அன்றும் கயல்விழி மாலை தன் அன்னையிடம் பேசிக் கொண்டே வீட்டிற்கு வந்து கொண்டிருக்க வழியில் அனு யாரோ ஒரு ஆணுடன் பேசிக் கொண்டிந்தாள்.அவளின் கண்கள் கலங்கி இருந்தது.அதைக் கண்டவுடன் கயல்விழி வேகமாக அவளை நோக்கி வர அதற்குள் அந்த ஆண் ஏதோ பேசிவிட்டு பைக்கில் ஏறி சென்றுவிட்டான்.அவள் அனுவின் தோள்களை தொட அந்த இடத்தில் கயலை எதிர்பார்க்காத அனு பயந்து நடுங்கினாள்.
“ஓஓ….பிரண்டா…வா என்கூட….”என்று நேராக தனது வீட்டிற்கு அழைத்து சென்றாள்.அனுவோ பயந்து கொண்டே அவளை பார்த்துக் கொண்டிருக்க,
“அனு….யாரது….நீ ஏன் அழுத….???”என்று கேள்விகளை தொடுக்க,
“அதெல்லாம் ஒண்ணுமில்லக்கா…நாங்க பிரண்ட்ஸ் தான்….நான் வரேன்….எனக்கு படிக்கனும்….”என்று எழுந்து தன் வீட்டிற்கு செல்ல முற்பட,
“அனுமா….எனக்கு ஏதோ தப்பா படுது….என்கிட்ட சொல்லு….நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்….”என்று மென்மையாக கயல் கேட்க,
“அக்கா….நான் தான் சொல்லுறேனே விடுங்க….”என்று அனு முகத்தை சுழிக்க தொடங்கினாள்.அவளின் கைகளை விட்ட கயல்விழி,
“ஒண்ணுமட்டும் நியாபகத்தில வச்சுக்கோ அனு….உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் நீ என்கிட்ட சொல்லாம்…நீ உண்மையிலேயே என்னை உன் அக்காவா நினைச்சா….இப்ப நீ போ…படி….”என்று கூறி அவளை அனுப்பிவிட்டாள்.அனன்யாவிற்கு அப்போது தான் மூச்சே வந்தது.
“ம்ம்ம்….சரிக்கா….வந்தா சொல்லுறேன்….பை….”என்று விட்டால் போதும் என்று ஓடிவிட்டாள்.
போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த கயல்விழிக்கு மனதெங்கும் பாரம் ஏறியது.சிறு வயது நல்லது கெட்டதை பிரிக்க தெரியாது.வழிக்காட்ட வேண்டிய தாய்,தகப்பனோ பணம் பணம் என்று அதன் பின்னே ஓடுகின்றனர்.இதில் இவளை குறைக் கூறி என்ன பயன்.
இப்போது அதட்டினால் கண்டிப்பாக அனு வேறு விதமாக தான் சிந்திப்பாள் என்பது நன்கு புரிந்தது கயல்விழிக்கு,ஏனென்றால் அவளும் தவறுகளை இழைத்தவள் தானே அதனால் அனுவிடம் பொறுமையாக தான் கையாள வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தாள்.
இந்த வயதில் எதை செய்யாதே என்று நாம் சொல்கிறோம் அதை தான் நம் மனம் முதலில் செய்யும்.அதனால் அவர்களை அரவணைத்து அவர்களின் வழியிலேயே சென்று தான் மடக்க வேண்டும்.என்ன செய்யலாம் என்ன செய்யலாம் என்று தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தாள் கயல்விழி.
அன்றிலிருந்து கயல்விழியின் கவனம் அனன்யாவின் மீது அவ்வபோது படிய தொடங்கியது.ஆர்த்தியிடம் கூறலாமா என்று நினைத்தவள்,ஆர்த்தியை சந்தித்து,
“ஆர்த்தி….இப்பெல்லாம் நம்ம ஏரியா சரியில்லை…அதனால அனுவை கொஞ்சம் கவனமா பார்த்துங்குங்க….”என்று அவளிடம் மறைமுகமாக கூறியிருந்தாள்.ஆனால் ஆர்த்தி அதை பெரிதாக எடுத்துக் கொண்டது போல் தெரியவில்லை.
அனு வீடு வந்தபிறகு என்னதான் அவளிடம் பேசி பார்த்தாலும் மழுப்பலாகவே பதில் வரும்.கயல்விழி என்ன தான் அனுவை கண்காணித்தாலும் அவள் போகும் இடமெங்கும் இவளால் போக முடியாதே.என்ன செய்வது புரியாமல் கயல் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.ஆனால் அவளின் மனது மட்டும் ஏதோ விபரீதம் நடக்கபோகிறது என்று உணர்த்திக் கொண்டே தான் இருந்தது.
அன்று மாலை அனன்யா பள்ளியில் இருந்து வெளியில் வரும் போது அவளை எதிர் கொண்டான் விமல்.
“ச்சு…என்ன அனுமா…நீ இப்படி பயப்படுற….நான் என்ன அப்படிப்பட்ட ஆளா….எனக்கு எவ்வளவு மனசு கஷ்டமா இருக்கு தெரியுமா நீ என்கிட்ட பேசனலனா….இரண்டு நாளா நான் சாப்பிடவேயில்லை….உன்னை பார்க்க வந்தா நீ இப்படி ஓடுற….”என்று பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு விமல் கூற அனுவிற்கு மனதிற்கு கஷ்டமாக இருந்தது.
“என்ன விமல் ஏன் சாப்பிடாம இருந்த….இப்ப என்னை பார்த்துட்டல போய் சாப்பிடு….நாம நாளைக்கு பார்க்கலாம்….”என்று இப்போதைக்கு அவனை சமாதனம் படுத்தி அவனை அனுப்பி வைத்தாள்.
வீடு வரும் வழியெங்கும் அனன்யாவிற்கு விமலை பற்றிய எண்ணங்களே.விமல் XXX கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.அனு ஒருமுறை தனது பள்ளி பேருந்து வரவில்லை என்று அரசு பேருந்தில் பயணம் செய்யும் போது தான் அவனை முதன் முதலில் பார்த்தது.ஒரு ஆடவனின் கண்கள் தன் மேல் விழுவதைக் கண்ட அனுவிற்கு முதலில் படபடப்பாக தான் இருந்தது.தனது பள்ளி வளாகம் வந்தவுடன் வேகமாக பேருந்தில் இருந்து இறங்கி ஓடிவிட்டாள்.
அதன் பிறகு அவனை அடிக்கடி தனது பள்ளி வளாகத்திற்கு எதிரில் பார்ப்பாள்.ஆனால் பேசவெல்லாம் மாட்டாள்.அவனின் பார்வை தன்மேல் தான் என்று புரிந்தவளுக்கு அந்த வயதிற்கு உரித்தான ஒருவித ரசாயன மாற்றம்.தாய்,தகப்பனோ தங்களின் பணியிலேயே கவனத்தை வைத்திருக்க அவர்கள் கண்களிலும் பெண்ணின் மாறுதல்கள் தெரியவில்லை.பதின்ம வயதில் வரும் ஒருவித ஈர்ப்பு என்பார்களே அது தான் அனுவிற்கும்.இதனை ஆரம்பத்திலேயே கவனித்திருந்தால் அனு தவறான பாதைக்கு சென்றிருக்கமாட்டாள்.ஆனால் பெற்றோரின் கவனக் குறைவு அவளின் வாழ்க்கையே திசை திருப்பியது.
இவ்வாறு இருவரும் கண்களாலே பேச தொடங்கினர்.அது நாலடைவில் காதலாக உருமாறியிருந்தது.காதலை ஏற்கொள்ளும் வரை அவளிடம் இடைவெளிவிட்டவன் காதலை ஏற்றுக் கொண்டதில் இருந்து அவளிடம் அதிக நெருக்கம் காட்ட தொடங்கினான்.அதுவே அனுவிற்கு மனதிற்குள் பய வித்தை விதைக்க செய்திருந்தது.என்னதான் அவள் காதல் என்று விழுந்துவிட்டாலும் தாய்,தகப்பனை நினைத்து பயம் இருந்தது.அதனால் அனு விமலை கொஞ்சம் விலகி இருக்க நினைக்க அவனோ இவளை விடாமல் துரத்த தொடங்கினான்.ஆரம்பத்தில் இவள் அழைப்பு கொடுத்தால் மட்டுமே அழைப்பவன் இப்போதெல்லாம் நினைத்த நேரம் எல்லாம் அழைக்க தொடங்கியிருந்தான்.
அவ்வாறு ஒருமுறை அழைக்கும் போது தான் கயல்விழியிடம் அவள் மாட்டிக் கொண்டது.
“நல்லவேளை அந்த அக்கா….என்னை எதுவும் கேட்கலை….இல்லைனா மாட்டியிருப்பேன்….”என்று தனக்குள் கூறிக் கொண்டவள் அறியவில்லை தான் மாட்டியிருப்பது மிகப்பெரிய சிலந்தி வலை என்பது.
கயல்விழி தனது வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியிருந்தாள்.இன்று அவளுக்கு வேலை சற்று குறைவு என்பதால் சற்று நேரத்துடன் வந்திருந்தாள்.தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள் தனகான காபியை கலந்து கொண்டிருந்த நேரம் அவளின் வீட்டின் கதவு தட்டப்பட்டது.
“வரேன்….வரேன்….”என்று கூறி கொண்டே சென்று கதவை திறக்க,அங்கு அனுவின் கேர்டேகர் நின்றிருந்தார்.அவரின் முகத்தில் அளவு கடந்த பயம் அப்பிக்கிடக்க,
“என்னாச்சு க்கா….”என்று பதட்டத்துடன் தான் கயல் கேட்டாள்.
“கயலு….இன்னும் பாப்பா வரல….வேன்கார்ன்கிட்ட ஏதோ கிளாஸ்னு சொல்லுச்சாம்….ஆனா இந்த நேரத்துக்கு எல்லாம் எப்போதும் வந்திடும்….இன்னும் காணும்…பயமா இருக்கு கயலு….”என்று அவர் பதட்டத்துடன் கூற,கயலுக்கு சப்தநாடியும் நின்று போனது.அனு எங்கு சென்றிருப்பாள் அவன் அந்த பையன் ஏதாவது என்று நினைக்கவே பயமாக இருந்தது.
“போட்டேன் மா…ஆனா எடுக்கலை….இதுக எல்லாம் எதுக்கு பிள்ளை பெத்துக்குதுனு தெரியலை….பணம் பணம்னு அலையுதுங்க….”என்று அவர் புலம்பலை தொடங்க,
“அய்யோ அக்கா….இப்போ நாம பேசிக்கிட்டு இருக்குற நேரமில்லை….நீங்க இங்கே இருந்து ஆர்த்தி இல்ல ராஜேஷ் அண்ணாவுக்கு கால் பண்ணுங்க….ஒருவேளை அனு வந்தா எனக்கும் கால் பண்ணுங்க….நான் தேடி பார்த்துட்டு வரேன்….”என்றுவிட்டு கயல்விழி அனுவின் பள்ளிக்கு ஓடினாள்.
கயல்விழி நேராக அனுவின் பள்ளியில் சென்று விசாரிக்க அவர்களோ மாணவர்கள் அனைவரும் ஐந்தரை மணிக்கே சென்றுவிட்டனர் என்று கூறினர்.கயல்விழிக்கு ஒன்றுமே புரியவில்லை மணியை பார்க்க அது ஆறரை என்று காட்டியது.தாமதிக்கும் நிமிடங்கள் அனுவிற்கு என்ன ஆகியிருக்குமோ என்ற பயம் வேறு அவளை அலைக்கழிக்க.
“கடவுளே…சின்ன பொண்ணு…ஏதாவது உதவி பண்ணுங்க…”என்று வாய்விட்டே அவள் புலம்ப,கடவுளுக்கு அவளின் வேண்டுதல் கேட்டதோ எண்ணவோ அவளின் முன் தோன்றினார் சத்யாவின் உருவில்.பள்ளிக்கு எதிர் புறத்தில் இருந்த சிக்னலில் போலீஸ் வாகனம் ஒன்று நிற்க அப்போது கயல்விழியின் மூளையில் மின்னல் வெட்டியது.
“சத்யா….”என்று வாய்முத்தை உதிர்த்தவள்.
ஒரு ஆட்டோவில் ஏறி காவல் நிலையத்தை அடைந்தாள்.அங்கு சேரும் முன் இருமுறை அவள் அனுவின் கேர்டேக்ருக்கும் போன் செய்து கேட்டிருக்க,அவரோ அனுவின் அப்பாவிடம் தகவல் கூறிவிட்டதாக கூறினார்.காவல் நிலைத்திற்குள் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த ஒரு காவலரிடம்,
“சார்….எனக்கு சத்யாவை பார்க்கனும்…”என்று கூற அவரோ தனது உயர் அதிகாரியின் பெயரை உரிமையுடன் கூறும் பெண்னை மேலும் கீழும் ஒருமுறை பார்த்துவிட்டு,
“உட்காருமா…உடனே எல்லாம் பார்க்க முடியாது….அவர் கிட்ட பேசிட்டு வந்து சொல்லுறேன்….”என்று கூற,
“கொஞ்சம் சீக்கிரம் சார்….ரொம்ப முக்கியமான விஷயம்….”என்று கயல் அவரிடம் பேசிக் கொண்டிருந்த நேரம்,
“சண்முகம்….இந்த பைல்…”என்று ஏதோ கேட்டப்படி வந்தான் சத்யா.அவனைக் கண்டவுடன் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல அவனின் முன் சென்று,
“சத்யா…உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்…அது…”என்று அவள் பதட்டத்தில் இருக்கும் இடம் மறந்து கூற தொடங்க அவளை கை நீட்டி தடுத்தவன் உள்ளே அமரும்படி சைகை செய்தான்.
ஒரு பைல் வேண்டும் என்பதற்காக வெளியில் வந்தவன் முன் திடீர் என்று கயல் ஓடிவந்து நிற்கவும் ஒருநொடி தடுமாறிவிட்டான் தான்.அவளின் உரிமையான அழைப்பில் மனதில் ஏதோ சாரல் அடித்ததை போல் இருந்தது.ஆனால் காட்சி பொருள் போல் அனைவரின் கவனமும் தங்களின் மீதே இருப்பதைக் கண்டு அவளை உள்ளே போக சொன்னான்.இப்போதும் ஒருசிலர் அவனையே பார்த்துக் கொண்டிருக்க,
“எல்லாரும் வேலையை பாருங்க…இங்க என்ன வேடிக்கை…”என்று கோபமாக கத்திவிட்டு உள்ளே வந்தான்.
“சத்யா…அது அனு….”என்று ஏதோ கூற வந்தவளை தடுத்து,
“இங்க பாரு….என் பேர் சொல்லி கூப்பிடுற பழக்கமெல்லாம் இங்க வேண்டாம் புரியுதா….ஒழுங்கா சார்னு சொல்லு…இப்ப சொல்லு….என்ன விஷயம்….”என்று கூற,கயல் அனுவை பற்றி அனைத்தையும் கூறி அவளை காணவில்லை என்று கூறினாள்.
“நீ அந்த பொண்ணுக்கு என்ன வேணும்….”என்று கேட்க,
“அது நான் அந்த பொண்ணு எனக்கு எதிர் வீடு தான்….எனக்கு நல்லா தெரியும்….”என்று கூற
“ம்ம்ம்….நீ சொல்லுறது சரி அந்த பொண்ணோட அப்பா,அம்மா எங்க???”என்று அவன் வரிசையாக கேள்விகளை தொகுக்க,
“அய்யோ சத்…”என்றவள் தொடங்கியவள் அவனது முறைப்பில்,
“சா…சார்…சார்…இப்ப இதெல்லாம் பேச நேரமில்லை….அனுக்கு ஏதோ ஆபத்துனு மனசுக்கு தோணுது….கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்….நான் உன்னை….இல்லை இல்லை உங்களை தான் நம்பியிருக்கேன்….”என்று கயல் அழுகையுடனே கூற,அவளை கூர்மையாக பார்த்த சத்யா,
“சரி கிளம்பு…”என்று கூறி முன்னே நடக்க தொடங்கினான்.கயலோ ஒன்றும்புரியாமல் விழித்தாள்.
“என்ன கிளம்பு நீ தான அந்த பொண்ணுக்கு ஆபத்துனு சொல்லுற….வா…”என்று கூறிக் கொண்டே முன்னே சென்று அவனது வாகனத்தில் ஏற கயலும் ஏறிக் கொண்டாள்.இப்போது இருவரும் கயலின் குடியிருப்பு பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அதற்குள் கயலிற்கு ஆர்த்தியிடம் இருந்து போன் வர,
“அச்சோ ஆர்த்தி என்ன ஆச்சு….சொல்லுங்க….நான் இப்ப அங்க தான் வரேன்….”என்று கயல் கூற,
“கயல் அனுவை காணலை….அவரு தேட போயிருக்காரு…எனக்கு பயமா இருக்கு….”என்று ஆர்த்தி கேவி கேவி அழதொடங்க,கயல் போனை வைத்துவிட்டாள்.சத்யா அவ்வபோது கயலை பார்த்துக் கொண்டுதான் வந்தான் ஆனால் ஒன்றும் கேட்கவில்லை.அவர்களின் வாகனம் அப்போது சிக்னலில் நின்று கொண்டிருந்தது.
கயல்விழி மனதில் பயத்துடன் வெளியில் பார்த்துக் கொண்டிருந்தாள் அப்போது எதிரில் ஒரு டீக் கடையில் இருந்து வெளிவந்த ஆடவனைக் கண்டாள். அன்று அனுவுடன் பார்த்த இளைஞன் போனில் பேசிக் கொண்டே ஒரு ஆட்டோவில் ஏற,
“சத்யா….சத்யா…அதோ….அதோ..அது தான் அந்த பையன்….”என்று கூற சத்யாவும் பரபரப்பாக அவள் காட்டிய திசையை பார்க்க,அங்கு ஒரு ஆட்டோ மட்டுமே அவனுக்கு தெரிந்தது.
“அவன் அந்த ஆட்டோக்குள்ள போனதை நான் பார்த்தேன்…அவன் தான்…அவனே தான்….அன்னைக்கு நான் அனுகூட பார்த்தது….”என்று கயல் பதட்டமாக கூற,
“ப்ச் பொறுமையா இரு கயல்….”என்றவன் அந்த ஆட்டோ இருக்கும் இடம் நோக்கி வண்டியை விட்டான்.அதற்குள் ஆட்டோ நகர தொடங்க,இவனும் ஆட்டோவை சத்தமில்லாமல் தொடர தொடங்கினான்.ஒரு திருப்பத்தில் ஆட்டோ போய் நிற்க சத்யா வண்டியை நிறுத்தும் முன் வேகமாக குதித்த கயல்,
“ஏய்….”என்று சத்யா கத்தியதைக் கூட பொருட்படுதாது வேகமாக அந்த ஆட்டோவை அடைந்தவள்,
“அனுஊஊஊஊ…”என்று அலறினாள்.அதற்குள் அந்த ஆட்டோவை ஓட்டி வந்தவன் ஓடி மறைந்திருந்தான்.அவன் தான் போலீஸ் வண்டியை பார்த்தவுடன் வண்டியை ஓரம் கட்டிவிட்டு தான் தப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டான்.ஆட்டோவின் உள் அனு மயங்கிய நிலையில் கிடந்தாள்.சத்யா வேகமாக கயலிடம் வந்தவன் அவளை விலகிவிட்டு உள்ளிருக்கும் பெண்னை பார்த்தான்,பின் வேகமாக அவளைத் தூக்கிக் கொண்டு ஓட கயலும் அவனின் பின்னே ஓடினாள்.
அனுவை தனது வண்டியின் பின் பக்கத்தில் படுக்க வைத்துவிட்டு வேகமாக வண்டியை எடுத்தான்.கயல் அனுவுடன் ஏறி அவளின் முகத்தை தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள்.
“ஏய்….லூசு….முதல்ல அவங்க அம்மாக்கு கால் பண்ணி….பக்கத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனை பெயரைக் கூறி வர சொன்னான்…”கயல் ஆரத்திக்கு அழைத்து அனுவை பற்றிக் கூறி வர சொன்னாள்.அதற்குள் சத்யா சண்முகத்திற்கு அழைத்து அந்த ஆட்டோவை பற்றிய விபரம் அறிய சொல்லிவிட்டான்.
மருத்துவமனையில் அனு அவசர பிரிவில் அனுமதித்தனர்.கயல் அந்த அவசர பிறிவின் வெளியிலேயே மடங்கி அமர்ந்துவிட,அவளை பிடித்து எழுப்பி ஓரமாக அமர செய்தான் சத்யா.அதற்குள் ஆர்த்தியும்,அவளது கணவன் ரஜேஷூம் அழுத படியே ஓடி வந்தனர்.
“அய்யோ என் பொண்ணு….என் பொண்ணு….”என்று ஆர்த்தி தலையில் அடித்துக் கொண்டு அழ,ராஜேஷோ பித்து பிடித்ததை போல் நின்றுவிட்டான்.அவரச சிகிச்சை பிறிவின் கண்ணாடி வழியே அனுவை பார்த்தவன் தலையில் அடித்துக் கொண்டே அழ.அங்கு யாராலும் எதுவும் பேச முடியவில்லை.
சத்யா சற்று நேரம் அவர்களை அழவிட்டவன் பின் தன் விசாரனையை தொடங்கினான்.முதலில் ஆர்த்தி,ராஜேஷ் இருவரிடமும் சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தான்.கயலோ எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை அவள் மனது முழுவதும் அனுவிற்கு எதுவும் நேர்ந்திருக்கக் கூடாது என்பதிலேயே இருந்தது.
அனுவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வெளியில் வர அவரிடம் ஒரு சேர அனைவரும் நெருங்கி,
“என்ன ஆச்சு டாக்டர்???”என்று கேட்க,அவர் தந்த பதிலில் அனைவரும் நடுங்கி தான் விட்டனர்.