கயல்விழி தனது அறைக்குள் வந்து கதவடைத்துவிட்டு தனது கட்டிலில் விழுந்தவள் எண்ணமெல்லாம் சத்யாவிடமே சென்றது.அதுவும் அவனுக்கு நிச்சியம் என்று கூறியவுடன் தன் மனது ஏன் துடிக்க வேண்டும் என்று நினைத்தவள் திடீர் என்று எழுந்து அமர்ந்தாள்.
“அப்போ….நான்….நான் சத்யாவை…இல்ல…இல்ல…இது தப்பு….நான் வேண்டாம்….அவனுக்கு நான் வேண்டாம்….”என்று தனக்குள் கூறிக் கொண்டாள்.இனி சத்யாவிடம் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.ஆனால் இனி நடக்கவிருக்கும் அனைத்து சம்பவங்களும் அவளை அவனுடன் இணைய வைப்பதிலேயே இருக்கும் என்பதை அவள் அறியவில்லை.
சத்யாவிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்தவுடன் தான் அவளால் இயல்பாகவே இருக்க முடிந்தது.மெல்ல எழுந்து குளியலறை சென்று குளித்துவிட்டு வந்தவள்,தனக்கு காபி கலந்து கொண்டிருந்தாள்.அலுவலகத்திற்கு ஏற்கனவே இரண்டு நாட்கள் விடுமுறை கூறியிருந்ததால் அவளுக்கு சற்று இலகுவாகவே இருந்தது.கலந்த காபியை பருகிக் கொண்டே அமர்ந்தவளுக்கு அனு தன் சிறு வயதில் அனுபவித்த தனிமை பற்றி கூறிய நினைவு வர தன்போல் தனது குடும்பத்துடன் இருந்த நிமிடங்கள் கண்முன்னே விரிந்தது.அப்போது தான் உணர்ந்தாள் தாயிடம் நேற்றிலிருந்து பேசவில்லை என்று.
வேகமாக தனது கைபேசியை எடுத்தவளுக்கு மனதில் ஒரு சின்ன எதிர்பார்ப்பு அன்னை அழைத்திருப்பாரா என்று.பேசியை எடுத்து பார்த்தவளுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று தெரிந்தவுடன் மனதில் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டது.தான் இவ்வளவு தூரம் பேசியும் தன்னிடம் பேச மறுக்கிறார்களே என்று நினைத்தவளுக்கு கண்களில் மீண்டும் நீர் படலம் அத்துடன் கோபமும் துளிர்விட்டது.
என்ன தான் கயல்விழி தன் மனதை திருத்திக் கொண்டாலும் சில குழந்தை தனங்களை மாற்ற முடியாது அல்லவா அது போல் தான் கயல்விழிக்கும் தாயின் மேல் பிணக்கு.அதனால் பேசியை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டாள்.
“ஒண்ணும் பேச வேண்டாமே….யாரும் என்கிட்ட பேச வேண்டாமே….எனக்கு நானே பேசிப்பேன்….போங்க….போங்க….எனக்கு யாரும் வேண்டாம்….”என்று தன் தலையணையில் முகத்தை புதைத்து அழுதவள் ஒரு கட்டத்தில் உறங்கியும்விட்டாள்.
%%%%%%%%%%%%%%%%%%%
இரும்பு பட்டறையில்,
“என்னடா அவளை பிடிக்க ஆள் ஏற்படாடு பண்ணாயாச்சா….”என்று கேட்டபடி வந்து அமர்ந்தான் ரத்னம்.
“எல்லாம் அனுப்பியாச்சு ண்ணேன்…ஆனா அந்த போலீஸ்காரன் சுத்திக் கிட்டே இருக்கான்….”என்று அவனின் அல்லக்கைகள் கூற,ஒரு பெரிய இரும்பு ராடு ஒன்று பறந்து வந்து அவர்களின் மேல் விழுந்தது.
“என்னங்கடா என்கிட்டேயே பூச்சாண்டி காட்டுறீங்களா….போங்க நான் கொடுத்த வேலையை பாருங்க….”என்று அவர்களை அனுப்பிவிட்டான்.ஆனாலும் அவர்கள் கூறியதை போல் ரத்னத்தின் மனதிலும் சற்று நடுக்கம் தான் சத்யா தன்னை கண்டு கொண்டால் என்ன செய்வது என்று.உடனே ரத்னம் தன் கைபேசியில் யாருக்கோ அழைத்து,
“நீ சொன்னது போல நான் செஞ்சிட்டேன்…ஆனா இது சரியா வருமா???”என்று கேட்க மறுபக்கம் கூறிய பதிலில் சற்று திருப்தியுற்றவனாக,
“சரி…சரி….நீ சொன்னா சரியா தான் இருக்கும்….வைக்குறேன் பார்ல பார்க்கலாம்….”என்று கூறி வைத்தான்.
%%%%%%%%%%%%%%%%%%
மாலை நேரம் தான் கயல்விழி கண்விழித்தாள்.விழித்தவள் நேரத்தை பார்க்க நேரம் ஐந்தைக் காட்ட,
“ச்சு….இவ்வளவு நேரமா தூங்கிட்டோம்….”என்றவள் எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து முதலில் ராஜேஷிற்கு தான் அழைத்தாள்.அனன்யா எப்படி இருக்கிறாள் என்று கேட்டவள் அவள் நலமுடன் உள்ளால் என்று மறுபுறம் இருந்து பதில் வரவும் தான் அவளுக்கு மனது சற்று நிம்மதி அடைந்தது.அனுவிடமும் சிறுது நேரம் பேசிவிட்டு தான் பேசியை வைத்தாள்.பின் தன் தாய்க்கு அழைக்கலாமா வேண்டாமா என்று யோசனையில் இருந்தவள் பின்,
“அடியே கயல் இப்ப தான் பாரூ…கொஞ்சம் பேச ஆரம்பிச்சிருக்கு….நீ பேசறத விட்ட….இப்படி ஒரு பொண்ணு இருக்குனே எல்லாருக்கும் மறந்துடும்….ம்ம்….விடக்கூடாது….”என்று சபதம் போல் கூறிக் கொண்டவள் உடனே தன் தாய்க்கு அழைத்தாள்.அழைப்பு போய் கொண்டிருந்ததே தவிர எடுக்கப்படவில்லை.இரண்டு,மூன்று,நான்கு என்று அழைப்பின் எண்ணிக்கை கூடியது பின் ஒருகட்டத்தில் எடுக்கவில்லை என்றதும் விட்டுவிட்டாள்.
“ஆஆஆஆ……ஏன் ஏன்….நான் மட்டும் தான் தப்பு பண்ணுனவளா….எத்தனை பேரு பெரிய தப்பு எல்லாம் பண்ணிட்டு தைரியமா வெளியில சுத்துறாங்க….ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது….ச்சு….போங்க…”என்று கோபத்தில் பேசியை தூக்கி விசிறி அடித்துவிட்டாள்.இங்கு தான் அனைத்தும் கயல்விழிக்கு பாதகமாக முடிந்தது.ஆம் கயல் தன் தாயிடம் பேசியிருந்தாள் என்றால் மீண்டும் மருத்துவமனை சென்றிருக்கமாட்டாள் ரத்னத்திடம் மாட்டியும் இருக்க மாட்டாள்.ஆனால் விதி அவளை இன்னலில் தள்ளியிருந்தது.
கயல்விழிக்கு வீட்டில் இருப்பது ஏதோ மூச்சடைப்பது போல் இருக்க உடனே கிளம்பிவிட்டாள் அனுவை பார்க்க.அவள் கோபத்தில் அடித்ததில் அவளது பேசியும் உடைந்திருக்க,
“ப்ச்….உடைஞ்சு போச்சா….எனக்கு இது தேவை தான்….”என்று தன்னையே அதட்டிக் கொண்டவள்,அதனுள் இருந்த சிம் கார்டை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.அவள் வீட்டிற்கு வெளியில் சத்யா ரோந்து பணியில் காவலர்களை நியமத்திருந்தான்.ரத்னம் எங்கு சென்றான் என்று தெரியவில்லை அதனால் எவ்வாறு வேணாலும் அவன் அனுவை நெருங்க வாய்ப்பு உள்ளது என்று சத்யா அனைத்து வழியையும் அடைத்து வைத்திருந்தான்.ஆனால் அவனும் கயலை விட்டுவிட்டான்.ஆக யாரும் கயல் என்பவளை நினைக்கவில்லை விட்டுவிட்டனர்.ஆனால் அனைவரும் அவளை நினைப்பது மட்டுமல்லாது தேடியும் அலையபோகின்றனர்.
கயல்விழி மருத்தவமனை வரும் வரை அவளை ரத்னத்தின் ஆட்கள் யாருக்கும் சந்தேகம் வராமல் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர்.மருத்தவமனையின் உள்ளே நுழைந்தவுடன் கயல் அனு இருக்கும் அறைக்கு சென்றாள்.அனுவை இப்போது நார்மல் வாடிற்கு மாற்றியிருந்தனர்.அதனால் அனு இருக்கும் அறைக்கு சென்றாள்.
கயல்விழி செல்லும் போது அங்கு ராஜேஷ்,ஆர்த்தியுடன் மேலும் இருவர் இருந்தனர்.அவர்கள் அனுவின் தாத்தா,பாட்டி என்று புரிந்தது.ஆர்த்தி ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தாள் அழுதழுது முகம் எல்லாம் சிவந்து இருந்தது.கயலைக் கண்டவுடன் ராஜேஷ் இறுக்கையில் இருந்து எழுந்து வந்து,
“வா ம்மா….அன்னைக்கு உனக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல முடியல….ரொம்ப தேங்க்ஸ்மா….நீ இல்லனா….என் குட்டிமா….”என்று கூற முடியாமல் அவன் அழ,கயலுக்கு தான் கஷ்டமாகி போனது.
“அச்சோ…அண்ணா…என்னதிது…எனக்கு கஷ்டமா இருக்கு….அனு எனக்கு தங்கச்சி போல தான்…சோ ப்ளீஸ்….”என்று கயல்விழி கூற,
“நீ சொல்லாம் மா…ஆனா எங்களுக்கு நீ எங்க குலசாமியை திருப்பி தந்திருக்க….நீ எங்களுக்கு தெய்வம் தான்மா….”என்று அனுவின் தாத்தாவும்,பாட்டியும் கயலின் கைகளை பிடித்துக் கொண்டு அழுதுவிட,கயலுக்கு மேலும் சங்கடமாகி போனது.அவள் சங்கடபடுவதை உணர்ந்த ராஜேஷ்,
“ம்மா…ப்பா…விடுங்க…அவ அனுவை பார்க்கட்டும்…”என்று கூறி அனுவை பார்க்க அழைத்து சென்றான்.அனுவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு கயல் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த நேரம் ரத்னத்தின் ஆட்கள் அவளைக் கடத்தியிருந்தனர்.
கயல்விழிக்கு கண்களை திறப்பதே மிக கடினமாக இருந்தது அவள் மெல்ல தனது இமைகளை திறக்க முயன்று தோற்றாள்.ஆனால் அவளின் காதில் ஏதேதோ பேச்சுக்குரல்கள் கேட்டுக் கொண்டு தான் இருந்தது.ஆனால் தெளிவாக இல்லை என்றாலும் ஏதோ ஒன்றில் நாம் சிக்கியுள்ளோம் என்பது மட்டும் புரிந்தது.
மேலும் சில வினாடிகள் கழித்து கயல்விழிக்கு சுயநினைவு திரும்பி இருந்தது.அவள் மெல்ல கண்களை திறந்து பார்க்க அந்த இடம் முழுவதும் இரும்பு சாமான்கள் மட்டுமே இருந்தது.சற்று தொலைவில் நான்கு தடியர்கள் அமர்ந்திருந்தது தெரிந்தது.கயல் தனது கைகளை அசைக்க முயல அதுவும் கட்டப்பட்டிருந்தது.அவள் எழுந்து குரலை உயர்த்தும் நேரம் கூட்டத்தில் ஒருவன்,
“டேய் மச்சி….குட்டி செம கட்டையா இருக்கா…இன்னைக்கு???”என்று அவன் அசிங்கமாக பேச,குரலை உயர்த்த போன கயலுக்கு வார்த்தைகள் தொண்டைக்குள் அடங்கிவிட்டது.
“அய்யோ கடவுளே….நான் எப்படி இவன்கிட்ட வந்தேன்….இவனுங்க யாரு???”என்று நினைத்தவளுக்கு அப்போது தான் புரிந்தது தான் மருத்துவமனை விட்டு வரும் போது யாரோ தன்னை பின் தொடர்ந்து வருவதை போல இருக்க திரும்பி பார்க்கும் நேரம் யாரோ அவளின் முகத்தில் எதையோ அழுத்தினர் பின் எதுவும் அவளுக்கு நியாபகம் இல்லை.இப்போது புரிந்தது தன்னை யாரோ கடத்தியிருக்கிறார்கள் ஆனால் யார்,எதுக்கு என்னை கடத்தனும் என்பது தான் புரியவில்லை.அவளின் நினைவுகளை தடுப்பது போல் மேலும் ஒருவன் பேசியது கேட்க,கயலுக்கு மொத்த உடலும் ஆடி தான் போனது.
“கடவுளே….என்னதிது…இப்படி ஒரு கேடு கெட்ட கும்பல் கிட்ட வந்து மாட்டியிருக்கேன்….என்னை என்ன செஞ்சு போட்டலும் யாருக்குமே தெரியாதே….யாரு இருக்கா எனக்காக???”என்றவளின் கலங்கிய குரல் கடவுளை அடைந்தது போலும்,
“கயலம்மா….”என்ற கதறலுடன் தனது படுக்கையில் இருந்து எழுந்தார் பார்வதி.
இன்று தன் இளைய மகளிற்கு திருமணம் முடிந்திருந்தது.அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வந்தவருக்கு கயலின் நியாபகம் தான் அதிகமாக வாட்டியது.
அன்று வீடு வந்திருந்த மகளை கண்ட நினைவே அவரை மெல்ல வாட்டியது.அதனால் அவரால் திருமணத்தில் கூட மனதார கலந்து கொள்ள முடியவில்லை.மனதெல்லாம் ஏதோ ஒன்று அவரை அழுத்துவது போன்று உணர்வு.அதன் தாக்கம் தாங்காமல் உடம்பு முடியவில்லை என்று அப்போது தான் படுக்க வந்தவர் ஏதோ உந்த தனது பேசியை எடுத்து பார்த்தார்.அதில் பத்துக்கும் மேற்பட்ட தவறிய அழைப்பு கயலிடம் இருந்து வந்திருந்தது.
“அச்சோ….கயலம்மா…மறந்தே போயிட்டேன்டா…மன்னிச்சிடு….”என்று தன்னை திட்டிக் கொண்டே மகளுக்கு அழைத்தார்.ஆனால் பேசி அனைக்கப்பட்டதாக வர பார்வதிக்கு கண்கள் மேலும் கலங்கியது,
“ம்மா…ம்மா….நான் ஒண்ணு கேட்பேன்….நீ ஓகே சொல்லனும்…எனக்கு நந்துவோட மேரேஜை காட்டுறீயா….நான் வீடியோ கால் பண்ணுறேன்….ப்ளீஸ்….”என்று அன்று மகள் தன்னிடம் கெஞ்சியது இப்போது நியாபகத்திற்கு வர கண்ணீர் விட்டவாறே படுத்துவிட்டார்.அழுதழுது அப்படியே கண்ணயர்ந்து விட திடீர் என்று கயல் அவரை அழைப்பதை போன்று ஒரு பிரம்மை.அந்த குரல் மெல்ல மெல்ல பலவீனமாவது போல் இருக்க பார்வதிக்கு கயலுக்கு ஏதோ ஆபத்தோ என்று அலறினார்.
“கயலம்மா…கயலம்மா…”என்று அவர் கத்தியிருக்க,அவரின் பக்கத்தில் படுத்திருந்த குரு,
“பாரூ….பாரூ…”என்று அவரின் தோள்களை உலுக்க,
“ஆங்…என்னங்க…கயல்…கயல்….அவளுக்கு ஏதோ ஆபத்து….நான் அவளை பார்க்கனும்…பார்க்கனும்…”என்று பிதற்ற தொடங்க,குருவிற்கு பயம்பிடித்துக் கொண்டது.
“பாரூ…பாரூ…இங்க பார் நீ ஏதோ கனவு கண்டிருக்க அதான்…வேற ஒண்ணுமில்ல….நீ தூங்கு…”என்று குரு கூற,அவரின் கையை தட்டிவிட்ட பார்வதி,
“இல்ல…இல்ல என் பொண்ணுக்கு ஏதோ ஆபத்து…என் உள் மனசு சொல்லுது….நான் அவளை பார்க்கனும்….பார்த்தே ஆகனும்…அவளும் நமக்கு பொண்ணு தாங்க….அன்னைக்கு எப்படி போன தெரியுமா….ஏதோ யாருமில்லாதவ மாதிரி….எனக்கு உயிரே இல்லை….அவ வந்திட்டு போனதிலிருந்து….”என்று பார்வதி உணர்ச்சி பெருக்கில் கயல்விழி வந்த விடயத்தை கூறியிருக்க குரு அதிர்ந்துவிட்டார்.
“என்ன சொல்லுற பாரூ….கயல் இங்க வந்தாளா…எப்போ…ஏன் என்கிட்ட சொல்லல….”என்று கணவர் கேட்ட பிறகே பார்வதிக்கு அவரிடம் உண்மை கூறிவிட்டதை உணர்ந்தவர்.கயல்விழி வந்து சென்றததை பற்றி கூறிவிட்டார்.
அனைத்தையும் கேட்ட குரு என்ன உணர்ந்தார் என்றே தெரியவில்லை.கயலின் மீது அவருக்கு கோபம் இருந்ததே தவிர அவளை வெறுக்கவெல்லாம் இல்லை அவர்.எப்படி வெறுப்பார் அவரின் காலை கட்டிக் கொண்டு வரும் மகள் அல்லவா மற்ற இரு மகள்களை காட்டிலும் கயல்விழியின் மீது பிடித்தம் அதிகமே.
“அது…அது….நீங்க அவ பெயரை எடுத்தாலே உங்களுக்கு கோபம் வந்திடும் அதான் சொல்லல….நான் மட்டும் வேனா போய் பார்த்துட்டு வரட்டுமா…எனக்கு என்னவோ மனசு துடிக்குது….”என்று பார்வதி கூறிக் கொண்டிருக்க,
“அவ எனக்கும் மக தான்….பாரூ….அவ மேல எனக்கு கோபம் இருக்கு தான் அதுக்காக அவளை வெறுத்துட்டேன் நீங்க எல்லாம் எப்படி நினைக்கலாம்…..அவ தப்பு பண்ணிட்டா எங்க பக்கத்திலே இருந்தா அவ மேல எனக்கு கோபம் அதிகமா வரும்னு தான் தூரமா இருந்தேன்….அப்ப கூட எத்தனை நாள் அவ திரும்பி வந்துட மாட்டளா நான் நினைச்சிருக்கேன்…..தெரியுமா….இரண்டு தடவை சென்னை போனப்பக் கூட அவளை போய் தூர நின்னு பார்த்துட்டு தான் வந்தேன்….கோபம் குறையும் நானே நினைச்சாலும் நம்ம பெரிய சம்மந்தி பண்ண பிரச்சனையால திரும்பவும்….ப்ச்…விடு….இப்ப அதை பேசி என்ன பண்ண…என் பொண்ணு அனாதை மாதிரி வந்துட்டு போயிருக்கா…..”என்று குரு உடைந்தேவிட்டார்.
அவரை தேற்றி அமர வைத்த பார்வதி,
“நீங்க இப்படி நினைச்சிக்கிட்டு இருப்பீங்கனு நான் நினைக்கலைங்க….நாம இரண்டு பேருமே போகலாம்….நந்து நாளைக்கு மறுவீட்டுக்கு வந்துட்டு போகட்டும் அதுக்கு அப்புறம் போகலாம்….”என்று கூறி படுக்க வைத்தார்.ஆனால் மனதில் என்னவோ அலைக்கழிப்பு இருந்து கொண்டே தான் இருந்தது.
%%%%%%%%%%%%%%%
சத்யாவிற்கு ஓய்வே இல்லை அவனது முழு கவனமும் இப்போது ரத்னத்தின் மீது தான் இருந்தது.மீண்டும் தனது கையில் வைத்திருந்த கோப்புகளை மீண்டும் பார்வையிட்டவனுக்கு எங்கோ எதிலோ தவறுவது போல் ஒரு உணர்வு.
“ச்சை….எதை மிஸ் பண்ணுறேன் நான்….ஏன் இப்படி பதறுறேன்….எல்லாம் அந்த ராட்ஷி வந்ததால…..அவளைஐஐஐ….”என்று அனைத்திற்கும் கயல்விழி தான் காரணம் என்பது போல் அவளை திட்டிவிட்டு அவளுக்கு அழைத்தான்,அவளின் பேசி அனைத்து வைக்கப்பட்டுள்ளது என்று வரவும்.
ஏற்கனவே காலையில் இருந்து அவளிடம் பேச வேண்டும் என்று மனது உந்த அதை ஒதுக்கி வேலையில் திருப்பிவிட்டான் ஆனால் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடியும் நேரம் கயல்விழி தான் அவனின் நினைவில் வருவாள்.காலையில் இருந்து தாக்குபிடித்தவனால் இப்போது முடியாமல் போகவே அவளுக்கு அழைத்தான் ஆனால் அதுவும் தோல்வியில் முடிய கோபம் கோபம் மட்டுமே.
“ச்சை….எதுக்கு போன் வச்சிருக்கா இவ எல்லாம்….என் உயிரை எடுக்குறா….”என்று திட்டியவனுக்கு மனது உடலும் துவண்டு போனது.இதுவரை இவ்வாறு எல்லாம் அவன் இருந்தது இல்லை ஆனால் கயல் என்று வரும் போது சத்யா தடுமாறினான்.
“இவளோட வாழவும் முடியல சாகவும் முடியல….ஏன் தான் இந்த காதல் எல்லாம் எனக்கு வந்ததோ…”என்று எப்போதும் உதிக்கும் கேள்வி தான் இப்போதும் அவனின் மனதில் உதித்தது.சத்யாவின் கைபேசி இசைக்க எடுத்தவனுக்கு மறுபக்கம் கூறப்பட்ட செய்தியில் கோபம் கொப்பளித்தது.
“அங்கேயே புடிச்சு வைங்க….நான் இன்னும் இரண்டு நிமிஷத்துல இருப்பேன் அங்க….”என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறி பறந்தான்.
சத்யா வாகனத்தை புயல் வேகத்தில் இயக்கி சண்முகம் சொன்ன இடத்திற்கு சென்று நிப்பாட்டினான்.சென்னையை விட்டு வெளியில் செல்லும் வண்டிகளில் ஒரு லாரியில் ரத்னம் பிடிபட்டான்.அவனை பாதுகாப்பாக பக்கத்தில் உள்ள ஒரு கடையில் அடைத்திருந்தனர்.வேகமாக உள்ளே நுழைந்தவன்,
“சண்முகம்….எங்க அவன்???”என்று கேட்க,
“சார் கீழ ஒரு குடோன் போல இருக்கு….அங்க தான் வச்சிருக்கோம்….”என்று கூறியவாரே அழைத்து சென்றார்.
கீழே ஒரு அறையில் ரத்னத்தை கட்டி வைத்திருந்தனர்.அவனின் முன்னே சத்யா சென்று தோரணையாக அமர,அவன் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தில் ரத்னத்திற்கு உடல் தானாக நடுங்கியது.
“சண்முகம்…..என்ன சொல்லுறான்….”என்று கேட்க அவனின் குரலில் தெரிந்த கடின தன்மையே கூறியது இவன் தன்னை கொன்றாலும் கொன்றுவிடுவான் என்று நினைத்த ரத்னம்,
“சார்…சார்….நான் சொல்லிடுறேன்….சார்….என்னை நம்புங்க சார்….”என்று நடுங்கியவாரே கூற,சத்யாவின் முகத்தில் எள்ளல் புன்னகை.ஆனால் ரத்னம் ஒவ்வொன்றாக கூற கூற அவனது முகம் பாறை போல் இறுகி கொண்டிருந்தது.
“சார்….நான் ஒரு ஆட்டோ சொந்தமா வச்சிருக்கேன்….என்ன தான் நான் உடல் தேய உழைச்சாலும் எனக்கு வருமானம் பத்தல…அப்ப தான் ராபின் என்னோட பிரண்டானான்….அவனை நான் இரண்டு தடவை என்னோட ஸ்டான்ட்ல பார்த்திருக்கேன்….பார்க்க காலேஜ் பையன் மாதிரி தான் இருப்பான்…அவன் தான் என்கிட்ட தானா வந்து நாம இரண்டு பேரும் சேர்ந்து பிஸ்னஸ் பண்ணுவோம்…..உனக்கு சரிபாதியா வர வருமானத்தில தரேன்னு சொன்னான்….எனக்கு முதல்ல விருப்பம் இல்ல ஆனா காசு பார்க்கனும் ஆசை அதனால நானும் ஒத்துக்கிட்டேன்….அவன் பொண்ணுகளை போட்டோ எடுத்து அதை ஏதோ செஞ்சி அவன் தான் அவங்களை மிரட்டி பணம் வாங்குவான்….அதுல பாதியை எனக்கு தருவான்….”என்றவன் அனைவரையும் நிமிர்ந்து பார்த்து எச்சில் விழுங்கினான்.
“என்ன பயமா இருக்கா????செய்யும் போது இல்லாத பயம் இப்ப இருக்கா இருக்காடா????மேல சொல்லு????அப்புறம் இருக்கு உனக்கு???”என்றவனைக் கண்டு நடுங்கிய ரத்னம்,
“சார்….சார்….எனக்கு எதுவும் தெரியாது சார்….நான் வெறும் ஆளு தான் சார்….என்னை முதலாளி போல அவன் தான் இருக்க சொன்னான்…எனக்கும் எல்லாரும் சலாம் போடவும் கெத்தா சுத்தி வந்தேன்….அவ்வளவு தான் சார்….எனக்கு தெரியும்…”என்றவன் ராபினிற்கு இருக்கும் இரும்பு பட்டறையை பற்றியும் கூறினான்.சத்யா சண்முகத்திடம் கண்ணை காட்ட,
“அவன் இருக்கமாட்டான் சார்….இருக்க மாட்டான்….அந்த பொண்ணோட தப்பிச்சிருப்பான்….அந்த பொண்ணை தான் அவன் இன்னைக்கு விலை பேசியிருக்கான்….”என்று ரத்னம் உலறிவிட,
“என்னடா….சொன்ன…. எந்த பொண்ணு????”என்று கேட்டவன் மனது வேகமாக துடிக்க தொடங்கியது அவன் ராஜேஷிற்கு அழைத்து அனுவை பற்றி விசாரித்துவிட்டு வைக்க அப்போது தான் அவன் மூளையில் பொரி தட்டியது உடனே கயல்விழிக்கு அவன் அழைக்க அது அனைக்கபட்டிருப்பதாக தகவல் வர துணக்குற்றான்.கோபம் தலைக்கேற ரத்னத்தின் கன்னத்தில் மாறி மாறி அறைய தொடங்க,
“சார்…சார் விடுங்க….செத்துட போறான்….”என்று சண்முகம் கூறியவுடன் தான் நிதானத்திற்கு வந்தான் சத்யா.ராபின் புகைப்படம் ஏதாவது ரத்னத்திடம் இருக்கிறதா என்று கேட்க அவனிடமும் இல்லை.
ஆக தான் நினைத்தது சரி ரத்னம் வெறும் கைபொம்மை தான் இவனை ஆட்டி வைப்பவன் ராபின் என்று சத்யாவின் மூளை நேர்கோட்டிற்கு வந்திருந்தது.தனது முகத்தை வெளியில் காட்டாமல் மிக தெளிவாக காய் நகர்த்திருக்கிறான்.போகும் போதே சத்யா தனது நண்பனிடம் சில தகவல்களை பகிர்ந்து அதனை உடனடியாக செய்யும் படி கேட்டுக் கொண்டு தான் சென்றான்.
சத்யாவின் வாகனம் ரத்னம் கூறிய இடத்தை நோக்கி செல்ல தொடங்க அதே நேரம் ராபின் கயலை ஒரு காரில் அடைத்து அந்த இடத்தை காலி செய்திருந்தான்.