“யாராவது இத தப்பா யூஸ் பண்ணிட கூடாதுனு தான் கண்ணனுக்கு உறுத்தாத மாதிரி இந்த காயினோட ஒரு கார்னெர்ல ஸ்கிராட்ச் போட்டிருக்கும்… இந்த காயின்ல அந்த ஸ்கிராட்ச் இல்ல. சோ கண்டிப்பா இத யாரோ செஞ்சு தான் யூஸ் பண்ணிருக்காங்க. வெயிட் கூட கம்மியா இருக்கு” தன்னுடைய சந்தேகத்தை ஜெயன் கூற, சஹானா நினைவு தான் வந்தது ஆதிக்கு.
“ஆதவன் அன்னைக்கு ஹாஸ்பிடல்ல காட்டுனது நியாபகம் இருக்கா?” பொறி தட்டியது ஆதிக்கு… நிச்சயம் ஏதோ சம்மந்தம் இரண்டுக்கும் இருக்கும் என்று உறுதியாக இருந்தான்.
“இல்ல சார்… அத பத்தி விசாரிக்க வேண்டி இருக்கும்னு நான் எடுத்து வச்ச போட்டோ கூட உதய் சார் டெலீட் பண்ணிட்டாங்க” – ஜெயன்
“முப்பது நாள் ரீசைக்கிள் பின்-ல இருக்கும் டா… ரெகவ்ர் பண்ணு” அதுவும் சரியாக பட எடுத்தான் ஜெயன். ஆதி சந்தேகத்தை உறுதியாக்க அந்த புகைப்படத்தில் அந்த கீறல் இல்லை.
“தன்ன கொல்ல ட்ரை பண்ணவன்கிட்டயிருந்து இத எடுத்து வச்சு நமக்கு ஹிண்ட் குடுத்துருக்கான்.. அப்ப சஹானாவ கொலை பண்ண ட்ரை பண்ணவன் தான் இப்ப உதய் மேலயும் கை வச்சிருக்கான். ஒ*** செத்தானுக என் கைல” வேங்கையாய் பாய தயாராக இருந்தவனை தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த கைபேசி வெறுப்பேற்றியது.
கோவத்தில் எடுத்து காதில் வைத்தவன், “இப்ப என்ன உங்களுக்கு வேணும்?” என்றான் கோவமாக.
அந்த பக்கம் நளினிக்கோ மணி இரண்டை தாண்டியும் மகன் வீட்டிற்கு வராததால் தூக்கம் ஒரு பொட்டு கூட வர மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது.
“உதய் நல்லா தானே ப்பா இருக்கான்?” ஆதியின் ஆத்திர குரலை உடனே இனம் கண்டவர் மனதில் சிறு அச்சம்…. இருவருக்குள்ளும் ஏதேனும் சண்டையோ என்று.
“தம்பி டாக்டர் வர சொன்னாங்க”
வார்டு பாய் ஒருவன் வந்து செய்தி சொல்ல, “உங்கள எல்லாம் விட்டு தள்ளி நிக்கிற வர அவன் நல்லா தான் இருப்பான்” அவசரமாக நளினிக்கு கோவமாக பதில் தந்தவன் மருத்துவரை நாடி சென்றான்… பட படத்த இதயத்தோடு…
ஏதேனும் அசம்பாவிதமான வார்த்தைகளை கூறிவிடுவாரோ என்ற பயம் மனதில் தொற்றிக்கொண்டது.
‘இருக்காது… சின்ன வயசுல நீ நெனச்ச ஒடனே உன் முன்னாடி வந்து நிப்பானே ஆதி… அப்ப தோணுமே இவனுக்கு ஆயிசு நூறுன்னு’
ஒரு மனம் ஆறுதல் கூறும். மறு மனமோ, ‘ரத்தம் அப்டி கொட்டுச்சே… அவனுக வெட்டுனதுல நரம்பு ஏதாவது பாதிச்சு அவனுக்கு தாங்க முடியாத கஷ்டத்தை குடுத்தா?’
குரங்காய் மாறி மாறி பேசும் மனதை ஒரு நிலை படுத்தவே முடியாமல் ஆபரேஷன் தியேட்டர் முன்னாள் வந்து நின்றான். சில நிமிடங்களில் உடன் ஜெயனும் ஆதி பின்னால். பயம் கொண்ட இதயத்தோடு காத்திருந்தவன் மனதின் வேகத்தை கூட்டவே திறந்தது அந்த கதவு.
நிதானமாக வந்த மருத்துவர்களில் இருவர் சென்றுவிட, அறுவது வயதை தொட்ட ஒருவர் மட்டும் நின்றார், “நீங்க அவருக்கு என்ன ரிலேஷன்?”
“ப்ரன்ட் டாக்டர்” – ஆதி
“அவரோட பேமிலி வரலையா?” – டாக்டர்
“இல்ல… அவங்க வெளிய போயிருக்காங்க…” பயம் கூடியது ஆதிக்கு அவரது தயக்கத்தில், “ஏ.. ஏதாவது பிரச்… பிரச்சனையா டாக்டர்?”
“இல்ல பேமிலி இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. டிரீட்மென்ட் இன்னும் உள்ள நடந்துட்டு தான் இருக்கு. பர்ஸ்ட் எயிட் குடுத்தனால ரிஸ்க் கம்மியாகிருக்கு. பாக்கலாம். பேஷன்ட் அன்கான்ஷியஸ் ஸ்டேஜ்ல தான் இன்னும் ரெண்டு நாள் இருப்பார். அது வர எங்களால எதுவும் சொல்ல முடியாது”
அவ்வளவு தான் என் வேலை என்று சென்றுவிட்டார் அந்த மருத்துவர். புலம்பி அழுக முடியவில்லை, செய்தாக வேண்டிய வேலைகள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அமைதியாக ஓரம் சென்று அமர வைத்தது ஆதியை. ஒரு பெரிய பேட்டி முழுதும் பத்திரங்களோடு வந்த ஜெயன் ஆதி அருகில் வைத்தான்.
கேள்வியாக அவனை பார்த்த ஆதியிடம், “இதெல்லாம் பாருங்க சார்… என்னால உதய் சார் குடும்பத்தை வாய் தொறந்து பேச முடியல. மனுசனை கொடஞ்சு எடுத்துட்டாங்க” மனம் தாங்காமல் ஆதியிடமே அத்தனையையும் ஒப்படைத்தான்.
“நீங்க பேசுறப்ப டாக்டர பாக்க சொன்னது கேட்டு ஆதவன் சார்க்கு கால் பன்னிருப்பாங்க போல. எனக்கு அவர் கால் பண்ணி கேட்டதும் உண்மைய சொல்லிட்டேன். எப்டியும் இன்னும் ஹால்ப் அன் ஹௌர்ல வந்துடுவாங்க. ஆனா அவங்க யாரும் உதய் சார் முகத்தை கூட பாக்க தகுதி இல்லாதவங்க”
கோவமாய் ஜெயன் கூற ஆதி அங்கிருந்த பாத்திரங்கள் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தான் ஆச்சிரியதோடு. நெற்றியை நீவி தலை தொங்க போட்டு அமர்ந்தவன் முன்னாள் அமைதியாக வந்து நின்றது மூன்று ஜோடி கால்கள். நண்பர்கள் தான்.
அந்த கால்களை கண்களை மற்றும் உயர்த்தி பார்த்த ஆதி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். ஜெயனிடம் விசாரிப்புகள் சென்றது. கடமைக்கு கூறினான் அவனும் பேச விருப்பமில்லாமல்.
ஆதியின் அருகில் கூட மூவரும் வரவில்லை, தூரத்தில் நின்றே தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். இன்னும் சில நிமிடங்களில் உதய்யின் மொத்த குடும்பமும் திமு திமுவென வந்து மொத்த இடத்தையும் ஆக்கிரமித்தது. பெரிய இடது விவகாரம் என்பதால் மருத்துவமனை நிர்வாகமும் இரு மனதாய் அமைதியாகிவிட்டது.
உதய்யின் நிலை கேட்டு நளினி புடவை தலைப்பில் வாயை பொத்தி ஓ-வென ஒரே அழுகை. சமாதானம் செய்த சகோதரிகளுக்கும் நிற்க மாட்டாமல் கண்ணீர் தான். யாரை எப்படி தேற்றுவதென்று தெரியவில்லை ஹரிக்கு. தந்தைமார்கள் மனதில் பாரத்தோடு அழுகும் பெண்களை பார்க்க மட்டுமே முடிந்தது.
“எதுக்குடா இவனுக்காக எல்லாம் அழுகுறாங்க? அவன் பண்ண தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறான்… என்ன கேட்டா இதுவே கம்மி” இந்த நிலையிலும் உதய் மேல் ஏனோ கோவம் செல்லவில்லை ஆதவனுக்கு.
பேசி இரண்டு நொடிகள் கூட ஆகவில்லை, பாய்ந்து வந்து அவன் டீ-ஷர்ட்டை கொத்தாக பிடித்த ஆதி வந்த வேகத்தை விட இன்னும் ஆவேசமாக ஆதவன் முகத்திலே இரண்டு முறை ஓங்கி குத்தினான்.
“ஆதி…” தமிழ் கெளதம் ஆதியை தடுக்க ஜெயன் அமைதியாய் நின்றுகொண்டான். ஹரி தான் பயத்தில் வந்து ஆதியை கெஞ்சினான். ஆனாலும் அசராமல் மூவரையும் உதறி சட்டையை சரி செய்து நின்றான்.
“யாருடா தப்பு பண்ணது? நீயா இல்ல அவனா?” ஆதவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி உறுமினான்.
உதய்யின் பெயர் பதித்த போலி நாணயத்தை எடுத்து ஆதவன் முகத்திலே எறிந்தவன், “இந்த மயிரை பாத்துட்டு தானே அவனுக்கு கொலைகாரன் பட்டம் குடுத்த. இது பொய், அந்த கார் பொய், அதுல வந்த உதய் ஆளுங்க பொய். எல்லாத்துக்கும் மேல நீயும் உன்னோட இத்தன நாள் நட்பும் பொய்”
ஆதவன் சட்டையை பிடித்து உலுக்கி பின்னால் சுவற்றோடு மீண்டும் தள்ளினான். அங்கிருந்த அத்தனை மனிதர்களும் ஆதியை விரிந்த விழிகளோடு ஏறிட்டனர்.
“யாருக்காக இவன் வேணாம்னு நீ தூக்கி போட்டியோ அவளுக்காக மூலை மூலைல நின்னு கண்ண கசக்குறத தவற வேற என்ன பண்ண?”
உதய்யின் மீது தவறில்லை என்றறிந்த பிறகே மனதில் தாங்க முடியாத பாரம் குடியேறியிருக்க இப்பொழுது சஹானாவிற்காக அவன் என்ன செய்தான் என்று கேட்டதும் அவனை அறியாமலே கண்கள் கலங்கிவிட்டது.
“ஒரு ஆணியும் புடுங்கல… ஆனா யாரு இரக்கமே இல்லாம கேவலம் ஒரு கேள்வி கேட்டதுக்கு பழி வாங்குறான்னு சொன்னியோ, அவன் தான் இன்னைக்கு நீ ஏன்டா கலங்குற உன் தங்கச்சிய நான் நடக்க வக்கிறேன்னு சொல்லி என் தங்கச்சிக்கு டிரீட்மென்ட் ஏற்பாடு பண்ணிருக்கான்…
இப்போ சொல்லு நீ தப்பு பண்ணியா இல்ல, உன் பேச்சு எல்லாம் கேட்டுடும் இத பண்ணவன் தப்பான ஆளுனா… ஆமா டா. என் உதய் தப்பு தான் பண்ணிருக்கான்”
கெளதம், தமிழை பார்த்தவன், “இதுல இவனுகளும் சிங் ச்சாங் அடிச்சிட்டு… ச்சை வெக்கமா இருக்குடா உங்கள எல்லாம் பாக்க”
உதய் மனதில் ஆதவன் வார்த்தைகள் எந்த அளவிற்கு விடுவாய் மாறியிருக்கும் என்று நினைக்கும் பொழுதே நரம்பெல்லாம் புடைத்து முறுக்கேறியது ஆதிக்கு. ஜெயன் வந்து கொடுத்த அந்த பெரிய அட்டை பெட்டியை உதய் குடும்பத்தின் முன்னேற் தூக்கி எறிந்தான்.
“இந்தாயா நீ கேட்டியே கணக்கு எல்லாம் இதுல இருக்கு”
ரகுநந்தன் ஏற்கனவே மகனின் நிலையில் சோர்ந்துபோயிருந்தார். என்ன தான் மூத்த மகன் மீது கோவமாக இருந்தாலும் அந்த குடும்பத்தின் அஸ்திவாரம் அவன் அல்லவா… அவன் நிலையை கேட்ட நொடியே தந்தை மனம் அதிகம் ஆட்டம் கண்டிருந்தது. இப்பொழுது ஆதி கூறுவது புரியவில்லை அவர் இருந்த மனநிலையில்.
“இதுல உங்க நாலு பசங்களுக்கு லாபம் வர்ற நேரம் எல்லாம் ஒவ்வொரு சொத்து தனி தனியா வாங்கி போட்ருக்கான்… நாளைக்கு நீங்களோ உங்க தம்பியோ இவங்க யாரையும் எதிர் பாத்து இருக்க கூடாதுன்னு தனியா உங்க மூணு பேர் பேர்ல டேப்பாஸிட் பல கோடி பண்ணி வச்சிருக்கான். இது வர அவன் சம்பளத்தை தவற ஒரு பைசா உங்க கம்பெனி சொத்துல எடுத்தது இல்ல…
இது தான் அந்த முட்டா பையன் பண்ண பெரிய தப்பு. ஒரு வேலையும் செய்யாம சும்மா சுத்திட்டு இருந்தவனுக பேர்ல சொத்து மேல சொத்து வாங்கி போட்டதுக்கு அவன் பேர்ல வாங்கி போட்ருந்தா இன்னைக்கு நீங்க கணக்கு கேட்டப்ப மனசு வலிக்காம இருந்துருக்கும். பரதேசி பரதேசி எல்லாம் அவனை சொல்லணும் கண்ண கசக்கிட்டு நின்னான்”
அவர் சட்டையை பிடித்து கேள்வி கேட்க வேண்டும் போல் இருந்தது ஆதிக்கு. அவ்வளவு ஆதங்கம் மனதில் நின்றது.
“உனக்கு என்னையா தெரியும் உன் பையன பத்தி” ரகுநந்தன் அருகே ஒட்டி சென்று நின்றான், “சும்மா ஆபீஸ் ஆபீஸ்-னு அதையே கட்டிட்டு சுத்துன உனக்கு எங்கயோ அவனோட குணம் எல்லாம் தெரிய போகுது? இந்த பிஸ்னஸ், கணக்கு, இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் அவனுக்கு சுத்தமா புடிக்காது.
அவன் நல்லா யோசிப்பான். கவிதை எழுதுவான். ஒரு லிரிஸிஸ்ட் இல்லனா டைரக்ட்டரா தான்டா ஆவேன்னு என்கிட்டே சொல்லிட்டே இருப்பான். போய் அவன் ரூம்ல பாரு, ஒளிச்சு வச்சிருப்பான் ஏதாவது ஒரு மூலைல அவனோட ஆசைய எல்லாம். அதை தூக்கி போட்டுட்டு நீங்க கஷ்டப்பட கூடாதுன்னு தான் இந்த சாக்கடைக்குள்ள வந்து விழுந்தது தோ இப்ப உள்ள எப்ப எப்பன்னு இருக்கான்” முகத்தை சுளித்தான் அவரின் உணர்ச்சியில்லா முகத்தில்.
“முதல உன் பையனோட மனச படிச்சிட்டு அப்றம் போய் பிஸ்னஸ் மண்ணாங்கட்டிய பாரு. நீ சம்பாதிக்கிற காச அனுபவிக்கானாலும் பிள்ளைன்னு ஒன்னு வேணா?”
மனைவியின் தோளை பிடித்து ஆதரவாய் நின்ற ஜெயனந்தன் தம்பதியிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டான், “உங்க பையனா இருந்தா இது மாதிரி தான் இத்தனை வருஷம் தனியா விட்ருபிங்களா?”
தாங்களாவது அவனை பார்த்திருக்கலாமே என்று ஆதங்கமாய் பார்த்த அவன் கண்களை சந்திக்க இருவருக்கும் துணிவில்லை. சாட்டை அடியாய் இருந்தது அவன் கேள்வி… கணவனின் கை பிடித்து இன்னும் அழுதார் நளினி.
அவர்களை ஒட்டி நின்ற விஷ்ணு மீது விழுந்தது ஆதியின் பார்வை, சுளித்தான் முகத்தை, “நீ எல்லாம் என்னடா மனுஷன்? அவன் மனசுல என்ன இருக்குன்னு உன்னால தெரிஞ்சுக்க முடியலைன்னா மூடிட்டு போய்டணும் அத விட்டுட்டு வந்து வந்து அவனை நோகடிச்சிட்டு எப்படிடா இப்டி எதுவுமே தெரியாத மாதிரி வந்து நிக்கிற?
ஒரு அண்ணனா நீங்க பண்ற தப்ப தட்டி கேட்டான் அத ஒரு குத்தம்னு சொல்லி, வார்த்தை விட்டு… ஏன்?” தாங்க முடியவில்லை ஆதிக்கு. இத்தனையையும் செய்து இவர்களிடம் ஒரு ஆறுதலான பார்வை கூட அவனுக்கு கிடைத்ததில்லையே…
“நடு ரோட்டுல நின்னு அழுகுறான் சின்ன கொழந்த மாதிரி… அம்மா கூடயே செத்து போயிருக்கலாம்னு” அன்று உதய் ஆதியை கட்டி அழுதது இன்றும் ஆதியின் மனதில் நின்று அழுத்தியது.
“இவன்கிட்ட கேளு” ஜெயனை கை நீட்டினான், “உங்கள சுத்தி எவ்ளோ பாதுகாப்பு வச்சிருக்கான்னு. உன் அப்பா சித்தப்பா, அவன் சம்பாதிச்ச பகையை எல்லாம் யாரும் உங்க மேல காட்டிட கூடாதுன்னு எந்நேரமும் உங்கள சுத்தி ஆள் இருந்துட்டே இருக்கும். கண்ணுக்குள்ள வச்சு பாத்துட்டான்… ஆனா நீங்க அவனுக்கு தந்த கிப்ட் செத்து போகணும்ங்கிற ஐடியா.
என்னமோ ஜெயிலுக்கு போன உன் மாமனுக்கு சப்போர்ட் பண்ணி இவன் தான் அந்த தீவு எல்லாம் வளச்சு போட்ருப்பான்னு சொன்னியாம்ல. உன் மாமன் பண்ண தில்லாலங்கடி வேலைய சொல்லவா?”
விஷ்ணுவிற்கு உதய் மேல் கோவம் இருந்தது நிறைய விசயங்களில் ஆனால் என்றும் சகோதரன் மீது வெறுப்பு இருந்ததில்லை, சகோதரனிடம் தந்தை கணக்கு கேட்ட பொழுது கூட தனியாக சென்று தந்தையிடம் சண்டையிட்டவன் தானே இதில் இன்று அவன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பொழுது மகிழும் அளவிற்கா மனதிலிருந்த ஈரம் வற்றியிருக்கும்? மனதின் உள்ளே அழுக தான் செய்தான் விஷ்ணு.
“உன் அண்ணன் யாழினிய லவ் பன்றான். அத தெரிஞ்ச உன் மாமா அவளோட அப்பாவ ஜெயில்ல போட்டு, அவளோட தங்கச்சிய வச்சு மிரட்டி அவளை உன் அண்ணன் பக்கமே வர கூடாதுன்னு கண்டிஷன் போட்ருக்கான்.
இது இல்லாம செத்து போன என்னோட அப்பாவோட சொத்துக்கு ஆசைப்பட்டு அவரோட பேர கேட்டாலே ஊரே காரி துப்புர மாதிரி பண்ணதும் இல்லாம அத உதய் மேல பழி போட்ருக்கான்” சில நிமிடங்களுக்கு முன்னர் தான் ஜெயன் இந்த தகவலை ஆதியிடம் கூறியிருந்தான்.
பல வருடங்களுக்கு முன்னர் ஈஸ்வரன் கையில் அதிக பணம் இல்லாத நேரம், ஆதியின் தந்தை பெயரில் இருக்கும் நிலத்தை அபகரித்து விட எண்ணி அவர் கட்டிய கட்டிடங்களை தகர்த்தி சன்மானம் என்னும் பெயரில் அந்த இடத்தை வாங்க ஏற்பாடு செய்திருந்தார்.
அதை அலுவலகம் சென்றுகொண்டிருந்த உதய்யின் பார்வைக்கு எப்படியோ தெரிந்து போக, அந்த நிலத்தை வைத்து ஆதியின் தந்தை பணம் வாங்கியிருப்பதாக கூறி தன்னுடைய பெயரில் மாற்றிக்கொண்டான்.
“இதெல்லாம் பண்ண உன் மாமன் நல்லவன், அத தட்டி கேட்ட இவன் கெட்டவன், திருடன்? நல்லா இருக்குடா உங்க ஊர் நியாயம்… உன் அண்ணனை அவன் குடும்பத்துக்கிட்ட இருந்து பிரிக்கணும்ன்னு நான் தான்டா உங்கள போலீஸ்ல ட்ராமா போட்டு மாட்டி விட்டேன். தெரியல அன்னைக்கு…
ஏற்கனவே அவன் குடும்பம் அவன் கூட இல்லனு. அப்பயும் நீங்க இத காரணமா வச்சாவது நிதானமா மாறுவீங்கன்னு தப்பு கணக்கு போட்டுட்டான். நீ பேசுன வார்த்தையை உன்னால இன்னைக்கு திரும்ப வாங்க முடியுமா?”
விஷ்ணுவின் சட்டை பிடித்து தள்ளினான், அடுத்து ஹரியின் கையையும் பிடித்து வெளியில் தள்ளினான், “போங்கடா. எல்லாரும் போங்க” நண்பர்களை பார்த்தும் அதே கோவத்தோடு கத்தினான்.
“யாரும் வேணாம். நான்… நான் பாத்துக்குறேன் என் உதய. சாகுற வரைக்கும் அம்மாவா, அப்பாவா நின்னு அவனை நான் பாத்துக்குறேன். போங்க… போலியா பாசம் காட்டி, அவனை யூஸ் பண்ணி கொஞ்சம் கொஞ்சமா கொல்லுற நீங்க அவனுக்கு வேண்டவே வேண்டாம்” தன்னையே அறியாமல் நிற்காமல் ஆதியின் கைகளிலிருந்து கண்ணீர் வந்துகொண்டே இருந்தது.
“இதுக்கெல்லாம் என்ன தான் சொல்லணும்” தலையில் அடித்து அமர்ந்தான் ஆதி, “அன்னைக்கு மட்டும் நான் பொய் சொல்லி காயத்திரி ம்மா-கு கால் பண்ணி கூப்புடாம இருந்தா இந்நேரம் அவங்க உயிரோட இருந்துருப்பாங்க” கண்ணீரில் மூழ்கிச்சிருந்த மொத்த குடும்பமும் விழுக்கென ஆதியை நிமிர்த்து பார்த்தனர்.
“ஆதி வேணா” இத்தனை வருடங்கள் மூடி மறைத்த உண்மையை அவன் இவர்கள் முன்னாள் கூறுவது ஆதவனுக்கு துளியும் விருப்பமில்லை.
“தெரியட்டும். தெரிஞ்சா என்ன சொல்லுவாங்க கொலைகாரன்னு தானே? சொல்லிக்கட்டும். அது தானே உண்மை. நான் பண்ண தப்புக்கு இன்னைக்கு அவன் இவங்கதா சிக்கி அனுபவிச்சிட்டு இருக்கான். என் காயத்திரி ம்மா இருந்தா இந்த நிலைமை அவனுக்கு வந்துருக்காதுல… இதுல நான் வேற அவனை எவ்ளோ கஷ்ட படுத்திட்டேன்…”
இவ்வளவு நேரம் ஆடி தீர்த்த ஆதி மொத்தத்தையும் பறிகொடுத்து ஏதோ போல் அமர்ந்திருக்க அவனை பார்க்கவே அவர்களால் முடியவில்லை. அனைவரும் பேச வார்தையின்று அமர்ந்திருந்தனர். கண்ணீர் மட்டுமே அங்கு கேட்கும் சத்தமாக போனது.
நண்பனின் நொறுங்கிய நிலையை பார்த்த கெளதம் கண்களை துடைத்து அவன் முன்னே தரையில் மண்டியிட்டு அமர அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினான் ஆதி.
“போடா… அவனையே சந்தேகப்பட்டுட்டீங்கல்ல… ஒரு உயிரை எடுக்குற அளவாடா அவன் இரக்கமில்லாதவன்?”
“ஆதி… மன்னிச்சுடுடா” நண்பன் கை பற்றினான் கெளதம்.
“அவன் மன்னிச்சாலும் நான் மன்னிக்க மாட்டேன். போ” மீண்டும் நண்பனை தள்ளினான் ஆதி.
பிறகு அவனே, “நாம மன்னிப்பு கேக்கானாலும் அவன் திரும்பி வருவானா-னு தெரியலையேடா” நொடிந்து போன நண்பனின் வார்த்தைகள் தாளாமல் ஆதியை அவன் திமுறலையும் மீறி அனைத்திருந்தான் கெளதம்…
சில நொடிகள் திமிறியவன் அவன் தோளிலே சாய்ந்து வாய் விட்டு கதறி அழ அவன் மனதில் இத்தனை நாட்கள் இருந்த காயங்களுக்கெல்லாம் சேர்த்து உதிர்ந்தது கண்ணீர் துளிகள்.
கௌதமை தொடர்ந்து ஆதவனும் ஆதியை கட்டிக்கொள்ள அவன் இருந்த நிலையில் நண்பர்களின் இந்த அணைப்பும் அவசியம் தேவைப்பட்டது, “அவனுக்கு ஒன்னும் ஆகாது ஆதி… வருவான்டா, என் சட்டையை புடிச்சு ஏன் என்ன நம்பல கேள்வி கேக்க வராமையா போயிடுவான்?”
ஆதவன் பேசவும் தான் நிதானித்தவன் இருவரையும் உதறி எழுந்து தூரம் சென்று நின்றுகொண்டான். நேரம் கடந்துகொண்டே இருந்தது, மருத்துவர்கள் கூறிய பதிலை மாற்றவில்லை. இரண்டு நாள் ஆகும் என்றனர் உண்மையான நிலையை தெரிவிக்க.
சோர்த்தனர் அனைவரும். ஒரு முறை பார்க்க கூட அனுமதிக்கவில்லை. காலை விசியம் கேள்விப்பட்டு ஓடி வந்த யாழினியின் அழுகையை அடக்க முடியாமல் அனைவரும் திணறி போக சில நிமிடங்களில் தரையிலே மயங்கி சரிந்தாள். அவளுக்கு துணையாய் நளினியும் பல்லவியும் இருந்தனர்.
சில நிமிடங்களில் தேறி வந்த யாழினி சோர்ந்து மீண்டும் உதய் இருந்த அறைக்கு வெளியிலேயே அசையாது அமர்ந்துவிட்டாள்.
அவள் அருகே ஆதி வந்து அமர, “இவ்ளோ நடந்துருக்கு ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லல” குற்றம் சாட்டினாள்.
“இது என்ன சந்தோசமான விசயமா நேரம் காலம் பாக்காம கால் பண்ணி சொல்ல?”
“நல்ல விசயத்த கூட பொறுமையா சொல்லிக்கலாம் ஆனா இந்த மாதிரி விசயத்த தான் யோசிக்காம சொல்லணும்” சலிப்பாகக் கூறினாள் ஆதியின் முகம் பார்த்து.
“அன் டைம்ல சொன்ன எப்படி வருவ நீ?” முறைதான் அவளை.
“ஏன் நான் வர மாட்டேனா?” கோவமாக அவனைப் பார்த்தாள்.
“நீ பஜாரியாச்சே வராம இருப்பியா…”
“ஆமா சரோஜாக்கா சவுண்ட் குடுத்தா கூவமே அதிரும்ல” யாழினிக்கும் ஆதிக்கும் இடையில் வந்து அமர்ந்த ஹரி யாழினியை ஆதியோடு சேர்ந்துகொண்டு கலாய்க்கத் துவங்கினான்.
“டேய் நான் உன் அண்ணிடா மரியாதையா பேசு” – யாழினி
“கொஞ்ச நேரம் முன்னாடி பச்சைப் பிள்ளை மாதிரி அழுத ஆளுக்கெல்லாம் அண்ணின்ற மரியாதை தர முடியாதுப்பா” ஒரு முடிவோடு தான் இருந்தான் ஹரி, அவளைப் பேச வைக்க வேண்டும், சகஜமாக.
“நீ அழுகலையா? என்ன மட்டும் சொல்ற” சரிக்குச் சரியாய் நின்றாள்.
“அழுதேன் தான் அதுக்குன்னு அங்கப்பிரதட்சணம் மாதிரி ஹாஸ்பிடல் தரைல படுத்து நான் சுத்தம் பண்ணலையே…” – ஹரி
“பொய். நான் ஒன்னும்…” இருவரும் சண்டையிடுவதைப் பார்த்துக்கொண்டிருந்த ஆதிக்குத் தன்னை கடந்து தன்னையே பார்த்துச் செல்லும் ஜெயனின் பார்வை தனியாக அழைக்க மெதுவாக எழுந்து ஜெயன் அருகில் நின்றுகொண்டான்.
“அந்த மொபைல் யாரோடதுன்னு தெரிஞ்சு போச்சு சார்…” மேலும் தொடருமாறு சுற்றிலும் பார்த்து ஆதி சொன்னான்.
“குமரன்-னு ஒருத்தனோடது. பைனான்ஸ் பெரிய அளவுல பன்றான் அண்ணா நகர்ல. ஏதாவது பெரிய இடத்துல ஆளத் தட்ட வேண்டி இருந்தா இவன்கிட்ட வருவாங்க. கிளீனா வேலை நடக்கும்” அவன் புகைப்படத்தைக் காட்டினான் ஆதியிடம்.
ஜெயன் காட்டியவனை நேற்று ஆதி பார்க்கவில்லை, “இவன் நேத்து அங்க இல்ல, இவன்கூட ஏதாவது பிரச்சனை?”
“இல்ல இவன தெரியும் ஆனா இது வர அவன் லைன்ல நம்மளோ நம்ம லைன்ல அவனோ கிராஸ் பண்ணதில்ல. இத பாருங்க” தன்னுடைய டாபிள் இருந்த ஒரு புகைப்படத்தைக் காட்டினான்.
“இந்த ஒரே ஒரு வண்டி தான் நீங்க கேட் உள்ள போறதுக்கு முன்னாடி சுடுகாடு குள்ள இருந்து வந்தது. வண்டியும் அந்த குமரனோடது தான். ஆள புடிச்சு விசாரிக்க சொல்லவா?”
ஆதி யோசித்துக்கொண்டிருந்தான், “இவன என்ன அடிச்சாலும் கண்டிப்பா உண்மைய சொல்ல மாட்டானுக…” அந்த புகைப்படத்தை கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதி.
“அதுனால தான் சார் நான் ஸ்டெப் எடுக்காம இருக்கேன். இவன புடிச்சா மெயின் ஆளு சுதாரிச்சிடுவான்” தீவிரமாக இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே தயக்கமாக ஆதவன் அவர்கள் அருகில் வந்து நின்றான் ஆதியின் கையிலிருந்த புகைப்படத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு.
சந்தேகம் தோன்ற ஆதியிடமிருந்து அந்த டாபை பற்றியவன் அந்த படத்தை ஜூம் இன் செய்து வாகனத்தின் பின் பக்க இருக்கையிலிருந்த கையை பார்த்தான்.
“ஈஸ்வரன் விஸ்வாசிக மொபைல் எல்லாம் ட்ராக் பண்ணிட்டு இருக்கேன் சார், அதுல சிக்குனது ஒரு உறுத்தலாக விசியம் நீரஜ் ஆளுங்ககிட்ட இவரோட ஆளுங்க அடிக்கடி பேசிருக்காங்க” ஜெயன் பேச்சைத் தடுத்து, “ஜெயன் இது அந்த ஈஸ்வரன்” உடனே கண்டுகொண்டான் ஆதவன்.
“அவன் ஜெயில்ல இருக்கான்” பேச வேண்டும் என்று ஏதாவது பேசுகிறான் என்று ஆதி கோவமாய் எரித்தான் கண்களாலே ஆதவனை.
“ஜெயில்ல தானே இருக்கான்? வர முடியாதா என்ன?” என்றவன், “இந்த கைய பாரு” புகைப்படத்தில் அவருடைய கணுக்கையைச் சுட்டிக் காட்டினான்.
“ஒரு தடவ மெஷின்ல அடிபட்டு அந்த ஆள் கைல விழுந்த தழும்பு. நல்லா தெரியும் இது அவன் தான்-னு” அடித்துக் கூறினான் ஆதவன். புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஆதியின் நாடி இறுகியது கோவத்தில்.
“இவனையும், அந்த தழலையும் ஒரு வாரம் ஜாமீன்ல எடுக்க முடியுமா உன்னால?” ஜெயனிடம் கேட்டான்.