அன்றைய காலை பொழுதில் வேகமாக தனது அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் கயல்விழி.அலுவலகம் பக்கம் தான் என்பதால் நடந்தே சென்றுவிடுவாள்.இரவு தாமதமானால் மட்டுமே அலுவலக வாகனத்தில் வருவாள்.முடிந்த வரை தனது தனிமையை போக்க அவள் வெளியிடங்களில் கால் கடுக்க நடந்துவிட்டு தான் வீட்டிற்கு வருவாள்.அப்போது தான் உடல் அயர்வின் காரணமாக தூங்க முடியும் இல்லையேல் மீண்டும் பழைய நியாபகங்களும்,அவள் செய்த தவறுகளுமே அவளை பயமுறுத்திக் கொன்றுவிடும்.
கயல் அலுவலகம் செல்ல கிளம்பி வெளியில் வர,
“ஹாய் க்கா….ஹவ் ஆர் யூ…..”என்று கேட்டுக் கொண்டே துள்ளி குதித்தபடி வந்தாள் அனன்யா.பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி.அவளை பார்த்தவுடன் கயல் முறுவலித்து,
“ம்ம்ம்….ஏதோ இருக்கேன் க்கா….”என்று சோர்வாக பதில் வர அவளை நிமிர்ந்து பார்த்தவள் முகமும் இப்போது சோர்ந்து போனது.அனன்யா பதின் வயதில் இருக்கும் பருவ சிட்டு.தாய்,தந்தை இருவரும் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் இருந்தனர்.
காலை எட்டு மணிக்கு சென்றால் இரவு எட்டு மணிக்கு தான் வருவர்.வீட்டிற்கு வந்தாலும் அவர்களின் வேலைகளை பற்றிய பேச்சுகள் அனுவின் படிப்பை பற்றிய பேச்சுகள் மட்டுமே பேசுவார்களே தவிர பிள்ளைக்கு என்று தனியாக நேரம் ஒதுக்கமாட்டார்கள்.அனன்யாவை பார்த்துக் கொள்ள கேர் டேக்ர் ஒருவர் இருப்பார்.என்ன தான் கேர் டேக்கர் அனன்யாவை பார்த்துக் கொண்டாலும் அவள் தாய்,தந்தையின் பாசத்திற்காக எங்கும் ஒரு சிறு குழந்தை தான்.
அனுவைக் கண்டாலே கயலுக்கு தன் தங்கை நந்திதா நியாபகம் தான் வரும் அதனாலே அவளிடம் பிரியமாக இருப்பாள்.எப்போதும் துருதுரு என்று தன்னை அக்கா அழைத்துக் கொண்டு ஓடி வருபவளை யாருக்கு தான் பிடிக்காது.என்னதான் அனு கயலிடம் நட்புடன் பழகினாலும் அவளது கண்களில் ஏக்கத்தை பலதடவை கயல் கண்டிருக்கிறாள்.அப்போதெல்லாம் அவளின் பெற்றவர்கள் மீது கோபம் தான் வரும் இருந்தும் அவள் என்ன செய்துவிட முடியும் அவரவர் வாழ்க்கைக்காக அவர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர் இதில் யாரைக் குறை கூற என்று நினைத்துக் கொள்வாள்.
“க்கா…க்கா….”என்று இருமுறை அனு அழைத்த பிறகே நினைவிற்கு வந்தாள் கயல்.
“ஆங்….என்ன அனு….”என்று கேட்க,
“என்னக்கா…நீங்க அப்பப்ப டிரிம்ஸ்க்கு போயிடுரீங்க….”என்று சிரித்துக் கொண்டே கேட்க,அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டியவள்,
“அப்ப இன்னைக்கு எனக்கு மேக்ஸ் கொஞ்சம் டவுட்ஸ் இருக்கு சொல்லி தாங்க….”
“ஓகே டா…வா…சொல்லித்தரேன்….”என்று கயல் கூற,
“ஓகே க்கா….அப்ப ஈவினங் பார்க்கலாம்….பை….”என்று கையை ஆட்டிவிட்டு தனது பள்ளி வாகனத்தில் ஏறி சென்றுவிட்டாள்.கயலும் அனு சென்றவுடன் தனது அலுவலகத்திற்கு சென்றாள்.கயல் என்னதான் சேட்டைகள் புரிந்தாலும் வேலையில் கெட்டி அதனால் தான் இந்த வேலையில் தாக்கு பிடிக்க முடிந்தது.வேலை என்று வந்துவிட்டாள் அவள் மற்ற அனைத்தையும் மறந்து தனது வேலை திறம்பட செய்துவிடுவாள்.அதனால் அலுவலகத்திலும் அவளுக்கு நற்பெயர் உண்டு.அலுவலகத்திற்கு வந்து தனது கணினிக்குள் தலைவிட்டவள் பின் எழும் போது மாலை நேரம் ஆனது.இடையில் சாப்பிட மட்டுமே கேண்டினிற்கு செல்லுவாள்.
ஆரம்பத்தில் இருந்த கயலுக்கு சுற்றிலும் நண்பர்கள் பட்டாளம் உண்டு ஆனால் இன்று இருக்கும் கயல் வாழ்க்கையி் பல அடிகளை பட்டவள் ஆயிற்றே அதனால் யாரிடமும் அநாவசியமாக பேசமாட்டாள் தேவைக்கு ஏற்ப மட்டுமே பேச்சுக்கள் இருக்கும்.அதிலும் ஆண்களிடம் வேலை சம்மதப்பட்ட பேச்சுகள் தவிர வேறு எதிலும் கலந்து கொள்ள மாட்டாள்.இதனாலே அலுவலகத்தில் பலர் அவளை ஊமை என்று தான் அழைப்பர்.ஆனால் கயல் அதையெல்லாம் கண்டு கொண்டது இல்லை.
மாலை நேரம் தனது வேலைகளை முடித்த கயல் வீட்டிற்கு செல்ல ஆயத்தமாக அப்போது அவளின் குழுவில் உள்ள அனைவரையும் மீட்டிங்கிற்கு அழைக்க அனைவரும் அங்க சென்றனர்.அங்கு அவர்களின் குழு தலைவர் அவர்களுக்கு அடுத்து வரவிருக்கும் ஒரு பெரிய புராஜெக்ட்டிற்கான விபரங்களை கூறி அடுத்த ஒரு மாதத்திற்கு இதில் தான் உங்கள் வேலை என்று அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தார்.மீட்டிங் முடிந்து வந்த கயல் மணியை பார்க்க அது ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது.இனி நடந்து சென்றால் சரியாக வராது என்று அவள் அலுவலக வாகனத்தில் ஏறி வீட்டிற்கு வந்தாள்.
கயல் வீட்டிற்கு வந்த அரை மணிநேரம் கழித்து அனன்யா கயலின் வீட்டிற்கு வந்தாள்.
“க்கா…ஏன் க்கா லேட்…”என்று கேட்டபடி வந்து அமர,
“அச்சோ சாரிடா…..கடைசி நேரத்தில மீட்டிங்குனு கூப்பிட்டாங்க அதான் லேட் ஆகிடுச்சு….சாரி ரொம்ப நேரமா வெயிட் பண்ணியா….வா….”என்று அவளை அமர சொன்னவள் அவளுக்கும் சேர்த்தே டீயை போட்டாள்.அப்போது அனன்யாவின் கைபேசியில் அழைப்பு வர,அவள் எடுத்து பேச தொடங்கினாள்.கயல்விழி டீயை மெல்ல பருகி கொண்டு இருக்க அனு,
“ம்ம் சொல்லு….ம்ம்ம்…”என்று மிக மெல்ல பேச கயலுக்கு அவளின் முக பாவனை வைத்தே அது அவளின் நண்பனாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.
“ஓகே வைக்குறேன் பை….”என்று அனு கயல் தன்னை பார்பதை தொடர்ந்து பாதியிலேயே வைத்துவிட்டாள்.
“அது என்னோட பிரண்ட் க்கா….”என்று மழுப்பலாக கூற கயல் அமைதியாக தலையாட்டிவிட்டு புத்தகத்தை எடுக்க,அனுவும் அதன் பிறகு பாடத்தை கவனிக்க தொடங்கினாள்.இரண்டு மணிநேரம் எப்படி போனது என்றே இருவருக்கும் தெரியவில்லை.
“ஏய் அனு….அனு….”என்று அனன்யாவின் அன்னை ஆர்த்தி அழைக்கவும்,
“இதோ வரேன் ம்மா….”என்ற அனு,
“க்கா நேரமாகிடுச்சு போல அதான் அம்மா கூப்பிடுறாங்க…வரேன் பை….குட் நைட்….”என்றுவிட்டு வீட்டிற்கு வெளியில் வர கயலும் பின்னோடு வந்தாள்.
ஆர்த்தி கயலைக் கண்டவுடன் மென்மையாக புன்னகைத்து,
“ஹவ் ஆர் யூ கயல்….”
“பைன்….”என்றாள் புன்னகையுடன்,
“டையம் ஆச்சு அதான் கூப்பிட்டேன்….நீ நாளைக்கு வேலைக்கு போகனுமே….”என்று கூற அவளும் பதிலுக்கு புன்னகை முகமாக ஆமாம் என்று தலையாட்டினாள்.இருவரும் சென்றபின் தனது அறைக்கு வந்தவளுக்கு அனன்யா கைபேசியில் பேசும் போது அவளின் முகத்தில் வந்து போன பாவனைகளே கண்முன்னே வர,அவளின் அம்மாவிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று முதலில் நினைத்து பின் வேண்டாம் என்று விட்டுவிட்டாள்.ஆனாலும் மனதில்
“ஏதாவது தப்பு செய்யுறாளா…..”என்று நினைத்த கயல் பின் வேகமாக தன் தலையை ஆட்டி,
“ச்ச…ச்ச…அப்படி எல்லாம் இருக்காது….நல்ல பொண்ணு….நீ ஏன் கயல் தப்பாவே நினைக்குற….பிரண்ட்ஸா கூட இருக்கலாம்ல….”என்று தனக்குளே கூறிக் கொண்டு படுத்துவிட்டாள்.அதுவே பின்னாளில் அனன்யாவின் வாழ்வையே மாற்ற போகிறது என்று கயல் அறிய வாய்ப்பில்லை.
அதன் பிறகு வந்த நாட்கள் கயலுக்கு மிகந்த வேகத்துடன் தான் சென்றது புதிய புராஜெக்ட் என்பதால் வேலைகள் வேறு அவளை இழுத்துக் கொண்டது அதனால் அவள் அனுவை பார்க்க முடியாமல் போனது.அன்றும் கயல் தனது வேலைகளை முடித்துவிட்டு வர அவளுக்கான வாகனம் சென்றுவிட்டிருந்தது.அதனால் நடந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்க அப்போது பெண்களுக்கே உண்டான உள் மனது யாரோ தன்னை கவனிப்பதை போல் தோன்ற திரும்பி பார்த்தாள்.ஆனால் சாலையில் யாரும் இல்லை என்றவுடன் திரும்பி நடக்க தொடங்க மீண்டும் அதே போல் தோன்றியது அவள் திரும்பி பார்க்கும் போது யாரும் இருப்பது போல் தெரியாது.மனதிற்குள் ஏதோ அலாரம் அடிப்பது போல் தோன்ற வேகமாக தனது வீட்டை நோக்கி நடை போட்டாள்.வேகமாக தனது குடியிருப்பின் அருகே வர அதே சாலையில் எதிர்புறம் தெரு முனையில் அனு யாருடனோ வண்டியிலிருந்து இறங்குவது தெரிந்தது.கயல் யோசனை செய்தபடியே வீட்டிற்கு வந்தாள்.
“யாராக இருக்கும்….”என்ற நினைப்பு ஓடிக் கொண்டே இருந்தது.நாளை அவளிடம் இதை பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே உறங்கியும் போனாள்.ஆனால் அடுத்த நாள் காலையிலேயே கயலுக்கு ஒரு முக்கிய மீட்டிங்கிற்கான தகவல் வர அனுவை மறந்துவிட்டாள்.ஆனால் அவள் அலுவலகம் செல்லும் போதும் வரும் போதும் யாரோ தன்னை கண் காணிப்பது போல் தோன்றிக் கொண்டே இருந்தது.தனது சுற்றதை பார்த்தால் அப்படி எதுவும் இருக்காது.கயலின் மனதில் மீண்டும் ஒருவித தனிமை பயம் பிடித்துக் கொண்டது.
நாட்கள் அதன் போக்கில் நகர துவங்கியது புதிய புராஜெக்ட் வேறு கயலை படுத்தி எடுக்க,அதில் தன்னை துரத்தும் நபர் யார் என்று புரியாமல் கயல் மேலும் பாதியாக மெலிந்து போனாள்.அன்றும் அதே போல் தனது மீட்டிங்கை முடித்துக் கொண்டு வரும் போதே கயலுக்கு நேரம் கடந்துவிட்டது.அலுவலகத்திலும் அந்த நேரத்தில் வாகனம் கிடையாது என்பதால் அவள் சாலையை துழவிய படியே நடந்து வந்து கொண்டிருந்த சமயம் அவளின் முன்னே ஏதோ வாகனம் நிற்கும் சத்தம் கேட்க திகைத்து அவள் நிமிர்ந்து பார்க்கும் போது அவள் முகத்தில் யாரோ கர்சீப்பை வைத்து அழுத்தினர் அதில் அதிர்ந்து மயங்கினாள கயல்விழி.
கயல்விழி கண்விழித்து பார்க்கு போது அது ஒரு இருட்டு அறையாக இருந்தது.கை,கால்கள் எல்லாம் கட்டப்பட்டு இருந்தது.பயத்தில் நா உலற கயல் கத்த தொடங்கினாள்.ஆனால் அங்கு யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.கயல் கத்தி கத்தியே உடலில் உள்ள சக்தி எல்லாம் வடிந்து மீண்டும் மயங்கிவிட்டாள்.இதை அனைத்தையும் அந்த அறையில் பொருத்தியிருக்கும் சிசிடிவி வழியாக பார்த்துக் கொண்டிருந்த ஒரு உருவத்தின் முகத்தில் சிறிய வேதனை,அதிக கோபம் இருந்தது.
கயல் கடத்தப்பட்டு இரண்டு நாட்கள் கடந்துவிட்டது ஆனால் அது யாருக்கும் தெரியாது என்பதைவிட அவளை பற்றி அக்கறைப் படுவோர் யாவருமில்லை என்பது தான் வலிக்கதக்க உண்மை.இரு நாட்களாக அவளுக்கு எந்தவிதமான உணவும் வழங்கப்படவில்லை அதனால் கயல் முற்றிலுமாக சோர்ந்துவிட்டாள் இனி நாம் வாழ்நாள் இதிலேயே முடிய போகிறது என்று மனதில் மட்டுமே நினைக்க முடிந்தது.யார் தன்னை கடத்தியிருப்பர் என்று எல்லாம் அவளால் ஊகிக்க கூட முடியவில்லை.
மூன்றாவது நாள் மயங்கி கிடந்த கயலின் முகத்தில் யாரோ தண்ணீரை அடித்து எழுப்பினர் ஆனால் அவளால் எழ கூட முடியவில்லை.அவளை நிமிர்த்தி அமர வைத்து அவளின் கையில் சாப்பாட்டு தட்டினை யாரோ கொடுக்க அவளோ கண்கள் இருண்ட நிலையில் எப்படியோ சாப்பிட்டு முடித்தாள்.
“யா….யா….யா…யாரு….ஏன் என்னை கடத்தினீங்க….”என்று மிக மெல்லிதாக மட்டுமே கேட்க முடிந்தது.எதிர்த்து நிற்க உடலிலும் மனதிலும் வலுவில்லை துவண்டுவிட்டிருந்தது.ஆனால் அவள் கேட்ட கேள்வியை காதில் வாங்காதது போல் வந்த உருவம் வெளியில் சென்றுவிட மீண்டும் அறை இருண்டு போனது அவளின் வாழ்வும் அதே போல் இருண்டு போனதோ என்று தோன்ற தான் செய்தது.
கயல் தான் சாப்பிட்ட சாப்பாட்டின் விளைவு சற்று தெளிந்து இருந்தாள் தான் ஆனால் அவளால் ஒரு அடி கூட நகர முடியவில்லை.
“என்ன செய்வது….யார் என்னை கடத்தியிருப்பர்….யார்….யார்….யார்….”என்று தனக்குள்ளே கேட்டே மறித்து தான் போனாள்.கண்கள் கலங்கி அருவி போல் கண்ணீர் வந்து அதுவும் வற்றி போய் இருந்தது.இந்த நிலையில் அன்றை நாள் கழிய மாலை மங்கி இரவு கவிழும் நேரம் கதவு மீண்டும் திறக்கப்பட்டது.கயல் வேகமாக கதவையே பார்க்க திறந்த கதவின் வழியே உள்ளே நுழைந்தவனை கண்டவளுக்கு உடல் முழுவதும் வேர்த்து மீண்டும் கண்கள் இருட்டியது.
தெரிந்தே செய்த பாதக செயலின் வீரயத்தை அன்று கயல் அறியவில்லை ஆனால் அதனை அறுவடை செய்யும் நாள் இதோ இன்று அவளின் முன்னே நின்றது.பொறுமையாக அவளை பார்த்தபடியே வந்தவனைக் கண்ட கயலின் உதடுகள்,