“உதயாாா…” உதய்யின் உடலை கைகளில் அள்ளி மடியில் கிடத்தி முதலில் அவன் மூச்சை தான் பார்த்தான்… அந்த நொடி வரை சீராக தான் இருந்தது. உதய்யின் மூச்சை தெரிந்துகொண்ட பிறகு தான் ஆதிக்கு மூச்சு விட முடிந்தது.
சுற்றிலும் கண்களை சுழலவிட்டு பார்த்தான் எங்கும் கும் இருட்டு ஆனால் சலசலக்கும் மனிதர்கள் காலடி சத்தம் சத்தம் தெளிவாக கேட்டது. நிச்சயம் உதய்யையும் தன்னையும் வெளியில் விட மாட்டார்கள் என்று தெரிந்தது. வெறியை கண்களிலே அடக்கியவன் எழுந்து சென்று வாகனத்தை உயிர்ப்பித்து ஆக்சிலரேட்டரை அந்த இடமே அதிரும் வகையில் முறுக்கி விட்டான்.
“வா***தா டேய் ஆம்பளையா இருந்தா வெளிய வாங்கடா…” வாகனத்தின் சத்தத்தை விட அதிக உருமாளாய் வந்தது ஆதியின் ஆத்திர குரல். அகங்காரத்தை தட்டிவிட வந்தனர் நான்கு மனிதர்கள்… வீச்சருவாலும், கூரிய கத்திகளோடும்.
“யார்ரா நீயி? அவனை மட்டும் தான் போட சொல்லி ஆடர். சம்மந்தமே இல்லாம வந்து ஆஜராகி சீன் ஆகிடாத… ராஜா நடுல எவன் வந்தாலும் போட்டு தள்ளு. இவனோட பாடிய”
அவன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வெள்ளி காப்பை முறுக்கிவிட்டு குனிந்து வேகமாக கைக்குட்டை பிடித்து சைலன்சரை வண்டியிலிருந்து அவிழ்தவன் ஆணையிட்டுக்கொண்டிருந்தவன் முகத்தோடு சூடாக இருந்த சைலன்சரை வைத்தே ஓங்கி அடிக்க முகத்தை பிடித்து துடித்து கீழே விழுந்தான்.
“அண்ணாத்த…” இருவர் அவனை பார்த்து ஓட ஆதியோ வெறி ஏறியது போல் மீண்டும் அவன் முன் வந்து நெஞ்சிலே காலை மிதித்து,
“நைனா இப்ப என்ன சொன்ன நீ… மறுபடியும் சொல்லு… சரியா கேக்கல” காதை காட்டி ஆதி கேலி செய்ய அந்த இடைவேளையில் ஆதியின் கையில் ஒருவன் அரிவாள் கொண்டு ஆழமாக கையை கீறிவிட்டிருந்தான்.
வலியை பொறுக்க முடியாமல் ஒரு நொடி அதிர்ந்த ஆதி அடுத்த நொடி, அதே சூடான சைலன்சர் கொண்டு அவனின் காலிலே அழுத்தமாக சூடு வைத்து அவன் கழுத்தோடு ஓங்கி அடி வைத்தான்.
மேலும் தாமதமாகினால் உதய்யின் உயிருக்கு தான் சேதாரமென துரிதமாய் மீதமிருந்த இருவரையும் அடித்து துவைத்தவன் அவர்களை உதய்யின் கைபேசி எடுத்து புகைப்படம் எடுத்து உதய்யை தோள்களில் போட்டான். பாரம் தங்காவிடினும் நண்பனை தூக்கி சாலையில் ஓடினான்.
வெறிச்சோடி இருந்த தெருவை பார்த்தவன் வேகமாக முக்கிய சாலைக்கு செல்ல அங்கு ஒரு சில வாகனங்கள் கண்ணில் பட்டாலும் எவரும் உதய்யின் நிலையை பார்த்து உதவி செய்யவில்லை.
“சார் ப்ளீஸ் சார்… உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது சார்… பிளட் ரொம்ப லாஸ் ஆகுது ஹெல்ப் பண்ணுங்க சார்” கெஞ்சினான்.
ஒரு ஆணின் காலில் கூட விழுந்து கெஞ்சினான் எவரும் அசையாமல் போக மீண்டும் சிறிது தூரம் தள்ளி இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் நினைவிற்கு வர உதய்யை முதுகில் கிடத்தி மீண்டும் கால்கள் வலிக்க வலிக்க ஓடினான். தூரத்திலே ஆதியின் நிலை பார்த்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் வேகமாக தன்னுடைய வண்டியை அவன் முன் நிறுத்தி உதய்யையும் உள்ளே படுக்க வைத்தார்.
“அண்ணா வேகமா போங்க… பக்கத்துல இருக்க எந்த ஹாஸ்பிடல் இருந்தாலும் பரவால்ல” அவரிடம் வேண்டிக்கொண்டே ஆட்டோ துடைப்பதற்கு அவர் வைத்திருந்த துணியை எடுத்து வயிற்றுக்கும் நெஞ்சிற்கு இடையில் இருந்த அரிவாள் வெட்டை துணி கொண்டு அழுத்தி மூடினான்.
ஆனாலும் ரத்தம் வடிய உதய்யின் சட்டை கிழித்து பார்த்த பொழுது இடையில் வலது பக்கம் வேறு ஒரு காயம் இருந்தது. கலங்க இது நேரம் இல்லை என்று தன்னால் இயன்ற அளவிற்கு அதையும் அழுத்தி பிடித்தான். வலது கையில் வேறு காயம்… அரிவாளையோ கத்தியையோ வைத்து அவர்கள் தாக்க வந்த பொழுது உதய் தடுக்க நினைத்து வாங்கிய காயம்… பார்த்தாலே உள்ளேயிருந்த சதையெல்லாம் தெரிந்தது.
“உதயா…” உதய்யின் கன்னம் தட்டி அழைத்தான்.
ம்ம்ஹ்ம் சிறு அசைவு கூட அவனிடம் இல்லை. இதயத்தின் மீது கை வைத்தான்… இதயத்தின் துடிப்பு வேகமாக இருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஒருவரை இழந்தது போதாதா இவனையும் இழந்தால் என்ன சொந்தம் தனக்கு? மகனை பார்த்துக்கொள்ளும்படி அந்த தயார் கேட்டுக்கொண்டார்… அவர் கேட்க அந்த சிறு கோரிக்கையை கூட தன்னால் நிறைவேற்ற முடியாதா?
உதய்யின் நெஞ்சிலே வலிக்காமல் அடித்தான் ஆதி, ” டேய் எந்திரிடா… உதய்…” இவன் ஏதோ ஒரு மூலையில் நலமாக இருக்கின்றான் என்ற எண்ணமே ஆதியை நிம்மதியாய் இத்தனை ஆண்டுகள் ஓட வைத்தது ஆனால் இன்று இவன் தன்னை விட்டு செல்வதை நினைத்தாலே இதயத்தில் பத்து பாறைகளை வைத்தது போல் அவ்வளவு கணம்.
உதய்யின் முகத்தை பற்றி கெஞ்சினான் கண்ணீரோடு ஆனால் கல் நெஞ்சக்காரன்… எப்பொழுதும் காட்டும் கோவத்தை கூட இன்று காட்டவில்லை.
“தம்பி அழுகாத… அடுத்தது ஆக வேண்டியதை பாரு. இப்போதைக்கு ஒரு சின்ன ஹாஸ்பிடல்ல வண்டிய வுடுறேன்… அதுக்குள்ள ஏதாவது நல்ல ஹாஸ்பிடல் பாத்துடு”
“சரி ண்ணா ஏற்பாடு பண்றேன்… கொஞ்சம் வேகமா போங்களேன்” ஜெயன் நினைவு வர உதய்யின் கைபேசி எடுத்து அவன் எண்ணை தேடினான்… தொடுதிரையை விலக்கினால் கடவுச்சொல்லை கேட்டது…
சரியென எமெர்ஜன்சி காண்டாக்ட் இருந்த இடத்திற்கு சென்றான்… ஜெயனின் எண் மட்டுமே அதில் இருக்க உடனே ஜெயனுக்கு அழைத்து தகவல் கூற, அந்த ஆட்டோ ஓட்டுநர் ஒரு சிறிய மருத்துவமனை உள்ளே சென்றது. இரவு நள்ளிரவை நெருங்கிய நேரமாதலால் வரவேற்பு இடம் காலியாக இருந்தது.
ஓட்டுநர் சென்று உள்ளே பேச போக உதய்யை தூக்கி சென்ற ஆதிக்கு வாக்குவாதம் செய்த ஓட்டுநர் தான் தெரிந்தார். ஆதியை பார்த்ததும் வேகமாக வெளியில் வந்தவர், “மனசாட்சியே இல்லாத மிருகங்க தம்பி இவனுக. நீங்க வாங்க வேற ஹாஸ்பிடல் போகலாம்”
உதய்யின் இடை பிடித்து ஆட்டோவிற்குள் ஏற்ற போக, “அண்ணா நான் பேசி பாக்குறேன்…” உள்ளே செல்லவிருந்தவனை அவர் வார்த்தைகள் தடுக்கவில்லை.
“சார் ரொம்ப சீரியஸ் கண்டிஷன் சார்… கொஞ்சம் பர்ஸ்ட் எய்ட் மட்டும் குடுங்க…”
“போலீஸ் பெர்மிஸ்ஸின் இல்லாம எதுவும் பண்ண முடியாது சார்… புரிஞ்சிக்கோங்க”
யோசிக்காமல் வாதம் செய்தவனின் காலில் விழுந்தான், “கெஞ்சி கேக்குறேன் சார்.. பிளட்ட மட்டும் நிறுத்துங்க இல்லனா ஒரு டாக்டர் கூட வாங்க, அடுத்த ஹாஸ்பிடல் போகுற வர ப்ளீஸ்” கை பிடித்து ஆதி கெஞ்சினாலும் சிலையாய் மாறி போனான் அந்த மருத்துவன்.
“தம்பி பிக்ஸ் வருது ப்பா” வெளியில் ஆட்டோ ஓட்டுனரின் ஓங்கிய குரல் கேட்டு வேகமாக வெளியில் ஆதி வர கை கால்கள் எல்லாம் வெடவெடுத்து பிடித்து இழுத்தது உதய்க்கு…
“ஐயோ…” தலையில் அடித்து உதய்யின் கைகளை பிடித்து ஆதி அமர அந்த ஓட்டுநர் அடுத்த இரண்டு தெருக்கள் தள்ளியிருந்த சிறிய அரசு பாலாசபத்திரியில் வண்டியை நிறுத்தினார். இன்னும் உடல் மொத்தமும் நடுங்கிக்கிடக்க துடித்து போனான் ஆதி கேசவன்.
“இத பாக்கவா டா உன்ன தேடி வந்தேன்…” வழி எங்கும் புலம்பியவாறே வந்த ஆதி முகம் அந்த ஓட்டுனருகே பாவமாக போனது.
“இவனுக எல்லாம் காசு சம்பாதிக்கிறதுல சட்ட திட்டம் பாக்க மாட்டாங்க தம்பி… அடுத்தவன் வலில துடிக்கிறப தான் கேட்டது படிச்சது எல்லாம் புத்தில உரைக்கும். எத்தனை உயிரை காவு வாங்கிருக்கங்களோ” அரசு மருத்துவமனையை பார்த்ததும் தான் ஆதிக்கு ஓரளவிற்கு நிம்மதியே வந்தது.
வேகமாக ஒரு ஸ்ட்ரெச்சர் இழுத்து வந்த ஓட்டுநர் ஆதிக்கு உதவ, அவசரம் உணர்ந்து அங்கிருந்த வார்டு பாய், செவிலியர் என சிலர் விரைந்திட, உதய் அவசர சிகிச்சை பிரிவில் நுழைந்தான். உதய்யை அழைத்து சென்ற வழியையே பார்த்திருந்த ஆதியின் கால்கள் அப்டியே தடுமாற, சுவற்றில் சாய்ந்து தரையில் அமர்ந்துவிட்டான்.
என்ன கொடுமையான நாட்கள்… ஒரு துக்கத்திலிருந்து மீண்டு வரும் முன் அடுத்த துக்கம் கதவை திறந்து காத்திருந்தது…
“உத… உதய்யபா… பாத்துக்கோ…” கயாத்திரியின் குரல் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்து ஏதோ ஒன்று குடைந்தது ஆதியின் மூலையில். தலையை பிடித்து அமர்த்திருந்தவன் தோளில் கை வைத்து குலுக்கினார் ஆட்டோ ஓட்டுநர்.
“தம்பி போன் ரொம்ப நேரமா அடிக்கிது” என்கவும் தான் உதய்யின் கைபேசியை எடுத்து பார்த்தான். ஜெயன் தான் அழைத்தது.
“எங்கடா இருக்க? எனக்கு என்ன பண்றது ஏது பண்றதுன்னு தெரியலடா… அவன் ஒடம்பு எல்லாம் ரத்தம், எத்தனை வெட்டுன்னு தெரியலடா… உதய் உதய்ன்னு அத்தனை தடவ கூப்பிட்டேன்…”
“சார்…”
“கண்ண தொறக்க கூட மாட்டிக்கிறான்டா… கடைசியா பிக்ஸ் வந்து ஒடம்பெலாம் தூக்கி தூ…”
“சார்… பொறுமையா இருங்க”
“தூக்கி போட்டுச்சு… உள்ள போய் ரொம்ப நேரமாச்சு யாரும் எ…”
மனதில் தோன்றியதெல்லாம் பைத்தியம் போல் பிதற்றியவனை ஜெயனின் சத்தமான குரல் தான் நிதானத்திற்கு கொண்டு வந்தது, “ஆதி நிறுத்துங்க” நிறுத்தியதும் சிறு குழந்தை போல் அழுதவனை தொலைதூரத்தில் இருந்த ஜெயனால் தட்டி கொடுத்து கூட சமாதானம் செய்ய முடியவில்லை.
கலங்கிய விழிகளோடு ஆட்டோ ஓட்டுனரை ஏற்றிட்டு பார்த்தவன் கைபேசியை அவரிடம் நீட்டி, “கொஞ்சம் அட்ரஸ் சொல்லுங்க ப்ளீஸ் ண்ணா” உடனே வாங்கி அவர் ஜெயனுக்கு முகவரியை கூறிவிட்டு ஆதி அருகில் அமர்ந்தார் கைபேசியை நீட்டி.
அதை வாங்கியவனுக்கு அப்பொழுது தான் நினைவு வந்தது அவருக்கு பணம் கொடுக்காதது. பாண்ட் பாக்கெட்டில் கை விட்டு பார்த்தான், இருநூறு ருபாய் மட்டுமே இருக்க வேறு பணம் அவனிடம் இல்லை. யோசிக்காமல் கழுத்தில் இருந்த வெள்ளி சங்கிலியை அவிழ்த்தான்…
ரத்தம் படிந்த தன்னுடைய கைகளில் காற்றின் வேதியல் மாற்றத்தால் சற்று கருகிய நிறமாய் மாறியிருந்தாலும் ஆதியின் கண்களுக்கு அது விலைமதிப்பற்றதாகவே மின்னியது. உதய் வாங்கி தந்த வெள்ளி சங்கிலி. இத்தனை நாட்கள் வீட்டின் தாழ்வாரத்தில் ஒரு பெட்டினியுள் கிடந்ததை நேற்று தான் எடுத்து அணிந்தான்.
அவனை பார்த்து சிரித்தவர், “நான் இன்னைக்கு உயிரோட இருக்க காரணமே அந்த பையன் தான் ப்பா…சவாரி ஒன்னு முடிச்சிட்டு வீட்டுக்கு ஆட்டோல போயிட்டு இருந்தேன் ராத்திரி ஒரு மணி இருக்கும், நடு ரோட்டுல வச்சு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு, இந்த பையன் தான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி என்ன இன்னைக்கு நிக்க வச்சிருக்கான்…
அன்னைக்கு எனக்கு ஏதாவது ஆகிருந்தா என் பொண்ணு அனாதையா தான் இருந்திருப்பா. என் உயிரை காப்பாத்துன அவனுக்கு நான் அதே உதவிய தான் பண்ணிருக்கேன். காச குடுத்து என்ன மறுபடியும் கடனாளியா மாத்திடாத” என்றவர் மேலும், “போன்ல பேசுன பையன் வந்ததும் நான் கிளம்புறேன். பொண்ணு தனியா வீட்டுல எனக்காக காத்துட்டு இருக்கும்” என்றார்.
அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை கண்ணீரோடு கை எடுத்து கும்பிட்டவன் அவர் காலையும் பற்றி நன்றி பல உரைதான்.
அவனை தோளோடு அணைத்த அந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுதலாய் இருக்க அடுத்த சில நிமிடங்களில் ஜெயனும் அவனுடைய ஆட்கள் சிலரும் வேகமாக வர முதலில் ஆதி கூறியது உதய்யின் குடும்பத்திற்கு இது பற்றி தெரிய வேண்டாம் என்று தான். இருமனதாக ஜெயனும் தலையாட்ட, “வேற ஹாஸ்பிடல் பாருடா… இங்க சும்மா பர்ஸ்ட் எயிட் பண்ண தான் வந்தோம்”
“நான் வர்றப்பயே எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன். டாக்டர்ஸ் கிட்ட பேச பசங்க போயிருக்காங்க” ஜெயன் வந்தது ஏதோ பலம் வந்தது போன்று தோன்றியது ஆதிக்கு. சற்று தெளிந்திருந்தான்.
ஆனால் ஜெயனால் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை அதுவும் ஆதியின் அடர் நீல நிற சட்டையிலும் தெரிந்த உதய்யின் ரத்தம்… “எப்படி சார் ஆச்சு?” கேட்டான்.
“நாலு ***** மாடுக வெட்டிருக்கானுக” காதிலே கேட்க முடியாத நான்கு வார்த்தைகள் அடுத்து வந்தது.
அழுகையில் சிவந்திருந்த ஆதியின் முகம் அப்பொழுது கோவத்தில் சிவந்திருந்தது. ஆதியை உன்னிப்பாக பார்த்த ஜெயன் சற்று தொலைவிலிருந்து தன்னுடைய அசிஸ்டன்ட் ஒருவனை கையசைத்து ஆதியை சுட்டிக்காட்ட அவனும் சில நொடிகளில் ஒரு மருத்துவரோடு வந்தான்.
“இங்க உக்காருங்க” ஆதியை பிடித்து வம்படியாக அமர வைத்த ஜெயன் மருத்துவரிடம் அவனது கையில் பட்டிருந்த பலமான வெட்டிற்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினான். அவன் ஆழ்ந்த காயத்திற்கோ, மருத்துவரிடம் தையலோ அவனுக்கு சிறிதும் வலியை தரவில்லை.
“ரிமூவ் பண்ணி தா” கை காயத்திற்கு மருந்தாற்றி முடிக்கும் முன் கடவுச்சொல் நீங்க ஆதியின் கைகளில் விழுந்தது உதய்யின் கைபேசி.
அதில் தான் எடுத்த அந்த நால்வரின் புகைப்படத்தை காட்டியவன், “இவங்கள தெரியுமா?” நால்வரையும் பார்த்தான் ஜெயன். சிறிதும் பரிச்சயமில்லா முகங்கள்.
“தெரியல” – ஜெயன்
“இவனுக தான் நான் போய் பாத்தப்ப அங்க இருந்தது. யாரோ சொல்லி வந்துருக்கானுக. அந்த பக்கம் சிசிடிவி எதுவும் இருந்தா செக் பண்ண சொல்லு” இன்னொரு கைபேசியை அவன் கையில் கொடுத்தான்.
“அங்கேயிருந்து எடுத்தேன். இந்த ஐ-போன் நிச்சயமா அவனுக யூஸ் பண்ற மொபைல் இல்ல. வேற யாரோ அங்க இருந்துருக்காங்க. யாருன்னு மட்டும் கண்டு புடி” – ஆதி
ஜெயனின் வார்த்தைகளில் பொறுமை பறக்க, “அத சொல்ல நீ யாருடா… உள்ள குத்துயிரும் கொலையுயிருமா இருக்கறவன பாத்ததுக்கு அப்றமும் வாய பொத்திட்டு நின்னு அழுக சொல்றியா? சும்மா விட மாட்டேன் டா. ஏண்டா இவன் மேல கை வச்சோம்ன்னு ஒவ்வொரு செகண்டும் பீல் பண்ணியே சாகனும் அவன். அது வர ஓய மாட்டேன்” சொடக்கிட்டு சவால் விட்டான் ஆதி.
“இதுக்கு பயந்து தான் சார் வேணாம்னு சொல்றேன். உதய் சார்க்கு தெரிஞ்சா தன்னால தான்-னு நெனச்சு ரொம்ப கஷ்டப்படுவாரு” – ஜெயன்
“அவனுக்கெல்லாம் நான் பயப்புற்ற ஆள் இல்ல. என் மேல ஒரு சின்ன அடி பட்டத்துக்கே அடுத்த நாள் மினிஸ்டர் செத்து கெடந்தான்ல இப்ப என்னோட டர்ன்… எப்ப அவனை ரத்த கரையோட என் கைல தூங்குனேனோ அப்பயே இது என் பொறுப்புல வந்துடுச்சு. நீ ஆள கண்டு புடி… இல்லையா நின்னு வேடிக்கை மட்டும் பாரு.”
அப்படி அவன் மாட்டேன் என்றால் ஆதி தானே சென்று அத்தனையையும் கண்டு புடிடித்துவிடுவான் என்பதால் சரி என்று கூறுவதை தவிர வேற வழி இல்லாமல் போனது ஜெயனுக்கு. உதய்யின் நிலை பற்றி அறிந்துகொள்ள தானே மருத்துவரை பார்க்க காத்திருந்தான். சில நிமிடங்கள் காத்திருந்தான். எவரும் வெளியில் வரவும் இல்லை உள்ளேயும் செல்லவும் இல்லை…
பொறுமை தாங்காமல் உள்ளே சென்றவனுக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களே தெரிய ஒரு மன்னிப்புடன் வெளியில் வந்தான். ஏதோ யாரையும் நம்ப மனம் வரவில்லை சில நிமிடங்களுக்கு முன் நடந்த விபத்தில்.
இன்னும் சில நிமிடங்களில் வெளியில் வந்த மருத்துவர், “ஏங்க என்ன உங்களுக்கு அப்டி ஒரு அவசரம்? உள்ள டிரீட்மென்ட் குடுக்குறதா இல்ல காவல் காக்குறதா?” திடீரென கதவை சடாரென திறந்து வந்ததில் கத்தி தவறாக ஏதாவது நிகழ்ந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்ற பயத்தில் தான் ஆதி மேல் காய்ந்தான் அந்த இளம் வயது மருத்துவன்.
“அவன் எப்படி இருக்கான் சார்?”
பாவமாக கேட்டவனின் பரிதவிப்பை உணர்ந்த அந்த மருத்துவன் பெருமூச்சோடு, “இன்னும் கிரிட்டிக்கல் தான். பிளட் ஸ்டாப் பண்ணிருக்கேன். இங்க பெருசா வசதி இல்ல. நீங்க ஜி.ஹச் இல்லனா ஏதாவது ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க. முதுகல ரெண்டு கன் ஷாட், ஒடம்புல மொத்தம் மூணு வெட்டு, அது இல்லாம கைல அருவா புடிச்சிருக்காரு.
காயம் எதுவும் ரொம்ப ஆழமா போகாதனால ரொம்ப பிளட் லாஸ் ஆகல. ஆம்புலன்ஸ் அரேஞ் பண்ணிட்டேன். டாக்டர்ஸ் வேற யாரும் இல்ல சோ நானே கூட வர்றேன். எனக்கு மிஸ்டர் உதய் மாதவன் ஒரு பிஸ்னஸ் மேன்-னு தெரிஞ்ச காரணத்துல எந்த கொஸ்டின் கேக்காம டிரீட்மென்ட் குடுத்துட்டேன். எல்லாரும் இதே மாதிரி இருக்க மாட்டாங்க. சோ ஏற்பாடு பண்ணிக்கோங்க”
உடனே எல்லா வேலைகளும் மின்னல் வேகத்தில் நடந்தது. பத்து நிமிடத்தில் ஜெயன் ஏற்பாடு செய்திருந்த மல்டி ஸ்பேசாலிட்டி ஹொஸ்பிடலில் ஆம்புலன்ஸ் நிற்க உதய் உடனே சிகிச்சைக்காக உள்ளே அழைத்து செல்லப்பட, அவனுடைய தற்போதைய நிலை பற்றிய தகவல்களை அங்கிருந்த மருத்துவர்களிடம் தெளிவாக எடுத்துரைத்து ஆதி கையில் உதய்யின் உடமைகளை கொடுத்தான் அந்த மருத்துவன்.
“ஒரு டாக்டரா என்னோட வேலைய முடிச்சிட்டேன்… அஸ் எ ஹியூமன் பீயிங் சொல்ல வேண்டிய முக்கிய விசியம் இது. மிஸ்டர் உதய் ஏற்கனவே சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிருக்காரு. சில வருஷங்களுக்கு முன்னாடின்னு வச்சுக்கோங்க… இது உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஓகே… தெரியல்னா ஒரு டாக்டரா சொல்ல வேண்டியது என்னோட கடமை.
இத நான் இப்ப உங்ககிட்ட சொல்ல வேண்டிய ரீசன், டிரீட்மென்ட் குடுக்குறப்ப என்னோட டிரீட்மென்ட்க்கு அவர் குடுத்த ரெஸ்பான்ஸ்… ஏதோ ஒரு கோவம் அவர்கிட்ட இருக்கு முடிஞ்சா இன்னைக்கே எழுந்து நடந்துடுவார் போல… உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல… ஜஸ்ட் பி கேர்புல்” சரி என தலையை ஆட்டினான் ஆதி.
ஆனால் மனதில் மீண்டும் மீண்டும் அந்த மருத்துவரின் வார்த்தைகள் சந்தேகத்தை கொடுத்தது. தான் பேசும் பொழுது தெளிந்திருந்தானே உள்ளத்தளவில்… கோவமோ வருத்தமோ இருந்தால் ஜாடை மாடையாக கூட தகவலை தெரிவித்திருப்பான் என்பது திண்ணம்.
ஆக தான் சென்ற அந்த சிறிய இடைவேளையில் தான் ஏதோ நடந்திருக்கின்றது… யோசனையில் மூழ்கி கிடந்தவன் உதய்யின் வாழ்க்கையில் தனக்கு தெரிந்த அத்தனை மனிதர்களையும் ஒவ்வொருவராக முடிச்சிட்டு பார்த்தான்.
எங்கும் சிக்கல்கள். எங்கு சென்றாலும் உதய் ஏதாவது ஒரு பிரச்னையை பிடித்து வைத்திருந்தான். துணைக்கு ஜெயனை அருகிலே அமர்த்தியவன் கேட்க வேண்டிய சந்தேகங்களை எல்லாம் கேட்க இத்தனை கோணங்களில் கேள்வி வருமா என்ற சந்தேம், சந்தேகத்துடன் சுற்றி திரியும் ஜெயனுக்கே வந்தது.
அத்தனையையும் கேட்டு முடித்தவன் இறுதியாக அந்த மருத்துவன் கொடுத்த உஹையின் உடமைகளை பார்த்தான். ரத்தம் படிந்த அவனின் சட்டை, பாண்ட் இருக்க அதில் ஏதேனும் இருக்கின்றதா என்று பார்த்தான். எதுவும் இல்லை. உதய்யின் கைக்குட்டையை தவிர.
ரத்தம் படிந்த அத்தனையும் குப்பையில் கிடத்தியவன் உதய்யின் தங்க சங்கிலியையும் வெள்ளி மோதிரத்தையும் பத்திரப்படுத்தினான். மேலும் இருந்தது ஆதவன் அன்று உதய்யிடம் கேள்வி கேட்க வைத்த உதய்யின் அலுவலக முத்திரை. முன்னும் பின்னும் திருப்பி சில நிமிடங்கள் பார்த்தான்.
“இது ஒரு டிக்கெட் மாதிரி சார்… எல்லாரும் வச்சிருப்போம், இதுக்குன்னு சில ஸ்பெஷல் ஆக்ஸஸ் இருக்கு லைக் நார்மல் எம்பலாய்ஸ் வர முடியாத இடத்துக்கு நாங்க போகலாம், சார் வீட்டுக்கு எப்ப வந்தாலும் இந்த காயின் காட்டிட்டு தான் போகணும், ஈவென் கார், டூ வீலர் இதுல எது எடுத்தாலும் இத காட்டணும். உதய் சார் கிட்ட இருக்காதே” என்று ஆதியிடமிருந்து வாங்கி அதை ஆராய்ந்தான்.