“டேய், தடிமாடு நீ என்ன டா சொல்ற? என் நம்பரைத் தான் நிஜமாவே கொடுத்தியா?”
“ஆமா, எனக்குன்னு வேற யார் இருக்கா? நீ மட்டும் தானே என் செல்ல அக்கா”
“உன் அக்கா பாசத்துல இடி விழ. இப்ப அந்த பொண்ணு எனக்கு தான் போன் பண்ணுமா டா?”
“அதான் தெரியலை. அதை தான் யோசிச்சிட்டு இருக்கேன். அவ நம்பரை பாக்கவே இல்லை. பாக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன்”
“நீங்க நல்லா வருவீங்க டா. நீங்க லவ் பண்ணுறதுக்கு நாங்க தான் கிடைச்சோமா?”
“என்னது லவ்வா? அதெல்லாம் இல்லையே?”, என்றான் தீபக்.
“நம்பிட்டேன், நம்பிட்டேன். இப்ப அந்த பொண்ணு போன் பண்ணினா நான் உன் கிட்ட தரனுமா?”
“அப்சலியூட்லி”
“வெளக்கமாறு. இப்ப இங்க்லிஷ் வேற. டேய் தீபக், அந்த பொண்ணு போன் பண்ணுறப்ப உன் அத்தான் போன் பண்ணிட்டா என்கிட்ட யாருன்னு கேப்பாரே டா”
“உன் பிரண்டுன்னு சொல்லு”
“என் குடும்பத்துல குண்டு வச்சிராத ராசா. நான் அந்த பொண்ணு போன் பண்ணினா உன் கிட்ட தரேன். ஆனா உன் அத்தான் என்கிட்ட கேட்டா எல்லாம் சொல்லிருவேன். பரவால்லயா?”
“சரிங்க உண்மை விளம்பி. நீ அத்தான் கிட்ட சொல்லிக்கோ. ஆனா காதல் அப்படின்னு எல்லாம் உளறி வைக்காத. சும்மா பிரண்ட். எக்ஸாம்ல டவுட் கேக்க பண்ணுனான்னு சொல்லிரு”
“சொல்றேன், ஆனா அவர் நம்பனுமே?
“நம்ப வைக்கிறது உன் சாமர்த்தியம்”
“சரி சரி பண்ணித் தொளைக்கிறேன். அப்பா கிட்ட மட்டும் என்னை மாட்டி விட்டுராத டா. ஆனா அந்த பொண்ணு போன் பண்ணினா நான் தான் முதல்ல பேசுவேன்”
“ஐயோ நீ முதல்ல எடுத்தா அவ பயந்துறப் போறாக்கா”
“ரொம்ப அக்கறை தான். முதல்ல அவ பண்ணட்டும் அப்புறம் பாப்போம்”
“சரி சரி இது நமக்குள்ளே இருக்கட்டும். அம்மா கிட்ட மூச்சு விட்ட உன் வயித்துக்குள்ள இருக்குற என் மருமகன் உன்னை ஒரு வழி பண்ணிருவான் பாத்துகோ”, என்று சொல்லி சிரித்தான் தீபக். அவன் புன்னகை அவளையும் தொற்றிக் கொண்டது.
அப்போது “இப்ப என்னக்கா பண்ண போற? அந்த நம்பருக்கு போன் பண்ண போறியா?”, என்று கேட்டாள் சௌமி.
“நானா? நான் பண்ண மாட்டேன் பா. நான் அவன் கிட்ட எப்படி பேசுறது?”
“வாய்ட்டு தான் பேசணும். அன்னைக்கு நீ தானே சொன்ன? அவன் என்கிட்ட மட்டும் எதுக்கு சாதாரணமா பேச மாட்டிக்கான்னு. அது எதுக்குன்னு காரணம் கேளு”
“அது அப்ப. ஆனா இப்ப பயமா இருக்கு டி சௌமி”
“என்ன பயம்?”
“புரப்போஸ் பண்ணி தொலைச்சிறுவானோன்னு தான்”
“அப்பாடி எல்லாம் இருக்காதுக்கா. நீயே ஏன் அப்பாடி நினைக்கிற? ஒரு வேளை அப்படியே சொன்னாலும், இன்னைக்கு அந்த கௌதம் கிட்ட சொன்ன மாதிரி இவங்க கிட்டயும் சொல்லிரு. ஆனா முதல்ல உன்னை எப்படி அவங்களுக்கு முதல் நாளே தெரியும்னு கேளு. எனக்கே அது எப்படின்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கு”
“அப்ப போன் பண்ணலாம்னு சொல்றியா?”
“ஆமா”
“நீ பேசுறியா?”
“பிச்சு பிச்சு.. நான் மாட்டேன் பா. நீ தான் பேசணும்”
“பயமா இருக்கு டி”
“அப்ப இந்த பிரச்சனையை இதோட விட்டுரு. அவன் பேச்சையே இனி இழுக்காத”
“அதெப்படி? அவனுக்கு எப்படி என்னோட பேர் தெரியும்? அவனை நான் அன்னைக்கு தானே முதல் முறை பாத்தேன். அவன் படிச்சதும் நம்ம ஸ்கூல்ல இல்லை. அப்புறம் எப்படி”
“வெங்காயம். இதை தானே அவன் கிட்ட கேக்க சொன்னேன். இங்க பாருக்கா. அவன் எதுக்காவேனாலும் நம்பர் கொடுத்துருக்கட்டும். ஆனா நீ இந்த விஷயமும் அப்புறம் எதுக்கு மத்த எல்லார் கிட்டயும் மாதிரி என்கிட்ட எதுக்கு பேச மாட்டுக்கீங்கன்னும் கேட்டுட்டு வச்சிரு”
“சரி, போனுக்கு எங்க போக? நம்ம கிட்ட தான் போன் இல்லையே? வெளிய போய் தான் போன் பண்ணனும்?”, என்றாள் காயத்ரி.
“எப்படியும் நீ இப்படி தான் சொல்வேனு தெரியும். அதனால அம்மா போனை சுட்டுட்டு வந்துட்டேன்”, என்று சொல்லி தன்னுடைய இடுப்பில் சொருகியிருந்த போனை எடுத்துக் கொடுத்தாள்.
“அடப்பாவி, யாராவது போன் பண்ணப் போறாங்க டி. நாம மாட்ட போறோம்”
“ஆமா ஆமா நமக்கு சொந்தம் அப்படியே குமிஞ்சு கிடக்குது. மணிக்கு ஒரு ஆள் போன் பண்ண? அம்மா போனே எப்பவும் வெட்டி தான். அதை தேடக் கூட மாட்டாங்க. அப்படியே கேட்டாலும் கேம்ஸ் விளையாட எடுத்துட்டு வந்தோம்னு சொல்லிக்கலாம்”
“திருட்டு தனம் பண்ணுற மாதிரி பயமா இருக்கு டி”
“அப்ப விடு, நாளைக்கு காலேஜ்க்கு போய் உண்மை என்னன்னு அவங்க கிட்டயே கேட்டுக்கோ. அது முடியலைன்னா இந்த பிரச்சனையை இதோட விட்டுரு”
“இல்லை கேக்கணும்”
“அப்ப கேட்டுத் தொலை”
“அவன் வீட்ல இருப்பானா? வேற யாராவது போன் எடுத்துட்டா?”
“வேற யாராவது போன் எடுத்தா போனை வச்சிரு”
“சரி”, என்று சொல்லி போனை வாங்கிய காயத்ரிக்கு கைகள் நடுங்கியது.
அவன் பேப்பரில் எழுதியிருந்த நம்பரை ஒவ்வொன்றாக
அழுத்தினாள். கடைசி எண்ணை அழுத்தி விட்டு காதில் வைத்தாள். வெளியே யாராவது வருகிறார்களா என்று பார்க்க சௌமி காவல் இருந்தாள்.
கொரொனாவுக்கான தடுப்பு முறைகள் பற்றி சொல்லி முடித்த பின் ரிங் போக ஆரம்பித்தது. காயத்ரியின் இதயத் துடிப்பு எகிறியது.
அந்த பக்கம் போனுக்காக காத்திருந்த ரேவதி போன் வந்ததும் அதை “ஹாய் காயத்ரி”, என்றாள். வேறு ஏதாவது பேசினால் பயந்து விடுவாள் என்பதால் அப்படிச் சொன்னாள்.
தன்னுடைய பெயர் சொன்னதும் அதுவும் ஒரு பெண் பேசியதும் அதிர்ச்சியில் காயத்ரி அமைதியாக இருக்க “காயத்ரி தானே பேசுறது?”, என்று கேட்டாள் ரேவதி.
“ம்ம் நீங்க?”
“நான் தீபக்கோட அக்கா பேசுறேன். ரொம்ப படுத்தி எடுத்துட்டானா என் தம்பி? சரி சரி அவன் உன் கிட்ட பேசனுமாம்? நாம அப்புறம் பேசலாம். இது என் நம்பர் தான். எப்ப வேணும்னாலும் என்கிட்ட பேசு. வீட்ல கேட்டா ரேவதின்னு என் பேரையே சொல்லு. பிரண்டுன்னா சொல்லிக்கோ”, என்று சொல்லி விட்டு தீபக்கிடம் கொடுத்தாள்.
போனை வாங்கிய அவனுக்கும் நெஞ்சம் தடதடத்தது. “ஹலோ”, என்றான் தீபக்.
ஆழ்ந்து ஒலித்த அவன் குரலில் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள் காயத்ரி. அவன் குரலில் இருந்த மென்மை அவளுக்கு மயக்கத்தை கொடுத்தது.
அவள் அமைதியாக இருக்கவும் “ஹலோ”, என்று மீண்டும் சொன்னான் தீபக்.
காயத்ரி அசையாமல் இருப்பதைப் பார்த்த சௌமி “அக்கா பேசு”, என்று சொல்லி அவளை அசைத்தாள்.
அப்போது தீபக் மீண்டும் “ஹலோ”, என்று சொல்லவும் தன்னிலைக்கு வந்த காயத்ரி “ஹலோ”, என்றாள்.
“மாத்தி மாத்தி ஹலோ சொல்லிக்கிட்டு இருக்கீங்க? சரியான லூசு டா நீங்க”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள் ரேவதி.
“தீபக்.. நான்….”, என்று இழுத்தாள் காயத்ரி.
“சொல்லு காயத்ரி, வீட்ல யாரெல்லாம் இருக்காங்க? உன்னோட ஃபேமிலி பத்தி சொல்லு காயு””, என்று கேட்டான் தீபக். பொதுப்படையாக பேசினால் அவளும் சகஜமாவாள் என்று தான் அவன் அப்படிக் கேட்டான்;.
இந்த தருணம் கனவிலும் வரும் என்று அவன் நினைக்க வில்லை அதனால் அவனுக்குமே என்ன பேச என்று குழப்பம் வந்தது.
“இந்த வொட்டார்ஸ் லிஸ்ட் எடுக்க வேற ஆள் இருக்காங்க. அந்த வேலையை நீ செய்ய வேண்டாம். எதுக்கு என் உயிரை வாங்குற? உன்னை என்னைக்கு பாத்தேனோ அன்னைல இருந்து எனக்கு டென்ஷன் தான். நீ என் வாழ்க்கைல வந்ததுல இருந்து நான் நானா இல்லை. எதுக்கு எதுக்குன்னு காரணம் யோசிச்சு மண்டை காயுது. இப்ப போன் நம்பர் வேற கொடுத்துருக்க? எதுக்கு கொடுத்த? அதைச் சொல்லு முதல்ல”, என்று நேரடியாக விசயத்துக்கு வந்தாள் காயத்ரி.
அவள் பேசியதைக் கேட்டு தான் அவள் மனதை பாதித்திருக்கிறோம் என்று எண்ணி அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
அதனால் நிதானமாக “எல்லாம் சொறேன். முதல்ல நீ எதுக்கு சாரி சொன்ன? அதைச் சொல்லு”, என்றான்.
“அது.. அன்னைக்கு நீ செஞ்சதை தப்பா நினைச்சிட்டேன். அதுக்கு தான்”
“ஓ, நான் இதை சொன்ன அப்புறம் தான் நான் நல்லவன்னு உனக்கு தெரிஞ்சதா?”, என்று கேட்டவனின் குரலில் தன்னை தவறாக நினைத்து விட்டாளே என்ற வலி வெளிப்பட்டது.
“நீ நல்லவனா கெட்டவனான்னு எனக்கு எப்படி தெரியும்? என்னைப் பாத்து கண்ணடிச்ச. அப்பாடி இருக்க நான் எப்படி உன்னை நல்லவன்னு நினைக்க முடியும்?”
“எதுக்குன்னு விளக்கம் கேட்டுருக்கலாம்ல?”
“நீ கேக்க விட்டியா? கிடைச்ச சந்தர்பத்துல எல்லாம் நீ என்கிட்ட பேசவே இல்லை. அப்ப எப்படி நான் விளக்கம் கேட்க முடியும்?”
“சரி இப்ப கேளு”
“எனக்கு முதல்ல எண்ணை எப்படி உனக்கு தெரியும் அப்படிகுறதுக்கு ஆன்சர் வேணும்? எதுக்கு முதல் நாள் சீனியர்ஸ் எண்ணை ரேகிங்க் பண்ணப்ப வந்து காப்பாத்தின? என் பேரை வேற சரியா சொன்ன? அத்தை பொண்ணு, மாமா பொண்ணுன்னு உளறின. அது எப்படி?”
“இப்ப நீ என்கிட்ட சாரி கேக்க போன் பண்ணியா? இல்லை இந்த டவுட் கேக்க போன் பண்ணியா?”
“நான் சாரி அப்பவே கேட்டுட்டேன். எனக்கு இப்போதைக்கு இந்த டவுட்க்கு தான் ஆன்சர் வேணும். அதுக்கு தான் போன் பண்ணுனேன்”
“சரி சொல்றேன். உன்னை எனக்கு கவுன்சிலிங்க் அப்பவே தெரியும்”
“என்ன?”
“ஆமா, நீ உன் அப்பா கூட வந்துருந்தள்ள? அப்பவே நான் வெயிட்டிங் ரூம்ல வச்சு உன்னை பாத்தேன் அப்புறம் நீ மெடிக்கல் டெஸ்ட்க்கு போனப்ப உங்க அப்பா என்கிட்ட பேசிட்டு இருந்தாங்க. எந்த காலேஜ் எடுத்துருக்கன்னு என்கிட்ட கேட்டாங்க. நான் சொன்னப்ப தான் அவங்க உன்னைப் பத்தி சொன்னாங்க”, என்று சொன்ன தீபக் “அப்ப மயங்கினது தான்,இப்ப வரை எழுந்துக்கலை”, என்று எண்ணிக் கொண்டான்.
“எங்க அப்பா கிட்ட பேசினியா? எங்க அப்பாவை உனக்கு தெரியுமா?”, என்று ஆச்சர்யமாக கேட்டாள் காயத்ரி.
“அன்னைக்கு தான் பாத்தேன். ரொம்ப நேரம் பேசினோம். நம்ம ரெண்டு பேரும் ஒரே காலேஜ்னு தெரிஞ்சதும் அதுவும் ஒரே கிளாஸ்னு தெரிஞ்சதும் உங்க அப்பா ரொம்ப சந்தோஷப் பட்டாங்க. உன்னைப் பத்தி, நீ எங்க படிச்ச, உன் மார்க் என்னன்னு எல்லாம் சொன்னாங்க. கடைசியா உன்னை நல்லாப் பாத்துக்கணும்னு என்கிட்ட கேட்டுக்கிட்டாங்க. அவர் சொன்னதுக்காக தான் அன்னைக்கு சீனியர் கிட்ட உனக்காக பேச வந்தேன் போதுமா?”
“அப்படியா? இவ்வளவு நடந்துச்சா?”, என்று கேட்ட காயத்ரி இப்படி நடந்திருக்கும் என்று எதிர் பார்க்கவே இல்லை.
“ஆமா”, என்றான் தீபக்.
“ஆனா அதை ஏன் நீ அப்பவே என்கிட்ட சொல்லலை. நேரடியா என்கிட்டயே, உங்க அப்பாவை பாத்தேன்னு சொல்லிறுக்கலாமே”
“சும்மா உன்கிட்ட விளையாடனும்னு தோணுச்சு. அதான் அப்படி உன்னை அவாய்ட் பண்ணுனேன். ஆனாலும் கேண்டீன்ல உனக்கு ஹெல்ப் பண்ண வந்தேன். ஆனா நீ திட்டிட்ட”
“அது பிரச்சனை ஆகக் கூடாதுன்னு தான்”
“அப்புறமா அதை தெரிஞ்சிக்கிட்டேன். நான் சும்மா விளையாட்டுக்கு உன்கிட்ட பேசாம இருந்தது உன்னை இந்த அளவுக்கு அஃபெக்ட் பண்ணிருக்கும்னு நான் நினைக்கலை. அதுக்கு சாரி. அப்புறம் பஸ்ல நடந்ததை எக்ஸ்ப்லைன் பண்ண நினைச்சேன். நீ வாய்ப்பு கொடுக்கலை. அப்ப நீ அவாய்ட் பண்ணது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்ப தான் உன்னோட மனசும் புரிஞ்சது. உடனே உனக்கு புரிய வைக்க நினைச்சேன். ஆனா நீ என் முகத்தைக் கூட பாக்கலை. அதனால தான் உன் கையைப் பிடிச்சேன். அதுக்கு சாரி. ஆனா ஒரு பிரண்ட் அப்படிங்குற முறையில தான் அன்னைக்கு உன் கையை பிடிச்சேன்”, என்று அவன் சொன்னதும் அவன் மனசாட்சி “பிரண்டா, நாங்க நம்பிட்டோம் நம்பிட்டோம்”, என்று அவன் மனதுக்குள் குரல் கொடுத்தது.
“இப்ப உன்னோட எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிஞ்சிட்டா காயத்ரி?”
“ம்ம்”
“ஓகே, இனி நாம பிரண்ட்ஸா இருக்கலாமா? இனி நமக்குள்ள எந்த பிரச்சனையும் வேண்டாம். எல்லார் கிட்டயும் எப்படி பேசுறுமோ அப்படியே நாமளும் பேசலாம்”
“சரி”
“நம்ம கிளாஸ்ல யாருக்கும் நாம பிரண்டா ஆனது தெரிய வேண்டாம்”
“ஏன்?”
“தேவையில்லாம கதை கட்டி விடுவாங்க. அதனால நாம கிளாஸ்ல பேசிக்க வேண்டாம். அவசியம்னா பேசினா போதும்”
“அப்படி எப்படி பேச முடியும்? கிளாஸ்லயும் பேசக் கூடாதுன்னா நாம எப்படி பிரண்ட்?”
“அதான் போன் இருக்கே”
‘ஐயையோ இது அம்மா போன். இன்னைக்கு காரணம் கேக்க தான் போன் பண்ணுனேன். நாளைக்கு எல்லாம் பண்ண மாட்டேன்”
“ஓகே, நீ எண்ணை பிரண்டா நினைச்சா உனக்கு முடியுறப்ப பேசு”
“சரி, இப்பவாது சொல்லலாமே? உங்க வீட்ல யார்லாம் இருக்கான்னு”
“நான் அப்புறம் சொல்றேன். ரொம்ப நேரம் பேச முடியாது”
“சரி பேச முடியலைன்னா மெஸ்ஸேஜ் பண்ணு”, என்று சொன்னதும் சரி என்று சொல்லி போனை வைத்தாள்.
அதன் பின் மனது அமைதி அடைந்தது போல இருந்தது காய்த்ரிக்கு. அவள் மனதில் இருந்த கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைத்தது.
அதுவும் தனக்கு பிடித்த தந்தையே அவனிடம் பேசியிருக்கிறார் என்று தெரிந்ததும் காயத்ரிக்கும் தீபக்கை மிகவும் பிடித்துப் போனது. தன்னால் சிரித்துக் கொண்டிருந்த காயத்ரியை வியப்பாக பார்த்தாள் சௌமி.
காதல் தொடரும்!!!