதய்யின் தொடுகையும் யாழினியின் உயிரை வதைக்க, சுயநலத்துடன் குடும்பத்திற்காக அந்த பெரிய மனிதனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டாள்.
“வர மாட்டேன் இனி அவர் வாழ்க்கைல”
தெளிவாக ஈஸ்வரன் காதில் அவள் வார்த்தைகள் விழ, வெற்றித் தாண்டவமாடிய இதழ்களுக்கிடையில், ‘ஒன்னு அவுட். இனி அந்த ஆதி கேசவன மட்டும் தட்டி விட்டா… உதய் காலி’ என்ற வாசகம் நிம்மதியாய் ரீங்காரமிட்டது வஞ்சகனின் மனதில்.
*****************
காலை எழுந்து பரபரப்பாக சகோதரியை கிளப்பியவன் கால்களில் இருந்த சக்கரம் தந்தையின் அலுவலகத்தில் தான் வந்து நின்றது. அந்த கட்டிடத்தை பார்த்ததுமே சஹானாவின் கண்கள் கலங்க, ஆதியை திரும்பி பார்த்தாள்.
சகோதரியின் எதிர்வினையை அவன் எண்ணியபடியே இருக்க அணைத்து தடைகளும் நீங்கி பூட்டிக்கிடந்த அலுவலகத்தை திறந்து வைத்து நேற்றே முற்றிலும் சுத்தம் செய்து வைத்திருந்தான். இன்று பூமி பூஜை போட்டு அடுத்த கட்ட வேலையை துவங்க போகிறான் உதய். அதற்காக தான் நண்பர்களின் வீட்டினர் அனைவரையும் அழைத்துளான். அனைவரும் வரும் முன் தான் வர வேண்டும் என்று சகோதரியை இழுத்து வந்துவிட்டான்.
“உள்ள போகவா ண்ணா?”
ஆசையாய் சகோதரி கேட்க, “போ டா இது உன்னோட ஆபீஸ்” என்றான் மகிழ்ச்சியாக.
நான்கு படிகள் ஏறி சென்றாள் ஒரு பெரிய போர்டிகோ நான்கு தூண்களை தாங்கி நின்றது. அதை அடுத்து இங்கிலாந்தில் இருக்கும் கட்டிடங்களை போலவே முழுதும் கருங்கல்லினால் ஆனா சுவர்கள் மதிலாய் மாறி கம்பீரமாய் காட்சியளிக்கும். நிலைக்கதவை தாண்டி வலது புறம் பெரிய சிட்அவுட் ஒன்றும், அதை தாண்டி பெரிய வரவேற்பறை போன்ற அமைப்பில் சில மேஜைகளும் இருக்கைகளும் அடுக்கியிருந்தன.
அந்த வரவேற்பறையில் இருந்து ஒரு கதவு தென்பட, அதை திறந்து பார்க்கும் பொழுதே அந்த கதவில் இருந்த ஆபீஸ் ரூம் என்ற எழுத்து அதன் பயனை கூற, தந்தையின் நினைவுகள் படங்களாக கண் முன்னாள் வந்து போனது. உள்ளே சென்றதும் ஒரு மேஜை பெரியதாகவும் அதை தாண்டி இன்னொன்று சற்று உயரமாக கட்டிடங்களுக்கு பிளான் போட என இருந்திருக்கும் என்று சஹானாவால் புரிந்து கொள்ள முடிந்தது.
அந்த கருங்கல் சுவற்றில் ஆணிகள் பார்ப்பது அரிதாக இருக்க பல அலமாரிகளில் பல வகையான கட்டிடங்களின் மாதிரிகள் சிறு சிறு மர துண்டுகளால் வடிவமைக்கப்பட்டிருந்தது. அனைத்தும் தந்தையின் கை வண்ணம் தான். சிறு வயதில் அவருக்கு உதவுவதாக கூறி அந்த மர துண்டுகளை ஒட்டுவதற்கு பெவிகால் பல பொட்டலங்கள் வாங்கி வந்தது உண்டு. கண்களில் கண்ணீருடன் அவள் கைகள் அதை வருட இதழ்களில் வலி, இன்பம் என கலவையாய் சிரிப்பு வந்தது.
மீண்டும் மேஜை இருந்த இடத்திற்கு சென்றவள் அந்த மேஜையை ஆசையாய் வருடினாள். எத்தனை ஆசை இந்த அலுவலகத்திற்கு மீண்டும் வர… கண்ணீரை துடைத்து ஆசையாய் மொத்த இடத்தையும் பார்த்தவள் திருப்தியாய் வெளியில் வர தமிழ், கெளதம் வீட்டினர் வந்திருந்தனர்.
பூஜைக்கு தேவையான அனைத்தையும் சரி பார்த்துக்கொண்டிருந்த ஆதி சகோதரியை பார்த்து புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்க முகம் முழுதும் புன்னகையை பார்த்ததும் தான் ஆதிக்கு நிம்மதியானது.
அலுவலகத்திலிருந்து கீழே இறங்கிய சஹானாவிற்கு ஆதவனின் கார் கண்ணில் பட காரின் கண்ணாடியை இறங்கியவன் அரக்கு நிற புடவையில் தேவதையாய் வந்தவளை ஆசையாக பார்த்தவன் தன்னை கட்டுப்படுத்தாது கண்ணாடிக்க, முகம் செம்மையுற்று நடையில் வேகம் கூட்டி பவித்ரா அருகில் சென்று நின்றுகொண்டாள்.
காரை நிறுத்தி வந்த ஆதவன் தாய் தந்தையை அழைத்துவந்து நண்பர்களுடன் விட்டான். பல வருடங்கள் பார்க்காதது அவர்களுக்குள் பேச ஏராளம் இருக்க பேச்சிற்கும் சிரிப்பிற்கும் பஞ்சம் இல்லாமல் சென்றது.
“ம்மா நல்ல நேரம் எப்ப?”
“இன்னும் அரை மணி நேரம் இருக்கு ஆதி, கோமியம் மட்டும் இன்னும் வரல, உங்க அப்பா வந்ததும் ஆரமிச்சிடலாம்” என்றார் ஷீலா.
சரியாக நந்தனும் வர அவர் பின்னால் ஐயர் ஒருவரும் தொடர்ந்து வந்தார். நண்பர்கள் மூவரும் ஒரு பக்கம் நின்று பேசிக்கொண்டிருக்க ஆதவன் ஷீலாவோடும் தன்னுடைய அன்னையோடும் ஏதோ சிரித்து பேசிக்கொண்டிருந்தான்.
இடையில் பவித்ராவை அன்னைக்கு அறிமுகம் செய்யும் சாக்கில் சஹானாவையும் அறிமுகப்படுத்தினான். அவருடன் தயக்கத்தோடு பேசியவள் இயல்பாகாத பொழுது வேண்டும் என்றே அவளை விட்டு நண்பர்களுடன் ஆதவன் இணைந்துகொண்டான்.
ஆதி வாயிலை வாயிலை பார்த்துக்கொண்டே இருக்க, “யாரை எதிர் பாக்குற?” என்றான் ஆதவன்.
“சர்ப்ரைஸ்” என்றான் நமட்டு சிரிப்போடு.
தன்னுடைய கைபேசியில் வந்த செய்தியை பார்த்து சிரித்தவன், “அந்த பக்கம் பாருங்க” என்று நண்பர்களுக்கு கூற சரியா அடுத்த ஐந்து நொடிகளில் காம்பௌண்ட் சுவற்றின் ஓரம் நின்று திருடன் போல் எட்டி பார்த்தவள் பார்த்து மூவர் வாய்விட்டு சிரிக்க, ஆதவனுக்கு அதிர்ச்சி.
“மணிமேகலை என்னடா இங்க பண்ணுது?”
“பூஜைக்கு என் ஆள் இல்லனா எப்படி டா?” வெட்கத்துடன் சொன்னவன்
அவளை பார்த்து வருமாறு சைகை செய்ய திரு திருவென முழித்தவாறே வந்தவள் அழகில் மீண்டும் மீண்டும் சொக்கி தான் போனான் ஆதி.
இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சகோதரிக்கும் மணிமேகலைக்கும் புடவை எடுத்து வந்திருந்தான். அதில் மணிமேகலைக்கு இளம் ஊதா நிறத்தில் தங்க ஜரிகை இழையோட ரோஜா நிறத்தில் ரவிக்கை போட்டு கண்களை செய்திருந்தது அவள் அழகு.
நெளிந்துகொண்டே வந்தவளை பார்த்த ஆதியும் அவளை நோக்கி வர, அவன் அருகே வந்து கிசுகிசுப்பாக, “அப்பாகிட்ட பொய் சொல்லிட்டு வந்துட்டேன் அதுவும் ஜாலியா இருந்தது தெரியுமா?” ஆசையாக பேசினாள் அவன் மான்குட்டி.
சொக்கி கிறங்கி நின்றவன், “ஜிமிக்கி அழகா இருக்கு” கண்கள் அவள் காதுகளில் ஆடிய குடை ஜிமிக்கியில்.
“புடவை?” என்றாள் ஆசையாக.
“கல்யாண பொண்ணு மாதிரி மயக்குற மேகா. கல்யாணம் பண்ணிக்கலாமா இப்பயே” அவன் ஆசை குரலில் மணிமேகலையின் மனம் பந்தயத்தில் ஓடியது.
“ம்ம்ம் ம்ம்ம் எல்லாரும் பாக்குறாங்க” காதல் பறவைகளின் காதல் பேச்சை கவனிக்காதது போல் கெளதம் நினைவூட்ட உடனே சுயத்திற்கு வந்த ஆதி அவளை, “மணிமேகலை” என்று மட்டும் கழுத்தை தேய்த்து அறிமுகப்படுத்த, அவன் முகத்தில் இருந்த நாணம் பெரியவர்களுக்கு செய்தியை மறைமுகமாய் கூறியது.
அதன் பிறகு சிறிது நேரத்தில் பூஜை துவங்க அனைத்தையும் தமிழும், கௌதமும் ஆதியையே முன் நிறுத்தி செய்ய வைத்தனர்.
தனியாக நின்ற நண்பர்களிடம், “இன்னைக்கு நைட் பார்ட்டி இருக்கு வர்றியா?” பார்த்து ஆதி கேட்டான்.
“நீங்களுமா டா தண்ணி அடிப்பீங்க?” கெளதம், தமிழ் இருவரை நோக்கி கேள்வி எழுப்பினான் ஆதவன்.
“இல்ல, இவன் சரக்கடிப்பான். நாங்க சைடு டிஷ் சாப்புடுவோம்” கெளதம் கூறி சிரிக்க, “இது பேர் பார்ட்டியா” நண்பனின் தலையில் ஆதவன் அடித்தான்.
ஆதி அமைதியாய் இருந்தான். ஆனால் ஆதியின் தந்தையின் இடத்தில் வேலையை தொடங்குவது முதலில் உதய் கொடுத்த சிறு துப்பு தானே… தன்னுடைய வாழ்க்கையின் ஒரு நல்ல தொடக்கத்தை துவங்கும் பொழுது நண்பன் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை காலை எழுந்த பொழுதில் இருந்தே தோன்றியது.
“இவனுக ரெண்டுபேரும் சண்டை போட்டுட்டே இருந்தா எப்படி அஞ்சுபேரும் ஒரே நேரத்துல சந்தோசமா இருக்க முடியும்?”
ஆதவன் இருவரையும் குற்றம் சாட்ட, “வருவான் டா” என்றான் ஆதி மிதப்பாய்.
நண்பர்களின் ஆசை வார்த்தைகள் காதில் விழுந்ததோ என்னவோ உதய்யின் வெள்ளை ரோல்ஸ் ராய்ஸ் அந்த வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வந்து நின்றது.
வாகனத்தில் இருந்து இறங்கி வந்த ஜெயனை பார்த்து கிண்டலாக, “தம்பி மொய் எல்லாம் வாங்குறது இல்ல” என்றான் ஆதி மிதப்பாய்.
ஆனால் அவனுக்கு பதில் கூறாமல் ஜெயன் மௌனமாய் நிற்க, காரை எட்டி பார்த்தான் ஆதவன்.
“உதய் வரல மச்சி. தேவை இல்லாம டயலாக் பேசிட்ட” நண்பனை பார்த்து கெளதம் சிரிக்க, காதுகளை உறுத்தும் சத்தத்தோடும், ஆடை யாவும் காற்றில் பறக்க, அதே மைதானத்தில் வந்து இறங்கியது ஒரு ஹெலிகாப்டர்.
இருந்த அனைவரின் கண்களும் அங்கு செல்ல, அதிலிருந்து மிதப்பாய் கேசம் காற்றில் ஆட, வெள்ளை சட்டையும், வெளீர் சாம்பல் நிற பேண்டும் அணிந்து கண்களில் கருப்பு கண்ணாடியோடு அழகாய் வந்தவனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
ஆதி உடனே மணிமேகலையை தான் பார்த்தான். மாமனை பார்த்தவள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி, தஞ்சாவூர் பொம்மை போல் தலை நில்லாது எட்டி எட்டி அவனை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
உதய் இறங்கியதுமே அந்த ஹெலிகாப்டர் கிளம்பிவிட, ஆதியை நோக்கி வந்த உதய் அங்கிருந்த ஏற்பாடை எல்லாம் மெச்சுதல் பார்வையோடு பார்த்து, “எல்லாமே சிறப்பா முடிஞ்சதா?”
ஏதோ உள் குத்து வைத்து தான் பேசுகிறான் என்று தெரிந்து ஆதி அமைதியாக நிற்க, ஜெயன் ஆதி கையில் ஒரு பாத்திரத்தை வைத்தான். சந்தேகமாய் அதை பார்த்த ஆதி பொறுமையாய் தலையை தூக்கி உதய்யின் முகத்தை பார்த்தான்.
“மொத்த இடமும் கைக்கு வந்திருந்தா நல்லா இருந்துருக்கும். பரவால்ல, பில்டிங் மட்டும் வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என்றான் ஆதியின் தந்தை கட்டியிருந்த கட்டிடத்தை கண்களாலேயே அளந்து.
ஆதியின் கையிலிருந்த கோப்பை பற்றிய ஆதவன் அதை பார்க்க பின்னாலே மற்ற இருவரும் படித்தனர். அந்த அலுவலகத்தை வைத்து ஆதியின் தந்தை உதய்யின் தந்தையிடம் முன்னர் கடன் வாங்கி இருக்க, வட்டி எதுவும் காட்டாமல் விட்ட காரணத்தால் இப்பொழுது அது உதய்யின் சொத்தானது.
“உதய் தேவை இல்லாம பண்றடா” என்றான் கண்டிப்பாய் ஆதவன்.
ஆனால் அதை எதையும் காதில் வாங்காமல் வந்த வேலை முடிந்த திருப்தியில் உதய் சிறு சிரிப்போடு நகர்ந்தான்.
“ஏண்டா இப்டி எதையுமே நிம்மதியா இருக்க விட மாற்றான்” கெளதம் பொறுக்க முடியாமல் புலம்ப, செல்லும் உதய்யையே பார்த்த ஆதி,
“ஆளு செம்ம ஸ்மார்ட்ல?” ரசனையோடு சிரித்த முகத்துடன் ஆதி நண்பனை பார்க்க,
‘நீ பைத்தியமா?’ என்ற கேள்வியோடு நண்பர்கள் ஆதியை பார்த்து புரியாமல் நின்றனர்.