கயல்விழிக்கு சத்யா தன்னிடம் காதலை உரைத்த தருணம் ஏதோ உலகையே வென்ற உணர்வு தான்.மனம் எல்லாம் மத்தாப்புக்கள் பூத்தன.ஒரு ஆண் தன்னிடம் அவனது மனதை ஒப்படைக்கிறான் என்ற எண்ணமெல்லாம் இல்லை அவளை பொறுத்தவரை தனது சவாலில் அவள் வென்றுவிட்டாள் அவ்வளவே.தன் விளையாட்டிற்கு ஒருவனின் உணர்வுகளை கொன்று கொண்டிருக்கிறோம் என்ற பயம் எல்லாம் இல்லை.
“கயல்….கயல்….”என்று சத்யா இரு முறை அழைத்த பிறகே நினைவுலகத்திற்கு வந்தாள் கயல்விழி.
“எனக்கு உன்னை பிடிச்சிருக்குனு சொன்னேன்….உன்னை விரும்புறேன்….”என்று மீண்டும் கூற,கயல்விழியின் முகத்தில் வெற்றி புன்னகை.
“உன்னோட பதில் என்ன….உனக்கு???”என்று சத்யா கயலை தயக்கமாக எல்லாம் கேட்கவில்லை அவளும் தன்னை விரும்புகிறாள் என்று முழுமையாக அவன் நம்பினான்.ஆனாலும் அவளின் வாய் மொழியாக கேட்க ஆசை மனதில்.சத்யா இப்படி கேட்பான் என்று எதிர்பாராத கயல்விழி முதல் முறையாக தடுமாறி நின்றாள்.
“அச்சோ என்ன இது இப்படி நேரடிடையா கேட்குறான்….எப்படி பதில் சொல்ல….முதல்ல பதில் தெரிந்தா தான பதில் சொல்ல முடியும்….என்ன சொல்ல….எது சொன்னாலும் கண்டுபிடிச்சுடுவானே….இந்த லவ்வர்ஸ் டே வர வேற இன்னும் நாள் இருக்கே….இப்ப எப்படி சமாளிக்க….”என்று கயல் தன் மனதுடன் பேசிக் கொண்டிருக்க,சத்யா அவளின் முகத்தில் வந்து போன உணர்வுகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன பயந்துட்டியா….சரி விடு….நீ என்னை விரும்புறேன்னு எனக்கு தெரியும்….இருந்தும் உன் வாயால கேட்கனும்னு மனசுல ஒரு ஆசை….நான் சொன்னவுடனே நீயும் உடனே என்கிட்ட சொல்லிடுவனு கற்பனை எல்லாம் பண்ணியிருந்தேன்….ப்ச் விடு….”என்று சத்யா முகம் சற்று சுணங்கி கூற,கயலுக்கு மனதில் ஏதோ உடைவது போல் தான் இருந்தது.
“அது….அது….சத்து….நான்….”என்று என்ன சொல்லுவது என்று புரியாமல் கயல் தவிக்க,
“ஏய் விடு….நீ சொல்லலனா என்ன….உன் மனசு முழுசும் நான் தான் இருக்கேன்…”என்று ஒருவித கர்வத்துடன் கூற,கயல்விழிக்கு உள்ளுக்குள் அனைத்தும் உதறல் எடுத்தது.அப்போது சத்யாவின் நண்பன் அழைக்கவே,
“சரி நாளைக்கு பார்க்கலாம்….ஓகே…பை…”என்று இயல்பாக கூறிவிட்டு நகர பார்க்க,கயலிடமிருந்து பதில் வரவில்லை.திரும்பி பார்க்க அவள் அப்படியே நிற்கவும் அவளின் தோள்களை தொட்டு,
“ஓய் என்ன இப்படி ஷாக்காகி நிக்குற….என்ன ஆச்சு….”என்று அவளின் கன்னம் பற்றி கேட்க,கயல் இரண்டடி பின் சென்றாள்.சத்யாவிற்கு அவளின் இந்த விலகல் முகத்தில் கடினத்தை பரப்ப,அவளை கூர்ந்து பார்த்தவன்,
“சத்யாவா…சத்து இப்ப சத்யாவாகிட்டேனா……ஏன்???கயல் எனக்கு உன் பதில் வேணும்…”என்று இப்போது அழுத்தமாக கேட்டான்.
“இல்ல அது….நான்…”
“ஏய்…இப்ப ஏன் இப்படி தடுமாறுர…உன் மனசுல….ப்ச்….கயல் என்னடீ….என் மனசு முழுசும் நீதான் நிறைஞ்சு இருக்க….இந்த இரண்டு வாரமா நான் உன்னை எப்படி தேடினேன் தெரியுமா….நான் உன் வீடு வரைக்குமே வந்துட்டேன்….”என்று சத்யா கூற கயல்விழிக்கு உடல் உதறியேவிட்டது.
“அய்யோ….என்ன வீடு வரைக்கும் வந்தீங்களா…”என்று அதிர்ந்து கேட்க,சத்யாவிற்கு அவளின் முகமாறுதல்கள் எல்லாம் உவப்பானதாக இல்லை ஏதோ பயபடுகிறாளோ என்ற எண்ணம் மட்டுமே.அவளை ஒரு நிமிடம் கூட தவறாகவோ,இல்லை சந்தேக கண்ணோடோ பார்க்க என்ன நினைக்க கூட இல்லை அவன்.அவனை பொறுத்தவரை கயல்விழி என்பவள் குறும்பு தனம்,குழந்தை குணம் கொண்ட ஒரு குழந்தை அவ்வளவே.
“என்னடா வீட்ல எதாவது சொல்லிடுவாங்கனு பயமா இருக்கா….நீ எதுக்கும் பயப்படாத உன் அப்பாவே உன் கைய புடுச்சி என் கையில கொடுக்க வைப்பேன்….எனக்கு நம்பிக்கை இருக்குடீ….”என்று முகம் முழுவதும் சந்தோஷ சாரலுடன் சத்யா கூற,கயலின் நிலை மிகவும் மோசம் தான்.
“அச்சோ…என்ன இவன் கல்யாணம் வரைக்கும் போயிட்டான்….”என்று நினைத்தாள்.
கயல்விழி தனது அறையில் அமர்ந்திருந்து சத்யா கூறியதையே நினைத்துக் கொண்டிருந்தாள்.முதலில் சத்யா தன் காதலை கூறியவுடன் கயலுக்கு சவாலில் வென்றுவிட்ட மகிழ்ச்சி இருந்தது தான்.ஆனால் அவன் பேச பேச அவளின் மனதில் ஒருவித புது உணர்வு.முதல் குற்றணர்வு மற்றொன்று சத்யாவின் தூய்மையான மனது கயலின் மனதில் சலனத்தை ஏற்படுத்தியிருந்தது.
“பேசமா நாம ஏன் இவனையே காதலிக்க கூடாது…..உனக்கும் பிடிச்சிருக்கு அப்புறம் என்ன…”என்று ஒரு மனது கூறினாலும்,மற்றொரு மனது,
“ச்ச…ச்ச…இல்ல இவனைவிட நல்ல கலரா,பணக்காரனா தான் கல்யாணம் பண்ணிக்கனும் அப்ப தான் நாம செட்டில் ஆக முடியும்….”என்று கூறியது.
இதுவொரு இரட்டை மனநிலை அதாவது எந்தவொரு விஷயத்திலும் நம் மனது ஒன்றை கூறும் மூளை ஒன்றை கூறும் இது அனைவருக்கும் இருக்கும் ஒரு இயல்பான செயல் தான்.ஆனால் அது நேர்மறையாக உள்ளதா இல்லையா என்பது தான் முக்கியமான ஒன்று.
இதில் கயல்விழி மீண்டும் தோற்று தான் போனாள்.எப்போதும் நல்ல எண்ணங்களை சுற்றத்தார் கூறியிருந்தால் நல்ல எண்ணங்களே விதைந்திருக்கும் ஆனால் அவளுக்கு அமைந்த கூட்டம் முழுவதும் தற்பெருமையும்,பணத்தாசை பிடித்தவர்களே அதனால் அவளின் மனதிலும் அதே எண்ணங்கள் தான் விழுந்தது.
பெற்றவர்கள் என்ன தான் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை கூறினாலும் நட்பு வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.நல்ல நண்பர்கள் சிலருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருந்திருக்கின்றனர்.ஆனால் கயலுக்கு வாய்த்த கூட்டமோ தனக்கு ஒரு கால் போனால் எதிரில் இருப்பவனுக்கு இரண்டு கால்களும் போக வேண்டும் என்று நினைக்கும் சுயநலவாதிகள்.அதே குணம் கயலிடமும் பதிந்து போயிருந்தது.
சத்யா தனது காதலை உரைத்து ஒரு மாதம் கடந்திருந்தது.எப்போதும் போல் கயல்விழியும்,அவனும் சந்தித்துக் கொள்ளவது அதெல்லாம் இயல்பாக தான் இருந்தது.அன்றைய நாளிற்கு பிறகு சத்யா கயலிடம் அவளின் பதிலை கேட்கவில்லை.அதே சமயம் அவளிடம் காதல் வார்த்தைகள் எல்லாம் பேசமாட்டான்.எப்போதும் போல் இருவரும் சண்டையிடுவார்கள் சில நேரங்களில் படிப்பை பற்றி பேசிக் கொள்வார்கள் இப்படி தான் அவர்களின் உரையாடல்கள் எல்லாம் இருக்கும்.
கயல்விழிக்கே ஆச்சிரியமாக இருந்தது சத்யாவின் இந்த குணத்தைக் கண்டு.கயலின் மனதும் மெல்ல சத்யனின் பக்கம் நெருங்க தொடங்கியிருந்தது.சத்யனுக்கு படித்து முடித்து காவல் துறையில் சேர வேண்டும் என்பதே கனவு அதனால் அதை பற்றி தான் அவன் அதிகம் கயலிடம் பகிர்ந்து கொள்வான்.முதலில் கயல் ஆர்வமில்லாமல் தான் கேட்டாள் ஆனால் நாளாக அவனின் ஈடுபாட்டைக் கண்டு அவளும் ஆர்வமாக கேட்க தொடங்கினாள்.
கயலிவிழியின் மனதில் சத்யா மெல்ல மெல்ல தனது இடத்தை பதித்தித்து கொண்டிருந்தான்.ஆனால் உண்மை என்றாவது ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும் என்பார்களே அது போல் தான் கயல்விழியின் உண்மை முகம் சத்யாவிற்கு தெரிய வந்தது.
அன்று எப்போதும் போல் சத்யாவிற்காக மரத்தடியில் கயல்விழி அமர்ந்திருக்க,
“என்ன கயலு….சீனியருக்கு வெயிட்டிங் போல….”என்று நக்கலாக கேட்டபடி வந்து அமந்தாள் பிரேமி.பிரேமிக்கு சத்யா கயலை விரும்புகிறான் என்று தெரிந்ததிலிருந்து உள்ளுக்குள் எரிச்சல் கோபம்.என்னைவிட அப்படி என்ன இருக்கிறது அவளிடம் என்று கயல்விழியின் மீது வன்மம் தலைதூக்கியது.அதனால் இருவரையும் எப்படியேனு பிரிக்கவேண்டும் என்று மனதில் திட்டம் தீட்டியவள் அதன் படி காயை நகர்த்தினாள்.
“என்ன கயலு….பதிலை காணும்…”என்று கேட்க,
“ப்ச்…..ஆமா அதான் தெரியுதுல கிளம்பு….”என்று ஒருவித எரிச்சல் வந்தது கயலுக்கு.அவளுக்கு சத்யாவுடன் செலவிடும் நிமிடங்களில் யாரின் குறுக்கீடும் இருக்க பிடிக்காது.அதனால் அவள் பிரேமியை கிளப்ப பார்க்க அவளோ சட்டமாக அமர்ந்து கொண்டாள்.
“அட என்ன கயலு என்னை துரத்த பார்க்குற….நான் சொல்லி தான நீ சீனியரையே லவ் பண்ணுறேன்னு சவால் விட்ட…..நீ நினைச்ச மாதிரியே சவால்ல ஜெயிச்சிட்ட போல….”என்று குரூரதத்துடன் கேட்க.கயல்விழிக்கு கை,கால் உதறிவிட்டது,
“ஏய் இப்ப எதுக்கு இதெல்லாம் பேசுற….”என்று சற்று பதட்டத்துடனும் சுற்று புறத்தை பார்த்துக் கொண்டு கேட்க பிரேமியின் முகத்தில் ஒருவித நக்கல் சிரிப்பு.
“அட என்னமா….உண்மையை சொன்னா கோச்சிக்குற….நீ தான வேணிக்கிட்ட போன வாரம் சும்மா லீவ் போட்டுட்டு சத்யா உன்னை தேடுறாருனு பார்க்க சொன்ன….நீ நினைச்ச மாதிரி தான் மனுசன் உன்னை தேடிக்கிட்டு இருத்தார் பாவம்….”என்று மேலும் கூற,கயல் எழுந்துவிட்டாள்.
“இன்னைக்கு இது போதும்….மீதி நாளைக்கு….”என்று சொல்லிக் கொண்டு மரத்தின் பின் பக்கம் வர சத்யா நின்று கொண்டிருந்தான்.அங்கு அவனை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் அதிர்ந்த முகத்திலேயே தெரிந்து கொண்டான்.
“அச்சோ இவன் எப்போ வந்தான்….இவன் லைபரரி போறத பார்த்துட்டு தான கயலை பார்க்க வந்தேன்….”என்று பிரேமி நினைத்துக் கொண்டிருக்க அவளின் அருகே நெருங்கிய சத்யா.
“நீ இப்ப கயல் கிட்ட என்ன பேசிக்கிட்டு இருந்த….”என்று அழுத்தமாக கேட்க,
“அது ஒண்ணுமில்ல….”என்று அவள் நழுவ பார்க்க,
“ஒண்ணுமில்ல…”என்று கேட்டவாறே அவன் கை முஷ்டிகளை மடக்க ஏற்கனவே அவனிடம் வாங்கியவள் ஆயிற்றே அதனால் ஒன்றுவிடாமல் கூறிவிட்டாள்.அனைத்தையும் கேட்ட சத்யா என்ன உணர்ந்தான் என்று அவனுக்கே புரியவில்லை.ஆனால் பிரேமியிடம் நெருங்கி,
“நீ இனி என் கண்ணுலேயே படக் கூடாது….அப்படி பார்த்தேன்…..”என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரித்திட பிரேமி நடுங்கியபடி சென்றுவிட்டாள்.அவள் இதில் கயல்விழியை மட்டும் சிக்க வைக்க நினைத்திருக்க இப்படி சத்யாவிடம் சிக்குவோம் என்று அவள் நினைக்கவில்லை.அதனால் அவள் அமைதியாக சென்றுவிட்டாள்.
சத்யாவிற்கு பிரேமி கூறியதை கேட்டதில் இருந்து மனது முழுவதும் அழுத்தம் பிறந்தது.கயல்விழிக்கு இப்படியொரு முகம் இருக்கும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.அவன் கண்டது எல்லாம் குழந்தை குணம் குறும்பு உள்ளம் கொண்டவள் தான் கயல் என்று நினைத்திருந்தான் ஆனால் அவளோ நச்சு பாம்பாக இருப்பாள் என்று நினைக்கவில்லை.பிரேமி கயலிடம் பேச்சை தொடங்கும் போதே அவன் வந்துவிட்டிருந்தான் அனைத்தும் கேட்டவனுக்கு கயலின் முகத்தில் வந்து போன பதட்டமே கூறியது அனைத்தும் உண்மை என்று.
அடுத்த நாள் காலை கயல்விழி சத்யாவை சந்திக்க வர அவனோ அவளிடம்,
“உன்கிட்ட கொஞ்சம் பேசனும்….என்கூட வா….”என்று அழைக்க எப்போதும் இது போல எங்கும் அழைக்க மாட்டான் இன்று அழைக்கவும் யோசனையுடன் தான் சென்றாள்.இருவரும் சென்றது ஒரு தோப்பு வீடு.
“இங்க ஏன் சத்து…”என்று கயல்விழி தயக்கத்துடன் கேட்க,
“வா சொல்லுறேன்….”என்று முன்னே நடந்தான்.கயல்விழிக்கு நேற்று பிரேமி கூறியதில் இருந்தே உள்ளுக்குள் நடுக்கம் தான் இதில் சத்யா இவ்வாறு அழைத்து வரவும் மனது திக் திக் என்று அடித்துக் கொண்டது.
வீட்டுற்குள் சென்றவுடன் ஒரு சோபாவில் அவளை அமர சொன்னவன்,
“சொல்லு….என்ன பிளான்…”என்று கேட்டுக் கொண்டே எதிர் சோபாவில் அமர்ந்தான்.
கயல்விழிக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை அவள் முழித்துக் கொண்டிருக்க,சத்யா பொறுமையாக அவளின் அருகில் வந்து,
“என்ன புரியலையா….என்னை காதலிக்கிற மாதிரி நடிச்சு….என்ன செய்யறதா பிளான்….”என்று கேட்க,கயல் எச்சில் விழுங்கினாள்.
“இங்க பாரு கயல் நேத்து பிரேமியோட நீ போசிகிட்டு இருந்ததை நான் கேட்டேன்…”என்று சத்யா கூற கயல்விழியின் உடலில் நடுக்கம் வெளிப்படையாகவே தெரிந்தது.
“அவளை புடிச்சி கேட்டதுல எல்லாத்தையும் சொல்லிட்டா…”என்று மேலும் கூற கயல்விழி நடுக்கத்தில் கைகளை பிசைந்தபடி தலைகுனிந்து கொண்டாள்.அவளின் தலையை நிமிர்த்தியவன்,
“இங்க பாரு….நீ செஞ்சது சரியா…அதை மட்டும் சொல்லு…”என்று கேட்க,கயல்விழியின் கண்களில் கண்ணீரோடு இல்லை தப்பு என்று மெல்லிதாக கூறினாள்,
“அப்புறம் ஏன்டீ…செஞ்ச…ஏன்….ஆஆஆஆஆ…..ஏன்டீ….”என்று சத்யா கத்த,கயலுக்கு உடல் உதறியது வார்த்தை வர மறுக்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவனின் கண்கள் எல்லாம் சிவந்து ரத்த நிறமாக இருந்தது.முகம் முழுவதும் ரௌத்திரம் அதை கண்டவள் மேலும் தனது இருக்கையில் உள்ளே அமர்ந்து கொண்டாள்.
சத்யாவிற்கு கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை அவளை ஏதாவது செய்துவிடுவோமோ என்று தன்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றவன் அவளின் அருகில் இருக்கையின் கீழ் அமர்ந்து,
“கயல்…கயல்…என்னால முடியலடீ….ஏன் இப்படி பண்ண….நீ எனக்கு குழந்தை போலடீ….நீ இப்படி பண்ணுவேனு நான் நினைக்கவேயில்லடீ….என்னால நீயில்லாம முடியாதுடீ கயல்….உன்னை அவ்வளவு பிடிக்கும்…உனக்கும் என்னை பிடிக்கும் தான…..சொல்லுடீ….”என்று மன்றாடலாகவே கேட்க,கயலுக்கு வார்த்தை வர மறுத்தது.அவள் பயந்து நடுங்க,
“ஏய்…நான் இவ்வளவு சொன்ன பிறகும் பதில் சொல்லமா இருக்க….உன்னை….”என்று அவளை அடிக்க கை ஓங்க,அப்போது கதவை திறந்து கொண்டு ஒருவன் ஓடி வந்து சத்யாவை பிடித்துக் கொண்டு,
“டேய்…என்னடா பண்ணிக்கிட்டு இருக்க…”என்று கேட்டுக் கொண்டே அவனை பிடிக்க கயல்விழிக்கு மூச்சு முட்டிவிட்டது அதற்குள்.
“டேய் விடு…இவளை நான் சும்மா விடப்போறது இல்ல….ஏய் சொல்லுடீ…”என்று மூர்க்கத்துடன் அவளிடம் நெருங்க,
“நீ போயிடு….போ….இங்கிருந்து போ….”என்று சத்யாவை பிடித்திருந்தவன் கூற,கயல்விழி பயந்து அந்த இடத்தை விட்டு ஓடி வந்துவிட்டாள்.அதன் பிறகு அவள் சத்யாவை சந்திக்கவில்லை.அன்றைய நாளின் தாக்கம் கயலை மிகவும் பாதித்துவிட அவளுக்கு காய்ச்சல் வந்து மூன்று நாட்கள் படுத்த படுக்கையாகிவிட்டாள்.இவ்வாறு ஒரு வாரம் கடந்து ஒருவித நடுக்கத்துடன் தான் அவள் கல்லூரி சென்றது.
கயல்விழிக்கு எங்கே சத்யா மீண்டும் பிரச்சனை செய்வானோ என்ற பயம் அதோடு தன் வீட்டிற்கு தெரிந்தால் அவ்வளவு தான் என்ற பயம் மொத்ததில் ஒருவாரத்தில் மெலிந்து போயிருந்தாள்.அவள் கல்லூரி வந்து அன்றைய நாள் முழுவதும் சத்யாவை பார்க்கவில்லை அதுவே சற்று ஆசுவாசம் தான். ஆனால் அது மாலை வரை தான் நீடித்தது.மாலை வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு கார் அவளை வழிமறிக்க பயந்து போனாள்.
“உன்னை ஒண்ணும் செய்யமாட்டேன்…உன்கிட்ட கொஞ்சம் பேசனும் வா…”என்று அன்று தன்னை சத்யாவிடம் இருந்து தன்னை காப்பாற்றியவன் வந்து கேட்க,கயலுக்கு பயத்தில் கண்கள் கலங்கிவிட்டது,
“நா….நா…நான் வரமாட்டேன் பயமா இருக்கு….”என்று அவள் நடுங்க,
“நான் அந்த வீட்டுக்கு எல்லாம் வரமாட்டேன்…”என்று பயந்து கொண்டே கூற,
“இல்ல இங்க பக்கத்தில ஒரு ரெஸ்டாரன்ட்ல தான் இருக்காரு வா…”என்று அவளை வற்புறுத்தி அழைத்து சென்றான்.அவர்கள் இருவரும் உள்ளே நுழையும் போது ஒருவர் இவர்களை கை தூக்கி அழைத்தார்.கயல்விழி நடுக்கத்துடன் தான் சென்றாள்.அங்கு ஒரு ஐம்பது வயது தக்க ஒருவர் அமர்ந்திருந்தார்.
“உட்காரு…”என்று அவர் கயல்விழியை ஒரு அதிகாரத்துடன் கூற,அதில் அப்படியே சத்யாவை கண்டாள்.அமைதியாக எதிரில் அமர,
“நீயும் உட்காரு நவீன்….”என்று அவளை அழைத்து வந்தவனை அவர் கூற,
“இல்ல அங்கிள்….நான் அவனை பார்க்க போறேன்…”என்று கூற,
“அதான் அவன் அம்மா இருக்காளே பார்த்துக்குவா….”என்று கூற நவீனும் அமர்ந்தான்.அவனது விழிகள் கோபத்தில் முறைத்துக் கொண்டிருந்தது கயலை.கயலுக்கு ஒன்றும் புரியவில்லை அவள் நடுங்கியவாறே,
“சத்…சத்யாவுக்கு என்ன…”என்று ஒருவாறு தைரியத்தை வரவழைத்து கேட்டுவிட்டாள்.ஏதோ அசம்பாவிதம் என்று மட்டும் அவளுக்கு புரிந்தது.அதுவும் தன்னால் என்று நினைத்தவளுக்கு உள்ளம் நடுங்கி தான் போனது.சத்யாவை அவளுக்கு பிடிக்காது என்றெல்லாம் இல்லை அவளுக்கு சத்யாவை பிடிக்கும் அது காதலா என்று அவள் குழம்பி தெளியும் முன்னே அனைத்தும் முடிந்துவிட்டது.
“நீ….இனி அவன் பெயரைக் கூட சொல்லக்கூடாது….புரியுதா…”என்று சத்யாவின் மாமா கூற கயலோ,
“இல்ல….அது….”என்று ஏதோ கூற வர,தனது கையை உயர்த்தி தடுத்தவர்,
“நீ செஞ்சவரைக்கும் போதும்….இனி நீ சத்யாவை எந்த காரணத்தைக் கொண்டும் நெருங்க கூடாது….புரியுதா…..அப்படி ஏதாவது தில்லுமுல்லு பண்ணலாம்னு நினைச்ச உங்க அப்பா இங்க தான வேலை செய்யுறாரு….”என்று கூற கயலுக்கு மீண்டும் காய்ச்சல் வந்துவிட்டது.
“இல்ல…இல்ல நான் இனி சத்யாவை பத்தி கேட்கலை….எங்க அப்பாகிட்ட சொல்லிடாதீங்க….ப்ளீஸ்….”என்று கெஞ்ச தொடங்க,நவீனோ அவளை அற்ப புழுவை பார்பது போல பார்த்துவைத்தான்.
“ம்ம்ம்….குட்….நீ போலாம்….போ….இனி சத்யா உன் லைப்ல வரமாட்டான்….போ படிக்கிற வேலையை மட்டும் தான் பார்க்கனும்…இது மாதிரி வேற ஏதாவது பண்ணேன்னு தெரிஞ்சுது….அவ்வளவு தான்….என்னை சாதாரணமா எடைபோடத….நான் ஒரு மிலிட்டரி மேன்…உன்னை தூக்கி உள்ள வைச்சுடுவேன் புரியுதா…போ…”என்று அதிகார தோரணையில் கூற கயல்விழி தலையை மட்டுமே ஆட்ட முடிந்தது.அவள் எழுந்து செல்ல அவளையே பார்த்துக் கொண்டிருந்த நவீன்,
“உங்கள மாதிரி பொண்ணுக்கெல்லாம் பையன்களை ஏமாத்துறுதல என்ன கிடைச்சுடும்…ஒருத்தனை உயிரோட கொன்னுட்ட…உன்னை….”என்று நவீன் எகிற,
“டேய்…விடு நீ போ….இனி எங்க கண்ணுல விழுந்துடாத போ….”என்று கூற கயல்விழி தப்பித்தாள் போதும் என்று நினைத்து வந்துவிட்டாள்.அதன் பிறகு சத்யாவை அவள் பார்க்கவில்லை.கல்லூரியிலும் அவன் வேறு கல்லூரி மாறிவிட்டதாக தகவல் மட்டுமே கிடைத்தது.
அதன் பிறகு கல்லூரி முடியும் வரை அவளால் சத்யாவை மறக்கமுடியவில்லை.ஆனால் அவனின் மாமா மிரட்டியதும் கூடவே நியாபகத்திற்கு வர தன் மனதில் உள்ளதை மூடி வைத்துவிட்டாள்.அதன் பிறகு அவள் வேலைக்கு சென்று பின் தான் சத்யாவை முற்றிலும் மறந்தாள்.இதில் கயல் அறியாத ஒன்று அவள் அஷ்வத்தை திருமணம் செய்ய விரும்பியது கூட அவனின் சில செயல்பாடுகள் சத்யாவை போலவே இருக்கும் அதனால் தான் அவள் அஷ்வத்தை திருமணம் செய்ய விரும்பியது.