சூர்யா அஞ்சலி திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது. திருமணம் முடிந்த அடுத்த நாள் அஞ்சலி செய்து வைத்த வேலையில் மல்லிகாவோடு பிரேமாவுமே கலங்கி போய் தான் இருந்தனர் சூர்யாவின் வாழ்க்கையை எண்ணி.
ஜெய்யும் அப்படியே தான் என்றாலும் பெரியவர்கள் காட்டிக் கொள்ளாமல் இருக்க, சூர்யாவைப் பார்க்கும் போதெல்லாம் முறைத்துக் கொண்டிருந்தான் ஜெய்.
“இதெல்லாம் ஒரு மேட்டரா? விடு ப்பா!” என்று விடுவான் சூர்யா.
“அண்ணி நார்மல் ஆகிட்டாங்களா ண்ணா?” என்று நிவி கேட்க,
“விச் அண்ணி?” என்றவனுக்கு முதலில் அஞ்சலியை தான் கேட்கிறாள் என்றே புரியவில்லை. அந்த அளவுக்கு தான் இருந்தது சூர்யா அஞ்சலியின் வாழ்க்கை.
“எலிய கேட்டியா? இருபத்தி நாலு வருஷம் இஷ்டத்துக்கு விட்ருக்காங்க.. உடனே சரி பண்ண முடியுமா?” என்று சிரிப்பான்.
அஞ்சலியும் சாப்பிட மட்டுமே தான் கீழே இறங்கி வருவாள். அதுவும் ஜெய் இருந்தால் பார்த்துவிட்டு சென்றுவிடுவாள்.
ஜெய்யே சாதாரணமாய் இருந்து கொள்ள, தன்னால் முடியவில்லையே என்றொரு ஆதங்கமும் கோபத்துடன் சேர்ந்து கொண்டது அஞ்சலிக்கு.
சூர்யா அவர்கள் அறைக்கு வருபவன் அஞ்சலியை கண்டு கொள்ளவே மாட்டான்.. அப்படியே பார்த்தாலும் ஏதாவது அவளை கூறி அவளுக்கு கோபம் வந்த பின் தான் நிம்மதியாய் கீழே இறங்குவான்.
ஒரு வாரம் கழித்து குர்தி, பளசோ என இறங்கி வந்த அஞ்சலி வெளியில் செல்வதற்காக கிளம்பி வந்திருக்க, சூர்யா நிவியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் பார்த்தாலும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
“இட்லியா புட்டு வைக்கவா அஞ்சலி?” என்று மல்லிகா கேட்க, சூர்யா முறைக்க,
“இவங்க கேட்க மாட்டாங்க!” என்று விட்டுவிட்டார் பிரேமா.
அஞ்சலி அந்த வீட்டில் முகம் கொடுத்து பேசும் ஒரு ஆள் என்றால் அது மல்லிகா மட்டும் தான். அதுவும் கேட்பதற்கு பதில் வரும் அவ்வளவு தான். அதற்கும் தனி ஒரு நாள் பார்த்து கொள்ளலாம் என்று தான் நினைத்திருந்தான் சூர்யா.
நிவி அஞ்சலியின் முகத்தைப் பார்க்கவும் தட்டைப் பார்க்கவுமாய் இருக்க, சிறு குழந்தையாய் தெரிந்த தங்கை சூர்யாவின் கண்களுக்கு பாவமாய் இருந்த போதிலும்,
“ப்ச்! நிவி! என்ன பராக்கு வேண்டி இருக்கு.. சாப்பிட்டு கிளம்பு.. ஃபார்ம் பில் பண்ணியாச்சு இல்ல.. அக்கௌன்ட்ல மணி டிரான்ஸ்பெர் பண்ணிடுறேன்” என்றான் சூர்யா.
“ஜெய் ண்ணா அனுப்பிட்டாங்க.. முடிஞ்சா காலேஜ் வர்றேன்னும் சொல்லி இருக்காங்க” என்றாள் நிவி.
“ஏன் நான் அனுப்பினா உன் அக்கௌன்ட் தாங்காதா?” என்ற சூர்யாவை நக்கலாய் பார்த்த அஞ்சலியை அவனுமே கவனித்தான்.
“சரி பார்த்துப் போ!” என்றதும்,
“இவ என்ன தான் படிக்க போறாளோ.. கேட்டா மாஸ்டர் டிகிரின்னு பெருமை வேற மேடம்க்கு” என்று சிரித்தார் பிரேமாவும்.
அவருக்கு தலையை அசைத்தும் அசைக்காமலுமாய் பதில் கூறி சூர்யாவை கண்டு கொள்ளாமல் வாசலுக்கு சென்றுவிட்டாள் அஞ்சலி.
“ஒரு நிமிஷம் நில்லு!” என்று சூர்யா அழைக்க, திரும்பாமல் நின்றவளிடம்,
“எங்க போற?” என்றான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தே.
மல்லிகா, பிரேமா இருவரும் சமையலறை உள்ளே செல்ல,
“வெளில போக கூட பெர்மிஸ்ஸின் கேட்கணுமா? இது என்ன ஜெயிலா?” என்று அவளும் வாசலில் நின்றே கேட்க,
“ஷ்ஷ்!” என்றவன்,
“சத்தம் வந்துச்சு!” என்று மிரட்டிவிட்டு,
“பெர்மிஸ்ஸின் இல்ல.. ஜஸ்ட் இன்ஃபார்மேஷன்.. எனக்கு இல்லைனாலும் அம்மாங்களுக்கு நீ சொல்லிட்டு தான் போகணும்” என்று கூறியபடி அவளருகே வந்தவன்,
“பேச ரைட்ஸ் இருக்கு.. ஆனா எங்க எப்படி பேசுறோம்ன்ற வார்த்தை முக்கியம்.. இனி சொல்லாம கிளம்புறதை பார்த்தேன்..” என்று மீண்டும் மிரட்டலாய் கூறிவிட்டு உள்ளே செல்ல, எரிச்சலோடு கிளம்பினாள் அஞ்சலி.
“அய்யோ அக்கா! நீங்க ஏன் தான் இப்படி இருக்கீங்களோ! அவ உங்ககிட்ட ஒரு மரியாதைக்காச்சும் சொன்னாளா வெளில போறேன்னு? நீங்க ஏன் கேட்டீங்க?” என பிரேமா கேட்க,
“நல்லா கேளுங்க ம்மா! எவ்வளவு சொன்னாலும் மல்லி ம்மாக்கு புரியாது.. இதுல நீங்க தான் பெரிய மாமியார் வேற!” என்று சூர்யாவும் வேடிக்கை பேசி அமர,
“எல்லாரும் முகத்தை திருப்பிகிட்டா எப்படி டா ராசி ஆகுறது? இப்ப நான் கேட்டதுல என்ன போச்சு? நாலு நாள் கேட்டா அஞ்சாவது நாள் அவளா சொல்லிட்டு போக போறா” என்றவரை,
“திருத்த முடியாது.. திருத்தவே முடியாது!” என்று அதிருப்தியாய் சூர்யா தலையசைக்க,
“வெட்டி கதை பேசாம எழுந்து கிளம்பு டா.. லேட்டா போனா சீனியர் திட்ட போறார்” என்றார் பிரேமா.
“டேய்! தனியா போறா.. எங்கன்னு கேட்டு கொஞ்சம் அவளை கூட்டிட்டு போயிடேன்” என்று மல்லிகா கூற,
“ச்சோ!” என்று சூர்யா தலையில் அடிக்க,
“உங்களை என்ன பண்றது க்கா!” என்று முறைத்தார் பிரேமா. சூர்யா மொபைல் சிணுங்க, அலைபேசியில் ஜனனி பெயரைப் பார்த்தவன்,
“ஓகே பை மல்லி ம்மா.. பபை ம்மா!” என்று வெளியில் கிளம்பி வந்தவன்,
“சொல்லு ஜனனி!” என்றான் ஆவலாய்.
சூர்யா ஜனனியின் வீட்டில் பேசிவிட்டு வந்து ஐந்து நாட்கள் முடிந்திருக்க, இன்று தான் அவளாய் அழைத்திருக்கிறாள்.
அவளாய் யோசித்து முடிவெடுக்க அவள் வீட்டினர் விட்டிருக்க, சூர்யாவும் அதே எண்ணத்தில் தான் அவளிடம் இதுவரை எதுவும் கேட்டிருக்கவில்லை.
“சூர்யா! என் ஆபீஸ் பக்கத்துல இருக்குற காபி ஷாப் வர முடியுமா?” என்று கேட்க,
“நான் வேலைக்கு போறது கடவுளுக்கே பிடிக்கல போல.. ஹ்ம் வர்றேனே!” என்றவனை,
“இல்லை இல்லை! ஒர்க் இருந்தா ஈவ்னிங் கூட மீட் பண்ணலாம்” என்றாள்.
“ரெண்டுல எனக்கு இது தான் இம்போர்ட்டண்ட்.. நான் வேணா ஒர்க்கை ஈவ்னிங் பாத்துக்குறேனே! நான் ஒரு பத்து நிமிஷத்துல வர்றேன்” என்றதும் ஜனனி சிரிக்க,
“சீனியர் என்னைக்கு பாலா அய்யாகிட்ட போட்டு குடுத்து என்னை எப்போ வீட்டை விட்டு துரத்த போராரோ!” என்று முணுமுணுத்துக் கொண்டு ஜனனியை காண கிளம்பி சென்றான் சூர்யா.
************
“இது ஓகே வா?” என்றபடி தோழி வர,
“கலரே சரி இல்ல.. இன்னும் கொஞ்சம் பெட்டரா பாரு டி” என்றாள் அஞ்சலி தன் தோழியிடம்.
“இது?” என்று இன்னொன்றை எடுத்துக் காட்ட, அது நிறம் பிடித்திருந்த போதிலும்,
“கொஞ்சம் காஸ்ட்லியா தான் பாரேன் டி” என்றாள் அஞ்சலி.
“ஏற்கனவே என்னை இரிடேட் பண்ணி அனுப்பினான் அவன்.. இங்க எதுவும் செட் ஆகவும் மாட்டுது” என்று புலம்பிய அஞ்சலி, தனக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு பில்லிங் செல்ல,
“எதுக்கு டி இவ்வளவு?” என்றாள் தோழி.
“மூட் சரி இல்ல டி.. அதான் ஷாப்பிங் பண்ணினா சரி ஆகுமேன்னு வந்தேன்” என்று கூற,
“சரி தான்” என நினைத்துக் கொண்டாள் நண்பி.
கார்டை எடுத்து நீட்டிவிட்டு அஞ்சலி நிற்க,
“மேம்! கார்டு டெக்லைண்டு!” என்று பணிப்பெண் கூற,
“வாட்?” என்றவள் பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல்,
“நான் ட்ரை பண்றேன்” என அவளே அதை செய்ய, அப்போதும் அதே நிலைமை தான்.
“ப்ச்! ஷீட்!” என்றவள் இன்னொரு கார்டை எடுத்து நீட்ட, அதுவும் முடக்கப்பட்டிருந்தது.
“என்ன டி மூட் சரி இல்லைனா பணம் இருக்கான்னு பாக்காமலே ஷாப்பிங் கிளம்பிடுவையா” என்று உடன் வந்தவளே கிண்டல் செய்ய, உடனே தன் தந்தைக்கு அழைத்தாள் அஞ்சலி.
“சொல்லு அஞ்சலி ம்மா! நல்லாருக்கியா?” என்று குணசீலன் கேட்க,
நல்லா இல்ல பா” என்றாள் வேகமாய்.
“ஏன் டா?” என்று கேட்க,
“கார்டு ஏன் ப்பா பிளாக்ல இருக்கு?” என்றாள் கோபமாய்.
“அது.. அது வந்து டா…” என்று இழுத்தவர்,
“ஆமா நீ எங்க இருக்க? கூட சூர்யா இருக்கான் இல்ல?” என்று தவிப்பாய் கேட்க,
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க பா.. கார்டை ஏன் பிளாக் பண்ணிங்க?” என்றாள்.
“இல்ல டா சூர்யா தான் இந்த வீட்டுல இருந்து ஓரு ரூபா கூட என் பொண்டாட்டிக்கு வர கூடாதுன்னு ஸ்ட்ரீக்ட்டா சொன்னாரு.. அவரே பார்த்துக்குறதாவும் சொன்னாரே” என்று கூற, சூர்யா மேல் கொலைவெறி ஆனாள் அஞ்சலி.
“அவன் சொன்னா நீங்க உடனே பிளாக் பண்ணிடுவிங்களா ப்பா? உங்களுக்கு நான் முக்கியம் இல்லையா?” என்றவள் கண்களில் நீர் கோர்த்திருந்தது.
“இல்ல ம்மா.. இல்லவே இல்லை.. சூர்யா தான் என்னென்னவோ பேசி உன் அம்மாவும் சேர்ந்து..” என்று குணசீலன் பேசிக் கொண்டு இருக்கையிலேயே கட் செய்திருந்தாள் அஞ்சலி.
“இவனை இன்னைக்கு சும்மா விட கூடாது” என்று அந்த மாலில் இருந்து அஞ்சலி வெளி வந்த பொழுது ஜனனியுடன் சூர்யா காபி ஷாப்பில் இருந்து கிளம்பி வெளியே வந்திருந்தனர்.
இருவரையும் பார்த்த அஞ்சலிக்கு கண்கள் முட்டியது. ஜனனி அவள் கண்களில் மங்களாய் தெரிய,
உள்ளே இருந்து எதுவும் வாங்காமல் வந்ததை அவமனாமாய் உணர்ந்து கேவல் வர, சூர்யா ஜனனியை அவள் வண்டியில் அனுப்பி வைத்துவிட்டு கைகாட்டிக் கொண்டிருந்தான்.