அத்தியாயம் 12:
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர் மூணாரின் தனிச்சிறப்புகளுள் ஒன்றாகும்.
குறிஞ்சி பருவத்தில் நீலநிற குறிஞ்சி மலர்களால் மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்திருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியை இருக்கும்.
தென்னந்தியாவின் உயரமான சிகரமான 2,695 மீட்டர் உயரமுள்ள ஆனைமுடி இங்கு தான் அமைந்துள்ளது. இது மலையேற்றத்திற்கு மிகவும் ஏற்ற இடமாகும். பரந்த தேயிலைத் தோட்டங்கள், அழகிய நகரங்கள், முறுக்குப்பாதைகள், மற்றும் விடுமுறை வசதிகள் இந்த இடத்தை மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக வைத்திருக்கிறது.
மூணாறு இரவிகுளம் தேசியப்பூங்கா:
மூணாறுக்கு அருகில் உள்ள முக்கியமான இடங்களில் ஒன்று இரவிகுளம் தேசியப்பூங்கா. பல முக்கியமான ஆறுகளின் நீர்பிடிப்புப்பகுதியாகவும் இந்த வனப்பகுதி உள்ளது.
இரவிக்குளம் தேசியப்பூங்கா மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலப்பயணிகளும் பார்வையாளர்களும் ராஜமலா என்றழைக்கப்படும் பகுதி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
97 சதுர கி.மீ. பறந்து விரிந்துள்ள இந்தப்பூங்கா, பல்வேறு வகை அரிய பட்டாம்பூச்சிகள், விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடமாகும். மலையேற்றத்திற்கு சிறந்த இடமாகும்.
அதிகாலை நேரங்களில் மூடுபனியினால் போர்த்தப்பட்டிருக்கும் தேயிலைத் தோட்டங்கள் கண்கவர் காட்சியாக இருக்கும்.
இந்த தேசியகப்பூங்காவில் 26 வகையான பாலூட்டிகளும், 132 வகையான பறவைஇனங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இனப்பெருக்க காலமான ஜனவரி-பிப்ரவரி மாதங்களிலும், மழைகாகத்திலும் இந்த பூங்காவில் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.
மாட்டுப்பெட்டி மூணாறு:
சுற்றுலா பயணிகள் அதிகம் வருகைத்தரும் மற்றொரு முக்கிய இடம் மூணாறு நகரத்திலிருந்து 13 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் மாட்டுப்பெட்டியாகும்.
இது கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மாட்டுப்பெட்டி அதன் கல்கட்டு அணை மற்றும் அழகிய ஏரிக்காக புகழ்பெற்றது. அதை சுற்றியுள்ள மலைகள் மற்றும் நிலபரப்பினை அனுபவிக்க வழங்குவது மட்டுமல்லாது, மாட்டுப்பெட்டி ஆனந்தமான படகு சவாரியையும் வழங்குகிறது. இந்த பகுதியின் இன்னொரு சிறப்பு இந்தோ-ஸ்விஸ் கால்நடை திட்டத்தினால் நடத்தப்படும் பால்பண்ணை ஆகும். இங்கு வெவ்வேறு உயர் இரகபசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.
மூணாறு பள்ளிவாசல் நீர்வீழ்ச்சி:
மூணாறில் உள்ள சித்திரப்புரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் பள்ளிவாசல் அமைந்துள்ளது.
இயற்கை எழில் மிகுந்த இப்பகுதி பார்வையாளர்களின் கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கும். அதனால் சுற்றுலா பயணிகளின் தவற விடக்கூடாத பட்டியலில் இதுவும் ஒன்று.
மூணாறு சின்னக்கனால் & ஆனையிறங்கல்:
சின்னக்கனாலில் இருந்து ஏழு கிலோமீட்டர் தூரம் பயணித்தால் நீங்கள் ஆனையிறங்கலை அடையலாம்.
ஆனையிறங்கல், மூணாறிலிருந்து 22 கிமீ தூரத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களின் பசுமையான விரிப்பாகும். தேயிலைத் தோட்டங்களும் பசுமைக்காடுகளும் நிறைய நீர்த்தேக்கங்களினூடே பயணிக்கும் இப்பயணம் ஒரு மறக்க முடியாத அனுபவம். இது இங்கே உள்ள தேயிலை தோட்டங்கள், அணை மற்றும் ஊருக்கும் பிரசித்தி பெற்றது.
ஆனயிறங்கல் அணை மற்றும் ஏரிப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து நீர் அருந்தும் காட்சியை பார்ப்பதற்காக பயணிகள் அதில் வருகின்றனர்.
தேயிலை அருங்காட்சியகம்:
தேயிலைத் தோட்டங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி என்று வரும் போது, மூணாறு தனக்கென்று ஒரு மரபினைக் கொண்டிருக்கிறது. இந்த மரபினை கருத்தில் கொண்டும் கேரளாவின் உயர்ந்த இடங்களில் தேயிலைத் தோட்டங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியின் சில அற்புதமான மற்றும் சுவாரசியமான அம்சங்களைப் பாதுகாத்து காட்சிப்படுத்துவதற்காகவும், மூணாறில் டாடா டீயினால் சில ஆண்டுகளுக்கு முன்னர் தேயிலைக்கென்று ஒரு தனிச்சிறப்பான ஒரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இந்த தேயிலை அருங்காட்சியகம் கலைப்பொருட்கள், புகைப்படங்கள் மற்றும் இயந்திரங்களை காட்சிக்கு வைத்துள்ளது; இவை அனைத்தும் மூணாறில் தேயிலைத் தோட்டங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைப் பற்றிய கதையை இந்த உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன. பார்வையாளர்களை கவரும் இந்த அருங்காட்சியகம் டாடா டீயின் நல்லத்தண்ணி எஸ்டேட்டில் அமைந்துள்ளது.
[the_ad id=”6605″]
****************×*******************************
சென்னையில் லட்சுமி தன் கோபத்தை அடக்கமுடியாமல் ராமனை வாங்குவாங்கு என வாங்கிக்கொண்டு இருந்தார்.
லட்சுமி, “ஏன்டா இன்னுமா உன்னால் அந்த பொட்டச்சிய கண்டுபிடிக்கமுடியல?.. என்ன பன்னுவையோ எனக்கு தெரியாது இன்னும் ஆறு மாசத்துக்குள்ள அவ என் கண்முண்ணாடி இருக்கனும்”.
“அக்கா… நீங்க கவலை விடுங்க… அவளை கிட்டதட்ட நெருங்கியாச்சி”.
எங்கடா ராமா இருக்கா அவ?… “ஆமாம் அக்கா… அவ கடைசியா அங்க இருந்து பாண்டிச்சேரி போய் இருக்கா. அங்க யாரோ ஒருத்தர் வீட்டில் ஒரு வருஷம் இருந்து இருக்கா… அந்த வீட்டுக்காரங்க ஒரு ஆக்ஸிடன்டுல அவங்க எல்லாம் இறந்துட்டாங்க… அங்க நடந்த ஏதோ பிரச்சினையினால், அந்த ஊரைவிட்டு நாளுவருசத்துக்கு முன்னாடியே போய்ட்டா… அந்த வீட்டில் இருந்த பசங்கள கூட்டிகிட்டு இரவோடஇரவா அந்த ஊரைவிட்டு போய்டா”…. அதுக்கு பிறகு யாரும் அவள பார்க்கவில்லை க்கா.
அதுமட்டுமல்ல க்கா… “அவக்கிட்ட பிரட்சனை பண்ணுன பரமன்றவன் கொஞ்சம் நாளுக்கு முன்ன தான் ஜெயிலில் இருந்து வந்து இவங்க வீட்டுக்கு போய் இருக்கான். ஆனா அவ, அந்த வீட்டை வித்து வந்த பணத்த எடுத்துகிட்டு போய்டா… அதுல காண்டானவன் அவளை தேடிகிட்டு இருக்கான் க்கா”…
ராமா… “அவகிட்ட பிரட்சனை பண்ணவன பிடிச்சா ஏதாவது விவரம்கிடைக்கும்டா… முதலில் அவனபிடி… கொஞ்சம் பணத்தாசை காட்டினா போதும் அவனே அவளை நம்மகிட்ட கொண்டு வந்துடுவான்டா”… “ஆமாம் க்கா!”… அந்த டிடக்டிவும் இதைத்தான் சொன்னாங்க அக்கா.
அதைவிடுடா… க”ண்டிப்பா அவ இங்க இருக்க யார்கிட்டையாவது தொடர்பில் இருப்பா…. அவங்க யார்னு பார்த்து, அவங்களை முதலில் பின் தொடர்ந்தா அந்த நாயை பிடிச்சிடளாம் ராமா”. அந்த உமா கையில சிக்கட்டும், அப்புறம் அவள நார்த் பக்கம் தொழில் பன்றவங்ககிட்ட வித்துடளாம் ராமா… அவள கொண்ணாகூட ஒருத்த நாள் வேதனை மட்டும் தான். இந்த மாதிரி இடத்தில் மாட்டுனா வாழ்கைபூராம் நரகம் ராமா. அந்த நகரத்தை அவளுக்கு காட்டாம விடமாட்டேன் இதுதான் அவளுக்கான தண்டனை ராமா”.
ராமன், “இது தான் அக்கா அவளுக்கான சரியான தண்டனை” எனக்கூறி சிரித்தனர் அந்த அக்கா, தம்பி. அந்த சிரிப்பு உமாவுக்கு உயிருடன் நகரத்தை காட்ட நினைத்தது.
லட்சுமி, “அப்புறம் நித்தியனுக்கு அவ இருக்க இடம் ஏதாவது தெரியுமானு பாருடா… அவன் நம்பர், அவன் பொண்டாட்டியோட நம்பர்னு செக் பன்னுடா”. சரிக்கா நான் அந்த டிடக்டிவ் கிட்ட சொல்லி செய்யறேன் எனக்கூறி வெளியே சென்றுவிட்டான் ராமன்.
லட்சுமியே வழக்கம் போல் தன்னுடைய அறையில் இருந்த பாட்டிலுடன் ஐக்கியமாகிவிட்டார்.
“ஒரு பெண் குடும்பத்தின் உயர்வுக்கு அடித்தளமாக இருக்கவேண்டுமே ஒழிய அந்த குடும்பத்தின் அழிவுக்கு காரணமாக இருக்கக்கூடாது”.
ஆண்களுக்கு இல்லாத ஒரு உயிரை சுமக்கும் பாக்கியம் ஆனது பெண்களுக்கு அந்த கடவுள் வாரிவழங்கி கொடுத்து இருக்கிறார்.
பெண்களுக்கு உள்ள மனவலிமையானது ஆண்களுக்கு இல்லை. ஒரு உயிரை பத்துமாதம் சுமக்கும் அளவுக்கு பெண்களின் மனவலிமை மற்றும் பொறுமை ஆனது பெண்களுக்கு இருக்கின்றது தான் காரணம்.
பொறுமைக்கு உதாரணமாக பெண் கடவுளான பூமாதேவியை தான் குறிப்பிட்டுகிறார்களே தவிர எந்த ஒரு ஆண்கடவுளையும் சொல்லவில்லை.
அதே போல் நதிகளுக்கு பெண்களின் பெயரான வைகை, கோதாவரி, யமுனை எனக்குறிப்பிடுகிறார்களே தவிர ஆண்கள் பெயரை சொல்லவில்லை.
அந்த நதியானது எப்படி மேடுபள்ளம், கரடுமுரடான பாதைகள், மலைகள், காடுகள் என பல இடங்கள் வழியாக கடலை அடைகிறதோ, அதே போல் தான் பெண்களின் வாழ்க்கையும்.
நதிகளுக்கு எப்படி நிரந்தரமான இடம் இல்லையோ, அதோ போல் தான் பெண்களுக்கும்.
இப்படிப்பட்ட பெண்குளத்திற்கே கேவளமானவள் தான் லட்சுமி. இந்த மாதிரி பெண்களால் தான் உலகில் உள்ள அனைத்து பெண்பிள்ளைகளும் அவமானம்.
அதனால் தான் அந்த காலை வேலையிலேயே வாழவேண்டிய பெண்ணை எப்படி எல்லாம் அழிக்கலாம் என டிசைடிசைனாக திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கிறாள் இந்த லட்சுமி.
*********************************************
மூணாரில் காலை சாப்பாட்டை விரைவாக முடித்தவர்கள் முற்றத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அங்கு தான் உமாவும் மல்லியும் சாப்பிட்ட பாத்திரங்கள் அனைத்தையும் சுத்தம் செய்துகொண்டு இருந்தனர். குட்டி, கண்ணன், அம்மு, மீனு மற்றும் வர்ஷா என இவர்கள் விளையாடிக்கொண்டு இருந்தானர். மதனுடன் மற்ற ஆண் அனைவரும் பிஸினஸ் பற்றி பேசிக்கொண்டு இருந்தானர். பெண்கள் அனைவரும் ஜெயந்தியுடன் பேசிக்கொண்டு இருந்தனர்
அப்பொழுது நாச்சியார், “ஒரு முக்கியமான விஷயம் பேசனும். எல்லாரும் இங்கேயே இருக்கரதுனால இங்கேயே இதைபத்தி பேசிகலாம் நினைக்கிறேன்”…
“அக்கா என்ன விசயம் செல்லுங்க… கண்டிப்பா நல்லது தான் நினைக்கிறேன்” என்ற சாரதாவிடம்… “ஆமாம் சாரதா”… ரொம்ப ரொம்ப சந்தோசமாக விஷயம்…
சந்தரா நம்ம விசாலாட்சி போன் பண்ணுனா… “நம்ம மீனா – கார்த்திக் நிச்சயம் பத்திகேட்டா. உன்கிட்ட பேசி நித்தியத்தேதிய குறிக்க பூசாரிய பார்க்க போலாம்னு கேட்டா. நான் தான் ஜெயந்தி விஷயத்தில் இதை மறந்துவிட்டேன். நீங்க எல்லாம் என்ன நினைக்கிறீங்கனு சொல்லுங்க” என்றவரிடம்….
“அம்மா… ஊருக்கு போனதும் பூசாரிகிட்ட் கேட்டு நாள் குறிச்சிடலாம்”… ஆமாம் அக்கா… “நம்ம சந்திரன் சொல்லற மாதிரி செஞ்சிடலாம். முக்கியமா அவள அவ மாமியார்கிட்ட முதலில் பேச சொல்லுங்க”.
அவ போன் பண்ணுனதும் அவகிட்ட அதுதான் சொன்னோன் சாரதா. அவ மாமியார் கிட்ட பேசிட்டு பன்றேன் சொன்னா.
அத்த… “நித்தியதார்த்தை மாரியம்மன் திருவிழாக்கு முன்ன வச்சா தான் நாள் சரியா அமையும், அதுவும் இல்லாம நம்ம ஜெயந்தியும், மாப்பிள்ளையும் ஒரே நடையா இரண்டையும் பாத்த மாதிரியும் இருக்கும், அலைச்சலும் அதிகமா இல்லாம இருக்கும்”… நீ சொல்லுவதும் ஒருவகையில் நல்லதுதான் ஜெயா… அப்படியே பன்னலாம் என்றார் நாச்சியார்.
சகுந்தலா, “அத்தை நாள் ரொம்ப குறைவா இருக்கே… எப்படி சமாளிக்கமுடியும். அதுவும் இல்லாம விசாலாட்சி மாமியார் வேற கொஞ்சம் கராரான ஆளு”. அவங்க மனசு சுனங்காம எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சி அவங்களை மனநிறைவோட அனுப்பிவைக்கனும் அத்த…
நீங்க சொல்லறது சரிதான் சகுக்கா… “அவங்க கராரான ஆளா இருந்தாளும், ரொம்ப நல்லவங்க… அவங்க இதுவரைக்கு விசாலாட்சிக்கு ஆதரவா இருந்து, அவங்க குடும்பத்தை தாங்கிபிடிச்சி இந்த நிலைக்குகொண்டு வந்து இருக்காங்க. என்ன மனசுல பட்டத்த முகத்துக்கு நேரா சொல்லிடுவாங்க”…
அதற்கு சகுந்தலா, “எதையும் மறச்சி பேசமாட்டாங்க. அங்க மனசு தங்கம் காயத்ரி”…
தர்மர், “அப்படியே கண்ணாடி மாதிரி அவங்க சகுந்தலா அண்ணி”. ஆமா தம்பி… என அவரை ஆமோதிக்கும் விதமாக கூறினார் சகுந்தலா.
சாரதா, “ஜெயா மறக்காம நிச்சியம், மாரியம்மன் கோயில் திருவிழாக்கு உன் அண்ணன் நம்பிக்கு சொல்லிடுமா… அவன் தான் தாய்மாமன் முறை செய்யனும். உனக்குனு இருக்க சொந்தத்தை விட்டுடாம கூப்பிடனும்”. சரிங்கத்தை தேதி குறிச்சதும் அவருக்கு தகவல் சொல்லிடலாம் என்றவரிடம்…
நாச்சியார், “அவன் என்ன பக்கத்திலயா இருக்கான்? பூசாரிகிட்ட் கேட்டு விசாலாட்சிகிட்ட சொன்னதும் அவனுக்கு போன் பண்ணீடுடா சந்திரா… நீயும் ஒரு வார்த்தை சொல்லிடுமா ஜெயா”. சரிங்க அத்தை… அண்ணாகிட்ட சொல்லிடலாம்… அப்பதான் அவர் வர நேரம் ஒதுக்கமுடியும் எனக்கூறினார்.
நேரம் ஆவதை உணர்ந்த மதன் அனைவரிடமும் சொல்லிவிட்டு அலுவலகம் செல்ல புறப்பட்டு வந்தான். அவனுக்கு உதவியாக வெற்றி, விஷ்ணு மற்றும் அருண் ஆகியோரும் சென்றுவிட்டனர்.
[the_ad id=”6605″]
இவர்கள் மதனுடன் சென்றதால் வேலையும் சற்று குறைவாக இருந்தது… ரெஸார்ட்ஐ வெற்றியும், விஷ்ணுவும் பார்த்து கொண்டனர். எஸ்டேட்டில் உள்ள வேலைகளை மதனுடன் சேர்ந்து அருண் பார்த்துக்கொண்டான். இவர்கள் இங்கு வரும்போது எல்லாம் சிறந்த மச்சானாக மதனுக்கு பக்கபலமாக இருந்து கொண்டனர்… அதனால் எஸ்டேட் மற்றும் ரெசார்ட்ல் உள்ள அனைவரும் இவர்களை தெரியும் இவர்களின் கடுமையான நடவடிக்கையும் தெரியும்… அதனால் அனைவரும் வாலை சுருட்டிக்கொண்டு அவர்அவர் வேலையில் மூழ்கி இருந்தனர்.
பின் ரெஷார்ட் வேலையை முடித்துவிட்டு எஸ்டேட்க்கு சென்றவர்கள் மதனுக்கு உதவியாக இருந்து முக்கியமான வேலை முடித்துவிட்டு மற்றவைகளை மதன் தன் உதவியாளரிடம் ஒப்படைத்துவிட்டு மதியத்திற்கு மேல் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
இவர்கள் அனைவரும் சென்றவுடன் ஜெயந்தி கர்ப்பகால அயர்ச்சியினால் தன் அறைக்கு தூங்க சென்றுவிட்டாள்… ஜெயாவும் ரொம்ப நேரம் உட்கார முடியாமல் தன் அறைக்கு சென்றுவிட்டார்… மத்திய உணவை அந்த வீட்டின் வேலையாட்கள் செய்வதால் மல்லி மற்றும் உமா மீதம் இருந்த பாத்திரங்களை எல்லாம் சுத்தம் செய்ய சென்றனர். அனைத்து வேலையையும் முடித்துவிட்டு வந்த உமா மற்றும் மல்லியும் இளையவர்களும் பார்க்க சென்றுவிட்டனர்…
வர்ஷா தன் அறைக்குள்ளே விளையாட பிடிக்காததால் அனைவரையும் வெளியே வரும்படி வற்புருத்திக்கொண்டு இருந்தாள். அதுமட்டுமல்லாமல் அறையிலேயே அடைந்து இருப்பது இளையவர்களுக்கும் அவ்வளவு எளிதா இருக்கவில்லை. அதனால் அவர்களும் வர்ஷாவுடன் கீழே இறங்கி வந்தனர்.
அவர்களை கண்ட உமா, “என்னாச்சி?… ஏன் எல்லாரும் வந்துட்டீங்க?”… “அக்கா… எல்லாரும் கீழபோய் விளையாடலாம்… ஏன் குட்டி டார்லிங் கீழபோகலாம்னு சொல்லர?” என்ற மல்லியிடம், “டார்லிங் எவ்வளவு நேரம் தான் ஒரே ரூம்குள்ள அடஞ்சி இருக்கிறது?… அதனால் தான் தோட்டத்தில் போய் விளையாடலாம்னு வந்துட்டோம்” எனக்கூறி அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வர்ஷாவை கைபிடித்து அழைத்துசென்றான். அந்த வாண்டோ அவனுடன் அரட்டை அடித்துக்கொண்டே சென்று விட்டது.
அங்கு சென்றதும் மீனு குட்டியிடம், “டேய் குட்டி… விளையாடலாம்னு வந்துட்டோம்… ஆனா என்ன விளையாடலாம்னு முடிவு பண்ணலையோடா… நீங்க யாராவது சொல்லுங்க எனக்கூறி அனைவரின் முகத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தாள்”. அவர்களோ என்ன விளையாடலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தனர்…
மல்லி, “பேசாம கண்ணாமூச்சி விளையாடாலாமா?… அதுவிளையாடி ரொம்ப நாள் ஆச்சி குட்டி டார்லிங், அதையே விளையாடலாமே?” என்றவளிடம்…
வர்ஷா, “அச்சோ டார்லிங்… எனக்கு கண்ணாமூச்சி தெரியாதே நாம் எப்படி விளையாட?…
அது ஒன்றும் இல்லடா குட்டிமா… ஒரு சின்ன துணியால் உன் கண்ணைகட்டிவிடுவோம், நீ எங்களை கண்டுபிடிச்சு தொட்டுவிட்டைனா நாங்க அவுட், இல்லனா நீ தான் அவுட்… அவ்வளவு தான்டா. ரொம்ப ரொம்ப ஈஸி இது” என்றாள் உமா…
“அப்போ சரி. .. நான் தான் உங்கள் கண்ணைக்கட்டுவேண் எனக்கூறி ஆசையாக அவள் காலை கன்டிக்கொண்டவளை பார்க்கபார்க்க அவ்வளவு ஆசையாக இருந்தது”.
முதலில் மல்லிக்கு கட்டிவிட்டு அனைவரும் வெவ்வேறு திசைகளில் ஒளிந்துகொண்டனர். இப்படியே விளையாட்டில் வர்ஷா மற்றும் உமா ஆவும்தான் இருந்தனர்… அதில் வர்ஷாவும் அவுட்டாகிவிட, வர்ஷாவின் கண்ணை கட்டிவிட்டனர்… அவள் உமாவையும் அவுட் பண்ணி, இறுதியில் அந்த துணி கொண்டு உமாவின் கண்களை கட்டிவிட்டனர்.
அப்பொழுது வேலையை முடித்து விட்டு வந்த வெற்றி மற்றும் அவனுடன் வந்த மற்றவர்களும் சிறுவர்களின் விளையாட்டை பார்த்துக்கொண்டு தோட்டத்திர்க்கு சென்றுவிட்டனர்.
சிறியவர்கள் விளையாட்டு மும்மரத்தில் இவர்களை பார்க்காமல் விட்டுவிட்டனர். அப்பொழுது உமாவிற்கு போக்குகாட்டிவிட்டு ஓடிய மல்லி, ஓடிய வேகத்தில் விஷ்ணுவை இடித்துதள்ளிவிட்டாள். இவள் இடித்த வேகத்தில் விஷ்ணு பேலன்ஸ் செய்யமுடியாமல் கீழே விழுந்துவிட்டான். அதை பார்த்த மற்ற அனைவரும் சிரித்துவிட்டனர். இவர்களின் சிரிப்பில் உமா துணியை அவிழ்த்து விட்டு பார்த்த காட்சியில் அவளுக்கும் சிரிப்பு வந்ததுவிட்டது. இருந்தாலும் கட்டுபடுத்திக்கொண்டு விஷ்ணு எழுவதற்கு உதவி செய்தாள்.
“வர்ஷா மற்றும் குட்டியும் அடக்கமாட்டாமல் சிரித்ததில் அவர்கள் இருவரின் தலையில் வலிக்காமல் கொட்டினான்”…
அவனின் செய்கையில் மற்ற அனைவரும் விழுந்துவிழுந்து சிரித்ததில் கடுப்படைந்த விஷ்ணு, மல்லியை முடிந்தமட்டும் முறைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான். அதற்கு மாறாக அவனின் கண்களில் புன்னகையே இருந்தது. இவ்வளவு நேரம் கோபம் கொண்டது இவன்தானா என்னும் அளவில் இருந்தது.
அருண், மதன் மற்றும் வெற்றி என அனைவரும் அவன் பின் சென்றுவிட்டனர். அவர்கள் சென்றவுடன் உமா, “ஏன்டீ மல்லி… எதுக்குடீ இப்படி பண்ணுன?… அவங்க வேணா நீ தெரியாமல் தள்ளிவிட்டதா நினைக்கலாம்… உன்னைய பத்தி எனக்கு தெரியாதா புள்ள? நீ வேணும்னே தான தள்ளிவிட்டதா? செல்லு புள்ள”…
மல்லி, “ஆமாம் புள்ள… தெரிஞ்சி தான் செய்தேன்… அந்த மனுசன் இப்பவரை மனசில் இருக்க காதலை சொல்லவில்லை அந்த கடுப்பில் தான் இப்படி பண்ணினேன்”… ஏன் மல்லி, “உன் மனசில் இருக்க காதலை நீ அவர்கிட்ட சொல்லிட்டையா?… அவர் மட்டும் உன்கிட்ட சொல்லுனும்னு நினைக்கிற… நீ நினைக்கிற மாதிரி அவரும் நினைத்து இருக்கலாம் இல்ல?”… மீனா நிச்சியத்திற்கு அவங்க மாமன் பொண்ணுங்க எல்லாம் வருவாங்க புள்ள… பாத்து சூதானமா நடந்துக்கோ, எவளாவது அவரை கொத்திகிட்டு போய்ற போறா… அதுக்குள்ள உன் மனசில் இருக்க காதலை சொல்லுடா மல்லி… எட்டு வருசம் மனசுல வச்சி மறச்சிட்ட, இனியும் அப்படி இல்லாம சீக்கிறமா சொல்லபாரு” எனக்கூறி விளையாடிக்கொண்ட இருந்த மற்றவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள் உமா…
அல்லியூரில் மார்க் கல்லூரி, மில் மற்றும் இதர வேலைகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சுந்தரத்தின் உதவியுடன் பார்த்துக்கொண்டான்.
வீட்டை பாதுகாக்க தன்இடம் உள்ள நம்பிக்கையான ஆட்களை வைத்து, அவர்களை சுந்தரத்தின் மேற்பார்வையில் வைத்து இருந்தான். முதல் நாளிலேயே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு மற்றவைகளை பார்த்துக்கொள்ள காங்கேயம் மற்றும் அல்லியூர் என சுற்றிக்கொண்டு இருந்தான்.
சுந்தரம் காலையில் தோப்புக்கு சென்று அங்கு இருந்த வேலைகளை முடித்துவிட்டு இரவில் பண்ணையார்வீட்டிற்கு காதலாக மார்க்குடன் தங்கிக்கொண்டார்.
வீட்டுபாதுகாப்பிற்கு எத்தனை பேர் இருந்தாலும், இரவு நேரங்களில் மார்க் வந்துவிடுவான். அங்கு மட்டும் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தி இருந்தான். கூடுதலாக வீட்டை சுற்றி உயர் ரககேமராக்களையும் பொருத்தி இருந்தான் மார்க். அவை இரவிலும் காட்சிகளை எடுப்பதாக இருந்தது.
**********************************************************
விசாலாட்சி ஆன்மீக சுற்றுலா சென்றிருந்த தன் மாமியார் வேலம்மையிடம் கார்த்திக் நிச்சயம் பற்றி காணொளி அழைப்பு மூலமாக பேசிக்கொண்டு இருந்தார்.
விசாலாட்சி, “அத்தை… கார்த்திக்-மீனு நிச்சயத்தேதி குறிக்க ஏற்பாடு பன்னலாமா அத்தை?… இப்ப தேதி குறிச்சிட்டா, நீங்க வந்ததும் அல்லியூர் போனா அப்படியே திருவிழாவையும் பார்த்துட்டு வந்துடலாம் அத்தை… நீங்க என்ன நினைக்கிறீங்கனு சொல்லுங்க அத்த”… எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல விசாலாட்சி… நீ உங்க அம்மாகிட்ட பேசி நாள் குறி வரவாரம் அல்லியூர் எல்லாரும் போய்ட்டு வந்துடலாம்… “இல்ல அத்தை… நீங்க ஒரு டைம் அம்மாகிட்ட விவரமா பேசுங்க, அப்புறம் மத்த பாக்கலாம்”… “அடியே நிச்சியம் பண்றது உன் பிள்ளைக்கு, அதை உன் விரும்பப்படி பன்னு. இன்னும் என்னையே கேட்கிறது”…
சரி விசாலாட்சி… “நான் அப்படியே உன் அண்ணன் மற்றும் அம்மாகிட்ட பேசிவிடறேன். நீயும், உன் புருஷனும் ஒரு முறை தவறாமல் பேசிடுங்க விசாலாட்சி” எனக்கூறி வைத்துவிட்டார் வேலம்மை.
அத்தையிடம் பேசிவிட்டு உடனே தன் அண்ணக்கு போன் செய்துவிட்டார் விசாலாட்சி.
மத்திய சாப்பாட்டை முடித்துவிட்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தான் சந்திரனுக்கு போன் செய்தார் விசாலாட்சி…
[the_ad id=”6605″]
போனை அட்டன் செய்த சந்திரன், “செல்லும் விசாலா… நீ எப்படி இருக்க?… மாப்பிள்ளையும் கார்த்தியும் நல்லா இருக்காங்களா?”… “அண்ணா நாங்க எல்லா ரொம்ப நல்லா இருக்கோம். நிச்சயத்தேதி குறிக்க அம்மா கிட்ட சொன்னான் அண்ணா, அம்மா அத்தைகிட்ட பேசிட்டு அப்புறம் பண்ணலாம்னு சொன்னாங்க. நான் அத்தை கிட்ட பேசிட்டேன் அண்ணா, அவங்க தேதி குறிக்க சொன்னாங்க. நீங்க வீட்டில பேசிட்டு எனக்கு பதில் சொல்லுங்க, அதுக்குள்ள அத்தை உங்களுக்கு போன் பன்னுவாங்க”…
அது எல்லாம் சரி விசாலா… அம்மா எல்லாத்துகிட்டையும் சொல்லிட்டாங்க, அவங்களுக்கு சம்மதம் விசாலா… “அப்புறம் நம்ம ஜெயந்தி மாசமா இருக்கா. அவளுக்கும் தோதுபடறமாதிரி நாள் குறிச்சி சொல்லறேன். திருவிழாக்கு முன்ன நிச்சியம் பன்னீட்டா அடுத்தடுத்த வேளையில் ஆரம்பித்துவிடலாம்”. “சரிங்க அண்ணா நீங்க போய் பேசிட்டு எனக்கு கால் பன்னுங்க”… நான் ஜெயந்திக்கு போன் பன்னி பேசறேன் எனக்கூறி வைத்துவிட்டார். கையேடு ஜெயந்தியிடம் பேசி தனது வாழ்த்தையும் அவளிடம் கூறிவிட்டார்.
சந்திரன் வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாலாட்சி கூறியதை சொல்லி அவர்களிடமும் ஆலோசனை செய்தார். ‘மீனா தனது அறையில் கல்யாணம் பற்றிய கனவுகளுடன் கட்டிலில் படுத்திருந்தாள்’.
காலையில் இருந்து போன் ஆட்டத்தில் வர்ஷா மற்றும் குட்டியும் சாப்பிட்டு விட்டு உறங்கிவிட்டனர்.
உடல் அணியால் பெரியவர்களும் சாப்பிடவுடன் படுக்க சென்றுவிட்டனர். தன்அறைகக்கு காபி எடுத்து வந்த மல்லியிடம் தன் மனதில் உள்ள ஆசையை வெளிபடுத்த நினைத்த விஷ்ணு அதில் படு தோழ்வி அடைந்தான்.
அடுத்த அறையில் இருந்த அருணோ தன் மனதிற்கு இனியவளிடம் மானசீகமாக பேசிக்கொண்டு இருந்தான். தன் மனதில் எழுந்த உணர்வு உண்மையாகவே காதல் தானா என அறியும் முயற்சி செய்துகொண்டு இருந்தான்.
மதனோ தன் மனைவியை மடியில் தாங்கிக்கொண்டு, அவள் வயிற்றில் உள்ள சிசுவிடம் பேசிக்கொண்டு இருந்தான்.
‘வெற்றி உமாவின் வாழ்க்கையை பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தான். சிறிது யோசனைக்கு பின் அவளுக்கு தெரியாமல் தற்பொழுது தனக்கு எந்த உரிமையும் இல்லாத உமாவின் வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ளும் முயற்சிகளை விட்டுவிட்டான். முழுஉரிமையையும் பெற்ற பின் இதை பற்றி அவளிடமே தெரிந்துகொள்ளலாம் என முடிவு செய்துவுட்டான். வெற்றி இந்த முடிவு எடுக்காமல் இருந்திருந்தால் தான் உமாவை பல பிரச்சனைகளில் இருந்து காத்திருக்களாம்… அந்த முடிவு அவளின் புண்பட்ட மனதை மேலும்மேலும் துன்பத்தில் ஆழ்த்தபோகிறது. அதை தடுக்க முடியாமல் தவிக்க போகிறான் வெற்றி’.
விதியை முன்கூட்டியே அறிந்து வைத்துக்கொள்ளலாம் நாம் மகானும் அல்ல, ரிஷிகளும் அல்ல…
அன்பு தொடரும்……..