அத்தியாயம் 14:
ஒரு வாரமும் மூணாறில் இருந்தவர்கள் இன்று மாலை 5மணிக்கே ஊருக்கு கிளம்பிவிட்டனர். வரும் வழியிலேயே அனைவரும் இரவு உணவை முடித்து விட்டனர். அல்லியூரை வந்து சேர மணி 8ஐ தொட்டுவிட்டது.
வரும் வழியிலே மல்லி, உமா மற்றும் மற்றவர்களையும் அவர்களின் வீட்டில் விட்டுவிட்டு இவர்களின் வீட்டிற்கு சென்றனர்.
நாச்சியார், “மல்லி நீயும் இங்கேயே இரு… வீட்டுக்கு போய் சுந்தரத்தை அனுப்பிவைக்கிறேன்” எனக்கூறி கிளம்பிவிட்டார்.
சகுந்தலா கிளம்பும்போதே வீட்டை சுத்தம் செய்துவைக்க தகவல் சொல்லிருந்தார்… அதனால் வேலை ஆட்களை அனைத்து அறையையும் சுத்தம் செய்து வைத்து இருந்தனர்.
வந்தவர்கள் அனைவரும் நீண்ட நேர பயத்தினால் அழுப்புத்தீர குளித்தனர்.
அசதியால் ஜெயா, ஜெயந்தி மற்றும் வர்ஷா மூவரும் அப்படியே படுத்துவிட்டனர்.
சகுந்தலா மற்றும் காயத்திரி இருவரும் சேர்ந்து அனைவருக்கும் பால் மட்டும் காய்ச்சி குடிக்கவைத்தே படுக்கவைத்தார்கள்…
சகுந்தலா, “காயத்ரி… நீ போய் அந்த பால் கீழே இருக்கிறவங்களுக்கு குடு… நான் போய் மேல் இருக்கிறவங்களுக்கு குடுக்கிறேன்”…
“சரிங்க அக்கா”… “இந்த பாதாம் பால் யாருக்கு க்கா?… அது ஜெயந்திக்கும் வர்ஷாக்கும் குடுத்துவிடு”… எனக்கூறி மேலே சென்றுவிட்டார்.
பின் வீட்டில் இருந்த அனைவரும் குடுத்தபின் இவர்கள் இருவரும் குடித்துவிட்டு பாத்திரங்கள் அனைத்தையும் சுத்தம் செய்ய போட்டுவிட்டு தூங்க சென்றுவிட்டனர்.
அங்கு உமா வீட்டில் தான் மல்லியும் இருந்தாள். உமா வீட்டை கூட்டி… பாயை தட்டி போட்டவள்.
“கண்ணா நீ போய் பாட்டிகிட்ட பால் வாங்கிகிட்டு வாடா… சாய்ந்திரமே பாட்டியை பால் வாங்கி வைக்க சொன்னேன், வாங்கி வச்சி இருப்பாங்க, நீ போய் வாங்கிகிட்டு வாடா” எனக்கூறி அனுப்பிவைத்தாள்…
பின் “குட்டி, அம்மு இரண்டு பேரும் போய் குளித்துவிட்டு வாங்க” என்றவள் பையில் இருந்த அழுக்கு துணிகளை கூடையில் போட்டுவிட்டு தனக்கு குளிக்க தேவையான உடைகளை எடுத்துவைத்துக்கொண்டு இருந்தாள்.
பின் பால் வாங்கி வந்த கண்ணனை, “தொட்டியில இருக்க தண்ணியை போய் ஊத்திகிட்டுவந்து பால குடித்துவிட்டு படு” எனக்கூறி அவனையும் அனுப்பிவைத்தாள்.
ஒருவர் பின் ஒருவராக குளித்துவிட்டு வந்த அம்மு, குட்டி மற்றும் கண்ணனையும் பால் குடித்து படுக்கவைத்தாள்.
அவர்கள் குடித்த பாத்திரத்தை வெளியே வைத்துவிட்டு மல்லிக்கு அவளுக்கு எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள், அவளிடமும் கொடுத்து குடித்தபின் குளிக்க அனுப்பிவைத்தாள் இருந்த பாத்திரங்களை கழுவிவிட்டு இவளும் குளித்துவிட்டு வந்தாள்.
அதுவரை வெளியே அமர்ந்து இருந்த மல்லியிடம், “என்ன புள்ள இன்னு உட்கார்ந்து இருக்க?”… “அப்பாவ இன்னும் காணோம் உமா… வந்தா வீட்டுக்கு போய் ஒரே இதா படுக்கலாம்னு பாத்தா இவர் இன்னும் வரவில்லை”.
“அவர் எதாவது வேலையா இருக்காரோ என்னவோ மல்லி… அந்த போனைத்தான் போட்டு கேளுடீ”… “நானா பன்ன மாட்டேன், வேனும்னா அவரே பன்னட்டும் உமா… நாம இன்னைக்கு வீட்டுக்கு வருவோம்னு அவருக்கு தெரியும்இல்ல, அப்ப வீட்டுக்கு வராம என்ன வேலை இன்னும் இவருக்கு?”… “இதுக்கெல்லாம் போய் கோவப்படாத புள்ள… நீ போன் போட்டு கேளுடீ… எங்க இருக்கீங்க..என்னா பன்னுராங்கனு”.
உமா சொல்லி அவள் போன் போட எடுப்பதற்குள் சுந்தரமே மல்லிக்கு போன் செய்துவிட்டார். போனை எடுத்தவள் அந்த பக்கம் அவர் சொன்ன செய்தியில் கோவமாகிவிட்டாள், ஆனால் அதை அவரிடம் காட்டாமல் பொருமையாக சிறிது நேரம் பேசிவிட்டு வைத்துவிட்டாள்.
இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த உமா, “என்னடீ சொன்னாங்க?… எப்ப வருவாராம்?”… “என்ன கொலைகாரி ஆக்காதடீ… அவரு தூத்துக்குடிக்கு போய் இருக்காராம்… நாளைக்கு சாய்ந்திரம் தான் வருவாராம் புள்ள”.
“கோவப்படாத மல்லி”… “உனக்காக தான இராப்பகலா உழைக்கிறாரு” என்றவளிடம்…
“இத்தன வருடமும் இப்படித்தான் நேரம்காலம் இல்லாம உழைத்தார்… இனியாவது அவரை உட்காரவச்சி நான் பாத்துக்கனும்னு ஆசைபடறேன் உமா… நா அவர வேலைக்கே போகாதிங்கனு சொல்லவில்லை டீ… உடம்பு வறுத்திக்கொண்டு வேலை பார்க்க வேண்டாம்னு சொல்லறேன் புள்ள… இந்த உலகத்தில் எனக்கு அவரையும் உங்களையும் தவிர யாருமே இல்லடீ… இப்படி வேலை அதிகமாக செஞ்சி அவருக்கு முடியாம போய்டுமோனு பயமா இருக்கு உமா” எனக்கூறி அழுதவளை சமாதானப்படுத்திய உமா, “இந்த பிரச்சினை முடியனும்னா, நீ சீக்கரமா கல்யாணம் பண்ணிக்கோ மல்லி… அதே வேகத்தில் ஒரு பிள்ளையையும் பெத்து அப்பாகிட்ட கொடுத்துவிடு அப்பதான் அவருக்கு கொஞ்சம் பேரப்புள்ளைய பாக்கனும்னு என்னம்வரும், அவரும் வேலையை விட்டு அதுபின்னாடி சுத்திவாரு, நீயும் நிம்மதியாக இருக்க முடியும்” என்ற உமாவின் கூற்றில் சிறிது யோசனை செய்தவள்…
“நீ சொல்லவதும் சரிதான் உமா… சீக்கிரமா அந்த மாங்கா மண்டயனைசரிகட்டி, கல்யாணம் பண்ணி, எங்க அப்பாவை தாத்தாவாக்கி, அவர் கையில என்பிள்ளைகளை கொடுத்து , வீட்டோட உட்கார வைச்சி பாரத்துக்கிறேனா இல்லையானு பாரு” என சவால்விட்டளை பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்த உமா, “முதலில் விஷ்ணு கிட்ட உன் லவ் சொல்லுடீ…. அப்புறமா கல்யாணம், பிள்ளைகளை பத்தி யோசிப்ப”… இப்பவா மல்லி… எனக்கு தூக்கம் தூக்கம் வருது எனக்கூறி அவளையும் அழைத்து சென்று படுத்துக்கொண்டாள் உமா.
அடுத்தநாள் காலையில் எழுந்ததும் வழக்கம் போல் அனைத்து வேலையையும் முடித்துவிட்டு, மல்லியுடன் தம்பிகள் மற்றும் தங்கையை அழைத்துக்கொண்டு வேலைக்கு சென்றுவிட்டாள் உமா.
அங்கு சென்றவள் காலை உணவை தயாரிக்கும் பணியில் இருந்தாள்… அப்பொழுது அங்க வந்த நாச்சியார், “என்ன உமா சாப்பாடு பன்ற இன்னைக்கு… வழக்கம் போலத்தான் பாட்டி”… நீங்க என்ன அதுக்குள்ள எழுந்துட்டீங்க?… “அதுவா நம்ம மீனுக்கு தேதி குறிக்க போகும் இல்ல அதனாலதான். நாங்க எல்லாரும் இப்ப கிளம்பறோம் உமா… நீ ஜெயந்தியையும் வர்ஷாவையும் பார்த்துகோ… சாப்பாடு வந்துதான் நாங்க சாப்பிடுவோம் நீ பெருமையா பன்னு”…
“அப்புறம் மல்லி நீ ஜெயந்தியையும் வர்ஷாவையும் சாப்பிட வைத்துவிடு டீ… நாங்க வந்த பிறகு சாப்பிடறோம்னு ஜெயந்தி சொல்லுவா டீ… நீ விடாம, அதட்டி சாப்பிட வை எனக்கூறியவரிடம் மல்லி, நீங்க கவலையை விடுங்க பாட்டி”… நாங்கள் அவங்களை பாத்துக்கிறோம் எனக்கூறி அவருக்கு பாலை கொடுத்து அனுப்பிவைத்தாள்.
அவர் சென்றதும் அங்கு புறப்பட்டு வந்த சகுந்தலா பேசவாயெடுக்கும் முன் அவரை முந்திக்கொண்டு மல்லி, “நீங்க நாள் குறிகக போரீங்க… அதனால் வந்துதான் சாப்பிடுவீங்க, ஜெயந்தி மதனியையும் வர்ஷா குட்டியையும் நாங்க பாத்துக்கனும், மதனியை திட்டியாவது நல்லா சாப்பிட வைக்கனும், இதைதான நீங்க சொல்ல வந்தீங்க அம்மா?… நான் சொன்னது எல்லாம் சரியாங்கம்மா?” என்றவளிடம், “நீ சென்றது சரிதான்டீ வாயாடி”…
“அதுவும் இல்லாம இந்த விஷ்ணு பையனையும் அக்காவையும் பாத்துக்கோங்க… வெற்றி அவன் வேலையை அவனே பாத்துக்குவான், அவன் என்ன கேட்கிறானோ அதை மட்டும் கொஞ்சம் செய்து கொடுத்துவிடுங்க” என்றவரிடம்… நாங்க பாத்துக்கிறோம் ங்கம்மா… நீங்க கவலையை விடுங்க எனக்கூறி கையில் ஜூஸ் கொடுத்து அனுப்பினாள் உமா… பின் அனைவருக்கும் ஜூஸ் எடுத்துக்கொண்டு சென்றால்.
அவள் வருவதற்கும் அவர்கள் வருவதற்கும் சரியாக இருந்தது. முற்றத்திலேயே அனைவரும் கொடுத்துவிட்டு சமையல் அறைக்குள் சென்றுவிட்டாள். அங்கு சென்றவள் மல்லியுடன் சேர்ந்து தன் வேலையில் ஆழ்ந்துவிட்டாள்.
ஜூஸ் குடித்துவிட்டு சிறிது நேரத்தில் அனைவரும் கோவிலுக்கு சென்றுவிட்டனர்.
பின் இவர்களை வேலையை முடித்துவிட்டு சிரிது நேரம் அமர்ந்து இருந்தனர். காலை உணவு நேரம் நெருங்கியும் யாரும்வராததால், அவர்களுக்கு உதவியாக இருந்த அம்மு மற்றும் சகோதரர்களை தோட்டத்திற்கு விளையாட அனுப்பியவயாரும்வராத் உண்பதர்க்கு சிறிது பழங்களையும் கொடுத்தாள்.
[the_ad id=”6605″]
மல்லி, “உமா நீ போய் மதனியையும் வர்ஷாவையும் எழுப்பி இந்த பாலை குடுத்துவிடு. நான் போய் அந்த மாங்கா மண்டையை பாத்துவிட்டுவிட்டுவறேன்”… “நீ உன் லேலையை ஆரம்பிடீ. போன வேகத்தில் கல்யாணத் தேதியை குறிச்சிகிட்டு வா மல்லி”… “உன் வாக்கு மட்டும் படிக்கட்டு உமா, உனக்கு கறிசோறு ஆக்கி போடறேன் டீ… அதுக்காக தான் டீ நான் காத்துகிட்டு இருக்கேன்” எனக்கூறிக்கொண்டே இருவரும் வேலையை செய்தனர்…
பிறகு உமா மல்லியிடம் வேகமா போய் வேலையை ஆரம்பி டீ எனக்கூறி ஜெயந்தியை பார்க்க சென்றுவிட்டாள்.
அங்கு சென்றவள் பூட்டாமலிருந்த கதவின் தட்டி அனுமதிக்காக சிறிது காத்திருந்தாள்… எந்த சத்தமும் வராததாள் பிறகு ஜெயந்தியை அழைத்தாள்…
அதில் தூக்கம் கலைந்த ஜெயந்தி, “வா உமா எனகூறி படுக்கையில் இருந்து எழுந்ததும் மயக்கத்தில் தல்லாடியவளை கீழே விழுந்து விடாமல் ஓடிவந்து தாங்கிக்கொண்டாள் உமா”.
“மதனி காலையில் எழுந்ததும் படுக்கையைவிட்டு கொஞ்சம் நேரம் உட்காந்துவிட்டு எழுந்திறிங்க… இப்படி பட்டுனு எழுந்து பிடிமானம் இல்லாம போச்சினா என்னா பன்ன மதனி?”… “சாரி உமா”… நீ சொன்ன மாதிரியே இனி கவனமா இருந்துக்கிறேன்.
உமா, “அடபோங்க மதனி… இதுக்கெல்லாம் போய் சாரி சொல்லிகிட்டு… விடுங்க மதனி… நீங்க போய் குளித்துவிட்டு வந்து, ஜூஸ் குடிங்க. நான் போய் சாப்பாட்டை எடுத்துவைக்கிறேன்” என்றவளிடம் ஜெயந்தி, “உமா அப்படியே இந்த வாலையும் எழுப்பிவிட்டுவிடு. நான் குளித்துவிட்டு வந்து அவளை குளிக்கவைக்கிறேன்”.
“நீங்க போங்க மதனி… நான் பாப்பாவ கூட்டிகிட்டு போய் குளிக்க வைக்கிறேன்”… “உனக்கு எதுக்கு உமா கஷ்டம், நான் பாத்துக்கிறேன்”… “அட போங்க மதனி… பாப்பாவை குளிக்க வைக்கிறது அவ்வளவு கஷ்டமா மதனி?… நீங்க அதிகமா ஸ்ரேயின் பன்னிக்காம இருங்க எனக்கூறி வர்ஷாவை எழுப்பி அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்”… சென்றவளையே பார்த்து சிரித்துக்கொண்டே குளிக்க சென்றுவிட்டாள் ஜெயந்தி.
அங்கு மல்லியை காபி எடுத்துக்கொண்டு விஷ்ணு அறைக்குள் சென்றாள், அங்கு குப்புறபடுத்து தூக்கிக்கொண்டு இருந்தவனின் மேல் தண்ணீரை ஊற்றினாள்… அதில் விழுந்தடித்து எழுந்தான் விஷ்ணு.
ஒரு நிமிஷம் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, படுக்கையின் அருகில் இருந்த நாற்காலியில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த மல்லியை பார்த்தும் அவள் தான் இந்த வேலையை செய்திருக்கிறாள் என புரிந்துகொண்டான். ஆனால் எதற்கு எனத்தான் தெரியவில்லை.
கோபத்தில் அவளை திட்ட வாய் திறக்கும் முன் மல்லி விஷ்ணுவிடம் அவனின் டைரியை காட்டி, “என்ன இது எனக்கேட்வுடன் அதிர்ச்சியில் வாயடைத்து போய்விட்டான். எல்லாம் சிறிது நேரம் தான்… பின் சுதாரித்துக்கொண்டான்”. படுக்கையை விட்டு எழுந்தவனிடம்…
மல்லி, “சொல்லுங்க விஷ்ணு சார்… இதில் யாரை பத்தி எழுதியிருக்கீங்க?… எப்ப இருந்து இருந்த எண்ணம் உங்களுக்கு வந்தது?… எத்தனை நாளா இந்த எண்ணம் உங்களுக்கு? என கேள்விகளை அடுக்கியவளைக்கண்டு விஷ்ணு, எல்லாம் உன்னை பார்த்த நாளில் இருந்து தான் டீ”… “இந்த டீ போட்டு கூப்பிடற வேலையெல்லாம் எங்கிட்ட வேண்டாம்… ஏதே கட்டுன பொண்டாட்டுக்கூட கூப்பிடற மாதிரி கூப்பிடரீங்க”… “எப்படி இருந்தாலும் நீ தான் டீ என் பொண்டாட்டி” என்றவனிடம் மல்லி, அதுக்கு நான் சம்மதம் சொல்லவில்லையே சார்…” நீ சொன்னாலும் சரி, சொல்லலைனாலும் சரி நீ தாண்டி என் பொண்டாட்டி”. அதை யாராலையும் மாத்தமுடியாது, ஏன் நீயே நினைத்தாலும் மாத்தமுடியாது எனக்கூறியவை பார்த்து அவளால் முறைக்கமட்டும் தான் முடிந்தது.
[the_ad id=”6605″]
அவனை வெறுப்பேத்தும் விதமான மல்லி, “நான் மட்டும் தான் இருக்கேனா இல்ல, வேறயாராவதும் இருக்காங்களா”என்றவளிடம் விஷ்ணு அசால்டாக, “படிச்ச உனக்கு தெரியாதா மல்லி?… யாரை பத்தி எழுதியிருக்கேனு?… அதில் முதல் பக்கத்திலேயே பெயர் இருக்கும் பாரு… உனக்கு படிக்க தெரியவில்லைனா நான் வேணா படித்துகாட்டட்டா மல்லி” எனக்கூறி குளியலறைக்கு சென்று பல்துளக்கியவனின் பின் சென்ற மல்லி மனதில், ‘எந்த பக்கம் போனாலும் கேட்ட போட்டறானே’ என நினைத்தவள்…
குளியலறையில் இருந்து வெளியே வந்த விஷ்ணுவை பார்த்ததும் அப்படி ஒரு கோபம் வந்தது அவளுக்கு… எனக்கு பதில் வேணும் சொன்னேன், இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் என்றவளை என கேட்டுக்கொண்டே அவன் பின்னால் வந்தவளை இறுக்கி அணைத்தவன். “உனக்கு தான் எல்லாம் தெரியுமேடீ… அப்புறம் என்ன கேள்வி உனக்கு… என்ன கோவப்படுத்த தான் நீ வேறயாராவது இருக்காங்களானு கேட்டேனு எனக்கு புரியுதுடீ… அதனால் தான் உம்மேல எனக்கு கோவமே வரவில்லை மல்லி”…
“ஆமாம் மல்லி!”, நீ எப்படீ உன் மனதில் இருக்க காதலை சொல்லபோற?… “ஏண்டீ!”… நானாவது கொஞ்சனாளா என் மனதில் உண்டான காதலை உங்கிட்ட எப்படி சொல்றதுனு தவிச்சிகிட்டு இருந்தேன்… ஆனா நீ எப்படி டீ உன் மனதில் இந்த காதலை மறைத்த?… “அதுவும் எட்டுவருசமா… எப்படி மல்லி?” என்றவனிடம்…
மல்லி, “இது எல்லாம் உங்களுக்கு யார் சொன்னதுக்கு?… எப்படி தெரியும் உங்களுக்கு?… அதுவா உன் தோழி உமா தான் மூணாரரில் சொன்னாங்க… அதைவிடு டீ… நான் கேட்டதுக்கு பதில் சொல்லு மல்லி”…
தன் காதலை பற்றி தன் காதலன் கேட்டதும் சற்று வெட்கம் கொண்டவள், “முதன்முதலாக உங்களை நான் ஸ்கூலுக்கு பஸ்ல போறப்ப பார்த்தேன்… ஒரு பெண்ணுடன் வம்பு பன்ன ஒருத்தன் நீங்க பொறட்டிபொறட்டி எடுத்துகிட்டு இருந்தீங்க. அப்பவே உங்க முகம் என் மனதில் ஆழமாக பதிந்து போச்சி… அப்ப அதை வெறும் ஈர்ப்புனு தான் நினைத்தேன்…
ஆனால் நாள் ஆகஆக உங்களை தேட ஆரம்பித்தேன், அதே பஸ் டாப்ல் நீங்க இருக்காங்களானு ஸ்கூல்க்கு போறப்ப அப்ப எல்லாம் தேடினேன். ஆனால் நீ அங்க வரவில்லை. அபபதான் தான் நீ பண்ணையார் வீட்டு வீட்டுவாரிசுனு தெரிந்தது, அதனால் என்னுடைய காதல் நிறைவேற வாய்பே இல்லை என்கிற எண்ணம் வர ஆரம்பித்தது. அதுனாலையே என் மனதை யாருக்கும் தெரியாமல் மறைத்தேன்”.
ஆனாலும் இந்த உமாகிட்ட மட்டும் எதையும் மறைக்காம சொல்லிவிட்டேன். அவகிட்ட மட்டும் மறைக்க முடியவில்லை என்னால். நான் பட்ட கஷ்டங்களை பார்த்து அவ தான் தைரியம் சொல்லி, ஆறுதல் படுத்துவா. அவள் எங்கூட இருக்கிறதுதான் எனக்கு மிகப்பெரிய பலமா இருந்தது, என தன் மனநிலையை விளக்கமாக கூறியவளை காற்று கூட புகாத அளவு அணைத்துக்கொண்டான். அவள் தன் மீது கொண்ட காதலினால் எத்தனை வேதனை அடைந்து இருக்கிறாள் என அவன் வேதனையடைந்தான் விஷ்ணு… “தன் மீது மல்லி கொண்ட காதலை நினைக்கும் போது மகிழ்ச்சியும் கா்வமும் தோன்றியது விஷ்ணுவிற்கு”…
வெகு நேரமாக ஒருவரை ஒருவருவர் இருக கட்டிக்கொண்டு இருந்தனர். அவர்களுக்கான காதல் உலகத்தில் அவர்களைத்தவிர வேற யாரும் இல்லை… இந்த நிமிஷம்,இந்த நொடியில் தங்களின் மனவேதனை எல்லாம் தங்களைவிட்டு சென்றது போல் ஒரு மாயை உருவானது போல் இருந்தனர்.
உமா மற்றும் வர்ஷாவின் பேச்சி சத்தத்தில் முதலில் சுயத்திற்கு வந்தது விஷ்ணு… தன்னை அனைத்திருந்த காதலியின் நெற்றியில் முதல் முத்திரையை பதித்தவன், மல்லியை தன்னிடமிருந்து விளக்கி விஷ்ணு, “மல்லி யாராவது வரதுக்கு முன்ன நீ கீழப்போ எனக்கூறினான் … அதில் முகம் வாடியவளை பார்த்தவன், நாம இரண்டு பேரும் தனியா இருக்கிறதை பார்த்து யாரும் உன்னை கீழா நினைக்கிறதை நான் விரும்பவில்லை மல்லி… யாருடை மனதிலும் நீ உன் நிலையில் இருந்து இறங்கறது எனக்குபிடிக்கவில்லை… உனக்கான அத்தனை மரியாதையுடனும் நான் முறைப்படி, ஊரறிய உன்னை இங்க இந்த வீட்டுக்கும், இந்த அறைக்கும் நான் உன்னை கூட்டிகிட்டு வரனும் டீ… நீ போ டீ… நான் குளித்துவிட்டு வந்துவிடறேன் என்றவனை இமைக்காமல் பார்த்தவள், தலையை மட்டும் அசைத்துவிட்டு கீழே சென்றுவிட்டாள்”.
சமையலறையில் சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டு இருந்த உமாவை இருக்கி அனைத்துக்கொண்டு தன் மனதில் இருந்த கவலை மற்றும் பாரம் நீங்க அழுதாள். “உமாவை அவளை ஏன் அழுகிறாய்?, என்ன? என்று ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. என்ன நடந்திருக்கும் என ஒரு அளவு யூகித்தவள், மல்லியை அளவிட்டாள். இந்த அழுகை இத்தனை வருட காதல் கைகூடியதனால் வந்த சந்தோசம் என புரிந்து கொண்டவள் மல்லியின் முதுகை தட்டிக்கொடுத்தாள்”.
உமாவிற்கு பக்கத்து மேடையில் அமர்ந்து பால் அருந்திக்கொண்டு இருந்த வர்ஷா, மல்லி அழுவது புரியாவிட்டாலும் தன் பிஞ்சிக்கையால் மல்லியின் முதுகை உமா போல் தட்டிக்கொடுத்தாள்.
அதில் தன்னிலை அடைந்த மல்லி வர்ஷாவை பார்த்து, “ஓய் வர்ஷா குட்டி எனக்கு வச்ச பாலை நீ மட்டும் குடிச்சிட்ட… எனக்கு எங்க?”… “அச்சோ மல்லி க்கா… இதுக்கு தான் நீங்க அழுதீங்களா?… வாங்க நான் உங்களுக்கு பால் தருகிறேன்”… “எனக்கு ஒன்னும் வேண்டாம் போ… நான் போய் சாப்பாடு சாப்பிட போறேன் எனக்கூறி பாத்திரங்களை டேபிளில் எடுத்து அடுக்கிவைத்தாள்”.
[the_ad id=”6605″]
உமா, “வர்ஷா வாடா நான் உன்னை குளிப்பாட்டிவிடறேன்… நீங்க குளித்துவிட்டு வந்து அம்மா கூட சாப்பிடுவீங்களாம்”… “போங்க உமா க்கா… எனக்கு சாப்பாடு வேண்டாம்… நான் இப்பத்தான் பால் குடித்தேன், அதனால் பாப்பா வயிறு புல்லாயிடுச்சி”… “இல்லையே பாப்பா வயிறு இன்னும் நிறையவில்லையே… நீ சாப்பாடு சாப்பிட்டாதான் குட்டி அண்ணா கூட நீங்க விளையாட முடியும்… இல்லைனா உங்களை அண்ணா விளையாட்ட வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க” என்றதும் வர்ஷா, “அப்ப வாங்க அக்கா சீக்கிரமா குளித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு நான் அண்ணா கூட விளையாடுனும் எனக்கூறி உமாவையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்”.
சிறிது நேரத்தில் அனைவரும் குளித்துவிட்டு சாப்பிட வந்துவிட்டனர். அதே நேரத்தில் உமாவும் வர்ஷாவை குளிக்க வைத்து அழைத்துக்கொண்டு வந்துவிட்டாள்.
மல்லி, உமா இருவரும் சேர்ந்து அனைவருக்கு பரிமாரிவிட்டு, அவர்கள் சாப்பிட்ட பின், பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு வந்தனர். அப்பொழுதுகூட முற்றத்தில் அமர்ந்திருந்த ஜெயந்தியிடம் உமா, “மதனி… எல்லாரும் கோவிலுக்கு போய் இருக்காங்க. வரும்போது எப்படியும் நல்ல செய்தியோடத்தான் கண்டிப்பா வருவாங்க, அதனால் எதாவது இனிப்பு பன்னலாமா மதனி”…
அதற்கு விஷ்ணு, “நீங்க சொல்வதும் சரிதான் உமா… நல்ல செய்தி சொல்லும் போது சும்மா சொன்னா எப்படி?… அதனால் நீங்க திராட்சை அல்வா பன்னீடுங்க”…
ஜெயந்தி, “ஏண்டா விஷ்ணு… உனக்கு பிடிச்சா திராட்சை அல்வா பன்னனுமா டா?”… அக்கா அது வெற்றிக்கும் பிடிக்கும், ஏன் உனக்கு கூடத்தான் பிடிக்கும்… அப்படியே எனக்கு மட்டும் தான் பிடிக்குங்கிறமாதிரி சொல்லாதீங்க. “போங்க போய் மாமாக்கு கால் பன்னுங்க… மாமா காலையிலேயே போன் பன்னுனாங்க நான் தான் நீங்க தூங்கறீங்கனு சொன்னேன். இப்ப பன்னுங்க மாமா உங்களுக்காக வெயிட் பன்னுவாங்க அக்கா”.
ஜெயந்தி, “ஏண்டா லூசு… இதை அப்பவே சொல்ல என்னடா?… அவரு வேற இன்னும் நான் கூப்பிடலையினு டென்சனில் இருப்பாரு எனக்கூறி போன் எடுத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள்”. சாப்பிட்டவுடன் வர்ஷா குட்டியுடன் விளையாட தோட்டத்திற்கு சென்றுவிட்டதாள் இவர்கள் மூன்று பேர் மட்டுமே இந்தனர்.
ஜெயந்தி சென்றவுடன் உமாவும் அல்வா செய்ய சென்றுவிட்டாள். இவள் சென்றதை உறுதிபடுத்திக்கொண்ட விஷ்ணு மல்லிக்கு பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பி விட்டு தோட்டத்திற்கு சென்றுவிட்டான். மல்லியும் சிரித்துக்கொண்டே சமையலறைக்கு சென்றுவிட்டாள்.
காலையிலேயே வெற்றி பண்ணைக்கு சென்றவன் இன்னும் வீட்டுக்குவரவில்லை.
அன்பு தொடரும்….