அத்தியாயம் 16.2:
வேலை விசயமாக வெளிநாட்டுக்கு சென்று வந்த நம்பி தன் மகள் நவ்யாவுடன் அல்லியூர் செல்வது பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.
நம்பி, “நவ்யா நாம நாளைக்கு காலையில் பிளைட்க்கு கிளம்பனும் ம்மா”… நீங்க போங்க டாட், நான் வரவில்லை… எனக்கு அந்த பட்டிக்காடு சுத்தமா பிடிக்கவில்லை.
“நவ்யா நாம அங்க போய் கிட்டத்தட்ட ஆறு வருஷம் ஆச்சு டா… இப்ப எவ்வளவு மாரிப்போய் இருக்கும்… வாடா ம்மா. ..இந்த மார்டன் சிட்டிய பார்த்துப்பார்த்து வந்த மனஅழுத்தம் எல்லாம் காணாம போயிரும் குட்டிமா… உன் அத்தை உன்னை ரொம்ப எதிர்பார்ப்பாடா”… எனக்கு பிடிக்கவில்லை ப்பா, ஆனால் நீங்க இவ்வளவு தூரம் சொல்றதனால் வருகிறேன் என வேண்டவெறுப்பாக கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
“கவிதா நீயும் வா… அந்த ஊர் ரொம்ப அழகா இருக்கும்”… சாரி நம்பி… நான் தமிழ் நாட்டு பக்கமே வரதாயில்லை என்னை விட்டுவிடுங்க. என்னைய கேட்டா நீங்களும் அங்க போறதை குறைத்துக்கொண்டால் தான் நம்ம வாழ்க்கைக்கு நல்லது நம்பி… புரியுது கவி… எனக்கு முடிக்க வேண்டிய வேலை அங்க இருக்கு. அதையும் கையோடு முடித்துவிட்டு வந்துவிடறேன். அப்புறமா அந்த பக்க போகவேண்டிய வேலையே இருக்காது கவி… நீங்க என்னமோ பன்னுங்க, என்னையவிட்டுவிடுங்க எனக்கூறி கவிதாவும் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
‘நம்பியோ தன் மனதில் சிலபல கணக்குகளை போட்டுக்கொண்டு இருந்தார். எப்படி விஷயத்தை எந்த பாதிப்பும் இல்லாமல் முடிப்பது என அவரின் மனநிலையை வேறாக இருந்தது. பல வருடங்களுக்கு முன்பே முடிக்க வேண்டிய வேலை இன்னும் இழுத்துக்கொண்டு இருக்கு இதை மட்டும் முடித்துவிட்டார் போதும் எல்லாம் ஒரு நிலைக்கு வந்துவிடும் என நினைத்துக்கொண்டு இருந்தார்’.
********/********************************************************************************
சென்னையில் கார்த்திக் வீடும் மிகவும் பரபரப்பாக இருந்தது. வீட்டை பெயின்ட் அடிப்பது, துணிமணிகள் வாங்குவது, நிச்சியத்திற்கு அழைப்பது என மிகவும் பிசியாக இருந்தனர். “நிச்சிய புடவை, நகை என அனைத்தையும் மீனாக்கு கார்த்திக் பார்த்துபார்த்து எடுத்தான். அந்த புடவையில் நகையும் அத்தனை அழகாக இருந்தது”.
புனித தளங்களுக்கு சென்று இருந்த வேலாம்மை அங்கு இருந்தே பேரனின் நிச்சியத்திற்கு தேவையானவைகளை மகன் மற்றும் மருமகளை செய்யவைத்தார். இவர்களும் ஒவ்வொரு விஷயத்தையும் அவை கேட்டுகேட்டுத்தான் செய்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் கூட கார்த்திக் – மீனு போனிலேயே தங்களின் காதல் பயிரை வளர்த்துக்கொண்டு இருந்தனர்.
[the_ad id=”6605″]
“நேற்று அதிகாலையிலேயே ஊரிலிருந்து வந்துவிட்டார் வேலாம்மை. வந்தவர் காலை எழுந்தவுடன் குடும்பமாக கோவிலுக்கு சென்று சாமிக்கு அபிசேகம் செய்து விட்டு தான் ஓய்ந்தார்”. இன்று மாலையே அனைவரும் காங்கேயம் செல்வதால் அனைத்து பொருள்களையும் எடுத்துவைத்துக்கொண்டு இருந்தனர்.
சொத்தங்கள் அனைவரும் காங்கேயம், பழனி மற்றும் திருச்சி பக்கம் இருப்பதால் காங்கேயத்தில் உள்ள இவர்களின் பாரம்பரிய வீட்டிற்கு செல்ல இருக்கிறார்கள். புதன் கிழமை காலையில் காங்கேயத்தில் இருந்து அப்படியே அல்லியூர் செல்வது என திட்டமிட்டு இருந்தார் வேலம்மை… அப்பொழுது தான் அனைவரும் வந்து செல்ல எளிமையாகவும் சிரமம் இன்றியும் இருக்கும் என நினைத்தார் அந்த அனுபவசாலி.
[the_ad id=”6605″]
அடுத்தநாள் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர் மல்லியும் உமாவும்.
நநிச்சியத்திற்கு மிகவும் முக்கியமான சொந்தங்கள் இரண்டு நாள் முன்பாகவே வந்துகொண்டு இருந்தனர்… அதனால் அனைத்து வேலையாட்களுக்கும் வேலையானது அதிகமாக இருந்தது.
சமையலறையில் வேலையில் இருந்த சாந்தியிடமும் உமாவிடம் சகுந்தலா, “சாந்தி இன்னும் இரண்டு வாரங்களுக்கு வேலை அதிகம்தான் இருக்கும் உங்களால் முடியுமா?… முடியாட்டி நம்பிக்கையான இரண்டு ஆட்களை வேலைக்கு வெச்சிக்கோங்க… முக்கிய சமையலை நீங்க மூனுபேருந்தான் பாக்கனும், அவங்களை ஒத்தாசைக்கு வெச்சிக்கோங்க.
எல்லாத்துக்கும் என்னைய எதிர்பாக்காதாங்க நான் இல்லைனா காயத்ரி, அக்கா, அத்தைங்ககிட்ட கேட்டுகோங்க… எங்க யாருகிட்ட கேட்கமுடியலைனா நீங்க மூனுபேருந்தான் சேர்ந்து பாத்துக்கோங்க” என்றவரிடம் சாந்தி, “நாங்க பாத்துக்கிறோம் ங்கம்மா… நீங்க டென்ஷன் ஆகாம நிதானமா இருங்க”.
சகுந்தலாவின் கையில் பால் டம்ளாரை தினித்த மல்லி, “முதலில் இதை குடிங்க… நீங்க இவ்வளவு பேசுறதுக்கு இந்த பால் பத்தாது. ஏன் இவ்வளவு டென்ஷன்?… டென்சன் விட்டுவிட்டு நிதானமா இருங்க” என்றவளிடம்… “எப்படி டீ நிதானமா இருக்க?… எந்த தடங்களும் இல்லாம எல்லாம் நல்ல படியா நடக்கனும் கொஞ்சம் பயம் டீ”…
“பயப்பட்டா எல்லா நல்லபடியா நடக்குமா சகுந்தலா ம்மா?… நீங்க தான் நிதானமா இருக்கனும். எங்களால் எவ்வளவு சீக்கிரமா காலையில வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் வருகிறோம் உங்களுக்கு உதவியா… சாய்ந்திரமும் அந்த மாதிரியே இருக்கோம் என்ற உமாவின் கூற்றில் சிறிது தெளிந்தார் சகுந்தலா”.
பேசிக்கொண்டே டீ மற்றும் காபி போட உமா, சகுந்தலா ம்மா நீங்க இங்கேயே இருந்து பாலை குடிங்க நான் இத எல்லாருக்கும் கொடுத்துவிட்டு வருகிறேன் எனக்கூறி வீட்டில் உள்ள அனைவரும் கொண்டு சென்றாள்.
மல்லியும் சாந்தியும் சேர்ந்து அவருடன் பேசிக்கொண்டே சாப்பாட்டு வேலையை ஆரம்பித்தனர்.
அனைவருக்கும் டீ, காபியை கொடுத்துவிட்டு இறுதியாக வெற்றியின் அறைக்கு சென்ற உமா எப்படி அவனை அழைப்பது என யோசனையில் இருந்தவள், நேரம் ஆவதை உணர்ந்து அறையின் கதவை தட்டினால், அறைதூக்கத்திலேயே அனுமதி அளித்த வெற்றி உமாவை கண்டதும் அடித்துபிடித்துக்கொண்டு எழுந்தான்.
இதை எதுவும் கட்டுப்படாமல் உள்ளே வந்த உமா டீயை டேபிளில் வைத்துவிட்டு திரும்பி செல்லும் போது ஒரு நெடி மட்டுமே வெற்றியின் கண்களை பார்த்தாள்… அந்த பார்வையின் வீச்சை தாங்கமுடியாமல் தடுமாறியவள் விரைந்து வெளியே சென்றுவிட்டாள்.
“வெற்றியின் பார்வையில் முதல்முறையாக உமாவிற்கு ஒரு தடுமாற்றத்தை தந்தது”… அவனின் பார்வையின் பொருள் தெரியாமல் தடுமாறியவள், ஒரு குழப்பத்திலேயே சமையளறைக்கு வந்துவிட்டாள். அந்த அறையில் இருந்த பறபறப்பானது அவளையும் தொற்றிக்கொண்டது. அதற்கு பின் அதை பற்றி நினைக்ககூட நேரம் இல்லாமல் வேலையானது அவளை இழுத்துக்கொண்டது.
“வெற்றியே அவளின் தடுமாற்றத்தை வெகுவாக ரசித்தவன், அப்படியே படுத்துவிட்டான். அவனின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. முதல் முறையாக இவரின் பார்வையும் நேருக்குநேராக சந்தித்தது. அதிலும் அவளின் இந்த நிலை ஒரு கிளுகிளுப்பை தந்தது”. அதனுடன் எழுந்து குளித்துவிட்டு வந்தவன் அவள் கொண்டுவந்த டீயை குடித்து விட்டு கீழே சென்றான். அதன் பின் வேலைகள் அவனை ஆக்ரமித்துக்கொண்டது.
[the_ad id=”6605″]
திங்கள் மற்றும் செவ்வாய் என இரண்டு நாட்களுக்கு உறவினர்கள் வருகை, வீட்டை அழகு படுத்துவது என பல வேலைகள் அவர்களை சூழ்ந்துகொண்டது.
திங்கட்கிழமை மதியமாக பண்ணையாரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் நம்பியும் நவ்யாவும். நவ்யாவிற்கு ஏற்கனவே இந்த சூழ்நிலையில் பிடிக்கவில்லை. அந்த எரிச்சலில் வந்த முதல் நாளே அம்முவுக்கும் இவளுக்கு முட்டிக்கொண்டது.
மத்தியம் முழுவதும் ரெஸ்ட் எடுத்தவள், மாலை வேலையில் பாட்டு கேட்டுக்கொண்டே மெதுவாக தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள். அங்கே விளையாட்டு கொண்டிருந்தார் குட்டியை வர்ஷா துரத்தியதில் ஓடியவன் வழியில் குறுக்கே வந்த நவ்யாவை கவனிக்காமல் வந்ததால் குட்டி அவளை இடித்துவிடான்…
அதில் கோபம் கொண்ட நவ்யா, “எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே இடிச்சிருப்ப?… உங்களுக்கு விளையாட வேற இடமே இல்லையா?”… “நாங்க எப்பவும் இங்கத்தான் விளையாடுவோம்… நீங்கத்தான் நாங்க விளையாடற இடத்திற்கு வந்திருக்கீங்க என்ற குட்டியிடம்”… எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே எதிர்த்து பேசுவ என அடிக்க கை ஓங்கியவளின் கையை கண்ணன் குட்டியை அடிக்கவிடாமல் பிடித்துக்கொண்டான்.
அதில் இன்னும் கோபம் கொண்டவள், “எவ்வளவு தைரியம் இருந்தா என் கையபிடித்திருப்ப?… என் கையபிடிக்ககூட ஒரு தகுதி வேனும் டா நாயே… இனி என் கண்ணில் படாமல் இங்கிருந்து போய்டு” என்றவளிடம்…
கண்ணன், “சாரிங்க மேடம் உங்க கைய பிடிச்சதுக்கு… தெரியா இடிச்சிட்டாங்க, அவன் சின்ன பையன் மேடம்… என மன்னிப்பு கேட்டவனை சிறிதும் யோசிக்காமல் அடித்துவிட்டாள் நவ்யா”.
அதே சமயம் மூணாரில் இருந்து வந்த தர்மன், மதன் மற்றும் அருண் ஆகியோர் காரில் உள்ளே வரும்போதே நவ்யா கண்ணனை அடித்ததை பார்த்தது விட்டனர்… என்ன பிரச்சினை என விசாரிக்க காரிலிருந்து இறங்கி வருவதற்குள் சமையல் அறையில் இருந்து வந்த அம்மு தன் தம்பியை யாரோ ஒருத்தி அடித்ததில் கோபம் கொண்டவள் வந்த வேகத்தில் நவ்யாவை அடித்துவிட்டாள்.
இந்த சண்டையை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த வர்ஷா ஒரே ஓட்டமாக உள்ளே சென்று உமா, மல்லி, வெற்றி, சகுந்தலா என அனைவரையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டாள். வெளியே வந்தவர்கள் கண்ட காட்சியில் அப்படியே நின்றுவிட்டர்.
சுதாரித்துக்கொண்ட உமா வேகமா சென்று குட்டியையும் கண்ணையும் அனைத்துக்கொண்டவள் அம்முவை ஒரு பார்வை பார்த்தவுடன் அவள் பார்த்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் கூறிவிட்டாள்…மல்லி வேகமா வந்து அம்முவை அனைத்துக்கொண்டாள்.
“தன் தம்பியை யாரோ ஒருத்தி அடித்ததில் வந்த கோவத்தை இடம் மற்றும் சூழ்நிலை கொண்டு அடக்கியவள் கண்ணன் மற்றும் குட்டியிடம் என்ன நடந்தது எனவிசாரித்தாள்… அதில் அத்தனை தவறும் நவ்யாவுடையது என தெரிந்த உடன் அத்தனை பேரின் முன்னிலையிலும் குட்டி மற்றும் கண்ணனிடம் நவ்யாவை மன்னிப்பு கேட்க சொன்னாள் உமா”.
“இதுவே வேறு இடம் அல்லது வேறு யாராவது இருந்திருந்தால் அவளின் நடவடிக்கை வேறாக இருந்திருக்கும். ஒரு நல்லது நடக்கவிருக்கும் வீட்டில் தன்னால் ஒரு பிரச்சினை வரவேண்டாம் என விட்டுவிட்டாள்”… ஆனால்இதை அப்படியே விட அவள ஒன்றும் தியாகி அல்ல, சரியான தருணத்தில் வட்டியும் முதலுமாக திருப்பிதருவாள் என்பதில் ஐயமில்லை… அதுமட்டுமல்லாமல் மீனா நிச்சியத்தை குறித்து எவ்வளவு கனவுடன் இருக்கிறாள் என்று தெரிந்து அமைதியா மன்னிப்பை மட்டும் கேட்கசொன்னாள் உமா.
அதில் கோபம் கொண்ட நவ்யா இத்தனை பேரின் முன்னிலையிலும் தன் மீது உள்ள தவறை ஒத்துக்கொள்ளாவிட்டாள் இவர்களின் முன் தன்னிலையிலிருந்து தன் தரம் இறங்கி மாதிரி ஆகிவிடும் எனத்தோன்றியதால், விரும்ப்பமில்லாமல் வேண்டாவெறுப்பாக அவர்களிடம் மன்னிப்பை கேட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
அவள் சென்றதும் உமாவிடம் நாச்சியார், அவளுக்கான நான் மன்னிப்பு கேட்டுகிறேன் உமா… எதையும் மனதில் வச்சிக்கு ம்மா… “இவளை சும்மா விட்டுக்கு ஒரே காரணம் மீனாவும் ஜெயாம்மாவுந்தா பாட்டி… இதுவே வேற யாராவது இருந்திருந்தா என்தம்பிய அடிச்ச கையை ஒடச்சிருப்பேன்… நாயி அதுஇதுனு எல்லாம் சின்ன பசங்ககிட்ட போய் பேசியிருக்கா, இவளை சும்மா விடமாட்டேன் பாட்டி ஊருக்கு போரதுக்குள்ள செமத்தியா என்கிட்ட வாங்காமல் போக மாட்டா, அப்ப நீங்க யாரும் இதில் தலையிடாதீங்க பாட்டி… இவ என்னைய அடிச்சிருந்தா கூட நான் சும்மா விட்டிருப்பேன் பாட்டி… இவ யாரு என்தம்பிய அடிக்க?… நானே இவனுங்களை அடிச்சது இல்ல, இவ எல்லாம் என் தம்பிய அடிக்கத்தான் நாங்க வளத்துவச்சி இருக்கோம் என கண்கள்கலங்கி கூறியவளை எப்படி சமாதானம் செய்ய என யாருக்கும் தெரியவில்லை”.
[the_ad id=”6605″]
“தன் அறைக்கு சென்ற நவ்யா அவளை அடித்த அம்முவை விட, அனைவரின் முன்னிலையிலும் தன்னை அந்த சிறியவர்களிடம் மன்னிப்பை கேட்க சொன்ன உமாவின் மீது தான் அத்தனை வன்மம் பிறந்தது. எப்படியாவது அனைவரின் முன்னிலையிலும் அவளை அவமான படுத்தி இ்ந்த ஊரிலேயே தலைநிமிர்ந்து நடக்கமுடியாதபடி செய்யவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டாள்”… அதற்கு அவள் தேர்ந்தெடுத்த நாள் மீனாவின் நிச்சயதார்த்த நாள்.
இங்க நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த வெற்றி மற்றும் அருண் சூழ்நிலை கருதி அமைதியாக சென்றுவிட்டனர். அவர்களுக்கும் கோவமா தான், தேவையில்லாமல் சின்ன பசங்களை அடித்ததில் அவளை பிடிக்காமல் போனது… ஏற்கனவே அவளின் மேல் இவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை என்பது தான் உண்மை… விஷ்ணு இங்கு இல்லாததால் அவனுக்கு இந்த விஷயம் தெரியவில்லை. நம்பியும் சந்திரனும் தோட்டத்தை சுற்றி பார்க்க சென்றுவிட்டனர். அதனால் அவர்களும் இங்கு நடந்தது தெரியவில்லை.
அந்த நாள் யாருக்கும் என்ன வைத்திருக்கிறது என்று பார்க்கலாம்.